search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க ஸ்டாலின்"

    • அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு வந்த பின்னர் சிறப்பாக செயல்படுகிறது.
    • அறுபடை வீடு சுற்றுலாவிற்கு 813 பேர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * இன்றும் நாளையும் முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடைபெறுகிறது.

    * அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு வந்த பின்னர் சிறப்பாக செயல்படுகிறது. அறநிலையத்துறை சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    * 7 முருகன் கோவில்களில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    * அறுபடை வீடு முருகன் கோவில்களில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

    * பழனி கோவிலில் தை பூசம், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடைபயணம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    * அறுபடை வீடு சுற்றுலாவிற்கு 813 பேர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

    * பல்வேறு திருக்கோவில்களில் பணிகளை மேற்கொண்ட பின்னரே முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படுகிறது.

    * முத்தமிழ் முருகன் மாநாட்டு ஏற்பாடுகளை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செய்துள்ளார்.

    * கோவிலை சிறப்பாக கவனிக்குமாறு சேகர்பாபுவை நியமித்தேன். ஆனால் கோவிலிலேயே குடியிருக்கும் அமைச்சராக உள்ளார்.

    * 69 முருகன் திருக்கோவில்களில் பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

    * அறுபடை வீடுகளில் ரூ.789 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    * அறுபடை வீடுகளுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூடுதல் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

    * அறுபடை வீடுகள் அல்லாத முருகன் கோவில்களில் ரூ.277 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

    • மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற உள்ளன.
    • உலக பைந்தமிழர்களை இணைத்து முருகன் மாநாட்டை நடத்துவது மகிழ்ச்சி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    சென்னை:

    பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற உள்ளன.

    'உலக பைந்தமிழர்களை இணைத்து முருகன் மாநாட்டை நடத்துவது மகிழ்ச்சி' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.'

    • பழனி நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது.
    • தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

    பழனி:

    பழனி மலை மீது அமர்ந்து பக்தர்களுக்கு முருகப்பெருமான் காட்சி தருகிறார். மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை மற்றும் ரோப்கார், மின்இழுவை ரெயில் வசதிகளும் உள்ளன. பழனியில் தமிழக இந்து சமயஅறநியைத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து பழனியில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாநாட்டையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன. பழனி மலைக்கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. பழனி நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது.

    அதன்படி தமிழக இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' பழனியில் இன்று தொடங்குகிறது.

    பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று காலை 9 மணியளவில் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்ற உள்ளார். அதைத்தொடர்ந்து மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற உள்ளன.

    'உலக பைந்தமிழர்களை இணைத்து முருகன் மாநாட்டை நடத்துவது மகிழ்ச்சி' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.'

    பழனியாண்டவர் கலை-பண்பாட்டு கல்லூரியில் அமைக்கப்பட்ட மாநாட்டு அரங்கத்தில் காலை 8.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், நாதஸ்வரம்-தவில் மங்கள இசையுடன் மாநாடு தொடங்குகிறது.

    காலை 8.55 மணிக்கு ரத்தினகிரி பாலமுருகனடி சுவாமிகள் மாநாட்டு கொடியை ஏற்றி வைக்கிறார்.

    தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி முன்னிலை வகிக்கிறார். திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வேல் கோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். பின்னர் 9.30 மணிக்கு சீர்காழி கோ.சிவசிதம்பரத்தின் இறைவணக்கத்துடன் மாநாடு தொடங்குகிறது.

    • சிறப்பாக செயலாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.
    • சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தான், தமிழகம் பல துறைகளில் சிறந்து விளங்குகிறது.

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், குடியரசுத் தலைவர் பதக்கங்கள், உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில், சிறப்பாக செயலாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.

    பிறகு, நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    காவல்துறை என்னுடைய துறை என்பதால் இந்த நிகழ்ச்சி கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது.

    நானே பதக்கம் வாங்கியது போன்று மகிழ்ச்சியாக உள்ளது. பதக்கம் வென்ற காவலர்களுக்கு வாழ்த்துகள்.

    பதக்கங்களுக்கு பின்னால் உள்ள உங்கள் உழைப்பு தலை வணங்கத்தக்கது. அமைதியான மாநிலத்தில் தான் வளமும், வளர்ச்சியும் இருக்கும்.

    இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகம் பெருமைமிகு மாநிலமாக திகழ, காவல்துறையின் பங்கு முக்கியமானது.

    சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தான், தமிழகம் பல துறைகளில் சிறந்து விளங்குகிறது.

    காவல்துறையினரின் நலனை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருகிறது. மக்களை பாதுகாக்கும் காவலர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

    காவல் துறையை மேலும் நவீனப்படுத்தி வருகிறோம்.

    காவல்துறையை நவீனமயமாக்கியவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. காவல் துறையில் மகளிருக்கு வாயப்பு அளித்தது கருணாநிதி தான்.

    மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் விரும்பும் இடங்களில் பணி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பட்டுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
    • விழாவில் 159 மத்திய அரசு பதக்கங்களும் 301 முதலமைச்சர் பதக்கங்களும் காவலர்களுக்கு வழங்கப்படுகின்றன.

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், குடியரசுத் தலைவர் பதக்கங்கள், உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், காவல்துறை டிஜிபி, சென்னை காவல் ஆணையர், சென்னை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இங்கு, காவல்துறையினர் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    தொடர்ந்து, காவல்துறையினருக்கு மு.க.ஸ்டாலின் தலைமையேற்று பதக்கங்களை வழங்கி கவுரவித்து வருகிறார்.

    அதன்படி, காவல், ஊழல் தடுப்பு, தீயணைப்பு, சிறை, சீர்திருத்த பணி, ஊர்க்காவல், தடய அறிவியல் துறையினருக்கு பதங்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    விழாவில் 159 மத்திய அரசு பதக்கங்களும் 301 முதலமைச்சர் பதக்கங்களும் காவலர்களுக்கு வழங்கப்படுகின்றன.

    சோமரசம்பேட்டை காவல் நிலைய காவலர் பி.செந்தில் குமாருக்கு பதக்கம் வழங்கப்பட்டது.

    • சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது.
    • வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை!

    சென்னை:

    தமிழகத்தின் தலைநகராக பரந்து விரிந்து காணப்படும் சென்னை நகருக்கு இன்று 385-வது பிறந்தநாள். அதாவது சென்னை நகரம் உருவாகி இன்றுடன் 385 ஆண்டுகள் ஆகிறது.

    சென்னை தினத்தை கொண்டாடும் பழக்கம் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கியது. அதன் பிறகு ஆண்டுக்கு ஆண்டு சென்னை தின கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகிறது.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது.

    வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை!

    இந்தத் தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம்!

    பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய - எழுதும் நம் சென்னையைக் கொண்டாடுவோம்! என்று தெரிவித்துள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந் தேதி தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா புறப்படுகிறார்.
    • மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிற அந்த நிகழ்ச்சியை தமிழக அரசு நடத்தியது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

    இது மட்டுமின்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.

    உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானால் மகிழ்ச்சி அடைவோம் என்று மூத்த அமைச்சர்கள் பலரும் நிகழ்ச்சியில் பேசி வந்தனர். ஆனாலும் அது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 27-ந் தேதி தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா புறப்படுகிறார்.

    அதற்கு முன்னதாக அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றியமைக்க உள்ளதாகவும் மூத்த அமைச்சர் உள்பட சிலரது பதவி பறிக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி வந்தது.

    அதாவது மூத்த அமைச்சர் ஒருவர் மற்றும் வேறு 2 அமைச்சர்களின் பதவி பறிக்கப்படுவதாகவும், 3 புதியவர்கள் அமைச்சராக வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வந்தன. அதாவது நாளைய தினம் (23-ந் தேதி) நல்ல நாளாக இருப்பதால் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்று பரபரப்பான தகவல் வந்த வண்ணம் இருந்தன.

    இந்த தகவல் உண்மையா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் நேரடியாகவே, கேட்க முனைந்தனர்.

    சென்னை மெரினா கடற்கரையில் பேரிடர் மேலாண்மைத் துறைக்கான (மாநில அவசரகால செயல்பாட்டு மையம்) புதிய கட்டிடத்தை திறந்து வைக்க வந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இதுபற்றி நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

    கேள்வி: அமைச்சரவை மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளிவருகிறதே?

    பதில்: அதுபற்றி எனக்கு தகவல் வரவில்லை என்று தெரிவித்தார்.

    இதன் மூலம் அமைச்சரவை மாற்றம் இப்போதைக்கு இல்லை என தெரிய வருகிறது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் மேலும் கேட்கப்பட்ட கேள்விகள் வருமாறு:-

    கே: பேரிடர் மேலாண்மை மையத்தில் என்னென்ன வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது?

    ப: எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இன்னும் என்னென்ன தேவைப்படுமோ அதையும் கொண்டு வருவோம்.

    கே: கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் இதே போல் மையம் அமைக்கப்படுமா?

    ப: படிப்படியாக கொண்டு வரலாம் என இருக்கிறோம்.

    கே: கலைஞர் நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழ்நாடு அரசின் விழாதான் என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறி இருக்கிறாரே? ஆனால் நீங்கள் அதை மத்திய அரசின் விழா என சொல்லி இருக்கிறீர்கள்?

    ப: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிற அந்த நிகழ்ச்சியை தமிழக அரசு நடத்தியது.

    கே: உங்கள் அமெரிக்க பயணத்தில் என்னென்ன முக்கியத்துவம் இருக்கும்? அங்குள்ள தமிழ் தொழில் அதிபர்களை சந்திக்கும் திட்டம் உள்ளதா?

    ப: அமெரிக்காவில் முதலீட்டாளர்களோடு சந்திப்பு உள்ளது. எல்லோரையும் பார்க்கிறோம். அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய பிறகு அதன் முடிவுகளை அப்போது கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்திற்கு இந்த ஆண்டு 120 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • தரம் உயர்த்தப்பட்ட மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சென்னை:

    உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள ரூ.25,000 அரசு சார்பில் வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்திற்கு இந்த ஆண்டு 120 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 120 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை அவர் வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து தரம் உயர்த்தப்பட்ட மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ரூ.5.12 கோடியில் 10,000 சதுர அடியில் மாநில அவசர கால செயல்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    பல்வகை பேரிடர்களுக்கான முன்னெச்சரிக்கை மையமாக தரம் உயர்த்தப்பட்ட SEOC மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27ம் தேதி அமெரிக்கா செல்கிறார்.
    • தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக, வரும் 27ம் தேதி அமெரிக்கா செல்கிறார். முதலமைச்சர் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றம் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது.

    மூத்த அமைச்சர் உள்பட 3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு, புதிதாக 3 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது.

    • 12 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
    • ஏராளமான தொழிற்சாலைகள் கடந்த மூன்றாண்டுகளாக தமிழ்நாட்டில் உருவாகி வருகிறது.

    சென்னை:

    சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.17,616 கோடி முதலீட்டில் 64,968 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய 19 தொழில் திட்டங்களைத் தொடங்கி வைத்து, ரூ.51,157 கோடி முதலீட்டில் 41,835 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய 28 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழ்நாட்டின் தொழில் துறை வரலாற்றிலும், வளர்ச்சி வரலாற்றிலும் இது மிக மிக முக்கியமான நாள்!

    நம்முடைய பொருளாதாரத் திறனை உலகிற்கு எடுத்துக் காட்டும் நாளாகவும், தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை உணர்த்தும் நாளாகவும் இந்த நாள் அமைந்திருக்கிறது.

    கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியிருக்கிறோம். மாநாடுகளை நடத்து வதைவிட, அந்த மாநாடுகள் மூலமாக எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தோம் என்பதில்தான், வெற்றி அடங்கியிருக்கிறது!

    அந்த மாநாடு மூலமாக நாம் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை-631. ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் மதிப்பு 6.64 லட்சம் கோடி ரூபாய்! இதன் மூலமாக 14 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 12 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த மூன்று ஆண்டுகளில், 31 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், 9 லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம்.


    தமிழ்நாட்டில் நிம்மதியாக தொழில் நிறுவனத்தை நடத்தலாம் என்ற நம்பிக்கை தொழிலதிபர்களுக்கு வந்திருக்கிறது. அதன் அடையாளமாகத்தான், ஏராளமான தொழிற்சாலைகள் கடந்த மூன்றாண்டுகளாக தமிழ்நாட்டில் உருவாகி வருகிறது.

    உங்களுக்கு என் அன்பான வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் தொழில் நிறுவனங்களை தொடங்கினால் மட்டும் போதாது; உங்களைப் போன்று இருக்கின்ற மற்ற தொழில் நிறுவனங்களையும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வாருங்கள்… தொழில் தொடங்க வையுங்கள்…

    தமிழ்நாடு அரசின் தொழில்துறை தூதுவர்களாக நீங்கள் எல்லோரும் மாற வேண்டும்.

    நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று, இந்த மூன்று ஆண்டுகளில், எண்ணற்ற தொழில் திட்டங்களை தமிழ்நாடு ஈர்த்திருக்கிறது. அதிக முதலீடுகளை ஈர்க்கும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களையும் ஈர்த்து, அதன்மூலமாக, 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற தமிழ்நாட்டின் இலக்கை அடைவதற்காக நம்முடைய அரசு முனைப்போடு செயலாற்றி வருகிறது.

    இந்த இருமுனை முயற்சி, இப்போது சாதகமான பலன்களை தந்து வருகிறது. இன்றைய தினம் பல்வேறு வகையான திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறேன்.

    * தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்பச் சேவைகள்,

    * ஜவுளி மற்றும் ஆடைகள்,

    * கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இன்றைக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 803 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட இருக்கிறது. இதில் சிறப்பம்சம் என்ன வென்றால், இதில் பெருமளவிலான வேலை வாய்ப்புகள் பெண்களுக்கானவை!

    பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்ற நம்முடைய அரசின் நடவடிக்கைகளுக்கு இந்த சாதனை மேலும் ஊக்கமளிக்கிறது.

    தமிழ்நாடு முழுவதும் பரவலான மற்றும் நிலைக்கத்தக்க வளர்ச்சியை உறுதி செய்வதில் நம்முடைய அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

    ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    130-க்கும் மேற்பட்ட 'பார்ச்சூன் 500' நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்துள்ளதும், தமிழ்நாட்டின் முதலீட்டு ஈர்ப்புத் திறனுக்கு அத்தாட்சியாக விளங்குகிறது.

    நம்முடைய இளைஞர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில், பல்வேறு வகைகளில் சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்கள். எனவே, எங்கள் இளைஞர்களின் திறன்களை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று முதலீட்டாளர்களை கேட்டுக் கொள்கிறேன்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா, அரசு செயலாளர் அருண்ராய், மேலாண்மை இயக்குனர் விஷ்ணு, செந்தில் ராஜ், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச் செல்வி மோகன், செயல் இயக்குனர் சினேகா கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் கல்குவாரியில் நடந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.
    • இதில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், வாணிபுத்தூர் உள்வட்டம் புஞ்சைதுறையம்பாளையம் 'அ' கிராமத்தில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த தனியார் கல்குவாரியில் நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த வெடிவிபத்தில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கோபிசெட்டிபாளையம் வட்டம், அயலூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் குமார் மற்றும் கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், மாட்டவள்ளி பகுதியைச் சேர்ந்த அஜீத் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அத்துடன், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பசுமை ஹைட்ரஜன் யூனிட் நிறுவனம் அமையும் போது சுமார் 1,511 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
    • தென் மாவட்டமான தூத்துக்குடி இந்தியாவின் ஹைட்ரஜன் ஹப் ஆக மாறி வருகிறது.

    ன்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி 2021-ம் ஆண்டு அமைந்தது முதல் இதுவரை தொழில் துறைக்காக பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்தியப் பொருளாதாரத்துக்கு மிக முக்கியப் பங்களிக்கிற மாநிலமாகவும், தமிழ்நாட்டை உயர்த்திடும் பெரும் லட்சிய இலக்கை நிர்ணயித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முனைப்புடன் செயல்படுகிறது.

    அதன் முதற்கட்டமாக முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2,80,600 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

    இரண்டாம் கட்டமாக ஐக்கிய அரபு நாடுகள் சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிற வகையில் 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.


    3-ம் கட்டமாக 2024 ஜனவரி 7,8 ஆகிய நாட்களில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளும் 14, 54,712 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் 12,35, 945 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் என மொத்தம் 26,90,657 வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டது.

    4-ம் கட்டமாக 27.1.2024 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று அங்குள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சக அதிகாரிகள் தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர் ஆகியோரை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.

    அதன் பயனாக ரூ.3,440 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூ.8.64 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்துக்கு ஈர்க்கப்பட்டது டன் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளது.

    இந்த நிலையில் மேலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந் தேதி அமெரிக்கா செல்கிறார்.

    அதற்கு முன்னதாக சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு தொழில் முதலீட்டு மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


    லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்ட நிறுவனங்களில் 19 நிறுவனங்கள் ரூ.17,616 கோடி முதலீட்டில் தங்களது ஆலைகளைத் தொடங்க உள்ளன. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் எந்திர மின்னணுவியல் உபகரண தொழிற்சாலை, திருவண்ணாமலையில் ராயல் என்பீல்டு மோட்டார் தொழிற்சாலை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, விருதுநகரில் அமைக்கப்பட்ட சுந்தரம் பாசனர்ஸ் தொழிற்சாலை, செங்கல்பட்டில் ரெனால்டு நிசான் தொழில்நுட்ப வர்த்தக மையம், கிருஷ்ணகிரியில் வெக் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை முக்கியமானவை ஆகும்.

    இந்த மாநாட்டில் ரூ.51,157 கோடி முதலீட்டில் அமைய உள்ள 28 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி தளம் அமைப்பதற்காக சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 36 ஆயிரத்து 238 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.

    இதன் தொடர்ச்சியாக இப்போது இந்த தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் யூனிட் நிறுவனம் அமையும் போது சுமார் 1,511 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.


    இதன் மூலம் தென் மாவட்டமான தூத்துக்குடி இந்தியாவின் ஹைட்ரஜன் ஹப் ஆக மாறி வருகிறது.

    தூத்துக்குடியில் அமைக்கப்படும் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் பசுமை அம்மோனியாவை ஆதாரமாக வைத்து பசுமை ஹைட்ரஜன் எரிவாயு உருவாக்கப்பட உள்ளதாக செம்ப்கார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பசுமை ஹைட்ரஜனை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சோஜிட்ஸ் கார்ப் மற்றும் கியூஷூ எலக்ட்ரிக் பவர் உள்ளிட்ட ஜப்பான் நிறுவனங்களுடன் செம்ப்கார்ப் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இன்று நடைபெற்ற புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 803 புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வழிவகை உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விழாவில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, துறை செயலாளர் அருண்ராய் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    ×