என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பேட்மிண்டன்"
- இந்திய வீரர் லக்ஷயா சென் அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
- குத்துச்சண்டையில் லவ்லினா போர்ஹோகெய்ன் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர் லக்ஷயா சென், டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் மோதினார்.
இதில் லக்ஷயா சென் 20-22, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் டென்மார்க் வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய ஜோடி சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.
- கரோலினா மரின் முதல் செட்டை 21-14 என எளிதில் வென்றார்.
- 2வது செட்டில் 10-8 முன்னிலை பெற்றபோது மூட்டுவலியால் அவதிப்பட்டார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனையான கரோலினா மரின், சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவுடன் மோதினார்.
இதில் கரோலினா மரின் முதல் செட்டை 21-14 என எளிதில் வென்றார். 2வது செட்டில் 10-8 முன்னிலை பெற்றிருந்தபோது மூட்டு வலியால் கடும் அவதிப்பட்டார். இதையடுத்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
இதையடுத்து, கரோலினா மரின் போட்டியில் இருந்து விலகினார். இதன்மூலம் ஹி பிங்ஜியாவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- துப்பாக்கிச் சுடுதலில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்றனர்.
- மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் இந்திய வீரர் லக்ஷயா சென், சீன தைபே வீரர் சோ டைனுடன் மோதினார்.
போட்டியின் துவக்கத்தில் நன்றாக விளையாடி சீன வீரர் 21-19 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். இதன் பிறகு சிறப்பாக விளையாடிய லக்ஷயா சென் 21-15 மற்றும் 21-12 என்ற கணக்கில் அடுத்தடுத்து 2 செட்களை கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில், மேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை லக்ஷ்யா சென் பெற்றுள்ளார்.
- இந்திய வீரர் லக்ஷயா சென் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் லக்ஷயா சென், சக நாட்டு வீரர் எச்.எஸ்.பிரனாயுடன் மோதினார்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய லக்ஷயா சென் முதல் செட்டை 21-12 என கைப்பற்றினார். 2வது செட்டிலும் லக்ஷயா சென் தொடர்ந்து முன்னிலை பெற்றார்.
இறுதியில், லக்ஷயா சென் 21-12, 21-6 என வென்று காலிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.
பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய ஜோடி சாத்விக்-சிராக் ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.
- இன்று நடந்த துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்றார்.
- ஹாக்கி போட்டியில் இந்திய அணி பெல்ஜியத்திடம் தோல்வி அடைந்தது.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தினார். துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா பெறும் 3வது பதக்கம் இதுவாகும்.
இந்நிலையில், பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் ஆரோன் சியா-வூ யிக் சோ ஜோடியுடன் மோதியது.
இதில் இந்திய ஜோடி முதல் செட்டை 21-13 என கைப்பற்றியது. இதற்கு பதிலடியாக மலேசிய ஜோடி 21-14 என இரண்டாவது செட்டை கைப்பற்றியது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை மலேசிய ஜோடி 21-16 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம்
இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேறியது.
- பேட்மிண்டன் Round of 16 சுற்றில் லஷ்யா சென் மற்றும் பிரனாய் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
- இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர்,சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் Round of 16 சுற்றில் இந்திய வீரர்கள் லஷ்யா சென் மற்றும் பிரனாய் நேருக்கு நேர் மோதுகின்றனர். இப்போட்டி இன்று மாலை 5.40 மணிக்கு நடைபெற உள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டனில் இந்திய வீரர்கள் நேருக்கு நேர் மோதுவதால் வெற்றி பெறும் ஒருவர் மட்டுமே காலிறுதிக்கு முன்னேற முடியும். இதனால் இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
- இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர்,சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் லக்ஷயா சென், இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டியுடன் மோதினார்.
தொடக்கத்தில் 2-8 என பின்தங்கிய லக்ஷயா சென், அதிரடியாக ஆடி முதல் செட்டை கைப்பற்றினார். 2வது செட்டிலும் லக்ஷயா சென் தொடர்ந்து முன்னிலை பெற்றார்.
இறுதியில், லக்ஷயா சென் 21-18, 21-12 என வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
That was insane, Lakshya Sen! How could you pull off that shot? Unbelievable! ??? pic.twitter.com/buP3RfHVCP
— Kuch Bhi!!!! (@KirkutExpert99) July 31, 2024
- இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
- ஹாக்கி போட்டியில் ஹர்மன்பிரித் சிங் கோல் மழையால் அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இன்று நடந்த துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்று அசத்தியது.
இந்நிலையில், பேட்மிண்டனில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, இந்தோனேசியாவின் பஜர் அல்பியான்-முகமது அர்டியாண்டோ ஜோடியுடன் மோதியது.
இதில் இந்திய ஜோடி 21-13 21-13 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- பி.வி.சிந்து ஏற்கனவே முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
- டென்னிசில் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஜெர்மனியின் பேபியன் ரோத் உடன் மோதினார்.
இந்தப் போட்டியில் பிரனாய் 21-18, 21-12 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்றார்.
பிரனாய் வரும் புதன்கிழமை நடைபெறும் போட்டியில் வியட்நாம் வீரருடன் மோதுகிறார்.
- இது தொடர்பான வீடியோவை ஜனாதிபதி அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
- விளையாட்டின் மீதுள்ள தனது ஆர்வத்தை ஜனாதிபதி திரெளபதி முர்மு வெளிப்படுத்தியுள்ளார்.
ராஷ்டிரபதி பவனில் உள்ள பேட்மிண்டன் மைதானத்தில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் உடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேட்மிண்டன் விளையாடியுள்ளார்.
இது தொடர்பான வீடியோவை ஜனாதிபதி அலுவலகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவின் மூலம் விளையாட்டின் மீதுள்ள தனது ஆர்வத்தை முதல் முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளிப்படுத்தியுள்ளார்.
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான காயத்ரி கோபிசந்த் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தினார்
- ஆட்டம் தொடக்கத்தில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி முதல் ஆரம்ப செட்டில் தென் கொரியா ஜோடியிடம் ஆட்டத்தை இழந்தனர்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான காயத்ரி கோபிசந்த் தனது அபாரமான திறமையை சிங்கப்பூர் ஓபன் 2024 மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் வெளிப்படுத்தினார். காய்த்ரியும் அவரது ஜோடியான திரிஷா ஜாலியும் இணைந்து தென் கொரியா ஜோடியான கிம் செய்- யங் மற்றும் கொங் ஹீ - யங் உடன் நேற்று போட்டியிட்டனர்.
ஆட்டம் தொடக்கத்தில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி முதல் ஆரம்ப செட்டில் தென் கொரியா ஜோடியிடம் ஆட்டத்தை இழந்தனர். ஆனால் ஆட்டத்தின் மூன்றாவது செட்டில் காயத்ரி செய்த செயல் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
மூன்றாவது செட்டில் இந்திய அணி 3- 2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டம் தீவிரம் அடைந்துக் கொண்டு இருக்கும் பொழுது ஆட்டத்தின் நடுவே காயத்ரி கோபிசந்த் அவரது ரேக்கட்டை மாற்றி 4-2 என்று ஸ்கோர் எடுத்து கால் இறுதி சுற்றில் வென்றனர். அந்த பரபரப்பான ஆட்டத்திலும் காய்த்ரி இந்த செயலை செய்தது விளையாட்டு ஆர்வலர்களிடம் மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. பலரும் இவரை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, ஜப்பானின் சிஹாரு ஷிடா-மத்சுயுமா ஜோடியுடன் மோதியது.
அரை இறுதி ஆட்டத்தில் இதில் ஜப்பான் ஜோடியிடம் 21-23, 11-21 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
- சாத்விக்- சிராக் ஜோடி 21-11, 21-12 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்றது.
- காலிறுதியில் மலேசிய ஜோடியை 21-7, 21-14 என வீழ்த்தியிருந்தது.
தாய்லாந்து ஓபன் (சூப்பர் 500) பேட்மிண்டன் தொடரில் இந்திய ஆண்கள் ஜோடியான சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அரையிறுதியில் தைவான் ஜோடியை எதிர்கொண்டது. தங்களைவிட குறைவான தரவரிசையில் உள்ள தைவான் ஜோடியை மிகவும் எளிதாக வீழ்த்தியது.
இந்திய ஜோடியின் ஆட்டத்தை தைவான் ஜோடியால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் சாத்விக்- சிராக் ஜோடி 21-11, 21-12 என்ற நேர்செட் கேமில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
காலிறுதியில் மலேசிய ஜோடியை 21-7, 21-14 என எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் சீன ஜோடியை எதிர்கொள்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்