search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94316"

    • ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் இணைந்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

    நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     


    ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லால் இணைந்துள்ளதாகவும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளதாகவும் படக்குழு புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ஜெயிலர் 

    சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான தகவலை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இதனிடையே, ஜெயிலர் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.


    மோகன் லால்

    இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "நீண்ட நாட்களுக்கு பிறகு என் அருமை நண்பர் மரியாதைக்குரிய சந்திரபாபு நாயுடுவுடன் மறக்கமுடியாத நேரத்தை கழித்தேன். அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கவும் அரசியல் வாழ்க்கையில் சிறந்து விளங்கவும் வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.



    • ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் மோகன்லால் இணைந்துள்ளார்.

    நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     

    ரஜினி - மோகன்லால்

    ரஜினி - மோகன்லால்

    சில தினங்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக இணையதளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான தகவலை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஜெயிலர் திரைப்படத்தில் மோகன்லால் இணைந்தது உறுதியானது.

     

    மோகன்லால்

    மோகன்லால்

    மோகன்லால் ஏற்கனவே கமல்ஹாசனுடன் 'உன்னைப்போல் ஒருவன்', விஜய்யுடன் ஜில்லா, சூர்யாவுடன் காப்பான் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ஜெயிலர்

    ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளதாகத் தெரிவித்து படக்குழு வீடியோவை வெளியிட்டிருந்தது. மேலும், இந்த படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயிருப்பதாக இணையதளங்களில் தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.


    ஹைதராபாத் செல்லும் ரஜினி

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் ரஜினி 'ஜெயிலர்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு புறப்பட்டு சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • நடிகர் ரஜினி தற்போது நடித்து வரும் திரைப்படம் 'ஜெயிலர்'.
    • இப்படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     

    ஜெயிலர் 

    ஜெயிலர் 


    ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளதாகத் தெரிவித்து படக்குழு வீடியோவை வெளியிட்டிருந்தது.


    மோகன்லால் 

    மோகன்லால் 

    இந்நிலையில் ஜெயிலர் படத்தில் நடிகர் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருவதாக இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதில் மோகன்லால் இணைந்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர். இருந்தும் இந்த தகவல் குறித்து படக்குழு தரப்பிலிருந்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

    • ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி சுதாகர் இன்று காலை உயிரிழந்தார்.
    • சுதாகர் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

    அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகர், நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து இவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வி.எம். சுதாகர் இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு ரஜினி மக்கள் மன்றம் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

     

    ரஜினி - சுதாகர்

    ரஜினி - சுதாகர்


    தொடர்ந்து சுதாகரின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து பதிவிட்டிருந்தார். அதில், "என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.


    சுதாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினி 
    சுதாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ரஜினி 

    இந்நிலையில் ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி சுதாகரின் உடலுக்கு நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, சுதாகர் என்னுடைய நீண்ட கால நண்பர். ரொம்ப முயற்சிப்பண்ணோம் ஆனால் நம்மை விட்டு அவர் பிரிந்துவிட்டார். இதை நான் எதிர்பார்க்கவில்லை. சுதாகருக்கு எப்பவுமே என்னை பற்றியே யோசனை. நான் சந்தோஷமா இருக்கனும், நான் நல்லா இருக்கனும்னு யோசிக்கக்கூடியவர். மிகவும் நல்ல மனிதர். நல்ல நண்பனை நான் இன்றைக்கு இழந்துவிட்டேன் என்றார்.

    • ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி சுதாகர் இன்று காலை உயிரிழந்தார்.
    • சுதாகர் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

    அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகியாக பதவி வகித்து வந்தவர் சுதாகர். இவர் நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து இவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி வி.எம். சுதாகர் இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு ரஜினி மக்கள் மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது.

     

    ரஜினி - சுதாகர்

    ரஜினி - சுதாகர்

    இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி சுதாகர் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டிருப்பது, "என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
    • நடிகர் ரஜினி தனது வீட்டின் முன்பு குவிந்திருந்த ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு தினத்தை கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், ஒருவருக்கொருவர் வாழ்த்து பகிர்ந்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினியின் ரசிகர்கள் புத்தாண்டை முன்னிட்டு அவரின் வீட்டின் முன்பு குவிந்து ரஜினியின் வாழ்த்துக்காக காத்திருந்தனர்.

     

    ரசிகர்களை சந்தித்த ரஜினி

    ரசிகர்களை சந்தித்த ரஜினி

    ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சென்னையில் தனது வீட்டின் முன்பு குவிந்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கையசைத்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

    நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் ரஜினிகாந்த் கடந்த 12-ந் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • பிறந்தநாளையோட்டி நடிகர் ரஜினி இன்று காலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

    நடிகர் ரஜினிகாந்த் கடந்த 12-ந் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். ரஜினி தனது பிறந்த நாளையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய முடிவு செய்திருந்தார். அதன்படி மகள் ஐஸ்வர்யாவுடன் நேற்று இரவு 8-30 மணி அளவில் திருமலைக்கு சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகத்தால் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி அளவில் கோவிலின் மகா துவாரம் வழியாக சென்று சுப்ரபாத சேவையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஜஸ்வர்யாவுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

     

    தர்காவில் வழிபாடு செய்த ரஜினி

    தர்காவில் வழிபாடு செய்த ரஜினி

    இன்று காலை ரஜினி திருப்பதி ஏழுமலையானை தரிசித்த நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவில் ரஜினி பிரார்த்தனை மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் சென்று தர்காவில் வழிப்பட்ட ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர்களுடன் ரஜினியின் மகள் ஐஷ்வர்யா உடன் இருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    • நடிகர் ரஜினிகாந்த் கடந்த 12-ந் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • பிறந்தநாளையோட்டி நடிகர் ரஜினி திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

    நடிகர் ரஜினிகாந்த் கடந்த 12-ந் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். ரஜினி தனது பிறந்த நாளையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய முடிவு செய்திருந்தார். அதன்படி மகள் ஐஸ்வர்யாவுடன் நேற்று இரவு 8-30 மணி அளவில் திருமலைக்கு வந்தார். திருமலைக்கு வந்த நடிகர் ரஜினிகாந்துக்கு திருப்பதி தேவஸ்தான உதவி செயல் அலுவலர் ஹரிநாத் பூச்செண்டு கொடுத்து வரவேற்பு அளித்தார்.

    ரஜினி

    ரஜினி

     

    இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தேவஸ்தானத்திற்கு சொந்தமான டி.எஸ்.ஆர் கெஸ்ட் ஹவுஸில் இரவு தங்கினார். இன்று அதிகாலை 5 மணி அளவில் கோவிலின் மகா துவாரம் வழியாக சென்று சுப்ரபாத சேவையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஜஸ்வர்யாவுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

     

    தரிசனம் முடித்து வந்த அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் வைத்து லட்டு மற்றும் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். ரஜினிகாந்தை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். போலீசார் அவர்களை கட்டுபடுத்தினர். ரஜினிகாந்திடம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏற்கனவே வாழ்த்து தெரிவித்திருப்பதாக கூறினார். 

    • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றார்.
    • இவருக்கு அரசியல் தலைவர்கள் திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.


    உதயநிதி ஸ்டாலின்

    இதையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" என்று வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.



    • நடிகர் ரஜினி நேற்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்தனர்.


    ரஜினி 

    இந்நிலையில், ரஜினிக்கு நடிகர் பார்த்திபன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "12/12-க்குள் பிறந்த நாளை அடங்கிவிடலாம்.ஆனால் வாழ்த்துவது 22,23,24,25,26 ,27,28,29 என 100 வரை தொடர்ந்துக் கொண்டேயிருக்கும்.அவரது இடத்தை நெருங்கலாம்,தொடலாம் தாண்டலாம் ஆனால் அவரது தன்னடக்கத்தை,தன்னைத்தாழ்த்தி கொண்டு,தகுதியுள்ளோரை வாழ்த்தும் தனித்தன்மையை யாரும் தொடக்கூட முடியாது.


    பார்த்திபன் - ரஜினி

    ரஜினி சாரை ரசிப்பவர்கள் (ஜப்பான் உட்பட)பல கோடி இருக்கலாம் ஆனால்,அவரே ரசிகராக மாறும்போதும், அடுத்தவரின் படைப்பை பாராட்டும் போதும் குழந்தையாக மாறி குதூகலமாகிவிடுவதில் அவருக்கு இணை அவரே. சிம்ம ராசி, மகர லக்னம், திருவோண நட்சத்திரம் என்பது அவரின் ஜாதகம்.ஆனால் சினிமா ராசி, ரசிக luckனம், திரையுலக உச்ச நட்சத்திரம் என்பதே அவருக்கு சாதகம்!!! வாழ்த்துகள் - நேற்று ஒருநாள் மட்டுமல்ல!" என்று பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.



    ×