search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95580"

    தாமதமாக வீட்டுக்கு வந்த தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் காதல் திருமணம் செய்த மனைவி அதிர்ச்சி அடைந்தார்.

    கோவை:

    கோவை வீரபாண்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 26). தனியார் கம்பெனி ஊழியர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகேயன் ரிபானா பாத்திமா (23) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இருவரும் ரத்தினபுரி சாஸ்த்திரி நகரில் வசித்தனர்.

    இந்நிலையில் கார்த்திகேயன் வேலைக்கு செல்லாமல் இருந்தார். அவரது மனைவி தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று இரவு கார்த்திகேயன் தாமதமாக வீட்டிற்கு வந்தார். ஏன் வீட்டுக்கு வர இவ்வளவு நேரம் என்று ரிபானா பாத்திமா கேட்டார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இன்று காலை கார்த்திகேயன் தூக்கில் தொங்கினார். இதைப்பார்து அதிர்ச்சியடைந்த மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    தற்கொலை குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்புவனம் அருகே திருமணமாகாத ஏக்கத்தில் தொழிலாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்புவனம்:

    திருப்புவனம் மன்னர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த முத்துராஜா என்பவரின் மகன் மகேந்திரன் (வயது 29). திருமணமாகாத இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

     இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து அவரது தந்தை திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். அதில், திருமணமாகாமல் ஏக்கத்தில் மனமுடைந்து காணப்பட்டு வந்த நிலையில், மகேந்திரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியிருந்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். #tamilnews
    ‘தீர்க்க சுமங்கலியாக வாழ்க’ என்ற ஆசிக்குப் பின்னால், மனைவி தன் கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்பதை உணர்த்தும் தத்துவம் அடங்கியிருக்கிறது.
    திருமணமான பெண்களை வாழ்த்தும் பெரியவர்கள் ‘தீர்க்க சுமங்கலியாக வாழ்க’ என்று வாழ்த்துவதைக் கேட்டிருக்கலாம். புராணங்களும், இதிகாசங்களும், வேதங்களும் சொல்லும் ‘தீர்க்க சுமங்கலி பவா’ என்ற அந்த வார்த்தைக்கு, ‘நூறு வயதைக் கடந்தும் சுமங்கலியாக வாழ வேண்டும்’ பொருள் கொள்ளலாம்.

    இந்த ‘தீர்க்க சுமங்கலியாக வாழ்க’ என்ற ஆசிக்குப் பின்னால், மனைவி தன் கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்பதை உணர்த்தும் தத்துவம் அடங்கியிருக்கிறது.

    அந்த 5 மாங்கல்யங்கள் எவை தெரியுமா?

    * திருமணத்தில் ஒன்று
    * ஷஷ்டியப்த பூர்த்தி (60 வயது)யில் ஒன்று
    * பீமரத சாந்தி (70 வயது) யில் ஒன்று
    * சதாபிஷேகத்தில் (80 வயது) ஒன்று
    * கனகாபிஷேகத்தில் (96 வயது) ஒன்று

    திருமணம் என்பது பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு, ஊர்மக்கள் வாழ்த்த நிகழும் ஒரு வைபவம். அது பெரும்பாலானவர்களுக்கு வாய்த்து விடக்கூடிய ஒன்று. ஆனால் ஷஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. அவற்றை நடத்துவதற்கு பெரும் பாக்கியமும், பூர்வ புண்ணியமும் செய்திருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. இது தவிர இது போன்ற வைபவங்களை செய்வது என்பது பொதுவாக ஆயுள் விருத்தியை பிரதானமாகக் கொண்டே அமைகிறது.

    திருமணத்திற்கு பிறகு நடைபெறும் நான்கு சடங்குகளும், உறவு முறைகள் கூடி நின்று குதூகலத்தோடு பங்கேற்கும் போது அந்த தம்பதியரின் மனம் மகிழும். ‘நமக்கென்று இத்தனை சொந்தங்களா?’ என்கிற சந்தோஷம் அவர்களின் மனதை பரவசப்படுத்தும். மேலும் அந்த சடங்குகள் சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டும் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுவதும் காரணம்.

    பூமியானது 360 பாகைகளாகவும், அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு சூரியனுக்கு ஓர் ஆண்டும், செவ்வாய்க்கு 1½ ஆண்டும், சந்திரனுக்கு ஒரு மாதமும், புதனுக்கு ஒரு வருடமும், வியாழனுக்கு 12 வருடங்களும், வெள்ளிக்கு ஒரு வருடமும், சனி பகவானுக்கு 30 வருடங்களும், ராகுவுக்கு 1½ வருடங்களும், கேதுவுக்கு 1½ வருடங்களும் ஆகின்றன.

    இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் பிறந்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும். மிகவும் புனித தினமான அந்த தினத்தில் தான், சம்பந்தப்பட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும். ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.



    பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி, மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும். அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் ஒலியால், கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது. பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.

    அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன? தமிழ் வருடங்களாக மொத்தம் 60 வருடங்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். அந்த 60 ஆண்டுகளுக்கான தேவதைகளையும், அந்த தேவதைகளின் அதிபதிகளாகிய அக்னி, சூரியன், சந்திரன், வாயு, வருணன், அமிர்தகடேஸ்வரம், நவநாயகர்கள், அஷ்டதிக் பாலகர்கள் மற்றும் பாலாம்பிகை ஆகியோரையும் சேர்த்துக் குறிப்பதற்காகவே 84 கலசங்கள் வைக்கப்படுகின்றன.

    பிரபவ முதல் விஷூ வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும், சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும், ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும், பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும் அதிபதிகள் ஆவார்கள்.

    பீமரத சாந்தி

    தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வெற்றிகொள்ளும் மனிதன், அது முதல் தனது என்ற பற்றையும் துறக்க முயற்சி செய்ய வேண்டும். தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டத்தைத் துறந்து, இந்த உலகில் வாழும் அனைவரும் தன் மக்களே என்றும், எல்லாரும் ஒரே குலம் என்றும் எண்ணும் எண்ணமானது ஒருவரது 70-வது வயதில் பூர்த்தியாக வேண்டும். தான், தனது என்ற நிலை மறந்து, அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் ‘பீமரத சாந்தி’யைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள். காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீமரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.

    சதாபிஷேகம்

    70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும், இறைவனைக் காண முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த வயதுடைய மனிதனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை. இப்படி அனைத்திலும் இறைவனையும், அனைத்தையும் இறைவனாகவும் காணும் நிலையை ஒரு மனிதன் 80-வது வயதில் அடைகிறான். அதே வேளையில் ‘சஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி’ என்றும் ஆயிரம் பிறை கண்டவன் என்ற தகுதியையும் பெறுகிறான். அந்த நேரத்தில் தான் சதாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்.

    கனகாபிஷேகம்

    இறையோடு இரண்டறக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு, 96 வயதில் கனகாபிஷேகம் செய்ய வேண்டும். அந்த கனகாபிஷேகத்தில் தான் ஒரு பெண், தன் கணவன் மூலமாக ஐந்தாவது மாங்கல்யத்தைப் பூட்டிக் கொள்கிறாள். மேலும் ‘தீர்க்க சுமங்கலியாக வாழ்க’ என்ற ஆசிக்கு உரியவளாகவும் மாறுகிறாள்.
    கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பல்லவராயநத்தம் குயிலா பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவகுரு. இவரது மகள் சிவசங்கரி (வயது 17). இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி பி.பி.எம். படித்து வருகிறார். விடுமுறை நாட்களில் பண்ருட்டியில் உள்ள வீட்டுக்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் சிவசங்கரிக்கும், சன்னியாசி பேட்டை பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் வடிவேல் (23) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. அன்று முதல் 2 பேரும் பல இடங்களுக்கு தனிமையில் சென்று பழகி வந்தனர்.

    இருவரின் பெற்றோருக்கும் தெரியாமல் கடந்த டிசம்பர் மாதம் புதுவை காலாப்பட்டு பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் சிவசங்கரியும், வடிவேலும் திருமணம் செய்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து வழக்கம்போல் சிவசங்கரி கல்லூரிக்கு சென்று விட்டார். வடிவேல் வேலைக்கு சென்று வந்தார்.

    பின்னர் அடிக்கடி அவர்கள் தனிமையில் வெளியூர் சென்று வந்தனர். அப்போது வடிவேல், சிவசங்கரியிடம், நமக்குதான் திருமணம் நடந்து விட்டதே. இனி யாருக்கும் பயப்படதேவையில்லை என்று கூறி பல முறை உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வடிவேல், சிவசங்கரியை பார்ப்பதையும், செல்போனில் பேசுவதையும் நிறுத்தி விட்டார். இதனால் மனவேதனை அடைந்த சிவசங்கரி சன்னியாசிப் பேட்டைக்கு சென்று வடிவேலின் வீட்டுக்கு சென்றார்.

    அங்கு இருந்த வடிவேலிடம், எதற்காக என்னிடம் போனில் பேசவில்லை. என்னையும் சந்திக்க வரவும் இல்லை என்று கேட்டார்.

    உடனே வடிவேல், நீ வேறு சமூகத்தை சேர்ந்த பெண் என்பதால் உன்னை எனது பெற்றோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் நாம் பிரிந்து விடலாம். எனவே நான் ஏற்கனவே கட்டிய தாலியை கழற்றி என்னிடம் கொடுத்து விடு என்று கூறியுள்ளார்.

    ஆனால், தாலியை கழற்றி கொடுக்க சிவசங்கரி மறுத்து விட்டார். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வடிவேல், சிவசங்கரியை தகாதவார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலுவை கைது செய்தனர்.

    கம்பத்தில் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண்ணை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    கம்பம் பஸ் நிலையம் அருகே உள்ள பாரதியார் தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி மகள் மதுமிதா (வயது26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலு மகன் புவனேஷ் என்பவருக்கும் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணத்தின்போது 40 பவுன் நகை, சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன. திருமணமான சில நாட்களிலேயே மதுமிதாவிடம் மேலும் ரூ.20 லட்சம் வாங்கி வரச்சொல்லி வற்புறுத்தி உள்ளனர்.

    இதில் ரூ10 லட்சத்தை தாய் வீட்டில் இருந்து மதுமிதா வாங்கி கொடுத்துள்ளார். மேலும் ரூ.10 லட்சத்தை வாங்கி வரச்சொல்லி உள்ளனர்.

    தாமதமானதால் புவனேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மதுமிதாவை கொடுமைப்படுத்தி உள்ளனர். சம்பவத்தன்று புவனேஷ், மதுமிதாவை தாக்கி மிரட்டி உள்ளார்.

    இது குறித்து தேனி மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனிடம் மதுமிதா புகார் அளித்தார். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுபடி உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார் புவனேஷ் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை ஆனையூர் ஜெ.ஜெ.நகரில் உள்ள முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் காஜல் (வயது 18). திருமணமான இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

    காஜல் அதே பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் அவர் கூடல்புதூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், நான் பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்தபோது எனக்கும், சஞ்சீவி நகரைச் சேர்ந்த சுருளிவேல் மகன் சுர்ஜித் குமார் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.

    என்னை திருமணம் செய்வதாக கூறி சுர்ஜித்குமார் பலமுறை நெருங்கி பழகினார். தற்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித்குமாரை கைது செய்தனர்.

    முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்ததாக வாலிபர் மீது புகார் செய்யப்பட்டுள்ளதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டை கிழக்குத்தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 28). கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர். இவரது மனைவி அமரஜோதி (26).

    விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த இவர், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் முருகனுக்கு இந்துமதி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். அதனை மறைத்து என்னை 2-வது திருமணம் செய்துள்ளார். எனது நகைகளை பறித்து விற்பனை செய்து விட்டதோடு அதனை கேட்டால் அடித்துக்கொடு மைப்படுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதற்கிடையில் சப்-இன்ஸ்பெக்டர் தன்னை தாக்கியதாக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் முருகன் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் சுமதி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    தற்போது மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலில் பெண்கள் தங்களைவிட குறைவான வயதுடைய ஆண்களைத் திருமணம் செய்து கொள்ளவும் ஆண்கள் தங்களைவிட வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார்கள்.
    நம்முடைய முன்னோர்கள் காலத்தில் திருமணத்தில் பெண்கள் வயது குறைந்தவர்களாகவும் ஆண்கள் வயதில் பெரியவர்களாகவும் இருந்தார்கள். அதற்குப் பல்வேறு அறிவியல் காரணங்கள் கூறப்பட்டன. ஆனால் தற்போது மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலில் பெண்கள் தங்களைவிட குறைவான வயதுடைய ஆண்களைத் திருமணம் செய்து கொள்ளவும் ஆண்கள் தங்களைவிட வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார்கள்.

    இந்திய தாம்பத்ய வாழ்வியல் கலாசாரப்படி திருமணத் தம்பதிகளில் பெண்ணிற்கு வயது குறைவாகவும், ஆணிற்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டன. தன்னோடு வாழ்க்கையில் இணையும் பெண்ணை ஆண்தான் வழிநடத்தவேண்டும் என்பதாலும், உலக அனுபவம் ஆண்களுக்கு அதிகம் என்பதாலும் கணவர், மனைவியைவிட வயதில் சற்று அதிகமானவராக இருக்கவேண்டும் என்ற நியதி வகுக்கப்பட்டிருக்கிறது.

    பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அப்போதும் பெண்கள் சிந்திக்கும் திறன் படைத்தவர்களாகவே இருந்தபோதிலும் அவர்களின் சிந்தனையை அவ்வளவாக அங்கீகரிக்கவில்லை. எதிர்த்து கேள்வி கேட்பதை தடுத்தார்கள். எப்போதும் அடங்கி நடக்கவேண்டும் என்றார்கள். அதனால் வயதிலும் தன்னைவிட பெண் குறைவாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அதற்காகத்தான் தங்களைவிட வயது குறைந்த பெண்களை திருமணம் செய்தார்கள் என்ற கருத்தொன்று உண்டு.  

    உடல்ரீதியாக பார்த்தால் ஆண்கள் அதிக காலம் இளமையாக இருப்பார்கள். பெண்கள் பிரசவத்திற்கு பிறகு இளமைப் பொலிவை சற்று இழக்கத் தொடங்கிவிடுவார்கள். அதனால் உடற்கட்டு குலையும். ஆகவே நிகரான ஜோடியாக திகழ மனைவி, கணவரைவிட வயது குறைந்தவராக இருக்கவேண்டும் என்றார்கள். ‘பெண்கள் குறிப்பிட்ட வயதுக்குள் தாய்மையடையவேண்டும். ஆண்களுக்கு அப்படி எந்த வரம்பும் இல்லை. அதனால்தான் பெண்ணுக்கு, ஆணைவிட குறைந்த வயதிலே திருமணம் செய்துவைக்கப்படுகிறது’ என்ற கருத்தும் உண்டு.

    இப்படி சொல்லப்பட்ட காரணங்களை எல்லாம் இன்றைய சமூகம் குப்பையில் தூக்கிப்போட்டுவிட்டது. இப்போது வயது ஒரு பொருட்டில்லை. தன்னை விட வயதில் மூத்த பெண்ணாக இருந்தாலும் விரும்பி மனம் ஒத்து திருமணம் செய்துகொண்டு ஆண்கள் சிறப்பாக வாழ்கிறார்கள்.

    காலம் மாறிவிட்டது. அதனால் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுவிட்டன. காலத்திற்கேற்ப மனிதர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் தவறென்ன இருக்கிறது என்கிற குரல் ஒலிக்கத்தொடங்கிவிட்டது.

    ஈரோட்டை சேர்ந்த மைனர் பெண்ணை கடத்தி கட்டாய திருமணம் செய்தது தொடர்பாக அம்மாபேட்டையை சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    அம்மாபேட்டை:

    ஈரோடு செங்கோடம் பாளையத்தை சேர்ந்த 15 வயது மைனர் பெண் அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சி சந்தை கரையில் உள்ள அத்தை வீட்டில் தங்கி இருந்தார். இவரது தாயாரும் அங்கேயே இருந்தார்.

    சம்பவத்தன்று குறிச்சி பெரிய வாய்க்காலில் இளம்பெண் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அவருடன் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் சிலரும் குளித்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது பெருந்துறை அடுத்த குஞ்சரமடை சத்யாபுரத்தை சேர்ந்த ஜெகதீஸ் மற்றும் அவரது மனைவி லோகேஸ்வரி ஆகியோர் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    வாய்க்காலில் துணி துவைத்து கொண்டிருந்த இளம்பெண்ணை அழைத்து திடீரென மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இதை கண்ட மற்ற பெண்கள் இது குறித்து அந்த இளம்பெண்ணின் தாயாரிடம் வி‌ஷயத்தை சொன்னார்கள்.

    இந்த நிலையில் கடத்தப்பட்ட பெண்ணுக்கும், திவாகர் என்பவருக்கும் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் தாயார் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இது குறித்து போலீசார் ஜெகதீஸ், லோகேஸ்வரி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    திண்டுக்கல் அருகே திருமணத்திற்கு பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை செங்குறிச்சி சடையம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த உறவினரான பிளஸ்-1 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இதுநாளடைவில் காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். ஆனால் உறவு முறையில் லட்சுமணன் அந்த பெண்ணுக்கு சித்தப்பா என்பதால் உறவினர்கள் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    ஆனால் லட்சுமணன் அந்த பெண்ணை திருமணம் செய்வது என முடிவு செய்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவியை லட்சுமணன் திருமண ஆசை காட்டி கடத்திச்சென்றார். அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மாணவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் வடமதுரை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை கடத்திய லட்சுமணனை தேடி வருகின்றனர்.

    திருமணம் நடக்காததால் தாயுடன் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோபி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோபி:

    கோபி அருகே உள்ள தாளக்கொம்பு புதூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 60). இவரது மகன் குணசேகரன் (40). விவசாயி. இவர்கள் நேற்று இரவு வீட்டை உள்பக்கமாக பூட்டி விட்டு தூங்க சென்றனர். இன்று காலை வீடு திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் சத்தம் இல்லை.

    எனவே வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்தனர். அப்போது லட்சுமியும், குணசேகரனும் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தனர்.

    இதையடுத்து பிணங்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி கோபி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது குணசேகரனுக்கு திருமணம் ஆகாததால் தாயும், மகனும் விரக்தியில் இருந்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    கண்மூடித்தனமான காதலில் மிதக்கும் காதலர்கள் திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளில் அன்பு கசந்து விடுகிறது. இதற்கான காரணத்தையும் தீர்வையும் பார்க்கலாம்.
    அந்த அளவு கண்மூடித்தனமான காதலில் மிதக்கும் காதலர்கள் திருமணத்திற்கு பின் சில ஆண்டுகளில் அன்பு கசந்து விடுகிறது. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல் அனைத்து இல்லற வாழ்விழும் மந்தம் தட்டும். தாம்பத்திய வாழ்க்கை ஓய்ந்து விடும். ஒருவர் மீது மற்றொருவருக்கு இருக்கும் ஆர்வம் குறைந்து விடும். இது இயல்பு தான். எனினும் 100ல் 10 பேர் 60 70 வரையிலும் அன்பும் பாசமும் வழியும் வாழ்வை பெறுகின்றனர். இவர்கள் வரம் பெற்றவர்களா?

    தாம்பத்திய வாழ்வில் கசப்பு ஏன்? மற்றும் அக்கசப்பை அப்புறபடுத்துவது எப்படி? என பிரபல மனோதத்துவ மருத்துவர்கள் விளக்குகின்றனர். படித்து பயன் பெறுங்கள்.

    தாம்பத்தியத்தில் கசப்பு வந்து விட்டதா? எப்படி கண்டுபிடிப்பது?

    * வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் உடல் அலுப்பாக இருக்கிறது என்று தாம்பத்தியத்தை ஒதுக்குகிறீர்களா? இல்லை தாம்பத்தியம் வேண்டாம் என்று உடல் அலுப்பை காரணம் காட்டுகிறீர்களா? இரண்டாவது ஒன்று தான் நீங்கள் செய்கிறீர்கள் என்றால் உங்கள் தாம்பத்தியம் கசப்பை கக்க தொடங்கியுள்ளது என புரிந்துக்கொள்ளுங்கள்.

    * மனைவியை எரிந்து கொட்டி திட்டிவிட்டு பின் மன்னிப்பு கேட்பீர்களா? இல்லை அப்படியே மறந்து விட்டு வேறு வேலையை பார்த்துக்கொண்டு போகிறீர்களா? இங்கு தாம்பத்தியம் எந்த நிலையில் இருக்கிறது என தெரிந்துக்கொள்ளலாம்.

    * உணவில் ருசி இருந்தும் நாவில் தென்படவில்லையா?

    * வீட்டிற்கு செல்லும் ஆர்வம் குறைந்து விட்டதா?

    * விடுமுறைகளில் இருவரும் சேர்ந்து செலவிட்ட தருணங்களை இப்போதும் காண முடிகிறதா?

    * வீட்டில் பட்ஜட், குழந்தைகள் பற்றி மட்டும் தான் பேச்சு எழுகிறதா? கேலி கிண்டல் செய்து சிரித்து பேசும் தருணங்கள் இப்போது எல்லாம் கிடைப்பதில்லையா?

    இதுவெல்லாம் தாம்பத்தியம் கசந்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு அறிகுறிகள்.

    எப்படி சரி செய்வது?

    * விடுமுறைகளை வீட்டில் கழிக்காமல் கணக்கிட்டு வெளியே சென்று வாருங்கள்.

    * கோபத்தில் திட்டினால் அன்று இரவு உணவு வேலையில் மன்னிப்பு கேட்டுவிடுங்கள். சண்டைக்குப்பின் வரும் கூடல், சாதாரணத்தை விட இனியது.

    * மனைவி தாய் வீட்டிற்கு செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டால் அனுப்பி வையுங்கள். பிரிவின்போது ஒரு ஏக்கம் வரும். நினைவெல்லாம் உங்களிடம் தான் இருக்கும். 2 நாள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் உங்களிடம் திரும்பி வந்து விடுவார். குட்டி குட்டி பிரிவுகள், சண்டைகள் நன்மைதான்.

    * பிள்ளைகளை பாட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டு கொஞ்சம் தனிமையை ரசித்து அனுபவியுங்கள். பாட்டி தாத்தா இல்லை எனில் பள்ளிக்கு சென்று விடும் நேரத்தில் பாச வலையை வீசுங்கள்.

    * காமம் இல்லையெனினும், காதலோடு அவ்வப்போது தொட்டு துணையின் பரிசத்தை உணருங்கள்.

    * மற்றவர்களை பற்றி பேசுவது தவறு என்றாலும், 4 சுவற்றிற்குள் எதுவும் தவறில்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் துணையின் தோழர்களை பற்றி கோபமாக குறை சொல்வதை குழந்தையாக பாவித்து ரசித்து கேளுங்கள்.

    * இரண்டாவது ஹனிமூன் தவறில்லை. ஒப்புக்கொள்ளுங்கள்.

    * பணிக்கு செல்லாமல் ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள். துணையுடன் இனிமையான விசயங்களை பகிர்ந்து பொழுதை போக்குங்கள். தவறில்லை.

    இதுபோன்ற விசயங்களை செய்து வந்தால் கணவன் மனைவி இடையே ஈர்ப்பு என்றென்றும் குறையாமல் இருக்கும். வீடும் வசந்தமாக மாறும். 
    ×