search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயக்குமார்"

    ஜெயலலிதா திட்டங்களை மூடுவிழா செய்யும் நிலையை உருவாக்கி உள்ளனர் என்று ஜெயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. சார்பில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்ப மனு வினியோகம் நேற்று தொடங்கியது. சென்னை ராயபுரத்தில் விருப்ப மனு வினியோகத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று தொடங்கி வைத்தார். கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு மனுக்களை அவர் வழங்கினார்.

    இதையடுத்து ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விருப்ப மனுக்களை அனைத்து இடங்களிலும் எழுச்சியோடு தொண்டர்கள் வாங்கிச் செல்கிறார்கள். ஜனநாயக ரீதியில் தேர்தல் நடந்தால் நிச்சயமாக அ.தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் மகத்தான வெற்றியை பெறும். நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், பல்வேறு ஜனநாயக விரோத செயல்களை அரங்கேற்றியதால் செயற்கையான வெற்றியை தி.மு.க. பெற்றது. தேர்தல் ஆணையம் நியாயமாக, சுதந்திரமாக, ஜனநாயக ரீதியாக, வெளிப்படை தன்மையோடு நடக்க வேண்டும்.

    இல்லை என்றால் ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையம், நீதிமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். எங்களை பொறுத்தவரை தேர்தலை முழுமையாக எதிர்கொண்டு மகத்தான வெற்றியை பெறுவோம்.

    இதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. தி.மு.க. அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு ஆட்சியும் 7 மாதத்திலே மக்களின் வெறுப்பை சம்பாதித்தது கிடையாது. மக்களிடையே தி.மு.க. ஆட்சி மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியும், வெறுப்பும் எங்களுக்கு வாக்குகளாக மாறும்.

    தி.மு.க., ஆட்சிக்கு வந்து 7 மாதம் ஆகிவிட்டது. என்ன வாக்குறுதியை நிறைவேற்றினார்கள்? மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா திட்டங்கள் எல்லாம் மூடுவிழா செய்யும் நிலையை உருவாக்கி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் கட்சி மாற மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
    சென்னை:

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த வேதா இல்லம் அதிமுகவினருக்கு கோவிலாக இருந்து வருகிறது. கட்சியில் சில கருத்துப்பரிமாற்றம் இருக்கும் அதை பெரிதுபடுத்தி பேச வேண்டாம். 

    வேதா இல்ல விவகாரத்தில் மேல் நடவடிக்கை பற்றி தலைமை முடிவெடுக்கும். உண்மையான அதிமுக தொண்டர்கள் யாரும் கட்சி மாற மாட்டார்கள். வியாபாரிகள் தான் எந்த குளத்தில் தண்ணீர் இருக்கிறது என்பதை பார்த்து கட்சி மாறுவார்கள் என்றார்.


    தமிழக அரசின் இயலாமையை மறைக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறை கூறுகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
    சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு முழுவதும் பெய்த அதி கனமழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. அதில் இருந்து தற்போது வரை சென்னை நகரம் சூரியனை காணவில்லை. மேக மூட்டமாக வானம் காணப்பட்டு தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது.

    இதனால் பெரும்பாலான இடத்தில் வெள்ளம் வடியாத நிலை உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் வெள்ளம் வடியாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மாநகராட்சியை கண்டித்துள்ளது. இதற்கிடையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்மார்ட் சிட்டி திட்டம், மழைநீர் வடிகால் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து கேள்வி எழுப்பியதுடன், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    கோப்புப்படம்

    இந்த நிலையில், அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘‘திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுகிறது. மக்களின் குறைகளை காது கொடுத்து கேட்பதில்லை. தமிழக அரசின் இயலாமையை மறைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை குறை கூறுகிறார்’’ என்றார்.

    நாளை சென்னையில் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    23-ந்தேதிக்குப் பிறகு அரசியலில் மு.க.ஸ்டாலின் பூஜ்ஜியமாகி விடுவார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #LSPolls #MinisterJayakumar

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் தான் 3 தொகுதி எம்.எல்.ஏ.க்களை நீக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். அது முற்றிலும் தவறு. அந்த மாதிரியான நிர்பந்தங்கள் எதுவும் இல்லை. இந்த வி‌ஷயத்தில் பேரவை தலைவரின் அதிகாரத்துக்குள் யாரும் செல்ல முடியாது. அது குறித்து நானும் எந்த கருத்தும் கூற முடியாது.

    கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி ஜெயலலிதாவின் அரசை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும், இந்த கட்சியை அழித்துவிட வேண்டும் என்று தி.மு.க.வும், அதனுடைய ‘பி’ டீம் தினகரனும் கைகோர்த்து பல்வேறு விதமான நடவடிக்கைகளை அரங்கேற்றினார்கள். அது அனைத்தும் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. அவர்களுடைய எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. வருகிற 23-ந் தேதிக்குப் பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலில் பூஜ்ஜியமாகி விடுவார்.

     


    ஜூன் 30-ந்தேதி நாங்கள் ஆட்சி அமைத்து விடுவோம் என்று துரை முருகன் கூறுகிறார். திண்டுக்கல் பெரியசாமி 11 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு வந்ததும் ஆட்சி அமைத்து விடுவோம் என்று கூறுகிறார். இரண்டுமே நடைபெறப்போவதில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி இருக்கும் போதே அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியவில்லை. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. கோட்டை. அதனை இந்த தேர்தலில் மீண்டும் நிரூபிப்போம். வருகிற 23-ந்தேதி அனைவருக்கும் இது தெரியும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார்.

    பின்னர் திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. - அ.ம.மு.க. இடையே தான் போட்டி என தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளாரே என நிருபர்கள் கேட்ட போது ஆட்டத்தில் இல்லாதவர்களை பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? பந்தயத்தில் இல்லாதவர்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவார்கள். உண்மையில் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி என்றார். #LSPolls #MinisterJayakumar

    ஜெயலலிதா மரணம் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆதரவு தெரிவித்தார். #jayalalithaadeath #jayalalithaa #Jayakumar #CVShanmugam
    சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ‘ஜெயலலிதா மரணம் குறித்து, அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்துகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பதில் வருமாறு:-

    அமைச்சர் என்ற முறையில் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்து நல்ல விஷயம் தான். அதனை நான் வரவேற்கிறேன். அந்த கருத்தில் விசாரணைக்கு உட்பட்டு நடத்தவேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார். விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்பது தனி. மாநில அமைப்பு இதனை நடத்தலாம்.

    சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்தை, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் விசாரணை ஆணையம் பரிசீலனைக்கு எடுத்து விசாரிக்கட்டும். அதில் தவறு இல்லை.

    ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தை திசை திருப்பவேண்டும் என்பதற்காக சி.வி.சண்முகம் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது சசிகலா குடும்பம் 75 நாட்கள் ஆஸ்பத்திரியில் 5 நட்சத்திர ஓட்டல் போன்று பல அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, சாப்பிட்டதால் தான் ரூ.1¼ கோடி கட்டணம் வந்தது.

    ஜெயலலிதா சாப்பிட்டது கிடையாது. இதுதான் சட்டத்துறை அமைச்சரின் கருத்து. அமைச்சர்களுக்குள் யார் பிளவு ஏற்படுத்த முயன்றாலும் நடக்காது. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.



    விசாரணை ஆணையம் அழைத்து கேட்டாலும், ஆஞ்சியோ செய்திருந்தால் ஜெயலலிதா பிழைத்திருப்பார் என்ற கருத்தை சி.வி.சண்முகம் தெரிவிப்பார். சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்தை ஆணைய தலைவர் கருத்தில்கொண்டு விசாரிக்கட்டும். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் போட்ட அறைகளில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் என நாங்கள் யாருமே தங்கவில்லை. சி.வி.சண்முகம் கூறியது போல அங்கு தங்கியது சசிகலா மற்றும் அவருடைய குடும்பம் தான்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஜெயின் கமிஷன் அமைக்கபட்டதால் சி.பி.ஐ. விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் இல்லையே. அதன்படி பார்த்தால் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்தில் தவறு இல்லை. இதுதொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யும். ஒரு நாள் அதிகாரம் கொடுத்தால் மீனவர் பிரச்சினைகளை தீர்த்துவிடுவேன் என்று சீமான் கூறியிருப்பது 2018-ம் ஆண்டின் தலைசிறந்த ‘ஜோக்’.

    இவ்வாறு அவர் கூறினார். #jayalalithaadeath #jayalalithaa #Jayakumar #CVShanmugam
    குட்கா ஊழல் தொடர்பாக சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். #GutkhaScam #George #Jayakumar
    விழுப்புரம்:

    குட்கா விற்க ரூ. 40 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக வந்த புகாரில் சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் சிக்கினார். அதன்பேரில் சென்னை நொளம்பூரில் உள்ள அவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இதுதொடர்பாக ஜார்ஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர், சென்னையில் துணை கமி‌ஷனராக இருந்த ஜெயக்குமார் மீது பல்வேறு குற்றசாட்டுகளை கூறினார். ஜெயக்குமார் பணியில் இருந்தபோது குட்கா, ஊழல் போன்ற சட்ட விரோத செயல்கள் நடந்தது. அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த ஊழல் தொடர்பான தகவல்களை ஜெயக்குமார் என்னிடம் தரவில்லை. ஊழல் விவகாரம் தொடர்பான அனைத்து விவரங்களும் ஜெயக்குமாருக்கு தெரியும். அவர் பணியில் சரியாக செயல்படவில்லை என்று கூறினார்.

    சென்னையில் துணை கமி‌ஷனராக பணியாற்றிய ஜெயக்குமார் தற்போது விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார்.

    கோப்புப்படம்

    ஜார்ஜின் குற்றசாட்டுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    குட்கா ஊழல் தொடர்பாக தற்போதைக்கு எந்த கருத்தையும் நான் சொல்ல விரும்பவில்லை. என் நேர்மையை சென்னை மக்கள் நன்கு அறிவர்.

    உழைப்பது என் கடைமை என்றாலும் இந்த குற்றசாட்டு தொடர்பாக பதில் சொல்ல வேண்டியது அவசியமாகி உள்ளது.

    முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ் தான் குற்றம் அற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து பிற அதிகாரிகள் மீது பழிபோடக்கூடாது.

    பழிவாங்கும் நோக்கத்துடன் என் மீது ஜார்ஜ் குற்றம்சாட்டுகிறார். அவதூறு பரப்பி வருகிறார்.

    என் மீது எந்த குற்றமும் இல்லை. நான் இதை எங்கே நிரூபிக்கவேண்டுமோ அங்கு நிரூபிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #GutkhaScam #George #Jayakumar
    டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் ரூ.300 கோடி செலவில் தூர்வாரும் பணி நடந்துள்ளது. இதில் 95 சதவீத பணிகள் முடிந்து விட்டது. மீதியுள்ள 5 சதவீத பணிகளும் விரைந்து முடிக்கப்படும்.

    குட்கா விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் தப்ப முடியாது. இதில் தவறு இருந்தால் சட்டத்தின் வழிமுறையின்படி செயல் படுத்தப்படும். தவறு செய்தவர்கள் தான் கவலைப்பட வேண்டும்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, டி.டி.வி. தினகரனை கெட்டவன் என்று முடிவு செய்து ஒதுக்கி வைத்தார். அவரை வீட்டில் சேர்க்கவில்லை. தான் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைப்பவர் தினகரன். பில்டப் செய்து சுற்றி சுற்றி வருகிறார். அவர் ஒரு காற்றுபோன வெற்று பலூன்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் எங்களுடன் தான் உள்ளனர். 2021-ல் நடைபெறும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும். டெல்டா மாவட்டங்களில் மக்கள் விரும்பாத திட்டங்களை அரசு ஆதரிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது வைத்திலிங்கம் எம்.பி., பரசுராமன் எம்.பி. மற்றும் மாவட்ட பால்வள தலைவர் காந்தி, எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தராஜி, சேகர், மற்றும் பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

    கூட்டுறவு மீனவர் சங்க தேர்தலில் ஜெயக்குமாருடன் ஏற்பட்ட மோதல் குறித்து மதுசூதனன் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார். #ADMK #Madhusudanan #jayakumar
    சென்னை:

    அ.தி.மு.க. அவைதலைவர் மதுசூதனனுக்கும் அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கும் மோதல் இருந்தது. கோஷ்டி பூசல் ஏற்பட்டு உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடங்கி தற்போது நடைபெறும் கூட்டுறவு மீனவர் சங்க தேர்தல் வரை இருவருக்கும் வருகிறது.

    மதுசூதனன் அ.தி.மு.க. வின் மூத்த உறுப்பினர் மட்டுமின்றி கட்சியின் அவை தலைவராகவும் இருப்பதால் அமைச்சர் ஜெயக்குமார் அரசியல் மீறல்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆவேசம் அடைந்துள்ளார்.

    தொடந்து தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்டு வரும் அவமரியாதையை தாங்கி கொள்ள முடியாத மதுசூதனன் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசினார்.

    கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது ஆர்.கே.நகர் தொகுதி மற்றும் வட சென்னை வடக்கு மாவட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமாரின் அரசியல் தலையீடு குறித்து எடுத்துக்கூறியுள்ளார்.

    அவைத்தலைவர் என்ற மரியாதை தரப்படவில்லை. ஜெயக்குமார் அவரது மாவட்டத்தை விட்டு என்னுடைய மாவட்டத்துக்குள் தேவையில்லாமல் நுழைந்து அரசியல் நடத்துகிறார்.

    வடசென்னை தெற்கு மாவட்டத்தில் தான் அவர் தனது செல்வாக்கை காட்டிக் கொள்ள வேண்டும். என் மாவட்டத்தில் வந்து குழப்பங்களை ஏற்படுத்துவதால் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகிறது. அவரின் நடவடிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்று மதுசூதனன் முதல்- அமைச்சரிடம் முறையிட்டுள்ளார்.

    அவர் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நான் வேறு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் மதுசூதனன் தெரிவித்ததாக அவரது ஆதரவாளர் ஒருவர் கூறினார்.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி-மதுசூதனன் சந்திப்பு குறித்து வட சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெங்கடேஷ் பாபு எம்.பி.யை பொறுப்பாளராக அமைச்சர் ஜெயக்குமார் நியமித்து மதுசூதனனை தோல்வி அடையச் செய்தார். அந்த தேர்தலில் மறைமுகமாக மதுசூதனனை தோற்கடிக்க எல்லா முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார்.

    அதன்பின்னர் வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகள் ஒதுக்குவதில் மதுசூதனன்-ஜெயக்குமார் இடையே பிரச்சினை ஏற்பட்டது. துணை-முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் மதுசூதனன் ஆதரவு மாவட்ட செயலாளர் ரஜேஷ் மூலம் ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டது.

    அதேபோல அமைச்சர் ஜெயக்குமாரும் தனது ஆதரவளர்கள் பட்டியலை கொடுத்துள்ளார். இரண்டு பேர் கொடுத்த பட்டியலையும் ஓ.பி.எஸ். தேர்வு செய்யாமல் அங்கு குடியிருந்த மக்கள் மற்றும் நேரடியாக மனு கொடுத்தவர்களுக்கு அவர் வீடுகளை ஒதுக்கினார்.

    மாவட்ட செயலாளர் கொடுத்த பட்டியலை ஓ.பி.எஸ் புறக்கணித்தது மதுசூதனனுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. அடுத்ததாக வி.வி. காலனியில் நடந்த கோவில் திருவிழாவில் பெயர் போடுவதில் மதுசூதனன்- ஜெயக்குமார் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.



    அந்த விழாவில் பங்கேற்க வந்த ஓ.பி.எஸ், ஜெயக்குமாரின் பேச்சைக் கேட்டு பங்கேற்காமல் பாதி வழியில் திரும்பி சென்றார்.

    ஆர்.கே.நகரில் நடந்த மற்றொரு கோவில் விழாவில் ஓ.பி.எஸ் -ஐ பங்கேற்க மதுசுதனன் அழைத்து இருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவரை பங்கேற்கவிடாமல் மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டது. இதுவும் மதுசூதனனுக்கு ஓ.பி.எஸ் மீது வருத்தத்தை அதிகரித்தது.

    தற்போது மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலில் உச்சகட்ட மோதல் நடந்து வருகிறது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட 29 சங்கங்களுக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தான் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.

    ஆனால் அதிலும் ஜெயக்குமார் உள்ளே நுழைந்து பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறார். உட்கட்சிக்குள் மோதிக்கொள்வதை பார்த்து தினகரன் ஆதரவாளர்கள் உள்ளே புகுந்தனர். மீனவர் சங்க தேர்தலில் கைகலப்பு ஏற்பட்டது அங்கு மதுசூதனன் சென்றபோது அவரை போலீசார் தடுத்தனர். அமைச்சர் ஜெயக்குமாரின் உத்தரவின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.

    ஆளும் கட்சியினரை போலீசார் அடக்குமுறை செய்வதை மதுசூதனன் ஏற்கவில்லை. மதுசூதனனின் எந்த கோரிக்கையையும் ஓ.பி.எஸ் கண்டுகொள்ளாததால் அவர் இப்போது முதல்வரை நாடியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Madhusudanan #jayakumar
    தமிழக அரசியல் வரலாறு தெரியாமல் ரஜினி பேசியிருப்பதாகவும், எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது இப்படி பேசியிருப்பாரா? என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். #MinisterJeyakumar #Rajinikanth
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அதிமுக உருவாக கருணாநிதி காரணமாக இருந்தார் என்றும், அதிமுகவின் ஆண்டு விழாவில் அண்ணா, எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும் கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்த முதலமைச்சர் வராததையும் விமர்சித்தார்.

    இந்நிலையில்  அமைச்சர் ஜெயக்குமார் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தபோது ரஜினியின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது:-

    ரஜினிக்கு தமிழக அரசியல் மற்றும் வரலாறு தெரியாது. நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினி அரசியல் பேசியது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. இன்னும் அவருக்கு அரசியல் பக்குவம் வரவில்லை.



    எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இருந்தபோது ரஜினி இப்படி பேசியிருப்பாரா? அப்போது பேசியிருந்தால் பாராட்டியிருக்கலாம். அவர்கள் மறைந்தபிறகு இப்போது பேசுவது கோழைத்தனமானது. மறைந்த தலைவரின் இறப்பை சாதகமாக்கிக்கொள்ள ரஜினி நினைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterJeyakumar #Rajinikanth
    சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் ஆன்-லைன் பாஸ்போர்ட் சேவையை விரைவுபடுத்துதல் குறித்து போலீசாருக்கான பயிற்சி வகுப்பு நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த பயிற்சி வகுப்பிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி போலீசாருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆன்-லைன் மூலம் இ-சேவை பாஸ்போர்ட் கோரி பொதுமக்கள் விண்ணப்பித்தால் 3 நாட்களில் அவர்களுடைய சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியை முடிக்க வேண்டும். டிஜிட்டல் கையெழுத்து பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவர்களிடம் இருந்து அவர்களுடைய சான்றிதழ்களை போலீசார் பெற வேண்டிய நிலை உள்ளது. இந்த கையெழுத்தை வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் பணிபுரிவோர் வந்து போட்டு செல்ல காலதாமதம் ஏற்படுவதால் அவர்களுக்கு பாஸ்போர்ட் தருவதற்கும் தாமதம் ஏற்படுகிறது.

    மற்ற மாவட்டங்களில் 5 நாட்களுக்குள் இ-சேவை பாஸ்போர்ட் அளிக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 30 நாட்களுக்கு மேல் ஆவதாக தெரியவந்துள்ளது. எனவே சான்றிதழ் சரிபார்ப்பு பணியை உடனுக்குடன் முடித்து விரைவாக பொது மக்களுக்கு பாஸ்போர்ட்டு கிடைக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதற்காக மாவட்டத்தில் உள்ள 56 போலீஸ் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை பணியை மேற்கொள்ளும் போலீசாருக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விரைவாக பாஸ்போர்ட் சேவை பணியை முடிக்க வேண்டும். மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு 2,500 பேருக்கு பாஸ்போர்ட் பெற்றுத்தரப்படுகிறது. இதை மேலும் அதிகரிக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முகிலன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    கூடிய விரைவில் ஜெயக்குமாரும் அமைச்சர்களும் ஜெயிலுக்கு போவது உறுதி என்று காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். #Kamarajarbirthday #EVKSElangovan
    சென்னை:

    சென்னையை அடுத்த புழலில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    விழாவில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இப்படியும் ஒரு தலைவர் வாழ்ந்து இருக்கிறார் என்று பெருமையோடு சொல்லும் வகையில் வாழ்ந்து இன்னும் வழிகாட்டியாக இருப்பவர் பெருந்தலைவர் காமராஜர்.

    யார் காமராஜர்? என்று கேட்டால் இன்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், விஞ்ஞானிகளாக உயர்ந்து இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் வடிவில் தான் காமராஜர் உள்ளார். காங்கிரஸ்காரர்களால் மட்டுமே பொற்கால ஆட்சியை தர முடியும்.

    நாங்கள் எல்லாம் இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக காரில் வந்து வலதுபுறமாக திரும்பி பொதுக்கூட்ட மேடையில் இருக்கிறோம்.

    கூடிய விரைவில் தமிழக அமைச்சர்கள் சிலர் குறிப்பாக ஜெயக்குமார் போன்றவர்கள் இந்த வழியாக போலீஸ் வேனில் வருவார்கள். இடது புறமாக திரும்பி ஜெயிலுக்குள் செல்வார்கள்.

    காங்கிரசுக்கு சமாதி கட்டுவதாக பேசுகிறார்கள். கோடி கோடியாக கொள்ளையடிக்கும் அவர்களுக்கு தெரிந்தது உண்மைகளை புதைப்பது தான். அதனால் தான் காங்கிரசுக்கு சமாதி கட்டுவோம் என்கிறார்கள். அது முடியுமா உங்களால்?

    தம்பிதுரை தமிழ்நாட்டில் தேசிய கட்சிக்கும் இடமில்லை என்கிறார். அவரைப் போன்றவர்கள் இவ்வளவு உயர்ந்த நிலைக்கு வந்தது காங்கிரசின் தயவால் என்பதை மறந்துவிடக் கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.



    விழாவில் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு பேசியதாவது:-

    காமராஜரை போன்ற எளிமையான தலைவர்களை காங்கிரசில் மட்டுமே பார்க்க முடியும். தியாகம் செய்து வளர்ந்த கட்சி காங்கிரஸ்.

    தமிழகத்தில் தொண்டர்களின் தலைவராக இளங்கோவன் இருக்கிறார். அவரிடம் இருந்து மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். மக்களின் எதிர்பார்ப்பையும், தொண்டர்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றும் தகுதி படைத்த தலைவர் இளங்கோவன் தான்.

    மோடி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 லட்சம் வங்கியில் போடுவேன் என்றார். ஆனால் வங்கிகளில் இருக்கும் பணத்தை தான் பிடுங்குகிறார்கள். பா.ஜனதா ஆட்சியின் சாதனை என்பது மக்கள் படும் வேதனைதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் பொருளாளர் நாசே.ராமச்சந்திரன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் வீ.ஆர்.சிவராமன், ரங்கபாஷ்யம், நாசே.ராஜேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் பாலமுருகன், கடல் தமிழ்வாணன், எம்.பி.குணா, உள்பட பலர் கலந்து கொண்டனர். #Kamarajarbirthday #EVKSElangovan
    எத்தனை ஸ்டாலின் மற்றும் தினகரன் வந்தாலும் தமிழக அரசை கலைக்க முடியாது என்று புதுக்கோட்டையில் நடந்த காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக்கூட்டத்தில் ஜெயக்குமார் பேசினார். #ministerjayakumar #dinakaran #mkstalin #tngovt
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டம் புதுக்கோட்டை திருவப்பூரில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று பேசியதாவது: -

    அ.தி.மு.க.வில் மட்டும்தான் கட்சி கொடி கட்டும் தொண்டர் , தேசிய கொடி கட்டிய காரில் பயணம் செய்ய முடியும்.ஜெயலலிதா இறந்த பிறகு மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க வேண்டும் என பல்வேறு நாடகங்களை நடத்தியுள்ளார். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தி.மு.க. ஆட்சியில் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருந்தது.

    அ.தி.மு.க. ஒரு நிலைப்பாடுதான் எடுக்கும். ஆனால் தி.மு.க. இரட்டை நிலைப்பாடு எடுத்து வருகிறது. ஒரு பக்கம் நாத்தீகம் பேசிக்கொண்டு இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு சுக்கிர தோ‌ஷம் இருப்பதால் ஸ்ரீரங்கத்தில் சிறப்பு பூஜை செய்து அதன் பிரசாதம் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டுள்ளது.

    2021-ம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும். அதற்கு முன்பு சட்டமன்ற தேர்தல் வராது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும். உள்ளாட்சி தேர்தல் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வந்தவுடன் வரும். உள்ளாட்சி தேர்தல் நாளைக்கு வந்தாலும் சரி, நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு வந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தல் 2021-ம் ஆண்டு வந்தாலும் சரி அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


    தினகரன் ஒரு சந்தர்ப்பவாதி. ஆட்சியை கலைக்க வேண்டும் என்று தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்து திட்டமிட்டுள்ளார். எத்தனை தினகரன், ஸ்டாலின் வந்தாலும் தமிழக அரசை கலைக்க முடியாது டி.டி.வி. தினகரன் ஜெயலலிதாவிற்கும், அ.தி.மு.க.விற்கும் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார். தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளார்கள் என்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கருத்தை ஏற்க முடியாது. மக்கள் நீதிமய்யத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளிக்கலாம். ஆனால் மக்கள் ஆதரிக்கமாட்டார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்த உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தங்க.தமிழ்ச்செல்வன் விமர்சிப்பது நீதிமன்ற பார்வைக்கு சென்று உள்ளது. இதற்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் .

    காவிரி பிரச்சினையில் கர்நாடக முதல்வர் குமாரசாமியால் எதுவும் செய்ய முடியாது. அவர் தீர்ப்புக்கு முரணாக ஏதாவது செய்தால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டு தீர்வு காணும். 

    இவ்வாறு அவர் கூறினார். 

    கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் , முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #ministerjayakumar #dinakaran #mkstalin #tngovt
    ×