search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    • அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரை 48,500 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • இலவச தரிசனத்துக்கு 16 மணிநேரம் ஆனது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து வரும் ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிய தொடங்கி உள்ளனர். திருமலையில் எங்குப் பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காட்சியளிக்கின்றன.

    திருமலையில் தங்கும் விடுதிகள், சத்திரங்கள் ஆகியவற்றில் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். அங்குள்ள முக்கிய சாலைகள், பூங்காக்களில் பக்தர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    நேற்று புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி திருமலையில் உள்ள லேப்பாட்சி சர்க்கிள் வரை 1½ கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் காத்திருந்தனர். அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரை 48 ஆயிரத்து 500 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கு 16 மணிநேரம் ஆனதாக கோவில் அதிகாரி ஒருவர் கூறினார்.

    நேற்று முன்தினம் ஏழுமலையான் கோவிலில் 65 ஆயிரத்து 158 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனா். 28 ஆயிரத்து 416 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.4 கோடியே 44 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 27-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
    • 30 முதல் 2-ந்தேதி வரை பைக்கில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27-ந் தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி திருமலை முழுவதும் அலங்கரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    வண்ண வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதால் மின்னொளியில் ஜொலிக்கிறது.

    பிரம்மோற்சவ விழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். ஏழுமலையான் சமேத ஸ்ரீதேவி, பூதேவி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதனை காண்பதற்காக 4 மாட வீதிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் குவிவார்கள்.

    திருமலையில் 12 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துவதற்கு மட்டுமே இடவசதி உள்ளது. எனவே பிரம்மோற்சவ விழாவின் போது கார், வேன் உள்ளிட்ட 12 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்பட உள்ளது.

    கூடுதலாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் திருப்பதியில் நிறுத்திவிட்டு திருமலைக்குச் செல்லும் அரசு பஸ்களில் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் கருட சேவைக்கு முந்தின நாளான 30-ந் தேதி மதியம் 2 மணி முதல் 2-ந் தேதி இரவு வரை திருமலைக்கு பைக்கில் செல்ல அனுமதி இல்லை. உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பைக்கில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பைக்கை திருப்பதியில் நிறுத்திவிட்டு அரசு பஸ்சில் சென்று சாமியை தரிசனம் செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 65,187 பேர் தரிசனம் செய்தனர். 27,877 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.5.37 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • பிரம்மோற்சவ விழா 27-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
    • திருமலை முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு வரும் 27-ந் தேதி முதல் அக்டோபர் 5-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெற உள்ளது. கொரோனா தொற்று பரவல்காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி சாமி வீதி உலா கோவிலுக்கு உள்ளேயே நடந்தது.

    பிரம்மோற்சவ விழாவில் சாமி வீதி உலாவை காண முடியாமல் பக்தர்கள் விரக்தி அடைந்த நிலையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர். பிரம்மோற்சவ விழா நடைபெறும் நாட்களில் காலை இரவு என இரண்டு வேளையும் 4 மாட வீதிகளில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தை யொட்டி ஏழுமலையான் கோவில் மற்றும் வெளிப்பிரகாரம் அங்குள்ள பூங்காக்கள் மற்றும் திருமலை முழுவதும் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    மேலும் சாமி வீதி உலா நடைபெறும் தங்கத்தேர், மரத்தேர், கருட வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் தூய்மைப்படுத்தப் பணிகள் நடந்து வருகிறது.

    மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட விதவிதமான மலர்கள், பழங்கள், காய்கறிகள் கொண்டு கோவில் அலங்காரம் செய்யும் பணியும் நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவிற்கு 4 நாட்களே உள்ளதால் திருமலை முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    மேலும் பிரம்மோற்சவ விழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    பக்தர்களை கட்டுப்படுத்தி தரிசனத்திற்கு அனுப்பி வைப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து போலீசார் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 74, 817 பேர் தரிசனம் செய்தனர். 33,350 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.97 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆர்ஜித சேவை, கல்யாணம் உற்சவம் ஆன்லைன் டிக்கெட்டுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படுகிறது.
    • அக்டோபர் மாதத்திற்கான அங்க பிரதட்சண டிக்கெட்டுகள் நாளை வெளியிடப்பட உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ஆன்லைன் டிக்கெட்டுகளை மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன.

    தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் வரும் நவம்பர் மாதத்திற்கான 6 லட்சம் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. இதேபோல் ஆர்ஜித சேவை, கல்யாணம் உற்சவம், சகஸ்ஹர தீப அலங்கார சேவைக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    அக்டோபர் மாதத்திற்கான அங்க பிரதட்சண டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெறுவதால் 1 முதல் 5-ந் தேதி வரை அங்க பிரதட்சன சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 73,186 பேர் தரிசனம் செய்தனர். 27,365 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.60 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை மாலை 3 மணியளவில் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
    • அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கப்பட மாட்டாது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசனம் செய்ய நவம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    அதேபோல் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீபலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை மாலை 3 மணியளவில் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இந்த டிக்கெட்டுகள் முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். நவம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுக்கான எலக்ட்ரானிக் குலுக்கல் முறை நாளை நடக்கிறது.

    அக்டோபர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 22-ந்தேதி காலை 9 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. ஆனால், பிரம்மோற்சவம் நடைபெறும் தேதிகளில், அதாவது அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து 5-ந்தேதி வரை அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கப்பட மாட்டாது. பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு, அந்தந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று காலை 6 மணியில் இருந்து 11 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.
    • 12 மணி அளவில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதி பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. இதை முன்னிட்டு கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் "ஆலய சுத்தி" இன்று நடந்தது. ஆண்டுக்கு 4 முறை கோவிலை சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது.

    யுகாதி பண்டிகை ஆனிவார ஆஸ்தானம் வருடாந்திர பிரம்மோற்சவம் வைகுண்ட ஏகாதசி விழாக்கள் நடக்கும் முந்தைய செவ்வாய்க்கிழமை அன்று கோவிலை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.

    அதன்படி வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று காலை 6 மணியில் இருந்து 11 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப் பணி நடந்தது.

    ஆனந்த நிலையம் முதல், பங்காரு வாகிலி வரை கோவிலில் உள்ள துணைச் சன்னதிகள், கோவில் வளாகம், மண்டபம், சுவர்கள், மேற்கூரை, தூண்கள், பூஜைகளுக்கு பயன்படுத்தப்படும் பித்தளை, தாமிர பாத்திரங்கள், ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.

    தூய்மைப்பணி முடிந்ததும் நாம கொம்பு, ஸ்ரீ சூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை இலை, பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிக்கட்டை மற்றும் பிற நறுமணப் பொருட்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

    இந்தப் பணி முடிந்ததும் மூலவர் மீது போர்த்தப்பட்ட தூய வஸ்திரம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள், நைவேத்தியம் செய்யப்பட்டது.

    இதையடுத்து 12 மணி அளவில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சுமார் 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    • 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
    • 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் பலத்த பாதுகாப்புப் போடப்படுவதுடன், எந்தச் சூழலையும் எதிர் கொள்ள தயாராக இருப்பதாக, போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி பேசினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் திருப்பதியில் உள்ள போலீஸ் விருந்தினர் மாளிகையில் நடந்தது.

    கூட்டத்தில் திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி பங்கேற்று பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. கருடசேவையின்போது நான்கு மாடவீதிகளில் சாமி வாகனத்தை நிறுத்துவதற்கு ஏற்ற இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அங்கு மின் விளக்கு வசதியோடு கூடிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.

    திருட்டுச் சம்பவங்களை தடுக்கும் வகையில் திருடர்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவர்கள் திருமலைக்கு வந்தால், அவர்களை பற்றிய அனைத்துத் தகவல்களும், புகைப்படங்களும் தெரியும்படி ஏற்பாடு செய்யப்பட உள்ளது. பிரம்மோற்சவத்தை சிறப்பாக நடத்த காவல்துறை அதிகாரிகள், மற்ற துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும்.

    கொரோனா தொற்று பரவலால் கடந்த 2 ஆண்டுகளாகக் கோவில் உள்ளேயே பிரம்மோற்சவ விழா நடந்தது. ஆனால், இந்த ஆண்டு கோவிலின் நான்கு மாடவீதிகளில் வாகனச் சேவை நடக்கிறது. அதில், நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து பங்கேற்க வாய்ப்புள்ளது.

    குறிப்பாக கருடசேவை, தேரோட்டம், சக்கர ஸ்நானம் போன்ற நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அன்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள். கேலரிகளுக்கு உள்ளே வரும் பக்தர்கள், கேலரிகளில் இருந்து வெளியே செல்லும் பக்தர்களுக்கு பாதை வசதி ஏற்பாடு செய்யப்படும்.

    திருமலையில் தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, குற்றச் செயல்களை தடுக்க ஏற்பாடு செய்யப்படும். இரவில் வெளிச்சம் தரும் வகையில் மின்விளக்குகள் பொருத்தப்பட உள்ளன.

    பிரம்மோற்சவத்தின்போது திருப்பதி மாவட்டத்துக்கு வரும் வாகனங்களை சோதனையிட நுழைவு வாயில்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கவும், பிரச்சினைக்குரிய பகுதிகளை கண்டறிந்து, தேவைப்பட்டால் எந்தச் சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கும் வகையிலும் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ரேணிகுண்டா விமான நிலையம், திருப்பதி ரெயில் நிலையம் முதல் திருமலை வரை முக்கிய சாலைகளில் வி.ஐ.பி.களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்படும்.

    கருடசேவை மற்றும் பிற முக்கிய நாட்களில் திருமலையில் மோட்டார் வாகனங்களை நிறுத்துவதில் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க, போலீசார் முன்கூட்டியே திட்டமிட்டு மோட்டார் வாகனங்கள் நிறுத்தும் இடங்களை கண்டறிந்து, அந்தப் பகுதிகளுக்கு வாகனங்களை திருப்பி அனுப்பி, திருமலையில் வாகன நெரிசலை குறைப்பார்கள்.

    பிரம்மோற்சவத்தையொட்டி பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க முதல்-மந்திரி ஜெகன்மோகன்ரெட்டி 27-ந்தேதி திருமலைக்கு வருகிறார். அன்றைய தினம் அனைத்து முக்கிய சாலைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், என முதல்-மந்திரி கேட்டுக் கொண்டுள்ளார்.

    எனவே ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலை வரை மலைப்பாதை மற்றும் முக்கிய சாலைகளில் தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளப்படும்.

    திருட்டுச் சம்பவங்களை தடுக்க தேவையான இடங்களில் எச்சரிக்கை பலகைகளை வைத்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். திருமலை, திருப்பதியில் வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டும் பலகைகள் வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் இ.சுப்ரஜா, விமலகுமாரி, குலசேகர், முனிராமையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது.
    • இலவச தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    புரட்டாசி மாதத்தில் ஒரு தடவையாவது ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என பக்தர்கள் எண்ணுகின்றனர்.

    இதனால் நடைபாதையாகவும், வாகனங்கள் மூலமாகவும் திருப்பதிக்கு ஏராளமானபக்தர்கள் வந்துள்ளனர். திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. இதனால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    வைகுந்தம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி 3 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

    இலவச தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    நேற்று தரிசனத்திற்கு வந்த பக்தர்களே இன்னும்கோவில் வளாகத்திற்குள் செல்ல முடியவில்லை அந்த அளவிற்கு கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    தொடர்ந்து அதிகஅளவிலான பக்தர்கள் வந்துகொண்டே உள்ளனர். பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்கவும் அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யவும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் விரைவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 88,924 பேர் தரிசனம் செய்தனர். 34,282 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.72 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவம் நடக்கிறது.
    • காலை 8 மணியிலிருந்து இரவு 11.30 மணி வரை அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 2 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடக்க உள்ளது.

    அதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் பல்வேறு துறைகள் சார்பாக பக்தர்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ள சேவைகள் குறித்து தெரிவித்து வருகிறது. அதன்படி திருமலை-திருப்பதி தேவஸ்தான அன்னதானத்திட்டம் சார்பாக மேற்கொள்ளப்படுகிற சேவைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பசி தெரியாமல் இருக்க, அன்னதானத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தாலும் அவர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் அன்னதானம் வழங்கி வருகிறது.

    திருமலையில் ஏழுமலையானுக்கு கைங்கர்யம் செய்து வந்த தரிகொண்டா வெங்கமாம்பா 17-ம் நூற்றாண்டில் பக்தர்களுக்கு அன்னதானத்தை வழங்கினார். திருமலையில் முதல் முதலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய பெருமை தரிகொண்டா வெங்கமாம்பாவையே சாரும்.

    திருமலையில் அன்னதான வினியோகத்தின் முன்னோடியான தரிகொண்டா வெங்கமாம்பா பெயரில் புதிதாக அன்னப்பிரசாத பவன கட்டிடத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் புதிதாக கட்டி திறந்து வைத்தது. அங்கு நவீன வசதிகளுடன் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பக்தர்கள் அமர்ந்து உணவு சாப்பிடும் வகையில் 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி அப்போதைய குடியரசு தலைவராக இருந்த பிரதீபா பட்டீல் திறந்து வைத்தார்.

    திருமலையில் அன்னதானம் தயாரிப்பதற்காக தினமும் சுமார் 10 முதல் 12 டன் அரிசி மற்றும் 7 முதல் 8 டன் காய்கறிகள் பயன்படுத்தப்படுகின்றன. அன்னதானத்திட்ட அறக்கட்டளைக்கு ரூ.1,502 கோடி காணிக்கை பக்தர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

    தற்போது திருமலையில் சாதாரண நாட்களில் 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வார இறுதி நாட்கள் மற்றும் விழா நாட்களில் அன்னதானம் சாப்பிடும் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டும்.

    வருகிற வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்கும் அனைத்துப் பக்தர்களுக்கும் 9 நாட்களுக்கு தினமும் காலை 8 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரையிலும், கருடசேவை அன்று நள்ளிரவு 1 மணி வரையிலும் ருசியான, தரமான வகையில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவஸ்தான அன்னதானத்திட்டம் ஒரு அட்சய பாத்திரமாக விளங்குகிறது.

    மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 26-ந்தேதி இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அங்குரார்ப்பணம் நடக்கிறது.
    • 27-ந்தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட அழைப்பிதழ் வெளியிடும் நிகழ்ச்சி திருப்பதியில் உள்ள சுவேத பவனில் நடந்தது.

    நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று நிகழ்ச்சி நிரல் அச்சிடப்பட்ட அழைப்பிதழை வெளியிட்டார். அழைப்பிதழில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:-

    வருகிற 20-ந்தேதி காலை 6 மணியில் இருந்து பகல் 11 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் ஆலய சுத்தி நடக்கிறது. 26-ந்தேதி இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அங்குரார்ப்பணம் நடக்கிறது. 27-ந்தேதி மாலை 5.45 மணியில் இருந்து மாலை 6.15 மணி வரை மீன லக்னத்தில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது.

    அதில் முக்கிய நிகழ்ச்சியாக அக்டோபர் மாதம் 1-ந்தேதி கருட வாகன வீதிஉலா, 2-ந்தேதி தங்கத்தேரோட்டம், 4-ந்தேதி தேர் திருவிழா, 5-ந்தேதி சக்கர ஸ்நானம் நடக்கிறது.

    இதர வாகன சேவைகள்

    முதல் நாளான வருகிற (செப்டம்பர்) 27-ந்தேதி மாலை 5.45 மணியில் இருந்து மாலை 6.15 மணி வரை கொடியேற்றம், இரவு 9 மணியில் இருந்து இரவு 11 மணி வரை பெரிய சேஷ வாகன வீதி உலா, 28-ந்தேதி காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா, மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஹம்ச வாகன வீதிஉலா.

    29-ந்தேதி காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை சிம்ம வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை முத்துப் பந்தல் வாகன வீதிஉலா, 30-ந்தேதி காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடக்கிறது.

    கருட சேவை

    அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகனத்தில் வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து கருட வாகன வீதிஉலா, 2-ந்தேதி காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை ஹனுமந்த வாகன வீதிஉலா, மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை தங்கத் தேரோட்டம், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கஜ வாகன வீதிஉலா.

    3-ந்தேதி காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை சந்திர பிரபை வாகன வீதிஉலா, 4-ந்தேதி காலை 7 மணியளவில் தேர் திருவிழா, இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை குதிரை வாகன வீதிஉலா, 5-ந்தேதி காலை 6 மணியில் இருந்து காலை 9 மணி வரை சக்கர ஸ்நானம், இரவு 9 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கொடியிறக்கம் நடக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் இணை அதிகாரிகள் வீரபிரம்மன், சதாபார்கவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • 27-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
    • ஆண்டுக்கு 4 முறை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, அக்டோபர் 5-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்வம் நிறைவு பெறுகிறது.

    இதனையொட்டி கோவிலை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் 20-ந்தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

    இதனால் அன்றைய தினம் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதால் 19-ம்தேதி எந்தவித முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களும் பெறுவதில்லை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    ஆண்டுக்கு 4 முறை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம்.

    உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய செவ்வாய்கிழமையன்று கோவில் சுத்தம் செய்யப்படுகிறது.

    அவ்வாறு 20-ந்தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவிலில் சுத்தம் செய்து மூலிகை கலவை கோவில் சுவர்களில் தெளிக்கப்படும்.

    இதனால் அன்று 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டு காலை 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அன்றைய தினம் அஷ்ட தல பாதமாராதனை சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • 27-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கிறது.
    • இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா மிகப் பிரமாண்டமாக நடத்தப்படும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதை முன்னிட்டு திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நேற்று காலை கோவிலின் நான்கு மாடவீதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற 27-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஏற்பாடு செய்யப்படும் கேலரிகளில் பக்தர்கள் உள்ளே செல்லும் பாதைகள், வெளியேறும் பாதைகள் அமைக்கப்படும். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா மிகப் பிரமாண்டமாக நடத்தப்படும்.

    அக்டோபர் மாதம் 1-ந்தேதி நடக்கும் கருட சேவை மற்றும் அனைத்து வகையான வாகனச் சேவைகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலால் கோவில் உள்ளேயே பிரம்மோற்சவ விழாவை தனிமையில் நடத்தினோம்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவ விழாவையொட்டி நான்கு மாடவீதிகளில் வாகனச் சேவை நடக்கிறது. வாகனச் சேவையை காண வரும் பக்தர்களுக்கு விரிவான ஏற்பாடுகளை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பிரம்மோற்சவ விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை, மாவட்ட கலெக்டர், போலீசார், பொறியியல் துறை அதிகாரிகளுடன் இணைந்து நான்கு மாட வீதிகள் மற்றும் கேலரிகளில் ஏற்கனவே இரண்டு முறை ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இந்த ஆண்டு பக்தர்கள் அதிகளவில் திருமலைக்கு வர வாய்ப்புள்ளதால் அதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    ×