search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • கோவில் உண்டியலை கொள்ளையர்கள் தூக்கிச் சென்றனர்
    • போலீசார் தீவிர விசாரணை

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பிச்சனூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அக்னி வீரனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு விசேஷ தினங்கள் தவிர்த்து வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே வீரனாருக்கு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை கோவிலில் பூஜை செய்வதற்காக பூசாரி இளமாறன் சென்றார். அப்போது கோவிலுக்குள் இருந்த உண்டியலை காணாமல் திடுக்கிட்டார்.

    கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இந்த உண்டியல் காணிக்கை பணம் கோவில் நிர்வாகத்தால் எடுக்கப்ப டவில்லை. ஆகவே அதில் ரூ. 2 லட்சத்துக்கும் மேல் பணம் இருக்கலாம் என கூறப்பட்டது. மேலும் அந்த உண்டியல் சுமார் 125 கிலோ எடை கொண்டதாகும். அதனை ஒருவர் அல்லது இருவரால் பெயர்த்து எளிதில் தூக்கிச் செல்ல முடியாது.

    குறைந்த பட்சம் நான்கு பேராவது இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டிரு க்கலாம் என தெரிகிறது.

    கொள்ளையர்கள் சாவகாசமாக சில மணி நேரம் உட்கார்ந்து இரும்பு கம்பிகளால் தோண்டி தூக்கிச் சென்றிருக்கலாம் என கருதப்ப டுகிறது. இது பற்றி இளமாறன் ஜெயங்கொ ண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொ ண்டனர். 125 கிலோ எடை கொண்ட கோவில் உண்டியலை கொ ள்ளையர்கள் அலாக்காக தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

    • இந்தக் கோவில் வளாகத்தில், ‘புஷ்கரணி’ என்னும் சிறிய குளம் உள்ளது.
    • நந்தியின் வாய் வழியாக விழும் நீர், வருடம் முழுவதும் வந்து கொண்டே இருக்கிறது.

    ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ளது, யாகந்தி என்ற ஊர். இங்கு உமாமகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் 15-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் சங்கம வம்சத்தின் மன்னரான ஹரிஹரி புக்க ராயரால் கட்டப்பட்டது.

    முன் காலத்தில் இந்தப் பகுதிக்கு வந்த அகத்தியப் பெருமான், இங்கு ஒரு பெருமாள் ஆலயத்தை கட்ட விரும்பினார். இதற்காக பெருமாள் விக்கிரகம் செய்தபோது, அது முழுமை பெறுவதற்கு முன்பாகவே, அதில் ஏதாவது ஒரு குறை ஏற்பட்டு அந்தப் பணி தடைபட்டுக் கொண்டே வந்தது. எத்தனையோ முறை முயற்சி செய்து பார்த்தும், அகத்தியரால் பெருமாள் சிலையை முழுமையாக முடிக்க முடியவில்லை.

    இதையடுத்து அவர் சிவபெருமானை நினைத்து வேண்டினார். தன்னுடைய பணியை முடிக்க உதவும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் முன்பாக தோன்றிய சிவபெருமான், "இது கயிலைக்கு ஒப்பான தலம். ஆகையால் இது விஷ்ணுவுக்கு உகந்த தலம் இல்லை" என்று கூறினார். உடனே அகத்தியர், உமையம்மையுடன் இங்கே தங்கும்படி சிவபெருமானை பணித்தார். அதற்கு இறைவனின் அருள் கிடைத்தது.

    இதையடுத்து ஒரே கல்லில் சிவன், பார்வதி உருவத்தை, உமா மகேஸ்வரராக செய்தார், அகத்தியர். இங்குள்ள மூலவர், அர்த்தநாரீஸ்வரரின் தோற்றத்தில் அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது.

    முன்காலத்தில் இங்கே ஒரு சிவ பக்தர் வாழ்ந்து வந்தார். அவர் இறைவனைக் காண வேண்டி தவம் மேற்கொண்டார். அவரது தவத்திற்கு இரங்கிய சிவபெருமான், புலி வடிவத்தில் அந்த பக்தருக்கு காட்சி தந்தார். வந்தது இறைவன் என்பதை உணர்ந்து கொண்ட அந்த பக்தர், 'நேனு சிவனே கண்டி' (நான் சிவபெருமானை கண்டுகொண்டேன்) என்று கூறினார். இதனால் இத்தலம் 'நேனுகண்டி' என்றானது. அதுவே மருவி தற்போது 'யாகந்தி' என்று அழைக்கப்படுகிறது.

    இந்தக் கோவில் வளாகத்தில், 'புஷ்கரணி' என்னும் சிறிய குளம் உள்ளது. மலை உச்சியில் இருந்து வரும் நீர், நந்தியின் வாய் வழியாக இந்த புஷ்கரணியில் விழுவது போல அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீரானது, சுவையாகவும் எப்போதும் குளிர்ச்சியாகவும் இருக்கிறது. நந்தியின் வாய் வழியாக விழும் நீர், வருடம் முழுவதும் வந்து கொண்டே இருக்கிறது. இந்த புஷ்கரணியில் நீராடிதான், அகத்தியா் சிவபெருமானை வழிபட்டதாக தல வரலாறு சொல்கிறது.

    கர்னூல் மாவட்டம் பங்கனப்பள்ளியில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, இந்தத் திருத்தலம்.

    கோவிலைச் சுற்றியுள்ள குகைகள்அகத்தியர் குகை

    மகாவிஷ்ணுவின் சிலையில் ஏதாவது ஒரு குறை ஏற்பட்டு, சிலை வடிக்க முடியாமல் போனதையடுத்து சிவபெருமானை நோக்கி அகத்தியர் தவம் செய்த இடம் இது என்று சொல்கிறார்கள். இந்தக் குகையைக் காண, 120 செங்குத்தான படிகளை கடந்து செல்ல வேண்டும். இந்த குகைக்குள் அம்பாளின் சிலை ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறது.

    வெங்கடேஸ்வரர் குகை

    இந்த குகையில் வெங்கடேஸ்வரரின் சிதைந்த சிலை ஒன்று உள்ளது. அகத்தியர் குகையுடன் ஒப்பிடுகையில், மிகப்பெரிய குகை இது. ஆனால் இதன் உள்ளே செல்லும் வழி மிகவும் குறுகலானது. எனவே குனிந்தபடிதான் செல்ல வேண்டும்.

    வீரபிரம்மேந்திரர் குகை

    இந்தக் குகை, குபேரபுரி வீரா பிரம்மேந்திர சுவாமி என்பவருக்குரியது. தனது ஞானக் கவிதைகளை, அந்த துறவி எழுதிய இடம் இது என்கிறார்கள். இந்த குகையின் முகப்பு பகுதியின் உயரம் குறைவானது. எனவே இதற்குள்ளும் குனிந்தபடிதான் சென்று வந்தாக வேண்டும்.

    • 1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
    • எல்லா இடங்களிலும் செய்த பாவங்கள் இந்த ஆலயத்தில் வழிபட்டால் நீங்கும்.

    மூலவர்: திருமேனிநாதர் (வேறுபெயர்கள்: சுழிகேசர், பிரளயவிடங்கர், தனுநாதர், மணக்கோல நாதர், கல்யாணசுந்தரர், புவனேஸ்வரர், பூமீஸ்வரர்)

    அம்பாள்: துணைமாலையம்மை (வேறுபெயர்கள்: சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள், மாணிக்கமாலை)

    தலவிருட்சம்: அரச மரம், புன்னை மரம்.

    தல தீர்த்தம்: பாகவரி நதி (குண்டாறு), கவ்வைக் கடல் தீர்த்தம்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி என்ற இடத்தில் அமைந்துள்ளது, துணைமாலையம்மை உடனாய திருமேனிநாதர் திருக்கோவில். இந்த ஆலயத்தைப் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

    சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 ஆலயங்களில் 202-வது ஆலயமாகவும், பாண்டிய நாட்டுத் தலங்களில் 12-வது தலமாகவும் விளங்குகிறது.

    1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுவாமி சன்னிதியில் உள்ள ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் காணப்படுகிறது.

    இங்கு அருளும் அம்பாள், மதுரை மீனாட்சி அம்மனைப் போலவே காட்சி தருகிறார். அம்பாள் திரிபங்கி லட்சண அமைப்பில், இடுப்பு, கழுத்து, இடது கால் போன்றவற்றை சற்றே சாய்த்து நடன அமைப்பில் தரிசனம் தருகிறாள். அம்பாள் சன்னிதிக்குள், அம்பாளுக்கு எதிரே ஸ்ரீசக்கரம் வைக்கப்பட்டுள்ளது.

    ரமண மகரிஷி அவதரித்த தலம் இதுவாகும். அவர் தென்னிந்திய யாத்திரையின் போது, இந்த தலத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்துள்ளார்.

    இவ்வாலயத்தில் நவராத்திரி, ஆவணி மூலம், சித்திரை விஷூ, கார்த்திகை சோமவாரம், ஆடித் தபசு, தைப்பூசம், பங்குனி பிரம்மோற்சவம், தேரோட்டம் ஆகியவை சிறப்பாக நடைபெறும் திருநிகழ்வுகள் ஆகும்.

    இத்தல இறைவனை சிவராத்திரி அன்று, ஒரு வில்வ இலை கொண்டு அர்ச்சித்தால், உலகம் முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களுக்கும் சென்று வழிபட்ட, அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.

    இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அவர் இங்கு திருமணக் கோலத்தில் அருள்கிறார். எனவே இங்கு வந்து திருமணம் செய்து கொள்வதை மக்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.

    இத்தலத்தில் பிரளய வெள்ளம் ஏற்பட்டபோது, ஒரு அம்பினால் சுழித்து அந்த வெள்ளத்தை பாதாளத்திற்குள் செலுத்தியதால், இந்த ஊர் 'திருச்சுழியல்' என்று அழைக்கப்பட்டது.

    எல்லா இடங்களிலும் செய்த பாவங்கள் இந்த ஆலயத்தில் வழிபட்டால் நீங்கும். ஆனால் இந்த ஊரில் செய்த பாவம், இங்கின்றி வேறு எங்கும் தீராது.

    இறந்தவர்களுக்கு அர்ச்சனை செய்து மோட்ச தீபம் ஏற்றும் வழக்கம் இந்த ஆலயத்தில் இருக்கும் சிறப்பாகும். அப்படி இறந்தவர்களுக்காக அர்ச்சனை செய்து மோட்ச தீபம் ஏற்றினால், இறந்தவர்களின் பாவங்கள் களையப்பட்டு, அவா்கள் 21 பிறவியைக் கடந்து சிவகதி அடைவார்கள்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது திருச்சுழி. விருதுநகரில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவிலும், அருப்புக்கோட்டையில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும் இத்தலம் உள்ளது.

    • ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது.
    • திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம்பெற இறைவனைப் பிரார்த்திக்கலாம்.

    சுவாமி : விஜயசனபெருமாள்.

    அம்பாள் : வரகுணவல்லித்தாயர், வரகுண மங்கைத் தாயர்.

    தீர்த்தம் : அக்னி தீர்த்தம், தேவ புஷ்கரணி.

    விமானம் : விஜயகோடி.

    பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

    தல வரலாறு :

    முன்னோரு காலத்தில் ரேவா நதிக்கரையில் புன்னிய கோஷம் என்னும் அக்கிராகாரத்தில் "வேதவி" என்பவர் தன் மாதா, பிதா, குரு மூவருக்குரிய கடன்களை முடித்து திருமாலை நோக்கி ஆஸனதை என்னும் மந்திரத்தை ஜெபித்து தவமிருக்க எண்ணியிருக்கையில் அவனிடம் திருமால் கீழ் பிராமண வேடத்தில் வந்து ஆஸனதை மந்திரம் ஜெபிக்க வரணகுண மங்கை தான் சிறந்தது என்று கூற அவர் இங்கு வந்து கடுந்தவம் செய்து திருமாலின் அருள் பெற்று பரமபதம் அடைந்தார். ஆஸன மந்திரம் ஜெபித்து இறைவன் காட்சியளித்த இடமாதலால் "விஜயசானர்" என்னும் திருநாமம் திருமாலுக்கு உண்டானது.

    பிரம்மாவின் கர்வத்தை அழித்த ரோமேச மகரிஷிக்கும் சத்தியத்தால் கணவனின் உயிர் மீட்ட பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியான சாவித்திரிக்கும் அதர்மத்தையும், அக்கிரமத்தையும் சுட்டுப் பொசுக்கும் அக்கினி தேவனுக்கு காட்சியளித்த இடம், இம்மூவருக்கும் சத்தியத்திற்கு ஜெயம் அளிப்பவனாக, சத்திய நாராயணனாக ஆதிசேடன் குடைபிடிக்க சத்தி ஜெயவிஜயங்களை தன் ஆசனமாகக் கொண்டு விஜயாசனர் என்னும் திருநாமம் பெற்று வீற்றிருந்த திருக்கோலத்தில் பரமபத சேவை தந்தருளும் தலம். இத்திருப்பதியில் உயிர் நீத்தால் மோட்சம் கிட்டும் என ரோமேச முனிவர் கூறியுள்ளார்.

    நத்தம் என்று ‌சொன்னால்தான் பலருக்கு புரியும். அருகில் வீடுகள் அதிகம் கிடையாது. திருவரகுணமங்கை வேதவித்து என்னும் பிராமணருக்கு பகவான் காட்சி தந்த தலம். பிராமணரின் பிரார்‌த்தனைப்படி விஜயாசனர் என்ற திருநாமத்தோடு பகவான் காட்சி ‌‌கொடுத்த தலம். அக்னி ரோமச முனிவர், சத்தியவான் ஆகியோர்க்கு காட்சிதந்த தலம்.

    நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது.

    பிரார்த்தனை:

    திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம்பெற, கல்வியில் சிறந்து விளங்க இறைவனைப் பிரார்த்திக்கலாம்.

    நேர்த்திக்கடன்:

    பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

    நடைதிறப்பு : காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, நண்பகல் 1.00 மணி முதல் 6.00 மணி வரை.

    வழிகாட்டி:

    நெல்லை, திருச்செந்ததூரிலிருந்து பஸ்ஸில் சென்று தரிசிக்கலாம், எனினும் வாடகைக் கார். அல்லது வேன் எடுத்து ‌‌‌கொள்வது நலம். இத்தலம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ளது. ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து 13 கி.மீ., திரு‌‌நெல்வேலியிலிருந்து 29 கி.மீ.,

    அருகிலுள்ள நகரம் : திருநெல்வேலி.

    கோயில் முகவரி : அருள்மிகு விஜயசன பெருமாள் திருக்கோவில்,நந்தம், தூத்துக்குடி மாவட்டம்.

    • சாமி விக்ரகங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • போலீசார் அணிவகுப்பு மரியாதை

    கன்னியாகுமரி:

    திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவில் பங்கேற்க கடந்த 23-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமார கோவில் வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவார கட்டு சரஸ்வதிதேவி சிலைகள் ஊர்வலமாக புறப்பட்டு சென்றன.

    இதில் திருவனந்த புரத்தில் நடந்த நவராத்திரி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை நடந்தது. நவராத்திரி விழா முடிவுற்ற பின்னர் 8-ந் தேதி அங்கிருந்து குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனைக்கு புறப்பட்டது. அந்த சாமி சிலைகளுக்கு வழிநெடுக பக்தர்கள் வரவேற்பளித்தனர்.

    இந்நிலையில் நேற்று குமரி - கேரள எல்லைப்பகுதி யான களியக்காவிளையில் பக்தர்கள் மற்றும் தமிழக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பக்தர்கள் திரளாக கூடி நின்று சாமி தரிசனம் மேற்கொண்டனர். மேலும் களியக்காவிளை, படந்தாலுமூடு, திருத்துவபு ரம், குழித்துறை, தபால் நிலைய சந்திப்பு வழியாக குழித்துறை மகா தேவர் ஆலயத்தை வந்த டைந்தது. அங்கு நேற்று தங்கலுக்கு பின்னர் இன்று அதிகாலையில் குழித்துறை மகாதேவர் ஆலயத்திலிருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி சிலைகள் வழி அனுப்பப்பட்டது.

    இதில் தமிழக போலீஸ் சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு அங்கிருந்து பத்மநாப புரத்திற்கு புறப்பட்டு சென்றது.இந்த சாமி சிலைகளுக்கு வழிநெடுக பக்தர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.

    பத்மநாபபுரத்திற்கு நேற்று வந்து சேர்ந்த சாமி சிலைகள் நாளை (10-ந் தேதி) அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலுக்கு வந்து சேரும். சாமி விக்ரகங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • புரட்டாசி மாத திருவாதிரையை யொட்டி நடக்கிறது
    • 16-ந்தேதி நடக்கிறது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திரதினமான வருகிற 16-ந்தேதி 1008 சங்காபிஷேகம் நடக்கிறது.பல வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜ பெருமானும் சிவகாமி அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேளதாளங்கள் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ் வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகிறார்கள்.

    • இந்த கோவில் 500 ஆண்டு பழமை வாய்ந்தது.
    • புரட்டாசி சனிக்கிழமைகளில் இந்த கோவிலுக்கு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள்.

    பொங்கலூர் அருகே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் கோவில்பாளையத்தில் ராமசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் 500 ஆண்டு பழமை வாய்ந்தது. இந்த கோவில் உள்ள இடத்தில் ராமபிரான் தங்கி சென்றதாக கூறப்படுகிறது. கோவில் தல வரலாறு வருமாறு:-

    ராமகாதையில் சீதையை தேடி ராமபிரான், அவருடைய தம்பி லட்சுமணன் ஆகியோர் ஆந்திரா வழியாக இந்த பகுதிக்கு வந்ததாகவும், பின்னர் கோவில் உள்ள இடத்தில் குடில் அமைத்து தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. ராமபிரானும், அவருடைய தம்பி லட்சுமணனும் குடில் அமைத்து தங்கி இருந்த இடம் மேய்ச்சல் நிலமாக இருந்துள்ளது.

    அப்போது அந்த இடத்தில் மண் புற்று ஒன்று உருவாகியுள்ளது. இங்குள்ள புற்களை மேய்வதற்கு வரும் மாடுகள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற போது மாட்டின் மடியில் இருந்து பால் தானாக சுரந்துள்ளது. மாடு மேய்ப்பவர்களும் அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இந்த நிலையில் அந்த மாடு மேய்ப்பவர்கள் கனவில் ராமபிரான் தோன்றி தனக்கு இங்கு கோவில் ஒன்று அமைக்க வேண்டும் என்று கூறியதாகவும், அதன் அடிப்படையில் மண் புற்று இருந்த இடத்தில் பச்சை மண்ணை எடுத்து ராமபிரான், லட்சுமணன், சீதாபிராட்டி, கன்னிமார் சிலைகள் செய்துள்ளனர். பின்னர் சிலைகளை சுடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்தபோது, மறுநாள் காலையில் வந்து சிலைகளை சுடும் பணியில் ஈடுபடலாம் என்று சாமி சிலைகளை அங்கேயே வைத்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    கோவிலில் பூஜை

    அன்று இரவு அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. ஆனால் சிலை இருந்த பகுதியில் மட்டும் மழை பெய்யாமல் போனதாகவும், அந்த சிலைகள் அனைத்தும் அப்படியே பாதுகாப்பாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. காலையில் வந்து பார்த்த அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. உடனடியாக அந்த சிலைகளை எடுத்து அந்த புற்று இருந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து கோவில்பாளையத்தை சேர்ந்த குறிப்பிட்ட சில குடும்பத்தினர் பூஜை செய்து வந்துள்ளனர். மேலும் கோவில் திருநீறாக சாம்பல் மட்டுமே வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையிலேயே தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பின்னாளில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களும் வந்து வழிபட தொடங்கினார்கள். இதனால் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறியது.

    கோவிலின் உள்ளே உள்ள சாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்படுவது கிடையாது.

    கோவில் நேர் எதிரே உள்ள ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்படுகிறது. கோவில் பிரகாரத்தில் உள்ள வடக்கு விநாயகர் மற்றும் நாகநாதசுவாமிக்கு உப்பு, மிளகு, கன்னடக்கம் ஆகியவை காணிக்கையாக வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும் போது கண்பார்வை குறைபாடு நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

    புரட்டாசி சனிக்கிழமை

    புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசித்தால் சலக சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் இந்த கோவிலுக்கு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். குறிப்பாக, கரூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் இருந்தும், திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதற்காக கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக பஸ் நிறுத்தம் ஒன்று ஏற்பாடு செய்யப்படுகிறது.

    இங்கு இந்தக் கோவிலை சேர்ந்தவர்கள் பரம்பரை அறங்காவலர்கள் பூஜை செய்து வருகிறார்கள். அறநிலையத்துறை வசம் இந்த கோவில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் புரட்டாசி மாதத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவ குழு, தீயணைப்புத்துறை வசதி ஆகிய சிறப்பான ஏற்பாடுகள் பரம்பரை அறங்காவலர்கள் குழு தலைவர் பி.எம். கிருஷ்ணகுமார் தலைமையில் செய்யப்படுகிறது.

    சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுமியா தலைமையில், அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். ராமபிரான் வந்து சென்ற இடம் என்பதால் இந்த கோவில் கிராமத்து வழக்கப்படி ராமசாமி கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

    • இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரணேற்று என்ற ஒரு திருவிழா நடத்தப்படுகிறது.
    • பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை விழா நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள இன்னொரு பிரசித்திப் பெற்ற கோவில்களில் கொல்லங்கோடு தூக்க முடிப்புரை கோவிலும் ஒன்று. இந்த பத்ரகாளி அம்மன் கோவிலில் இரண்டு தேவிகள் ஒருசேர அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகின்றனர். இதனால் இங்கு தேவிகள் வசிக்க இரண்டு கோவில்கள் உள்ளது.

    ஒன்று வெங்கஞ்சி திருவிழா கோவில். மற்றொன்று திருவிழா நாட்களை தவிர மீதமுள்ள அனைத்து நாட்களிலும் அமர்ந்து ஆசி வழங்கும் வட்டவிளை மூலக்கோவில்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் மாதங்களில் மீன மாதம் திருவிழா நடத்தப்படுகிறது. பத்து நாட்கள் நடக்கும் திருவிழா வில் பத்தாம் நாள் மீனபரணி நாளில் மிகவும் பிரசித்தி பெற்ற பச்சிளம் குழந்தைகளின் தூக்க நேர்ச்சை விழா நடக்கிறது.

    இதில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கோவில் குமரி மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் இங்கு நடத்தப்படும் பூஜைகள் அனைத்தும் கேரள முறைப்படி நடத்தப்படுகிறது. கோவிலின் அமைப்பும் கேரள முறையில் தான் அமைந்துள்ளது.

    குழந்தை பேறு இல்லாத தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறந்தால் அம்மனுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றுவதாக இங்கு வந்து வேண்டிக் கொள்வார்கள். இதேபோல குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் நீண்ட காலம் வாழவும் வேண்டுவார்கள்.

    திருமணமாகாத பெண்கள், திருமணம் நடக்க அம்மனை வேண்டிக் கொள்கிறார்கள். அதன்படி வேண்டுதல் நிறைவேறியதும் தங்கள் குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து வந்து அந்தரத்தில் தொங்கியபடி கோவிலை வலம் வரும் நேர்ச்சைக்காரர்களிடம் கொடுத்து தூக்க நேர்ச்சை நிறைவேற்றுகிறார்கள்.

    இதேபோன்று இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரணேற்று என்ற ஒரு திருவிழா நடத்தப்படுகிறது. இது கோவிலில் இருக்கும் தேவிகள் அசுரனை வதம் செய்யும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.

    இந்த கோவில் களியக்காவிளை பகுதியில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலும், உச்சகடை பகுதியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. களியக்காவிளை பகுதியில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது. திருவிழா நாட்களில் நாகர்கோவில், மார்த்தாண்டத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    ஆடி மாதம் பெண்கள் இக்கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். மேலும் இந்த மாதத்தில் நடக்கும் நிறைபுத்தரிசி பூஜை மிகவும் விசேஷமானது. அதிகாலை வேளையில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை அம்மன் முன்பு வைத்து பூஜை நடத்துவர். பின்னர் அந்த நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.

    மெய்சிலிர்க்க வைக்கும் தூக்க நேர்ச்சை

    கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை 10 நாட்கள் தூக்க திருவிழா நடக்கிறது. 4 மர சக்கரங்களுடன் கூடிய தேர் போன்று தூக்க வண்டி அமைந்திருக்கும். அந்த தூக்க வண்டியின் உச்சியில் நீளமான இரண்டு களை கம்புகள் (வில்) பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு வில்களின் நுனியிலும் குறுக்குவாட்டில் தலா இரண்டு மரச்சட்டங்கள் இருக்கும்.

    தூக்க வண்டியில் இருப்போரை தூக்ககாரர்கள் என்று அழைப்பார்கள். ஒவ்வொரு வண்டியிலும் 4 தூக்கக்காரர்களை மார்பிலும், இடுப்பிலும் துணியால் கட்டி அந்த மரச்சட்டங்களில் தொங்கவிடுவார்கள். தொங்கிக் கொண்டிருக்கிற ஒவ்வொரு நபரின் கைகளிலும் தலா ஒரு பச்சிளம் குழந்தை.

    தூக்க நேர்ச்சை தொடங்கியதும் தூக்க வண்டியின் வில்களின் பின்பகுதியை கயிறால் கட்டி சிலர் கீழே இழுப்பார்கள். இதனால் முன்பகுதி சர்ரென மேலே போகிறது. அப்போது 4 தூக்கக்காரர்களும் குழந்தைகளுடன் 40 அடி உயரத்தில் மேலே தொங்குவார்கள். அப்போது சுற்றி நிற்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குலவையிட்டு பக்தி பரவசத்தோடு அம்மனை வழிபடுவார்கள். பின்னர் செண்டை மேளம் ஒலிக்க, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வடம் பிடித்து தூக்க வண்டியை கோவிலை சுற்றி இழுத்து வருவார்கள்.

    அந்தரத்தில் குழந்தைகளுடன் தொங்கியபடியே அந்த 4 நபர்களும் கோவிலை ஒரு சுற்று சுற்றி முடிந்ததும் கீழே இறங்குவார்கள். பிறகு வேறு 4 நபர்களை தூக்க வண்டியில் கட்டி தொங்கவிட்டு அவர்களின் கைகளில் வேறு நான்கு குழந்தைகள் கொடுக்கப்படும். இப்படி அதிகாலையில் தொடங்கி இரவு வரை விடிய, விடிய தூக்க நேர்ச்சை நடைபெறும். இந்த காட்சியை காணும் பக்தர்களுக்கு மெய்சிலிர்க்கும். குழந்தைகளை அந்தரத்தில் தூக்கிச் சென்றபடி அம்மனை வழிபடுவதால் இந்த திருவிழாவுக்கு தூக்க நேர்ச்சை திருவிழா என்று பெயர்.

    தூக்க காரர்கள் 4-ம் திருவிழா நாளில் இருந்தே விரதமிருக்க வேண்டும். கோவில் வளாகத்தில் தான் தங்க வேண்டும். அந்த 7 நாட்களும் கோவில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு எளிமையான உணவு வழங்கப்படும்.

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் வழிபாட்டு நேரம்

    கன்னியாகுமரி மாவட்ட த்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் மீனப்பரணி தூக்கத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு தினசரி பூஜை நடத்த ஒரு கோவிலும், தூக்க நேர்ச்சை திருவிழா நடத்த ஒரு கோவிலும் என தனித்தனியாக 2 கோவில்கள் உள்ளன. இக்கோவிலில் தினமும் நடைபெறும் பூஜை விபரம்:-

    காலை 5.00 மணிக்கு நடை திறத்தல்

    காலை 5.15 மணிக்கு நிர்மால்ய பூஜை, தொடர்ந்து கணபதி, சிவன் சன்னதியில் பூஜை,

    பகல் 11.30 மணிக்கு உச்சபூஜை

    மதியம் 12 மணிக்கு நடை அடைத்தல்

    மாலை 5.00 மணிக்கு நடை திறத்தல்

    மாலை 6.30 மாலை பூஜை

    இரவு 7.30 அத்தாழ பூஜை

    இக்கோவிலில் தமிழ் மாத கடைசி வெள்ளிக் கிழமைகளில் மதியம் 12.30 மணிக்கு உச்ச பூஜை நடைபெறுகிறது.

    மாதந்தோறும் வரும் பரணி நட்சத்திர நாளில் விசேஷ பூஜை நடைபெறும். தினசரி பூஜையை கோவில் பூசாரிகள் செய்யும் நிலையில் பரணி நட்சத்திர நாள் விசேஷ பூஜைகள் நடைபெறும். ஆவணி மாதம் 1-ந்தேதி அதிகாலை 4.50 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. ஓணம் திருநாளில் கோவிலைச் சுற்றி அம்மன் எழுந்தருளல் நடைபெறும். இக்கோவிலில் நேர்ச்சைகள் மற்றும் வழிபாடுகள் ஆன் லைனில் புக்கிங் செய்யப்படுகிறது.

    • கம்பர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் ஒரு கல்லை நட்டு வணங்கி வந்தனர்.
    • 150 ஆண்டுகள் கழித்து கம்பருக்கு அப்பகுதி மக்கள் கோவில் எழுப்பினர்.

    கி.பி. 9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ நாட்டில் தேரழுந்தூரில் கம்பர் வாழ்ந்து வந்தார். காளி கோவிலில் பூசாரியாக இருந்த அவருக்கு காளியின் அருளால் புலமை சிறப்பு ஏற்பட்டது. இதனால் அரசர்களின் நன்மதிப்பை பெற்றார். இந்நிலையில் கம்பரின் ஒரே மகன் அம்பிகாபதி சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் மகள் அமராவதியை காதலித்தார். இதனால் கோபமுற்ற சோழ மன்னன் அம்பிகாபதிக்கு மரணதண்டனை விதித்தார்.

    இதை அறிந்த அமராவதி அம்பிகாபதியின் பிரிவை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். மகளை இறந்ததால் கோபம் கொண்ட சோழ மன்னன் கம்பரை நாடு கடத்த உத்தரவிட்டான். இதனால் கம்பர் பாண்டிய நாடு வந்தார். மகனை பிரிந்த சோகத்தால் எங்கும் தங்க மனம் இல்லாமல் சென்று கொண்டே இருந்தார். அவ்வாறு செல்லும்போது காளையார்கோவில் அருகே உள்ள முடிக்கரை ஜமீனை காண விரும்பினார்.

    அதற்காக நாட்டரசன் கோட்டை அருகே உள்ள ஒத்தையடி பாதையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களிடம் தம்பிகளா இந்த வழி எங்கே போகிறது என கேட்டார். அதற்கு சிறுவர்கள் இந்த வழி எங்கும் போகாது நாம் தான் அந்த வழியாக போக வேண்டும் என்றனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கம்பரிடம் நீங்கள் எங்கே போக வேண்டும் என்று ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கேட்டனர். அதற்கு கம்பர் நான் முடிக்கரை போக வேண்டும் என்றார்.

    உடனே சிறுவர்கள் அடிக்கரையை பற்றி போனால் முடிக்கரை செல்லலாம் என தெரிவித்தனர். உடனே கம்பர் தம்பிகளா நான் பெரிய கவி என நினைத்துக்கொண்டிருந்தேன். நீங்கள் என்னை விட திறமைசாலிகளாக உள்ளீர்கள் என்று கூறி மீண்டும் வழியை கேட்டார். உடனே அந்த சிறுவர்கள் இந்த கண்மாயின் அடிக்கரையிலிருந்து கண்மாய் முடியும் வரை சென்றால் நீங்கள் கேட்கும் முடிக்கரை என்ற ஊர் வரும் என்றனர்.

    ஆடு மேய்க்கும் சிறுவர்களிடம் உள்ள புத்திக்கூர்மையை கண்ட கம்பர் இந்த மண்ணில் ஏதோ விசேஷம் உள்ளது என்று அங்கேயே தங்கினார். அந்த இடம்தான் இன்றைய நாட்டரசன்கோட்டை ஆகும். கம்பர் அப்பகுதி மக்களுக்கு இலவச சித்த வைத்தியம் செய்து கொண்டே இலக்கிய பணிகளை ஆற்றி வந்தார். பின்னர் ஒரு நாள் அவர் ஜீவ சமாதி ஆகினார். அதன் பின் அப்பகுதி மக்கள் கம்பரின் சேவையை போற்றும் வகையில் கம்பர் ஜீவசமாதி அடைந்த இடத்தில் ஒரு கல்லை நட்டு வணங்கி வந்தனர்.

    150 ஆண்டுகள் கழித்து கம்பருக்கு அப்பகுதி மக்கள் கோவில் எழுப்பினர். தற்போது 5 ஏக்கர் நிலப்பரப்பில் அழகிய வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் தோட்டத்தின் நடுவே இருக்கும் அக்கோவில் கம்பரின் புகழ் பரப்பி வருகிறது. கோவிலின் உள்ளே பீடத்தின் மீது லிங்கமும் இருபுறமும் விநாயகர் சுவாமி சிலைகளும், பீடத்தின் எதிரே நந்தியும், வெளியே இருபுறமும் கோவிலை நிறுவிய தமிழ் சான்றோர்களின் சிலையும், பால தண்டாயுதபாணி சிலையும் உள்ளது.

    கோவிலின் எதிரே கம்பர் விரும்பி போற்றி பாடிய அனுமனுக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகள் அறிவில் சிறந்தவர்களாக விளங்க வேண்டும் என்பதற்காக கம்பர் கோவில் வந்து இங்குள்ள மண்ணை எடுத்து தண்ணீரோடு சேர்த்து குழந்தைகளுக்கு தீர்த்தமாக கொடுக்கின்றனர். கம்பர் கம்பராமாயணத்தை கலியாண்டு 3986 சகாப்தம் 807 விசுவாவசு வருடம் அதாவது கி.பி.886-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ம் தேதி அஸ்த நட்சத்திர நாளில் அரங்கேற்றினார். அதனை நினைவூட்டும் வகையில் நாட்டரசன்கோட்டையில் கம்பர் கோவிலில் விழா நடந்து வருகிறது.

    • கல்வி, கலைகள் என எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது ஐதீகம்.
    • என்னும் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அய்யப்பன் கோவில்களில் நடைபெறும்.

    திருப்பூர் :

    நவராத்திரி விழா கடந்த வாரம் தொடங்கியது. இதையட்டி பொதுமக்கள் கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்தி வந்தனர். இந்நிலையில் நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி இன்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் கல்வி, கலைகள் என எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது ஐதீகம். இதனால் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், பாட்டு, இசைக்கருவிகள், நடனம் ஆகிய பயிற்சிகள், பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்குவது வழக்கம். இதற்காக குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்னும் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அய்யப்பன் கோவில்களில் நடைபெறும். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இந்த நிகழ்ச்சி நடந்தது. காலை எழுந்து நீராடி சாமி தரிசனம் செய்து விட்டு பலரும் தங்களது குழந்தைகளுக்கு எழுத்து அறிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அய்யப்பன் கோவில்களுக்கு சென்றனர்.

    திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 9வது ஆண்டு எழுத்து அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை முதலே பெற்றோர்கள் பலரும் தங்களது குழந்தைகளுடன் வந்தனர். குழந்தைகளுக்கு அர்ச்சகர்கள் தங்க வேலால் நாக்கில் எழுதினர். அதுபோல் அரிசியிலும் எழுத வைத்து எழுத்து அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் சிலேட்டுகளிலும் குழந்தைகள் எழுதினர். தொடர்ந்து 9வது ஆண்டாக 1500க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வித்யாரம்பம் செய்து குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்கள், பென்சில், ரப்பர் உள்ளிட்ட 11 பொருட்கள் கொண்ட கல்வி உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது. இதனால் அய்யப்பன் கோவிலில் கூட்டம் அலைமோதியது. அதே போன்று திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில், ஈஸ்வன் கோவில், வாலிப்பளையம் முருகன் கோவல், மற்றும் கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் குவிந்தனர்.

    • இங்கு அம்பாள் நின்றும், இருந்தும், கிடந்தும் அருள்பாலிக்கிறாள்.
    • ஸ்ரீ மஹா காலேஸ்வரர் 59 ¼ அடி உயரத்தில் தரிசனம் தருகிறார்.

    சுவாமி : கூத்தப்பர் காளி.

    தீர்த்தம் : அம்பாள் தீர்த்தம்-காளியாறு,சிவதீர்த்தம்-சிவகங்கை பாதாள கங்கை.

    தலவிருட்சம் : மஹா வில்வம்.

    தலச்சிறப்பு : உலகிலேயே மிக உயரமான ஸ்ரீ மஹா காலேஸ்வரர் 59 ¼ அடி உயரத்திலும்,ஸ்ரீ காளீஸ்வரி 54 ¼ அடி விஸ்வரூப தரிசனம் தருகிறார்கள்.விஸ்வரூப மஹாகாலீஸ்வரியின் திருப்பாதத்தின் கீழ் உள்ள பதினாறு படிகளும் பதினாறு செல்வங்களாக அமைந்துள்ளது.

    இத்திருப்படியின் கீழ் உள்ள அறையில் கால ஜோதி சுடர் வீசிப் பிரகாசிக்கிறது. இங்கு அம்பாள் நின்றும், இருந்தும், கிடந்தும் அருள்பாலிக்கிறாள்.சக்தியினுடைய பஞ்ச பேதங்களையும் குறித்து ஐந்து சக்திகளாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இச்சா சக்திமஹாகாலேஸ்வரி,கிரியாசக்தி ப்ரத்யங்கிராதேவி,ஞானசக்தி குஹ்யகாளி,ஞானசக்தியின் திருமுன் ஞானலிங்கம்,பராசக்தி சிவமாயாதேவி,ஆதிசக்தி அரூப நிலையில் வனகாளியாகவும் உள்ளனர்,அஷ்ட காளிகள் பத்து பைரவர்கள் உள்ளனர்.

    நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை, மதியம் 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை.

    அருகிலுள்ள நகரம் : திருவெறும்பூர்.

    கோயில் முகவரி : கூத்தப்பர் காளி கோவில்,கூத்தைப்பார், திருச்சி மாவட்டம்.

    • திருமங்கலம் அருகே அம்மன் கோவிலில் தங்கம்-வெள்ளி நகைகள் திருட்டு போனது.
    • இந்த சம்பவம் தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி கிராமத்தில் ஆயிரம் கண்ணுடையாள் அம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் 41 அடி உயர பிரம்மாண்ட அம்மன் சிலை உள்ளது. மேலும் வாராகி அம்மன் உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகள் இருக்கின்றன.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் கோவில் நடை பூட்டப்பட்டது. நேற்று காலை கோவிலை திறக்க பூசாரி வந்த போது கோவில் நடை திறந்து கிடந்தது.

    மேலும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க தாலி உள்ளிட்ட தங்க நகைகள் மற்றும் வெள்ளி கிரிடம் உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தன. இது குறித்து கோவில் நிர்வாகி செந்தில்குமார் திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 11 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி கிரிடம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன.

    யாரோ மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றிரு ப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை கண்டறிய கோவிலில் இருந்த கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி இருந்த வீடியோ பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் 2 மர்ம நபர்கள் கம்பி வேலியை வெட்டி அதன் வழியாக கோவிலுக்குள் புகுந்து நகைகளை திருடி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

    அதன் அடிப்படையில் கோவில் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் டி.கல்லுப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×