search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா"

    • இந்த பயோனிக் கை ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி மூலம் இயங்குகிறது.
    • இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் இது 14 மணிநேரம் வேலை செய்யும்.

    அமெரிக்காவில் இடது கை இல்லாமல் பிறந்த ஜோர்டான் என்ற 5 வயது சிறுவனுக்கு பயோனிக் கை பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மிக இளம் வயதில் பயோனிக் கை பொறுத்தப்பட்டவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    சிறுவன் ஜோர்டானின் கோரிக்கையின்படி 'அயர்ன் மேன்' படத்தில் வரும் சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் வடிவமைக்கப்பட்ட பயோனிக் கை அவருக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சூப்பர் ஹீரோ அந்தஸ்தையும் அவர் பெற்றுள்ளார்.

    இந்த பயோனிக் கை ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி மூலம் இயங்குகிறது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் இது 14 மணிநேரம் வேலை செய்யும்.

    சிறுவன் ஜோர்டானுக்கு முன்பே கடந்தாண்டு, இங்கிலாந்தைச் சேர்ந்த 10 வயது ஹாரி ஜோன்ஸ் என்ற சிறுவனுக்கு 'அயர்ன் மேன்' பயோனிக் கை பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவின் பிராங்க்ஸ் பல்கலைக்கழகத்தின் அருகில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் படுகாயமடைந்தனர்.
    • கறுப்பு உடை அணிந்திருந்த மர்ம நபர்கள் மொப்பட்டில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

    அமெரிக்காவின் பிராங்க்ஸ் பல்கலைக்கழகத்தின் அருகில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் படுகாயமடைந்தனர். பார்மொடன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள டேவிட்சன் அவென்யூவில் இன்று (மே 24) காலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    36 வயதுடைய ஆணும் 44 வயதுடைய பெண்ணும் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் மார்பில் சுடப்பட்டுள்ளனர். மற்றொருவர் கையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்த நிலையில் அவர் உடனடியாக செயின்ட் பர்னபாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


     



     

    கறுப்பு உடை அணிந்திருந்த மர்ம நபர்கள் மொப்பட்டில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். குற்றவாளிகள் இருவரை தேடும் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளார். பல்கலைக்கழகத்தின் அருகில் நடத்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. 

     

    • டி- 20 உலகக் கோப்பை 2024 தொடர் வரும் ஜூன் 2 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் முன்னதாக 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 போட்டிகள் அமெரிக்காவில் நடந்துவருகிறது.
    • வங்க தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்க கிரிக்கெட் அணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஒருங்கிணைக்கும் டி- 20 உலகக் கோப்பை 2024 சீரிஸ் வரும் ஜூன் 2 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் வங்கதேசம் - அமெரிக்கா இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 சீரிஸ் போட்டிகள் அமெரிக்காவில் தற்போது நடந்துவருகிறது.

    இந்நிலையில் நேற்று (மே 23) சர்வதேச டி-20 தொடரின் 2 வது போட்டி, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள ப்ரேரி வியூ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வங்க தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்க கிரிக்கெட் அணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. விறுவிறுப்பாக நடந்த போட்டியில், வங்கதேசத்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய அமெரிக்கா, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

     

    இந்த போட்டியில் டாஸ் வென்று வங்கதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்யவே, வங்கதேச அணி பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு அமெரிக்காவை 144/6 என்ற ரன் கணக்கில் மட்டுப்படுத்தினர்.

    ஆனாலும் 145 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய வங்கதேசம் 138 ரன்கள் வரை மட்டுமே எடுத்தது.  இதனால், 6 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவிடம்  அந்த அணி தோற்றது. வெற்றியின் விளிம்பு வரை சென்றும் அதை எட்ட இயலாதது வங்கதேச அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

     

     முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வங்கதேச அணி கேப்டன் சாகிப் அல் ஹசன் பேட்டி ஒன்றில் கூறுகையில், உலகக்கோப்பை தொடருக்கு வங்கதேச அணி இன்னும் முழுமையாக தயாராகவில்லை, எங்களின் பயிற்சி போதாது, பெரிய அணிகளுடன் மோதுவதற்கான வலு இன்னும் வங்கதேச அணிக்கு ஏற்படவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த பேட்டி,  அமெரிக்க அணி உடனான தோல்விக்குப் பின் மீண்டும் வைரலாகத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் 3 போட்டிகள் கொண்ட இந்த டி-20 தொடரின் 3 வது மற்றும் கடைசி போட்டி நாளை (மே 26) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    • வங்காளதேசம் அமெரிக்காவில் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
    • முதல் போட்டியில் அமெரிக்க அணி வங்காளதேசத்தை வீழ்த்தியது.

    ஹூஸ்டன்:

    வங்காளதேசம் அணி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று ஹூஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. ஹிருடோய் அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார். மஹமதுல்லா 31 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்கா களமிறங்கியது. 14.5 ஓவரில் அமெரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்திருந்தது.

    அடுத்து களமிறங்கிய கோரே ஆண்டர்சன், ஹர்மித் சிங் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில், அமெரிக்க அணி 19.3 ஓவரில் 156 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • டேவிட் ரஷ் என்பவர் 13.64 வினாடிகளில் ஒரு லிட்டர் லெமன் ஜூஸை (எலுமிச்சை சாற்றை) குடித்து உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
    • உலகில் உள்ள எந்தவொருவரையும் விட அதிக சாதனைகளைச் செய்ய வேண்டும் என்பதையே டேவிட் தனது வாழ்நாள் இலக்காகக் கொண்டுள்ளார்.

    அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தைச் சேர்ந்த டேவிட் ரஷ் என்பவர் 13.64 வினாடிகளில் ஒரு லிட்டர் லெமன் ஜூஸை (எலுமிச்சை சாற்றை) குடித்து உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.இதற்கு முன்பு 16.5 வினாடிகளில் 1 லிட்டர் (4.2 கப்) லெமன் ஜூஸை 16.5 வினாடிகளில் வேகமாகக் குடித்தவர் என்ற பட்டத்தை டேவிட் தன்வசம் வைத்திருந்தார்.

    ஆனால் இடைப்பட்ட காலத்தில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தொடர் சாதனையாளர் ஆண்ட்ரே ஆர்டோல்ஃப் 16 வினாடிகளில் 1 லிட்டர் லெமன் ஜுஸை குடித்து டேவிட்டின் பட்டதைத் தட்டிச் சென்றார். அதை முறியடிக்கும் முயற்சியில் இறங்கிய டேவிட் தற்போது இந்த சாதனையைப் படைத்துள்ளார். 13.64 வினாடிகளில் 1 லிட்டர் லெமன் ஜூஸ் அருந்திய அனுபவம் குறித்து டேவிட் கூறுகையில், இந்த அனுபவம் இனிமையானதாக இல்லை என்றும் இதனால் கடுமையான வயிற்றுவலிக்கு ஆளானதாகவும் தெரிவித்தார்.

    எப்போதும் புதுமையான விஷயங்களை முயற்சி டேவிட் பார்க்கும் இதுவரை 250க்கும் மேற்பட்ட கின்னஸ் உலக சாதனைகளை முறியடித்துள்ளார். மேலும் தற்போது அவர் நிகழ்த்திக்காட்டியுள்ள சாதனையையும் சேர்ந்து 165 பட்டங்களை டேவிட் ரஷ் தன்வசம் வைத்துள்ளார். உலகில் உள்ள எந்தவொருவரையும் விட அதிக சாதனைகளைச் செய்ய வேண்டும் என்பதையே டேவிட் தனது வாழ்நாள் இலக்காகக் கொண்டுள்ளார். 

    • அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவர் தனது உடலில் அறுவை சிகிச்சை மூலம் கூடுதலாக 4 முலைக்காம்புகளை (Nipple) சேர்த்துக் கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது
    • இந்த வகையிலான செயற்கை இம்பிளான்ட்கள் மற்றும் பச்சை குத்துதல் மூலமும் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கு தங்களின் உடல் அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவர் தனது உடலில் அறுவை சிகிச்சை மூலம் கூடுதலாக 4 முலைக்காம்புகளை (Nipple) சேர்த்துக் கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹாரி ஹூஃப்க்ளோப்பன் என்ற அந்த நபருக்குத் தனது உடம்பில் கூடுதலாக நிப்பிள்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற வினோத ஆசை ஏற்பட்டுள்ளது.

    இதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என அவர் செயற்கை முறையில் உடலில் மாற்றம் செய்யும் நிபுணரான ஸ்டீவ் ஹாவொர்த்தை அணுகியுள்ளார். அதன்படி ஸ்டீவ் இயற்கையான ஆண் நிப்பிள்களைப் போலவே தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நான்கு சிலிகான் நிப்பிள்களை ஹாரியின் உடம்பில் பொருத்த்தியுள்ளார்.

    அதன்பின் அறுவை சிகிச்சை காயங்கள் குணமடைந்த பின் கொலராடோவைச் சேர்ந்த டாட்டூ கலைஞர் ஏஞ்சல் என்பவரிடம் சென்ற ஹாரி, தனது உடம்பில் புதிதாக பொறுத்தப்படுத்த சிலிகான் நிப்பில்கள் இயற்கையாகத் தோன்றும் வகையில் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.




     



    ஹாரியின் வீடியோவை பகிர்ந்த டாட்டூ கலைஞர் ஏஞ்சல், இந்த செயல்முறை மிகவும் எளிதான, சிக்கலற்ற முறைதான் என்று விளக்கினார். இது வினோதமாகத் தோன்றினாலும் இந்த வகையிலான செயற்கை இம்பிளான்ட்கள் மற்றும் பச்சை குத்துதல் மூலமும் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கு தங்களின் உடல் அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இயற்கைக்கு ஹாரியின் உடலில் கூடுதலாக உள்ள 4 நிப்பிள்கள் காண்போருக்கு உறுத்தலாகவே இருந்து வருகிறது.

    • அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் இடி மின்னளுடன் சூறைக்காற்று சுழன்றடித்து புயல் வீசியதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் இடி மின்னளுடன் சூறைக்காற்று சுழன்றடித்து புயல் வீசியதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயலில் சிக்கி இதுவரை பச்சிளம் குழந்தை மற்றும் அதன் தாய் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

     

    இதில், 3 பேர் காற்றில் வேரோடு பெயர்ந்து விழுந்த மரங்களுக்கடியில் சிக்கி உயிரிழந்தனர். அதில் பெண் ஒருவர் மரத்துக்கு அடியில் இருந்த தனது காரை நகர்த்த சென்றபோது அவர் மீது மரம் பெயர்ந்து விழுந்துள்ளது. சிமெண்ட் டிரக்கில் அமர்ந்திருந்த 73 வயது முதியவர் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ராட்சத கிரேன் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். மணிக்கு 80 மைல் வேகத்தில் புயல் காற்று வீசியதில் கட்டிடங்களின் ஜன்னல்களும் கதவுகளும் சுக்குநூறாக உடைந்தன.

     

    நகரத்தில் சுமார் 1 மில்லியன் குடியிருப்புகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. அவசர எண்களுக்கான அனைத்து தொடர்புகளும் துடிக்கப்பட்டதால் உதவி கிடைக்காமல் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மக்களை மீட்க்கும் பணியில் மீட்டுப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிப்புகளை சரி செய்யும் பணிகளை நகர நிர்வாகம் துரித கதியில் முடுக்கிவிட்டுள்ளது. புயல் காற்றில் கட்டடங்கள் சேதமடையும் பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

     

    • அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மற்றும் இண்டியானா மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்துக்கான இணைப்பு பாலமாக கிளார்க் மெமோரியல் பாலம் உள்ளது.
    • விபத்துக்குள்ளான டிரக்கில் பொருத்தப்பட்டிருந்த டாஸ் காம் கேமராவில் விபத்துக்கு சில நொடிகளுக்கு முன் ஓட்டுநர் டிரக்கை இயக்கிய காட்சிகளும் பாலத்தின் பக்கவாட்டு தடுப்பை உடைத்துக்கொண்டு டிரக் ஆற்றை நோக்கி பாயும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

    அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மற்றும் இண்டியானா மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்துக்கான இணைப்பு பாலமாக கிளார்க் மெமோரியல் பாலம் உள்ளது. ஓஹியோ நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள கிளார்க் பாலத்தை செகென்ட் ஸ்ட்ரீட் பாலம் என்றும் அழைக்கின்றனர்.

    இந்த பாலத்தில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி டிரக் ஒன்று எதிரில் வந்த கார் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டு தடுப்பை உடைத்துக்கொண்டு ஆற்றை நோக்கி பாய்ந்து அந்தரத்தில் தொங்கியது. இந்த விபத்து சம்பவத்தில் மீட்புக்குழு விரைந்து செயல்பட்டதால் அதிர்ஷ்டவசமாக பெண் ஓட்டுநர் உயிர்தப்பினார்.

    சினிமாவில் வரும் கட்சிகளுக்கு இணையாக இந்த விபத்து மற்றும் மீட்புப் பணி தொடர்பான காட்சிகள் அந்த சமயத்தில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் விபத்துக்குள்ளான டிரக்கில் பொருத்தப்பட்டிருந்த டாஸ் காம் கேமராவில் விபத்துக்கு சில நொடிகளுக்கு முன் ஓட்டுநர் டிரக்கை இயக்கிய காட்சிகளும் பாலத்தின் பக்கவாட்டு தடுப்பை உடைத்துக்கொண்டு டிரக் ஆற்றை நோக்கி பாயும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

    விபத்தை மிக அருகில் இருந்து அது எப்படி நடக்கிறது என்பதை விறுவிறுப்பான இந்த வீடியோவில் தெளிவாக பார்க்கமுடிகிறது. இதனால் இந்த வீடியோ X தளத்தில் 13 மில்லியன் பார்வைகளைத் தாண்டி வைரலாகி வருகிறது. டாஸ்காம் என்பது கார், டிரக் உள்ளிட்ட வாகனங்களில் விண்ட் ஸ்க்ரீனில் பொருத்தப்படும் வீடியோ பதிவு செய்யும் கருவி என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேனான் பண்ணைகளுக்கு தொழிலாளர்கள் பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தபோது விபத்து.
    • 53 விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து.

    அமெரிக்காவின் மத்திய புளோரிடாவில் விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், சுமார் 40 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

    53 விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, ஆர்லாண்டோவின் வடக்கே உள்ள மரியன் மாகாணத்தில் ஒரு டிரக் மீது பேருந்து மோதியதாக புளோரிடா நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

    தர்பூசணிகளை அறுவடை செய்து வரும் டுனெல்லனில் உள்ள கேனான் பண்ணைகளுக்கு தொழிலாளர்கள் பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

    விபத்தின்போது, சாலையைவிட்டு விலகிச் சென்ற பேருந்து தடுப்பை உடைத்து பக்கத்தில் ஒரு வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

    விபத்தில், இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து பண்ணை மூடப்படுவதாக கேனான் பண்ணை அறிவித்துள்ளது.

    • இதில் விஜய் இளமையான தோற்ற வேடத்தில் நடிக்கிறார். இதற்காக நவீன தொழில்நுட்பம் பயன் படுத்தப்படுகிறது.
    • அமெரிக்காவில் 'கிராபிக்ஸ்' பணிகளை பார்வையிட இயக்குனர் வெங்கட் பிரபு .அர்ச்சனா கல்பாத்தி சென்றுள்ளனர்.

    நடிகர் விஜய் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்) படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

    இப்படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா,லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர்.இந்நிலையில் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.



    இப்படத்தில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதில் விஜய் இளமையான தோற்ற வேடத்தில் நடிக்கிறார். இதற்காக நவீன தொழில்நுட்பம் பயன் படுத்தப்படுகிறது. இதற்காக தனது உடலை 'ஸ்கேன்' செய்ய அமெரிக்கா சென்றுள்ளார்.

    மேலும் அமெரிக்காவில் நடந்து வரும் 'கிராபிக்ஸ்' பணிகளை பார்வையிட இயக்குனர் வெங்கட் பிரபு பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அங்கு சென்றுள்ளனர்.




    இந்நிலையில் GOAT படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மலேசியாவில் விரைவில் இப்படத்திற்கான இசைவெளியீடு நடைபெற உள்ளது.

    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. மேலும் இப்படத்தின் 2- வது சிங்கிள் விஜயின் பிறந்தநாளை யொட்டி அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது.




    மேலும் இப்படத்தில் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ' ரீ எண்ட்ரி'யாகி உள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் முதன்முறையாக இணைந்திருப்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியாவின் மத சுதந்திரம் சார்ந்து ஆதாரமற்ற வகையில் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருகிறது.
    • இந்தியாவில் நிலவும் அரசியல் சமநிலையை சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் இதற்கு காரணம்.

    இந்திய பாராளுமன்ற தேர்தலில் அமெரிக்கா தலையிட முயற்சி செய்வதாக ரஷ்யா பகிரங்க குற்றம் சாட்டியுள்ளது.

    ரஷ்ய நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா பத்திரிகையாளர் சந்தித்து பேசினார்.

    அப்போது, "காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை சதியில் இந்தியர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை அமெரிக்கா சுமத்துகிறது. இப்படி இந்தியாவின் மத சுதந்திரம் சார்ந்து ஆதாரமற்ற வகையில் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருகிறது.

    இந்தியாவில் நிலவும் அரசியல் சமநிலையை சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் இதற்கு காரணம். இந்திய பொதுத் தேர்தலை சிக்கலாக்கும் நோக்கில் அமெரிக்கா இப்படி செய்கிறது" என்று அவர் தெரிவித்தார்.

    அண்மையில் மத நம்பிக்கை சார்ந்த உரிமை மீறல்களில் இந்தியா உட்பட 16 நாடுகள் ஈடுபடுவதாக சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தது.

    இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

    • இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
    • ஏற்றுமதியை தொடரலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே லட்சக்க ணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள தெற்கு காசாவின் ரபா நகரம் மீதும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக உள்ளது. ரபா நகருக்குள் இஸ்ரேல் டாங்கிகள் நுழைந்துள்ளன. எகிப்து உடனான ரபா எல்லையை தனது கட்டுப்பாட்டுக்குள் இஸ்ரேல் கொண்டு வந்துள்ளது.

    இதற்கிடையே லட்சக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ள ரபா நகரம் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதை இஸ்ரேல் ஏற்கவில்லை. ரபா நகரம் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் தொடங்கும் சூழல் உள்ளது.

    இந்த நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, அமெரிக்காவின் விருப்பத்திற்கு மாறாக தெற்கு காசா நகரமான ரபா மீது முழு அளவிலான தாக்குதலை நடத்தும் முடிவை இஸ்ரேல் எடுத்துள்ளதால் குண்டுகள் அனுப்புவதை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

    ஆயுத ஏற்றுமதியை இடைநிறுத்துவதற்கான முடிவு கடந்த வாரம் எடுக்கப்பட்டது. ஏற்றுமதியைத் தொடரலாமா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார்.

    ×