search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    • ஆந்திர சட்டசபை தொகுதிகளில் 175-ல் 160 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது.
    • தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரி ஆவது உறுதியாகி உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

    ஆந்திராவில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியை பிடிக்கும்.

    இதற்கிடையே, ஆந்திர சட்டசபை தொகுதிகளில் 175-ல் 160 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது.

    தேவையான இடங்களுக்கு மேல் தெலுங்குதேசம் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரி ஆவது உறுதியாகி உள்ளது.

    இந்நிலையில், ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமோக வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு வாழ்த்துகள். தங்களது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும் வளர்ச்சியையும் தந்து, அம்மாநில மக்களின் கனவுகளையும் நம்பிக்கையையும் நிறைவேற்றட்டும் என பதிவிட்டுள்ளார்.

    • "தமிழர்களே தமிழர்களே நான் தயாரிக்கப்பட்டவன் பெரியாரால் தட்டி தட்டி சீர்செய்யப்பட்டவன்
    • ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில்...

    சென்னை:

    தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் 101-வது பிறந்த நாள் இன்று. கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், தி.மு.க. சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாக தி.மு.க. எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. 

    அதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மேடையில் பேசிய,

    "தமிழர்களே தமிழர்களே

    நான் தயாரிக்கப்பட்டவன் பெரியாரால்

    தட்டி தட்டி சீர்செய்யப்பட்டவன் அறிஞர் அண்ணா அவர்களால்

    நான் வலுப்பெற்றவன் என்னுடைய கழக கண்மணிகளால்.."

    "ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில்... அவன் உயர் சாதிக்கு மட்டும் தங்கத்தால் மூளை செய்து தலைக்குளே வைத்தானா? மற்ற சாதிக்கெல்லாம் மண்டைக்குள் இருப்பதென்ன களிமண்ணா... சுண்ணாம்பா..."

    "இது உங்கள் பிறந்தநாள் மட்டுமல்ல... உயிரினும் மேலான உங்களின் கோடிக்கணக்கான உடன்பிறப்புக்கள் அனைவரும் புத்துணர்ச்சி பெற்ற நாள்...," உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதன் பின்னணியில் தமிழ் திரைப்பட பாடல்கள் கோர்வையாக இணைக்கப்பட்டு உள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    • அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
    • கலைஞர் நூற்றாண்டு சிறப்பு புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

     மேலும் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

    இதைத்தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு சிறப்பு புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

    கலைஞர் நூற்றாண்டு சிறப்பு புகைப்படக் கண்காட்சியை அமைச்சர்கள், கனிமொழி எம்.பி. ஆகியோரும் பார்வையிட்டனர்.

    • முத்தமிழ் அறிஞர் கலைஞரால் போற்றப்பட்ட பேரறிஞர் பெருந்தகைக்கு முதல் வணக்கம்.
    • உங்கள் பெயரை காக்கவே எந்நாளும் உழைக்கிறோம்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் இன்று. கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் கலைஞர் கருணாநிதி அண்ணாவிற்கு எழுதிய கவிதையை வாசித்து அதன் பின்னணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடம், கலைஞர் நினைவிடத்தில் வணங்குவதுபோலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    தலைவர் என்பார்

    தத்துவ மேதை என்பார்

    நடிகர் என்பார்

    நாடக வேந்தர் என்பார்

    சொல்லாற்ற சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார்

    மனிதர் என்பார்

    மாணிக்கம் என்பார்

    மாநிலத்து அமைச்சர் என்பார்

    அன்னை என்பார்

    அருமொழி காவலர் என்பார்

    அரசியல்வாதி என்பார்

    அத்தனையும் தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர்

    நெஞ்சத்து அன்பாலே அண்ணா என்று ஒரு சொல்லால் அழைக்கட்டும் என்றே அவர் அன்னை பெயரும் தந்தார்

    என்று முத்தமிழ் அறிஞர் கலைஞரால் போற்றப்பட்ட பேரறிஞர் பெருந்தகைக்கு முதல் வணக்கம்.

    தலைவர்களுக்கெல்லாம் தலைவர்

    முதல்வருக்கெல்லாம் முதல்வர்

    கலைஞர்களுக்கெல்லாம் கலைஞர்

    நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி

    இந்த பூமிப்பந்தில் வாழும் தமிழருக்கெல்லாம் குடும்பத்தலைவர்

    இந்திய நாடே அண்ணாந்து பார்த்த அரசியல் ஞானி

    முத்தமிழ் அறிஞர் தமிழனத்தலைவர் கலைஞர் அவர்கள் சூல் கொண்ட நாள் ஜூன் 3

    அதிலும் 2024-ம் ஆண்டு என்பது இந்த நூற்றாண்டின் தலைவராம் கலைஞருக்கு நூற்றாண்டு.

    எல்லா ஆண்டும் கலைஞர் ஆண்டே.

    அவர் ஆண்ட ஆண்டும் வாழ்ந்த ஆண்டும் மட்டுமல்ல எல்லா ஆண்டும் கலைஞர் ஆண்டே

    வீழ்ந்து கிடந்த தமிழ் சமுதாயத்திற்கு விடிவெள்ளியால் தோன்றி

    வாழும் காலத்தில் ஒளி தரும் உதயசூரியனாய் வாழ்ந்து

    மறைந்த பிறகும் கலங்கரை விளக்கமாய் வழிகாட்டிக்கொண்டிருப்பவர் தான் தலைவர் கலைஞர் அவர்கள்.

     

    தலைவர் அவர்களே நீங்கள் நினைத்தீர்கள் நாங்கள் செய்துகாட்டி வருகிறோம்

    நீங்கள் பாதை அமைத்தீர்கள் நாங்கள் பயணத்தை தொடர்கிறோம்.

    நீங்கள் இயக்குகிறீர்கள் நாங்கள் நடக்கிறோம்

    உங்கள் பெயரை காக்கவே எந்நாளும் உழைக்கிறோம்

    உழைப்போம்... உழைப்போம்... உழைப்போம்...

    என்று தெரிவித்துள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
    • இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம்.

    நீங்கள் நினைத்தீர்கள்.. நாங்கள் செய்து காட்டி வருகிறோம் என்று கலைஞரின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்மாலை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

    புகழால் அல்ல; செயலால் மறக்க முடியாத தலைவர் கலைஞர், அதிகாரத்தால் அல்ல; அன்பால் போற்றப்படும் தலைவர் கலைஞர்; இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்; நீங்கள் இருந்து வேண்டியதை உங்கள் மகனாக நான் செய்து வருகிறேன்; கலைஞர் உருவாக்கிய நவீனத் தமிழ்நாட்டை உன்னதத் தமிழ்நாடாக உயர்த்திக் காட்டி வருகிறோம்; இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நார்வே செஸ் தொடரில் அற்புதமாக விளையாடியுள்ளார் பிரக்ஞானந்தா.
    • மிகப்பெரிய சாதனை படைத்து டாப் 10-க்கும் முன்னேறியுள்ளார் பிரக்ஞானந்தா.

    சென்னை:

    நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, இந்தியன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, கிளாசிக்கல் செஸ்ஸில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ஃபேபியானோ கருவானாவை தோற்கடித்தார். கருவானா கேண்டிடேட்ஸ் சாம்பியனும் ஆவார். இந்த வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தா, நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 15-ந்தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரனை எதிர்கொள்கிறார்.

    இந்த நிலையில், செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமாக மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நார்வே செஸ் தொடரில் அற்புதமாக விளையாடியுள்ளார் பிரக்ஞானந்தா. உலகின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 வீரர்களான மேக்னஸ் கார்ல்சன், ஃபாபியோனாவை வீழ்த்தி மிகப்பெரிய சாதனை படைத்து டாப் 10-க்கும் முன்னேறியுள்ளார். செஸ் உலகமே இவரின் திறமையை பார்த்து வியக்கிறது என கூறியுள்ளார்.


    • தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட வைகோ ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
    • வைகோவிற்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 25-ந்தேதி நெல்லையில் கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக நெல்லையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில், தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட வைகோ ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்றது. இதையடுத்து வைகோவிற்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதை தொடர்ந்து வைகோவிற்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதில் அவர் குணமடைந்து வருகிறது.

    இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வைகோவை தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பில் வைகோவின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    • சாதி அரசியல் செய்வதெல்லாம் பெரிதல்ல... கொள்கை பற்றால் தலைவர் ஆனவர் கருணாநிதி.
    • கருணாநிதி விதைத்த விதை தமிழர்கள் அனைவரின் மனதிலும் இருக்கிறது.

    சென்னை:

    சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா பற்றியும் கருணாநிதியாக நடித்தது குறித்தும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:

    * கருணாநிதியாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது பெருமை. கருணாநிதியை பார்த்து கற்றுக்கொண்டதை இப்போது பேசுகிறேன்.

    * கருணாநிதி இருக்கும் வரை யாரும் இங்கு வாலாட்ட முடியவில்லை.

    * கலைஞர் நூற்றாண்டு என்பதைவிட ஒரு நூற்றாண்டு கலைஞரின் விழா என்பதே சரி.

    * கல்லக்குடி போராட்ட காட்சியில் நடித்தபோது வியர்த்து விட்டது.



    * கருணாநிதி ஒரு பன்முக தன்மையாளர்.

    * சாதி அரசியல் செய்வதெல்லாம் பெரிதல்ல... கொள்கை பற்றால் தலைவர் ஆனவர் கருணாநிதி.

    * என் வசனத்தை பேச சிவாஜிக்கு பிறகு பிரகாஷ் ராஜ் இருக்கிறார் என கருணாநிதி கூறினார்.

    * கருணாநிதி விதைத்த விதை தமிழர்கள் அனைவரின் மனதிலும் இருக்கிறது என்று கூறினார்.

    மேலும் கவிஞர் பா.விஜய் கூறுகையில், கலைஞரின் வசனங்களுக்கு மாற்று வசனம் யாரும் செய்ய முடியாதது. அது ஒரு சகாப்தம்.

    அரசியல் பயணத்தை பொறுத்தவரை இப்போது 2ம் கலைஞராக முதல்வர் செயல்பட்டு வருகிறார்.

    முதல்வரின் நட்பு, வழிநடத்தலால் திரைத்துறை முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று கூறினார்.

    • டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை நடந்த உள்ளனர்
    • "இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது"

    இந்தியாவில் 7 கட்டங்களாக நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு 6 கட்டங்களில் தேர்தல் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு இன்று(ஜூன் 1) கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 4-ந் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு வலுவான எதிர்ப்புக் குரலாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணியை உருவாக்கி இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தியா கூட்டணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் பிரதமர் வேட்பாளராக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்தும் டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை நடந்த உள்ளனர். இந்த கூட்டத்தில் தி.மு.க சார்பில் மாநிலங்களவை எம்.பி டி.ஆர்.பாலு கலந்துகொள்ள நேற்று (மே 31) விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

     

    இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜகவின் பாசிச ஆட்சியை வீழ்த்த இன்னும் சில நாடுகளே உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கையின்போது இந்தியா கூட்டணியினர் விழுப்புடன் செயல்பட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது,

    பா.ஜ.க.வின் பத்தண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது. தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பா.ஜ.க.வுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணிதிரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் அமைந்திருக்கிறது.

    தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பா.ஜ.க. உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    ஜூன் 4 - இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும். இது தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கழகப் பொருளாளரும் - நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார். 

    பாசிச பா.ஜ.க. வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்! என்று பதிவிட்டுள்ளார்

    • கான்கிரீட் போட அமைக்கப்பட்டிருந்த சென்ட்ரிங் பலகைகளை பிரிக்க மனோஜ் என்பவர் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினார்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    கோவை சின்னவேடம்பட்டியை அடுத்த உடையாம்பாளையம் மாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்த பழனியப்பன் (வயது 47) என்பவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த கட்டுமான பணிகளை தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த கோவிந்தனின் மகன் குமார் (29) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மேஸ்திரியான குமார், தனது வேலை ஆட்களான ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் (27) மற்றும் சிலருடன் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு புதிதாக தண்ணீர் தொட்டிக்கு கான்கிரீட் போடப்பட்டிருந்தது.

    நேற்று மாலையில் இந்த தண்ணீர் தொட்டியின் உட்பகுதியில் கான்கிரீட் போட அமைக்கப்பட்டிருந்த சென்ட்ரிங் பலகைகளை பிரிக்க மனோஜ் என்பவர் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினார். அப்போது தொட்டிக்குள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சு திணறி தொட்டிக்குள் மனோஜ் மயங்கி விழுந்தார்.

    இதனை பார்த்த குமார் ஓடி வந்து தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி அவரை காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அவரும் மூச்சுத்திணறி விழுந்தார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்நிலையில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

    நேற்று மாலை தனியாருக்குச் சொந்தமான இடத்தில் புதியதாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த குமார், மனோஜ் இருவரும் கட்டிடம் கட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் இறங்கி வேலை செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் 2 பேரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
    • சந்தன கடத்தல் வீரப்பன் முதல் 12க்கும் மேற்பட்டோரை வெள்ளத்துரை என்கவுன்ட்டர் செய்துள்ளார்.

    ஓய்வு பெற ஒருநாள் முன்னதாக ஏடிஎஸ்பி வெள்ளத்துரையை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டிருந்தார்.

    2013ம் ஆண்டு சிவகங்கையில் காவல் நிலைய மரண வழக்கில் விசாரிக்கப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

    சிபிசிஐடி விசாரணையில் தன் மீது தவறு ஏதும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக வெள்ளத்துரை தரப்பு விளக்கம் அளிக்கப்பட்டது. சந்தன கடத்தல் வீரப்பன் முதல் 12க்கும் மேற்பட்டோரை வெள்ளத்துரை என்கவுன்ட்டர் செய்துள்ளார்.

    இந்நிலையில், வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவு தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

    என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையை அமுதா தன்னிச்சையாக பணியிடை நீக்கம் செய்துள்ளதாக புகார்.

    ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கம் உத்தரவை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை எனவும் இதுதொடர்பாக உள்துறை செயலாளர் அமுதாவை முதலமைச்சர் கண்டித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • திமுகவின் சாதனைகளாக முதலமைச்சர் ஸ்டாலின் காட்டிக் கொள்ள முயற்சிப்பவை அனைத்துமே, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்படி, மத்திய அரசின் நிதியில் நிறைவேற்றப்பட்டவைதான்.
    • பள்ளிக் கல்வியில் திமுகவின் ஒரே சாதனை, கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை, இரண்டு ஆண்டுகளாக மழலையர் வகுப்புகளுக்கு வழங்காமல் இருந்ததுதான்.

    சென்னை:

    திராவிட மாடல் அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

    இதற்கு பதில் தரும் விதமாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில், மாநில வளர்ச்சிக்கோ, மக்கள் நலனுக்கோ எந்தத் திட்டங்களையுமே செயல்படுத்தாமல், கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றாமல், வெறும் விளம்பரங்களை வைத்தே ஓட்டிக் கொண்டிருக்கும் ஸ்டிக்கர் மாடல் திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், மீண்டும் ஒரு முறை மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட முயன்று அம்பலப்பட்டிருக்கிறார்.

    பள்ளிக் கல்வி முன்னேற்றத்துக்கான மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதி ரூ.5,858.32 கோடி. திமுகவின் சாதனைகளாக முதலமைச்சர் ஸ்டாலின் காட்டிக் கொள்ள முயற்சிப்பவை அனைத்துமே, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்படி, மத்திய அரசின் நிதியில் நிறைவேற்றப்பட்டவைதான். பள்ளிக் கல்வியில் திமுகவின் ஒரே சாதனை, கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ், பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை, இரண்டு ஆண்டுகளாக மழலையர் வகுப்புகளுக்கு வழங்காமல் இருந்ததுதான். உண்மை இப்படி இருக்க, சிறிதும் கூச்சமே இல்லாமல் இவற்றை திமுகவின் சாதனையாகக் காட்டிக் கொள்ள முயற்சிப்பது, நகைப்பை ஏற்படுத்துகிறது.

    அதுமட்டுமின்றி, சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதியை பயன்படுத்தி, பள்ளிகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்திற்கான ரூ.1,000 கோடிக்கான ஒப்பந்தத்தை, தமிழக அரசு நிறுவனமான எல்காட் நிறுவனத்துக்கு வழங்காமல், கேரள மாநில அரசு நிறுவனமான கெல்ட்ரான் நிறுவனத்துக்கு வழங்கியதன் பின்னணியை முதலமைச்சர் தெளிவுபடுத்துவாரா? என கூறியுள்ளார்.

    ×