என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95993"
- பா.ஜனதாவில் மூத்த தலைவர்களை சரியாக நடத்துவதில்லை.
- லட்சுமண் சவதியை காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
பெங்களூரு :
பெலகாவியில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஈசுவரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். பா.ஜனதாவின் கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடித்து வந்த அவரது நிலைமை தற்போது என்ன ஆகி இருக்கிறது. ஈசுவரப்பாவின் இந்த நிலைமையை பார்த்தாலே பா.ஜனதாவில் மூத்த தலைவர்களை சரியாக நடத்துவதில்லை என்பது தெளிவாகி இருக்கிறது.
பா.ஜனதாவின் முதல் மற்றும் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியான பின்பு நிறைய தலைவர்கள் சீட் கிடைக்காமல் அதிருப்தி அடைந்துள்ளனர். சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டருடன் நான் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. அவர் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம்.
லட்சுமண் சவதி காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பதால், பெலகாவியில் எங்களுக்கு பெரிய சக்தி கிடைத்துள்ளது. பெலகாவியில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. லட்சுமண் சவதியை காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அந்த கட்சிக்குள் மோதல் உருவாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
- ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு, பா.ஜ.க அரசின் போக்கை கண்டித்து சாமல்பட்டி ரெயில் நிலையம் அருகே ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
- போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி:
தருமபுரி ரெயில்வே நிலையம் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து பஸ்சில் அழைத்து சென்று அதே பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு, பா.ஜ.க அரசின் போக்கை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரெயில் நிலையம் அருகே ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் ரெயிலை மறிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்குள் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
- தேர்தலில் வென்று மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
புதுடெல்லி:
மொத்தம் 224 தொகுதிகளுக்கான கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ம் தேதி நடைபெறுகிறது. அங்கு ஆட்சி அமைக்க பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
இதற்கிடையே, 124 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி கடந்த மாதம் வெளியிட்டது. தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக 42 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் மூன்றாவது கட்டமாக 43 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இதில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய முன்னாள் துணை முதல் மந்திரி லட்சுமண் சவதி அடானி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் ஆளுநர் மார்கரெட் ஆல்வாவின் மகன் நிவேதித் ஆல்வா கும்தா தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதுவரை மொத்தம் 209 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதியுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளது.
லட்சுமண் சவதி மூன்று முறை பெலகாவி மாவட்டம் அடானி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் தேவர் சிலையில் இருந்து ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.
- காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கோஷமிட்டவாறு ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர்.
மதுரை:
மதுரையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் வடக்கு மாவட்ட தலைவர் ஆலந்தூர் ரவிச்சந்திரன் முன்னிலையில் போராட்டம் நடந்தது. ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட, அவர்கள் மீனாட்சி பஜாரில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி பேரணியாக வந்தனர். பின்பு போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு பிரிவை சேர்ந்தவர்களும் ரெயில் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அவர்களில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் தேவர் சிலையில் இருந்து ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.
ரெயில்நிலையம் வந்த அவர்களை போலீஸ் டி.எஸ்.பி. வசந்தகுமார் தடுத்து நிறுத்தி, ரெயில் மறியல் நடத்த அனுமதி இல்லை என கூறி கலைந்து செல்லுங்கள் என்றார்.
ஆனால் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கோஷமிட்டவாறு ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். உடனே பாதுகாப்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அவர்கள் அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று காலை கச்சேரி ரோட்டில் உள்ள காமராஜர் சிலை முன்பிருந்து மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.
ரெயில் நிலையம் அருகே அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் மறுப்பு தெரிவித்து அங்கேயே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் மாணிக்கம் தாகூர் எம்.பி., முன்னாள் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
- நகரசபை தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அந்த பதவியை விட்டு கொடுக்க விரும்பாத மமுன் ஷாகான் உடனடியாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.
- அறிவிப்பு வெளியான 45 மணி நேரத்தில் மமுன் ஷாகான் மணப்பெண் அறிவிப்பு வெளியிட்டு ஒருவரை கண்டுபிடித்தார்.
உத்தர பிரசேத மாநிலம் ராம்பூர் நகரசபை தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நகரசபை தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அங்கு வழக்கமாக தலைவர் பதவிக்கு போட்டியிடும் காங்கிரஸ் நிர்வாகி மமுன் ஷாகான் அதிர்ச்சி அடைந்தார்.
இதற்கு காரணம் 45 வயதாகியும் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இப்போது நகரசபை தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அந்த பதவியை விட்டு கொடுக்க விரும்பாத அவர் உடனடியாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக அறிவிப்பு வெளியான 45 மணி நேரத்தில் மமுன் ஷாகான் மணப்பெண் அறிவிப்பு வெளியிட்டு ஒருவரை கண்டுபிடித்தார். அந்த பெண்ணை உடனடியாக அவர் திருமணமும் செய்து கொண்டார். இது உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நாங்குநேரி ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடந்தது.
- முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் பால்ராஜ் உள்பட 183 பேர் கலந்து கொண்டனர்.
களக்காடு:
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாங்குநேரி ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடந்தது.
இதில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் பால்ராஜ் உள்பட 183 பேர் கலந்து கொண்டனர். அவர்களை நாங்குநேரி போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, நாகர்கோவிலில் இருந்து கச்சிகுடா செல்லும் ரெயிலில் வள்ளியூரில் ஏறிய காங்கிரஸ் தொண்டர் ஜெயபாண்டி என்பவர் ரெயில், நாங்குநேரி அருகே வந்தபோது அவசரகால சங்கிலியை இழுத்து நிறுத்தினார்.
இதையடுத்து அவரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
- நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மாநகர காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் நவீன் குமார் தலைமையில் போராட்டம் நடந்தது.
- போராட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், இரணியல், குழித்துறை ரெயில் நிலையங்களில் இன்று மறியல் போராட்டம் நடந்தது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மாநகர காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் நவீன் குமார் தலைமையில் போராட்டம் நடந்தது. விஜய் வசந்த் எம்.பி. உள்பட நிர்வாகிகள் பலரும் போராட்டத்தில் பங்கு பெற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ரெயில் நிலையத்திற்குள் நுழைய முடியாதபடி அந்த சாலையில் பேரி கார்டு வைத்து தடுக்கப்பட்டிருந்தது. அதனை மீறி காங்கிரசார் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மார்த்தாண்டத்தில் உள்ள குழித்துறை ரெயில்வே நிலையத்தில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமையில் காங்கிரசார் மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் இரணியல் ரெயில் நிலையத்தில் மாவட்ட தலைவர் கே.டி. உதயம் தலைமையில் போராட்டத்திற்கு கட்சியினர் திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து பேரணியாக ரெயில் நிலையம் செல்ல முயன்ற பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
- வழி தெரியாமல் தவிக்கும் காங்கிரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் யோசனை கூறி உள்ளார்.
- பா.ஜனதாவில் எல்லோரும் 70 வயதை கடந்தவர்கள். ராகுல் இளம் வயதுடையவர் இன்னும் 10 ஆண்டுகள் அவரால் வீரியமாக அரசியல் செய்ய முடியும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதாவை எதிர்க்கும் அளவுக்கு வலிமை பெறுமா? ஆட்சிக்கு வரமுடியுமா? என்ற சந்தேகம் காங்கிரசாரிடமும் உள்ளது.
இதற்கு வழி தெரியாமல் தவிக்கும் காங்கிரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் யோசனை கூறி உள்ளார். அவர் கூறியதாவது:-
பா.ஜனதாவை எதிர் கொள்ளும் வலிமை தேசிய அளவில் காங்கிரசிடம் மட்டுமே இருக்கிறது. காங்கிரசில் இருந்து வெளியேறிய தலைவர்கள் மாநில அளவில் கட்சிகளை தொடங்கியதால் சில மாநிலங்களில் வாக்கு வங்கியை இழந்திருக்கிறது. இதை சரி செய்வதன் மூலம் மீண்டும் காங்கிரஸ் கட்சி வலிமை பெறும்.
காங்கிரஸ் இரண்டு முக்கிய வேலைகளை செய்ய வேண்டும். பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்து அணிக்குள் இணைக்க வேண்டும். பா.ஜனதா எதிர்ப்பு சக்திகளை ஒருங்கிணைத்து தேர்தலுக்கு பிறகு பிரதமரை முடிவு செய்யலாம் என்ற நிபந்தனையோடு செயல்படவேண்டும். இந்த இரண்டையும் செய்தால் பா.ஜனதாவை வீழ்த்த முடியும். அதற்கான ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாக இருப்பவர் ராகுல் மட்டும் தான். அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
பா.ஜனதாவில் எல்லோரும் 70 வயதை கடந்தவர்கள். ராகுல் இளம் வயதுடையவர் இன்னும் 10 ஆண்டுகள் அவரால் வீரியமாக அரசியல் செய்ய முடியும்.
- தஞ்சை ரெயில் நிலையம் முன்பு ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர்.
- காங்கிரஸ் கட்சியினர் கோஷங்கள் எழுப்பியபடி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.
தஞ்சாவூர்:
ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று தமிழ்நாடு முழுவதும் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று தஞ்சை ரெயில் நிலையம் முன்பு ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர்.
ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி கி. வரதராஜன், தெற்கு மாவட்ட துணை தலைவர் வக்கீல் கோ. அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தப் போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் ராஜா தம்பி, ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட பொது செயலாளர் பூதலூர் மோகன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ பேராவூரணி சிங்காரம் உள்ளிட்ட ஏராளமானோர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு ரெயிலை மறிக்க முயன்றனர். ஆனால் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் ரெயில் நிலையம் முன்பு பேரிகார்டு கொண்டு தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரெயில் நிலையத்துக்குள் யாரும் நுழையாதவாறு பாதுகாப்பில் இருந்தனர்.
காங்கிரஸ் கட்சியினர் கோஷங்கள் எழுப்பியபடி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் வலுக்கட்டாயமாக ரெயிலை மறிப்பதற்காக ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றதால் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
- விழுப்புரத்தில் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காங்கிரசார் கண்ணன் திரையரங்கம் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.
விழுப்புரம்:
ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து விழுப்புரத்தில் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் இன்று காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி விழுப்புரத்திலும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக காங்கிரசார் கண்ணன் திரையரங்கம் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.
ரெயில் நிலையம் வந்த அவர்கள் புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரெயிலை மறித்தனர்.
போலீசார் அவர்களை கைது செய்தனர். பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
- விழுப்புரத்தில் புவனேஸ்வர் விரைவு ரெயிலை மறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
- நெல்லை, நாங்குநேரியில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 23 பெண்கள் உட்பட 183 காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை:
மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரசார் ஆர்பாட்டம், மறியல் போன்ற போராட்டங்கள் நடத்தினார்கள். ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்து இருந்தார்.
அதன்படி தமிழ்நாட்டில் இன்று முக்கிய நகரங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் செய்வதற்காக கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் எழும்பூர் அழகு முத்துகோன் ரவுண்டானா அருகில் கையில் கொடி மற்றும் பதாகைகளுடன் திரண்டனர்.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை, முன்னாள் எம்.பி. தங்கபாலு, மாவட்ட தலைவர்கள் சிவ.ராஜசேகரன், ரஞ்சன்குமார், டெல்லிபாபு, முத்தழகன், அடையாறுதுரை மற்றும் மாநில பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், திருவான்மியூர் டி.கே. முரளி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியபடி ரெயில் மறியல் போராட்டம் நடத்த ஊர்வலமாக புறப்பட்டனர். உடனே போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினார்கள்.
இந்த போராட்டத்தையொட்டி எழும்பூர் ரெயில் நிலைய பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், இரணியல், குழித்துறை ரெயில் நிலையங்களில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மாநகர காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் நவீன் குமார் தலைமையில் போராட்டம் நடந்தது. விஜய் வசந்த் எம்.பி. உள்பட நிர்வாகிகள் பலரும் போராட்டத்தில் பங்கு பெற்றனர்.
ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மார்த்தாண்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரத்திலும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.
திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ரெயில் நிலையங்களிலும் மறியல் போராட்டத்துக்கு முயன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர். திருமங்கலத்தில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் தேவர் சிலையில் இருந்து ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக வந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
விருதுநகரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று காலை கச்சேரி ரோட்டில் உள்ள காமராஜர் சிலை முன்பிருந்து மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.
போலீசார் தடுத்தபோது மறியலில் ஈடுபட்டதால் போலீசார் மாணிக்கம் தாகூர் எம்.பி. உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருப்பூர், திருச்சி, ஆரணி, உள்பட தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.
- பா.ஜனதா அரசு மன்னிக்க முடியாது துரோகத்தை செய்துள்ளது.
- பசவராஜ் பொம்மை எப்போதும் பொய் பேசுகிறார்.
பெங்களூரு :
கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
அம்பேத்கரின் கொள்கைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளில் பின்பற்றப்படுகின்றன. ஆனால் பா.ஜனதா அவரது கொள்கைகளை அவமதித்துள்ளது. கர்நாடகத்தில் போலி இட ஒதுக்கீடு வழங்கி அம்பேத்கருக்கு அவமரியாதை இழைக்கப்பட்டுள்ளது. இந்த போலி இட ஒதுக்கீடு மூலம் லிங்காயத், ஒக்கலிகர், ஆதிதிராவிடர்கள் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளனர்.
முஸ்லிம் மக்களுக்கான இட ஒதுக்கீட்டு ரத்து முடிவை அடுத்த விசாரணை நடைபெறும் வரை நிறுத்தி வைக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பா.ஜனதா அரசு மன்னிக்க முடியாது துரோகத்தை செய்துள்ளது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் முன்பு கூறிய அனைத்து கருத்துக்களும் தற்போது உண்மையாகி உள்ளது.
பா.ஜனதா இரட்டை என்ஜின் அரசு, கா்நாடக மக்களுக்கு இரட்டை துரோகம் செய்துள்ளது. கர்நாடக அரசின் இட ஒதுக்கீடு முடிவுக்கு அரசியல் சாசன ரீதியாக உரிய அங்கீகாரம் கிடைக்காது. அம்பேத்கரின் ஜெயந்தியை கொண்டாடும் இந்த நேரத்தில் கர்நாடக மக்களுக்கு இந்த பா.ஜனதா அரசு பெரிய துரோகத்தை செய்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட சமூகங்களின் மக்கள் அரசை நோக்கி கேள்வி எழுப்புகிறார்கள்.
இட ஒதுக்கீடு உயர்வு நிலை பெற வேண்டுமெனில் அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் திருத்தம் செய்ய வேண்டும். இந்த முயற்சியை பா.ஜனதா மேற்கொள்ளாதது ஏன்?. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எப்போதும் பொய் பேசுகிறார். பா.ஜனதா நாளுக்கு நாள் செல்வாக்கை இழந்து வருகிறது. அக்கட்சியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தலைவர்கள் விலகியுள்ளனர். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெறும்.
இவ்வாறு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்