என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96178"
- ஜேடர் பாளையத்தில் இருந்து சோழசிராமணி நோக்கி எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
- இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த கோபிநாத் கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம், குரும்பலமகாதேவி அருகே உள்ள எலந்தகுட்டையைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் கோபிநாத் (வயது 29) எலக்ட்ரீசியன். இவர் தனது நண்பர் செல்வராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஜேடர்பாளையம் சென்றார்.
அப்போது ஜேடர் பாளையத்தில் இருந்து சோழசிராமணி நோக்கி எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது செல்வராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து வந்த கோபிநாத் கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த செல்வராஜ் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த கோபாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை வேலூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவம் பற்றி அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
- 11 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் சந்த்தவுசி பகுதியில் உள்ள இந்திரா நகர் சாலையில் குளிர்பதன கிடங்கு ஒன்று உள்ளது.
இதன் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் 8 பேர் சிக்கி பலியானார்கள். சம்பவம் பற்றி அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 11 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி குளிர்பதன கிடங்கு உரிமையாளர்கள் அங்கூர் அகர்வால், ரோகித் அகர்வால் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பிரகாசின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
- எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி ஊராட்சி, வேட்டுவப்பட்டி பகுதியைச் சேர்ந்த உத்தரசாமி மகன் பிரகாஷ் (வயது 25). வேன் டிரைவரான இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் எடப்பாடி நோக்கி வந்தார்.
எடப்பாடி - கோனேரிப்பட்டி பிரதான சாலையில் நெசவாளர் காலனி பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பிரகாசின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சிலுவம்பாளையம் தம்பாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த உத்தரசாமி, அவரது மகன் கவின் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த எடப்பாடி போலீசார், பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியது
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த தச்சம்பட்டியைச் சேர்ந்த வர் மலையாண்டி (வயது 47). இவர் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட மலையாண்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து நடைபெற்றது
- சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்
உடையார் பாளையம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன்பரப்பி கிராமம் காந்தி நகரைச் சேர்ந்தவர் செல்வராசு. இவரது மகன் பரிமேலழகன் (வயது23). இவர் சொந்த வேலை காரணமாக ஜெயங்கொண்டம் வந்துவிட்டு மீண்டும் பொன்பரப்பி செல்ல புதுக்குடி ஏரி ஓடை பாலம் பிரிவு பாதை அருகே சென்று இரு சக்கர வாகனத்தில் கொண்டிருந்தார்.அப்போது எதிரே வந்த இலையூர் கண்டியங்கொல்லை வடக்கு தெருவை சேர்ந்த காசிநாதன் மகன் இளங்கோவன் (27) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் பரிமேலழகன் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாரா விதமாக மோதியது.இதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பரிமேலழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.
- திடீரென்று நிலை தடுமாறி அவர் எரிந்து கொண்டிருந்த தீயில் விழுந்தார்.
- மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே வியனூர் பிலாங்கால விளை பகுதியை சேர்ந்தவர் ரதிகுமாரி (வயது 41). இவரது தந்தை ரவீந்திரன் நாயர் (74) .
இவர் மகள் வீட்டின் பின்பக்கம் தனியாக வசித்து வந்தார். நேற்று மாலை வீட்டின் பின்பக்கம் இருந்த குப்பைகளை ரவீந்திரன் நாயர் தீ வைத்து எரித்து கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென்று நிலை தடுமாறி அவர் எரிந்து கொண்டிருந்த தீயில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு மகள் மற்றும் பக்கத்துவீட்டை சேர்ந்தவர்கள் ஓடி வந்தனர்.
அவர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். பின்னர் ரவீந்திரன் நாயரை தீக்காயங்களுடன் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரவீந்திரன் நாயர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகள் ரதிகுமாரி கொடுத்த புகாரின் பேரின் திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதிய விபத்தில் கிருஷ்ணமூர்த்தி படுகாயம் அடைந்தார்.
- போ லீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள மாடரஅள்ளி பகுதியை சேர்ந்த துணி வியாபாரி கிருஷ்ணமூர்த்தி (வயது45). இவர் நேற்று மத்தூர் -மாடரஅள்ளி சாலையில் சென்றுகொண்டிருந்தார்.
இந்நிலையில் எதிரே அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதிய விபத்தில் கிருஷ்ணமூர்த்தி படுகாயம் அடைந்தார்.
அவ்வழியே சென்றவர் அவரை மீட்டு சிகிச்சைகாக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கிருஷ்ணமூர்த்தி இறந்தார்.
இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
- கல்குவாரியில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
- வெடிவிபத்தில் காயமடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், வினுகொண்டா மண்டலம், திம்மய்ய பாலம் பகுதியில் வெங்கட்ராவ் என்பவருக்கு சொந்தமான கிரானைட் கல் குவாரி உள்ளது.
இந்த கல்குவாரியில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கல்குவாரியை வெடி வைத்து தகர்ப்பதற்காக தொழிலாளர்கள் பாறையில் துளையிட்டு வெடி மருந்துகளை நிரப்பிக்கொண்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பாறையில் ஏற்பட்டிருந்த வெடி மருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் பலராம் (வயது 31) என்ற தொழிலாளி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த டாங்கோ (19), சாமு, மாங்குடு ஆகிய 3 பேரை தொழிலாளர்கள் மீட்டு வெனுகொண்டாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டாங்கோ பரிதாபமாக இறந்தார். 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வெனுகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஸ்ரீரங்கத்தில்குழந்தைகள் காப்பகத்தில் 3 மாத குழந்தை பரிதாப சாவு
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை
திருச்சி,
திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் தனியார் குழந்தைகள் நல காப்பகம் உள்ளது. சமீபத்தில் கடலூரில் இருந்து மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று இந்த காப்பகத்தில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. இரு தினங்களுக்கு முன்பு அந்த 3 மாத குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.இதையடுத்து உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள்.
- 19 அகதிகள் உயிரிழந்தனர் என்று மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரால் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள்.
அவர்கள் கடல் வழியாக படகுகளில் செல்கிறார்கள். வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு கடல் மார்க்கமாக படகில் அகதிகள் சென்றனர். அப்போது அந்த படகு துனிசியா கடலில் கவிழ்ந்தது.
இதில் 19 அகதிகள் உயிரிழந்தனர் என்று மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
- கொலை தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
- பிரபாகருக்கும், பெருமாளுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. இதில் தகராறும் ஏற்பட்டு வந்தது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் நாராயண பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர். எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். நேற்று வேலைக்கு சென்ற பிரபாகர் பின்னர் திரும்பி வரவில்லை.
இந்நிலையில் காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பிரபாகர் ரத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். அவரை அடித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இந்த கொலை தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பிரபாகரை வேலைக்கு அழைத்து சென்ற பெருமாள் என்பவர் அங்குள்ள ஏரியில் விழுந்து இறந்து பிணமாக மிதந்தார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் பெருமாள் வசித்து வந்தார். இவர் பிரபாகரை எலக்ட்ரீசியன் வேலைக்கு அழைத்துச் சென்றார்.
பிரபாகருக்கும், பெருமாளுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. இதில் தகராறும் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் எலக்ட்ரீசியன் பணிக்குச் சென்ற இருவரும் மதுபானம் அருந்திவிட்டு குடிபோதையில் தகராறு செய்து வந்துள்ளனர்.
பொன்னேரி ஏரிக்கரை மேம்பாலத்தின் கீழே அவர்கள் தகராறில் ஈடுபட்டபோது இருவரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக கடுமையாக தாக்கிக் கொண்டு உள்ளனர்.
இதில் பிரபாகர் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டு உயிரிழந்தார். அடிதடியில் மயங்கி ஏரியில் விழுந்து பெருமாள் நீரில் மூழ்கி இறந்து போய் உள்ளார்.
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பெருமாள் உடலை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரது உடலை கைப்பற்றினார்கள். கொடுக்கல் வாங்கல் தகராறில் மதுபோதையில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு உயிரிழந்து உள்ளது தெரியவந்தது.
- புதுப்பாளையத்தில் வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பலி
- இடிபாடுகளை அகற்றி உடல் மீட்கப்பட்டது
கரூர்,வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பலி
கரூர் அருகே உள்ள நெரூர் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 75) இவருடைய மனைவி லட்சுமி( 70 )விவசாய தொழிலாளர்கள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான வீடு ஒன்று கரூர் மாவட்டம், நெரூரை அடுத்த புதுப்பாளையத்தில் உள்ளது. பழமையான இந்த வீட்டில் நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கி உள்ளனர். இந்நிலையில் இன்று காலை ஆறு மணி அளவில் வீட்டிற்குள் கட்டிலில் படுத்திருந்த போது திடீரென வீட்டின் மேல் பகுதி கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சென்று பார்த்த பொழுது இடிபாடுகளில் சிக்கி லட்சுமி இறந்துள்ளார். இதனை அடுத்து அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் இடுப்பாடுகளை அகற்றி மூதாட்டியை மீட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாங்கல் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வீடு இடிந்து விழுந்து தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்