search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97582"

    • தியாராஜசுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.
    • தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் கோவிலை அடைந்தது.

    நாகை மாவட்டம் திருக்குவளையில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தியாகராஜசுவாமி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டு தோறும் தியாகராஜசுவாமிக்கு பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவை முன்னிட்டு சுப்பிரமணியர் உற்சவம், சந்திரசேகர் பட்டோற்சவம் உள்ளிட்ட பல்வேறு உற்சவம் நடந்தது அதனைதொடர்ந்து, பூதவாகனம், யானை வாகனம், ரிஷபவாகனம் ஆகிய வாகனங்களில் சாமி வீதி உலாவும், சகோபுர தரிசனமும், ஓலைச்சப்பரம், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக தியாராஜசுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதையடுத்து தேரை தருமபுர ஆதீன கட்டளை விசாரணை மாணிக்கவாசகர் தம்பிரான் வடம் பிடித்து இழுத்தது தொடங்கி வைத்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் கோவிலை அடைந்தது.

    • பாண்டமங்கலத்தில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த 14-ந் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
    • தினந்தோறும் இரவு மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, பாண்டமங்கலத்தில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த 14-ந் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தினந்தோறும் இரவு மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றது.

    20-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 21-ந் தேதி மறுக்காப்பு கட்டுதல் மற்றும் பூச்சொரிதல் விழாவும் நடைபெற்றது. 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மன் சிங்க வாகனம், காமதேனு வாகனம், அன்னபட்சி மற்றும் காளை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    28-ந் தேதி வடிசோறு மற்றும் மாவிளக்கு நிகழ்ச்சியும் இரவு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலை மகா மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து உற்சவர் அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை திருத்தேரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    தொடர்ந்து திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. இதில் பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் டாக்டர் சோமசேகர், துணைத் தலைவர் முருகவேல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இன்று மாலை தீமிதி விழாவும், நாளை பொங்கல், மாவிளக்கு நிகழ்ச்சியும், நாளை மறுநாள் காலை கிடா வெட்டுதலும் நடைபெறுகிறது.

    2 மற்றும் 3-ந் தேதிகளில் மஞ்சள் நீராட்டு விழாவும், சாமி புறப்பாடும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் திருத்தேர் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    • நாளை சனீஸ்வரர் பகவான் தங்க காக வாகனத்தில் கோபுர வீதியுலா நடக்கிறது.
    • 1-ந்தேதி தெப்ப உற்சவம் நடைபெறவுள்ளது.

    காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இத்தகைய சிறப்புவாய்ந்த சனீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக 23-ந் தேதி இரவு அடியார்கள் நால்வர் புஷ்பப் பல்லக்கில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. 28-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் வாகன ரூடராய் சகோதர வீதி உலா நடைபெற்றது. விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 5.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. 5 தேர்களில் முதல் தேர் சொர்ண கணபதி, 2-வது வள்ளி சமேத சுப்பிரமணியர், 3-வது தேர் செண்பக தியாகராஜர், 4-வது தேர் நீலோத்பலாம்பாள், 5-வது தேரில் சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் இருந்தனர்.

    நிகழ்ச்சியில், புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன் குமார், திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ., பி.ஆர்.சிவா , மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

    நாளை (31-ந் தேதி) சனீஸ்வரர் பகவான் தங்க காக வாகனத்தில் கோபுர வீதியுலாவும், ஜூன் 1-ந் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
    • கலெக்டர் பக்தர்களுக்கு எளிதான தரிசனம் கிடைக்க கோவில் நிர்வாகத்திடம் ஆலோசனை வழங்கினார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கண க்கான பக்தர்களும வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இத்த கைய சிறப்புவாய்ந்த சனீ ஸ்வரர் கோவிலில், வருகிற டிசம்பர் 20-ந் தேதி, 2 1/3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதற்காக, மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் உரிய ஏற்பாடு களை செய்து வருகிறது. மேலும், கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பிர மோற்சவ விழாவும் நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வருகிற 30-ந் தேதி தேரோட்டம் நிகழ்ச்சியும், ஜூன் 1-ந் தேதி தெப்போற்சவ நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற உள்ளது.

    இந்நிலையில், காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோ த்துங்கன் நேற்று பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவி லுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, பக்த ர்கள் செல்லும் வரிசை வளாகம், அவர்களுக்கான, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, சனீஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கு எளிதான தரிசனம் கிடைக்க கோவில் நிர்வாகத்திடம் ஆலோசனை வழங்கினார். மேலும், பக்தர்களுக்கான பிரசாதம் தயாரிக்கும் இடத்தை, தூய்மையாக பராமரிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர் குலோ த்துங்கன் அறிவுறு த்தினார். இந்த ஆய்வின் போது, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமி கள், கோவில் மேஜேனர் ஸ்ரீநிவாசன் மற்றும் ஊழி யர்கள் உடன் இரு ந்தனர்.

    • ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய கோவில்.
    • அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி திருக்கல்யாண உற்சவம், 3-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமரு கல் அடுத்த திருக்கண்ணபு ரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது.

    இக்கோவில், 108 வைணவ தலங்களில் 17-வது தலமாகும்.

    ஆழ்வார்களால் மங்களாசா சனம் செய்யப்பட்ட பெருமை யுடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா நேற்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி, வருகிற 29-ந்தேதி தங்க கருடசேவை, அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி திருக்கல்யாண உற்சவம், 3-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், கோவில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • இந்த கோவிலில் ஆண்டு தோறும் தேர்த்திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
    • 3-ம் நாள் தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    பொள்ளாச்சி,

    கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவிலில் 3-ம் நாள் தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது.

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தேர்த்திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 5-ந் தேதி திருத்தேர் முகூர்த்தக்காய் உடைக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் முதல் நாள் தேரோட்டம் நடந்தது. இதையடுத்து நேற்று மாலை 2-ம் நாள் தேரோட்டம் நடைபெற்றது.

    தேரோட்டத்தை சிரவை ஆதீனம் குமரகுருபரசாமிகள் முன்னிலையில் புரவிபாளையம் ஜமீன் குடும்பத்தினர், எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், செ.தாமோ தரன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

    வாண வேடிக்கைகள் முழங்க விநாயகர் சப்பரம் முன்னால் செல்ல பின்னால் சூலக்கல் மாரியம்மன் தேர் பக்தர் வெள்ளத்தில் தவழ்ந்து வந்தது.

    3-ம் நாள் தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணிக்கு சூலக்கல் மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் அன்னதானம் நடைபெறுகிறது.  

    • 31-ந்தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
    • 2-ந்தேதி தீர்த்தவாரியும், பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடக்கிறது.

    பாபநாசம் அருகே உள்ள திருக்கருகாவூர் முல்லைவனநாதர் உடனுறை கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் தினசரி சுவாமி- அம்பாள் காலை மற்றும் இரவு பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது. .

    விழாவில் கடந்த 24-ந்தேதி கொடியேற்றமும், ஆன்மீக சொற்பொழிவும், தொடர்ந்து சுவாமி- அம்பாள் வெள்ளி பல்லக்கில் வீதியுலாவும் நடந்தது. 25-ந்்தேதி காலை வெள்ளி பல்லக்கும், இரவு சூரிய பிரபையில் சுவாமி-அம்பாள் வீதியுலா காட்சியும் நடந்தது.

    நேற்று காலை வெள்ளி பல்லக்கும், இரவு பூத வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதியுலாவும், இரவு மாணவிகள் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. 27-ந்தேதி சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், 28-ந்தேதி ஓலை சப்பரத்தில் சுவாமி வீதியுலாவும், 31-ந்தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், அடுத்தமாதம்(ஜூன்) 1-ந்தேதி கட்டுத்தேர் தேரோட்டமும், 2-ந்தேதி தீர்த்தவாரியும், பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் ஆசைத்தம்பி மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    • 2-ம் நாள் தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.
    • 3-ம் நாள் தேரோட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன்-விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 5-ம் தேதி திருத்தேர் முகூர்த்தக்காய் உடைக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கடந்த 9-ம்தேதி வேல் புறப்பாடு மற்றும் பூச்சாட்டு விழா நடைபெற்றது. 15-ம் தேதி கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. 16-ந்தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி மற்றும் பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 17-ம் தேதி யாகசாலை ஆரம்பம் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து கொடியேற்ற விழா நடைபெற்றது. பின்னர் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

    18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தினசரி காலை இரவு நேரங்களில் சூலக்கல் மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் அமர்ந்து திருவீதி உலாவும், பூவோடு எடுத்துவரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று முன்தினம் (புதன்கிழமை) காலை 6 மணிக்கு மாவிளக்கு மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைதொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிலையில் நேற்று காலை மாரியம்மன், விநாயகர் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மாரியம்மன் இளஞ்சிவப்பு பட்டு உடுத்தி மலர் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாண வேடிக்கை, மேளதாளங்கள் முழங்க சிறப்பு பூஜைகளுடன் பூசணிக்காய், தேங்காய் உடைக்கப்பட்டு பக்தர்கள் கோஷம் முழங்க திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் புரவிபாளையம் ஜமீன் குடும்பத்தார் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். முன்னால் விநாயகர் தேர் பவனி வர பின்னால் சூலக்கல் மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேர் புறப்பட்டது. மாரியம்மன் தேர் வீதியில் உலா வரும் போது பக்தர்கள் வாழைப்பழங்களை தேர் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

    இந்த தேர் திருவிழாவில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை, கேரள மாநிலம் உள்ளிட்ட பல பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

    அதன்படி முதல் நாள் தேரோட்டம் 6.30 மணிக்கு முடிந்து கிழக்கு ரத வீதியில் தேர் நிலைநிறுத்தப்பட்டது. 2-ம் நாள் தேரோட்டம் (இன்று) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. 3-ம் நாள் தேரோட்டம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன்-விநாயகர் கோவில் செயல் அலுவலர் கந்தசாமி மற்றும் சூலக்கல் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். பொள்ளாச்சி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையில் வடக்கிபாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • செந்துறை அருகே மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது
    • பல்வேறு அலங்காரங்களில் மாரியம்மன் நாள் தோறும் பக்தர்களுக்கு அருள் பாளித்து வந்தார்.

    செந்துறை,

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் ஒரு ஆண்டு தேர் திருவிழாவும் மற்றொரு ஆண்டு தீமிதி திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து நாள்தோறும் மாரியம்மன் வீதி உலாவும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. பல்வேறு அலங்காரங்களில் மாரியம்மன் நாள் தோறும் பக்தர்களுக்கு அருள் பாளித்து வந்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான 9 ஆம் நாள் தேர்த்திருவிழா நேற்று காலை தொடங்கியது. முன்னதாக தேர் கட்டும் பணிகள் நிறைவு பெற்றதும் விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் விளைந்த மா, பலா, முந்திரி ஆகியவற்றை தேரில் கட்டி அலங்கரித்தனர்.அதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் பெரும்பாலான பெண்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் தேரை இழுத்து சென்றனர். தேரோடும் 4 வீதிகளில் தேர் வலம் வந்தது. கடும் வெயில் காரணமாக மதியம் தேர் பாதி வழியில் திருத்தப்பட்டது. பின்னர் மாலை தேர் வடம் பிடிக்கப்பட்டு மீண்டும் கோவில் சன்னதியை வந்தடைந்தது. இந்த விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் திருவிழாவை கண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

    • வேளிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 2-ந்தேதி குளத்தில் சாமிகளுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    தக்கலைக்கு அருகே உள்ள குமாரகோவிலில் பிரசித்தி பெற்ற வேளிமலை முருகன் கோவில் உள்ளது. குமரபருவத்தில் வேளிமலைக்கு வந்த முருகபெருமான் வள்ளிதேவியை காதலித்து திருமணம் செய்ததாக ஐதீகம். எனவே, இந்த கோவிலில் குடிகொண்டுள்ள முருகபெருமான் குமாரசாமி என அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி நேற்று காலையில் சாமிக்கு தீபாராதனையும், அதனைதொடர்ந்து கோவில் கொடிமரத்திற்கு தந்திரி அத்தியறமடம் நாராயணரு ராமரு தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் காலை 9.40 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் மோகனகுமார், பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் குமரி ப.ரமேஷ், கோவில் திருவிழா கமிட்டி காப்பாளர் பிரசாத், தலைவர் சுனில்குமார், பொருளாளர் செந்தில்குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் காலையில் ஸ்ரீபூதபலி, கலசபூஜை, கலச அபிஷேகம், காலை மற்றும் இரவில் சாமியும், தேவியும் பூப்பல்லக்கு, மயில், கிளி ஆகிய வாகனங்களில் எழுந்தருளி பவனி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவின் வருகிற 31-ந்தேதி இரவு 9 மணிக்கு சாமி வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    9-ம் நாளான அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் சாமியும், தேவியும் ஒரு தேரிலும், கணபதி மற்றொரு தேரிலும் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    10-ம் நாளான 2-ந்தேதி காலை 10 மணிக்கு கோவில் குளத்தில் சாமிகளுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி செய்து வருகிறார்.

    • விழா நாட்களில் பல்வேறு வாகனங்களிலும் வீதி உலா நடைபெற உள்ளது.
    • 26-ந்தேதி கருட சேவை நடக்கிறது.

    ஆரணி சார்ப்பனார்பேட்டை பகுதியில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் 98-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி அதிகாலையிலேயே சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று மகா அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் பெருமாள், தாயார் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர்.

    அதன்பின் மங்கள வாத்தியங்களுடன், சிறப்பு மங்கள வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.

    பின்னர் சுவாமி மாட வீதியின் வழியாக நாதஸ்வர வாத்தியங்களுடன் புறப்பாடும் இரவில் அன்னவாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.

    விழா நாட்களில் காலை, மாலை இருவேளையும் சிறப்பு பூஜைகளுடன் காலை சாமி திருவீதி உலாவும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் வீதி உலா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு கருட சேவை உற்சவமும், 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மகா தேரோட்டமும் நடைபெறுகிறது.

    ஏற்பாடுகளை பிரம்மோற்சவ விழா குழு தலைவர் வக்கீல் சி.எம்.ராதாகிருஷ்ணன் மற்றும் கோவில் செயல் அலுவலர் சிவாஜி, ஆய்வாளர் முத்துசாமி, உபயதாரர்கள் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    ----------

    • மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7-ந் தேதி இரவு கிராம சாந்தி, கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் விழாவுடன் தொடங்கியது.
    • கடந்த 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பொத்தனூர் புதுப்பாளை யம் மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 7-ந் தேதி இரவு கிராம சாந்தி, கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் விழாவுடன் தொடங்கியது.

    கடந்த 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தினந்தோ றும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராத னைகளும், சிறப்பு அலங்கா ரமும் நடைபெற்றது. 12-ந் தேதி பூச்சொரிதல் விழாவும், 14-ந் தேதி மறு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை அம்மன் தினந்தோறும் இரவு சிம்மம், ரிஷபம், அன்னபட்சி உள்ளிட்ட வாகனங்களில் முக்கிய வீதிகள் வழியாக உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று முன்தினம் மாலை வடிசோறு, மாவிளக்கு மற்றும் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அம்மன் ரதம் ஏறுதலும், மாலை மகா மாரியம்மன் திருத்தேரில் முக்கிய விதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று மாலை 3 மணிக்கு ஆண்கள் பூ மிதித்தல் நிகழ்ச்சியும், பெண்கள் பூவாரி போட்டுக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) பொங்கல் மற்றும் மா விளக்கு பூஜை யும், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (வியாழக்கி ழமை) கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், கிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    26-ந் தேதி மஞ்சள் நீராடலும், இரவு அம்மன் முத்துப்பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், 27-ந் தேதி ஊஞ்சல் உற்சவ மும், 28-ந் தேதி காலை 6 மணிக்கு யாக பூஜை, அன்ன பாவாடை மற்றும் மகாதீபா ராதனையும் நடைபெறு கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பொத்தனூர் மகாமாரியம்மன் கோவில் தர்மகர்த்தா, திருவிழாக்கு ழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    ×