search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94716"

    • ஆற்றின் இரு கரைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கிராமங்களில் புகுந்து விடுகிறது.
    • இரு கரைகளிலும் காங்கிரட் சுவர் அமைக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொது மக்கள் சீர்காழி பொதுத்துறை அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் கூறியிப்பதாவது:

    சீர்காழி அருகே சட்டநாதபுரம் உப்பனாற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் அதிக அளவில் வரும்பொ ழுது பனமங்கலத்திலிருந்து சூரக்காடு வரை ஆற்றின் இரு கரைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கிராமங்களிலும் நடவு செய்த வயல்க ளிலும் புகுந்து விடுகிறது.

    இதனால் பொதுமக்கள் விவசாயிகள் ஆண்டு தோறும் பாதிக்கப்ப டுகின்றனர்.

    இதனை தடுக்கும் வகையில் இரு கரைகளையும் பலப்படுத்தி கான்கிரீட் தளம் சிமெண்ட் பிளாக்குகள் அமைத்து கரையை பலப்படுத்தினால் ஆண்டு தோறும் கரைகள் உடைந்து விவசாயிகள், பொதுமக்க ளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம் மேலும் கரைகளில் டிராக்டர் அறுவடை இயந்திரங்கள் போன்ற வாகனங்கள் சென்றுவர ஏதுவாக இருக்கும் இதனால் விவசாயிகள் பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.

    எனவே பொதுமக்கள் விவசாயிகள் நலன் கருதி உப்பனாற்றின் இரு கரைகளிலும் காங்கிரட் சுவர் அல்லது சிமெண்ட் பிளாக்குகள் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருந்துறை, ஈரோடு தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க ஒரு தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர் முத்துசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை.

    இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது அவ்வாறு அமைத்தால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் என்று விவசாயிகளின் ஒரு தரப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    அதன் ஒரு பகுதியாக கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிட கோரி பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ்குமார், தாசில்தார் பூபதி ஆகியோர் விவசாயிகளுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இந்நிலையில் நேற்று காலை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் சுந்தரராசு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆனால் இந்த பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதனைத் தொடர்ந்து பெருந்துறை ஒன்றியம் திருவாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கூரபாளையம் பிரிவு ஈரோடு ரோட்டில் ஏராளமான விவசாயிகள் கீழ்பாவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

    இந்த போராட்டத்துக்கு கீழ்பவானி பாசன பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற விவசாயிகள் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் நிலத்தடி நீர் மட்டம் உயராது. அதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்று கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். மேலும் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர்.

    நேற்று மாலை தொடங்கிய இந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது. இன்றும் ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருந்துறை, ஈரோடு தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ரூ.57,927 மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார்.
    • உளுந்து பயிர்களுக்கு டிரோன் மூலம் பூச்சிகொல்லி மருந்து தெளிப்பதை ஆய்வு செய்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வேளாண் பொறியியல், வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கலெக்டர் சாருஸ்ரீ வயல்வெளி ஆய்வு மேற்கொ ண்டு விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார்.

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மழவராயநல்லூர் பகுதியில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் பண்ணை குட்டை அமைக்கப்பட்டு ள்ளதையும், நெடுவாக்கோ ட்டை பகுதியில் விதைப்பண்ணை வயல் திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் (வல்லுநர் விதை) பயிரிடப்பட்டு உள்ளதையும், நீடாமங்கலம் வட்டம், முக்குளம் சாத்தனூர் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ரூ.57927 மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க ப்பட்டு உள்ளதையும், நீடாமங்கலம் வட்டம், செருமங்கலம் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் நெல் குறுவை 2023-24 திட்டத்தின் கீழ் 20 சென்ட் பரப்பளவில் (திருப்பதி சாரம் 5 ரகம்) எந்திர நடவு பாய் நாற்றாங்கால் அமைக்கப்பட்டு வருவதையும், எடகீழையூர் பகுதியில் உளுந்து விதைப் பண்ணை வயல் 2023-24 திட்டத்தின் கீழ் 1 ஏக்கர் பரப்பளவில் (வம்பன் 10) பயிரிடப்பட்டுள்ளதையும், உளுந்து பயிர்களுக்கு டிரோன் மூலம் பூச்சிகொல்லி மருந்து தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் சாரூஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முன்னதாக, மன்னார்குடி வட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பேட்டரி தெளிப்பான், தார்பாய், பண்ணைக்கருவிகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களும், ஒரு பயனாளிக்கு உழவு செய்யும் எந்திரத்தையும் கலெக்டர் வழங்கினார்.

    ஆய்வின்போது, செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை ரேணுகாந்தன், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் வெங்கட்ராமன், வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) லெட்சுமிகாந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஏழுமலை, தாசில்தார் கார்த்தி, வேளாண்மை உதவி இயக்குநர்கள் (மன்னார்குடி) இளம்பூரணார், விஜயகுமார் (நீடாமங்கலம்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • விவசாயி ஒருவருக்கு தனது விளைநிலத்தில் 30 கேரட் வைரம் கிடைத்தது.
    • வைரம் கிடைக்கும் என்ற ஆசையால் விவசாயிகள் நிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, துக்கிலி, மடிகேரா, பெகதிராய், பேராபலி, மஹாநந்தி மற்றும் மஹாதேவபுரம் கிராமப்பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

    இந்த பகுதியில் உள்ள வயல் வெளிகளில் மழை பெய்த பின்னர் வைரக்கற்கள் கிடைத்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தில் கிடைத்த ரூ.60 லட்சம் மதிப்பிலான வைரத்தை உள்ளூர் வணிகரிடம் நல்ல தொகைக்கு விற்பனை செய்துள்ளார்.

    அதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கர்னூல் மாவட்ட விவசாயிகள் 2 விலை உயர்ந்த வைரக் கற்களை கண்டுபிடித்து நல்ல தொகைக்கு விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் விவசாயி ஒருவருக்கு தனது விளைநிலத்தில் 30 கேரட் வைரம் கிடைத்தது. அதனை அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வைர வியாபாரியிடம் ரூ.2 கோடிக்கு விற்று ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறி உள்ளார்.

    இதையடுத்து அந்த பகுதியில் வானில் இருந்து வைரக்கற்கள் விழுவதாக வதந்தி பரவியது. வைரம் கிடைக்கும் என்ற ஆசையால் விவசாயிகள் நிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    கர்னூல் மாவட்ட விவசாயிகள் அன்றாட வேலைகளை ஒதுக்கி விட்டு இரவு பகலாக குடும்பத்தினருடன் வயல் வெளிகளில் காத்துகிடக்கின்றனர்.

    அங்கு தற்காலிக கூடாரங்கள் அமைத்து வைரக்கற்கள் கிடைக்கும் என காத்திருக்கின்றனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் வைரம் கிடைப்பதாக கூறப்படும் கிராமங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
    • விவசாயிகள் உழவு பணியை மேற்கொள்ள இந்த மழை பயனுள்ளதாக இருக்கும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு மாவட்டங்களில் அக்கினி நட்சத்திரம் நிறைவடைந்தும் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் வெயில் வாட்டி வதைத்து வந்தது.

    இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக்கி வந்தனர்.

    இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு திடீர் கனமழை பெய்தது.

    நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட திட்டச்சேரி, திருமருகல், நாகூர், வெளிப்பாளையம், புத்தூர், பரவை, வேளாங்கண்ணி, திருப்பூண்டி, மேலப்பிடாகை, திருவாய்மூர், எட்டுக்குடி, ஈசனூர், வாழக்க ரை, கீழையூர்,சாட்டியக்குடி, கீழ்வேளூர், சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதனால் பல்வேறு நகர் பகுதிகளில் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதோடு பெரும்பாலான வாகன ஓட்டிகள் நனைந்த படி பயணம் மேற்கொண்ட னர்.

    மேலும் இந்த திடீர் மழை வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேட்டூர் அணையில் ஜூன் 12 தண்ணீர் திறந்து விடப்பட உள்ள நிலையில், குறுவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் உழவு பணியை மேற்கொள்ள இந்த திடீர் மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரி வித்துள்ளனர்.

    • மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது.
    • பன்றிகளை விவசாயிகள் இரவு நேரத்தில் துரத்தி சென்றால் விவசாயிகளையே திருப்பித் தாக்க வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கந்தாடு, புதுப்பாக்கம் ,நடுக்குப்பம் ,அசப்போர், ஊரணி, ராய நல்லூர், வட அகரம், காக்காபாளையம் , திருக்கனூர், வண்டி பாளையம், காணி மேடு உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் காடுகளை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது . மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் வனத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில் தைல மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் வளர்ந்து அடர்த்தியான காடுகளாக உள்ளது .இதுபோல் இங்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் ஏரிகள், ஓடைகள் குட்டைகள் உள்ளது.

    இப்பகுதிகளில் அடர்ந்த சீமை கருவேல மரங்கள் இருக்கின்றது. இங்குள்ள காடுகள் மற்றும் கருவேல மரங்கள் இருக்கும் இடத்தில் காட்டுப்பன்றிகள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றது. இந்த காட்டுப் பன்றிகள் இரவு நேரங்களில் விவசாயிகள் பயிர் செய்துள்ள நெல் ,மணிலா, தர்பூசணி மரவள்ளி போன்ற பயிர்களை அழித்து நாசப்படுத்துகின்றது. இதுபோல் விவசாய பயிர்களை அழித்து நாசப்படுத்தும் காட்டுப் பன்றிகளை விவசாயிகள் இரவு நேரத்தில் துரத்தி சென்றால் விவசாயி களையே திருப்பித் தாக்க வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து வனத்துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சிய போக்காக இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். தற்போது காடுகளை ஒட்டி உள்ள விவசாய பயிர்களை அழிக்கும் காட்டு விலங்குகளை தடுக்க அரசு சார்பில் ஒருவித ரசாயன மருந்தை மானிய விலையில் கொடுக்கின்றனர்.

    இந்த ரசாயன மருந்தை வயல்வெளியில் தெளித்து விட்டால் வனவிலங்குகள் விவசாய பயிர்களை அழிக்காது. இது போன்ற ரசாயன மருந்துகளை பல இடங்களில் வேளாண் துறை அதிகாரிகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர். எனவே மரக்காணம் மட்டும் சுற்றுப்புற ப் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு காட்டுப்பன்றிகளில் இருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க இது போன்ற ரசாயன மருந்துகளை உடனடியாக வழங்கி விவசாயி களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    • கடந்த ஆண்டு ஒரு டன் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்றது.
    • ஓராண்டு பயிரான குச்சிக்கிழங்கு ஒரு டன் 15 ஆயிரம் ரூபாய் விலை போகிறது.

    திருப்பூர் :

    கடந்த ஆடி பட்டத்தில் சாகுபடி செய்த மரவள்ளி தற்போது அறுவடை துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஒரு டன் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. ஆனால், பல விவசாயிகள் மரவள்ளி சாகுபடி செய்ய விரும்பிய போதும் விதைக்கரணைக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக சாகுபடி பரப்பு பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. தற்பொழுது மரவள்ளிக்கு நல்ல விலை கிடைப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து திருப்பூர் விவசாயிகள் கூறியதாவது:- ஓராண்டு பயிரான குச்சிக்கிழங்கு ஒரு டன் 15 ஆயிரம் ரூபாய் விலை போகிறது. ஆள் தட்டுப்பாட்டை சமாளிக்க மரவள்ளி சாகுபடி செய்கிறோம். நன்றாக விளைந்தால் ஒரு ஏக்கருக்கு 20 டன் வரை மகசூல் கிடைக்கும்.சராசரியாக ஏக்கருக்கு 10 டன் கிடைத்தால் கூட லாபம் தான். சிப்ஸ் தயாரிப்பாளர்கள் பெருமளவில் கொள்முதல் செய்கின்றனர். தக்காளி, கத்தரி போன்ற காய்கறிகள் விலை வீழ்ச்சியை சந்தித்த நிலையில் மரவள்ளிக்கு நல்ல விலை கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஆண்டு குச்சிக்கிழங்கு சாகுபடி அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விதை வெங்காயத்தை பல விவசாயிகள் கொள்முதல் செய்வதால் அதன் தேவை அதிகரித்துள்ளது.
    • வைகாசி பட்டத்தில் நடவு செய்யும் சின்ன வெங்காயத்தை அதிக நாட்கள் இருப்பு வைக்க முடியும்.

    உடுமலை :

    தற்போது வைகாசி பட்டம் துவங்கியுள்ளது. குளிர்ந்த காற்று, அளவான வெப்பநிலை காணப்படுவதால் இந்த சீசனில் வெங்காயம் ஆரோக்கியமாக வளரும். கூடுதல் மகசூல் கிடைக்கும். இதை எதிர்பார்த்து விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    விதை வெங்காயத்தை பல விவசாயிகள் கொள்முதல் செய்வதால் அதன் தேவை அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்துவிலை 55 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஓராண்டு பயிர்களான வாழை, மஞ்சள், மரவள்ளி போன்றவை இந்த சீசனில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கூடுதல் வருவாய் ஈட்டவும், முதன்மை பயிரை பாதிக்காத வகையில் சின்ன வெங்காயம் இருப்பதாலும் விவசாயிகள் அதை ஊடுபயிராக சாகுபடி செய்கின்றனர்.விவசாயிகள் கூறுகையில், வைகாசி பட்டத்தில் நடவு செய்யும் சின்ன வெங்காயத்தை அதிக நாட்கள் இருப்பு வைக்க முடியும். ஐப்பசி, கார்த்திகை மாதத்தில் அறுவடை இருக்காது. அந்த சீசனில் அதிக விலை கிடைக்கும்.

    இந்த ஆண்டு மழை அதிகம் பொழிந்ததால் கிணறு, ஆழ்குழாய் கிணறுகளில் போதுமான நீர் வளம் உள்ளது. இந்த சீசனில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. இது சின்ன வெங்காய சாகுபடிக்கு சாதகமாக அமைந்துள்ளது என்றனர்.

    • நாடு முழுவதும் 7 கோடி டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
    • முதல் கட்டமாக நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    இந்திய உணவுக்கழகம் விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்கிறது. தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் நெல்கொள்முதல் செய்கிறது. பல்வேறு இடங்களில் போதிய கிடங்கு வசதி இல்லாததால் தானியங்கள் திறந்த வெளியில் வைக்கப்படுகின்றன.

    இதனால் மழையில் நனைந்து வீணாகி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. நாடு முழுவதும் 33 கோடி டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்து வரும் நிலையில் அதனை சேமித்து வைக்க போதிய கிடங்கு வசதி இல்லை.

    இதனால் தானியங்கள் வீணாகி வருகின்றன. இதனை தடுக்க மத்திய கூட்டுறவு அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் 7 கோடி டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

    வேளாண் அமைச்சகம் மற்றும் உணவு, பொது வினியோக அமைச்சகம் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு அமைச்சகம் சார்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    முதல் கட்டமாக நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் ஒன்றாக தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக 1000 டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்கு கட்டப்பட உள்ளது.

    இதற்காக 4 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு 1 ஏக்கரில் கிடங்கு கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனமான நாப்கான் ஆய்வு செய்துள்ளது. விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்ததும் ரூ.2 கோடி செலவில் சாலைப் போக்குவரத்து உள்பட அனைத்து வசதிகளுடன் கூடிய கிடங்கு கட்டப்படும். இங்கு போடி மற்றும் சில்லமரத்துப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் உணவு தானியங்கள் இருப்பு வைக்கப்படும்.

    ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் வாயிலாக கிடங்கு அமைக்கப்படுவதால் நாடு முழுவதும் பரவலாக சேமிப்பு வசதிகள் கிடைக்கும். விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள் உள்ளூரிலேயே உடனுக்குடன் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படும். தானியங்கள் வீணாவது தடுக்கப்படுவதுடன் விவசாயிகளுக்கு போக்கு வரத்து செலவு குறையும்.

    மேலும் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கல்குவாரி முறைகேடு குறித்து கனிமவளத்துறையினரிடம் புகார் தெரிவித்து வந்தனர்.
    • வள்ளலை பணி இடைநீக்கம் செய்து இதற்கு முன்பு இருந்த கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி விவசாயிகள் அனுமதியின்றி இயங்கும் கல்குவாரி முறைகேடு குறித்து கனிமவளத்துறையினரிடம் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததன் காரணமாக திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை இணை இயக்குனராக இருந்த வள்ளலை பணி இடைநீக்கம் செய்து இதற்கு முன்பு இருந்த கலெக்டர் வினீத் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை ரத்து செய்த கனிமவளத்துறை இயக்குனர் மீண்டும் வள்ளலுக்கு அதே இடத்தில் பணி நியமனம் வழங்கி உத்தரவிட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஊழலுக்கு வழிவகுக்கும் கனிமவளத்துறை இயக்குனர் மற்றும் அமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துவதாக கூறி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இன்று திரண்டனர். மேலும் அதிகாரி வள்ளல் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விவசாயிகளை கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். அப்போது விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    • கடந்த சில மாதங்களாக பவானி ஆற்றில் கழிவுகள், மற்றும் ஆலை மாசுகள் அதிகளவில் வருவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
    • இன்று பவானிசாகரில் ஆலை கழிவுகள் மற்றும் மாசு கலப்பதை தடுக்க கோரி பவானிசாகர் பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானி சாகர் பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே பவானி சாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலம் ஏராளமான குடிநீர்தி ட்டப்பணிகளும், விவசாய நிலங்கள் பாசன வசதியும் பெற்று வருகின்றன.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பவானி ஆற்றில் கழிவுகள், மற்றும் ஆலை மாசுகள் அதிகளவில் வருவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதுதொடர்பாக மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் பவானி சாகர்அணை நீர்தேக்க பகுதிக்கு வந்து ஆய்வுக்காக தண்ணீர் மாதிரியை எடுத்து சென்றனர்.

    இந்நிலையில் பவானியை காப்போம் என்ற இயக்கம் சார்பில் இன்று பவானிசாகரில் ஆலை கழிவுகள் மற்றும் மாசு கலப்பதை தடுக்க கோரி பவானிசாகர் பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பவானிசாகர், சத்திய மங்கலம், ராஜன்நகர், பண்ணாரி, அய்யன் சாலை, புதுபீர்கடவு, கொத்தமங்கலம், படுகுதுறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள், பொது மக்கள், பூ மார்க்கெட் விவசாயிகள் சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள், டாக்டர்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்தியமங்கலம் தாசில்தாரிடம் மனு கொடுக்க உள்ளனர்.

    • மின்கம்பங்கள் சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளது.
    • விவசாயிகள் வயலுக்கு சென்றால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் வீசிய சூறை காற்றால் சின்னகரம் என்ற கிராமத்தில் வயல்வெளியின் நடுவே உள்ள மின்கம்பங்கள் சாய்ந்தன.

    அதனைத் தொடர்ந்து உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை மின்கம்பங்கள் சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் இரவு நேரங்களில் விவசாயிகள் வயலுக்கு சென்றால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

    எனவே, சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்படுமா என விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    ×