search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94493"

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.
    • இதில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது.

    இதற்கிடையே, நடப்பு ஆண்டிற்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    இந்தக் கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    • பிரதிநிதிகள் சபையில் முன்னாள் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி 211 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையை நெருங்கியது.
    • நெவாடாவில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றதால் சென்ட் சபையை கைப்பற்றியது.

    அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை, செனட் சபைகளுக்கு கடந்த 8ம் தேதி தேர்தல் நடந்தது. பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களும், செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.

    தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி இடையே கடும் போட்டி நிலவியது. பிரதிநிதிகள் சபையில் முன்னாள் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி 211 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையை நெருங்கியது. ஜனநாயக கட்சி 204 இடங்களை பெற்றது.

    சென்ட் சபையை அதிபர் ஜோபைடனின் ஜனநாயக கட்சி கைப்பற்றியது. அக்கட்சி 50 இடங்களை பெற்றுள்ளது. குடியரசு கட்சி வசம் 48 இடங்கள் உள்ளன. இரு கட்சிகள் இடையே கடும் இழுபறி நிலவிய நிலையில் நெவாடாவில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றதால் சென்ட் சபையை கைப்பற்றியது.

    • ராகுல் காந்தி பாரத் ஜோடோ நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
    • இதனால் அவர் கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட உள்ளது.

    இதற்கிடையே, நடப்பு ஆண்டிற்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி டிசம்பர் 7-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல் காந்தி பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், பாரத் ஜோடோ நடைபயணம் மேற்கொண்டுள்ளதால் ராகுல் காந்தி பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவித்துள்ளார்.

    • பாராளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    • குஜராத், இமாச்சல பிரதேச தேர்தலால் டிசம்பரில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

    பாராளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் புதிய கட்டடத்தில் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகின.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என கூறப்படுகிறது.

    அதன்படி நடப்பு ஆண்டிற்கான குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் 7-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய பாராளுமன்றத்திற்கான கட்டட பணிகள் இன்னும் நிறைவடையாததால், இந்த ஆண்டும் வழக்கம் போல் பாரம்பரிய பாராளுமன்ற கட்டிடத்திலேயே குளிர்கால கூட்டத்  தொடர் நடைபெறும் என தெரிகிறது.

    • சட்டத்திருத்த வரைவு மசோதா இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு நாட்கள் விவாதம் நடந்தது.
    • 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 179 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    இலங்கையில் கோத்தபய ராஜபக்சே அதிபராக இருந்தபோது, பாராளுமன்றத்தைவிட அதிபருக்கு அதிக அதிகாரங்களை வழங்க வகை செய்யும் 20-ஏ சட்ட திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

    அந்நாட்டு பொருளாதார நெருக்கடி காரணமாக கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகினார்.

    அதன்பின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அதிபருக்கான அதிகாரங்களை குறைத்து பாராளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்க அரசியல் சாசனத்தில் 21ஏ சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி 21-ஏ என்ற பெயரிலான அரசியல் சாசன 22-வது திருத்த வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து கடந்த ஆகஸ்டு மாதம் அரசிதழில் வெளியிடப்பட்டது.

    இந்த சட்டத்திருத்த வரைவு மசோதா இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு நாட்கள் விவாதம் நடந்தது.

    இந்த மசோதா மீது நேற்று வாக்கெடுப்பு நடந்தது. 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் 179 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    இதையடுத்து அந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இதன் மூலம் இலங்கை அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    • கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் இந்த எம்.பி.க்கள் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இந்திய உணவுக் கழக அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    11 எம்.பி.க்கள் கொண்ட பாராளுமன்ற குழு இன்று மாலை கார் மூலம் கன்னியாகுமரி வருகிறது.

    இந்த குழுவில் இந்திய உணவுக் கழக அதிகாரிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகளும் வருகிறார்கள். கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் இந்த எம்.பி.க்கள் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் இந்த எம்.பி.க்கள் குழுவினர் கன்னியாகுமரியில் உள்ள ரெயில் நிலையத்துக்கு செல்கிறார்கள். அங்கு நடைபெற்று வரும் ரெயில் நிலைய விரிவாக்க பணிகளை எம்.பி.க்கள் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள். அதன் பிறகு கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இந்திய உணவுக் கழக அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்கள். இரவு கன்னியாகுமரியில் இந்த குழுவினர் தங்குகிறார்கள்.

    நாளை (ஞாயிற்றுக் கிழமை) எம்.பி.க்கள் குழுவினர் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தனி படகில் சென்று பார்வை யிடுகிறார்கள்.

    அதன் பிறகு இந்த எம்.பி.க்கள் குழுவினர் கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்கள்.

    • மொத்தம் 2,50,319 பெண் தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளது.
    • இத்திட்டத்திற்கான கால அளவு 31.03.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான இணை மந்திரி பானு பிரதாப் சிங் வர்மா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தெரிவித்துள்ளதாவது:

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மூலதனத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, தற்சார்பு இந்தியா திட்டத்தின்கீழ், அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது.

    இவற்றுள், அவசரக் கடன் உதவித் திட்டத்தின்கீழ், ரூ.5 லட்சம் கோடி, சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்காக ஒதுக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான கால அளவு 31.03.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தெருவோர வியாபாரிகளுக்கான நிதியுதவித் திட்டம், இலவசக் கடன் உதவியை எளிதாக்குகிறது.

    கடன் உத்தரவாத திட்டம், கடன் வழங்கும் முறையை எளிதாக்குதல், எளிதாக்கவும், பிணையத்தொகை மற்றும் இடைத்தரகர் உள்ளிட்ட பிரச்சினைகளின்றி அதிகபட்சமாக ரூ.200 லட்சம் வழங்கப்படுகிறது.

    03.08.2022 அன்றைய நிலவரப்படி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் இணையப்பக்கத்தில், மகளிரால் பதிவு செய்யப்பட்ட 17,96,408 தொழில் நிறுவனங்கள் உள்ளன.

    2008-09-ம் ஆண்டில், பிரதமரின் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, 02.08.2022 வரை, மொத்தம் 2, 50, 319 பெண் தொழில் முனைவோர்களுக்கு உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன.

    2000-ம் ஆண்டில், குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, 30.06.2022 அன்றைய நிலவரப்படி, மொத்தம் 11,92,689 மகளிருக்கு கடன் உத்தரவாதத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இதுவரை 9.94 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

    பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை இணை மந்திரி பிரஹலாத் சிங் பட்டேல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:

    2024-ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து ஊரகப்பகுதி வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக ஜல்ஜீவன் இயக்கத்தை மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டம் அறிவிக்கப்பட்ட போது 3.23 கோடி வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு இருந்தது.

    கடந்த 36 மாதங்களில் மேலும் 6.70 கோடி ஊரகப்பகுதி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் 19.11 கோடி ஊரகப்பகுதி வீடுகள் உள்ள நிலையில், அதில் 9.94 கோடி (51.99%) வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கியது.
    • இந்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரின் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத் தொடரில் அக்னிபாத், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின. கடும் அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. வரும் 12-ம் தேதி வரை நடைபெறவிருந்த நிலையில் முன்னதாகவே நிறைவடைந்துள்ளது.

    இதையடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    • நாட்டின் ஜனநாயகம் மூச்சு திணறுகிறது
    • ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான மோதலால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் விலைவாசி உயர்வு-வேலையில்லா திண்டாட்டத்துக்கு எதிரான காங்கிரஸ் போராட்டம், கட்சி தலைவர்கள் மீதான அமலாக்கத்துறை விசாரணை, பாராளுமன்றம் முடக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் ஜனநாயக நிறுவனங்கள் அடக்கப்பட்டு இருக்கின்றன அல்லது ஏமாற்றப்பட்டு உள்ளன அல்லது கைப்பற்றப்பட்டுள்ளன. ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களுக்கும் இதுதான் நிலைமை.

    நாட்டின் ஜனநாயகம் மூச்சு திணறுகிறது. இதைத்தான் ராகுல் காந்தியும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.

    பாராளுமன்றம் நடந்து கொண்டிருக்கும்போது மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதில் இருந்து அவரை பாதுகாக்க அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தவறிவிட்டார்.

    ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான மோதலால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் குறிப்பிடத்தக்க அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை. அந்த வகையில் பாராளுமன்றம் செயலிழந்து விட்டது என்ற முடிவுக்கு வருத்தத்துடன் வந்திருக்கிறேன்.

    இதற்கு ஒரே காரணம் பேச்சுவார்த்தை, விவாதம் மற்றும் ஆலோசனையில் ஆளுங்கட்சியினருக்கு ஆர்வம் இல்லை.

    விலைவாசி உயர்வு குறித்து முதல்நாளே விவாதம் நடத்த அரசு ஒப்புக்கொண்டிருந்தால், ஒரே நாளில் விவாதம் முடிந்திருக்கும். மாறாக 2 வாரங்களை வீணடித்தோம்.

    விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஆகியவைதான் எங்கள் கவலை. இவை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்படுத்தியுள்ளன. விலைவாசியை குறைக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் எடுத்து வரும் நடவடிக்கைகளை எடுத்துரைக்க நிதி மந்திரி கடமைப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் செய்யவில்லை.

    பணவீக்கம் அதிகரிப்பு பிரச்சினையில் அதிக தனிநபர் வருமானமும், சேமிப்பும் கொண்ட அமெரிக்காவுடன், குறைந்த தனிநபர் வருமானமும், சேமிப்பும் கொண்ட இந்தியாவை நிதி மந்திரி ஒப்பிடுவது கேவலமானது.

    இவ்வாறு ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

    ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட தினத்தில் (ஆகஸ்டு 5) விலைவாசி உயர்வு தொடர்பாக காங்கிரஸ் போராட்டம் நடத்தியிருப்பதாக உள்துறை மந்திரி அமித்ஷா கூறியிருக்கும் குற்றச்சாட்டை ப.சிதம்பரம் நிராகரித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'துணை ஜனாதிபதி தேர்தலுக்காக அனைத்து எம்.பி.க்களும் டெல்லியில் இருக்கும் நாள் பார்த்து அந்த போராட்டம் திட்டமிடப்பட்டது. மேலும், ஆகஸ்டு 5-ந் தேதி தான் ஜம்மு காஷ்மீர் சட்ட விரோதமாக துண்டாடப்பட்டது. ஒரு தீவிரமான பிரச்சினையை விவாதிக்கும்போது இவற்றை விட்டுவிடுவோம்' என்று தெரிவித்தார்.

    • நேஷனல் ஹெரால்டு வழக்கில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
    • குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதில் இருந்து உறுப்பினர்கள் விலக்கு பெற முடியாது.

    புதுடெல்லி :

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

    இதை மாநிலங்களவையில் எழுப்பிய அவர், பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது சம்மன் அனுப்புவது அழகா? என கேள்வி எழுப்பினார். அத்துடன் இந்த பிரச்சினையில் எதிர்க்கட்சிகளும் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டன.

    இந்த விவகாரத்தில் மாநிலங்களவையில் அவைத்தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு நேற்று விளக்கம் ஒன்றை வெளியிட்டார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகளில் இருந்து விலக்கு இருப்பதாக உறுப்பினர்களிடையே ஒரு தவறான கருத்து இருக்கிறது. அதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    அதாவது பாராளுமன்ற தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, ஒரு குற்ற வழக்கில் கைதாவதில் இருந்து ஒரு எம்.பி.க்கு எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை.

    அந்தவகையில் பாராளுமன்ற தொடரின்போதும் குற்ற வழக்குகளில் எம்.பி.க்களை விசாரணை அமைப்புகளால் கைது செய்யவோ, தடுப்புக்காவலில் வைக்கவோ முடியும்.

    மேலும் குற்ற வழக்கின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதில் இருந்தும் உறுப்பினர்களுக்கு விலக்களித்து சிறப்புரிமை அளிக்கப்படவில்லை. பாராளுமன்ற அலுவல்களை காரணம் காட்டி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதில் இருந்து உறுப்பினர்கள் விலக்கு பெற முடியாது.

    அதேநேரம் பாராளுமன்றம் நடந்து கொண்டிருக்கும்போது சிவில் வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து எம்.பி.க்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

    • கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பாராளுமன்றத்தில் உறுப்பினர் கேள்வி.
    • மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட தகவலை கூறி மத்திய மந்திரி விளக்கம்.

    கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பள்ளிகளில் படித்து வந்த மாணவ, மாணவிகள் இடையிலேயே கல்வியை கைவிடும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்று பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி ஸ்மிருதி இரானி அளித்த எழுத்துப் பூர்வ பதிலில், நாடு முழுவதும் ஆரம்ப பள்ளி, இடைநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்பட அனைத்து கல்வி நிலைகளிலும் பள்ளி மாணவர்கள் இடையிலேயே கல்வியை கைவிடும் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    அனைத்து கல்வி நிலையிலும் பள்ளி இடை நிற்றல் விகிதம் குறைந்து வருவதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் வழங்கி உள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×