search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94535"

    அனைத்து சாதிமதத்தை சேர்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீய ஆவிகளால் பீடிக்கப்பட்ட ஏராளமானவர்கள் ஆத்தங்கரை பள்ளிவாசலில் தங்கியிருந்து குணமடைந்து செல்கின்றனர்.
    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் ஹசரத் சையதலி பாத்திமா, ஹசரத் சேகு முகம்மது தர்காவும் ஒன்றாகும்.

    மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி ஓடிவருகின்ற நம்பியாறு ஆத்தங்கரை பள்ளிவாசலில் கடலில் கலக்கிறது. ஆத்தங்கரை பள்ளிவாசல் இந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

    அனைத்து சாதிமதத்தை சேர்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீய ஆவிகளால் பீடிக்கப்பட்ட ஏராளமானவர்கள் ஆத்தங்கரை பள்ளிவாசலில் தங்கியிருந்து குணமடைந்து செல்கின்றனர். எனவே ஆற்றங்கரை நாயகி’ என அவர்களால் அழைக்கப்படுகிறார்.

    ஆத்தங்கரை பள்ளிவாசலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் கந்தூரி திருவிழா வெகுவிமர்சையாக நடத்தப்படும். விழாவில் இஸ்லாமியர்கள் மட்டு மல்லாது, இந்து, கிறிஸ்துவர்கள் என அனைத்து சாதி, மதத்தினரும் கலந்து கொள்வார்கள்.

    நெல்லை மாவட்டம் மட்டு மல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பங்கேற்கிறார்கள்.
    கந்தூரி விழா கொடி யேற்றத்தின் போது பள்ளிவாசல் டிரஸ்டிகள் ஊரான அரண்மனை புலிமான் குளத்தில் இருந்து பள்ளிவாசலுக்கு யானை மீது சந்தனக்குடம் மற்றும் கொடி ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.

    பள்ளிவாசல் டிரஸ்டிகள் மன்னர்கள் போல தலையில் கீரிடம் வைத்து பாரம்பரிய உடையணிந்து கொடியேற்றுவர். அப்போது பள்ளிவாசல் இடத்திற்கு அப்போதைய உரிமையாளரான ராமன்குடி முத்து கிருஷ்ணாபுரம் அருணாச்சல நாடார் வீட்டிற்கு சென்று அவர்கள் குடும்பத்தினர் அளிக்கும் வரவேற்பு மற்றும் காணிக்கைகளை பெற்று செல்வது பள்ளிவாசல் தோன்றிய நாள் முதல் இன்று வரை நடைபெற்று வருகிறது.

    தற்போது அவரது பேரன் அருள்துரை இதை முன்னின்று நடத்தி வருகிறார். யானை மீது கொடி ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் அன்ன தானமும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இது மத நல்லிணக் கத்திற்கு எடுத்துக் காட்டாக உள்ளது.

    கந்தூரி விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கிறது.
    ஹசரத் சையதலி பாத்திமா, மீது கொண்ட பற்றால் இப்பகுதியில் உள்ள ஏராளமானவர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு செய்யதலி பாத்திமா என்று பெயரிட்டுள்ளதை அதிகமாக காணலாம். இதனை இன்று வரை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    மேலும் பல்வேறு வியாபாரிகள் தங்களது கடைகளில், வீடுகளில் ஆத்தங்கரை பள்ளிவாசல் புகைப்படத்தை வைத்திருப்பதை காணலாம்.

    செய்யது அலி பாத்திமா கேரளா கொடுங்கலூரிலிருந்து திருவனந்தபுரம் வழியாக தமிழகத்துக்கு வந்தார்கள். செய்யது அலி பாத்திமாவின் சகோதரிகள் மொத்தம் 5 பேர். முதலாவது திருவனந்தபுரத்தில் உள்ள பீமா பள்ளியிலுள்ள பீமா. இரண்டாவது ஆத்தங்கரை செய்யது அலி பாத்திமா, மூன்றாவது திசையன்விளை- ஆத்தங்கரையில் உள்ள ஆலங்குளம் என்ற ஊரில் சின்னப்பிள்ளை நாச்சியார் அம்மாள், நான்காவது தங்கை குஜராத்திலும், ஐந்தாவது தங்கை மஹாராஷ்டிராவிலும் அடங்கப்பட்டுள்ளனர். அவர்களது புகழும் செய்யது அலி பாத்திமா போலவே பிரசித்தி பெற்றதுதான் என்கின்றனர் திசையன்விளையில் வாழும் மக்கள்.
    இன்று மர்க்காஸ் மசூதியில் நடைபெறும் இந்த கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொள்ள இந்து, பெளத்தம் மற்றும் கிறிஸ்தவ மத பிரதிநிதிகள் உள்பட சுமார் 100 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
    கேரள மாநிலத்தில் இந்து, கிறிஸ்தவம் மற்றும் முஸ்லிம் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் இடையே சமீப காலமாக லவ்ஜிகாத், போதை ஜிகாத் உள்ளிட்ட சர்ச்சை எழுந்தது.

    இதனால் மத பிரதிநிதிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இந்த நிலையில் கிறிஸ்தவ ஆயர் ஒருவர், கேரளாவில் இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த இளம் பெண்களை மத மாற்றம் செய்யும் வகையில் போதை ஜிகாத் நடைபெறுவதாக புகார் கூறினார். இது கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் ஆலப்புழா சக்காரியா பஜாரில் உள்ள பிரசித்தி பெற்ற மர்க்காஸ் மசூதியில் அனைத்து மத பிரதிநிதிகளும் பங்கேற்கும் வகையில் கூட்டு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்த மசூதி நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

    இன்று மர்க்காஸ் மசூதியில் நடைபெறும் இந்த கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொள்ள இந்து, பெளத்தம் மற்றும் கிறிஸ்தவ மத பிரதிநிதிகள் உள்பட சுமார் 100 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பிரார்த்தனையில் கலந்து கொள்கின்றனர். மேலும் மசூதியில் முஸ்லிம் மத குரு ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கிலும் கலந்து கொள்கிறார்கள்.

    இது குறித்து மர்க்காஸ் மசூதி நிர்வாகி அஸ்ரப் கூறியதாவது:-

    மசூதியில் பிற மதங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள தடை கிடையாது. தற்போது தேவையற்ற விவாதங்கள் நடைபெற்று வருகிறது. எனவே மாநிலத்தில் மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மசூதியில் அனைத்து மத கூட்டு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தூரி விழா அடுத்த ஆண்டு(2022) ஜனவரி மாதம் 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தூரி விழா அடுத்த ஆண்டு(2022) ஜனவரி மாதம் 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதை முன்னிட்டு நாகூர் தர்காவில் வெள்ளை முகூர்த்தம் (வர்ணம் பூசும் பணி) தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக அஸர் தொழுகை நடந்தது. இதை தொடர்ந்து நாகூர் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஓதி வெள்ளை முகூர்த்தத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் டிரஸ்டிகள், தர்கா ஆதீனங்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    நத்தம் சையது சாகுல்ஹமீது ஆசிக்கீன் தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், உலக நன்மை வேண்டி பிரார்த்தனையும் நடந்தது.
    நத்தம் பெரிய பள்ளி வாசலில் உள்ள சையதுசாகுல்ஹமீது ஆசிக்கீன் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடந்தது. இதில் நாகூரிலிருந்து கொண்டு வரப்பட்ட

    புனித சந்தனம் குடத்தில் நிரப்பப்பட்டு சலங்கைகள் ஒலிக்க தர்காவிலிருந்து டாக்டர் நசீர் அகமது சையது மீரான் தலையில் சுமந்து செல்ல ஊர்வலம்

    புறப்பட்டது.

    இந்த ஊர்வலம் சந்தனகுடத்தெரு, பெரியகடைவீதி, மஸ்தான் பள்ளிவாசல் வழியாக வந்து மீண்டும் தர்காவை அடைந்தது. தொடர்ந்து அங்கு சந்தனம் பூசும்

    நிகழ்ச்சியும், உலக நன்மை வேண்டி பிரார்த்தனையும் நடந்தது.

    இதில் வேம்பார்பட்டி அரசுப்பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் கண்ணுமுகமது, முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன்,

    தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், அ.தி.மு.க. நகர அவைத்தலைவர் சேக் ஒலி உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவிழாவிற்கான

    ஏற்பாடுகளை தர்கா நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    பனைக்குளம் கிராமத்தில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை, ஐக்கிய முஸ்லிம் சங்கம் சார்பில் நடந்தது. இதில் ஏராளமானோர் கந்தூரி தேங்காய் சாதத்தை பெற்று சென்றனர்.

    மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பனைக்குளம் கிராமத்தில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழா பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை, ஐக்கிய முஸ்லிம் சங்கம் சார்பில் நடந்தது. மவுலீது ஓதும் நிகழ்ச்சி பனைக்குளம் ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜா முகைதீன் ஆலிம் மற்றும் ஜமாத் தார்கள் முன்னிலையில் கடந்த 11 நாட்களாக நடைபெற்று கந்தூரி தேங்காய் சாதம் வழங்கப்பட்டது.

    பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபைத் தலைவர் சிராஜுதீன், செய லாளர் பலீல் அகமது மற்றும் ஜமாத் நிர்வாகிகள், முஸ்லீம நிர்வாக சபை தலைவர் ஹம்சத் அலி, செயலாளர் சாகுல் ஹமீது, ஜமாத் நிர்வாகிகள் மற்றும் கந்தூரி விழா கமிட்டி தலைவர் ரோஸ் சுல்தான் உள்பட ஐக்கிய முஸ்லிம் சங்கம், வாலிப முஸ்லிம் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜா முகைதீன் ஆலிம் தொழுகைக்கு பின்பு முகைதீன் ஆண்டகை பற்றி சொற் பொழிவு ஆற்றி மக்கள் நலனுக்காகவும் சிறப்பு துவா செய்தார்.

    இதில் ஏராளமானோர் கந்தூரி தேங்காய் சாதத்தை பெற்று சென்றனர். பனைக்குளம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பணிகளை செய்திருந்தனர். ஏற்பாடுகளை கந்தூரி விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
    ராமநாதபுரத்தில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழாவையொட்டி கடந்த 11 நாட்களாக மவுலீது ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களை சேர்ந்த இமாம்கள், உலமாக்கள் கலந்து கொண்டனர்.
    ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் பாசிப்பட்டரைத்தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்தின் சார்பில் முகைதீன் ஆண்டவர் ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் ஆண்டுதோறும் ரபீஉல் ஆகிர் மாதத்தில் முகைதீன் ஆண்டகை கந்தூரி விழாவை நடத்தி வருகின்றனர்.

    இந்த விழாவையொட்டி கடந்த 11 நாட்களாக மவுலீது ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களை சேர்ந்த இமாம்கள், உலமாக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த் தனை நடத்தபட்டது. கந்தூரி விழாவையொட்டி நெய்சோறு வழஙகப்பட்டது.

    விழாவில் ஜமாத் நிர்வாகத்தின் அறங்கா வலர்கள், மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    உடன்குடி புதுமனை மகான் முகைதீன் அப்துல்காதர் ஜெய்லானியின் 203-வது கந்தூரி விழா 3 நாட்கள் நடந்தது. நேற்று நேர்ச்சை வழங்கல், மவுலூது ஷரிபு, துவா ஓதி நேர்ச்சை வழங்கல் நடந்தது.
    உடன்குடி புதுமனை மகான் முகைதீன் அப்துல்காதர் ஜெய்லானியின் 203-வது கந்தூரி விழா 3 நாட்கள் நடந்தது.

    கடந்த 19-ந் தேதி இரவு 9 மணிக்கு சிலம்பு விளையாட்டுடன் பால்குட ஊர்வலம் நடந்தது. மறுநாள் காலை 8 மணிக்கு கொடிசுற்று வரி வசூல், மாலை 3 மணிக்கு அரபி மதரஸா நிகழ்ச்சிகள், இரவு 9.30 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை நடைபெற்றது. நேற்று காலையில் நேர்ச்சை வழங்கல், மவுலூது ஷரிபு, துவா ஓதி நேர்ச்சை வழங்கல் நடந்தது.

    போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு ரஹ்மான் பரிசு வழங்கினார். இமாம்கள் முகம்மது ஆலிம், முகம்மது சபீக் ஆகியோர் மார்க்க சொற்பொழிவு வழங்கினர். கந்தூரி கமிட்டி ஆலோசகர் மொய்த்தீன் வரவேற்று பேசினார். கந்தூரி விழாக் கமிட்டி நிர்வாகிகள் உட்பட திரளான முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் யூனூஸ் மீரான் மற்றும் புதுமனை ஜமாத்தார்கள் செய்திருந்தனர்.
    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மா கோவிலில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழிபாடு செய்தார். RamNathKovind #prayatbrahmatemple
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மா கோவிலில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழிபாடு செய்தார்.

    குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் வந்தடைந்தார். இதையடுத்து, இன்று ஹெலிகாப்டர் மூலம், அஜ்மீர் நகரில் உள்ள புஷ்கர் பகுதிக்கு சென்ற குடியரசுத்தலைவர், அங்குள்ள பிரசித்திப் பெற்ற பிரம்மா கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

    அதைத்தொடர்ந்து, இன்று அஜ்மீர் நகரில் உள்ள தர்காவுக்கும் அவர் சென்று வழிபாடு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #RamNathKovind #prayatbrahmatemple
    ×