search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96073"

    தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார் - பெரியநாயகி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மாமன்னன் முதலாம் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் இன்றைக்கும் தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றி கொண்டிருக்கிறது. பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருக்கல்யாணம் தஞ்சை பெரியகோவிலில் நேற்று இரவு நடந்தது.

    முன்னதாக பழங்கள், குங்குமம், மஞ்சள்கிழங்கு, மஞ்சள் திருமாங்கல்ய சரடு, வளையல், சீப்பு, குங்குமசிமிழ், கண்ணாடி, ரிப்பன், இனிப்பு, பூ, வெற்றிலைபாக்கு, சீவல், ஜாக்கெட் பிட் போன்ற சீர்வரிசை பொருட்களை ஏராளமான பக்தர்கள் மூங்கில் கூடையில் வைத்து பெரியகோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும் நடராஜர் மண்டபத்தை வந்தடைந்தனர்.

    பின்னர் சிவாச்சாரியார்கள் வேத, மந்திரங்கள் முழங்க மாப்பிள்ளை அழைப்பு உள்பட சம்பிரதாய சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க பெருவுடையாரிடம் இருந்து திருமாங்கல்யத்தை சிவாச்சாரியார் எடுத்து பெரியநாயகி அம்மனுக்கு அணிவித்தார். இதையடுத்து பெருவுடையார்- பெரியநாயகி அம்மன் திருக்கல்யாண கோலத்தில் காட்சி அளித்தனர். திருக்கல்யாணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
    மாங்கனித் திருவிழாவில் காரைக்கால் அம்மையாருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
    காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா நேற்று முன்தினம் இரவு மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.

    விழாவின் 2-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை 11 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கும், பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக, தீர்த்தகரைக்கு அம்மையாரும், குதிரை வாகனத்தில் பரமதத்த செட்டியாரும் வந்தனர்.

    விழாவில் அமைச்சர் கமலக்கண்ணன், அசனா எம்.எல்.ஏ., கலெக்டர் கேசவன், கோவில் நிர்வாக அதிகாரி, விக்ராந்த் ராஜா, அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் திரளான பக்தர்கள் திருக்கல்யாணத்தை தரிசித்தனர்.தொடர்ந்து, இரவு 10 மணிக்கு காரைக்கால் அம்மையாரும், பரமதத்த செட்டியாரும் முத்துச் சிவிகையில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


    திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள்.

    திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக, இன்று (புதன்கிழமை) அதிகாலை 2.30 மணிக்கு பிச்சாண்டவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு மகாஅபிஷேகம், தீபாராதனை, காலை 7 மணிக்கு பரமசிவன் பிச்சாண்டவர் கோலத்தில் வீதிஉலா நடக்கிறது. வீதிஉலாவின்போது மாங்கனிகளை பக்தர்கள் வாரி இறைத்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள்.

    பின்னர் இரவு 7 மணிக்கு காரைக்கால் அம்மையார் பிச்சாண்டவருக்கு அமுது படைத்தல், இரவு 9 மணிக்கு சித்திவிநாயகர் கோவிலில் பரமதத்தருக்கு 2-வது திருமணம், நள்ளிரவு 11 மணிக்கு புனிதவதியார் புஷ்ப பல்லக்கு வீதிஉலா நடக்கிறது. இதனை தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) அதிகாலை, அம்மையாருக்கு இறைவன் காட்சி தருகிறார். 
    தொட்டியம் அருகே திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோவில் வைகாசி திருவிழாவில் நேற்று இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நாளை தேரோட்டம் நடக்கிறது.
    தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரத்தில் சிறப்பு வாய்ந்த வேதநாயகி தாயார் சமேத வேதநாராயண பெருமாள் கோவில் உள்ளது. வைணவத்தலங்களில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான இங்கு பெருமாள் நான்கு வேதங்களை தலையணையாக கொண்டு பிரம்மாவிற்கு வேத உபதேசம் செய்து ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் காட்சியளிக்கிறார். இதனால் தன்னை வணங்க வரும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி செல்வத்தை அள்ளித்தருகிறார்.

    மேலும் பிரகலாதஷேத்திரம், அரையருக்கு மோட்சம் தந்த ஸ்தலம் என பல சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த 25-ந்தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடர்ந்து தினமும் பெருமாள் துவஜா ரோஹனம், ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், கருடவாகனம், ஹனுமந்த வாகனம், யானை வாகனம், குதிரை நம்பிரான் ஆகிய வாகனங்களில் திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    7-ம் நாள் திருவிழாவான நேற்று இரவு 7 மணிக்கு சூர்ணாபிஷேகம், நெல்லளவு கண்டருதல், எம்பெருமான் உபயநாச்சியாருடன் திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருவீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து தீர்த்தவாரி, கேடயம் சாற்றும் முறை, புஷ்ப பல்லக்கு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள், கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர். 
    பழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவில் நேற்று முத்துக்குமாரசுவாமி -வள்ளி, தெய்வானை திருக்கல்யாணநிகழ்ச்சிநடைபெற்றது.

    இதற்காக நேற்று மாலை பெரியநாயகி அம்மன் கோவிலில் சோமாஸ்கந்தர் சன்னதியில் மூலவர் சோமாஸ்கந்தர் வள்ளி-தெய்வானைக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து சோமாஸ்கந்தருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சோமாஸ்கந்தர் வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து சன்னதி முன்பு திருமண மேடையில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை அம்மனுக்கு 16 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது. அதன்பின்னர் பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்பு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. ஆராதனைக்கு பிறகு கன்னிகா தானம், மாங்கல்ய பூஜை நடந்தது. அதனைத்தொடர்ந்து வள்ளி-தெய்வானைக்கு பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

    பின்னர் மலர் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மேல் வெள்ளிகாமதேனு வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை அம்மனுடன் திருவுலா வந்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் பூஜைகளை செல்வ சுப்பிரமணியகுருக்கள், சுந்தரமூர்த்திசிவம் மற்றும் பூஜை முறை குருக்கள் செய்தனர்.

    திருவிழாவில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு வைகாசி விசாகத் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர். 
    பல்வேறு சிறப்பு பெற்ற கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மங்களாம்பிகை அம்மனுக்கும், ஆதிகும்பேஸ்வரருக்கும் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
    கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் மங்களாம்பிகை அம்மனுக்கும், ஆதிகும்பேஸ்வரருக்கும் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி நேற்றுமுன் தினம் இரவு அம்மன் தவக்கோலம், சிவபெருமான் காட்சியளித்தல் மற்றும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனையடுத்து நேற்று மாலை மாற்றும் நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 12 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு திருமண மறைசடங்கு நிகழ்ச்சியும், சாமி வீதி உலாவும் நடைபெற்றது.

    வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) வரை ஊஞ்சல் உற்சவமும், 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பகவத் படித்துறையில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 30-ந்தேதி (புதன்கிழமை) மகா சுத்தாபிஷேகத்துடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கவிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். 
    புராதன சிறப்பு மிக்க திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. 27-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
    திருவெறும்பூரில் புராதன சிறப்பு மிக்க எறும்பீஸ்வரர் கோவில் உள்ளது. மலைமேல் அமைந்துள்ள இந்த கோவிலில் நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் சுவாமி பல்லக்கு, கைலாச, அன்ன வாகனங்களில் வீதியுலா வந்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று உமையவள் நறுங்குழல் நாயகிக்கும், எறும்பீஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது. சென்ற ஆண்டு தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் தெப்ப திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு தெப்பகுளத்தில் தண்ணீர் உள்ளதால் 30-ந் தேதி தெப்ப திருவிழாவை நடத்திட கோவில் நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். 
    கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 24-ந் தேதி மங்களாம்பிகை அம்மனுக்கும், ஆதிகும்பேஸ்வரருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.
    கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 24-ந் தேதி மங்களாம்பிகை அம்மனுக்கும், ஆதிகும்பேஸ்வரருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.

    25-ந்தேதி காலை 10.15 மணிக்கு மாலை மாற்றுதலும், 11 மணிக்கு ஊஞ்சலடி உற்சவமும், 12 மணி முதல் 1 மணிக்குள் மங்களாம்பிகை அம்மனுக்கும், ஆதிகும்பேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 29-ந்தேதி காலை 10.45 மணிக்கு மேல் 12 மணிக்குள் பகவத் படித்துறையில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து சாமி, அம்மன் சங்கரமடத்தில் எழுந்தருளுகின்றனர். 30-ந்தேதி காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கவிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    ×