search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திறமை"

    தொழில் முனைவோர் என்பவர் ஒரு நிறுவனத்தை உருவாக்குபவர் மட்டுமின்றி அந்த நிறுவனத்தை மென்மேலும் வளர்ச்சி அடைய செய்யும் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும்.
    நம்மால் முடியாதது என்று ஒன்றுமில்லை. கொஞ்சம் முயற்சியும், விடாமுயற்சியும் இருந்தால் சிறு தொழிலில் கூட கோடீஸ்வரனாகி விடலாம். எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் நேர மேலாண்மை முக்கியம். அத்துடன் அந்த வியாபாரத்தை தொடங்கி அதை வழி நடத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல. பல இடர்பாடுகளையும், கடினமான முயற்சியும் இருந்தால் தான் எந்த ஒரு தொழிலிலும் வெற்றி பெற முடியும்.

    தொழில் முனைவோர் என்பவர் ஒரு நிறுவனத்தை உருவாக்குபவர் மட்டுமின்றி அந்த நிறுவனத்தை மென்மேலும் வளர்ச்சி அடைய செய்யும் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும். நிச்சயமற்ற சூழ்நிலையில் புதிய மற்றும் மேலான வழிகளின் மூலம் நல்ல முடிவு எடுக்கும் திறமையின் மூலம் செயல்படுவதையே நிர்வாகத்திறமை என்பர்.

    வடிவமைத்தல் மற்றும் செயலாக்குதலில் பொறுப்பேற்று இடர்பாடுகளை யூகித்து வியாபார யுத்திகளை கையாண்டு ஒரு வியாபாரத்தை ஆரம்பிப்பது தான் நிர்வாகத்திறமை. முன்னோக்கு பார்வையுடன் முதலீடு மற்றும் உற்பத்தி வாய்ப்புகள், புதிய தயாரிப்பு செயல்முறை, முதலீட்டை பெருக்குதல், வேலையாட்களை கூலிக்கு அமர்த்துதல், மூலப்பொருட்களை வாங்குதல் மற்றும் நிறுவனத்தின் அன்றாட வேலைகளை கவனித்து நிர்வகிக்கும் மேலாளர்களை நியமித்தல் ஆகியவை தான் ஒரு நிர்வாகியின் பணியாகும்.

    சொந்தமாக ஒரு நிறுவனத்தை உருவாக்கி, வளர்ச்சியடைய செய்யும் நபரே தொழில் முனைவோர் ஆவார். இவர் நிச்சயமற்ற சூழ்நிலையில் இடர்பாடுகளையும், ஆபத்துகளையும் மேற்கொண்டு தனது இலக்கை அடைவார். புதுமைகளை உருவாக்குபவர், விடா முயற்சியுடன் செயல்படுபவர், உறுதியான தனித்தன்மையுடன் பிரதிபலிப்பவர் தான் தொழில் முனைவோர். புதிய உற்பத்தி முறை மற்றும் பொருட்களை அறிமுகப்படுத்துதல், இடர்பாடுகளையும், ஆபத்துக்களையும் சந்திக்கும் மனப்பாங்கு படைத்தவர், நிறுவனத்தை ஒழுங்கு படுத்துதல் ஆகியவை தான் தொழில் முனைவோரின் பண்புகள் ஆகும்.

    புதுமைகளை உருவாக்கும் தொழில்முனைவோர்கள், அதிரடி பரிசோதனை செயல்பாடுகளில் தீவிரமும் மற்றும் கவனிக்கத்தக்க சாத்தியங்களை நடைமுறை படுத்தும் புத்திசாலித்தனம் கொண்டவர்கள், மற்றவர்களின் பாணியை பின்பற்றி முன் உதாரணத்தை கடைபிடிப்பவர்கள், நல்ல நடைமுறைகளை பின்பற்றுபவர்கள் என தொழில்முனைவோர்களை பிரிக்கலாம். எந்த ஒரு தொழிலில் ஆரம்பித்த உடனேயே வெற்றி காண முடியாது. சிறிது, சிறிதாக உழைத்தால் வெற்றி சிகரத்தை எளிதில் தொட்டு விடலாம்.
    உழைக்க நான் தயார் ஆனால் வாய்ப்பு இல்லையே, வழி தெரியவில்லையே எனப் புலம்பித் தவிக்காதே. வான் உள்ளவும் உழைக்கும் வாய்ப்பு உள்ளது.
    உலகம் உன்னை மதிக்க வேண்டும் என்றால் உழைத்து கொண்டே இருக்க வேண்டும். உழைப்பவனையே உச்சியில் வைத்து ஆடும் இந்த உலகம். தொடர்ந்து, கடினமாக உழைத்தால் குறிக்கோளை அடைய முடியும். உழைப்பு பிழைப்புக்கு மட்டும் வழியல்ல; உலகில் நீ நிலைத்து நிற்கவும் அதுதான் வழி. உழைப்பை நீ மதித்தால் அது உன்னை மதிக்கும். நீ வாழ்க்கையில் உயர அது வழி வகுக்கும். உழைக்க நான் தயார் ஆனால் வாய்ப்பு இல்லையே, வழி தெரியவில்லையே எனப் புலம்பித் தவிக்காதே. வான் உள்ளவும் உழைக்கும் வாய்ப்பு உள்ளது. காரணம் மக்கள் பெருக்கம். தேவை அதிகம். தேவை பெருகப் பெருக உழைக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும். இடையில் ஏற்படும் தடைகள் உன்னை கண்ணீர் வடிக்க செய்யலாம். 'ஏன் பிறந்தோம்' என்று கூட நினைக்க தோன்றலாம். தளர்வடையாதே, துவண்டு போகாதே. தொடர்ந்து உழை. வெற்றி உனதே.

    உழைத்துத்தான் வழியை தேட வேண்டும். அது உன்னைத் தேடி வராது. உழைப்பவர்கள் மட்டுமே உலக வரலாற்றில் இடம்பெற முடியும். கின்னஸ் சாதனை நிகழ்த்த முடியும். உழைக்காதவர்கள் உலக வரலாற்றை உற்று பார்க்கக்கூட முடியாது. உழைக்காதவர்களை உலகம் உதறித் தள்ளிவிடும். உற்ற மனைவிகூட வெறுத்து விடுவாள். 'தண்டச்சோறு', 'உதவாக்கரை' என உலகம் எள்ளி நகையாடும். உடன்பிறப்புகள் உழைக்காதவர்களை புறக்கணிப்பார்கள். நண்பர்கள் வெறுத்து ஒதுக்குவார்கள். உழைக்காதவர்களுக்கு உற்ற நண்பர்கள் இருக்கமாட்டார்கள். உழைக்காத கும்பல் நாளடைவில் கலைந்துவிடும். உழைப்பால் உயர்ந்தவர்களை உலகம் இனங்கண்டு கொள்ளும்; பாராட்டும்; புகழும். உழைப்பவர்கள் உலக வரலாற்றில் நிலையான இடம் பெறுவார்கள்.

    இங்கிலாந்து நாட்டை சேர்ந்த காக்ஸ்டன், அச்சகம் அமைத்து அரும்பெரும் சாதனை படைத்தவர். ஆரம்பகாலத்தில் அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். இன்று 'காக்ஸ்டன்' பெயர் உலக வரலாற்றில் நிலைத்து நிற்கக் காரணம் எது? 'உழைப்பு,' தொடர் உழைப்பு. ரெயில் எந்திரத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய ஜார்ஜ் ஸ்டீபன்சன் உலகப் போக்குவரத்து வரலாற்றில் நிலைத்த பெயர் பெற்றது எப்படி? அவரின் உழைப்பேயன்றி வேறு யாது? தொலைநோக்கி, வெப்பமானி, திசைகாட்டும் கருவி, நிலத்தடி நீர் அறியும் கருவி ஆகியவற்றை கண்டுபிடித்து உலக சாதனை பெற்ற கலிலியோ, உலக வரலாற்றில் இடம் பெற்றது எதனால்? உழைப்பினால் மட்டுமே.
    சிலர் தயக்கம் காரணமாக முயற்சி செய்யாமல் வெற்றியைத் தவற விடுவார்கள். இவ்வாறு வெற்றிக்குத் தடைக்கல்லாக இருக்கும் தயக்கத்தை தவிர்ப்பதற்கான சில வழிகள் இதோ..
    வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். சிலர் தான் செய்ய நினைத்ததை முழு மனதோடு முயற்சி செய்து வெற்றி பெறுவார்கள். சிலரோ தயக்கம் காரணமாக முயற்சி செய்யாமல் வெற்றியைத் தவற விடுவார்கள். இவ்வாறு வெற்றிக்குத் தடைக்கல்லாக இருக்கும் தயக்கத்தை தவிர்ப்பதற்கான சில வழிகள் இதோ..

    * ஏன் வருகிறது தயக்கம்?

    ‘மற்றவர்களை போல நாம் இல்லை’ என தோற்றத்தையும், திறமையையும் வைத்து பலருக்கும் தாழ்வு மனப்பான்மை ஏற்படும். ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் யார் முன்னிலையிலோ, சங்கடப்படுத்தும் பேச்சோ, கேலிகளுக்கோ உள்ளாகி இருந்தால் அது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இவ்வாறான தருணங்கள் உண்டாக்கும் தயக்கம் பயமாக மாறிவிடலாம். எந்தச் சூழல் அல்லது எந்த விஷயம் உங்களுக்கு தயக்கத்தை, பயத்தை தருகிறதோ அதில் இருந்து விலகிப் போகாதீர்கள். அதை முடிந்த அளவிற்கு எதிர்கொண்டு, வரும் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

    உதாரணமாக, உங்களுக்கு மேடை ஏறி பேசுவதில் தயக்கம் என்றால், கண்ணாடி முன் நின்று அதற்கான தொடர் பயிற்சி எடுக்கலாம். ஆங்கிலம் பேசுவதில் தயக்கம் என்றால் அதற்கான தீர்வை யோசிக்கலாம். இது போன்ற எளிய பயிற்சிகளை பின்பற்றுங்கள்.

    பலருக்கு தங்களது வசிப்பிடத்திலோ, வேலை செய்யும் சூழலிலோ இது போன்ற தயக்கத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும் நபர்கள் இருப்பார்கள். அவர்களை எதிர்கொள்ள முடியாத சூழல் இருந்தால், அந்த இடத்தை விட்டு விலகுவதோ அல்லது இருப்பிடத்தை மாற்றுவதோ நல்லது.

    மேலே சொன்ன விஷயங்கள் எதுவும் கை கூடவில்லை என்றால் தயங்காமல் மருத்துவர்களையோ அல்லது இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வு கொடுக்கும் நபரையோ சந்தித்து உரையாடுங்கள். இது தயக்கம் தகர்க்கும் வழியாக உங்களுக்கு அமையும்.
    கல்வியோடு திறமையும் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்று திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி பேசினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது.

    கருத்தரங்கை கலெக்டர் கந்தசாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:–

    வாழ்க்கை சவால் நிறைந்தது. போட்டி நிறைந்த இவ்வுலகில் சிரமங்களைத் தாண்டி சாதனைகள் புரிந்திட வேண்டும். வாழ்வில் உயர கடின உழைப்பு தேவையில்லை, அறிவுப்பூர்வமான உழைப்புதான் தேவை. காலத்தால் அழிக்க முடியாத சொத்து கல்வி மட்டுமே. கல்வியோடு திறமையும் இருந்தால் தான் வெற்றி கிடைக்கும். உன்னை நீ இவ்வுலகிற்கு அடையாளம் காட்ட வேண்டிய தருணம் இது. போட்டி நிறைந்த இவ்வுலகில் தன்னம்பிக்கையோடு போராடி வெற்றி பெற வேண்டும்.

    வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்று உயர்ந்த நிலை அடைய வேண்டும் என்பதற்காகவே இம்மாதிரியான தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் கலந்துகொண்டு நீங்கள் அனைவரும் பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சென்னை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மண்டல இணை இயக்குனர் மீனாட்சி, துணை இயக்குனர் தேவேந்திரன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் விஜயகுமார், தாட்கோ மாவட்ட மேலாளர் ஏழுமலை, சன் கலை மற்றும் அறிவியில் கல்லூரி செயலாளர் எஸ்.சீனுவாசன், முதல்வர் சிவக்குமார், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.
    ×