search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94519"

    பாராளுமன்ற தேர்தலில் மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு பாலகிருஷ்ணரெட்டிக்கு எதிரான மனுவை சென்னை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்துள்ளது. #Balakrishnareddy #chennaihighcourt #parliamentelection
    சென்னை:

    ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் புகழேந்தி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதால், அவர் தன்னுடைய எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை இழந்தார்.

    அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த ஓசூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணரெட்டி, மனைவியை அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக்கினார்.

    தற்போது சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணரெட்டி, மனைவிக்காக தேர்தல் பிரசாரம் செய்கிறார். குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. ஆனால், அவர் மனைவிக்காக பிரசாரம் செய்கிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.



    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரின் வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர், இந்த வழக்கை விசாரித்தனர்.

    இதற்கிடையே, நீதிமன்ற தண்டனையால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பாலகிருஷ்ணா ரெட்டி பரப்புரை மேற்கொள்ளக் கூடாது என அ.ம.மு.க.வின் புகழேந்தி தொடர்ந்த வழக்கில்  சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.

    அதில், ஒசூர் வேட்பாளர் ஜோதிக்கு ஆதரவாக பாலகிருஷ்ணா ரெட்டி பிரசாரம் செய்ய தடையில்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் நடத்தை விதிகள் படி எந்தத் தடையும் இல்லை என உத்தரவிட்டது. இதையடுத்து, புகழேந்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. #Balakrishnareddy #chennaihighcourt #parliamentelection
    தி.மு.க.வினர் பொய்யான அறிக்கையை வெளியிட்டு மக்களை குழப்புவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். #LoksabhaElections2019 #ADMK #Edappadipalaniswami
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாமக்கல் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து இன்று பிரசாரம் செய்தார்.

    2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அம்மா இன்றைக்கு கொடுத்த அத்தனை வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டப்படி அம்மா இருசக்கர வாகனம் உழைக்கும் மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    அம்மா இருசக்கர வாகனத்திற்கு ரூ.25 ஆயிரம் கொடுத்து திட்டத்தை தொடங்கி நடைமுறைப்படுத்தி இருக்கிறோம். 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் பயன் அடைகிறார்கள். அதுபோல் தாலிக்கு தங்கம் 1 பவுன், திருமண உதவி தொகை ரூ.50 ஆயிரம் கொடுத்து வருகிறோம். எதை எல்லாம் அம்மா சொன்னார்களோ, அதை எல்லாம் நாங்கள் கொடுத்து வருகிறோம்.

    ஆனால், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள். ஏழை விவசாயிக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்னார்கள். இந்த நாமக்கல் மாவட்டத்தில் எத்தனை பேருக்கு 2 ஏக்கர் நிலம் கொடுத்து இருக்கிறார்கள்?. நிலத்தை அவர்கள் பிடுங்காமல் இருந்தால் மிச்சம்.

    தி.மு.க.வினர் பொய்யான அறிக்கையை வெளியிட்டு மக்களை குழப்பி இன்றைக்கு சூழ்ச்சி முறையிலே வாக்குகளை பெறுவதற்காக முயற்சி செய்து வருகிறார்கள்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொடுக்கின்ற வாக்குறுதி தான் நிறைவேற்றப்படும். எங்களை பொறுத்தவரைக்கும் நாங்கள் வெளியிடுகிற தேர்தல் அறிக்கை உண்மையான அறிக்கை.

    நம்முடைய பகுதி வறட்சியான பகுதி. குடிமராமத்து திட்டத்தின் வாயிலாக ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு, ஆழப்படுத்தப்படுகின்றன. இந்த வண்டல் மண் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைகிறது. பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் குளங்களில், ஏரிகளில் பாதுகாக்கப்படுகிறது.

    அதைப்போல ஓடையின் குறுக்கே, நதியின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு, நிலத்தடி நீர் உயர்ந்து தேவைக்கு ஏற்ப விவசாயிகளுக்கு கிடைக்கின்றது. இதற்கு ரூ.1000 கோடி ஒதுக்கி இருக்கின்றோம். இவையெல்லாம் விவசாயிகளுக்கு நாங்கள் செய்துள்ள நன்மைகள்.

    மத்தியில் 15 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள் தி.மு.கவினர். அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் தான் பதவியில் இருந்தார்கள். அவர்கள் தமிழகத்திற்கு கொடுத்த பயன் ஒன்றுமே கிடையாது. குடும்பம் நலன் பெற்றது. ஆகவே தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் குடும்பம் தான் வளரும். நலன் பெறும்.

    ஏற்கனவே 15 ஆண்டுகாலம் ஆட்சி, அதிகாரத்தில் இருந்து, நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாதது தி.மு.க., மீண்டும் இவர்கள் வந்து என்ன செய்ய போகிறார்கள். கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தாத கட்சி தான் தி.மு.க.

    ஆனால், அ.தி.மு.க. அப்படி இல்லை. காவிரி நதி நீர் பிரச்சனை குறித்து ஒட்டு மொத்த விவசாயிகளின் குரலை நம்முடைய எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் ஒலிக்க செய்தார்கள். இதனால் பாராளுமன்ற அவையே ஒத்திவைக்கப்பட்டது.

    தி.மு.க. ஒரு நாளாவது காவிரி நதி நீர் பிரச்சனைக்காக குரல் கொடுத்தார்களா?.

    இன்றைக்கு 20 மாவட்ட மக்களுடைய குடிநீர் ஆதாரம் காவிரி நதி நீரை நம்பி தான் இருக்கின்றது. இந்த நீருக்காக என்ன குரல் கொடுத்தார்கள்?.



    தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது 2007-ல் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்தது. இதை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என எல்லா கட்சியும் சொன்னது. இதை நடைமுறைபடுத்தவில்லை.

    மத்திய அரசிதழில் வெளியிடாத காரணத்தினால் 10 ஆண்டுகாலம் நமக்கு கிடைக்கின்ற நீர் கிடைக்காமல் போனது. விவசாயிகள் பல அல்லல்களுக்கு உள்ளானோம். குடிநீருக்கு கூட காவிரி ஆற்றில் தண்ணீர் கிடையாது. இந்த அவல நிலைக்கு காரணம் தி.மு.க. செய்த மாபெரும் துரோகம்.

    காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட செய்தது அம்மாவுடைய அரசு.

    விவசாயிக்கு நீர் வேண்டும். குடிப்பதற்கு தண்ணீர் முக்கியம். இவை இரண்டும் என்னுடைய முதல் திட்டம். ஆகவே இந்த தேர்தல் மூலமாக கோதாவரி- காவிரி நதி நீரை இணைத்தே தீருவோம். இந்த திட்டத்தை நிறைவேற்றுகிற போது, நம்முடைய பகுதி செழிப்படையும். இங்கு இருக்கின்ற குளங்கள், ஏரிகளுக்கு நீரேற்று மூலமாக நீர் கொண்டு வந்து நிரப்பப்படும். இதனால் குடிநீர் தேவை முதல் விவசாயத்திற்கு தேவையான நீர் வரை கிடைக்கும்.

    இந்த திட்டத்தை தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. ஆகவே மக்கள் சிந்திக்க வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தால், நாடு செழிக்கும். யார் ஆட்சிக்கு வந்தால் நாடு பாதுகாப்பாக இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். வாக்களிப்பீர் இரட்டை இலை சின்னத்திற்கு.

    ரூ.55½ கோடி மதிப்பீட்டில் நாமக்கல் மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் ஆரம்பித்து இன்றைக்கு முடியும் தருவாயில் உள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் எல்லாம் சீரமைப்பதற்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த பணிகள் எல்லாம் விரைவில் தொடங்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

    அதைபோல் ராசிபுரம் பகுதி வறட்சியான பகுதியாக இருக்கின்றது. பருவமழைக்காலங்களில் சரியாக மழை பெய்யவில்லை என்றால், குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் போய் விடுகிறது.

    ஆகவே ராசிபுரம் பகுதியில் இருக்கின்ற மக்களுக்கு நிலையான குடிநீர் வசதி செய்து கொடுப்பதற்காக அம்மாவுடைய அரசு தனி கூட்டு குடிநீர் திட்டம் இந்த ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் வகுத்து இருக்கின்றோம். ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தங்கு தடையின்றி பாதுகாக்கப்பட்ட காவிரி நீர் கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக அரசு வழங்கும். 1200 பயனாளிகளுக்கு ரூ. 15 கோடியில் வீடு கட்டும் திட்டம் நிறைவேற்றப்படும். ராசிபுரத்தில் புறவழிச்சாலை முதல் கட்ட பணி முடிவடைந்து விட்டது. 2-ம் கட்டபணி நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    ராசிபுரத்தை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் நின்றவாறு பிரசாரம் செய்தார். #LoksabhaElections2019 #ADMK #Edappadipalaniswami
    பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு அ.தி.மு.க. நாளேடான நமது அம்மா வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டு உள்ளது. #LoksabhaElections2019 #ADMK #Rajinikanth #NamathuAmma
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பாரதிய ஜனதா வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து வெளியிட்டு இருந்தார்.

    இதையடுத்து அ.தி.மு.க. நாளேடான நமது அம்மா ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டு உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நதிநீர் இணைப்பு திட்டங்களை வரவேற்று இருக்கிறார் ரஜினிகாந்த்.

    இதன் மூலம் தனது ஆதரவு பா.ஜனதா - அ.தி.மு.க. கூட்டணிக்கே என்பதை ரஜினிகாந்தின் குரல் உறுதி செய்திருக்கிறது.

    125 வருட காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டதும், முல்லைப் பெரியாறு உரிமையில் முதல்கட்ட வெற்றியை ஈட்டியதும், அரை நூற்றாண்டு கனவான அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்றிட ஆணையிட்டதும், தி.மு.க. விரயமாக்கிய பழைய வீராணம் திட்டத்தை புதிய வீராணம் திட்டமாக்கி தலைநகர் சென்னையில் தாகம் தீர்த்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான்.

    இதற்கு மேலும் ஊக்கம் அளிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் தேசிய நதிகளை இணைப்பதற்கும், குறிப்பாக கோதாவரி ஆற்றின் உபரி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் விதமாக கோதாவரி-கிருஷ்ணா, காவிரி இணைப்புத் திட்டத்தை ரூ.60 ஆயிரம் கோடியில் நிறைவேற்ற முன் வந்திருப்பதோடு, நீர் மேலாண்மை திட்டங்களுக்கு வெகுவான முன்னுரிமையை பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

    இதனையெல்லாம் கருத்தில் கொண்டே பாய்ந்தோடும் நதியின் நீரை பாரத தேசம் எங்கும் இணைக்கும் திட்டங்களால் பசுமை கொஞ்சும் பிரதேசமாக இந்நாட்டை உருவாக்க வேண்டும் என்கிற உள்ளார்ந்த விருப்பத்தை கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை ஆதரிக்கிறார்.


    இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணிக்கு தனது நல் ஆதரவை சூசகமாக தெரிவித்திருக்கிறார்.

    ஏற்கனவே ‘காலா’ ஆதரவு கழகத்துக்கே என நமது அம்மா நாளிதழ் வெளியிட்ட செய்தி இப்போது ஊர்ஜிதமாகி இருக்கிறது. ரஜினிகாந்தை வாழ்த்துவோம். வரவேற்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LoksabhaElections2019 #ADMK #Rajinikanth #NamathuAmma
    பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். #LoksabhaElections2019 #PMModi
    மதுரை:

    நாட்டின் 17-வது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடக்கிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 18-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    பிரதமர் நரேந்திரமோடி கேரளா, தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் பிரசாரம் மேற்கொள்கிறார். நாளை கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு விமானம் மூலம் வரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இரவு பிரசாரத்தை முடித்து விட்டு சிறப்பு விமானத்தில் மதுரை வரும் பிரதமர் மோடி பசுமலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். மறுநாள் (13-ந்தேதி) காலை 11 மணிக்கு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார். அங்கு தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்பட 5 தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் ஆண்டிப்பட்டியில் இருந்து ஹெலிகாப்டரில் ராமநாதபுரத்திற்கு மோடி செல்கிறார். அங்கு அம்மா பூங்கா அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இங்கு ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் இடைத்தேர்தல் நடக்கும் பரமக்குடி தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    பிரதமர் கலந்து கொள்ளும் ஆண்டிப்பட்டி, ராமநாதபுரம் பொதுக்கூட்டத்தையொட்டி அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கூட்டத்திற்காக பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.


    இந்த கூட்டங்களில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜனதா, த.மா.கா. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாதுகாப்பு கருதி பிரதமரின் பிரசார நேரம் மாற்றப்படலாம் என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பிரசாரத்திற்காக மதுரை வரும் பிரதமர் மோடி முதன் முறையாக பசுமலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். இதையொட்டி அந்த பகுதி முழுவதுமே மத்திய-மாநில போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்தும் மாற்றப்படுகிறது. #LoksabhaElections2019 #PMModi
    தைப்பொங்கல் பரிசு, தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் என ஏழைகளுக்கு கொடுக்க நினைப்பதை தடுக்கும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் என்று பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். #Edappadipalaniswami #MKStalin
    திருச்சி:

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட முசிறியில் இன்று காலை அ.தி.மு.க. வேட்பாளர் சிவபதியை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    நடைபெற இருப்பது பாராளுமன்ற தேர்தல். இந்த தேர்தலில் மத்தியில் நல்ல ஆட்சி, திறமையான பிரதமர் நாட்டை ஆள வேண்டும். நாடு நலம்பெற நாட்டின் பாதுகாப்பு முக்கியம். நாட்டின் பாதுகாப்பு நன்றாக இருந்தால் தான் முசிறியிலும் பாதுகாப்பு இருக்கும். எனவே நம் நாட்டிற்கு தகுதியான, திறமையான பிரதமராக மோடி மீண்டும் வரவேண்டும்.

    நான் மற்றும் நாமெல்லாம் விவசாயிகள். நான் இன்றும் விவசாயம் செய்து வருகிறேன். விவசாயிகளின் கஷ்டம், இன்னல்கள் ஸ்டாலினுக்கு தெரியாது. அவர் விவசாயத்தை பற்றி கேலியும், கிண்டலும் பேசி வருகிறார். கோதாவரி- காவேரி நதி இணைப்பு திட்டம் வரவுள்ளது. பாராளுமன்றத்தில் முதல் குரல் இந்த கோரிக்கை எழப்போகிறது.

    கோதாவரியை தெலுங்கானா வழியாக கொண்டு வந்தால் தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கும். இதற்காக ரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. தேர்தல் அறிக்கையிலும் இதனை குறிப்பிட்டுள்ளனர். எங்கள் ஆட்சியின் முதல் கோரிக்கை தண்ணீருக்காக தான். குடிமராமத்து திட்டத்தில் ஆறு, மழை நீரை தேக்கி வைக்கும் வகையில் ஏரி, குளங்களை தூர்வாரி வருகிறோம். இன்று வரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது.

    இதன் மூலம் ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் தடுக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும். நீர் மேலாண்மை அமைப்பு உருவாக்கப்பட்டு 4 ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்கள் கொண்ட குழு ஆய்வறிக்கையை சமர்பித்து வருகிறது. அதன்படி தடுப்பணைகள் கட்டப்படும். காவிரி ஆற்றில் எத்தனை தடுப்பணை வேண்டுமோ அதை கட்டுவோம். தற்போது 3 தடுப்பணை கட்டப்படுகிறது.

    தி.மு.க. ஆட்சியில் இதே போல் நீர் மேலாண்மைக்கு செய்தார்களா? எந்த திட்டமும் செய்யவில்லை. தமிழகத்தில் எத்தனை தடுப்பணை முடியுமோ அத்தனையும் அம்மாவின் அரசு நிச்சயம் கட்டும். விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிப்பது எங்களின் நோக்கம். வேளாண் பணி சிறக்க வேண்டும். வேளாண் பொருட்கள் காய்கறி, பழங்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும்.

    2 ஆயிரம் கோடியில் சென்னையில் உணவு பூங்கா அமைக்கிறோம். விவசாய பொருட்களுக்கு சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளது. இதில் விவசாயிகள் ஒரு மாதம் வரை பொருட்களை வைத்து, விலையேறும் போது விற்பனை செய்யலாம். 900 ஏக்கரில் கால்நடை பூங்கா அமைக்க உள்ளோம். அதில் கலப்பின, நாட்டு பசு போன்றவை நோய் தடுப்பில் இருந்து பாதுகாக்கப்படும்.

    அதிகம் பால் கொடுக்கும் கறவை மாடுகளை விவசாயிகளுக்கு வழங்குவோம். இந்த உணவு பூங்கா தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரியதாக இருக்கும். இது விவசாயிகளுக்கான அரசு, அவர்களின் தேவையை நிறைவேற்றுவோம்.

    கோதாவரி-காவேரி நதி நீர் இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டதும் மோட்டார் மூலம் ஏரி, குளங்களுக்கு நீர் எடுத்து செல்லப்படும். இதற்காக திட்டங்கள் தயார் நிலையில் உள்ளது. நான் செய்வதை தான் சொல்வேன், ஸ்டாலின் போல சொல்லி விட்டு செல்லமாட்டேன்.



    தை பொங்கல் பரிசு ஆயிரம் கொடுத்தோம். அதை ஸ்டாலின் தடுக்க முயற்சி செய்தார். ஏழைகளுக்கு கொடுப்பதை தடுக்க நினைக்கிறார். அவர் மக்களுக்கு நன்மை அளிக்க கட்சி நடத்தவில்லை.

    தற்போது தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் அறிவித்தேன். அதை ஸ்டாலின் தடை செய்ய முயற்சி செய்தார். ஆனால் நீதிமன்றம் தடை வழங்க மறுத்துள்ளது. வழக்கினையும் தள்ளுபடி செய்தது.

    தேர்தல் முடிந்ததும் இந்த திட்டம் கட்சி பாகுபாடின்றி அனைத்து தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ஸ்டாலின் எங்களை தடுத்து நிறுத்த முடியாது. ஏழைகளுக்கு கொடுப்பதை இந்தியாவிலே தடுக்கும் ஒரே கட்சி தி.மு.க. தான். ஏழைகள் வாழ்வு பெற மத்திய அரசு ஓய்வுதியம் வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கவுள்ளது.

    முசிறி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. நாங்கள் சாதனைகளை கூறியும், செய்யவுள்ளதையும் கூறி ஓட்டு கேட்கிறோம். ஆனால் ஸ்டாலின் ஆளும் கட்சியினரையும், பிரதமரை மற்றும் விமர்சனம் செய்து ஓட்டு கேட்கிறார்.

    தொட்டியம் வட்டத்தில் காட்டு நாயக்க இன மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க அரசு பரிசீலனை செய்யும். சிவபதியின் வெற்றி இந்த மண்ணிற்கான பெருமை. தமிழகம் முழுவதும் 90 சதவிதம் இடத்திற்கு சென்றுள்ளேன். இன்னும் 10 சதவிதம் உள்ளது. அங்கும் சென்று விவசாயிகளை, பொது மக்களை சந்தித்து சாதனைகளை கூறி ஓட்டு கேட்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #Edappadipalaniswami #MKStalin
    பாராளுமன்ற தேர்தலில் மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பாலகிருஷ்ணரெட்டிக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட் இன்று தெரிவித்துள்ளது. #Balakrishnareddy #chennaihighcourt #parliamentelection
    சென்னை:

    ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் புகழேந்தி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதால், அவர் தன்னுடைய எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை இழந்தார்.

    அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த ஓசூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணரெட்டி, மனைவியை அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக்கினார்.

    தற்போது சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணரெட்டி, மனைவிக்காக தேர்தல் பிரசாரம் செய்கிறார். குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. ஆனால், அவர் மனைவிக்காக பிரசாரம் செய்கிறார். இதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரின் வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர், இந்த வழக்கை பிற்பகலில் விசாரிப்பதாக கூறினர்.

    இந்நிலையில், நீதிமன்ற தண்டனையால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பாலகிருஷ்ணா ரெட்டி பரப்புரை மேற்கொள்ளக் கூடாது என அ.ம.மு.க.வின் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு நாளை ஒத்திவைக்கப்படுகிறது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. #Balakrishnareddy #chennaihighcourt #parliamentelection
    அமைச்சர் எம்.சி.சம்பத் தூண்டுதலின் பேரில் என் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது என்று முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் குற்றம் சாட்டியுள்ளார். #ministermcsampath #exmlaayyappan

    கடலூர்:

    கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும் கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அய்யப்பனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

    இந்தநிலையில் முன்னாள் எம்.எல்.ஏ அய்யப்பன் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் சேர உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அய்யப்பன் வீட்டில் வருமான வரி துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனையிட்டனர். மேலும் அவரது ஆதரவாளர் பிரகாஷ் உறவினர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    இதுதொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ அய்யப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமைச்சர் எம்.சி.சம்பத் செயல்பாடு சரியில்லை என்ற காரணத்தினால் நான் அடுத்த கட்ட முடிவுக்கு எனது ஆதரவாளர்களுடன் செல்ல உள்ளேன்.

    இது சம்பந்தமாக எனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வந்தேன். இந்தக் கூட்டத்தை தடுப்பதற்கும், செல்வாக்கை குறைப்பதற்கும் பொய்யான தகவலின்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் எனது வீட்டை சோதனையிட்டனர். அப்போது எனது வீட்டில் ஒன்றும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்து விட்டு சென்றனர்.

    எனது செல்வாக்கை குறைப்பதற்கும் எனது தலைமையில் ஆதரவாளர்களை சேர்ப்பதை தடுப்பதற்கும், அச்சுறுத்தல் ஏற்படுத்துவதற்கும் இந்த சோதனை நடந்திருக்கலாம்.

    அமைச்சர் எம்.சி.சம்பத் அல்லது அவரின் ஆதரவாளர்கள் தூண்டுதல் பேரில் இங்கு சோதனை நடந்து இருக்கும். ஏனென்றால் எனக்கு எங்கும் எதிரிகள் இல்லை. அடுத்த கட்ட முடிவு எடுத்த பிறகு நான் முழு வீச்சில் பிரசாரத்தில் ஈடுபடுவேன். அ.தி.மு.க.வில் இருந்து நான் செல்வதற்கு அமைச்சர் எம்.சி.சம்பத்தின் குடும்ப அரசியல், நிர்வாகிகளை மதிக்கவில்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன.

    மேலும் எங்களது கோரிக்கைகளை தலைமையிடம் தெரிவித்தோம். ஆனால் கடலூர் மாவட்டத்திற்கு வந்திருந்த முதலமைச்சர் மற்றும் துணை முதல்-அமைச்சர் எங்களை அழைத்து பேசவில்லை. மேலும் இதற்கு நடவடிக்கை எடுத்து தீர்வு ஏற்படுத்த வில்லை. இதனால் தான் நாங்கள் அடுத்தகட்ட முடிவுக்குச் செல்ல உள்ளோம். மேலும் எங்களை அழைத்து பேசுவார்கள் என காத்திருந்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    நான் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு எம்.எல்.ஏவாக இருந்தேன். எனக்கு ஏராளமான ஆதரவாளர்கள் மற்றும் மக்கள் இருந்து வருகின்றனர். ஆகையால் என் மீது இனி வருங்காலங்களில் அமைச்சர் எம்.சி.சம்பத் பொய் புகார் அளிப்பார்.

    நான் அ.தி.மு.க.வில் இருந்து விலகிவிட்டேன். ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி விட்டேன்.

    முன்னாள் எம்.எல்.ஏ. துரை அன்பரசன், மாவட்ட மகளிரணி செயலாளர் நாகரத்தினம், பொதுக்குழு உறுப்பினர் நெல்லிக்குப்பம் காசிநாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தற்போது அ.தி.மு.க.வில் இருந்து விலகி விட்டனர்.

    அதற்கான கடிதத்தை அ.தி.மு.க. தலைமைக்கு அனுப்பி உள்ளார்கள். மேலும் இனி வரும் காலங்களில் ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகும் கடிதத்தை தலைமைக்கு அனுப்ப உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #ministermcsampath #exmlaayyappan

    தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக்கொன்ற அ.தி.மு.க.- பா.ஜனதா அரசுகளுக்கு தேர்தலில் தக்க தண்டனை தர வேண்டும் என்று பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். #LokSabhaElections2019 #DMK #MKStalin
    தூத்துக்குடி:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    நேற்று அவர் பாளை, சங்கரன்கோவிலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பின்பு இரவில் நெல்லை தாழையூத்தில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தார். இன்று காலை அவர் தூத்துக்குடி வந்தார்.

    அவர் தூத்துக்குடி- நெல்லை நான்கு வழிச்சாலையில் உள்ள மங்களகிரி விலக்கு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை ஆதரித்து பேசினார்.

    வருகிற 18-ந்தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் அதையொட்டி நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு ஓடிவந்துள்ளேன். தேர்தலுக்காக மட்டும் வந்துசெல்பவர்கள் அல்ல நாங்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றென கருதி உழைக்கும் உன்னதமான இயக்கம் தி.மு.க.

    கலைஞர் இருந்திருந்தால் இன்று உங்கள் முன்னால் வந்து வாக்கு கேட்டிருப்பார். இன்று அவரது மகனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். பிரிட்டிஷ் அரசை எதிர்த்து இந்திய மக்கள் அனைவரும் சேர்ந்து மூச்சுவிட்டாலே போதும் ஓடிவிடுவார்கள் என்றுகூறிய வ.உ.சி. பிறந்த மண் இது.

    அனைத்து தொகுதிகளிலுமே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுபவர்களை கலைஞரின் பிள்ளையாக கருதி வாக்களிக்க கேட்டு வந்துள்ளேன். இங்கு கலைஞரின் மகள், எனது தங்கைக்காக வாக்கு கேட்கிறேன். கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பது போல கனிமொழி கவிஞர், பத்திரிகையாளர், பேச்சாளர், எழுத்தாளர் என ஒவ்வொரு துறையிலும் தனிமுத்திரை பதித்தவர். சமூக போராளி, பாராளுமன்ற டைகர் என பட்டம் பெற்றவர். தூத்துக்குடியில் உங்களுடைய டைகராக அவர் போட்டியிடுகிறார்.

    மாநிலங்களவையில் அவர் ஸ்டெர்லைட் பிரச்சனை, நீட்தேர்வு விவகாரம், மரண தண்டனை ஒழிப்பு, மகளிர் இட ஒதுக்கீடு, சமூக நீதி உள்ளிட்ட பல பிரச்சனைகளை வாதாடி, போராடி வெற்றி பெற்றுள்ளார். இவரை விட சிறந்த வேட்பாளர் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.

    மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி மாற்றப்பட வேண்டும். அதே நேரத்தில் தமிழகத்தில் ஒரே நிமிடம் ஏன்? ஒரு நொடியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். இதற்கு மற்ற தொகுதி மக்களை விட தூத்துக்குடி தொகுதி மக்களுக்கு முக்கிய கடமை உள்ளது.



    ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடிய அப்பாவி மக்கள் 13 பேரை துள்ளதுடிக்க சுட்டுக்கொன்ற அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணிக்கு தக்க தண்டனை தர வேண்டும். 100 நாட்களை கடந்து போராடிய மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் போது கலெக்டர் அழைத்து பேசியிருந்தால் இந்த கொடுமை நடந்திருக்காது. மக்களை பழிவாங்கவே துப்பாக்கி சூடு நடத்தியது எடப்பாடி அரசு.

    ஸ்டெர்லைட்டை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. எனவே இந்த கொலைகார எடப்பாடி அரசை மக்கள் தூக்கிஎறிய வேண்டும். துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது யார்? எடப்பாடியா? தலைமை செயலாளரா? பிரதமர் மோடியா?. தூத்துக்குடியை சேர்ந்த 17 வயது பெண் ஸ்னோலினை சுட்டுக்கொன்றுள்ளார்கள். அவர் எழுதிய கவிதை புத்தகமாக வந்துள்ளது. காளியப்பன் என்பவரை சுட்டுக்கொல்லும்போது கடைசியில் சினிமாவில் நடிப்பது போல் நடிக்கிறாயா? என கேட்ட கொடுமை இணையத்தில் வந்துள்ளது.

    துப்பாக்கி சூடு நடந்ததும், தூத்துக்குடிக்கு வந்து காயம்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூறினேன். என் வாழ்நாளில் இப்படிப்பட்ட காட்சிகளை நான் பார்த்ததில்லை. சம்பவம் நடந்த நேரத்தில் முதல்-அமைச்சர் இங்கு வந்தாரா? ஒரு அறிக்கையாவது விட்டாரா? பிரதமர் மோடி இரங்கல் செய்தியாவது கூறினாரா? வடமாநிலத்தில் ஒரு பிரச்சனை என்றால் அறிக்கைவிடுகிறார்.

    எனவே தான் அவரை பாசிச மனப்பான்மை கொண்ட பிரதமர் என கூறுகிறோம். இந்த வார்த்தையை தொடங்க காரணமாக இருந்தது தூத்துக்குடி. இந்த தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சென்னையில் இருந்து விமானத்தில் தூத்துக்குடி வந்தபோது பாசிச மோடி ஆட்சி ஒழிக என கோ‌ஷமிட்ட மாணவி சோபியாவை அவதூறாக திட்டி, அவரை கைது செய்ய செய்தார். பாசிச மோடி ஆட்சி என்று மாணவி சோபியா சொன்னதை இன்று நாங்கள் பலமுறை சொல்கிறோம். மோடிக்கு எதிரான முழக்கத்தை முன்வைக்க காரணமாக இருந்த தமிழிசைக்கு நன்றி கூறுகிறோம்.



    தூத்துக்குடியில் தமிழிசை போட்டியிடவில்லை, வசமாக மாட்டிக்கொண்டார். இங்குதான் ஸ்டெர்லைட் பிரச்சனை, மீனவர் பிரச்சனை, உப்பள பிரச்சனை, தீப்பெட்டி தொழில் பிரச்சனை, சுற்றுச்சூழல் பிரச்சனை உள்ளது. எதற்கும் குரல் கொடுக்காத தமிழிசை, என்ன தைரியத்தில் வந்தார். தோற்பதற்காக வந்தாரா? ஒருவேளை அவரது கட்சியினரே சதி செய்து இங்கு அனுப்பிவைத்தார்களா? ஸ்டெர்லைட் போராட்டத்தை போன்று கூடங்குளம் போராட்டத்திலும் அடக்குமுறையை கையாண்டது இந்த அரசு.

    இந்திய பாதுகாப்புக்கு அனைத்தையும் செய்கிறோம் என்கிறார் மோடி. புல்வாமாவில் 40 வீரர்கள் கொல்லப்பட்டார்களே, இதுதான் பாதுகாக்கும் லட்சணமா? உள்ளூர் பயங்கரவாதிகளுக்கு வெடி பொருட்கள் எப்படி கிடைத்தது? பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி அளித்த புள்ளிவிபரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அதிகமான மதக்கலவரங்கள், அதனால் அதிகமானோர் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது.

    இதில் நிறைய சம்பவங்கள் நடந்தது பா.ஜனதா செல்வாக்கு மிகுந்த உத்தரபிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா மாநிலங்கள் ஆகும். அதைப்போன்று தமிழகத்திலும் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். தி.மு.க. இருக்கும்வரை அது நடக்காது.

    கடந்த 20-ந்தேதியில் இருந்து நான் பிரசாரத்தை தொடங்கியது முதல் 3 கேள்விகளை கேட்டுள்ளேன். ஜெயலலிதா மரணம் எப்படி நடந்தது? அது மர்மமரணம் என்று அ.தி.மு.க.வை சேர்ந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே கூறியுள்ளார். அப்போது மர்ம மரணம் என்று கூறியவர் அதுதொடர்பாக விசாரணை கமி‌ஷனில் 6 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாதது ஏன்? ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். எனவே அவரது மரணம் குறித்து பேச எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் எனக்கு தகுதி உண்டு. இந்த கேள்விக்கு இதுவரை பதில் வரவில்லை.

    கொடநாட்டில் கொள்ளை முயற்சியில் நடந்த கொலைகளுக்கு யார் பின்னணி? 3-வதாக பொள்ளாச்சியில் 7 வருடமாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள். அந்த கொடுமையை படம் எடுத்து மிரட்டி பணம் பறித்தவர்கள் யார்? உளவுத்துறை இதை முன்கூட்டியே சொல்லாதது ஏன்? இதற்கு காரணமான அ.தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். எனது இந்த 3 கேள்விகளுக்கு இதுவரை பதில் வரவில்லை.

    இந்த ஆட்சியில் பெண்களுக்கு நடந்த கொடுமை மோடியின் கண்களுக்கு தெரியவில்லையா? தெரியும். அதனால் தான் அவரை பாசிச பிரதமர் என்கிறோம்.

    வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 தொகுதிக்கும் இடைத்தேர்தல் முடிந்தவுடன் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மாநிலத்தில் எடப்பாடி ஆட்சி தூக்கிஎறியப்படும். தமிழக சட்டமன்றத்தில் இப்போது தி.மு.க.வுக்கு 88 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரசுக்கு 8 எம்.எல்.ஏ.க்கள், முஸ்லீம் லீக் 1 என தி.மு.க. அணியில் 97 எம்.எல்.ஏ.க்கள் உள்ளன. 22 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் அவை 119 ஆக உயரும். 117 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

    கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்த மோடி எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் தற்போது தேர்தல் அறிக்கையில் கனவுகள், கற்பனைகள் காகிதங்களில் கொடுத்துள்ளார். 5 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்று சொல்ல முடியவில்லை. முதலில் மக்களின் தேவையை நிறைவேற்றியதாகவும், தற்போது மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகவும் கூறியுள்ளீர்கள். இப்போது மக்களின் விருப்பம் நீங்கள் வீட்டுக்கு போகவேண்டும் என்பதுதான். தி.மு.க. தேர்தல் அறிக்கை மிக தெளிவாக உள்ளது.

    தி.மு.க. வெற்றி பெற்றதும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை கொள்கை முடிவெடுத்து சிறப்பு சட்டம் இயற்றி நிரந்தரமாக மூடுவோம். துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்போம். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும். தூத்துக்குடியின் விமான நிலையம் மேம்படுத்தப்படும். சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும். மழைக்காலங்களில் உப்பள தொழிலாளர்கள் பாதிக்காத வகையில் நிரந்தர தீர்வு காண தனி ஆணையம் அமைக்கப்படும். மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். கடலோர பகுதிகள் புயல் பாதிப்புகளில் இருந்து நிரந்தரமாக பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் ஒரு சில பிரிவுகளை தேவேந்திரர் என அழைக்க தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மூலம் தீர்வு காணப்படும். 50 லட்சம் மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கேபிள் டி.வி. கட்டணம் குறைக்கப்படும். மாணவர்களின் கல்வி கடன், விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும். கலைஞர் கூறியது போல நாங்கள் சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம். எனவே உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #DMK #MKStalin
    தேனியில் ஆரத்தி எடுப்பவர்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்கிறார்கள். தேர்தலுக்கு முன்பே அங்கு வாக்காளர்களுக்கு ரூ.1000 சென்று விட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார். #LokSabhaElections2019 #KSAlagiri
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 12-ந் தேதி தமிழ்நாடு வருகிறார். அப்போது அவர் சேலம், தேனி, கிருஷ்ணகிரி, விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.

    ராகுல் பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டங்கள் பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக அமையும். விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் கோரிக்கைகளை அமித்ஷா கேட்டறிந்து செய்கிறோம் என்று சொல்லி இருப்பதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

    டெல்லியில் 150 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணுவையும், விவசாயிகளையும் அமித்ஷாவோ, மோடியோ யாரும் சந்திக்கவில்லை. ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்களை நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

    பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் விவசாயத்துக்காகவும், விவசாயிகளுக்காகவும் எதையும் செய்யவில்லை. தமிழகத்தில் வீரம் நிறைந்த, தன்மானம் உள்ள விவசாயிகள் இருந்திருக்கிறார்கள். அமித்ஷாவை அய்யாக்கண்ணு சந்தித்தது வருத்தம் அளிக்கிறது.



    பிரதமர் மோடி கோவையில் பேசும்போது ஜி.எஸ்.டி. பிரச்சினைகளை சரி செய்வேன் என்று கூறி இருக்கிறார். இதைத்தான் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி, ப.சிதம்பரம் சொன்னார்கள். அப்போது எங்கள் கருத்தை கேட்கவில்லை. நாங்கள் கூறும் ஆலோசனை முட்டாள்தனமானது என்று மோடி கூறினார். ஆனால் இப்போது ஜி.எஸ்.டி. வரியை சரி செய்கிறேன் என்று கூறுகிறார்.

    பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைப்போம் என்று கூறி இருப்பதை ரஜினி தெரிந்து ஆதரித்தாரா? இல்லை தெரியாமல் ஆதரித்தாரா? என்பது தெரியவில்லை. நாடு முழுவதும் நதிகளை இணைப்பது சாத்தியமில்லை.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பதை தடை செய்ய வேண்டும். தேனியில் ஆரத்தி எடுப்பவர்களுக்கு அ.தி.மு.க.வினர் பணம் பட்டுவாடா செய்கிறார்கள்.

    தேர்தலுக்கு முன்பே அங்கு வாக்காளர்களுக்கு ரூ.1000 சென்று விட்டது. இதை காவல்துறையோ, தேர்தல் ஆணையமோ கண்டு கொள்ளவில்லை.

    ஏ.டி.எம். பணம், விவசாயிகளின் பணத்தை பிடிக்கும் தேர்தல் அதிகாரிகள் இதை ஏன் கண்டு கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #KSAlagiri

    தி.மு.க.வில் இணைய உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.  அவைத் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் இருந்து வருகிறார். இவருக்கும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.சி.சம்பத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. வருகிற 11-ந் தேதி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வடலூர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அப்போது அய்யப்பன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் வீட்டுக்கு இன்று மதியம் 1 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகளும் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் கீதா மற்றும் பறக்கும் படையினரும் ஜீப்பில் வந்தனர். இதனை தொடர்ந்து கடலூர் போலீசார் 10-க்கும் மேற்பட்டோர் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் வீட்டுக்கு வந்தனர்.

    இதையடுத்து வருமானவரி துறை அதிகாரிகள் அதிரடியாக அய்யப்பன் வீட்டுக்குள் சென்றனர். அப்போது வீட்டின் முன்பு திரண்டு இருந்த அய்யப்பன் ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை பார்த்து, என்ன காரணத்திற்காக இங்கே வந்து உள்ளீர்கள்? என கேட்டனர். அதற்கு, நாங்கள் வீட்டை சோதனை செய்ய வந்துள்ளோம் என கூறினார்கள். இதனை பார்த்த முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன், அதிகாரிகளிடம் வீட்டை சோதனை செய்யலாம் என்றார். 

    இதன் பின்னர் அதிகாரிகள் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து சோதனை செய்ய தொடங்கினர். அப்போது வீட்டின் முன்புற கதவு மூடப்பட்டது. மேலும் நிர்வாகிகள் யாருக்கும் தெரியாமல் இருக்க வெளிப்புற கதவையும் போலீசார் மூடினார்கள். அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் தி.மு.க.வுக்கு செல்ல உள்ள நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    8 வழிச்சாலை திட்டத்தின் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார். #ministerrajendrabalaji #admk #mkstalin #salemtochennai8wayroad

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இது அரசுக்கு பின்னடைவு கிடையாது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யும்.

    தொழில் துறை வளர்ச்சிக்கு சாலை வசதி மிகவும் அவசியம். எனவே அடுத்த கட்டமாக கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து பேசி யாரும் பாதிக்காத அளவுக்கு முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார்.

    கருத்து கணிப்பை தாண்டி மக்களின் கணிப்பு அ.தி.மு.க. தான். டெல்லியில் மோடி பிரதமராக வர வேண்டும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர்.

    எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல, வி‌ஷ வாயு என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். எடப்பாடியை எதிர்க்கும் அரசியல் இயக்கம் டெட்பாடி ஆகி விடும்.

    எழுதிக் கொடுத்த பேப்பரை பார்த்து தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் படிக்கிறார். சட்டசபையிலும் எழுதி வைத்து தான்பேசுவார்.

    கலைஞரிடம் இருந்த திறமை மு.க.ஸ்டாலினிடம் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தலைவர் ஆகி விட்டார்.

    மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் டி.டி.வி. தினகரனுக்கு துளியும் இல்லை. அவர் பணம், பணம் என்று தான் உள்ளார். அவரிடம் மனம் இல்லை, குணம் இல்லை.

    ஸ்டாலின் ஒரு இடத்தில் மட்டும் கூட்டத்தை நடத்தி கூட்டம் கூட்டுகிறார். பல்வேறு இடங்களுக்குச் சென்று முதல்-அமைச்சரை போல் திறந்த வேனில் ஸ்டாலின் பிரசாரம் செய்வாரா?

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்றாக இருப்பதால் தான் மு.க.ஸ்டாலின் டி-சர்ட் போட்டு நடந்து சென்று ஓட்டு கேட்கிறார். தி.மு.க. ஆட்சி போல் சட்டம், ஒழுங்கு இருந்தால் அவரால் நடக்க முடியுமா?

    ஸ்டாலின் பேச்சில் வன்மம் உள்ளது. சண்டையை தூண்டி விடுகிறார். எப்படியாவது ஆட்சியை பிடித்து விடலாம் என்று ஏக்க பெருமூச்சு விடுகிறார். இது நடக்கவே நடக்காது.

    40 பாராளுமன்ற தொகுதிகளிலும் 18 சட்டசபை இடைத் தேர்தலிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் தான் வெற்றி பெறும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #ministerrajendrabalaji #admk #mkstalin #salemtochennai8wayroad

    ஓட்டுக்கு ரூ.500 தந்தால் வாங்க வேண்டாம் என்றும் ஓபிஎஸ் மகனிடம் ரூ.5 ஆயிரம் கேளுங்கள் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #Elangovan

    பேரையூர்:

    தி.மு.க. கூட்டணி சார்பில் தேனி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    இவர் தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சேடப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என ஆளும் கட்சியினர் ரூ.500 கொடுத்து வருகிறார்கள். அதை வாங்காதீர்கள். அதற்கு பதிலாக ஓ.பி.எஸ்.மகனிடம் ரூ.5 ஆயிரம் கொடுங்கள் என கேளுங்கள். அவர்கள் கொடுக்கும் பணம் உங்களை ஏமாற்றி கோடி கோடியாய் கொள்ளையடித்தது தான்.


    இத்தனை நாள் உங்களை எப்படி எல்லாம் ஏமாற்றி இருக்கிறார்கள். எனவே ஆளும் கட்சியிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு நாமம் போடுங்கள்.

    பணம் வாங்கி கொண்டு கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். நான் வென்றால் தொகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் உடனே செய்து கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #Elangovan

    ×