search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முக ஸ்டாலின்"

    • சில சம்பவங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
    • விசிக கூட்டணியில் இருந்து விலகும் என்று கூறப்பட்டது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு அறிவித்தது, அதன் பிறகு கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக அவர் பேசிய பழைய வீடியோ வெளியிடப்பட்டு, பிறகு அது டெலீட் செய்யப்பட்டது போன்ற சம்பவங்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    மேலும், திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி விலகி விடும் என்பது போன்ற கருத்துக்கள் பேசு பொருளாக காரணமாக அமைந்துள்ளன. தொல் திருமாவளவனின் சமீபத்திய அறிவிப்புகள் மற்றும் பேச்சுக்களுக்கு திமுக தலைவர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளன் நாளை காலை 11 மணி அளவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்திய செயல்பாடுகள் சர்ச்சையானதைத் தொடர்ந்து திருமாவளவன் மற்றும் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    • பெரியாரின் பிறந்ததாள் மூகநீதி நாள கடைபிடிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் 2021ல் அறிவித்திருந்தார்.
    • கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் "சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு" நிகழ்ச்சி நடைபெறும்.

    பெரியார் பிறந்தநாளான 17ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

    அன்றைய தினம், சமத்துவம் சகோதரத்துவம். சமதர்ம கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக்கொள்வேன்' என உறுதிமொழி ஏற்குமாறும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக பெரியாரின் பிறந்ததாள் மூகநீதி நாள கடைபிடிக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் 2021ல் அறிவித்திருந்தார்.

    இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தந்தை பெரியார் பிறந்த நாள் "சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு" தலைமைக் கழகம் அறிவிப்பு "தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் "சமூகநீதி நாளாக" கடைபிடிக்கப்படும் என்றும், அப்பிறந்த நாள் அன்று "சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும்" என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 6.9.2021 அன்று சட்டப்பேரவையில் அறிவித்ததற்கிணங்க, தந்தை பெரியார் பிறந்த நாளான 17.9.2024 அன்று காலை 10.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் சிலை முன்பு, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் "சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு" நிகழ்ச்சி நடைபெறும்.

    இதில் சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட, பகுதி, வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தவறாது சுலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    தந்தை பெரியார் பிறந்த நாள் "சமூக நீதி நாள் உறுதிமொழி"

    • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனது என்ற பண்பு நெறியும் வாழ்வியல் சுடைபிடிப்பேன்!
    • வழிமுறையாகச் சுயமரியாதை பகுத்தறிவு ஆளுமைத்திறனும் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!
    • சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!
    • மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!
    • சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்! -முதல்வர் மு.க.ஸ்டாலின்

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • உங்களுடைய 'ஹெல்ப்' இல்லையென்றால் எங்களால் வந்திருக்க முடியாது என்றார்.
    • முதற்கட்டமாக 10 பேர் மீட்கப்பட்டோம். பிறகு 20 பேர் என 30 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உள்ள பராசக்தி என்ற பெண்ணிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

    வணக்கம் நான் ஸ்டாலின் பேசுகிறேன் என்றார். அதற்கு அந்த பெண் வணக்கம் தெரிவித்து விட்டு நல்லபடியா வந்திட்டோம் என்றார். உங்களுடைய 'ஹெல்ப்' இல்லையென்றால் எங்களால் வந்திருக்க முடியாது என்றார்.

    உடனே முதலமைச்சர் அவரிடம், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்று கேட்டார்.

    மருத்துவ பரிசோதனையில் இருக்கிறோம் என்று பதில் அளித்தார். அங்கிருந்து வந்ததும் இங்கு ஏற்பாடு செய்து ஊருக்கு செல்ல உதவிடுமாறு சொல்லி இருக்கிறேன் என்றார்.

    அப்போது அந்த பெண், முதற்கட்டமாக 10 பேர் மீட்கப்பட்டோம். பிறகு 20 பேர் என 30 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

    உடனே முதலமைச்சர், "தைரியமாக இருங்கள்" என்று ஆறுதல் கூறினார். "நான் பேசியதாக எல்லோரிடமும் சொல்லுங்கள். அங்கிருக்கும் கலெக்டரிடமும் தொடர்ந்து பேசி வருகிறோம்" என்றார்.

    • தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. ஆட்சி தான் மீண்டும் வரும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.
    • தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. இந்த இரண்டு திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி அமைக்க முடியும்.

    மதுரை:

    மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லுர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற விழாவில் பேசிய தொழிலதிபர் மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் தொடர்பாக எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடியார் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார். பாரதிய ஜனதாவின் இந்த நிலைப்பாடு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இதனை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் பெருமை, கலாச்சாரம் ஆகியவற்றை பேணுவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இப்போது அதற்கு எதிர்மாறாக மத்திய அமைச்சர் நடந்துள்ளார். இது விரும்பத் தகாத சம்பவம் ஆகும்.

    வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. வலிமையான ஒரு இயக்கமாக தேர்தலை சந்திக்கும். அ.தி.மு.க. மகா சமுத்திரம் போன்றது. எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். வேறு யாரையும் நாங்கள் பொருட்படுத்தவில்லை. பாரதிய ஜனதாவை பொருத்தவரை அதன் மதவாதத்தை அ.தி.மு.க. ஒரு போதும் ஏற்கவில்லை. எங்களை பொறுத்தவரை கூட்டணி தேவையில்லை.

    தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளிலேயே தி.மு.க.வின் ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. தி.மு.க. ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் தொடர்ந்து மறுமுறை ஆட்சிக்கு வராது இதுதான் வரலாறு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விட பல மடங்கு திறமை கொண்டவராக எடப்பாடியாரை மக்கள் பார்க்கிறார்கள். எனவே வருகிற 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெறும். மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார்.

    தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. ஆட்சி தான் மீண்டும் வரும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. இந்த இரண்டு திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி அமைக்க முடியும். கூட்டணி ஆட்சி என்பது தமிழக மக்களால் விரும்பத்தகாத ஒன்றாகும். கூட்டணி ஆட்சி அமைந்த மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலைமை என்னவாக இருக்கிறது என்று மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சுற்றுப்பயணம் செய்து தொழில் முதலீட்டை ஈர்த்து வந்துள்ளதாக கூறுகிறார். ஆனால் இதுவரை பல முதலமைச்சர்கள் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். இவர் மக்களின் வரிப்பணத்தில் ஜாலியாக சுற்றுலா சென்று வந்துள்ளார். மற்றபடி அதில் குறிப்பிடத்தக்க ஒன்றுமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்ததுடன் உருவப் படத்துக்கும் மலர் தூவி வணங்கினார்.
    • அண்ணா அறிவாலயம் சென்று அங்கு உள்ள அண்ணா சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருத் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள அண்ணா சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சென்னையில் அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, ரகுபதி, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, ப.ரங்கநாதன், ஜோசப் சாமுவேல், பரந்தாமன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் செய்தித்துறை அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    இதன் பிறகு வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்ததுடன் உருவப் படத்துக்கும் மலர் தூவி வணங்கினார்.

    இதில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெரு மக்களுடன் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி எம்.பி., சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, மயிலை வேலு, ஜெ.கருணா நிதி எம்.எல்.ஏ., எழிலன், மோகன், பூச்சிமுருகன் உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதன் பிறகு அண்ணா அறிவாலயம் சென்று அங்கு உள்ள அண்ணா சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருத் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று அண்ணா உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • போதை பொருட்கள் எங்கு பார்த்தாலும் கிடைக்கிறது.
    • போதை பொருட்களால் இளைஞர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள்.

    மதுரை:

    மதுரையில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்வர் வெளிநாட்டில் 17 நாட்கள் தங்கி 19 நிறுவனங்கள் மூலம் மொத்தம் ரூ.7600 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு இருக்கிறார். 17 நாட்களில் வெறும் 7,600 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்திருப்பதை தோல்வியாக தான் நாங்கள் பார்க்கிறோம். இவ்வளவு நாட்கள் சென்று குறைந்த முதலீடு தான் பெற்றிருக்கிறார்.

    மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர், மதுக்கடையை உடனடியாக மூடினால் தமிழ்நாட்டின் சூழல் மோசமாகிவிடும் என தமிழக மக்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். தமிழக இளைஞர்கள் கெடுத்ததே தி.மு.க.தான். தமிழகத்தில் மது இல்லாமல் இருக்கமுடியாத நிலையை உருவாக்கியதே திராடவிட மாடல் அரசுதான்.

    மதுவிலக்கு பிரச்சனைகளைப் பற்றி தொடர்ந்து பேசுகின்ற கனிமொழி மூன்று ஆண்டுகாலம் மவுனமாக இருக்கிறார். அனைத்து விதமான போதைப் பொருட்களும் எங்கு பார்த்தாலும் கிடைக்கிறது. முதலமைச்சர் என்ன தான் செய்து கொண்டிருக்கிறார். இளைஞர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள், காவல்துறை எதற்கு இருக்கிறது?

    சென்னை கோவளத்தில் ஹெலிகாப்டர் சர்வீஸ் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக வரும் போது சென்னைக்கு தான் மூன்று மடங்கு அதிகமான பறவைகள் வருகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு நெருக்கடி ஏற்படும். இந்த திட்டத்தை தவிர்த்து மூட வேண்டும்.

    பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதிக் கட்சி. எங்கள் தலைவர் தமிழ்நாட்டில் அருந்ததியர் சமுதாயத்திற்கு உள்ஒதுக்கீடு வாங்கி தந்துள்ளார். இஸ்லாமியருக்கும் இட ஒதுக்கீடு வாங்கி தந்துள்ளார்.

    திருமாவளவன் மது விலக்கு மாநாடு நடத்தினால் ஆதரிக்கிறோம். மது ஒழிப்பு தொடர்பாக நாங்கள் பி.எச்.டி. படித்துள்ளோம், திருமாவளவன் எல்.கே.ஜி. தான் படித்திருக்கிறார். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற திருமாவளவன் பதிவு சரியானது. அதை ஏன் நீக்க வேண்டும்? தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என கட்சி தொடங்கவில்லை. அதை நீக்கியது தான் சரியில்லை.

    நாடு முழுவதும் மது விலக்கு கோரிக்கையை கண்டிப்பாக வைப்போம். மதுவிலக்கை எல்லா மாநிலங்களிலும் இதை செய்ய வேண்டும் படிப்படியாக கொண்டு வர வேண்டும். தமிழ்நாடு அரசு மதுவை விற்கவில்லை, திணிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அத்தப்பூக்கோலம், அறுசுவை சத்ய விருந்து, பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் என மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழும் நாளாகத் திருவோணம் அமைந்துள்ளது.
    • கேரள மக்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக இந்த ஓண நன்னாள் அமையும் என்று நம்புகிறேன்.

    கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள். ஓணம் பண்டிகை நாளை (செப்.15) கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓணம் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

    கேரள மக்களின் பண்பாட்டுப் பெருவிழாவான ஓணம் திருநாள் உலகெங்கிலும் வாழும் மலையாளிகளால் எழுச்சியுடன் நாளை (15-9-2024) கொண்டாடப்படுகிறது. அத்தப்பூக்கோலம், அறுசுவை சத்ய விருந்து, பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் என மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழும் நாளாகத் திருவோணம் அமைந்துள்ளது.

    நல்லாட்சி புரிந்த மன்னனை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் சூழ்ச்சியாலும் வஞ்சகத்தாலும் வீழ்த்தினாலும், அவனை மக்கள் மனங்களில் இருந்து அகற்ற முடியாது என்பதை உணர்த்தும் கொண்டாட்டமாகவே ஓணத்தைக் காணவேண்டும்.

    திராவிட உடன்பிறப்புகளான கேரள மக்களுக்கு ஓர் இடர் என்றால் உடனடியாக உதவிக்கரம் நீட்டத் தமிழ்நாடு என்றுமே சகோதர உணர்வோடு முன்னிற்கும். அந்த வகையில்தான், அண்மையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின்போது தமிழ்நாடு அரசின் சார்பில்

    5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்ததோடு, மீட்பு, மருத்துவக் குழுக்களையும் அனுப்பி வைத்தோம். பெருமழை விளைவித்த பாதிப்புகளில் இருந்து மலையாளிகளுக்கே உரிய போராட்டக் குணத்துடன் மீண்டு வரும் கேரள மக்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக இந்த ஓண நன்னாள் அமையும் என்று நம்புகிறேன்.

    சமத்துவம், சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக ஓணத் திருநாளைக் கொண்டாடும் எனது அன்பிற்கினிய மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்கள் சகோதரன் ஸ்டாலினின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
    • மீட்பு பணி சவாலாக இருந்த நிலையிலும், படகுகள் மூலம் சுமார் 448 பேரை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

    சென்னை:

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 129 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/ பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ் நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை, ஊர்க்காவல் படை மற்றும் விரல்ரேகைப் பிரிவு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த ஆண்டு, காவல் துறையில் தலைமைக்காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் உதவி சிறை அலுவலர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல்படையில் ஊர்க்காவல் படைவீரர் முதல் படைத்தளபதி வரையிலான 5 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும் மற்றும் விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கும், அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் அண்ணா பதக்கங்கள் வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.

    மேலும், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தில் பணிபரிந்து வரும் எஸ்.மந்திரமூர்த்தி, முன்னணி தீ அணைப்போர் 7807 மற்றும் ராமச்சந்திரன், தீ அணைப்போர் 8229 ஆகிய இருவரும் கடந்த 2023 டிசம்பர் 18-ம் தேதி இரவு தாமிரபரணி ஆற்றின் கரையில் வெள்ளம் புகுந்த கிராமங்களில் இருந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலையிலும், மற்றும் மீட்பு பணி சவாலாக இருந்த நிலையிலும், படகுகள் மூலம் சுமார் 448 பேரை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு செயலை பாராட்டி இருவருக்கும் "தமிழக முதலமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம்" வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.

    • 17 நாட்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் உலகில் 18 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
    • அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளவை மத்திய அரசு நடத்திய விதம் வெட்கப்பட வேண்டியது.

    அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்று தமிழகத்துக்கு ரூ.7,616 கோடி முதலீட்டுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.

    தமிழகம் திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள் வரவேற்றனர்.

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அனைவருக்கும் வணக்கம். நீங்க எல்லாம் நல்லா இருக்கீங்களா...

    அமெரிக்கா சென்ற அரசு முறை சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து சென்னை திரும்பி இருக்கிறேன். அமெரிக்க பயணம் வெற்றிகரமான பயணமாகவும், சாதனை பயணமாகவும் அமைந்திருக்கிறது. தனிப்பட்ட எனக்கு அல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனை பயணமாக இது அமைந்திருக்கிறது.

    17 நாட்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் உலகில் 18 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    உலகின் புகழ்பெற்ற 25 நிறுவனங்களுடன் சந்திப்பை நடத்தி உள்ளேன். அமெரிக்க பயணத்தின்போது 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பல நிறுவனங்கள் தமிழகத்திற்கு வர விருப்பம் தெரிவித்துள்ளன.

    சென்னையில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்க உள்ளது. ஃபோர்டு நிறுவனம் உற்பத்தியை தொடங்க அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டுள்ளேன். ஒப்பந்தங்கள் செய்துள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் நன்றி.

    முதலீடுகள் தொடர்பாக சட்டசபையில் எடுத்து கூறி உள்ளோம். சட்டசபையில் பேசியவற்றை இபிஎஸ் படித்து பார்க்க வேண்டும்.

    அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளவை மத்திய அரசு நடத்திய விதம் வெட்கப்பட வேண்டியது.

    முதலீடுகள் குறைவு என கூறுவது அரசியல் நோக்கத்துடன் கூறப்படும் குற்றச்சாட்டுகள் என்று அவர் கூறினார்.

    • அமெரிக்காவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் மூலம் ரூ.25,000 கோடி முதலீடுகள் ஈர்க்க உறுதி பெற்று வந்துள்ளனர்.
    • தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முதலீடுகள் ஈர்க்கப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி அடைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    17 நாள்கள், 18 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்,

    வெறும் ரூ.7,616 கோடி மட்டுமே முதலீடு:

    முதல்வரின் அமெரிக்கப் பயணம் தோல்வி!

    அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், 18 நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி ரூ.7,616 கோடி முதலீட்டை ஈர்ப்பதற்கான உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளனர். ஒப்பீட்டளவில் பார்க்கும் போது இது மிக மிக குறைவு ஆகும்.

    தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக தமிழக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிறுவனங்களில் பெரும்பாலானவை ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வருபவை தான். அந்த நிறுவனங்கள், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான மையங்களை அமைப்பதற்காகவே முதலீடு செய்ய முன்வந்திருக்கின்றன.

    உலகில் நான்காம் தலைமுறை தொழில்புரட்சி நடைபெற்று வரும் நிலையில், இத்தகைய ஆய்வு மையங்கள் அமைக்கப்படுவதும், அதற்காக முதலீடு செய்யப்படுவதும் இயல்பாக நடக்கக் கூடியவை. ஒருவேளை இதற்கான முதலீடுகளை ஈர்ப்பதாக இருந்தாலும் கூட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தகவல்தொழில்நுட்ப அமைச்சரும், செயலாளரும் பேச்சு நடத்தி சாதித்திருக்கலாம். இதற்காக முதலமைச்சர் அவர்கள் தம்மை வருத்திக் கொண்டு அமெரிக்கா சென்றிருக்கத் தேவையில்லை.

    தெலுங்கானா முதலமைச்சராக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற ரேவந்த் ரெட்டி கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை 8 நாள்கள் மட்டுமே அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டு, ரூ.31,500 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து வந்திருக்கிறார். மொத்தம் 19 நிறுவனங்களுடன் தெலுங்கானா அரசு செய்து கொண்ட ஒப்பந்தங்களின் மூலம் அம்மாநிலத்திற்கு கிடைக்க இருப்பவை தரமான முதலீடுகள் ஆகும்.

    அதேபோல், கர்நாடகத்தில் கடந்த ஆண்டு புதிதாக பொறுப்பேற்ற சித்தராமையா தலைமையிலான அரசின் சார்பில் அம்மாநில தொழில்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தலைமையிலான குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் மூலம் ரூ.25,000 கோடி முதலீடுகள் ஈர்க்க உறுதி பெற்று வந்துள்ளனர்.

    சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் 54-ஆம் மாநாட்டின் போது மராட்டிய முதலமைச்சர் ஷிண்டே தலைமையிலான குழு மொத்தம் ரூ.3.53 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அவற்றின் பெரும்பாலானவை அமெரிக்க முதலீடுகள் ஆகும். இந்த மாநிலங்களுடன் ஒப்பிடும் போது அமெரிக்காவில் தமிழகம் ஈர்த்த முதலீடுகளின் மதிப்பு மிகவும் குறைவு ஆகும். அந்த வகையில் தமிழக முதலமைச்சரின் அமெரிக்கப் பயணம் தோல்வியடைந்துள்ளது.

    தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முதலீடுகள் ஈர்க்கப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது. அதற்கான சிறந்த வழி தமிழ்நாட்டில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும், தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சாதகமான சூழலை ஏற்படுத்துவதும் தான். இதை செய்தால் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் தானாக குவியும். எனவே, வீண் விளம்பரங்களை விடுத்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்திய சந்தையில் மீண்டும் கவனம் செலுத்துவதற்கு போர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
    • தமிழ்நாட்டில் மீண்டும் ஆலையை அமைக்க மாநில அரசிடம் கடிதத்தை சமர்ப்பிப்பு.

    தமிழகத்தில் போர்ட் மோட்டார் நிறுவனம் மீண்டும் ஏற்றுமதிக்கான உற்பத்தி ஆலையை அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் போர்டு கார் தொழிற்சாலையின் உயர் அதிகாரிகளை சந்தித்து சென்னையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

    அப்போது, போர்ட் உடனான 30 ஆண்டுகால கூட்டணியை மீண்டும் புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    அந்த வேண்டுகோளை ஏற்று போர்டு கார் நிறுவனம் மீண்டும் சென்னை அருகே கார் உற்பத்தியை தொடங்க உள்ளதாக தமிழக அரசிடம் கடிதம் வழங்கி உள்ளது. அதன்படி, மீண்டும் இந்திய சந்தையில் கவனம் செலுத்துவதற்கு அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    இதற்கான முறையான அறிவிப்பு சில தினங்களில் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில், மின்சார வாகன விற்பனையுடன் இந்தியாவில் நுழைவதற்கான முயற்சிகளை போர்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது.

    அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமாக போர்ட் நிறுவனம், கடந்த 2021ம் ஆண்டில் இந்தியாவில் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டது.

    சென்னை மறைமலைநகர், குஜராத்தின் சனந்த் பகுதிகளில் செயல்பட்டு வந்த போர்ட் ஆலைகள் 2021ல் மூடப்பட்டன.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் ஆலையை அமைக்க மாநில அரசிடம் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக போர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×