search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
    • கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன்-3-ந்தேதிக்குள் 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்துவிட வேண்டும் என்று தி.மு.க. வினர் வீடு,வீடாக சென்று ஆட்களை சேர்த்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளில் அதிகளவு உறுப்பினர்கள் உள்ளனர்.

    அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். காலத்தில் 17 லட்சம் உறுப்பினர்கள் இருந்ததாக சொல்லப்பட்டது. அதன் பிறகு ஜெயலலிதா காலத்தில் 1½ கோடி உறுப்பினர்கள் இருப்பதாக அவரே கூறி வந்தார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவு ஏற்பட்டுள்ள சூழலில் அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, டி.டி.வி. தினகரன் அணி, சசிகலா குரூப் என பிரிந்து நிற்கிறார்கள்.

    ஆனாலும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளரான பிறகு அதி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2 கோடியாக்க வேண்டும் என்று கட்டளையிட்டு உள்ளார்.

    இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

    அதன் அடிப்படையில் ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், பேரூர் கழக கிளை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களிடம் விண்ணப்பங்களை பெற்று வீடு, வீடாக சென்று புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    இதேபோல் தி.மு.க.விலும் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தி.மு.க.வில் ஏற்கனவே 1 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க.வில் மேலும் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

    அதன் அடிப்படையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

    ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து 234 தொகுதிகளிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை வேகமாக நடைபெற்று வருகிறது.

    கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன்-3-ந்தேதிக்குள் 1 கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்துவிட வேண்டும் என்று தி.மு.க. வினர் வீடு,வீடாக சென்று ஆட்களை சேர்த்து வருகின்றனர்.

    தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளும் ஒரே தெருவில் சென்று புதிய உறுப்பினர்களை சேர்ப்பதால் இரு கட்சியினர் மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா உறுதியாக உள்ளது.
    • 9 தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை சீரமைத்து வலுப்படுத்தும் பணிகளும் ஓசையின்றி நடந்து வருகின்றன.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா உறுதியாக உள்ளது.

    இதுதொடர்பாக பா.ஜ.க. மேலிட தலைவர்கள் ஆய்வு செய்துவரும் நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களுக்கு பார்வையாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதன் பின்னணியில் பா.ஜ.க. வியூகம் அமைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் 9 தொகுதிகளில் நிச்சயமாக போட்டியிட வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா உறுதியாக உள்ளது. தென்சென்னை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு, வேலூர் ஆகிய 9 தொகுதிகளை இதற்காக பாரதிய ஜனதா குறி வைத்துள்ளது.

    இந்த 9 தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த 9 தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை சீரமைத்து வலுப்படுத்தும் பணிகளும் ஓசையின்றி நடந்து வருகின்றன.

    எனவே இந்த 9 தொகுதிகளையும் அ.தி.மு.க.விடம் இருந்து பாரதிய ஜனதா வலியுறுத்தி வாங்கும் என்று கூறப்படுகிறது.

    • ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி என 3 தொகுதிகளில் கிட்டத்தட்ட 3.50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
    • டெல்டா பகுதி வேளாண் சிறப்பு மண்டலமாக அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி செல்கிறார். தேர்தல்போது இரட்டை இலை சின்னம் கிடைத்தது. பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற நீதிமன்ற தீர்ப்பு, அ.தி.மு.க.வின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது போன்ற நல்ல விஷயங்கள் நடந்து வருகிறது.

    தற்போது அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அ.தி.மு.க.வினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் இந்த படிவங்கள் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

    ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி என 3 தொகுதிகளில் கிட்டத்தட்ட 3.50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இதற்காக அ.தி.மு.க.வினர் வீடு வீடாக சென்று ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உறுப்பினர் சேர்க்கைக்கு பிறகு அ.தி.மு.க. அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். 2024 தேர்தல் திருப்புமுனையாக அமையும். 2026 சட்டமன்ற தேர்தலில் அசைக்க முடியாத சக்தியாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

    டெல்டா பகுதி வேளாண் சிறப்பு மண்டலமாக அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு பாதுகாப்பான அரசாக அ.தி.மு.க. இருந்தது. 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் பங்கேற்காதது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளேன்.

    கூட்டணி குறித்து நாங்கள் தெளிவாக உள்ளோம். அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே முரண்பாடுகள் இல்லை. நேர சூழல் காரணமாக பிரதமர்- இ.பி.எஸ். சந்திப்பு நடைபெறவில்லை. பிரதமரை எங்கு எப்போது சந்திக்க வேண்டுமோ அப்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. சட்ட ரீதியாகவும் எடப்பாடி பழனிசாமி கைக்கு சென்றுவிட்டது. இனி அ.தி.மு.க.வில் சேரவே முடியாதா என்ற ஏக்கம் ஒரு பக்கம்.
    • அ.தி.மு.க. எடப்பாடி கைக்கு சென்றதால் ஓ.பன்னீர் செல்வம் விரக்தி அடைந்ததை போல டி.டி.வி. தினகரனும், சசிகலாவும் கோபம் அடைந்துள்ளனர்.

    சட்டி சுட்டதடா... கைவிட்டதடா... என்ற கதையில் நடத்திய போராட்டங்கள் எல்லாம் கைவிட்ட நிலையில் கையறு நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

    அ.தி.மு.க. சட்ட ரீதியாகவும் எடப்பாடி பழனிசாமி கைக்கு சென்றுவிட்டது. இனி அ.தி.மு.க.வில் சேரவே முடியாதா என்ற ஏக்கம் ஒரு பக்கம். இன்னொரு பக்கத்தில் நமது அரசியல் பயணம் இனி எப்படி இருக்கும் என்ற கலக்கம் ஒரு பக்கம். தனது நெருங்கிய ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனைகள் எதுவும் உருப்படியாக தெரியவில்லையாம்.

    ஒரு நிர்வாகி "அம்மா திராவிட முன்னேற்ற கழகம்" என்று தனிக்கட்சி தொடங்கலாம். அப்படியானால் நாமும் அ.தி.மு.க. என்ற பெயரோடு அரசியல் களத்தில் செல்ல முடியும். தென் மண்டலத்திலும், சமூக ரீதியாகவும் குறிப்பிட்ட அளவு வாக்குகளை பெற முடியும். நமது ஆதரவு இல்லாமல் அ.தி.மு.க. ஜெயிக்க முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கலாம் என்று சொன்னார்களாம். ஆனால் இதுவும் சரிப்பட்டு வராது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறி இருக்கிறார்.

    அ.தி.மு.க. எடப்பாடி கைக்கு சென்றதால் ஓ.பன்னீர் செல்வம் விரக்தி அடைந்ததை போல டி.டி.வி. தினகரனும், சசிகலாவும் கோபம் அடைந்துள்ளனர். எனவே அவர்களோடு சேர்ந்து ஒரு தனி அணியை உருவாக்கலாமா என்றும் யோசனை கூறி இருக்கிறார்கள். அதுவும் சரிபட்டு வருமா என்று ஓ.பன்னீர்செல்வம் யோசித்து கொண்டிருக்கிறார். எல்லா நம்பிக்கைகளும் தளர்ந்த நிலையில் தேர்தல் ஆணையத்தை மட்டும் நம்பி இருக்கிறார்.

    • அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று கடைக்கோடி தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் ஏற்கனவே முடிவு செய்தனர்.
    • 24-ந் தேதி திருச்சியில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மாநாடு நடத்த உள்ளதாக தகவல்கள் வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று அ.தி.மு.க சார்பில் அமைக்கப்பட்ட கோடைக்கால நீர், மோர் பந்தலை அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று கடைக்கோடி தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் ஏற்கனவே முடிவு செய்தனர். கிட்டத்தட்ட நீதிமன்றமும் அதைத்தான் முடிவு செய்துள்ளது.

    இந்த சூழ்நிலையில் 24-ந் தேதி திருச்சியில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மாநாடு நடத்த உள்ளதாக தகவல்கள் வருகிறது. இதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. அ.தி.மு.க.வுக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே எந்த சம்பந்தமும் கிடையாது.

    அ.தி.மு.க, பா.ஜ.க இடையே கூட்டணி நல்ல முறையில் உள்ளது என்று எடப்பாடி பழனிசாமியே கூறிவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • எடப்பாடி பழனிசாமி வருகிற 16-ந்தேதி சென்னை டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள உட்லண்ட்ஸ் ஓட்டலில் இப்தார் விருந்து வழங்க உள்ளார்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    புரட்சி தலைவி அம்மாவின் வழியில் இந்த ஆண்டு அ.தி.மு.க. சார்பில் கழக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வருகிற 16-ந்தேதி மாலை 5 மணி அளவில் சென்னை டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள உட்லண்ட்ஸ் ஓட்டலில் இப்தார் விருந்து வழங்க உள்ளார்.

    நிகழ்ச்சியில் இஸ்லாமிய சமுதாய பெருமக்கள் தோழமை கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதி நிதிகள், தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் தொகுதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை
    • ஓபிஎஸ் அணி நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறி தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆளுங்கட்சியான பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக, இந்த தேர்தலில் போட்டியிட விரும்புகிறது. கர்நாடகா தேர்தலில் சில இடங்களில் போட்டியிட அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவுடன் ஓபிஎஸ் அணியினர் சந்தித்தனர். ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி எடியூரப்பாவை சந்தித்து சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். எடியூரப்பாவிடம் தற்போதைய அரசியல் சூழலை எடுத்து கூறியதுடன், கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் தொகுதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்துள்ளார். இதேபோல் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் கர்நாடக பாஜக தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போதைய நிலையில், அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி அணியினர் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், ஓபிஎஸ் அணி நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறி தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கர்நாடகா சென்று பாஜக தலைவர்களை சந்திப்பதற்குள், ஓபிஎஸ் அணியினர் முந்திக்கொண்டனர். இதன்மூலம் அதிமுக விவகாரம் கர்நாடக தேர்தலிலும் எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது.

    • நீதிமன்ற தீர்ப்பில் எடப்பாடிக்கு சாதகமாக இரட்டை இலையும் அ.தி.மு.க.வும் வந்தால் அது அ.தி.மு.க.வை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும்.
    • தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்றால் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை மத்திய அரசு நிறுத்தி கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடாது.

    தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த திட்டத்தையும் அனுமதிக்கக்கூடாது. மேலும் இந்த விஷயத்தில் தேவையற்ற அரசியல் செய்ய வேண்டாம்.

    நீதிமன்ற தீர்ப்பில் எடப்பாடிக்கு சாதகமாக இரட்டை இலையும் அ.தி.மு.க.வும் வந்தால் அது அ.தி.மு.க.வை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும்.

    ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி கையில் சிக்கிய அ.தி.மு.க. கட்சி அழிவு பாதையை நோக்கி செல்கிறது. எம்.ஜி.ஆர். கையில் இருந்த இரட்டை இலை சின்னம் சினிமா வில்லன்கள் நம்பியார், வீரப்பா கையில் கிடைத்தால் எப்படி இருக்குமோ அதுபோல் எடப்பாடி பழனிசாமி கையில் உள்ளது என்று மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

    இரட்டை இலை சின்னம், அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமிக்கு தான் சொந்தம் என்று வந்தால் அது இரட்டை இலைக்கும், அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் பிடித்த கெட்ட நேரம்.

    கட்சியில் துரோகம் இழைத்ததால் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார். ஆனால் துரோகத்தின் மூலமாகவே பொறுப்புக்கு வந்த ஒருவரை இயற்கையும் அனுமதிக்காது. அவரை நிச்சயம் மக்கள் புறக்கணிப்பார்கள்.

    தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்றால் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அம்மாவின் உண்மை தொண்டர்கள் இணைந்தால் தி.மு.க.வை நிச்சயமாக வீழ்த்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16-ந்தேதி பகல் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது.
    • உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் குறித்தும், கழகத்தில் உறுப்பினர்களை சேர்ப்பது சம்பந்தமாகவும், அ.தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பகல் 1.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.

    கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும்.

    உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்காக தனியாக விண்ணப்ப படிவம் அச்சிடப்பட்டுள்ளது.
    • விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.10 ஆகும். ஒரு படிவத்தில் 5 உறுப்பினர்களை சேர்க்கலாம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு உள்ள நிலையில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலை அ.தி.மு.க. சந்திக்க உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற்றால்தான் எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கை நிரூபிக்க முடியும்.

    எனவே கட்சியை வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளார். கட்சியில் புதிதாக அதிக அளவில் இளைஞர்களை சேர்க்கவும் அவர் திட்டம் வகுத்துள்ளார்.

    அதன்படி அ.தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை இன்று தொடங்கியது. அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க.வில் தற்போது ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். புதிதாக 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட உள்ளனர். மொத்தம் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

    அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கைக்காக தனியாக விண்ணப்ப படிவம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.10 ஆகும். ஒரு படிவத்தில் 5 உறுப்பினர்களை சேர்க்கலாம். ஒவ்வொரு உறுப்பினரும் ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும்.

    விண்ணப்ப படிவத்தில் பெயர், வயது, பிறந்த தேதி, படிப்பு, வேலை, முகவரி உள்ளிட்ட எல்லா விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன.

    அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவங்களை இன்று மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் வாங்கிச் சென்றனர். இதே போல் ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களும் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டை புதுப்பித்து வழங்கப்படுகிறது.

    • விண்ணப்ப படிவங்களை நாளை முதல் தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்
    • ஒரு படிவத்தின் விலை ரூ.10. ஒரு படிவத்தில் 25 உறுப்பினர்களை சேர்க்கலாம். ஒவ்வொரு உறுப்பினரும் ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும்.

    சென்னை:

    கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் பேசும் போது, "கட்சியில் எத்தனையோ முன்னோடிகள் இருந்தபோதும், அண்ணா, இளைஞர்களான என்னையும், எஸ்.டி.சோமசுந்தரத்தையும் வேட்பாளராக நிறுத்தினார். அண்ணா தலைமையிலான தி.மு.க. 1967-ல் ஆட்சியை பிடிக்க காரணம், அவர் அதிக அளவில் இளைஞர்களை வேட்பாளராக நிறுத்தியதுதான். அதை பழனிசாமி நினைவில் கொள்ள வேண்டும்" என்று அறிவுரை கூறி இருந்தார்.

    அதன்படி கட்சியில் புதிதாக அதிக அளவில் இளைஞர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளார்கள்.

    கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நாளை தொடங்குகிறது. இதற்காக தனியாக விண்ணப்ப படிவம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப படிவங்களை நாளை முதல் தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

    ஒரு படிவத்தின் விலை ரூ.10. ஒரு படிவத்தில் 25 உறுப்பினர்களை சேர்க்கலாம். ஒவ்வொரு உறுப்பினரும் ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும்.

    ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களும் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கு உறுப்பினர் அட்டை புதுப்பித்து வழங்கப்படும். புதிய உறுப்பினர்களையும் பெருமளவில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.

    விண்ணப்பத்தில் பெயர், வயது, பிறந்த தேதி, படிப்பு, வேலை, முகவரி உள்ளிட்ட எல்லா விபரங்களும் கேட்கப்பட்டிருக்கும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்கனவே உறுப்பினர் ஆக இருப்பவர்கள் மட்டு மல்லாமல் அந்த பகுதியில் கூடுதல் இளைஞர்களையும், இளம்பெண்களையும் கட்சிக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

    இதையொட்டி மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொருவருக்கும் செயற்குழு கூட்டத்தின்போது எவ்வளவு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இப்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி விவகாரம் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. எனவே கூட்டணி விவகாரத்தில் கட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றியும் இந்த கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    • அ.தி.மு.க. கட்சியின் 7-வது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி ஏற்றுக்கொண்டார்.
    • ஒரு சில காரணங்களுக்காக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

    சென்னை:

    இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும், ஒரு முறை பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி கூடிய அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் (மார்ச்) நடைபெறுவதாக இருந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒருவர் பெயரில் மட்டுமே அனைத்து மனுக்களும் தாக்கலாகி இருந்ததால், போட்டியின்றி அவர் தேர்வாகும் நிலை ஏற்பட்டது.

    ஆனால், அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து இருந்ததால், தீர்ப்பு வரும் வரை தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் 28-ந் தேதி காலை எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, அன்றே அவர் கட்சியின் 7-வது பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி ஏற்றுக்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகின்ற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகம் எம்.ஜி.ஆர். மாளிகையில், கட்சியின் அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் வரும் 7ம் தேதி நடைபெற இருந்த அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு சில காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

    ×