search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95115"

    • நகைகளை விற்று ரூ.1 லட்சத்து 97 தனது கைபையில் போட்டு எடுத்து வந்தார்.
    • மர்ம நபர் தான் அந்த பணத்தை திருடி சென்றுள்ளார்

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர் ஜெயந்தி (வயது70).

    இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றவர்.

    சம்பவத்தன்று வங்கியில் இருந்து 4½ பவுன் நகைகளை மீட்டு அதனை நகைகடையில் விற்று ரூ.1 லட்சத்து 97 தனது கைபையில் போட்டு எடுத்து வந்தார்.

    அவர் கடையில் இருந்து பஸ்சில் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர் பஸ் நிறுத்தம் வந்ததும் இறங்கி பையை பார்த்தபோது அதில் இருந்த ரூ.1.97 லட்சத்தை காணவில்லை. இதனால் பதறிப்போன அவர் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் நகைகளை விற்று ரூ.1.97 லட்சம் பணத்தை கைபையில் போட்டு பஸ்சில் வந்தேன்.

    அப்போது எனது அருகே பயணிபோல் உட்கார்ந்து கொண்டு வந்த மர்ம நபர் தான் அந்த பணத்தை திருடி சென்றுள்ளார் என்று புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    • நகைகளை மீட்டு அதனை நகைகடையில் விற்று ரூ.1 லட்சத்து 97 தனது கைபையில் போட்டு எடுத்து வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர் ஜெயந்தி (வயது70). இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்றவர்.

    சம்பவத்தன்று வங்கியில் இருந்து 4½ பவுன் நகைகளை மீட்டு அதனை நகைகடையில் விற்று ரூ.1 லட்சத்து 97 தனது கைபையில் போட்டு எடுத்து வந்தார்.

    அவர் கடையில் இருந்து பஸ்சில் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர் பஸ் நிறுத்தம் வந்ததும் இறங்கி பையை பார்த்தபோது அதில் இருந்த ரூ.1.97 லட்சத்தை காணவில்லை. இதனால் பதறிப்போன அவர் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் நகைகளை விற்று ரூ.1.97 லட்சம் பணத்தை கைபையில் போட்டு பஸ்சில் வந்தேன்.

    அப்போது எனது அருகே பயணிபோல் உட்கார்ந்து கொண்டு வந்த மர்ம நபர் தான் அந்த பணத்தை திருடி சென்றுள்ளார் என்று புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    • சாலமன் பாரிஸ் தனியார் ஆஸ்பத்திரி முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.
    • இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோவை,

    கோவை கருப்பராயன் கோவில் வசந்தம் நகரை சேர்ந்தவர் சாலமன் பாரிஸ்(27). மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோவை சரவணம்பட்டி விசுவாசபுரத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (56). ஒர்க் ஷாப் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் கோவை-சத்தி ரோட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்துக்கு சென்றார்.

    ெமாபட்டை வணிக வளாகத்துக்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மொபட் மாயமாகி இருந்தது. இதுகுறி்த்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    • என்னென்ன பொருட்கள் திருடு போயுள்ளன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில். கொங்கேழு சிவாலயங்களில் ஒன்றான இக்கோவில் அவினாசி நகரின் மத்தியில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.

    இக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இதனால் தினமும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அண்மையில்தான் இக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது.

    இந்நிலையில், நேற்றிரவு பூஜை முடிந்ததும் அர்ச்சகர்கள் கோவில் நடையை பூட்டிவிட்டு சென்றனர். இன்று காலை வழக்கம் போல் நடையை திறக்க வந்துள்ளனர். அப்போது கோவிலில் பொருட்கள் அங்கும் இங்கும் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் திருடு போயிருப்பது கண்டு அர்ச்சகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    அவிநாசிலிங்கேஸ்வரர் வீற்றிருக்கும் பிரதான கருவறையில் லிங்கத்தின் மேல் உள்ள மிகவும் கனமான தாராபாத்திரத்தை (அதாவது லிங்கத்தின் மேல் அபிஷேக திரவியம் படும் வகையில் இருக்கும் அமைப்பு) திருட முயற்சி நடந்துள்ளது. எனினும் அதை கழற்ற முடியாத நிலையில் அடுத்ததாக பிரதான கருவறையைச் சுற்றியுள்ள 63 நாயன்மார்களின் உடை வஸ்திரங்கள், சிறு கலசங்களை உடைத்து திருடவும் மர்ம நபர்கள் முயன்றுள்ளனர்.

    அதேபோல் கோவில் உண்டியலையும் திருடர்கள் அசைத்துப் பார்த்துள்ளனர். எனினும் அதிலிருந்து எதையும் எடுக்க முடியவில்லை. மேலும் சுப்ரமணியர் சன்னதியில் வேல், சேவல் கொடி ஆகியனவும் திருடப்பட்டுள்ளன.

    இது குறித்து உடனடியாக அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். என்னென்ன பொருட்கள் திருடு போயுள்ளன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகே அது பற்றி தெரியவரும்.

    கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று கண்டறிய கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அதில் வாலிபர் ஒருவரின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த வாலிபர் 63 நாயன்மார்கள் சிலை அமைந்துள்ள பகுதியில் சிமெண்ட்டால் அமைக்கப்பட்ட கோபுர கலசங்களை ஒவ்வொன்றாக உடைக்கும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. அதன்பிறகு கோவில் கருவறைக்குள் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    வாலிபரின் உருவத்தை வைத்து அவர் யார் என்று விசாரணை நடத்தி அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    அவிநாசி நகரின் மத்தியில் அமைந்துள்ள பிரபலமான கோவிலில் திருட்டு சம்பவம் நடந்திருப்பது பக்தர்களை அதிர்ச்சியும் கவலையையும் அடையச் செய்துள்ளது. கோவிலில் இரவு நேர பாதுகாப்புக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மர்மநபர் தனது கைவரிசையை காட்டியுள்ளார்.

    இந்நிலையில் அவினாசி கோவிலில் கொள்ளை சம்பவம் நடந்ததும் போலீசார் கோவில் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். எந்தெந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளது என ஆய்வு செய்தனர். அப்போது ராஜகோபுரத்தில் வாலிபர் ஒருவர் பதுங்கியிருந்தார். அவரை போலீசார் கீழே இறங்கி வருமாறு கூறினார். ஆனால் அவர் கீழே இறங்க மறுத்துவிட்டார். இதையடுத்து போலீசார் சென்று வாலிபரை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த வாலிபர் ஜட்டி அணிந்திருந்ததுடன், கழுத்தில் மாலையும் அணிந்திருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரிக்கும் போது நேற்றிரவு அவினாசி கோவிலில் கொள்ளையடிக்க வந்தது தெரியவந்தது. கொள்ளையடிப்பதற்காக ராஜகோபுரத்தின் மேல் ஏறியவர் அதன்பிறகு கீழே இறங்க முயற்சித்துள்ளார். ஆனால் இரவு நேரம் என்பதால் அவரால் கீழே இறங்கி வர முடியவில்லை. இதனால் அங்கேயே பதுங்கி இருந்துள்ளார். இன்று காலை போலீசார் பிடியில் சிக்கிக்கொண்டார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடன் வந்த நபரையும் தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் கும்பலாக ஈடுபட்டு இருக்கலாம் என தெரிகிறது.

    கொள்ளை சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் இந்து முன்னணி, பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்பினர் கோவில் முன்பு குவிந்தனர். அவர்கள் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபரை பிடிக்க வேண்டுமென போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் கோவிலில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து கோவிலில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மர்பநபர் ஒருவர் ஓடுவதை கண்டு சஞ்சீவ்குமார் சார்தா அதிர்ச்சி அடைந்தார்.
    • இதுகுறித்து அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை வேலாண்டிபாளையம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் சார்தா(55). இவர் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தார்.

    பின்னர் குடும்பத்தினருடன் வீட்டில் உள்ள 1-வது மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து அடையாளம் தெரியாத மர்பநபர் ஒருவர் ஓடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 6½ கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.42 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • மது போதையில் இருந்ததால் அவர் முத்தையாபுரத்தில் இறங்காமல் இருந்து விட்டாராம். பின்னர் அவரை பஸ்சின் நடத்துனர் ஆறுமுகநேரியில் இறக்கி விட்டுள்ளார்.
    • முத்தையாபுரத்திற்கு சென்று விட நினைத்த அவர் ஒவ்வொரு லோடு ஆட்டோவில் ஏறி அதனை எடுத்துச் செல்ல முயன்றுள்ளார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதிநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவருக்கு சொந்தமாக லோடு ஆட்டோ உள்ளது.

    சம்பவத்தன்று அதிகாலையில் இவர் தனது லோடு ஆட்டோவை மெயின் பஜார் ஆட்டோ நிறுத்தம் அருகே நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்க்கும்போது அங்கு அவரது லோடு ஆட்டோ காணாமல் போயிருந்தது.

    உடனடியாக அவர் இதுபற்றி ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.

    இதன் மூலம் லோடு ஆட்டோவை திருடி ஓட்டிச் சென்ற நபர் முத்தையாபுரம் தோப்புதெருவை சேர்ந்த சூரியபிரகாஷ் (23) என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

    சூரியபிரகாஷின் சொந்த ஊர் அருப்புக்கோட்டை ஆகும். இவர் முத்தையாபுரத்தில் தங்கி இருந்து கூலி தொழில் செய்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென்ற இவர் சம்பவத்தன்று இரவு முத்தையாபுரத்திற்கு பஸ்சில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மது போதையில் இருந்ததால் அவர் முத்தையாபுரத்தில் இறங்காமல் இருந்து விட்டாராம். பின்னர் அவரை பஸ்சின் நடத்துனர் ஆறுமுகநேரியில் இறக்கி விட்டுள்ளார். அங்கிருந்து மீண்டும் முத்தையாபுரத்திற்கு செல்ல சூரியபிரகாஷிடம் பணம் இல்லாத நிலையில் அவர் திணறியுள்ளார். அப்போது அருகில் சில லோடு ஆட்டோக்கள் நின்று உள்ளன. இதில் ஒன்றை திருடி முத்தையாபுரத்திற்கு சென்று விட நினைத்த அவர் ஒவ்வொரு லோடு ஆட்டோவில் ஏறி அதனை எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். ஆனால் சாவி இல்லாததால் அவரது முயற்சி பலிக்கவில்லை.

    இதனால் லோடு ஆட்டோவின் வயர்களை வெட்டி இணைத்து முயன்றதால் மற்றொரு லோடு ஆட்டோ ஸ்டார்ட் ஆகி உள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சூரியபிரகாஷ் உற்சாகமாக அந்த ஆட்டோவை முத்தையாபுரத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். அவரை கைது செய்த போலீசார் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

    • தேவிபாலா வைத்து இருந்த ரூ.23 ஆயிரத்தை மர்மநபர் திருடி சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாரை சேர்ந்தவர் பாலமுருகன்.

    இவரது மனைவி தேவிபாலா (வயது 37). சலவைதொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது சொந்த ஊரான மதுரைக்கு செல்வதற்காக மகள்களுடன் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்துக்கு சென்றார்.

    பின்னர் அங்கு நின்று கொண்டு இருந்த பஸ்சில் ஏறினார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்து யாரோ மர்மநபர் தேவிபாலா கட்டைபையில் வைத்து இருந்த ரூ.23 ஆயிரம் பணத்தை திருடி தப்பிச் சென்றனர்.

    பஸ்சில் சென்ற போது டிக்கெட் எடுப்பதற்காக பார்த்த போது பணம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதில் அதிர்ச்சியடைந்த தேவிபாலா இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் கதிர்வேல் (37). டிரைவர். இவர் தனது சொந்த ஊரான சத்திக்கு செல்வதற்காக மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்துக்கு சென்றார்.

    பஸ்சில் ஏறிய போது யாரோ மர்மநபர் கதிர்வேல் பேண்டின் பின் பாக்கெட்டில் ரூ.10,300 பணத்துடன் வைத்து இருந்த மணிபர்சை திருடி சென்றனர். இது அவரும் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுரையில் காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்தபோது வீடு புகுந்து நகை-பணம் திருட்டு நடந்தது.
    • மர்ம நபர் அங்கிருந்த பொருட்களை திருடிக்கொண்டு தப்ப முயன்றார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சனம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி நாகஜோதி (48). இவர்கள் அதிக வெப்பம் காரணமாக இரவில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

    குடும்பத்தினர் அயர்ந்து தூங்கிய நிலையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த ரூ.47 ஆயி ரத்து 500 மற்றும் செல்போனை திருடி கொண்டு தப்பினார்.

    இது குறித்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு திருட்டு

    சிலைமான் செல்வராஜ் நகர் புவனேஸ்வரி காலனியை சேர்ந்த வேலு மகன் சுந்தர் (34). இவர் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். காற்று வாங்குவதற்காக கதவை திறந்து வைத்திருந்த போது வீடு புகுந்த மர்ம நபர் 8 பவுன் தங்க நகை மற்றும் பணம் ரூ.5 ஆயிரத்தை திருடி கொண்டு தப்பினார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீடு புகுந்து திருடியவர் கைது

    மதுரை துரைசாமி நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் சரண்ராஜ் (36). சம்பவத் தன்று மாலை இவர் வெளியே சென்றார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பொருட்களை திருடிக் கொண்டு தப்ப முயன்றார்.

    இந்த நேரத்தில் வெளியே சென்ற சரண்ராஜ் அந்த மர்ம நபரை பொதுமக்களு டன் சேர்ந்து விரட்டி பிடித்தார். பின்னர் அவர் எஸ்.எஸ்.காலணி போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் கீழவெளி வீதி லட்சுமிபுரம் 8-வது தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் அகிலன் (40) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • ஐம்பொன் சிலைகள் உட்பட 7 சாமி சிலைகளை திருடி சென்றனர். கருட ஆழ்வார் சிலை மட்டும் தப்பியது.
    • திருடப்பட்ட 7 சிலைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊர்ச்சாவடி அருகில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பஜனை பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான சுமார் முக்கால் அடி உயரம் கொண்ட 3 ஐம்பொன் சிலைகளும், அரை அடி உயரம் கொண்ட 4 சிலைகளும் உள்ளது.

    இந்த கோவிலில் பூஜை செய்து வரும் பூசாரி குமரவேல் நேற்று வழக்கம்போல் பூஜைகள் முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் இரவு நேரத்தில் கோவிலில் காவலாளிகள் யாரும் இல்லாததை நோட்டமிட்டுள்ளனர்.

    இதை சாதகமாக பயன்படுத்தி மர்ம நபர்கள், நேற்று நள்ளிரவு சாமி சிலைகள் வைக்கப்பட்டு இருந்த அறையின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். இதையடுத்து அங்கிருந்த ஐம்பொன் சிலைகள் உட்பட 7 சாமி சிலைகளை திருடி சென்றனர். கருட ஆழ்வார் சிலை மட்டும் தப்பியது.

    இன்று காலையில் கோவிலுக்கு வந்த பூசாரி குமரவேல் கோவில் பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு ஐம்பொன் சிலைகள் உள்பட 7 சிலைகள் திருட்டு போயியுள்ளதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.

    திருடப்பட்ட 7 சிலைகளின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.

    இது பற்றி அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் தெரிவித்தார். மேலும் இந்த தகவல் காட்டு தீ போல் ஊர் முழுவதும் பரவியது. இதனால் கோவில் முன்பு ஊர் மக்கள் மற்றும் பக்தர்கள் குவிந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவில் முழுவதும் பார்வையிட்டனர். சிலைகள் திருடப்பட்ட அறைக்குள் சென்று, தடயங்கள் சேகரித்தனர்.

    கொள்ளை குறித்து, பூசாரி மற்றும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார், கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

    இந்த சம்பவத்தால், அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.

    • மோட்டார் சைக்கிள் கடையில் வேலை பார்க்கும் சிறுவன் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார்
    • திண்டிவனம் மேம்பாலம் அருகே வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    விழுப்புரம்:

    புதுச்சேரி-திண்டிவனம் 4 வழிச்சாலை கிளியனூர் அருகே எடையார்குளம் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு நேற்று மாலை ஒரு வாலிபர் வந்தார். அந்த வாலிபர் தான் வந்த மோட்டார் சைக்கிள் பாதி வளியில் பழுதாகி நின்றது. அதனை சரி செய்ய மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை ஊழியரை அழைத்தார். இல்லையெனில் மோட்டார் சைக்கிளை சரிசெய்யும் பொருளை அந்த வாலிபர் கேட்டார். அப்போது மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடையில் ேவலைபார்க்கும் சிறுவன் கடை உரிமையாளர் இல்ைல அதனால் தரமுடியாது என்று கூறி கடையின் உள்ளே சென்றார். இந்நிலையில் அந்த வாலிபர் கடையின் வெளியில் சாவியுடன் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றார்.

    உடனே மோட்டார் சைக்கிள் கடையில் வேலை பார்க்கும் சிறுவன் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார் இதனால் அருகில் இருந்தவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் சினிமா பாணியில் அந்த வாலிபரை பின்தொடர்ந்து சென்று திண்டிவனம் மேம்பாலம் அருகே அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் புதுச்சேரி மாநிலம் சக்தி நகர் சாரம் பகுதியை சேர்ந்த கோவிந்த ராஜ் (வயது 33) என்பது தெரிய வந்தது. மேலும் போலிசார் கோவிந்தராஜை வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

    • காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சாலை தெரு பகுதியில் தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது.
    • சூப்பர் மார்க்கெட்டில் 3 பெண்கள் திருடி சென்றது குறித்து சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சாலை தெரு பகுதியில் தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இங்கு வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பூஜை பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள் போன்ற அனைத்து விதமான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு வாடிக்கையாளர்கள் தாங்களாகவே தேவையான பொருட்களை சுயசேவையாக எடுத்து கடைசியில் பில் போட்டு அதற்கான பணம் செலுத்தி பின்னர் பொருட்களை அதற்கான கவுண்டரில் பெற்று செல்வர்.

    இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி மாலை கடைக்கு வந்த 3 பெண்கள் பொருட்கள் வாங்குவதாக சொல்லிவிட்டு பொருட்களை எடுத்து வைக்க தேவையான கூடையை எடுத்து சென்று மளிகை பொருட்கள், பூஜை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், குழந்தைகளுக்கு பொருட்கள் என்று 1 மணிநேரத்திற்கும் மேலாக எடுத்துள்ளனர்.

    ஆனால் கவுண்டர் வரும்போது குறைந்த அளவிலான பொருட்கள் மட்டுமே இருந்தது. அவற்றிற்கு மட்டுமே பில் போட்டனர். ஒரு பெண் ஸ்பூன் உள்ளிட்ட ஒரு சில பொருட்களுக்கு 80 ரூபாயும், மற்றொரு பெண் குளிர்பானம் உள்ளிட்ட பொருட்கள் என 70 ரூபாயும் என மொத்திலேயே 150 ரூபாய்க்கே பணம் செலுத்தி விட்டு பொருட்களை பெற்று கொண்டு சென்றுள்ளனர்.

    இதனால் சந்தேகமடைந்த சூப்பர் மார்க்கெட்டின் உரிமையாளர் ஸ்ரீராம் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வுசெய்து பார்த்தபோது அந்த பெண்கள் பொருட்கள் எடுத்துகொண்டு அவற்றை ஆளில்லா இடத்திற்கு வந்து தங்களது சேலைக்குள் ஒரு பையை கட்டி கொண்டு வந்து மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களையெல்லாம் அதில் போட்டு கொண்டு சென்றது தெரிய வந்தது.

    சுமார் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை அவர்கள் திருடி சென்று உள்ளனர். இதுகுறித்து சிவகாஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அந்த சூப்பர் மார்க்கெட்டில் 3 பெண்கள் திருடி சென்றது குறித்து சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளது.

    • மோட்டார் சைக்கிளின் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் மோகன்தாஸ். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் ஐஸ் ஹவுஸ் பகுதிக்கு வந்தார். அவரது மோட்டார் சைக்கிள் பெட்டியில் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் சில ஆவணங்கள் இருந்தன.

    ஐஸ் ஹவுஸ் நடேசன் சாலையில் காய்கறி கடை ஒன்றின் அருகில் மோகன்தாஸ் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் சென்று விட்டு திரும்பினார். அப்போது மோட்டார் சைக்கிளின் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ரூ.1 லட்சம் பணம் மற்றும் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

    மோகன்தாசை யாரோ நோட்டமிட்டு கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் யார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக மோகன்தாஸ் ஐஸ் ஹவுஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கேமரா காட்சிகளை வைத்து போலீசார் பணத்தை கொள்ளையடித்தது யார் என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.

    ×