search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நல்லக்கண்ணு"

    ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தை பார்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாராட்டி இருக்கிறார்.
    ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து வெகுவாக பாராட்டினர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினரும் படத்திற்கு பாராட்டும், படக்குழுவினருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, ஜெய் பீம் படத்தை பார்த்து, சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேலுவை பாராட்டி இருக்கிறார். முன்னதாக படத்தை தொலைக்காட்சியில் பார்த்த நல்லக்கண்ணு, திரையில் காண விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப படத்தை என்.எப்.டி.சியில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. 

    சூர்யா

    அவருடன் நடிகர் சூர்யா, சூர்யாவின் தந்தை சிவக்குமார், இயக்குநர் த.செ.ஞானவேலு, 2டி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோரும் படத்தைப் பார்த்தனர்.

    சூர்யா
    சூர்யாவை வாழ்த்தும் நல்லக்கண்ணு

    படத்தைப் பார்த்துவிட்டு நல்லக்கண்ணு, நடிகர் சூர்யாவின் கன்னத்தில் செல்லமாக வருடிக் கொடுத்து தனது பாராட்டை பதிவு செய்தார்.
    தியாகராய நகரில் உள்ள அரசு குடியிருப்பில் இருந்து நல்லக்கண்ணுவை வெளியேற்றியது கண்டனத்துக்குரியது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தியாகராயநகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை காலி செய்ய அரசு இன்று உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தார்.

    இந்நிலையில், தியாகராய நகரில் உள்ள அரசு குடியிருப்பில் இருந்து நல்லக்கண்ணுவை வெளியேற்றியது கண்டனத்துக்குரியது என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், போராட்டமும் தியாகமுமே வாழ்க்கை முறையாகக் கொண்ட நல்லக்கண்ணு ஐயா, 12 ஆண்டுகளாக வசித்து வந்த அரசு குடியிருப்பில் இருந்து வெளியேற்றி இருப்பது கண்டனத்துக்குரியது.

    தோழர் நல்லக்கண்ணு ஐயா அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல் அரசு சார்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
    சென்னை தியாகராயநகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இருந்து மூத்த தலைவர் நல்லகண்ணுவை காலி செய்ய உத்தரவிட்டதை அடுத்து அவர் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.
    சென்னை: 

    சென்னை தியாகராய நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் 94 வயது அரசியல்வாதியுமான நல்லகண்ணுவுக்கு அரசு சார்பில் குடியிருக்க கடந்த 2007-ஆம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இலவசமாக அரசு கொடுத்தாலும் கூட, அதை ஏற்காத அவர் இத்தனை காலமாக வாடகை கொடுத்துத்தான் குடியிருந்து வந்தார்.

    சுமார் 12 ஆண்டுகளாக இந்த வீட்டில் குடியிருந்து வரும் நிலையில் அந்த கட்டடத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து வீட்டை காலி செய்ய நல்லகண்ணு உள்பட அனைத்து குடியிருப்புவாசிகளுக்கும் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    அரசு நோட்டீஸ் கொடுத்ததை அடுத்து மற்ற குடியிருப்புவாசிகள் வெளியேறினர். 

    அரசு குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என மூத்த அரசியல்வாதி நல்லகண்ணுவுக்கு தமிழக அரசின் வீட்டு வசதி வாரியத்துறை நோட்டீஸ் விட்டதைத் தொடர்ந்து, எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் கோரிக்கையையும் முன்வைக்காமல் வெளியேறினார். 
    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் பிறந்தநாளுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Nallakannu #Thirunavukkarasar
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இன்று பிறந்தநாள் காணும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை எனது சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன். நல்லக்கண்ணு அரசியலில் நேர்மையானவர், தூய்மையானவர். அனைவரிடத்திலும் அன்பாக பழகும் சிறந்த பண்பாளர்.

    அவர் நல்ல உடல்நலத்துடன் நூற்றாண்டுக்கும் மேலாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி, தொடர்ந்து அவர் அவரது கட்சிக்கும், பொது மக்களுக்கும் தொண்டாற்றிட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Nallakannu #Thirunavukkarasar
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான நல்லக்கண்ணுவுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Nallakannu #KamalHaasan

    சென்னை, டிச. 26-

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான நல்லக்கண்ணு இன்று தனது 95-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை யொட்டி, தி.நகரிலுள்ள அவரது இல்லத்தில் பல கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சிங்கப்பூரில் இருந்து டுவிட்டர் மூலம் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார். அவரது வாழ்த்து செய்தியில் ‘இவருக்கு பெயர் இட்டது பெற்றோரே எனினும் தான் வாழ்ந்த விதத்தால், தன் பெயரை “காரணப் பெயராக்கிய” பெரியவர் நல்லக்கண்ணு அய்யா விற்கு இன்று பிறந்த நாள். நல்லவரையும் நல்ல வற்றையும் வாழ்த்துவோம் மனதார...’ என்று குறிப்பிட் டுள்ளார்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கணக்கு எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் நல்லக்கண்ணு வலியுறுத்தியுள்ளார். #GajaCyclone #Nallakannu
    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை தாலுகாவில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு சென்றும் 15 நாட்களுக்கு பிறகு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிவாரணமாக 353 கோடி ரூபாய் அறிவித்துள்ளது. மத்திய அரசு குறைவான தொகை ஒதுக்கியுள்ளது கண்டிக்கத்தக்கது. புயலால் 8 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அழிந்துவிட்டன. விவசாயிகள் தங்களிடம் இருந்த பொருட்களையும் இழந்து விட்டனர். இந்த புயல் மக்களின் வாழ்வாதாரத்தையே அழித்துவிட்டது. மீனவர்கள் ஏராளமான படகுகளை இழந்து விட்டனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து மத்திய அரசு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும்.

    தென்னைக்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிவாரணம் போதுமானதல்ல. தென்னை மரம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கணக்கு எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் மின் இணைப்பு உடனே வழங்க வேண்டும்.

    அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் வக்கீல் பாரதி, முன்னாள் மாவட்ட செயலாளர் திருஞானம், மாவட்ட விவசாய சங்க செயலாளர் பக்கிரிசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.  #GajaCyclone
    தி.மு.க. பா.ஜ.க. கூட்டணிக்கு வாய்ப்பில்லை. மதவாத கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதில் தி.மு.க.வினர் உறுதியுடன் இருக்கிறார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கூறினார். #Nallakannu
    திருச்சி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றிருப்பதற்கு வாழ்த்துக்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் விரும்புகிறார்கள். மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்தும் மத்திய அரசை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கவும்,தமிழ்நாட்டில் புதிய மாற்றத்தை கொண்டு வரவும் ஸ்டாலின் தி.மு.க வின் தலைவராகியிருப்பது பாராட்டுக்குரியது.



    தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை. மதவாத கட்சியை எதிர்க்க வேண்டும் என்பதில் தி.மு.க.வினர் உறுதியுடன் இருக்கிறார்கள். மதவாத சக்தியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அணி சேர்ந்து இருக்கிறோம். அது வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    அரசியலமைப்பு சட்டத்தையே மாற்ற வேண்டும் என முடிவெடுத்துள்ளார்கள். பா.ஜ.க.வின் கொள்கைகள் நாட்டை பின் நோக்கி கொண்டு போகக்கூடியது. இதை அனைத்து ஜனநாயக, மதச்சார்பற்ற, இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்த்து மத்திய அரசை வீழ்த்த வேண்டும்.

    பல ஆண்டுகள் போராடி காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதிக அளவு தண்ணீர் வந்தும் அதை சேமிக்க முடியவில்லை, கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. அதிக அளவு மணல் கொள்ளை, நீர் நிலைகள் முறையாக தூர்வாராதது ஆகியவற்றால்தான் தண்ணீர் கடைமடை வரை செல்லவில்லை. இதற்கு முழு காரணம் அ.தி.மு.க அரசு தான். நீர் நிலைகள் தூர்வாருவது தொடர்பாக பொதுப்பணித்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Nallakannu

    தூத்துக்குடியில் மக்கள் நிம்மதியாக வாழ்வை தொடர கைது நடவடிக்கையை போலீசார் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மனு கொடுத்தார். #Thoothukkudi #Sterlite
    தூத்துக்குடி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு நேற்று மதியம் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தூத்துக்குடி மாநகரில் கடந்த மாதம் 22-ந் தேதி நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து அன்றும், 23-ந் தேதியும் நடந்த சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அதனை தொடர்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் நீதிமன்ற பிணையில் உள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் சாதாரண மக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. தினசரி நள்ளிரவு நேரங்களில் போலீசார் வீடுகளில் கதவுகளை தட்டி பெண்களை மிரட்டி ஆண்களை கைது செய்வது நியாயமற்றது ஆகும்.

    இயல்புநிலை படிப்படியாக திரும்பி வரும்போது இத்தகைய நடவடிக்கைகள் மீண்டும் பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பள்ளிக்கூடங்கள் விடுமுறைக்கு பின்னர் திறக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகள் படிப்பு தொடர முடியாத நிலையில் உள்ளனர்.

    எனவே தூத்துக்குடி மாநகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இயல்பு நிலை திரும்பி, மக்கள் நிம்மதியாக வாழ்வை தொடர உடனடியாக கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும். மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. #Thoothukkudi #Sterlite
    தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மீது போலீசார் வழக்கு போடுவது மற்றும் கைது நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை கைவிட வேண்டும் என்று நல்லக்கண்ணு தெரிவித்தார். #Thoothukudifiring #Nallakannu
    திருச்சி:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து அரசிதழில் வெளியிட்டு தற்போது முடிவுக்கு வந்தது. முதல் கட்டமாக வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடவேண்டும். அதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

    தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மீது போலீசார் வழக்கு போடுவது மற்றும் கைது நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை கைவிட வேண்டும். அங்கு அமைதியை நிலை நாட்ட தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.


    மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் நாட்டை பிளவுப்படுத்துவது பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தான். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உச்சநீதிமன்றம் செய்த திருத்தம் தவறு. சாதி வெறி, மத வெறி சக்திகள் தான் தேச விரோத சக்திகள்.

    சிவகங்கை சம்பவத்தை உதாரணமாக கொண்டு உச்ச நீதிமன்றம் அந்த சட்ட திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thoothukudifiring #Nallakannu
    ×