search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீரங்கம்"

    108 வைணத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாக திகழும் திருவரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் ‘ஏழு’ என்ற எண்ணிக்கையில் அமைந்த சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்..
    பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட, 108 வைணத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாக, திருவரங்கம் அரங்கநாதர் கோவில் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் ‘ஏழு’ என்ற எண்ணிக்கையில் அமைந்த சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்..

    ‘பெரிய’ பெருமை

    * பெரிய கோவில்
    * பெரிய பெருமாள்
    * பெரிய பிராட்டியார்
    * பெரிய கருடன்
    * பெரிய வசரம்

    (நைவேத்தியம்)

    * பெரிய திருமதில்
    * பெரிய கோபுரம்

    நாச்சியார்கள்

    * ஸ்ரீதேவி
    * பூதேவி
    * துலுக்க நாச்சியார்
    * சேரகுலவல்லி நாச்சியார்
    * கமலவல்லி நாச்சியார்
    * கோதை நாச்சியார்
    * ரெங்கநாச்சியார்

    பிரகாரங்கள்

    * பூலோகம் - மாடங்கள் சூழ்ந்த திருச்சுற்று
    * புவர்லோகம் - திரிவிக்ரம சோழன் திருச்சுற்று
    * சுவர்லோகம் - கிளிச்சோழன் திருச்சுற்று
    * மஹர்லோகம் - திருமங்கை மன்னன் திருச்சுற்று
    * ஜநோலோகம் - குலசேகரன் திருச்சுற்று
    * தபோலோகம் - ராஜமகேந்திர சோழன் திருச்சுற்று
    * சத்யலோகம் - தர்மவர்ம சோழன் திருச்சுற்று

    ஆழ்வார்கள் சன்னிதி

    திருமாலைப் பற்றி பாடல்களைப் பாடி அருளியுள்ள பன்னிரண்டு ஆழ்வார்களும், திருவரங்கம் ஆலயத்தில் 7 சன்னிதிகளில் வீற்றிருக்கிறார்கள்.

    * பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்
    * நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார்
    * குலசேகர ஆழ்வார் * திருப்பாணாழ்வார்
    * தொண்டரடிப்பொடி ஆழ்வார் * திருமழிசை ஆழ்வார்
    * பெரியாழ்வார், ஆண்டாள்

    தங்க குதிரை வாகனம்

    திருவரங்கம் கோவிலில் நடைபெறும் விழாக்களில், ஆண்டுக்கு 7 முறை மட்டுமே, தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருள்வார். அந்த விழாக்கள்..

    * விருப்பன் திருநாள்
    * வசந்த உற்சவம்
    * விஜயதசமி
    * வேடுபறி
    * பூபதி திருநாள்
    * பாரிவேட்டை
    * ஆதி பிரம்மோற்சவம்

    தாயார் உற்சவம்

    * கோடை உற்சவம்
    * வசந்த உற்சவம்
    * ஜேஷ்டாபிஷேகம்
    * நவராத்திரி
    * ஊஞ்சல் உற்சவம்
    * அத்யயன உற்சவம்
    * பங்குனி உத்திரம்

    தென்திசை கோபுரங்கள்

    * நாழிகாட்டான் கோபுரம்
    * ஆர்யபடால் கோபுரம்
    * கார்த்திகை கோபுரம்
    * ரங்கா ரங்கா கோபுரம்
    * தெற்கு கட்டை கோபுரம்
    * தெற்கு கட்டை கோபுரம்-2
    * தெற்கு ராஜகோபுரம்
    கார்த்திகை தீப திருநாளையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனைக்காக முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலின் கார்த்திகை கோபுரம் அருகே சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும். அதனை நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி கண்டருளுவார்.

    இதையொட்டி சொக்கப்பனை பந்தல் அமைக்க முகூர்த்தக்கால் நடும் விழா கார்த்திகை கோபுரம் அருகே நேற்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றது. அதுசமயம் சுமார் 20 அடி உயரம் உள்ள தென்னை மரக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை மற்றும் பூமாலை உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    அதன் பின்னர் முகூர்த்தக்காலை கோவில் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானைகள் ஆண்டாள்,லட்சுமி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின. நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த பந்தல் காலை சுற்றி சுமார் 5 அடி அகலத்திற்கும் 20 அடி உயரத்திற்கும் சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
    நம்பெருமாள் படியேறும் போது பக்தர்கள் பச்சை கற்பூரப்பொடியை நம்பெருமாள் மீது தூவினர். இந்த கற்பூர படியேற்ற சேவையை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
    108 வைணவத்திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    இந்தாண்டு கைசிக ஏகாதசி விழா நேற்று முன் தினம் தொடங்கி நேற்று அதிகாலை வரை நடைபெற்றது. இதனையொட்டி நேற்று முன்தினம் முதல் புறப்பாடாக, உற்சவ நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காலை 10.30 மணிக்கு சந்தனு மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு காலை 11.30 மணி முதல் நண்பகல் 1.30 மணிவரை நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சந்தனுமண்டபத்திலிருந்து நம்பெருமாள் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். 2-வது புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு இரவு 9.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை 365 வஸ்திரங்களும், 365 தாம்பூலங்களும், அரையர் சேவையுடன் 365 கற்பூர ஆரத்தியும் சமர்ப்பித்தனர்.

    இரவு 11.30 மணி முதல் நேற்று அதிகாலை 2 மணிவரை நம்பெருமாள் முன் கைசிக புராணம் (பக்திக்கு குலம் தடை இல்லை என்பதை உணர்த்துதல்) எனப்படும் பக்தர் நம்பாடுவான் வரலாற்றை பக்தி சிரத்தையோடு பெருமாள் முன் பட்டர் படித்தார்.

    பின்னர் அதிகாலை 5.15 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 2-ம் பிரகாரத்தில் மேலப்படி வழியாக காலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை கண்டருளி காலை 6 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். அவ்வாறு நம்பெருமாள் படியேறும் போது பக்தர்கள் பச்சை கற்பூரப்பொடியை நம்பெருமாள் மீது தூவினர். இந்த கற்பூர படியேற்ற சேவையை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

    கைசிக ஏகாதசியை முன்னிட்டு இரவு முழுவதும் விடிய, விடிய பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
    கைசிக ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வஸ்திர மரியாதை நேற்று வழங்கப்பட்டது.
    கி.பி.1320-ம் ஆண்டில் ஸ்ரீரங்கத்தில் மாற்று மதத்தவரின் படையெடுப்பின் காரணமாக சுமார் 40 ஆண்டு காலம் ஸ்ரீரங்கம் கோவில் நம்பெருமாள் திருப்பதி திருமலை கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டார்.

    இவ்வாறு அவர் வைக்கப்பட்டிருந்த மண்டபம் திருமலை கோவிலில் ரெங்கநாயகலு மண்டபம் என்னும் பெயரில் இன்றும் உள்ளது. நம்பெருமாள் திருமலையில் இருந்த ரெங்கநாயகலு மண்டபத்தில் தான் இக்கோவிலின் முக்கிய நிகழ்வுகள் பல இன்றளவும் நடைபெறுகின்றன.

    திருமலைக்கும், ஸ்ரீரங்கத்துக்கும் நீண்டகாலமாக மங்கல பொருட்கள் பரிவர்த்தனை இருந்தது. காலப்போக்கில் அவை நின்று போயின. தற்போது அவை ஒவ்வொன்றாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வகையில் ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி நாளில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானத்திலிருந்து புது வஸ்திர மரியாதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி இந்த ஆண்டு ரெங்கநாதர் மூலவர், நம்பெருமாள் உற்சவர், ஸ்ரீரெங்கநாச்சியார் மற்றும் ராமானுஜருக்கு வஸ்திரங்கள், குடைகள், மரியாதைகளை திருமலை திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

    நேற்று ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீரங்கவிலாச மண்டபத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த திருப்பதி தேவஸ்தான வஸ்திர மரியாதை காலை 7 மணிக்கு புறப்பட்டு வீதிஉலா வந்தது. மங்கல பொருட்களை யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் இருந்து வஸ்திரமரியாதையை கருடாழ்வார் மண்டபத்தில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணா மற்றும் அர்ச்சகர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஊஞ்சல் உற்சவம் விழா நேற்று நிறைவு பெற்றது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு இவ்விழா கடந்த 6-ந்தேதி தொடங்கியது. நிறைவு நாளான நேற்று மாலை 5.30 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார்.

    அங்கு ரெங்கநாச்சியார் இரவு 7 மணி முதல் இரவு 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார். பின்னர் இரவு 8.45 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திலிருந்து புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நிறைவு பெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    ரெங்கநாச்சியார் தங்ககிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், காசு மாலை, நெல்லிக்காய் மாலை, முத்துச்சரம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்களை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிகழ்வு டோலோத்ஸவம் என்றும் அழைக்கப்படுகிறது. ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 12-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்க நாச்சியார் ஊஞ்சல் உற்சவசம் நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான 7-ம்தேதி உற்சவர் ரெங்கநாச்சியார் முத்துசாய் கிரீடம், வைரத்தோடு, ரத்தின அபயஹஸ்தம், காசுமாலை, முத்துச்சரம், பவளமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    3-ம் நாளான 8-ம்தேதி உற்சவர் ரெங்கநாச்சியார் தங்க கிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், காசுமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    4-ம் நாளான 9-ம்தேதி உற்சவர் ரெங்கநாச்சியார் ரத்தினகிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், காசுமாலை, பெரிய பவள மாலை, முத்துச்சரம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    6-ம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் தங்ககிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், காசு மாலை, நெல்லிக்காய் மாலை, முத்துச்சரம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்களை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

    ஊஞ்சல் உற்சவ நாட்களில் காலை 6.30 மணிமுதல் காலை 7.30 மணிவரை, காலை 9 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை, மாலை 5.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரை மூலவர் சேவை உண்டு. மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.
    4-ம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் ரத்தினகிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், காசுமாலை, பெரிய பவள மாலை, முத்துச்சரம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிகழ்வு டோலோத்ஸவம் என்றும் அழைக்கப்படுகிறது. ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 12-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்க நாச்சியார் ஊஞ்சல் உற்சவசம் நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான 7-ம்தேதி உற்சவர் ரெங்கநாச்சியார் முத்துசாய் கிரீடம், வைரத்தோடு, ரத்தின அபயஹஸ்தம், காசுமாலை, முத்துச்சரம், பவளமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    3-ம் நாளான 8-ம்தேதி உற்சவர் ரெங்கநாச்சியார் தங்க கிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், காசுமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    4-ம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் ரத்தினகிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், காசுமாலை, பெரிய பவள மாலை, முத்துச்சரம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    ஊஞ்சல் உற்சவ நாட்களில் காலை 6.30 மணிமுதல் காலை 7.30 மணிவரை, காலை 9 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை, மாலை 5.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரை மூலவர் சேவை உண்டு. மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 03.12.2021 முதல் 24.12.2021 வரை நடைபெறவிருக்கிறது. 14-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    பூலோக வைகுண்டமாகவும், 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும் திகழும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பு வாய்ந்தது.

    இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 03.12.2021 முதல் 24.12.2021 வரை நடைபெறவிருக்கிறது. பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று காலை ஆயிரங்கால் மண்டபம் அருகே நடைபெற்றது.

    விழாவையொட்டி 3-ந் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி நடக்கிறது. 4-ந்தேதி பகல் பத்து உற்சவத்துடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து 13-ந்தேதி நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் அருள்பாலிக்கிறார்.

    14-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு நம்பெருமாள் அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    20-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 21-ந்தேதி தீர்த்தவாரியும், 23-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது. அன்றுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று காலை 04.45 மணி முதல் இரவு 10.00 மணி வரை சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஊஞ்சல் உற்சவ விழாவின் 3-ம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் தங்க கிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், காசுமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிகழ்வு டோலோத்ஸவம் என்றும் அழைக்கப்படுகிறது. ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 12-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்க நாச்சியார் ஊஞ்சல் உற்சவசம் நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான 7-ம்தேதி உற்சவர் ரெங்கநாச்சியார் முத்துசாய் கிரீடம், வைரத்தோடு, ரத்தின அபயஹஸ்தம், காசுமாலை, முத்துச்சரம், பவளமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    3-ம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் தங்க கிரீடம், வைரத்தோடு, வைர அபயஹஸ்தம், காசுமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    ஊஞ்சல் உற்சவ நாட்களில் காலை 6.30 மணிமுதல் காலை 7.30 மணிவரை, காலை 9 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை, மாலை 5.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரை மூலவர் சேவை உண்டு. மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.

    உற்சவர் ரெங்கநாச்சியார் முத்துசாய் கிரீடம், வைரத்தோடு, ரத்தின அபயஹஸ்தம், காசுமாலை, முத்துச்சரம், பவளமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிகழ்வு டோலோத்ஸவம் என்றும் அழைக்கப்படுகிறது. ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 12-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்க நாச்சியார் ஊஞ்சல் உற்சவசம் நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் முத்துசாய் கிரீடம், வைரத்தோடு, ரத்தின அபயஹஸ்தம், காசுமாலை, முத்துச்சரம், பவளமாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருஆபரணங்கள் அணிந்து ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    ஊஞ்சல் உற்சவ நாட்களில் காலை 6.30 மணிமுதல் காலை 7.30 மணிவரை, காலை 9 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை, மாலை 5.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரை மூலவர் சேவை உண்டு. மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.

    ஊஞ்சல் உற்சவத்தையொட்டி இன்று மாலை 5.30 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைகிறார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிகழ்வு டோலோத்ஸவம் என்றும் அழைக்கப்படுகிறது. ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 12-ந் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.

    ஊஞ்சல் உற்சவத்தையொட்டி இன்று மாலை 5.30 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைகிறார். அங்கு ரெங்கநாச்சியார் இரவு 7 மணி முதல் இரவு 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் இரவு 9 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    ஊஞ்சல் உற்சவ நாட்களில் காலை 6.30 மணிமுதல் காலை 7.30 மணிவரை, காலை 9 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை, மாலை 5.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரை மூலவர் சேவை உண்டு. மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.
    ரதயாத்திரையில் வந்த துறவியர் மற்றும் சன்னியாசிகள் காவிரித்தாய் சிலைக்கு அம்மா மண்டபம் படித்துறை அருகே அபிஷேக, ஆராதனையுடன் கூட்டு வழிபாடு நடத்தினர்.
    அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தில் புனித நதியான காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் தலைக்காவிரியில் தொடங்கி காவிரியாறு வங்கக்கடலில் கலக்கும் பூம்புகார் வரை நதிநீரின் புனிதத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், நதிநீர் மாசுபடாமல் பாதுகாக்க வலியுறுத்தியும் சிறப்பு ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி 11-ம் ஆண்டு ரதயாத்திரை, குடகுமலையில் அகில பாரத சன்னியாசிகள் சங்க நிறுவனர் மற்றும் துணைத்தலைவர் சுவாமி ராமானந்தா தலைமையில் கடந்த 23-ந்தேதி தொடங்கியது. நேற்று மாலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திற்கு வந்த காவிரி ரதயாத்திரைக்கு விசுவ இந்து பரிஷத் மாநில அமைப்பு செயலாளர் சேதுராமன், பா.ஜ.க. மாநகர் மாவட்ட தலைவர் புவனேஸ்வரி மற்றும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மேளதாளம், வாணவேடிக்கை முழங்க பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து ரதயாத்திரையில் வந்த துறவியர் மற்றும் சன்னியாசிகள் காவிரித்தாய் சிலைக்கு அம்மா மண்டபம் படித்துறை அருகே அபிஷேக, ஆராதனையுடன் கூட்டு வழிபாடு நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து காவிரித்தாய்க்கு மகா ஆரத்தி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர், காவிரி யாத்திரை ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதானந்த சரஸ்வதி, வித்யாம்பா சரஸ்வதி மாதாஜீ, அறங்காவலர் கண்ணன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த காவிரி ரதயாத்திரை திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக வருகிற 11-ந் தேதி பூம்புகாரில் நிறைவடைகிறது.

    ×