search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95169"

    வைகுண்ட ஏகாதசியான இன்று சில விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். அதேபோல் சில விஷயங்களை செய்யக்கூடாது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    ஏகாதசி அன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நாமத்தை சொல்வது, அதிலும் குறிப்பாக கலியுக தாரகமந்திரமான ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். எத்தனை முறை சொல்கிறோமோ அந்த அளவு பலன் கிடைக்கும்.

    மற்றும் பகவத்கீதை, பாகவதபுராணம் போன்ற பகவான் சம்பந்தமான புத்தகங்களை படிக்கவும். அன்று முழுவதும் சொல், செயல், சிந்தனை அனைத்தும் பகவான் கிருஷ்ணரிலேயே ஈடுபடுத்த வேண்டும். ஏகாதசி அன்று சினிமா டிவி பார்ப்பது. பரமபதம் ஆடுவதும், வீண் பேச்சு பேசி காலவிரயம் செய்வதும் கூடாது.

    மாதமாதம் வரும் ஏகாதசி விரதமிருந்தாலே பக்தி வளரும். அதிலும் வைகுண்ட ஏகாதசி (மோக்ஷ ஏகாதசி) அன்று முழு விரதம் இருந்தால் பகவான் கிருஷ்ணர் சுலபமாக முக்திப் பாதையை காட்டுவார் என நமது சாஸ்த்திரங்களில் கூறியுள்ளது.

    ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது.

    ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விடவேண்டும்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் விமானம் பிரம்மதேவனின் தவநலத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் விமானம் பிரம்மதேவனின் தவநலத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும். அதனை பிரம்ம தேவர் தேவலோகத்தில் நெடுங்காலம் பூஜித்து வந்தார். ஸ்ரீரெங்கநாதருக்கு நித்திய பூஜைகள் புரிந்து வரும்படி பிரம்மதேவர் சூரியனை நியமித்தார். பின்னர் ஸ்ரீராமபிரானின் முன்னோரான சூரிய குலத்தில் தோன்றிய இட்சுவாகு என்ற அரசன் இவ்விமானத்தை தனது தலைநகராகிய அயோத்திக்கு வழிபட எடுத்துக்கொண்டு வந்தான்.

    திருமாலின் அவதாரமாக தோன்றிய ஸ்ரீராமபிரான் இலங்கை வேந்தன் ராவணனை அழித்து பட்டாபிஷேகம் நடத்தப்பெற்ற கால கட்டத்தில் ராவணனின் சகோதரன் விபீஷணனுக்கு அன்பு பரிசாக இந்த விமானத்தை அளித்தார். விபீஷணன் பக்தி பெருக்கோடு தனது தலையின் மேல் விமானத்தை வைத்து சுமந்து கொண்டு இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் பெருக்கெடுத்து ஓடிய காவிரி கரையில் களைப்பின் மிகுதியால் கீழே இறக்கி வைத்து விட்டு காவிரியில் புனித நீராடிவிட்டு மீண்டும் இலங்கைக்கு புறப்பட நினைத்து விமானத்தை கையால் எடுப்பதற்கு எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

    பெயர்த்து எடுக்க முயன்றும் முடியாமல் போகவே அந்த விமானம் அங்கேயே நிலைகொண்டு விட்டது. ராம பிரான் வழங்கிய விமானத்தை தனது நாட்டுக்கு எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே என எண்ணி கதறி அழுதான் விபீஷணன். ஆனாலும் விமானத்தை நகர்த்த முடியவில்லை. அந்த விமானம் அப்படி அன்று நிலைகொண்ட இடமே ஸ்ரீரங்கமாகும்.

    அந்த கால கட்டத்தில் திருச்சி பகுதியை ஆண்டு வந்த சோழமன்னன் தர்மவர்மன் விபீஷணனுக்கு ஆறுதல் கூறி ரெங்கநாதர் காவிரி கரையிலேயே தங்கி இருக்க வேண்டும் என்பது அவரது விருப்பம் என்பதையே இந்நிகழ்வு எடுத்து காட்டுகிறது என அவனுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். விபீஷணனை தேற்றும் பொருட்டு தென் திசையான இலங்கையை நோக்கி ரெங்கநாதர் பள்ளி கொண்டருள்வதாக வாக்குறுதி அளித்தான். பின்னர் சோழமன்னன் தர்மவர்மன் அந்தவிமானத்தினை சுற்றி கோவில் எழுப்பி வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தான். இதுவே ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தோன்றிய வரலாறாகும்.

    எனினும் ஸ்ரீரங்கம் கோவில் கருவறையானது வரலாறு தோன்றாத காலத்திற்கும் மிக மிக முற்பட்டதாக கருதப்படுகிறது. இந்திய சமய வரலாற்றில் ஸ்ரீரங்கம் கோவிலானது மிகவும் முதன்மையான சிறப்பிடத்தை பெற்றிருக்கின்றது. கி.பி. 7-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 13-ம் நூற்றாண்டு வரையில் தென்னிந்தியாவில் மிகவும் சிறப்புற்று விளங்கி வைணவ சமயத்தின் மிகப்பெரிய தலைமை செயலகமாக புண்ணிய பூமியாம் ஸ்ரீரங்கம் திகழ்ந்திருக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை பொறுத்தவரை ஆண்டுக்கு 365 நாட்களும் திருவிழா நாட்கள் தான் என்று கூறும் அளவிற்கு இங்கு பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவை அனைத்தையும் எடுத்துக்கூறுவது என்பது இயலாத காரியமாகும். இதில் பண்பாடு, பழமை மாறாமல் நடத்தப்பட்டு வரும் விழாக்கள் மொத்தம் 322 என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இவை எல்லாவற்றிலும் சிறப்பானது 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவாகும். வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பின் போது பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால் பிறவிப்பயனை அடையலாம்.

    கிரிவல வழிபாடு என்றால் திருவண்ணாமலையும் நினைவிற்கு வருவதுபோல வைகுண்ட ஏகாதசி என்றால் எல்லோருக்கும் ஸ்ரீரங்கமே முதலில் நினைவிற்கு வருகிறது.
    கிரிவல வழிபாடு என்றால் திருவண்ணாமலையும் நினைவிற்கு வருவதுபோல வைகுண்ட ஏகாதசி என்றால் எல்லோருக்கும் ஸ்ரீரங்கமே முதலில் நினைவிற்கு வருகிறது.

    பிரம்ம லோகத்தில் பூஜை செய்து வந்த திருமாலின் திருவுருவை பிரமன். சூரிய வம்ச அரசனான இக்ஷ்வாகுக்கு கொடுக்க, பிற்காலத்தில், அதை ராமபிரான் விபீஷணனுக்கு கொடுக்க, அவன் பெருமாள் திருமேனியை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் போது, இறைவன் திருவிளையாடலால் ஸ்ரீரங்கம் என்ற புண்ணிய பூமியில் நிலைத்து விட்டது.

    அங்கு தர்மவர்மனால் எழும்பிய முதற்கோயில், ஒரு காலத்தில் காவிரி வெள்ளத்தால் மறைந்து விட்டது. தெய்வீகக்கிளி ஒன்று, அவ்விடத்தின் மேன்மையை கிள்ளிவளவனுக்கு தெரிவித்தது. அவன் புதுப்பித்த கோயிலையே இன்று காண்கிறோம். அரங்கனே திருவரங்கத்தை வைகுண்டமாகக் கருதியதால் தான் இன்றும் பகல்பத்து, ராப்பத்து என்று வைகுண்ட ஏகாதசியின் போது மிகமிக விரிவான திருவிழா நடைபெறுகிறது.

    வைகுண்ட ஏகாதசியன்று திருமாலை வழிபடுவோர் வைகுண்டத்துக்கே செல்வதாக உணர்த்துகின்ற நிகழ்வே வைகுண்டவாசல் அல்லது பரமபதவாசல் நுழைகின்ற வழக்கமாகும். 
    ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியன்று ஸ்ரீ நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக வந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருள்வார்.
    108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம், பெரியகோவில் என்றும் போற்றபடுகிற ஸ்ரீரங்கம் ரெங்நாத சுவாமி திருக்கோவி லில் நடைபெறும் அனைத்து உற்சவங்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் (வைகுண்ட ஏகாதசி திரு மொழி, திருவாய்மொழி திரு நாட்கள்) முக்கிய திருவிழா ஆகும்.

    பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என்று 21 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் வருகிற 8.12.2018 முதல் 27.12.2018 வரை 20 நாட்கள் பெரிய பெருமாள் மூலவர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார். பகல் பத்து திருவிழாவின் போது, ஸ்ரீ நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து திருநாட்களில் திருமாமணி மண்டபத்தில் (ஆயிரங்கால் மண்டபம்) அனைத்து ஆழ்வார்கள், ஆச்சாரியார்களுடன் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பாகும்.

    பகல்பத்து திருநாட்களின் போது திருமொழி பாசுரங்களும், ராப்பத்து திருநாட்களின்போது திருவாய்மொழி பாசுரங்களும் அபிநயம், வியாக்யானங்களுடன் அரையர்களால் சேவிக்கப்படும். பகல்பத்து திருநாளில் பத்தாம் திருநாளன்று ஸ்ரீநம்பெருமாள் மோகினி அலங்காரத்துடன் அர்ச்சுன மண்டபத்தில் சேவை சாதிப்பார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 18.12.2018 வைகுண்ட ஏகாதசியன்று ஸ்ரீ நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக வந்து திருமாமணி மண்டபத்தில் எழுந்தருள்வார். ராப்பத்து எட்டாம் திருநாளில் ஸ்ரீநம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வேடுபறி கண்டருள்வார்.

    ராப்பத்து சாற்றுமறை அன்று நடைபெறும் நம்மாழ்வார் மோட்சம் சேவிப்பதற்கு கண்கொள்ளா காட்சியாகும். இந்த உற்சவம் நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கும், ஆழ்வார்களுக்கும் ஏற்றமிகு உற்சவமாகி திருமங்கையாழ்வார் காலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வைகுண்ட ஏகாதசி விழாவை ஸ்ரீரங்கத்தில் பார்த்தால், அதை ‘பூலோக வைகுண்டம்’ என்று சொன்னது எவ்வளவு பொருத்தமானது என்பது புரியும்.
    ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பை பார்ப்பது கண் கொள்ளா காட்சியாகும். இன்று ஸ்ரீரங்கத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள். அவர் திருமேனி மீது பனி விழுமே, அதைத் தவிர்ப்பதற்காக துணிக் கூடாரம் பிடித்து வருவார்கள். வழியெங்கும் நிற்கும் அன்பர்களுக்கு அருள்பாலிக்கும் அரங்கன், சேனை முதலியார் சந்நிதிக்கு வந்து நிற்பார்.

    அவரது திருவடியில் சமர்ப்பித்த மாலை, சேனை முதலியாருக்கு சாத்தப்படும். இதற்கு அரங்கன் மூலஸ்தானத்துக்கு மீண்டும் எழுந்தருளும்வரை, அதிகாரத்தை மாற்றிக் கொடுக்கிறார் என்று அர்த்தமாகும். அதைத் தொடர்ந்து அரங்கனின் அழகு நடை ஆரம்பமாகும்.

    நாழி கேட்டால் வாசல், கொடிமரம் கடந்து திரை மண்டபம் வந்து சேர்வார். அங்கே யஜுர் வேதத்தின் எட்டாம் பிரச்னம் சாற்றுமறையாகும். அதைத் தொடர்ந்து மற்ற வேதங்களையும் சொல்வார்கள். வேதங்களை கேட்டுக் கொண்டே ரங்கநாதர் பக்தர் வெள்ளத்தினூடே பரமபத வாசலுக்கு முன்பாக எழுந்தருள்வார்.
    ‘திற’ என்று அரங்கனின் ஆணை பிறக்கும்.

    பரமபத வாசலின் மணிகள் ஒலிக்க, கதவுகள் திறந்து கொள்ளும்.

    ரங்கா... ரங்கா... என்ற கோஷம் திசைகளை அதிர வைக்கும். ரங்கநாதர் பக்தர்களோடு பரமபத வாசல் வழியே பிரவேசிப்பார்.

    பிறகு அரையர் சேவையோடு புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபம் வருவார். தொடர்ந்து ஆஸ்தான மண்டபம் வந்து சேர்வார். மீண்டும் அரையர் சேவை நடைபெறும். நள்ளிரவு வரை ரங்கநாதர் அங்கேயே வீற்றிருப்பார்.

    வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும்தான் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஸ்ரீரங்கத்தில் பரமபத வாசல் திறந்திருக்கும்.

    மூலவரான சயனக் கோலப் பெருமாள் முத்துக்களால் ஆன அங்கியை அணிந்தவராகக் காட்சி தருவார். ‘முத்தங்கி சேவை’ என்று விசேஷமாகச் சொல்வது இதைத்தான்.

    வைகுண்ட ஏகாதசி விழாவை ஸ்ரீரங்கத்தில் பார்த்தால், அதை ‘பூலோக வைகுண்டம்’ என்று சொன்னது எவ்வளவு பொருத்தமானது என்பது புரியும். ஸ்ரீரங்கத்தில் அது தனிச்சிறப்பு வாய்ந்த திருவிழாவாக விளங்குகிறது.
    வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.
    * ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்.

    * ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜை செய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

    * ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும். குளிர்ந்த நீரை குடிக்கலாம். ஏழுமுறை துளசி இலையை சாப்பிடலாம். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதனால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிடவேண்டும். பட்டினி கிடப்பதினால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது. அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள்,பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம்.

    * இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும்,விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும். கண் விழிக்கிறோம் என்றபெயரில் சினிமா,டிவி பார்க்க கூடாது.

    * ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது. துவாதசி அன்று அதி காலையில் உணவு அருந்துவதை பாரணை என அழைக்கிறோம். துவாதசியன்று அதி காலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளைசேர்த்து கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா... என மூன்று முறை_கூறி வாழை இலையில் உணவுவிட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும். அகத்தி கீரை பொரியல், நெல்லிக்காய் பச்சடி வறுத்த சுண்டைக்காய் சாம்பார் ஆகியவை முக்கியமானவை.

    * துவாதசியன்று பஞ்சாங்கத்தில் காட்டியபடி குறிப்பிட்டநேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும்.

    * உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும்.ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி, பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்து உள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.
    இரண்டு அசுரர்களை முன்னிட்டு தோன்றியது வைகுண்ட ஏகாதசி. வைகுண்ட ஏகாதசி தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    முற்காலத்தில் பிரம்மாவுக்கு ஏற்பட்ட அகங்காரத்தை ஒடுக்க நினைத்த மகா விஷ்ணு, தன் காதுகளிலிருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்படச்செய்தார். அவர்கள் பிரம்மாவை கொல்ல முயன்ற போது, அவர்களைத் தடுத்த மகாவிஷ்ணு, பிரம்மாவை விட்டுவிடும் படியும், அவர்கள் கேட்கும் வரத்தை தருவதாகவும் கூறினார். அந்த அசுரர்கள் மகா விஷ்ணுவிற்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாகக் கூறினர்.

    மகா விஷ்ணுவும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தை கேட்டார். அசுரர்களானாலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற நினைத்த அசுரர்கள், தங்களை சமாளித்துக் கொண்டு, ‘பகவானே, ஒரு விண்ணப்பம், தாங்கள் ஒரு மாதம் எங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகே நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்’ என்று வேண்டினார்கள். பகவானும் அப்படியே வரம் தந்தார். யுத்தத்தின் முடிவில் பகவான் அவர்களை வீழ்த்தினார். பகவானின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள், அவனின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தை கேட்டனர்.

    மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலை (சொர்க்க வாசல்) திறந்து, அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்துக்கொண்டார். அசுரர்கள் தாங்கள் பெற்ற பேரின்பம் அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, பகவானே, தங்களை ஆலயங்களில் விக்கிரக வடிவில் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை ஓர் உற்சவமாக கடைபிடிக்க வேண்டும்.

    விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது ‘ஏகாதசி விரதம்’. இந்த விரதத்தை கடைப்பிடிப்பது ‘அஸ்வமேத யாகம்’ செய்த பலனைக் கொடுக்கும் என்கிறது புராணங்கள்.

    ‘காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை; தாய்க்கு சமமான தெய்வம் இல்லை; கங்கைக்கு ஈடான தீர்த்தம் இல்லை; ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை’ என்று இந்த விரதத்தை மகிமைப் பற்றி அக்னி புராணம் எடுத்துரைக்கிறது. இந்த விரதத்தின் சிறப்பு பற்றி சிவபெருமானே, பார்வதி தேவியிடம் எடுத்துக் கூறியுள்ளார் என்பது புராணங்கள் கூறும் தகவல்.

    மாதம் இரு ஏகாதசி என்று 24 ஏகாதசிகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கிறது. இவற்றில் மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியான, ‘வைகுண்ட ஏகாதசி’ மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை ‘மோட்ச ஏகாதசி’ என்றும் அழைப்பார்கள்.

    வைகுண்ட ஏகாதசி அன்று, விஷ்ணு ஆலயங்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடத்தப்படும். இறைவனை தொழும் ஜீவாத்மா, வைகுண்ட வாசலில் வழியாக பரமாத்மாவை சேருகிறது என்ற ஐதீகத்தின் அடிப்படையில், இந்த சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழா அதிகாலை வேளையிலேயே நடைபெறும். இதில் மக்கள் பலரும் கலந்து கொண்டு, இறைவனுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளை கண்டுகளித்து, சொர்க்க வாசலின் வழியாக வெளியே வருவார்கள்.
    வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தை போக்கும் சக்தி உண்டு. வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள்.
    கயிலை நாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதி தேவிக்கு ஏகாதசி விரத மகிமையை எடுத்துக் கூறினார். ஏகாதசி விரதத்திற்கு பாவத்தை போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெறலாம். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார்.

    உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே அனைத்து ஏகாதசியன்றும் பலர் விரதம் காக்கின்றனர். சிறப்பாக பலர் வைகுண்ட ஏகாதசி விரதம் மேற்கொள்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று விஷ்ணுவை நினைத்து விரதம் இருக்கவேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல் நாளான தசமி அன்று ஒரு பொழுது உணவு உண்ண வேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் இருக்கவேண்டும்.

    மறுநாளான துவாதசியன்று சூரிய உதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்தவேண்டும். பாரணை என்னும் பலவகை காய்கறிகளுடன் கூடிய உணவை உண்ணவேண்டும். அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை உணவில் அதிகம் இடம்பெறுதல் அவசியம். காலையிலேயே சாப்பாட்டை முடித்துவிட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும்.

    வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வார்கள். மாதத்திற்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது 25-வது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. இதை மோட்ச ஏகாதசி, பெரிய ஏகாதசி, விரதமிருப்பவர்களுக்கு அளவற்ற பலன்களை தருவதால் முக்கோடி ஏகாதசி என்றும் கூறுவர். தேவர்களுக்கு இடைவிடாத துன்பத்தை தந்த முராசுரனை விஷ்ணு கொன்ற நாளும் இதுவாகும். 
    வைகுண்ட ஏகாதசி தினத்தன்று விரதமிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து அந்த பரந்தாமனின் அருளையும், நீங்காத செல்வத்தை பெற்று உன்னதமான வாழ்வை பெறுவோமாக.
    ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை என்ற வாக்கியமே ஏகாதசி விரதத்தின் மகிமையை நமக்கு சொல்லும். மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்றுதான், அர்ஜூனனுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா. இந்த நாளை, கீதா ஜெயந்தி என்று கொண்டாடுகின்றனர்.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீபெரும்புதூர், திருப்பதி மற்றும் அனைத்து வைஷ்னவ திவ்ய தேசங்களிலும் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.

    அதனை தொடர்ந்து சென்னை பார்த்தசாரதி திருக்கோவில், திருமயிலை கேசவ பெருமாள், மாதவ பெருமாள், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் போன்ற வைஷ்னவ ஸ்தலங்களிலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விஷேசமாகும். விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் விஷ்னுவை அதிதேவதையாக கொண்ட புதன் கிரக தோஷங்களும் சனி கிரக தோஷங்களும் நீங்கி பல உயர்வான நற்பலன்கள் ஏற்படும். மேலும் திதி சூன்ய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும்.

    எனவே வைகுண்ட ஏகாதசி தினத்தன்று விரதமிருந்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயனம் செய்து அந்த பரந்தாமனின் அருளை திருப்பாவையின் நீங்காத செல்வம் நிறைந்தேலொரெம்பாவை என்பதற்கிணங்க நீங்காத செல்வத்தை பெற்று உன்னதமான வாழ்வை பெறுவோமாக.
    திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை வைகுண்ட ஏகாதசியான இன்று பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிடைக்கும்.
    திருமாலின் திவ்ய நாமங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் இத்துதியை வைகுண்ட ஏகாதசி (18.12.2018) அன்று பாராயணம் செய்தால் அஸ்வமேதயாகம் செய்த பலன் கிட்டுவதோடு நாராயணனின் பேரருளும் கிடைக்கும்.

    ஓம் வாஜுஸூதேவம்
    ஹ்ருஷீகேஸம் வாமனம்
    ஜலஸாயினம் ஜனார்தனம்
    ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம்
    கருடத்வஜம்
    வராஹம் புண்டரீகாக்ஷம்
    ந்ருஸிம்ஹம் நரகாந்தகம்
    அவ்யக்தம் ஸாஸ்வதம்
    விஷ்ணும் அனந்த
    மஜமவ்யயம்
    நாராயணம் கதாத்யக்ஷம்
    கோவிந்தம் கீர்திபாஜனம்
    கோவர்தனோத்தரம் தேவம்
    பூதரம் புவனேஸ்வரம்
    வேத்தாரம் யக்ஞபுருஷம்
    யக்ஞேஸம் யக்ஞவாஹகம்
    சக்ரபாணிம் கதாபாணிம்
    ஸங்கபாணிம் நரோத்தமம்
    வைகுண்டம்
    துஷ்டதமனம் பூகர்பம்
    பீதவாஸஸம் த்ரிவிக்ரமம்
    த்ரிகாலஜ்ஞம் த்ரிமூர்த்திம்
    நந்திகேஸ்வரம்
    ராமம் ராமம் ஹயக்ரீவம் பீமம்
    ரௌத்ரம் பவோத்பவம்ஸ்ரீபதிம்
    ஸ்ரீதரம் ஸ்ரீஸம் மங்கலம்
    மங்கலாயுதம்
    தாமோதரம்
    தமோபேதம் கேஸவம்
    கேஸிஸ¨தனம் வரேண்யம்
    வரதம் விஷ்ணுமானந்தம்
    வஸூதேவஜம்
    ஹிரண்யரேதஸம்
    தீப்தம் புராணம்
    புருஷோத்தமம் ஸகலம்
    நிஷ்கலம் ஸூத்தம் நிர்குணம்
    குணஸாஸ்வதம்
    ஹிரண்யதனுஸங்காஸம்
    ஸூர்யாயுத
    ஸமப்ரபம்மேகஸ்யாமம்
    சதுர்பாஹம் குஸலம்
    கமலேக்ஷணம்
    ஜ்யோதீ ரூமரூபம் சஸ்வரூபம்
    ரூப ஸம்ஸ்திதம்ஸர்வஞ்ஜம்
    ஸர்வரூபஸ்தம் ஸர்வேஸம்
    ஸர்வதோமுகம்
    ஜ்ஞானம் கூடஸ்தமசலம்
    ஜ்ஞானதம் பரமம்
    ப்ரபும்யோகீஸம் யோக
    நிஷ்ணாதம் யோகினம்
    யோகரூபிணம்
    ஈஸ்வரம் ஸர்வபூதானாம்
    வந்தே பூதமயம் ப்ரபும்இதி
    நாமஸதம் திவ்யம்
    வைஷ்ணவம் கலுபாபஹம்
    வ்யாஸேன கதிதம் பூர்வம்
    ஸர்வபாப ப்ரணாஸனம்
    ய: படேத் ப்ராதருத்தாய ஸ
    பவேத் வைஷ்ணவோ நர:
    ஸர்வ பாப விஸூத்தாத்மா:
    விஷ்ணு ஸாயுஜ்யமாப்னுயாத்
    சாந்த்ராயண ஸஹஸ்ராணி
    கன்யாதான ஸதானி ச
    கவாம் லக்ஷஸஹஸ்ராணி
    முக்திபாகீ பவேந்நர:
    அஸ்வமேதாயுதம் புண்யம்
    பலம் ப்ராப்னோதி மானவ:
    விஷ்ணு ஸதநாம
    ஸ்தோத்திரம்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்க வாசல் வழியாக பிரவேசித்து கோவிந்தா... கோவிந்தா... என்று முழக்கமிட்டனர். #VaikundaEkadasi #Srirangam #Sorgavasal
    பூலோக வைகுண்டம், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

    இதில் 8-ந்தேதியில் இருந்து பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது. இதனையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி வருகிறார்.



    நேற்று (திங்கட்கிழமை) பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் திருநாளாகும். இதனையொட்டி நேற்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார். பின்னர் அவர் காலை 7 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். நேற்று மூலவர் முத்தங்கி சேவைக்கு பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மாலை 4.30 மணிக்கு மேல் மூலஸ்தான சேவைக்கு அனுமதி அளிக்கவில்லை.

    இன்று (செவ்வாய்க்கிழமை) வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் அதிகாலை திறக்கப்பட்டது.



    இதனையொட்டி இன்று அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் புறப்பட்டார். அதிகாலை  பரமபதவாசல் திறக்கப்பட்டது. பரமபதவாசல் வழியாக எழுந்தருளும் நம்பெருமாள் திருக்கொட்டகையில் பிரவேசமாகினார்.

    திருமாமணி ஆஸ்தான மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். காலை 8.45 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் பொது ஜன சேவைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரவு 12 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள் 19-ந்தேதி அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைவார்.

    இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மூலவர் முத்தங்கி சேவைக்கு அனுமதி உண்டு. இரவு 7 மணிக்கு மேல் அனுமதி கிடையாது. பரமபதவாசல் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கும்.

    நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால் பிறவி பலனை அதாவது மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம் என்பதால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மட்டும் இன்றி பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர்.

    இதனால் கோவில் வளாகத்தில் விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. #VaikundaEkadasi  #Srirangam #Sorgavasal

    மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும்.
    எல்லா சிறப்புகளும் வாய்ந்த மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் இறைவனை வழிபட்ட பலன் கிடைக்கும். திருப்பாவை, திருவெம்பாவை ஓதி வழிபட்டால் நம் பாவங்கள் அழிந்து புண்ணியம் வந்து சேரும்.

    மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும். எல்லா வைணவத் தலங்களிலும் பரமபதவாசல் உண்டு.

    ஏன் ‘பரமபத வாசல்’ என்று பெயர்?

    திருமாலுக்குரிய திவ்ய தேசங்கள் 108. அவற்றில் நாம் பூமியில் காண முடியாதது இரண்டு. ஒன்று வைகுண்டம், மற்றது பரமபதம். விஷ்ணுவை எப்போதும் பாடிப் பரவுகின்ற பக்தர்கள், பகவானின் அணுக்கத் தொண்டர்களாக வசிப்பது இந்தப் பரமபதத்தில்தான். அந்தப் பரமபதத்தில் பகவானுடன் உறையும் பெருமையைப் பெறுவதான வாயில்தான் பரமபத வாசல்.

    ஒரு சமயம் பிரளயத்தில் மூழ்கிவிட்ட உலகத்தை மீண்டும் படைத்த திருமால், மற்ற உயிரினங்களை உண்டாக்க பிரம்மாவை படைத்தார். அப்போது பிரம்மாவை வதைக்க 2 அசுரர்கள் வந்தனர். அவர்களை திருமால் அழித்தார். அப்போது அந்த 2 அசுரர்களும் திருமாலிடம், “நாங்கள் ஸ்ரீவைகுண்டத்தில் வாசம் செய்யும் பாக்கியம் தர வேண்டும்“ என்றனர். அதை ஏற்றுக் கொண்ட திருமால் அவர்கள் இருவரையும் மார்கழி மாத சுக்ல ஏகாதசியன்று வடக்கு நுழைவாயில் வழியாக பரமபதத்துக் அனுப்பி வைத்தார்.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த 2 அசுரர்களும் எங்களுக்கு அருளிய இந்த பரமபத சொர்க்க வாசலை பூமியில் திருவிழாவாக கொண்டாட வேண்டும். அதோடு இந்த வாசல் வழியாக வரும் உங்களை தரிசிப்பவர்களுக்கும், இவ்வாசல் வழியாக வருபவர்களுக்கும், அவர்கள் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் முக்தி அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர். அதன்படியே மார்கழி சுக்ல ஏகாதசியன்று பரமபத வாசல் திறக்கப்படுகிறது.

    அதை உணர்த்தும் விதமாகத்தான், பெருமான் தானே வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் வழியே பக்தர்கள் புடைசூழ வருகிறார். “என்னோடிருப்பீர்களாக” என்று பக்தர் களுக்கு அருளை அளிக்கிறார்.

    ஏகாதசி என்பது திதிகளில் பதினொன்றாவதாக வருவது. ஏகம்+தசி=ஏகாதசி. ஏகம் என்றால் “ஒன்று” என்று பொருள். தசி என்றால் “பத்து” என்று அர்த்தம்.
    ஏகாதசி- என்றால் பதினொன்று நாள் என்று பொருள். ஞானேந்திரியம் 5, கர்மேந்திரியம் -5, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் திருமாலுடன் ஒன்று படுத்தும் நாளே வைகுண்ட ஏகாதசி. இந்த ஒன்றுதல், அவனோடு என்றுமே ஒன்றுவதாக உருப்பெறும் என்பதுதான் ஏகாதசி விரதத்தின் உட்பொருள். அந்த உட்பொருளின் வெளிவடிவாக நடை பெறுவதுதான் பரமபத வாசல் திறப்பும், வைகுண்ட ஏகாதசித் திருநாளும். மார்கழியில் வரும் வளர் பிறை ஏகாதசி தான் சிறப்பானது. இதை பெரிய ஏகாதசி மற்றும் மோட்ச ஏகாதசி என்பார்கள்.

    பரமபதம்

    வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது. இண்டர்நெட்டிலும் பரமபதம் இருப்பது நம் சம்பிரதாயத்தின் தனிச்சிறப்பு.

    விளையாட்டின் ஏணி வழியே ஏறிச்சென்றால் சொர்க்கம். சறுக்கி பாம்பின் வாயில் விழுந்தால் மறுபடியும் அடிப்பகுதிக்கே வரநேரிடும்.ஏணி என்பது புண்ணியம். பாம்பு என்பது பாவம்.

    வைகுண்ட ஏகாதசியன்று இரவு ழுமுவதும் கண் விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டை பெரும்பான்மையான பக்தர்கள் விடியும் வரை விளையாடுவர்.
    ×