search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95993"

    • கர்நாடக மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 20 கடைசி நாள்.
    • காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாராத்தை தொடங்கியுள்ளனர்.

    கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வாக்குப் பதிவு மே 10 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தை துவங்கியுள்ளனர்.

    அம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் காரணமாக பல்வேறு தொகுதிகளில் விழா கோலம் பூண்டுள்ளது. தேர்தலை ஒட்டி இருகட்சி மட்டுமின்றி சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஷாமனூர் சிவசங்கரப்பா தேர்தலில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

     

    91 வயதான சிவசங்கரப்பா தேர்தலில் போட்டியிடுவது பற்றி கூறும் போது, "எனக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கும், கடவுள் அருளும் உள்ளது. வேறென்ன வேண்டும்? இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்து இருக்கிறார்.

    கர்நாடக மாநிலத்தின் தேவாங்கரெ தெற்கு தொகுதியில் போட்டியிடும் சிவசங்கரப்பா, இந்த தேர்தலில் போட்டியிடும் மூத்த வேட்பாளர் ஆவார். தேவாங்கரெ வடக்கு தொகுதியில் சிவசங்கரப்பாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எஸ்எஸ் மல்லிகார்ஜூன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தபால் கார்டு அனுப்பும் போராட்டம் நேற்று நடந்தது.
    • போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் அதானி தொடர்பான 3 கேள்விகள் அடங்கிய தபால் கார்டை பிரதமருக்கு அனுப்பும் போராட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தபால் கார்டு அனுப்பும் போராட்டம் நேற்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை தாங்கி, தூத்துக்குடி தலைமை தபால்

    அலுவலகத்தில் தபால்கார்டுகளை தபால் பெட்டியில் போட்டார். தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் கையெழுத்திட்டு தபால் கார்டுகளை பெட்டியில் போட்டனர்.

    இதில் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஜான்சாமுவேல், மேற்கு, தெற்கு மண்டல தலைவர்கள் ராஜன் செந்தூர்பாண்டி, மாவட்ட துணை தலைவர்கள் விஜயராஜ், பிரபாகரன், அருணாசலம், தனபால்ராஜ், மாவட்ட பொது செயலாளர் சின்ன காளை, செயலாளர்கள் கோபால், காமாட்சிதனபால், ஆரோக்கியம், வெங்கட சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாஜகவில் இருந்து விலகிய எச்.டி.தம்மையா, சிக்கமகளூரு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
    • மொத்தம் உளள் 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி இதுவரை மொத்தம் 216 வேட்பாளர்களை அறிவித்துள்ளது

    பெங்களூரு:

    கர்நாடகாவில் அடுத்த மாதம் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று நான்காவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 7 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஹூப்ளி-தர்பாத் மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதேபோல் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த எச்.டி.தம்மையா, சிக்கமகளூரு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் பாஜக சார்பில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி போட்டியிடுகிறார். இதேபோல் முதல்வர் பசவராஜ் பொம்மை போட்டியிடும் ஷிகான் தொகுதியில் அவரை எதிர்த்து முகமது யூசுப்பை நிறுத்தி உள்ளது.

    தற்போதைய எம்எல்ஏ துர்கப்பா எஸ்.ஹூலகேரி, லிங்சுகர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். ஹரிஹர் தொகுதி எம்எல்ஏ ராமப்பாவுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த தொகுதியில் நந்தகவி ஸ்ரீனிவாஸ் போட்டியிடுகிறார். ஹூங்ளி தர்வாட் மேற்கு தொகுதியில் தீபக்சின்சோர், ஷரவணபெலகோலா தொகுதியில் கோபாலசுவாமி நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மொத்தம் உளள் 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி இதுவரை மொத்தம் 216 வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடக மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

    பெங்களூரு:

    224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கர்நாடக மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கர்நாடகாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    நேற்று முந்தினம் தேர்தல் பணிக்காக அண்ணாமலை கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்திற்கு வந்தார். பெரும்பாலும் காரில் பயணிக்கும் அவர் நேற்று ஹெலிகாப்டர் மூலம் உடுப்பி வந்தார். அவரின் அந்த ஹெலிகாப்டர் பயணம் தான் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அவர் வந்த ஹெலிகாப்டரில் பைகளில் பெருமளவு பணம் கொண்டு வரப்பட்டது என்று உடுப்பி மாவட்டம் கப்பு தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வினய் குமார் சொர்கி குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டு தமிழகம் மற்றும் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

    நாங்கள் நேர்மையானவர்கள். அவதூறு பரப்பும் காங்கிரசார் வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர். பா.ஜ.க.வுடன் போட்டியிட பயந்துதான் சொரகே இப்படி பேசுகிறார். கப்பு தொகுதியில் எங்கள் வேட்பாளர் குர்மே சுரேஷ் ஷெட்டி வெற்றி பெறுவது உறுதி.

    நான் ஹெலிகாப்டரில் வந்தது உண்மைதான். உடுப்பியிலிருந்து அவசரமாக 5 நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டது. சூல்யா, தீர்த்தஹள்ளி, சிக்கமகளூரு அனைத்தும் சற்று தூரத்தில் உள்ளன. எல்லா இடங்களிலும் சரியான நேரத்தில் இருக்க வேண்டும். அதனால்தான் ஹெலிகாப்டரில் சென்றேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • என்னை ஏன் ஓரங்கட்டினர் என்று புரியவில்லை.
    • என்னை அவமதித்தால் வேதனைக்கு உள்ளானேன்.

    பெங்களூரு :

    பெங்களூருவில் நடந்த விழாவில் காங்கிரசில் சேர்ந்த பிறகு ஜெகதீஷ் ஷெட்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த நான், தற்போது காங்கிரசில் சேர்ந்தது ஏன் என்று பலருக்கும் கேள்வி எழும். ஆனால் கடந்த சில மாதங்களாக நான் அனுபவித்த வேதனையை யாரும் புரிந்துகொள்ளவில்லை. நான் பா.ஜனதா கட்சியை கட்டமைத்தேன். வட கர்நாடகத்தில் கட்சியை வளர்த்தேன். எனக்கு பா.ஜனதா வழங்கிய பதவிகளுக்கான நான் விசுவாசமிக்க தொண்டராக கட்சியை பலப்படுத்தினேன். உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் நான் 6 முறை எம்.எல்.ஏ. ஆகியுள்ளேன். 7-வது முறையாக போட்டியிட உள்ளேன்.

    கடந்த 2 ஆண்டுகளாக எனது தொகுதியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தேன். எனக்கு டிக்கெட் இல்லை என்று கூறியபோது அதிர்ச்சி அடைந்தேன். மூத்த தலைவரான எனக்கு உரிய கவுரவத்தை கட்சி வழங்கவில்லை. நான் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பவில்லை என்றால் ஒரு வாரம் முன்னதாகவே என்னிடம் பேசி இருந்தால் நான் அதை ஏற்றுக்கொண்டு இருப்பேன்.

    நான் எப்போதும் ஆட்சி அதிகாரத்திற்காக அரசியல் செய்தது கிடையாது. நான் சங்பரிவாரில் இருந்து வந்தவன். என்னை ஏன் ஓரங்கட்டினர் என்று புரியவில்லை. எனக்கு மக்களின் ஆதரவு உள்ளது. என்னை அவமதித்தால் வேதனைக்கு உள்ளானேன். எனது தொகுதி மக்களின் சுயமரியாதைக்கு அவமரியாதை ஏற்பட்டதால், நான் வேறு வழியின்றி பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்துள்ளேன். எனது ஆதரவாளர்கள், நலம் விரும்பிகளின் கருத்தை கேட்டு இந்த முடிவை எடுத்தேன்.

    எனக்கு ஏற்பட்ட அவமானத்தை சரிசெய்யவே நான் தேர்தலில் போட்டியிடுகிறேன். 6 மாதம் கழித்து வேண்டுமானால் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன் அப்போது யாரை வேண்டுமானாலும் நிறுத்தி கொள்ளுங்கள் என்று பா.ஜனதா மேலிட தலைவர்களிடம் கூறினேன். இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கர்நாடகத்தில் இன்று மாற்றத்திற்கான நாள் தொடங்கியுள்ளது. நான் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் பணியை செய்வேன்.

    இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

    • ராகுல்காந்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
    • ரெயில் நிலையம் நோக்கி அணிவகுத்து சென்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், ராகுல் காந்தி பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பைக் கண்டித்து, ராஜபாளையத்தில் போராட்டம் நடந்தது.

    ரெயில் மறியல் செய்வதற்காக மாவட்ட தலைவர் ரெங்கசாமி தலைமையில், நகர தலைவரும் கவுன்சிலருமான ஆர்.சங்கர் கணேஷ் முன்னிலையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்சக்தி மோகன், கவுன்சிலர் சங்கர் கணேஷ், வழக்கறிஞர் காளிதாஸ், டைகர் சம்சுதீன், சேவாதளம் பச்சையத்தான், ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியராஜ், சாத்தூர் அய்யப்பன் வட்டார தலைவர்கள் கணேசன், லட்சுமணன், பாலகுருநாதன், கார்த்திக், கணேசன், பவுல்ராஜ், செல்வகனி, சுப்ரமணி, முருகராஜ், ஜெயக்குமார், நட்சடலிங்கம், கர்ணன், சுந்தரம், ராஜகோபால், இளைஞர் காங்கிரஸ் ராஜாராம், சாமி உள்பட சுமார் 150 பேர் ரெயில் நிலையம் நோக்கி அணிவகுத்து சென்றனர்.

    ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, வடக்கு இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் மற்றும் போலீசார் ரெயில்வே பீடர் ரோடு மினிரவுண்டானாவில் அவர்களை தடுத்து நிறுத்தினர். ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திவ்யா வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தார்.

    • வரும் காலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் புதுவை திமுகவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
    • பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் 4 பிராந்தியங்களிலும் கட்சியை கொண்டு சேர்க்கும் என கருதுகின்றனர்.

    புதுச்சேரி:

    அடுத்த ஆண்டு 2024 மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு அனேகமாக அடுத்த ஆண்டு (ஜனவரி) இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுவை மாநிலத்தில் ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதி மட்டுமே உள்ளது.

    புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கூட்டணியில் அ.தி.மு.க. இடம் பெற்றிருந்தாலும், சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் இல்லை. புதுவை எம்.பி. தொகுதியை பெறுவதில் ஆளும் கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, அ.தி.மு.க. இடையே போட்டி நிலவுகிறது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் டாக்டர் நாராயணசாமி போட்டியிட்டு தோல்வியடைந்தார். வரும் பாராளுமன்ற தேர்தலிலும் என்ஆர்.காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முதல்-அமைச்சருமான ரங்கசாமி விரும்புவதாக தெரிகிறது.

    கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும் இது எதிரொலித்தது. பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம், கியாஸ் மானியம் ரூ.300, அரசு தினக்கூலி ஊழியர்களின் சம்பளம் ரூ.18 ஆயிரமாக உயர்வு என்பது உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

    இந்த அறிவிப்புகளை செயல்வடிவம் கொடுப்பதிலும் ரங்கசாமி முனைப்பாக உள்ளார். இதன்மூலம் பாராளுமன்ற தேர்தலில் மக்களை எளிதில் கவர முடியும் என ரங்கசாமி நினைக்கிறார்.

    அதேநேரத்தில் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜனதா கடந்த ஆண்டே பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. மத்திய மந்திரி எல்.முருகன் புதுவை பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து புதுவைக்கு வந்து பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசி, ஆதரவு திரட்டி வருகிறார்.

    எம்.பி. தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் கட்சியை மாநிலத்தின் 4 பிராந்தியங்களிலும் வேரூன்ற செய்ய முடியும் என்று பா.ஜனதாவினர் எண்ணுகின்றனர். இதனால் அவர்களும் கூட்டணியில் தொகுதியை பெறுவதில் முனைப்புடன் உள்ளனர்.

    இதனிடையே கடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை அதிமுக இழந்தது. இதனால் வரும் பாராளுமன்ற தேர்தலில் எம்.பி. தொகுதியை பெற்று போட்டியிடுவதன் மூலம் சரிந்த அ.தி.மு.க. செல்வாக்கை நிலைநிறுத்த முடியும் என புதுவை அ.தி.மு.க.வினர் எண்ணுகின்றனர். இதனால் கட்சி தலைமையை அணுகி கூட்டணியில் அ.தி.மு.க.வுக்கு தொகுதியை பெற வலியுறுத்தி வருகின்றனர்.

    இதேபோல எதிர்கட்சியான தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியிலும் எம்.பி. தொகுதியை பெறுவதில் போட்டி உருவாகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 15 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 2 தொகுதியில் மட்டும்தான் வெற்றி பெற்றது. இதனால் எதிர்கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது.

    புதுவை காங்கிரசின் கோட்டை என நீண்டகாலமாக கருதப்பட்டு வருகிறது. அதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்.பி. தொகுதியில் போட்டியிட விரும்புகிறது. இதற்கான காய்களை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நகர்த்த தொடங்கியுள்ளார்.

    அதே கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க. சட்டமன்ற தேர்தலில் 6 எம்.எல்.ஏ.க்களை பெற்று எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. வரும்காலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் புதுவை திமுகவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதற்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் 4 பிராந்தியங்களிலும் கட்சியை கொண்டு சேர்க்கும் என கருதுகின்றனர்.

    இதனால் கூட்டணியில் தொகுதியை பெறுவதில் தி.மு.க.வினரும் முனைப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் பாராளுமன்ற தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில் புதுவையில் ஆளும், எதிர்கட்சி கூட்டணி கட்சிகளிடையே எம்.பி. தொகுதியை பெறுவதில் போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது.

    • பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கரடி சங்கண்ணா எம்.பி.யும் கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறார்.
    • ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளியில் இருந்து தனி விமானத்தில் பெங்களூருவுக்கு வந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட மூத்த தலைவர்கள், சில எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

    பீதர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் சூர்யகாந்த் நாகமரபள்ளி. இவருக்கு மீண்டும் பா.ஜனதா சார்பில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த சூர்யகாந்த் நாகமரபள்ளி, சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார். மேலும் பா.ஜனதாவில் இருந்தும் விலகினார்.

    இந்நிலையில் அவர் தனது ஆதரவாளர்களுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர உள்ளார். இதற்கிடையே ஜனதா தளம்(எஸ்) கட்சியின் சின்னம், கொடி ஆகியவற்றுடன் சூர்யகாந்த் நாகமரபள்ளியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கரடி சங்கண்ணா எம்.பி.யும் கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறார்.

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொப்பல் தொகுதியில் போட்டியிட்டு அவர் எம்.பி.யாக இருந்தார். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் வழங்க வேண்டும் என்று கரடி சங்கண்ணா எம்.பி. பா.ஜனதா மேலிட தலைவர்களை வலியுறுத்தி வந்தார். ஆனால் எம்.பி.யாக இருக்கும், யாருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்று பா.ஜனதா மேலிடம் கரடி சங்கண்ணாவிடம் திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது.

    இதையடுத்து, தன்னுடைய மகன் கவிசித்தப்பாவுக்கு கொப்பல் தொகுதியில் போட்டியிட சீட் கொடுக்கும்படி கரடி சங்கண்ணா கேட்டு வந்தார். ஆனால் கவிசித்தப்பாவுக்கும் சீட் வழங்காமல், கொப்பல் தொகுதிக்கு பா.ஜனதா வேட்பாளரை அறிவித்துள்ளது. இதன் காரணமாக அதிருப்தி அடைந்துள்ள கரடி சங்கண்ணா நேற்று கொப்பலில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, இன்று (திங்கட்கிழமை) டெல்லிக்கு சென்று சபாநாயகர் ஓம்பிரகாஷ் பிர்லாவை சந்தித்து எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய கரடி சங்கண்ணா முடிவு செய்துள்ளார்.

    பின்னர் ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இணைந்து வருகிற 19-ந் தேதி கொப்பல் தொகுதியில் அவர் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்துள்ள முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அக்கட்சியில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளியில் இருந்து தனி விமானத்தில் பெங்களூருவுக்கு வந்தார்.

    இன்று (திங்கட்கிழமை) அவர் காங்கிரசில் சேர உள்ளார் என்றும், உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் அவர் காங்கிரஸ் வேட்பாளராக நிற்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தற்போது எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவை நேரில் சந்தித்து பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் போட்டியிட பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அக்கட்சியில் இருந்து விலகினார் ஜெகதீஷ் ஷெட்டர்.
    • பாஜகவில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் இன்று காங்கிரசில் இணைந்தார்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட பா.ஜனதாவில் சீட் கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்த முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். பா.ஜ.க.வில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்தார்.

    இதையடுத்து ஜெகதீஷ் ஷெட்டர் இன்று காங்கிரசில் சேர உள்ளார் என்றும், உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் அவர் காங்கிரஸ் வேட்பாளராக நிற்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகின.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், சித்தராமையா முன்னிலையில் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் இன்று இணைந்தார்.

    ஜெகதீஷ் ஷெட்டருக்கு காங்கிரஸ் தரப்பில் ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • கோலார் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்க ராகுல் காந்தி பெங்களூரு வந்தார்.
    • விமான நிலையத்தில் அவரை காங்கிரஸ் தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று பெங்களூரு வந்தார். விமான நிலையத்தில் அவரை மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா உள்பட பலர் வரவேற்றனர். அங்கு நடந்த பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

    அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன உறவு உள்ளது என பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டேன். கேள்வி கேட்டதற்காக என்னை மக்களவை எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தனர். பா.ஜ.க.வின் ஊழல்களை பற்றி நான் பாராளுமன்றத்தில் பேசும்போது மைக்கை அணைத்து விடுகின்றனர். பிரதமர் மோடி அதானிக்கு முழுமனதுடன் உதவி செய்து வருகிறார்.

    உதவி பேராசிரியர், பொறியாளர் நியமனத்தில் பா.ஜ.க. லஞ்சம் பெற்றுள்ளது. கர்நாடகாவில் பா.ஜ.க. அரசு செய்யும் அனைத்து பணிகளுக்கும் 40 சதவீத கமிஷன் வாங்கியுள்ளது. இதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். 40 சதவீத கமிஷன் பற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் இதுவரை பதில் வரவில்லை.

    நாங்கள் முழு மனதுடன் கர்நாடகா மக்களுக்கு உதவி செய்வோம். மோடியால் பல ஆயிரம் கோடியை அதானிக்கு கொடுக்க முடியும்போது, எங்களாலும் மக்களுக்கு தரமுடியும்.

    அதானிக்கு ஷெல் நிறுவனம் இருப்பதாக நான் பாராளுமன்றத்தில் கூறினேன். மேலும் 20,000 கோடி யாருக்கு சொந்தம் என்று கேள்வி எழுப்பினேன். வரலாற்றில் முதல்முறையாக பா.ஜ.க. அரசு பாராளுமன்ற அவையை செயல்பட விடவில்லை என தெரிவித்தார்.

    • சுப்பிரமணியபுரம் ஊராட்சி தலைவர் ராம்குமார் தலைமையில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
    • சிவகிரியில் அம்பேத்கர் படத்திற்கு காங்கிரசார் மரியாதை செலுத்தினர்.

    சிவகிரி:

    அம்பேத்கரின் 132 -வது பிறந்த நாளை முன்னிட்டு வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றியம் பா.ஜ.க. சார்பில் சுப்பிரமணியபுரம் ஊராட்சி தலைவரும், வக்கீலும், மண்டல் தலைவருமான ராம்குமார் தலைமையில் வாசுதேவ நல்லூரில் உள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் ராமராஜா, பொது செயலாளர்கள் மகாலிங்கம், தினேஷ், பொருளாளர் கங்காதரன், ராமச்சந்திரன், முருகன், சாமி, பால்ராஜ், ரவி, முத்தமிழ்செல்வம், சங்கர், பண்டாரம், செல்வ கணேசன், இசக்கி, சர வணன், தங்க ராஜ், கவியரசு, வாஜ்பாய் முரு கன், மாரி யப்பன், செல்வம், குரு சாமி, கணே சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ்

    இதேபோல் தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. அணி மற்றும் சிவகிரி நகர காங் கிரஸ் சார்பில் சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகிரியில் அவரது சிலைக்கு முன்பாக அலங்க ரித்து வைக்க ப்பட்டி ருந்த படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. அணி தலைவர் திருஞானம், மாவட்ட காங்கிரஸ் துணை த்தலைவர் கணேசன், நகர தலைவர் வக்கீல் சண்முக சுந்தரம், தொகுதி ஓ.பி.சி. தலைவர் காந்தி, நகர ஓ.பி.சி. தலைவர் மாரியப்பன், காங்கிரஸ் இலக்கிய பிரிவு தலைவர் அசோக், நிர்வாகிகள் நாட்டாண்மை மாணி க்கம், சந்திரன், பிச்சை மற்றும் நிர்வா கிகள் கலந்து கொண்ட னர். முடிவில் நகர செயலாளர் வெள்ளைச் சாமி நன்றி கூறினார்.

    • ஏக்நாத் ஷிண்டேவை ஒதுக்குவதற்கு பா.ஜனதா முடிவு செய்துவிட்டதாகவும் கட்சி வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
    • மகாராஷ்டிராவில் ஆட்சியை இழக்க பா.ஜனதா விரும்பவில்லை.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது.

    ஆனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டதால் கூட்டணி முறிந்தது. இந்நிலையில் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மருமகனான அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தார். இதையடுத்து பா.ஜனதாவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.

    ஆனால் இந்த அரசு 72 மணி நேரம் மட்டுமே நீடித்தது. சரத்பவாரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அஜித் பவார் மீண்டும் தேசியவாத காங்கிரசில் இணைந்தார். அதன் பிறகு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன.

    சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாகவும், அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம் ஏற்பட்டது.

    சிவசேனா கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களை இழுத்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே பா.ஜனதா ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். தற்போது ஆட்சியும், சிவசேனா கட்சியும் ஏக்நாத் ஷிண்டே வசம் உள்ளது.

    இந்நிலையில் தான் மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் ஒரு திருப்பம் ஏற்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

    சமீப காலமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத்ப வாருக்கும், அஜித் பவாருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருவதாக கூறப்படுகிறது.இது ஒரு புறம் இருக்க ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என கூறப்படுகிறது.

    தீர்ப்பு ஷிண்டே தரப்புக்கு எதிராக அமைந்தால் ஆட்சியை காப்பாற்றுவதற்காக அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன் ஆட்சியை தொடருவதற்கு பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அப்போது அஜித் பவார் தன்வசம் 35 முதல் 40 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாகவும், எனவே தனக்கு முதல்-மந்திரி பதவி தந்தால் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதால் கட்சி தாவல் தடை சட்டமும் நடை முறைக்கு வராது. ஆனால் இந்த கூட்டணிக்கு சரத்பவார் ஒப்புதல் தரமாட்டார் என்பதால் அவரின் ஆசியை பெறுவதற்காக அஜித் பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.

    அதே நேரம் பா.ஜனதாவுடன் கூட்டணிக்கு சரத்பவார் தயங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சரத்பவார், ராகுல்காந்தியை சந்தித்து பாராளுமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை நடத்தி இருந்தார்.

    இந்நிலையில் கூட்டணி மாறினால் தனது அரசியல் வாழ்க்கையில் களங்கம் ஏற்படலாம் எனவும், பா.ஜனதா கூட்டணியை விரும்பவில்லை எனவும் அவர் அஜித் பவாரிடம் கூறிவிட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு ஆட்சி அமைந்த சில மணி நேரங்களிலேயே அஜித் பவார் தனது நிலையை மாற்றி கொண்டு கட்சி தலைமைக்கு அடிபணிந்தார்.

    எனவே தற்போது கட்சி தலைமைக்கு எதிராக அஜித் பவாரின் பின்னால் செல்வது தங்கள் அரசியல் வாழ்க்கையில் பெரும் பின்னடைவை சந்திக்கும் என அஜித் பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கருதுகிறார்கள். ஆனாலும் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியை அமைத்தால் தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் அவர்கள் சரத்பவாரிடம் ஒப்புதல் பெறுவதற்கு அஜித் பவாரை வற்புறுத்தி வருகின்றனர்.

    இவ்வாறு பரபரப்பான அரசியல் சூழல் நிலவும் நிலையில் கடந்த 8-ந்தேதி அஜித் பவார் திடீரென டெல்லிக்கு சென்று பா.ஜனதா மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து கூட்டணியின் இறுதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான பிரபுல் படேல், சுனில் தட்கரே ஆகியோர் அஜித் பவாருடன் சென்றதாகவும், பேச்சு வார்த்தையின் போது அமைச்சரவை இலாகாக்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    இதன் மூலம் ஏக்நாத் ஷிண்டேவை ஒதுக்குவதற்கு பா.ஜனதா முடிவு செய்துவிட்டதாகவும் கட்சி வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

    இதுதொடர்பாக மூத்த தலைவர்கள் சிலர் கூறுகையில், மகாராஷ்டிராவை பொறுத்தவரை பா.ஜனதா கட்சி தற்போது ஒரு கடினமான சூழ்நிலையில் உள்ளது. உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே ஆகியோர் ஆட்சி மற்றும் கட்சி சின்னத்தை இழந்தாலும் கூட மாநிலத்தில் அவர்களின் புகழ் அதிகரித்துள்ளது.

    சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் மாநிலத்தில் மொத்தமுள்ள 48 பாராளு மன்ற தொகுதிகளில் 33 இடங்களை மகாவிகாஸ் அகாடி கூட்டணி கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் கூறப்படுகிறது. எனவே மகாராஷ்டிராவில் ஆட்சியை இழக்க பா.ஜனதா விரும்பவில்லை. அதற்காக தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர பா.ஜனதா விரும்புகிறது என்றனர்.

    ×