என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96812"
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கே.வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருநாதன். இவரது மனைவி கலைச்செல்வி.
சம்பவத்தன்று இவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பீரோவை திறந்து அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ,1000-த்தை திருடிக் கொண்டு தப்பினார்.
இது குறித்து கலைச் செல்வி கொடுத்த புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கலைச் செல்வி வீட்டில் நகை, பணம் திருடியது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சண்முகக்கண்ணன் (வயது 27) என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் கோவில் பாளையம் தவைய காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரூபன்(31). தொழில் அதிபர். இவரது வீட்டில் விஷேசத்துக்காக உறவினர்கள் சிலர் வெளியூரில் இருந்து வந்திருந்தனர். நேற்று ரூபன் அவர்களை அழைத்து கொண்டு கோவைக்கு வந்து விட்டார்.
இன்று அதிகாலை அவர் மீண்டும் ஊருக்கு திரும்பிய போது வீட்டின் உள்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 40 பவுன் தங்கநகை, ரூ.1 லட்சம் ரொக்க பணம் கொள்ளை போய் இருந்தது. இதையடுத்து கோவில் பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொள்ளை நடந்த வீட்டிற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் துப்புறியும் மோப்ப நாய் அழைத்து வரப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
கோவில்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு 5 இடங்களில் அடுத்தடுத்த கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் துப்பு துலங்குவதற்கு முன்பு மீண்டும் தொழில் அதிபர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே கோவில் பாளையம் பகுதியில் நடக்கும் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் சாய்பாபா காலனியை சேர்ந்தவர் ஜெயக் குமார் (வயது 64). ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்னை சென்றார். இன்று காலை வீடு திரும்பிய போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 8 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம், வாட்ச் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. வீட்டில் ஆள் இல்லாததை கண்காணித்து கொள்ளையர்கள் துணிச்சலாக கைவரிசை காட்டி உள்ளனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
பேரையூர்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்துக்குட்பட்ட வி.டி.மணி நகரைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது65). பழைய இரும்ப பொருட்கள் வாங்கி விற்று வருகிறார்.
இவர் கடந்த 24-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் கும்பகோணம் சென்றார். இன்று அதிகாலை அவர்கள் வீடு திரும்பினர். வீட்டிற்குள் சென்றபோது பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கள்ளிக்குடி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் பின்பக்க கிரீல்கேட்டை உடைத்து உள்ளே வந்த மர்ம மனிதர்கள் ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டிற்குள் புகுந்திருப்பது தெரிய வந்தது.
வீட்டின் பீரோவில் இருந்த 2½ பவுன் தங்க நகைகள், ரூ.4 ஆயிரத்து 500 மற்றும் 1 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் கணேஷ் தெரிவித்தார்.
இதே பகுதியில்தான் அரசு என்ஜினீயர் வீட்டில் நேற்று கொள்ளை சம்பவம் நடைபெற்றது. தற்போது வியாபாரி வீட்டிலும் அதே போன்று சம்பவம் நடை பெற்று இருப்பது மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
2 வீடுகளிலும் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு இருப்பதால் ஒரே கும்பல் தான் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் ஆண்டார் (வயது58). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு மதுரை கூடல்நகரில் உள்ள தனது மகளின் வீட்டுக்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் நேற்று மாலை வீடு திரும்பிய ஆண்டார், வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு 10 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், ஏ.டி.எம்., ஆதார் கார்டுகள், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.
இதுகுறித்து வாடிப்பட்டி போலீசில் ஆண்டார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி மணி நகரைச் சேர்ந்தவர் முத்து ராஜ். இவருடைய மகன் ரத்தினவேல் (வயது38).
இவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் என்ஜினீயராக உள்ளார். சம்பவத்தன்று மனைவி சசிகலாவுடன் தென்காசியில் உறவினர் வீட்டு திருமணத்திற்கு ரத்தினவேல் சென்றார்.
நேற்று மாலை அவர்கள் வீடு திரும்பினர். கதவை திறந்து உள்ளே சென்ற ரத்தினவேல், வீட்டிற்குள் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்அறையில் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் கீழே கிடந்தன. இதனால் வீட்டிற்குள் மர்ம நபர்கள் நுழைந்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து வீட்டை பார்வை விட்டனர். பீரோவில் இருந்த 6 பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளைபோய் இருப்பதாக போலீசாரிடம் ரத்தின வேல் தெரிவித்தார்.
வீட்டு பூட்டு திறக்கப் படாமல் இருக்கும்போது கொள்ளையர்கள் எப்படி உள்ளே புகுந்தனர் என போலீசார் விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பியை உடைத்து மர்ம மனிதர்கள் வீட்டுக்குள் புகுந்திருப்பது தெரியவந்தது. ஆக்சா பிளேடு மூலம் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டுள்ளன.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு யாரோ மர்ம மனிதர்கள் இந்த துணிகர செயலில் இறங்கி உள்ளனர். அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன.
புதுவை அருகே தமிழக பகுதியான பூத்துறை கிராமத்தை சேர்ந்தவர் பி.கே.டி.முரளி (வயது54) இவர் வானூர் ஒன்றிய தி.மு.க. செயலாளராக உள்ளார். இவரது தந்தை திருக்காமு. இவர் முன்னாள் சேர்மன் ஆவார். நேற்று இரவு முரளியும் அவரது தந்தை திருக்காமு ஒரு அறையிலும், மற்றொரு அறையில் முரளியின் மனைவி உஷா (50) மற்றும் முரளியின் தாய் வசந்தி (79) ஆகியோர் தூங்கினர்.
நள்ளிரவு 2 மணியளவில் மர்ம நபர் ஒருவன் முரளியின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தான். முதலில் முரளி மற்றும் அவரது தந்தை தூங்கிய அறை கதவை திறக்காதபடி சேலையால் கட்டினான். பின்னர் பூஜை அறையில் புகுந்து அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.2 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்தான்.
அதனை தொடர்ந்து உஷா தூங்கிய அறையில் புகுந்த கொள்ளையன் அங்கு ஆழ்ந்து தூங்கி கொண்டிருந்த உஷாவின் கழுத்தில் அணிந்திருந்த 14 பவுன் செயினை பறித்தான். உஷா திடுக்கிட்டு எழுந்து பார்த்த போது மர்ம நபர் ஆடை ஏதும் இல்லாமல் நிர்வாணமாக கையில் இரும்பு கம்பியுடன் நிற்பதை கண்டு அலறினார்.
மனைவியின் அலறல் சத்தம் கேட்டு முரளி கதவை திறக்க முயன்றார். ஆனால் கதவு சேலையால் கட்டப்பட்டு இருந்ததால் முரளியால் உடனடியாக அறைகதவை திறக்க முடியவில்லை. பின்னர் உஷாவும், வசந்தியும் அபய குரல் எழுப்பியதால் ஊர் மக்கள் திரண்டு வந்தனர்.
ஆனால் அதற்குள் கொள்ளையன் வீட்டின் பின்பக்கமாக கொல்லைபுறமாக தப்பி ஓடிவிட்டான். தப்பி செல்லும் போது வீட்டின் தோட்டத்தில் உலர வைத்திருந்த உஷாவின் சேலை மற்றும் ஜாக்கெட்டை எடுத்து சென்று சிறிது நேரத்தில் வீசிவிட்டு சென்று விட்டான். கொள்ளைபோன நகை பணத்தின் மதிப்பு ரூ. 5 லட்சமாகும்.
இதுகுறித்து முரளி வானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள், மோப்பநாயை வரவழைத்தனர். மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து சவுக்கு தோப்பு வழியாக ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர்.
தொடர்ந்து இந்த கொள்ளை குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டவன் சைக்கோவா, இவனுடன் யாராவது சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தி.மு.க. பிரமுகர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் குமார் என்பவர் வீட்டில் புகுந்து நகை- பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதால் தொடர்ந்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அடி அண்ணாமலையில் திருவருட்பா மயம் என்ற தனியார் ஆசிரமம் உள்ளது. இங்கு வள்ளலார், நடராஜர் கோவில்கள் உள்ளன. பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கிறது. கிரிவலம் வரும் பக்தர்கள் இந்த ஆசிரமத்துக்கு சென்று பூஜைகளில் பங்கேற்று வருகின்றனர்.
ஆசிரம நிர்வாகி கலை நம்பி (வயது73). அவரது மனைவி பாலம்மாள் மற்றும் பணிப்பெண் ஒருவர் உள்பட3 பேர் ஆசிரம வளாகத்தில் உள்ள வீட்டில் தங்கியுள்ளனர்.
நேற்று இரவு 10 மணிக்கு 3 பேரும் வீட்டில் இருந்தனர். அப்போது 5 பேர் கும்பல் ஆசிரமத்துக்குள் புகுந்தனர். அவர்கள் பணம்- பீரோ சாவியை தரும்படி மிரட்டினர், கலைநம்பி உள்பட 3 பேரும் மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் 3 பேரையும் கத்தியால் தாக்கினர். இதில் கலைநம்பி படுகாயமடைந்தார்.
மேலும் கலைநம்பி, பாலம்மாள், வேலைக்கார பெண் உள்பட 3 பேரையும் கயிறால் கட்டிப் போட்டனர். அங்கிருந்த 5 பீரோக்களை உடைத்தனர். அதிலிருந்த 25 பவுன்நகை, ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
கொள்ளையர்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேறியதும் கலைநம்பி கயிற்றை மெதுவாக அவிழ்த்தார். அவரது மனைவி, வேலைக்கார பெண்ணையும் கட்டவிழ்த்து விட்டார்.
இது குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
கொள்ளை கும்பல் தாக்கியதில் காயமடைந்த கலைநம்பி திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆசிரமத்தில் புகுந்து கும்பல் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் வடக்கு கோபுர வாசல் பகுதியில் வசிப்பவர் பிரவீன் (வயது 38). இவர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16-ந்தேதி தனது குடும்பத்தினருடன் பொள்ளாச்சிக்கு சுற்றுலா சென்று விட்டார். அவர் தனது வீட்டு சாவியை அதே பகுதியில் வசிக்கும் உறவினர் திலகவதியிடம் கொடுத்து மாலை விளக்குகளை எரிய விடுமாறு கூறி சென்றார்
இந்த நிலையில் பிரவீன் வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
நேற்று மாலை திலகவதி வீட்டுக்கு சென்ற போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் பிரவீனிடம் கூறினார்.
இதைத்தொடர்ந்து வீடு திரும்பிய அவர் நகை கொள்ளை நடந்து இருப்பது குறித்து திருவாரூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#tamilnews
பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என்ற பெயரில் கொள்ளை நடப்பதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வை ஈடுகட்டுவதற்காக பெட்ரோல்-டீசல் விலைகளை தினமும் 10 பைசா முதல் 20 பைசா என்ற அளவில் உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இப்போது கடந்த 19 நாட்களில் செய்யப்படாத விலை உயர்வை ஈடு கட்டுவதற்காக தினசரி விலை உயர்வை இருமடங்காக உயர்த்தயுள்ளன.
இது கத்தியைக் காட்டாமல் எரிபொருள் நிரப்பும் குழாய்களின் முனையைக் காட்டி நடத்தப்படும் கொள்ளை ஆகும்.
இந்தியாவில் கடந்த 2014-2015-ம் ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டன. அதையும் சேர்த்து எரிபொருட்கள் மீதான வரிகள் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இது பெரு நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் மறைமுக வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயை விட அதிகம் ஆகும்.
எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்ற பெயரில் நடத்தப்படும் கொள்ளைக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். அதற்காக பெட்ரோல், டீசல் மீதான அனைத்து வரிகளையும் ரத்து செய்து எரிபொருட்களின் விலை கடந்த ஓராண்டுக்கு முன்பிருந்த நிலைக்கு குறைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு யூனியன் அலுவலகம் அருகே உள்ள எழில்நகரில் வசித்து வருபவர் சக்திவடிவேல் முருகன். வத்தலக்குண்டு யூனியன் அலுவலகத்தில் துணைவட்டார வளர்ச்சி அலுவலராக(சத்துணவு) உள்ளார். அவரது மனைவி ரேணுகாதேவி, மகள் வர்ஷா, மகன் கோகுல். தற்போது பயிற்சிக்காக சக்திவடிவேல் முருகன் பவானிசாகருக்கு சென்றுள்ளார்.
நேற்றிரவு ரேணுகாதேவி தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு சமயம் மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ஹெல்மெட் மற்றும் டவுசர் அணிந்திருந்தனர். மர்மநபர்கள் 2 பேரும் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பீரோவை திறந்த அவர்கள் 2 பவுன்நகையை திருடிக்கொண்டனர். சத்தம் கேட்டு ரேணுகாதேவி திடுக்கிட்டு எழுந்தார். அப்போது மர்மநபர்கள் நிற்பதை பார்த்து கூச்சல் போட்டார்.
உஷாரான அவர்கள் ரேணுகாதேவியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு தலைமறைவானார்கள். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வத்தலக்குண்டு நகரில் தொடர்ந்து கொள்ளைச்சம்பவம் நடந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.#tamilnews
திருத்தணியை அடுத்த பொதட்டூர்பேட்டையில் பழமையான அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று இரவு பூஜை முடிந்து கோவிலை பூசாரி பூட்டிச் சென்றார்.
நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்து ஐம்பொன்னால் ஆன சுமார் 3 அடி உயரம் உள்ள ஈஸ்வரர் சிலை மற்றும் 2½ அடி உயரம் உள்ள பார்வதி சிலையை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
இன்று அதிகாலை கோவிலுக்கு வந்த பூசாரி ஐம்பொன் சிலைகள் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து பொதட்டூர் பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. சேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கோவிலுக்கு வந்த கொள்ளை கும்பல் ஐம்பொன் சிலைகளை மட்டும் தூக்கிச் சென்று உள்ளனர். எனவே மர்ம கும்பல் திட்டமிட்டு கைவரிசை காட்டி இருப்பது தெரிந்தது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.#tamilnews
திருப்பரங்குன்றம் மூட்டா காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 45), அரசு வங்கி ஊழியராக உள்ளார். ராஜேஷ் இன்று அதிகாலை மதுரை மெயின் ரோட்டில் நடை பயிற்சி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி 2½ பவுன் தங்கச்சங்கிலி மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.
இதையடுத்து ராஜேஷ் கூச்சல் போடவே, தற்செயலாக அங்கு வந்த ரோந்து போலீசார் விசாரித்தனர். அப்போது ராஜேஷ் நடந்த விவரங்களை கூறினார். அதைத்தொடர்ந்து போலீசார் வாகனத்தில் மர்ம நபர்களை விரட்டி சென்றனர்.
இதற்கிடையே பசுமலை சோதனை சாவடிக்கு தகவல் பறந்தது. அவர்கள் சாலையில் தடுப்புகளை அமைத்து, குற்றவாளிகளை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த திருட்டு தங்கச்சங்கிலி, செல்போன் ஆகியவை மீட்கப்பட்டன.
திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சிக்கந்தர் சாவடியை சேர்ந்த கதிரவன் (வயது 20), ஆனையூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த மனோகுமார் (22) என்பது தெரிய வந்தது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்