search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்கானிஸ்தான்"

    • டி20 அரையிறுதி போட்டிக்கு ஆப்கன் அணி முதல் முறையாக தகுதி பெற்றது.
    • இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் விளையாடுகின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்கிறது. 

    ஐ.சி.சி. நடத்தும் உலகக் கோப்பை தொடர்களில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்த தொடரில் துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை ஆப்கன் அணி வெளிப்படுத்தி வந்தது.

    உலகக் கோப்பை தொடர் துவங்கும் முன்பே, ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான பிரைன் லாரா தெரிவித்து இருந்தார்.

    அந்த வகையில் தனது முதல் அரையிறுதியில் விளையாடும் ஆப்கன் அணி வெற்றி பெறும் முனைப்பிலும், பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பிலும் விளையாடுகின்றன. 

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்குகின்றன.
    • முதல் அரையிறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    டிரினிடாட்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றுகள் முடிந்து அரையிறுதி சுற்றுகள் நாளை தொடங்குகின்றன.

    குரூப் 1 பிரிவில் முதல் இரு இடங்கள் பிடித்த இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் குரூப் 2 பிரிவில் இருந்து தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    முதல் அரையிறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு தரூபா பிரையன் லாரா ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில், தான் ஆடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

    பேட்டிங்கில் டி காக் 199 ரன்கள், டேவிட் மில்லர் 148 ரன்கள், கிளாசென் 138 ரன்கள், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 134 ரன்கள் அடித்துள்ளனர்.

    பந்துவீச்சில் அன்ரிச் நார்ஜே 11 மற்றும் ரபாடா 10 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். கேசவ் மகராஜ் 9, ஷம்சி 8 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

    உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதி வரை முன்னேறும் தென் ஆப்பிரிக்கா அணி இந்த முறை இறுதிப்போட்டிக்கு சென்று சாதித்துக் காட்டவேண்டும் என்ற எழுச்சியுடன் உள்ளது.

    இதேபோல், ஆப்கானிஸ்தான் அணி இந்த முறை வலுவான அணிகளை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

    ஆப்கானிஸ்தான் அணி லீக் சுற்றில் உகாண்டா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா அணிகளையும், சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா, வங்காளதேசத்தையும் வீழ்த்தி உள்ளது.

    ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது.

    பேட்டிங்கில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 281 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். மற்றொரு தொடக்க வீரர் இப்ராஹிம் சட்ரான் 229 ரன் அடித்து 3-வது இடத்தில் உள்ளர்.

    பவுலிங்கில் ஃபசல்ஹக் பரூக்கி 7 போட்டியில் 16 விக்கெட் வீ்ழ்த்தி முதலிடத்தில் நீடிக்கிறார். கேப்டன் ரஷித் கான் 14 விக்கெட் எடுத்ததுடன், கடைசி கட்டங்களில் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்க்கிறார். நவீன் உல் ஹக் 13 விக்கெட் எடுத்துள்ளார்.

    எனவே இம்முறை ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    இரு அணிகளும் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைய கடுமையாகப் போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    • வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் குல்பாடின் நைப் காயமடைந்தது போல் அப்படியே மைதானத்தில் விழுந்தார்.
    • இதனை பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

    கிங்ஸ்டவுன்:

    நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

    முன்னதாக இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் மழை அவ்வப்போது வந்து ஆப்கானிஸ்தானுக்கு சோதனை கொடுத்தது. குறிப்பாக 12-வது ஓவர் வீசிக் கொண்டிருக்கும்போது மழை வருவது போல் தெரிந்தது. அப்போது டிஎல்எஸ் விதிமுறைப்படி வங்காளதேசத்தை விட ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. அதன் காரணமாக பெவிலியனில் இருந்த ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட், எதையாவது செய்து போட்டியை கொஞ்சம் மெதுவாக்குங்கள் என்று சைகையில் ஆலோசனை வழங்கினார்.

    அதை முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டு பார்த்த ஆப்கானிஸ்தான் வீரர் குல்பாடின் நைப் உடனடியாக தம்முடைய தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு காயமடைந்தது போல் அப்படியே மைதானத்தில் விழுந்தார். அதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி மருத்துவ குழுவினர் அவரை சோதித்ததால் சில நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது.

    அதனை தொடர்ந்து அடுத்த ஒரு ஓவர் இடைவெளியில் மீண்டும் களத்திற்கு வந்து 2 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். மேலும் வெற்றியை கொண்டாட குல்பாடின் நைப் முதல் ஆளாக ஓடி வந்தார்.

    குல்பாடின் நைபின் இந்த செயலை பலரும் கிண்டல் செய்து வந்த நிலையில், அந்த அணியின் வீரரான நவீன் உல் ஹக் இன்ஸ்டாகிராமில் கிண்டாலாக ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

    அதில் மன்னிக்கவும் நைப், ஆனால் இதை பதிவிட வேண்டியிருந்தது. அந்த வீடியோவில் போட்டியின் போது நைப் காயத்துடன் இருப்பதாகவும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெரும் போது சிரித்தபடி வேகமாக ஓடியதும் இதனை ஐசிசி பின் தொடர்ந்து வருவது போலவும் இருந்தது. இந்த வீடியோ பதிவுக்கு அந்த அணியின் வீரர்கள் பலர் சிரித்தபடி கமெண்ட் செய்துள்ளனர்.

    முக்கியமாக நைப், நண்பரே எனக்கு உடம்பு சரியில்லை. தசைப்பிடிப்பு என அந்த பதிவுக்கு ரிப்ளை கொடுத்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • நடப்பு டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் குர்பாஸ் முதலிடத்தில் உள்ளார்.
    • அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பசுல்லா பரூக்கி முதலிடத்தில் நீடிக்கிறார்.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.

    ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன் உல் ஹக் 4 விக்கெட் வீழ்த்தினர். அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில், நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் முன்னிலையில் உள்ளனர்.

    ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் 7 போட்டிகளில் 281 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இந்த அணியின் பரூக்கு 7 போட்டிகளில் 16 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் நீடிக்கிறார்.

    மேலும் முன்னணி அணியான நியூசிலாந்தை லீக் சுற்றிலும், சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி அசத்தியுள்ளது.

    இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் ஆப்கானிஸ்தான் அணிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கானுக்கு அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அமீர் கான் வீடியோ காலில் வாழ்த்து சொல்லியுள்ளார்.

    ஆப்கானிஸ்தான் இந்த வெற்றி வங்காளதேச மக்களின் இதயத்தை மட்டுமின்றி, ஆஸ்திரேலியா ரசிகர்களின் இதயத்தையும் சுக்குநூறாக நொறுக்கிவிட்டது என்றால் மிகையல்ல.

    டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக முன்னேறியதை அந்த நாட்டு மக்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
    • முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.

    அத்துடன் அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறியது. அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் மற்றும் நவீன் உல் ஹக் 4 விக்கெட் வீழ்த்தினர். ரஷித் கான் 4 ஓவரில் 23 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை 4 விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை ரஷித் கான் நிகழ்த்தி உள்ளார்.

    ரஷித் கான் இதுவரை 9 முறை 4 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

    இந்தப் பட்டியலில் வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 8 முறையும், உகாண்டா வீரர் ஹென்றி சென்யாண்டோ 7 முறையும் வீழ்த்தியுள்ளனர்.

    • டி20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.
    • பிரையன் லாரா மட்டுமே நாங்கள் அரையிறுதி வருவோம் என நம்பினார்.

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின.

    அபூட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

    வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரஷித் கான், "அரையிறுதியில் இருப்பது கனவுபோல் இருக்கிறது. நியூசிலாந்தை தோற்கடித்தபோது தான் எங்களுக்கு தன்னம்பிக்கை உருவானது. இதைப் பற்றி விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை

    பிரையன் லாரா மட்டுமே நாங்கள் அரையிறுதி வருவோம் என நம்பினார். இந்த தொடருக்கு முன் அவரைச் சந்தித்தபோது, 'நீங்கள் சொன்னதை நாங்கள் நிச்சயம் காப்பாற்றுவோம். உங்களுக்கு தலைகுனிவை கொண்டுவர மாட்டோம்' என்றேன். தற்போது அதை நாங்கள் சரி என நிரூபித்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கானுக்கு வீடியோ காலில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் வாழ்த்து சொல்லியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வுசெய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது.

    அடுத்து களமிறங்கிய வங்காளதேச அணி 17.5 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு அரையிறுதிக்கு முன்னேறியது.

    ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன் உல் ஹக் 4 விக்கெட் வீழ்த்தினர். நாளை நடைபெறும் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில், வெற்றிக்குப் பிறகு கேப்டன் ரஷித் கான் கூறியதாவது:

    அரையிறுதியில் இருப்பது கனவுபோல் இருக்கிறது. நியூசிலாந்தை தோற்கடித்தபோது தான் எங்களுக்கு தன்னம்பிக்கை உருவானது. இதைப் பற்றி விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை.

    பிரையன் லாரா மட்டுமே நாங்கள் அரையிறுதி வருவோம் என நம்பினார். இந்த தொடருக்கு முன் அவரைச் சந்தித்தபோது, 'நீங்கள் சொன்னதை நாங்கள் நிச்சயம் காப்பாற்றுவோம். உங்களுக்கு தலைகுனிவை கொண்டுவர மாட்டோம்' என்றேன். தற்போது அதை நாங்கள் சரி என நிரூபித்துள்ளோம்.

    மழையை நம்பாமல் 100 சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணமாக இருந்தது. டி20 கிரிக்கெட்டில் எங்கள் அணியில் சிறந்த அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பவுலிங்கில் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டில் திறமை இருந்தால் சாதிக்க முடியும். மனதளவில் நாங்கள் தயாராகவே இருந்தோம்.

    இந்த வெற்றி எங்கள் நாட்டில் மிகப்பெரிய கொண்டாட்டத்தை உண்டாக்கும். தற்போது அரையிறுதியில் தெளிவான மனதுடன் விளையாடுவோம் என தெரிவித்தார்.

    • முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
    • இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

    டி20 உலகக் கோப்பை தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது, இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

    ஜூன் 27 ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

    அதே நாளில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

    இந்தியா - இங்கிலாந்து போட்டி நடைபெறும் கயானா மைதானத்தில் போட்டி நடைபெறும் நாளன்று மழை பெய்ய 88% வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    ஒருவேளை இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள 2வது அரையிறுதி போட்டியில், மழை குறுக்கிட்டு ஆட்டம் முழுவதுமாக தடைப்பட்டு ரத்தானால் புள்ளிப் பட்டியலில் முதலாவதாக இருக்கும் இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்போட்டிக்கு ரிசர்வ் டே இல்லாததால் இந்த விதி கடைப்பிடிக்கப்படுகிறது. 

    • வங்காளதேசத்தை வீழ்த்தியதன் மூலம் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
    • ஆப்கானிஸ்தான் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    டி20 உலகக் கோப்பை போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியின் முடிவை பொறுத்து 3 அணிகளில் (வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்ற நிலையில் ஆட்டம் நடைபெற்றது.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி ஆப்கானிஸ்தான் அணி சாதனை படைத்துள்ளது.

    இதனை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியதை கண்ட அந்த நாட்டு ரசிகர்கள் நடனமாடி மகிழ்ச்சியை தெரிவித்தனர். 

    ஆப்கானிஸ்தானில் உள்ள நங்க்ரஹர் என்ற இடத்தில் தெரு முழுவதும் மக்கள் கூட்டம் அலை கடல் போல் திரண்டு வந்த இந்த வெற்றியை கொண்டாடி தீர்த்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மேலும் ஒருநாள் உலகக் கோப்பையில் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அதற்கு பழிவாங்கும் வகையில் தற்போது டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது என ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    • வங்காளதேச அணியில் லிட்டன் தாஸ் அரை சதம் விளாசினார்.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன் உல் ஹக் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தொடக்க வீரர்களின் மந்தமான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது.

    வங்காளதேசம் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் 12.4 ஓவரில் இலக்கை அடைய வேண்டும். அப்படி இல்லையென்றால் வெற்றி பெற்றால் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது.

    இந்த நிலையில் களமிறங்கிய வங்காளதேச அணி தொடக்க முதலே விக்கெட்டுகளை இழந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியால் 12 ஓவரில் இலக்கை அடைய முடியவில்லை. இதனால் அந்த அணி வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறாது என்ற நிலை ஏற்பட்டது.

    ஆனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஒரு முனையில் லிட்டன் தாஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். மறுமுனையில் இருந்த வீரர்கள் விக்கெட்டுகளை இழந்ததால் லிட்டன் தாஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. கடைசி வரை போராடிய லிட்டன் தாஸ் 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் வங்காளதேச அணி 17.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு அரையிறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி கனவு கலைந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன் உல் ஹக் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அரையிறுதி ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு நடைபெறும்.

    • வங்காளதேசம் அணியால் வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் அடித்துள்ளது. இதனால் வங்காளதேசம் வெற்றி பெற 116 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வங்காளதேசம் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் 12.4 ஓவரில் இலக்கை அடைய வேண்டும். அப்படி இல்லையென்றால் வெற்றி பெற்றால் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஆனால் கைவசம் வங்காளதேசம் அணி 3 விக்கெட்டுகள் உள்ளது.

    இந்த மழை காரணமாக அடிக்கடி நிறுத்தப்பட்டு நிறுத்தப்பட்டு விளையாடி வருகிறது. மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.
    • ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால், வங்காளதேசம் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியது. ஏற்கனவே இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா என மூன்று அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி விட்டன. அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் அடுத்த அணி எது என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.

    இந்த நிலையில், இன்று காலை நடைபெறும் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதும் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறப் போகும் நான்காவது அணி எது என்ற முடிவு தெரிந்துவிடும். எனினும், இந்த போட்டியின் முடிவில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.

    ஆப்கானிஸ்தான் வெற்றியால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறுவதோடு, ஆஸ்திரேலியா அணி தொடரில் இருந்து வெளியேறிவிடும். இதேபோன்று வங்காளதேசம் அணி 13 ஓவர்களுக்குள் வெற்றி இலக்கை துரத்தி ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால், வங்காளதேசம் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

    ஒருவேளை வங்காளதேசம் அணி 13 ஓவர்களை கடந்து வெற்றி பெறும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேறும். 

    ×