search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிரட்டல்"

    திருமங்கலத்தில் நடந்து சென்ற வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மானாமதுரை ரவுடி கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    திருமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் அடிக்கடி நகைபறிப்பு, வழிப்பறி போன்றவை சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றது. பட்டப்பகலிலும் குற்றங்கள் அதிகரித்துள்ளதால் பெண்கள் வெளியே நடமாடவே அச்சப்படுகின்றனர்.

    மதுரை பைக்காரா முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் சக்திவேல் (வயது 32). இவர் நேற்று திருமங்கலம் மறவங்குளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மானாமதுரை ஏ.வெள்ளாங்குளத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் பிரபு என்ற குட்டை கமல் (27) என்பவர் வழிமறித்தார். அவர் திடீரென்று கத்தியை காட்டி மிரட்டி சக்திவேலிடம் இருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பினார்.

    இது குறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் பறித்த பிரபுவை கைது செய்தனர். இவர் மீது பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    வத்தலக்குண்டு அருகே டிரைவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக பிரமுகரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு பஸ் நிலையம் பின்புறம் காந்தி நகர் மெயின் ரோடு பகுதியில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மேலும் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வத்தலக்குண்டு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 35), கார் டிரைவர். மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது எதிரே விருதுநகரைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பிரபு (40). காரில் வந்து கொண்டு இருந்தார். போக்குவரத்து நெரிசலால் மோட்டார் சைக்கிள் கார் மீது லேசாக உரசியது. இதனால் பிரபு ஆத்திரமடைந்து மணிகண்டனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    பின்பு தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டு விடுவதாக மணிகண்டனை மிரட்டியுள்ளார். திடீரென பிரபு துப்பாக்கியை எடுத்ததால் மணிகண்டன் உள்பட பொதுமக்கள் அலறியடித்து சாலையில் ஓடினர்.

    இது குறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காந்தி நகர் பகுதியில் ஆஸ்பத்திரிகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. இங்கு வரும் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்திச் செல்கின்றனர். எனவே போலீசார் இந்த சாலையில் போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #tamilnews
    பிரதமர் நரேந்திர மோடி மீது ரசாயன தாக்குதல் நடத்துவேன் என மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். #Modi #Threatening #ChemicalAttack
    மும்பை:

    டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த வெள்ளிக்கிழமை அழைப்பு ஒன்று வந்தது. அதில், பேசிய நபர், ‘பிரதமர் நரேந்திர மோடி மீது ரசாயன தாக்குதல் நடத்துவேன்’ என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதைக்கேட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்தநிலையில், மிரட்டல் விடுத்த ஆசாமி மும்பையில் இருந்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியது கண்டறியப்பட்டது.

    இதுபற்றி தேசிய பாதுகாப்பு படையினர் மும்பை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து போலீசார் செல்போன் எண் அலைவரிசை மூலம் மர்மஆசாமி இருக்கும் இடத்தை ஆராய்ந்தனர். இதில், அவர் மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருப்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று குறிப்பிட்ட அந்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில், அவரது பெயர் காசிநாத் மண்டல் (வயது22) என்பதும், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அவர், மும்பை வால்கேஸ்வர் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது.

    அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   #Modi #Threatening #ChemicalAttack
    பாளை குலவணிகர்புரத்தில் உள்ள கோவில் கொடை விழாவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    நெல்லை:

    பாளை குலவணிகர்புரத்தில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் கொடைவிழா நேற்று இரவு நடந்தது. விழாவில் பாட்டுக்கச்சேரி நடந்தது. அப்போது ஒரு சமுதாய பாடலை பாடினார்கள்.

    இதைத்தொடர்ந்து விழா பாதுகாப்புக்கு நின்ற மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் சமுதாய பாடல்களை பாட வேண்டாம் என்று கூறியுள்ளார். அப்போது விழா நடத்தும் குழுவினர்கள் போலீசாரை அவதூறாக பேசி மிரட்டி உள்ளனர்.

    இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார். மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி கோவில் விழா நடத்திய சுப்பிரமணியன், நல்லக்கண்ணு, முருகன், பால்ராஜ், பாலகிருஷ்ணன், நவநீத கிருஷ்ணன், சங்கர பெருமாள் உள்பட 10 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று கோவில் விழாவிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #tamilnews
    போர்வேல் பராமரிப்பவர்கள் குடிநீர் விநியோகிக்காததால் இது குறித்து பெண்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
    கொண்டலாம்பட்டி

    சேலம் குகை ஆண்டிப்பட்டி வசந்தம் நகர் பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் 133 வீடுகள் உள்ளன. கடந்த 25 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இது குறித்து சில தினங்களுக்கு முன்பு கலெக்டர் ரோகிணியிடம் மனு அளித்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரிடம் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் போர்வேல் மூலம் எங்கள் குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது தண்ணீர் விநியோகிக்கப்படாததால் நாங்கள் இது குறித்து போர்வேல் பராமரிப்பவர்களிடம் கேட்டோம். அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    இது குறித்து உரிய விசாரணை நடத்தி போலீஸ் கமிஷனர் சங்கர் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டார்.
    திண்டுக்கல்லில் அரசு ஊழியரை மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே அம்பாத்துரையைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் சக்தி கணேஷ் (வயது 32). பழனி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அம்பாத்துரையில் இருந்து மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் சுகாதாரப்பணிகள் அலுவலகத்துக்கு வந்து பைக்கை நிறுத்தி விட்டு பஸ் ஏறி வேலைக்கு செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று பழனியில் இருந்து வேலை முடித்து விட்டு திண்டுக்கல் வந்தார். துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் அம்பாத்துரை நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

    சர்வீஸ் சாலையில் மதுரை 4 வழிச்சாலை அருகே சென்று கொண்டு இருந்தபோது திடீரென 3 பேர் கொண்ட கும்பல் சக்திகணேசை கத்திமுனையில் வழிமறித்து மிரட்டினர். பின்பு அவரிடம் பைக்கை பறித்துக் கொண்டு துரத்திவிட்டனர்.

    அங்கிருந்து தப்பி வந்த சக்திகணேஷ் திண்டுக்கல் தாலுகா போலீசில் இது குறித்து புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
    உத்தரபிரதேச மாநிலத்தில் உயர் சாதியினரின் மிரட்டலை மீறி 350 போலீசார் பாதுகாப்புடன் தலித் மணமகன் சாரட்டில் சென்று திருமணம் செய்து கொண்டார்.
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை உயர் சாதி இனத்தவர்கள் மிகவும் மோசமாக நடத்துவது இன்னமும் நடந்தபடிதான் உள்ளது.

    தலித் மக்களை கொடுமைப்படுத்துபவர்களைத் தண்டிக்க கடும் சட்டங்கள் உள்ள போதிலும், கிராமங்களில் ஆங்காங்கே அத்துமீறல்கள் நடக்கிறது. குறிப்பாக தங்களைப் போல ஆடம்பரமாக தலித் மக்கள் வாழ உயர் சாதியினர் அனுமதிக்காத நிலை நிலவுகிறது.

    உயர் சாதியினரின் இத்தகைய அடக்கு முறையை தலித் வாலிபர் ஒருவர் கடுமையாக போராடி உடைத்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:-

    உத்தரபிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நிசாம்பூர் கிராமத்தில் தலித் மக்களும், தாக்கூர் என்ற உயர் சாதி மக்களும் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தை சேர்ந்த தலித் பெண் ஷீதல்.

    இவருக்கும் அருகில் உள்ள ஹத்ரஸ் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய்ஜாதவ் (27) என் பவருக்கும் 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடத்த நிச்சயம் செய்யப்பட்டது.

    ஏப்ரல் மாதம் 20-ந்தேதி சஞ்சய்-ஷிதல் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. மணமகன் சஞ்சய், நிசாம்பூர் கிராமத்துக்குள் வரும்போது அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதை அறிந்ததும் நிசாம்பூர் கிராம தாக்கூர் இனத்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தலித் இனத்தவர்கள் தங்கள் ஊருக்குள் சாரட் வண்டியில் வரக்கூடாது என்றனர். பஞ்சாயத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த தடையை கண்டு மணமகன் சஞ்சய் பயப்படவில்லை. மனம் கலங்கி பின்வாங்கவில்லை.

    உயர்சாதி மக்களின் தடையை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, ‘‘சஞ்சய்-ஷீதல் திருமணத்துக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். மணமகன் சஞ்சய் சாரட் வண்டியில் செல்ல உதவ வேண்டும்’’ என்று உத்தரவிட்டது. இதனால் கஸ்கஞ்ச், ஹதரஸ் இரு மாவட்டங்களிலும் பரபரப்பு ஏற்பட்டது.

    நேற்று மாலை மணமகன் சஞ்சய் தனது ஊரில் இருந்து சாரட் வண்டியில் புறப்பட்டு வந்தார். கஸ்கஞ்ச் மாவட்ட எல்லையில் போலீசார் வரவேற்று அவருக்கு பாதுகாப்பு கொடுத்தனர். அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை நேற்று காலை 2 மாஜிஸ்திரேட்டுகள், ஒரு தாசில்தார் நேரில் வந்து ஆய்வு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


    மாவட்ட எல்லையில் இருந்து நிசாம்பூர் கிராமம் வரை சஞ்சய் குதிரை வண்டியில் அமர்ந்து கம்பீரமாக வந்தார். 6 போலீஸ் நிலையங்களை சேர்ந்த சுமார் 350 போலீசார் அவரது சாரட் வண்டி ஊர்வலத்துக்கு பாதுகாப்பு அளித்தனர். உயர்சாதி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சஞ்சய் பாதுகாப்புக்கு கமாண்டோ படை வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

    மணமகன் சஞ்சய் சாரட் வண்டியில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்படுவதை உள்ளூர் டி.வி. சேனல்கள் போட்டி போட்டு நேரடி ஒளிபரப்பு செய்தன. மணமகள் ஷீதல் அந்த காட்சிகளை வீட்டில் அமர்ந்து பார்த்தபடி இருந்தார்.

    சாரட் வண்டி ஊர்வலம் நிசாம்பூர் கிராமத்தை அடைந்ததும் சஞ்சய்-ஷீதல் திருமணம் நடந்தது. சுமார் 350 போலீஸ் பாதுகாப்புடன் நடந்த அவர்களது திருமணத்தை அக்கம் பக்கம் கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து பார்த்தனர்.

    நிசாம்பூர் கிராம மக்கள் இதுபற்றி கூறுகையில், இதுவரை இப்படி ஒரு திருமணத்தை பார்த்ததே இல்லை என்றனர். சஞ்சய் செய்த துணிச்சலான புரட்சியால் நிசாம்பூர் கிராமத்தில் சாரட் வண்டியில் வந்து திருமணம் செய்த முதல் தலித் வாலிபர் என்ற சாதனையை சஞ்சய் படைத்துள்ளார். #DalitGroom #Kasganj
    திண்டிவனம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் எடுத்து மிரட்டியதால் அடித்து கொன்றதாக கைதான 3 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது புலியனூர். அங்குள்ள வயல் பகுதியில் சுமார் 30 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடலை வெள்ளிமேடுபேட்டை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊர் என்ற விவரம் தெரியாமல் இருந்தது.

    இதையொட்டி திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் விசாரணை நடத்திய போது பிணமாக கிடந்தவர் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மேல்கண்டிகையை சேர்ந்த பாலாஜி என்ற ஜெயபாலன்(வயது 30) என்பது தெரியவந்தது.

    தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டபோது திண்டிவனம் புலியனூர் கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜூ(39). இவரது அண்ணன் சுரேஷ்(41), நந்தன்(55) ஆகியோர் சரண்அடைந்தனர்.

    பின்னர் 3 பேரும் வெள்ளிமேடுபேட்டை போலீஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அப்போது அவர்கள் பாலாஜியை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்களது உறவினரான கனகேஷ்(34) என்பவர் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் டிராக்டர் ஷோரும் நடத்தி வருகிறார். அவர் அங்கு ஒரு வாடகை வீடு எடுத்து தங்கியிருந்தார். அவருடன் ஷோரூமில் வேலைபார்க்கும் தாமோதரன் மற்றும் பாலாஜி ஆகியோர் தங்கியிருந்தனர்.

    கொலைசெய்யப்பட்ட பாலாஜி

    பாலாஜி மெக்கானிக் வேலை பார்த்து வந்தார். அவர் அறையில் தங்கியிருக்கும்போது பக்கத்து வீடுகளில் பெண்கள் குளிப்பதை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். பின்பு அதை அந்த பெண்களிடம் காட்டி மிரட்டி சில்மி‌ஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண்கள் கனகேஷிடம் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் மெக்கானிக் பாலாஜியை கண்டித்தார். ஆனாலும் அவர் பெண்களிடம் சில்மி‌ஷம் செய்வதை நிறுத்தவில்லை. இதுபற்றி கனகேஷ் எங்களிடம் கூறினார்.

    அப்போது பாலாஜியை கொலை செய்ய முடிவு செய்தோம். பின்னர் நாங்கள் கூறிய யோசனைப்படி கனகேஷ் தனது காரில் பாலாஜியை புலியனூருக்கு அழைத்து வந்தார்.

    காரில் இருந்து இறங்கியதும் அவரை ஒரு வயல்பகுதிக்கு அழைத்து சென்றோம். அப்போது அவரை சரமாரியாக அடித்து உதைத்தோம். இதில் பாலாஜி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது சகதிக்குள் அவரது முகத்தை அழுத்தி கொன்றோம். பிறகு நாங்கள் அங்கிருந்து சென்றுவிட்டோம்.

    இந்தகொலை தொடர்பாக போலீசார் எங்களை தேடியதை அறிந்ததும் கிராம அதிகாரி முன்னிலையில் சரண் அடைந்துவிட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் அவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து கைதான ராஜூ, சுரேஷ், நந்தன் ஆகியோர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    பண்ருட்டி அருகே பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புலவனூர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார்(வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் மோகன்(19). இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.

    இவர்கள் அதே பகுதியில் வீட்டில் குளிக்கும் பெண்களை மறைந்து நின்று தங்களது செல்போனில் படம் பிடித்தனர். அதை வைத்து கொண்டு பெண்களை மிரட்டினர். எங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் செல்போனில் பிடித்த படங்களை வாட்ஸ்-அப், பேஸ்புக்-கில் வெளியிடுவோம் என கூறினர்.

    இதனால் அந்த பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து பிரேம்குமார் மற்றும் மோகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அரியாங்குப்பம்:

    அரியாங்குப்பம் ஆர்.கே. நகர் சந்திப்பில் நேற்று மாலை ஒரு வாலிபர் நின்று கொண்டு அவ்வழியே சென்ற பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை மடக்கிபிடித்தனர். அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் அரியாங்குப்பம் மணவெளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தேவேந்திரன் மகன் சூர்யா என்ற எலி சூர்யா (வயது 20) என்பதும், ரவுடியான இவர் மீது ஏற்கனவே பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

    இதையடுத்து சூர்யாவை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை மிரட்டும் வகையில் உள்ளதால் கவர்னரை எதிர்த்து அனைத்து கட்சிகளும் போராடும் நிலை ஏற்படும் என முத்தரசன் கூறியுள்ளார். #mutharasan #tngovernor

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கடசியின் மாநில செயலாளர் இரா.முத் தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை நடத்தி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக கவர்னர் பன்வாரிலாலுக்கு நாமக்கலில் கருப்பு கொடி காட்டிய தி.மு.க.வினர் 192 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்திருக்கும் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. மாநில அரசு , மத்திய அரசின் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதால் கடும் அடக்கு முறை நடவடிக்கைகளை மக்கள், அரசியல் கட்சியினர் மீது மேற்கொண்டு வருகிறது.

    அதேபோல் தமிழக கவர்னர் தமக்கு அளிக்கப்பட்டுள்ள வரம்புகளை மீறி ஜனாதிபதி ஆட்சி நடப்பதை போல மாநில அரசை நிராகரித்து விட்டு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்.


    கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை மிரட்டும் வகையில் உள்ளது. கவர்னர் சட்டப்படி நடந்து கொள்கிறார் என்றும், எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வது போல் வெளியான அந்த அறிக்கை கண்டனத்திற்குரியது. இது போன்ற நடவடிக்கைகளை கவர்னர் நிறுத்தாவிட்டால், அவரை எதிர்த்து போராடும் நிலை அனைத்து கட்சிகளுக்கும் ஏற்படும்.

    சேலம்-சென்னை 8 வழிச்சாலையை மறுபரி சீலனை செய்ய வேண்டும். எங்கள் கட்சி சர்பில் முதற் கட்டமாக வரும் 4-ந் தேதி சேலத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதேபோல் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #mutharasan #tngovernor

    நகைக்கடை அதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி 13½ பவுன் டாலர் செயினை 2 மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் விகாஸ் (வயது 36). அதே பகுதியில் நகை கடை வைத்துள்ளார். இவர், தினமும் இரவு டிரிபில்ஸ் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்வார்.

    வழக்கம் போல் நேற்றிரவும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுவிட்டு 9 மணியளவில் பைக்கில் வீடு திரும்பினார். உடற்பயிற்சி கூடம் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் முகத்தை கைக்குட்டை கட்டி மறைத்திருந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென விகாசின் பைக்கை வழி மறித்தனர்.

    விகாசிடம் கத்தியை காட்டி மிரட்டிய கழுத்தில் இருந்த 13½ பவுன் டாலர் செயினை கழற்றி கொடுக்குமாறு கூறினர். விகாசும் பயத்தில் தங்க செயினை கழற்றி கொடுத்தார்.

    செயினை பறித்த பிறகு 2 மர்ம நபர்களும், அவர்கள் வந்த பைக்கில் ஏற்றி மின்னல் வேகத்தை ஓட்டி தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசில் நகைக்கடை அதிபர் விகாஸ் நேற்றிரவே புகார் அளித்தார்.

    போலீசார் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்று செயின் பறிப்பு கொள்ளையர்கள் குறித்து விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில், செயின் பறிப்பு கொள்ளை காட்சிகள் பதிவாகியுள்ளது. ஆனால், மர்ம நபர்கள் முகத்தில் கைக்குட்டை கட்டி இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை.

    ஆனாலும், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    ×