search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய்கள்"

    சீனாவில் 7.50 கோடி தெருநாய்கள் மற்றும் பூனைகள் இருப்பதாகவும், அமெரிக்காவில் 4.80 கோடி, ரஷியா 41 லட்சம் தெருநாய்கள் மற்றும் பூனைகள் இருப்பதாகவும் புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் வீடற்ற செல்லப் பிராணிகளின் நிலை பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் இந்தியாவில் 6.20 கோடி தெருநாய்கள் இருப்பதும், 91 லட்சம் பூனைகள் ஆதரவற்றநிலையில் தெருவில் விடப்பட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும் 88 லட்சம் தெருநாய்களும், பூனைகளும் காப்பகங்களில் பராமரிக்கப்படுகிறது.

    சீனாவில் 7.50 கோடி தெருநாய்கள் மற்றும் பூனைகள் இருப்பதாகவும், அமெரிக்காவில் 4.80 கோடி, ரஷியா 41 லட்சம் தெருநாய்கள் மற்றும் பூனைகள் இருப்பதாகவும் அந்த புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


    செல்ல பிராணியான நாய்களின் காலில் ‘ஷு’ அணிந்து கோடை வெப்பத்தில் இருந்து காப்பற்றும் சுவிட்சர்லாந்து போலீசாரின் முயற்சி சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.
    ஜூரிச்:

    ஐரோப்பிய நாடுகளில் தற்போது காற்றில் வெப்ப அலைகள் வீசுகிறது. இதனால் சுவிட்சர்லாந்தில் 1864-ம் ஆண்டுக்கு பிறகு அதிக அளவில் கோடை கால வெப்பம் பதிவாகியுள்ளது.

    எனவே வெப்ப அலைகளில் இருந்து தங்களது செல்ல பிராணியான நாய்களை காக்க ‘ஹாட் டாக் கேம்பைன்’ எனும் விழிப்புணர்வு பிரசாரத்தை ஜூரிச் நகர போலீசார் தொடங்கி உள்ளனர்.

    நாய்களை வெளியே அழைத்து செல்வதற்கு முன்பு வெப்ப அளவு எவ்வளவு என்பதை அறிய தங்களின் கைகளை 5 நொடிகள் தொடர்ந்து நிலத்தில் வைத்து பரிசோதியுங்கள். வெப்ப அலைகளில் இருந்து நாய்களை காக்க அவற்றுக்கும் ‘ஷு’ அணியுங்கள்.

    சாலைகளில் உள்ள நடைபாதைகள் மிகவும் சூடாக இருக்கும் எனவே உங்கள் 4 கால் நண்பர்களை காக்க இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் பலரும் பாராட்டியுள்ளார்.

    தலைவாசல் அருகே நாய்கள் கடித்ததில் 13 ஆடுகள் பலியான சம்பவத்தால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைந்து உள்ளனர்.
    தலைவாசல்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை புதூரைச் சேர்ந்தவர் முகமது சுல்தான். விவசாயி. இவர் தனது விவசாய தோட்டத்தில் கொட்டகை போட்டு அதில் 30 ஆடுகளை வளர்த்து வந்தார்.

    நேற்று அதிகாலை முகமது சுல்தானின் மனைவி நூர்ஜகான் ஆட்டு கொட்டகைக்கு சென்றார். அப்போது அங்கு ஆடுகள் செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி கணவருக்கு தகவல் கொடுத்தார். முகமது சுல்தான் வந்து பார்த்தபோது 13 ஆடுகள் செத்து கிடந்தன.

    இதுகுறித்து முகமது சுல்தான் கிராம நிர்வாக அலுவலர் ரகுபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து காட்டுக்கோட்டை கால்நடை உதவி மருத்துவர் மணிவேல் அங்கு வந்து பரிசோதனை செய்தார். பின்னர் ஆட்டின் உடல்கள் புதைக்கப்பட்டன. நாய்கள் கடித்ததில் ஆடுகள் செத்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுபற்றி அந்த கிராம மக்கள் கூறும்போது, காட்டுக்கோட்டை சுடுகாட்டில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதேபோல் கறிக்கடை பகுதிகளிலும் நாய்கள் சுற்றுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில நாட்களில் இதே ஊரைச் சேர்ந்த சிலருடைய 100 கோழிகள், 30 ஆடுகள், ஒரு கன்றுகுட்டி ஆகியவற்றை நாய்கள் கடித்துக் கொன்றன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் அச்சமடைந்து உள்ளனர். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும், என்றனர். 
    சிவகாசியில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தையை நாய்கள் கடித்து குதறியதை தொடர்ந்து குழந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    சிவகாசி:

    சிவகாசி-விஸ்வநத்தம் ரோட்டில் உள்ள அரசன் காம்பவுண்டில் வசித்து வருபவர் வெங்கடேசன். அச்சக தொழிலாளியான இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், ஜான் (வயது 4), ஜாய்தெரசா (2) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். மாலையில் குழந்தை ஜாய்தெரசா தனது வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அதே பகுதியில் குப்பை கொட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தில் கழிவுப் பொருட்களை தின்று கொண்டிருந்த நாய்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு குரைத்த படி சிதறி ஓடி உள்ளன.

    அப்போது வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை நாய்கள் சுற்றி நின்று கடித்து குதறியுள்ளன. இதில் ஜாய்தெரசாவுக்கு காது, தலை, கழுத்து பகுதிகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து குழந்தையை மீட்டு சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சிவகாசியில் பல இடங்களில 500-க்கும் மேற்பட்ட நாய்கள் தற்போது உள்ளன. பல இடங்களில் பள்ளி குழந்தைகளையும், முதியவர்களையும் நாய்கள் துரத்தி கடிக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் குப்பை கொட்டப்படும் இடத்தில் கோழி மற்றும் மீன் கழிவுகளை சிலர் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கிறார்கள். இதனால் குப்பை கொட்டும் பகுதிக்கு வரும் நாய்கள் அதே பகுதியில் சுற்றி திரிந்து பொதுமக்களை கடித்துவிடுகிறது. இதில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. 
    சுவாமிமலை அருகே விவசாயி கரும்பு தோட்டத்துக்கு தண்ணீர் பாய்க்க சென்ற போது நாய்கள் துரத்தி வந்த 5 வயது புள்ளிமானை பொதுமக்கள் உதவியுடன் மீட்டார்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மேலாத்துகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். விவசாயி. இவர் இன்று காலை தனது கரும்பு தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது ஒரு புள்ளிமானை நாய்கள் துரத்தி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக நாய்களை விரட்டி விட்டு அப்பகுதி மக்கள் உதவியுடன் மானை மீட்டு அங்குள்ள மாரியம்மன் கோவில் வாசலில் கட்டி வைத்தார். பின்னர் அவர் இதுபற்றி சுவாமிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த இன்ஸ் பெக்டர் ரேகாராணி மானை பார்வையிட்டார். அவர் வனத்துறைக்கு கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த வனக்காவலர்கள் மானை மீட்டு கும்பகோணம் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    பின்னர் அவர்கள் கூறுகையில், இந்த மான் கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருந்து வழி தவறி வந்திருக்கலாம். இது 5 வயது உடைய ஆண் மான் ஆகும். சிகிச்சைக்கு பின் இந்த மானை நாங்கள் வேதாரண்யம் வனத்துறையிடம் ஒப்படைப்போம். அவர்கள் அதனை அப்பகுதி வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவர் என்று தெரிவித்தனர்.

    அயனாவரத்தில் ஆசையாய் வளர்த்த முதலாளியை விசுவாசத்துடன் செயல்பட்டு நாய்கள் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
    அம்பத்தூர்:

    அயனாவரம் கே.கே.நகரை சேர்ந்த கார்த்திக் என்ற ரவுடியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற வாலிபர் சஞ்சீவ் குமார் (21) கைது செய்யப்பட்டார்.

    இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி கத்தியுடன் பதுங்கி இருந்த சஞ்சீவ் குமாரை மடக்கி பிடித்து கைது செய்தார். போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் கார்த்திக்கை, சஞ்சீவ்குமார் அரிவாளால் வெட்டிய போது அவரது வளர்ப்பு நாய்களே உயிரை காப்பாற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

    அயனாவரம் கே.கே.நகரில் உள்ள தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த போதுதான் கார்த்திக்கை சஞ்சீவ்குமார், தனது கூட்டாளி ஒருவருடன் வந்து கொலை செய்ய முயற்சி செய்தான். அப்போது கார்த்திக்கை இருவரும் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனை கார்த்திக்கின் வீட்டில் இருந்த வளர்ப்பு நாய்கள் பார்த்துவிட்டன. உடனடியாக அங்கிருந்த 2 நாய்களும் சஞ்சீவ் குமாரையும், அவனது கூட்டாளியையும் கடிப்பதற்காக ஓடின. இதனால் பயந்துபோன இருவரும் அங்கிருந்து தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

    நாய்கள் மட்டும் கவனிக்காமல் இருந்திருந்தால் கார்த்திக் உயிர் தப்பி இருக்க மாட்டார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். ஆசையாய் வளர்த்த முதலாளியை விசுவாசத்துடன் செயல்பட்டு நாய்கள் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. #Tamilnews
    ×