search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்கள்"

    • குழந்தைகளை சூரிய ஒளியில் நன்கு விளையாட விட வேண்டும்.
    • குழந்தைகளுக்கு செல்போன்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

    இன்றைய சூழலில் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகிஉள்ளது. தொலைக்காட்சி மற்றும் கணினி முன்பாக குழந்தைகள் அமரும் நேரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள கொடுக்க வேண்டும். கண்களுக்கு சமமான உயரத்தில் தொலைக்காட்சியின் திரை இருக்க வேண்டும். தொலைக்காட்சி பெட்டியில் இருந்து 6 அடி தூரத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.

    குழந்தைகளை சூரிய ஒளியில் நன்கு விளையாட விட வேண்டும். அப்போது தான் கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் டி போன்ற சத்துக்கள் அதிகளவு கிடைக்கும். மேலும் குழந்தைகள் கண்களில் ஏதேனும் பிரச்சினை என்று தெரிவித்தால் அவர்களை உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும். தாங்களாகவே வைத்தியம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு செல்போன்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

    மாணவர்கள், 80 சதவீதக் கல்வியைத் தங்கள் கண்கள் மூலம்தான் கற்கிறார்கள். அவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்றால் நல்ல கண் பார்வை முக்கியம். ஒரு குழந்தையின் எதிர்காலம் முழுவதும் அந்தக் குழந்தையின் நல்ல பார்வையைச் சார்ந்தே அமைகிறது. ஒரு குழந்தைக்கு நல்ல பார்வை கிடைக்க அவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் முன் வர வேண்டும்.

    * பள்ளிக்கூடங்களில் உள்ள கரும்பலகையில் எழுதப்படும் எழுத்துகளை படிக்க குழந்தைகள் சிரமப்படுதல்

    * குழந்தைகள் ஏதேனும் எழுத்தை தெளிவாக பார்க்க கண்களை அடிக்கடி தேய்த்தல்

    * தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க, கண்களை சுருக்குதல்

    * படிக்கும்போது புத்தகங்களை முகத்திற்கு மிக அருகில் வைத்து படித்தல்

    * குழந்தைகள் கண் வலி, தலை வலி என தொடர்ந்து கூறுவது

    இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே கண் மருத்துவரை பார்ப்பது நல்லது.

    • பள்ளிக் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளது.
    • ஒவ்வொரு வகுப்பறையிலும் குறைந்தது 5 மாணவர்களாவது கண் கண்ணாடி அணிகின்றனர்.

    கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை 50 வயதை கடந்தவர்கள் தான் கண் பார்வை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று வந்தனர். இதனால் கண் ஆஸ்பத்திரிகளும் பெரிய நகரங்களில் மட்டுமே அமைந்திருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதற்கு நேர்மாறாக 5 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண் பார்வை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வளர்ச்சியில் மாறுதல்கள்

    காரணம், தற்போது உள்ள குழந்தைகளின் கைகளில் ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி உள்ளிட்டவை தான் அதிகளவில் தவழ்கிறது. அதில் இருந்து வெளியேறும் ஒளிக்கதிர்கள் கண் பார்வையை இழக்க வைக்கிறது. மேலும் ஊட்டச்சத்து குறைபாடு, கணினி, தொலைக்காட்சி ஆகியவற்றில் நீண்டநேரம் செலவிடுதல், ஜீன் தொடர்பான குறைபாடுகள், சுற்றுச்சூழல் குறைபாடுகள், கண்களின் வளர்ச்சியின்போது ஏற்படும் மாறுதல்கள் உள்ளிட்ட பல காரணிகள், கண் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. சில குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு காரணமாக மாறுகண் கூட ஏற்படலாம்.

    குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், பள்ளிக் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளது. பல பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் கண்பார்வை பாதிப்பு குறித்து போதியளவு விழிப்புணர்வு இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை. இதனால் தற்போது பார்வை குறைபாட்டால் ஏராளமான சிறுவர்கள் கண் ஆஸ்பத்திரிகளுக்கு படையெடுக்கின்றனர்.

    பள்ளிக்கூடங்களிலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் குறைந்தது 5 மாணவர்களாவது கண் கண்ணாடி அணிகின்றனர். எனவே, குழந்தைகளுக்கு ஏற்படும் கண் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவர்களின் கண்ணொளியை பாதுகாத்தல் உள்ளிட்டவை குறித்து டாக்டர் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

    குழந்தைகளை விளையாட விடவேண்டும்

    திடீர்குப்பம் ரேவதி: இன்றைய சூழலில் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகிஉள்ளது. தொலைக்காட்சி மற்றும் கணினி முன்பாக குழந்தைகள் அமரும் நேரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள கொடுக்க வேண்டும். கண்களுக்கு சமமான உயரத்தில் தொலைக்காட்சியின் திரை இருக்க வேண்டும். தொலைக்காட்சி பெட்டியில் இருந்து 6 அடி தூரத்தில் அமர்ந்திருக்க வேண்டும். குழந்தைகளை சூரிய ஒளியில் நன்கு விளையாட விட வேண்டும். அப்போது தான் கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் டி போன்ற சத்துக்கள் அதிகளவு கிடைக்கும். மேலும் குழந்தைகள் கண்களில் ஏதேனும் பிரச்சினை என்று தெரிவித்தால் அவர்களை உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும். தாங்களாகவே வைத்தியம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு செல்போன்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

    வீட்டுக்குள் முடங்கும் குழந்தைகள்

    கடலூர் ஷோபனா: குழந்தைகள் தவழ தொடங்குவதில் இருந்து அவர்கள் அழாமல் இருக்க பெற்றோர் செல்போன்களை கொடுத்து பழக்கி விடுகின்றனர். அதன் பிறகு குழந்தைகள் வளர வளர அவர்கள் செல்போனிலேயே மூழ்கி கிடக்கின்றனர். தற்போது கிராம பகுதிகளில் உள்ள குழந்தைகள் மட்டுமே அருகில் உள்ள குழந்தைகளுடன் விளையாட செல்கின்றனர். நகர பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி அவர்களை வீட்டை விட்டு வெளியே விளையாட அனுப்புவதில்லை. இதனால் வீட்டுக்குள் முடங்கும் குழந்தைகள் செல்போன், டி.வி.யே கதி என கிடக்கின்றனர். மணிக்கணக்கில் செல்போனில் மூழ்கி கிடப்பதால் சிறு வயதிலேயே பார்வை குறைபாடு ஏற்படுகிறது. அதனால் குழந்தை பருவத்தில் செல்போன் கொடுப்பதை குறைத்து, விளையாட வைக்க வேண்டும். மேலும் சத்தான காய்கறிகள் வழங்க வேண்டும்.

    பார்வை குறைபாடு

    விருத்தாசலம் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் அனுபிரியா: குழந்தைகளின் கண் பார்வை பிறந்து 5 வயது வரை அவர்களின் உடல் மற்றும் மனவளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. கண் பார்வை குறைபாட்டில் முக்கியமானவை கிட்டப்பார்வை, தூரப்பார்வை. தூரப்பார்வை குழந்தை பிறப்பில் இருந்து 7 வயது வரை வளர்ச்சியை பாதிக்கின்றது. அதனால் குழந்தைகளுக்கு குவிந்த பார்வை அல்லது மாறுபட்ட பார்வை இருப்பின் உடனே மருத்துவரை அணுகி சரி செய்து கொள்ள வேண்டும். இருளான இடத்தில் செல்போன் திரையில் இருந்து வெளிவரும் புறஊதாக்கதிர், மூளையில் நாளமில்லா சுரப்பி உருவாவதை தடுப்பதால் தூக்கமின்மை ஏற்படுகிறது. இதனால் செல்போனை பயன்படுத்தும் போது புற ஊதாக்கதிரை தடுக்கும் கண்ணாடிகளை பயன்படுத்த வேண்டும். பல்வேறு வழிகாட்டுதல்கள் இருந்தாலும் பொதுவாக திரை நேரத்தை ஒரு மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும். கண்ணை திசை திருப்புதல், தூரமாக பார்த்தல், கண்ணை மூடி இருத்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தவிர்க்கலாம். மேலும் கீரை வகைகள், ஆட்டு இறைச்சி கல்லீரல், மீன் மற்றும் ஆரஞ்சு உள்ளிட்டவை சாப்பிடுவதன் மூலம் பார்வைதிறன் மேம்படுகிறது.

    • இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட்டு 11 மணிக்குள் தூங்க வேண்டும்.
    • கண்கள் பார்வை குறையாமல், எளிதில் சோர்வடையாமல் இருக்கக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்ற வேண்டும்.

    நமது உடல் உறுப்புகளில் மிக முக்கியமானது கண்கள். கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்வதால் கண்கள் சூடாகவும், பார்வை மங்கலாகவும் மாறும். கண்கள் பார்வை குறையாமல், எளிதில் சோர்வடையாமல் இருக்கக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்ற வேண்டும்.

    1) பண்ணைக் கீரை, முருங்கைக்கீரை, சிறு கீரை, கறிவேப்பிலை கீரை, வெந்தயக்கீரை இவைகளில் ஒன்றை தினமும் சாப்பிட வேண்டும். உணவில் கேரட், பப்பாளிப் பழம், பாதாம், மீன், முட்டை இவைகளை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    2) பொன்னாங்கண்ணிக் கீரையைப் புளி சேர்க்காமல் சமைத்து நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

    3) இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்பு இரு உள்ளங்கால்களின் நடுவிலும் பசுவின் நெய்யைத் தேய்த்து தூங்க வேண்டும்.

    4) சந்திர தரிசனம்: இரவு உணவுக்குப்பின் ஒவ்வொரு கண்ணிலும் தலா மூன்று துளி சுத்தமான நீர் விட்டு, இமைகளை தேய்த்து, சந்திரனை (நிலவைப்) பார்ப்பது நல்லது. வானம் சுத்தமாக உள்ள காலத்தில் இரு கை விரல்களை சேர்த்து சதுரம் போல செய்து அதன் மூலம் சந்திரனை சுமார் 20 நிமிட நேரம் பார்த்தல் 'சந்திர தரிசனம்' ஆகும். இது நமது சித்தர்கள் அரு ளிய வழிமுறையாகும். இதை தொடர்ந்து செய்து வந்தால் கண் ஒளி கூடும், கண் குளிர்ச்சி பெறும்.

    5) இரவு படுக்கும் முன் தினமும் திரிபலா சூரணம் ஒரு கிராம் வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.

    6) தான்றிக்காய் தோல் பொடி 500 மி.கி. கிராம் வீதம் தேனில் சாப்பிட்டு வர கண் ஒளி கூடும்.

    7) தூதுவளைக் காய் மற்றும் கீரையை சமைத்து நெய் சேர்த்து சாப்பிட்டு வர கண்ணில் உண்டாகும் பித்த நீர் முதலான நோய்கள் நீங்கும்.

    8) சந்தனாதி தைலம், திரிபலா தைலம், பொன்னாங்கண்ணித் தைலம் இவைகளில் ஒன்றை வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.

    9) பஞ்ச கற்ப விதி: கடுக்காய் தோல், நெல்லி வற்றல், கஸ்தூரி மஞ்சள், வேப்பம் வித்து, மிளகு இவற்றை பொடித்து பசும்பாலில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வாரம் ஒருமுறை குளித்து வந்தால் கண் ஒளி பெறும். உடல் சூடு குறையும்.

    10) இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட்டு 11 மணிக்குள் தூங்க வேண்டும். அதிகாலை 4-5 மணிக்குள் எழ வேண்டும். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • சோர்ந்து, ஒளி இழந்த கண்கள் முகத்தின் அழகை குறைக்கும்.
    • கண்களை அழகாக்க ஐ லைனர் பயன்படுத்துவார்கள்.

    நமது ஆளுமையை பிறரிடம் எடுத்துரைப்பது கண்கள்தான். நம்மில் எழும் கோபம், மகிழ்ச்சி, வெறுப்பு போன்ற உணர்வுகளை கண்கள் எளிதாகப் பிறருக்கு எடுத்துக்காட்டும். சோர்ந்து, ஒளி இழந்த கண்கள் முகத்தின் அழகையும், தோற்றத்தின் பொலிவையும் குறைக்கும். எனவே கண்களின் அழகை மேம்படுத்திக்காட்டும் சில மேக்கப் முறைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

    டின்ட் மாய்ஸ்சுரைசர் மற்றும் ஐ கிரீம் கலவை: கண்களைச் சுற்றிலும் வறட்சி இன்றி ஈரப்பதத்துடன் காட்சியளிக்க, மாய்ஸ்சுரைசரை ஐ கிரீமுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். கண்களைச் சுற்றியுள்ள பகுதிகள், இமை முடி, இமைகள் என அனைத்து பகுதியிலும் இந்தக் கலவையை மென்மையாகத் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதனால், சோர்வடைந்த கண்கள் புத்துணர்வு பெறும்.

    லைனருக்கு மாற்றாக ஷீர் ஷேடோ: கண்களை அழகாக்க ஐ லைனர் பயன்படுத்துவார்கள். இதற்குப் பதிலாக கண் இமைகள் மேல், வெளிர் பழுப்பு நிற ஷேடோவை மெலிதாகத் தடவலாம். பொடி போல் இருக்கும் இந்த ஷேடோவைத் தடவும் போது, கண்களின் இமைகள் பிரகாசமாகப் பிரதிபலிக்கும். கண்களின் தோற்றத்தை அழகாய் எடுத்துக் காட்டுவதுடன், சிறிய கண்களையும் பெரிதாக காட்டும். இதற்கு, சில நொடிகள் மட்டும் செலவிட்டாலே போதுமானது.

    ஐ ஷேடோவை லைனராக பயன்படுத்தும் போது, அது நாள் முழுவதும் நீடித்து நிற்கும். கிரீம்களாக இல்லாமல், தூள் வடிவில் பயன்படுத்தும்போது நீண்ட காலம் நீடிக்கும்.

    புருவத்தை உயர்த்திக்காட்ட: முகத்தையும், கண்களையும் அழகாய் காட்டுவதில் முக்கிய பங்கு புருவத்திற்கு உண்டு. கண்களின் வடிவத்திற்கு ஏற்ப புருவங்களை திருத்திக் கொள்ளலாம். சிறிய கண்கள் கொண்டவர்கள் புருவத்தை நீண்ட வளைவாக அமைக்கலாம். அகலமான கண்கள் இருந்தால், புருவங்களை மெல்லியதாக வடிவமைக்கலாம்.

    கருவளையத்தை நீக்குதல்: கண்களின் கீழ் இருக்கும் கருவளையத்தை மறைப்பதற்கு 'பீச்' டோன் கொண்ட கன்சீலரைப் பயன்படுத்தலாம். கண்களின் கீழ்ப் பகுதி, புருவத்திற்கும் கண்ணுக்கும் இடைப்பட்ட பகுதி, கண் ஓரங்களில் ஆங்கில எழுத்து 'வி' போன்ற அமைப்பில் தடவ வேண்டும். இதனால், கருவளையம் மறைந்து சரும நிறத்தோடு ஒத்துப்போகும்.

    கறுப்பு நிற ஐ லைனரை தவிர்க்கவும்: கண்கள் சோர்வாக இருக்கும் போது, கறுப்பு நிறத்தில் ஐ லைனரைப் பயன்படுத்தினால் மேலும் சோர்வடைந்ததாகக் காட்டும். கறுப்பு நிறத்திற்கு மாற்றாக, பழுப்பு நிற ஐ லைனரை உபயோகிக்கலாம். வெண்கல அல்லது மிதமான பழுப்பு நிற ஐலைனர் அணியும்போது, கண்கள் அழகாக இருக்கும். இவை கண்களைப் பிரகாசமாக பிரதிபலிக்கும்.

    ஐ லேஷஸ், மஸ்காரா: கண்களை அழகாக எடுத்துக்காட்ட ஐ லேஷஸ் உதவும். இவை நேராக இல்லாமல், வளைந்து இருக்கும்போது கண்கள் மிகவும் எடுப்பாகத் தெரியும். மஸ்காரா பலமுறை தடவினால் கண் இமை முடிகள் பெரியதாகத் தெரியும்.

    • பெரும்பாலான குழந்தைகள் எந்நேரமும் ஸ்மார்ட்போனும் கையுமாக இருக்கிறார்கள்
    • குழந்தைகளின் கையில் மொபைல் போன் கொடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    பள்ளி செல்லும் குழந்தைகளிடையே கிட்டப்பார்வை குறைபாடு சமீபகாலமாக அதிகரித்து வருவதாக இந்தியா, சீனா, ஐரோப்பா போன்ற நாடுகளில் நடைபெற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஸ்மார்ட்போன், டி.வி., கம்ப்யூட்டரை எப்போதும் உற்று பார்த்துக் கொண்டிருப்பதுதான் இந்த நிலைமைக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

    பெரும்பாலான குழந்தைகள் எந்நேரமும் ஸ்மார்ட்போனும் கையுமாக இருக்கிறார்கள். 3 வயதை தொடாத குழந்தைகூட மொபைல் போனுடன் நேரத்தைக் கழிக்கிறது. நம் முந்தைய தலைமுறையில் இவ்வளவு அதிகமான குழந்தைகள், பார்வைத்திறன் குறைபாட்டால் கண்ணாடி அணியவில்லை. அப்படியென்றால், இப்போது மட்டும் ஏன் இந்த நிலைமை?

    ஸ்மார்ட்போனின் திரைக்கும், அதைப் பார்ப்பவருக்கும் இடையே உள்ள குறுகிய இடைவெளியில் தொடர்ந்து நீண்ட நேரம் பார்த்துக்கொண்டே இருப்பதால் கண் விரைவில் களைத்துப்போகிறது. இதனால், நாளடைவில் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படலாம் என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள்.

    இதைத்தவிர கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுவதற்கு இன்னுமொரு முக்கிய காரணமாக ஆய்வு சுட்டிக்காட்டுவதைக் கவனிக்க வேண்டும். வீட்டுக்கு வெளியில் குழந்தைகள் விளையாடும்போது, கண்ணின் விழித்திரையில் 'டோபமைன்' என்ற வேதிப்பொருளை சூரிய ஒளி அதிகமாக சுரக்க வைக்கிறது. அதன்மூலம் விழிக்கோளம் நீட்சி அடைவது தடுக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.

    சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் 'டி' கண்களைச் சுற்றியுள்ள தசைகளிலுள்ள திசுக்கள் நன்றாக வேலை செய்வதற்கும், விழித்திரையில் பிம்பம் தெளிவாக விழுவதற்கும், விழிக்கோளத்தின் இயல்பான வளர்ச்சிக்கும் வடிவத்துக்கும்கூடக் காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    அந்தக்காலத்தில் குழந்தைகள் நேரம் கிடைக்கும் போதெல்லாம், வீட்டுக்கு வெளியேதானே விளையாடினார்கள். விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம், நீண்டநேரம் வீட்டுக்கே வராமல் கூட விளையாடினார்கள். ஆனால், இப்போது அதற்கு நேர் எதிரான நிலை இப்போது உள்ளது.

    எனவே கண் பாதுகாப்பு குறித்து குழந்தைகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். குழந்தைகளின் கையில் மொபைல் போன் கொடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    • கண்கள் பிறப்பில் உள்ள அளவுதான் எப்போதும் இருக்கும்.
    • மூளைக்குப் பிறகு சிக்கலான உறுப்பு கண்கள்தான்.

    மனிதன் சராசரியாக 10 வினாடிகளுக்கு ஒரு முறை கண் சிமிட்டுகிறான்.

    கண்கள் மற்ற உறுப்புகளை விட காயம்பட்டால் விரைவில் குணமாகும் தன்மை உடையது (48 மணிநேரம்) சரியான பராமரிப்பு இருந்தால்...

    பிறந்த குழந்தைகளுக்கு அதிகம் கண்ணீர் வராது. அது தகவல் பரிமாறுவதற்கே அழுகிறது. கண்ணீர் வருவதற்கு 4-13 வாரங்கள் வரை பிடிக்கும்.

    உலகில் 39 மில்லியன் மக்கள் சராசரியாக பார்வையற்றவர்களாக உள்ளனர்.

    கண்களின் கோள வடிவ செல்கள் (ராட் செல்) வடிவத்தையும் கூம்பு வடிவ செல்கள்(கோன் செல்) நிறங்களையும் பார்க்க உதவுகின்றன.

    உங்கள் கண்களின் அளவு கிட்டத்தட்ட ஒரு அங்குலம் அகலம் கொண்டது. எடை 0.25 அவுன்ஸ்.

    சிலர் இயற்கையாகவே ஒரு கண்ணில் ஒரு நிறமும் மற்ற கண் இன்னொரு நிறமுமாக பிறந்திருப்பார்கள். இது ஒருவகை நோய். அதன் பெயர் ஹீடகோமியா.

    மற்ற தசைகளை விட கண் தசைகள் எந்நேரமும் சுறுசுறுப்பாகவும் விரைந்து இயங்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கின்றன.

    80 சதவிகித கண்நோய்கள் உலகில் தீர்க்கப்படக் கூடியதாகவும் நிவாரணம் பெறக் கூடியதாகவும் உள்ளது.

    உலகில் பொதுவான கண் நிறம் பிரவுன். கண்களின் நிறம் கருவிழி படலத்தில் உள்ள மெலனினை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

    நாம் பிறந்ததிலிருந்து அனைத்து உறுப்புகளும் வளர்கின்றன கண்களை தவிர. கண்கள் பிறப்பில் உள்ள அளவுதான் எப்போதும் இருக்கும்.

    கண்கள் திறந்தபடி தும்முவது சிரமமானது; பெரும்பாலும் அப்படி தும்ம முடியாது.

    தீக்கோழிக்கு அதன் மூளையை விட கண்கள் பெரிதாக இருக்கும்.

    புகைப்பிடிப்பது கண்களைப் பாதிக்கும். குறிப்பாக இரவு கண் பார்வையை.

    பல்லிகள் மனிதனைவிட நிறங்களை அறிவதிலும், இருட்டில் பார்ப்பதிலும் 350 மடங்கு சிறந்ததாக விளங்குகிறது.

    டால்பின்கள் ஒரு கண் திறந்தபடியே படுக்கும்.

    தேனீக்கு 5 கண்கள் உண்டு.

    மூளைக்குப் பிறகு சிக்கலான உறுப்பு கண்கள்தான்.

    • கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்க சில உணவுகள் வழிவகுக்கின்றன.
    • நட்ஸ் உங்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

    ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் இளைஞர்களும், இளம் பெண்களும் கண்களை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டியது மிக அவசியம். ஏனெனில் 24 மணி நேரத்தில், குறைந்தது 12 மணி நேரம் கணினி திரைகளையே பார்த்து கொண்டிருப்பதால், கண்கள் பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடும். அத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட்டு, கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்க சில உணவுகள் வழிவகுக்கின்றன.

    ஆரோக்கியமாக கண்களை பராமரிக்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:

    1. மீன்

    நல்ல கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா 3 ஆகியவை மீனில் அதிகம் நிரம்பி இருக்கின்றன. இவை கண் மற்றும் அதன் செயல்பாட்டிற்கு நன்மை தரும்.

    2. முட்டை

    லுடீன் மற்றும் வைட்டமின் ஏ உட்பட முட்டையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

    3.முழு தானியங்கள்

    முழு தானியங்களில் காணப்படும் வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் நியாசின் ஆகியவை ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

    4. பச்சை காய்கறிகள்

    கீரை, முட்டைக்கோஸ் மற்றும் காலார்ட் கீரைகள், புரோக்கோலி, பட்டாணி மற்றும் வெண்ணெய் ஆகியவை கண் தசை பராமரிப்புக்கான சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றியாக செயல்படுகிறது.

    5. சிட்ரஸ் பழங்கள்

    ஆரஞ்சு, திராட்சைப்பழம், எலுமிச்சை மற்றும் பெர்ரிகளில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது கண் தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தை குறைக்கும்.

    6. நட்ஸ்

    பிஸ்தா, வால்நட், பாதாம் உள்ளிட்ட நட்ஸ்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளன. அவை உங்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

    7.பருப்பு வகைகள்

    கிட்னி பீன்ஸ் மற்றும் பருப்பு ஆகியவை பயோ பிளவனாய்டுகள் மற்றும் துத்தநாகத்தின் நல்ல ஆதாரங்களாகும். இது கண் பார்வை மற்றும் பிற கண் தொடர்பான செயல்பாடுகளுக்கு உதவும்.

    8.கேரட்

    கேரட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது கண்பார்வையை மேம்படுத்துவதற்கான சிறந்த ஆதாரமான வைட்டமின் ஏ-வை உற்பத்தி செய்ய உதவுகிறது.

    • ‘மெட்ராஸ் ஐ’-க்கு சித்த மருத்துவத்தில் தீர்வுகள் உள்ளன.
    • நோய் நீங்கும் வரை வீட்டில் ஓய்வெடுப்பது அவசியம்.

    'மெட்ராஸ் ஐ' என்பது அடினோ வைரஸ் அல்லது ஸ்டெரெப்டோகாக்கஸ், ஸ்டெபிலோகாக்கஸ் போன்ற பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாக பரவக் கூடியது. கண் சிவப்பு, கண் எரிச்சல், கண் வலி, கண்ணீர் வடிதல் அல்லது கண்பீளை வெளியாதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

    இதற்கான சித்த மருத்துவம்:

    1) "படிக பன்னீர்" ஒரு துளி வீதம் கண்களில் விடலாம். கண் சிவப்பு, பீளை வெளியேறுவது விரைவில் நிற்கும்,

    2) சுத்தமான தண்ணீரில் மஞ்சளை கரைத்து, சுத்தமான வெள்ளைக் கைக்குட்டையை அதில் நனைத்து, அந்த துணியை வைத்து கண்ணை துடைக்கலாம், மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினி, 3 நந்தியாவட்டை பூச்சாற்றை பிழிந்து கண்களில் விட்டு வர கண் எரிச்சல், கண் வலி நீங்கும்.

    மேலும், ஒவ்வொரு முறை கண்ணை துடைக்கும் போதும் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும், நோய் நீங்கும் வரை வீட்டில் ஓய்வெடுப்பது அவசியம்.

    • நோய் பாதிக்கப்பட்டவரின் கண்ணீரில் சுமார் 10 கோடி வைரஸ் கிருமிகள் இருக்கும்.
    • கைகளை அடிக்கடி சானிடைசர் பயன்படுத்தி கழுவ வேண்டும்.

    வடகிழக்கு பருவமழையான தற்போது தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் 'மெட்ராஸ்- ஐ' நோய் வேகமாக பரவி வருகிறது. குமரி மாவட்டத்திலும் நாகர்கோவில் உள்ளிட்ட சில இடங்களில் பரவ தொடங்கி உள்ளது.

    இந்தநிலையில் இதுதொடர்பாக கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பருவமழை காலத்தில் நோய் கிருமிகள் அதிக அளவில் பெருகுகிறது. 'மெட்ராஸ் ஐ' கண்வலி என்பது ஜலதோசத்தை உண்டாக்கும் அடினோ வைரஸ் மற்றும் கெர்பஸ் சிம்ளக்ஸ், என்டிரோ வைரஸ் என்னும் வைரஸ் கிருமியால் உண்டாகிறது. இது கண்களில் நீர் வடிதலை உருவாக்குகிறது. 50 சதவீத மக்களுக்கு தானாகவே சரியாகி விடும். அதிக பாதிப்பை உணர்ந்தவர்கள் மட்டுமே டாக்டர்களை பார்க்க வேண்டியிருக்கும். இந்த நோய் தாக்கம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து 2 முதல் 15 நாட்கள் வரை நீடிக்க கூடும். இதன் அறிகுறிகள் சிவப்பு நிற கண்கள், கண்களில் நீர் வடிதல், கண்களில் லேசான வீக்கம், எரிச்சல், உறுத்தல் மற்றும் அரிப்பு ஆகும்.

    இந்த நோயானது கண்நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை பார்ப்பதால் பரவுவதில்லை. நோய் பாதிக்கப்பட்ட ஒருவரின் கண்ணீரில் சுமார் 10 கோடி வைரஸ் கிருமிகள் இருக்கும். பாதிப்புக்குள்ளான நபர் கண்களிலிருந்து வடியும் நீரை தன் கைகளால் துடைத்து பின்னர் வேறு பொருட்களை தொடும் போது, அந்த இடத்தை மற்றொருவர் தொடுவதால் நோய் பரவுகிறது.

    கைகளை அடிக்கடி சுத்தமான நீரில் சோப்பு போட்டு கழுவ வேண்டும். கைகளை அடிக்கடி சானிடைசர் பயன்படுத்தி கழுவ வேண்டும். பாதிப்பிற்குள்ளான நபர் தன்னை தனிமை படுத்திக் கொள்ள வேண்டும். பிறரது பொருட்களை தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கண்களை கைகளால் தொடவோ, கசக்கவோ கூடாது.

    பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவ சிகிச்சைக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவரை அணுக வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சில வைரஸ் தொற்றுகள் கருவிழியை பாதிக்கக்கூடியவை.
    • ஒருபோதும் சுய மருத்துவம் மேற்கொள்ளக்கூடாது.

    மழைக் காலங்களில் அதிகமாக பரவும் நோய்த்தொற்றுகளுள் ஒன்று, 'மெட்ராஸ் ஐ'. கண் வெண்படல அழற்சி எனப்படும் இந்த கண் நோய், வைரஸ் தொற்றுகளால் ஏற்படுகிறது. சில சமயங்களில் பாக்டீரியா தொற்றாகவும் பரவும். சில வைரஸ் தொற்றுகள் கருவிழியை பாதிக்கக்கூடியவை. கண் பார்வை திறனை கடுமையாக பாதிக்கும் தன்மை கொண்டவை. எனவே மெட்ராஸ் ஐ தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    எப்படி பரவும்?

    மெட்ராஸ் ஐ பாதிப்புக்குள்ளானவர் உபயோகிக்கும் பொருட்களை மற்றவர்கள் தொடுவது, பயன்படுத்துவது, நோய்த்தொற்றுக்கு ஆளானவர் கைகளால் தொட்ட இடங்களை தொடுவது போன்றவை மூலம் இந்த கண் நோய் பரவக்கூடும்.

    நோய் பாதிப்புக்குள்ளானவர்களின் டவல்கள், தலையணை உறைகள், ஒப்பனைப் பொருட்கள் போன்றவற்றை தொடுவதையோ, பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும்.

    வீட்டில் யாருக்கேனும் நோய்த்தொற்று ஏற்பட்டால் மற்றவர்களும் அடிக்கடி கை கழுவ வேண்டும். அவர்களுக்கு மருந்து போட்டால் உடனே கைகளை கழுவி விட வேண்டும்.

    மெட்ராஸ் ஐ வருவதற்கு காரணங்கள்?

    வைரஸ் தொற்று, பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்பட்டாலும் இந்த வைரஸ் தொற்றுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வேறுபாடுகள் உள்ளன. இவற்றுள் ஒரு சில வைரஸ் மாறுபாடுகள்தான் கருவிழியை பாதிக்கும் தன்மை கொண்டவை.

    ஒரு சிலருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டதுமே கண்கள் மங்கலாக தொடங்கிவிடும். சிலருக்கு வாரக்கணக்கில் நீடிக்கும். முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமானது. ஒருபோதும் சுய மருத்துவம் மேற்கொள்ளக்கூடாது.

    வைரஸ்கள் மாறுபாடு கொண்டவை என்பதால் கடைகளில் விற்கப்படும் கண் சொட்டு மருந்துகளை உபயோகிக்கக்கூடாது. மருத்துவரிடம் பரிசோதித்துவிட்டு அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    மெட்ராஸ் ஐ-க்கான அறிகுறிகள்:

    கண் சிவப்பு நிறத்துக்கு மாறுதல், கண்களில் உறுத்தல் ஏற்படுதல், கண் எரிச்சல், கண்களில் பூழை ஏற்படுதல், கண்களில் நீர் வடிதல், கண் கூசுதல் போன்ற அறி குறிகள் தென்படும். வைரஸ் தொற்று தீவிரமாக இருந்தால் கண்களில் வீக்கம், பார்வை மங்குதல், வெளிச்சத்தை பார்ப்பதற்கு சிரமப்படுதல் போன்ற அறிகுறிகள் அதிகமாக தென்படும்.

    எப்போது குணமாகும்?

    ஒருவருக்கு மெட்ராஸ் ஐ தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் நான்கு முதல் 7 நாட்களுக்கு பிறகுதான் முழுமையாக வெளிப்படும். முறையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டால் இரண்டு முதல் மூன்று வாரத்துக்குள் சரியாகிவிடும்.

    கணினியில் வேலை பார்ப்பது உள்பட வழக்கமான வேலைகள் அனைத்தையும் பார்க்கலாம். ஆனால் சுகாதார வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கண்ணாடி அணிந்து கொள்வது பாதுகாப்பானது. அது மற்றவர்களுக்கு நோய்த்தொற்று பரவுவதை கட்டுப்படுத்த உதவும்.

    எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

    ஒருசில அறிகுறிகள் தென்பட தொடங்கினாலே கண் மருத்துவரை அணுகி பரிசோதித்துவிட வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை உபயோகித்தால் சாதாரண தொற்று ஒரு வாரத்துக்குள்ளேயே சரியாகிவிடும். வைரஸ் தொற்று கடுமையாக இருந்தால் கண் இயல்புக்கு திரும்புவதற்கு இரண்டு முதல் நான்கு வாரங்கள் ஆகக்கூடும்.

    • நோய்த்தொற்றுகள் காரணமாகவும் கண்கள் சிவப்பு நிறத்தில் காணப்படும்.
    • கண்கள் சிவப்பு நிறத்தில் காட்சி அளிப்பதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

    சிலரது கண்கள் திடீரென சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். பொதுவாக தூக்கமின்மை, உடல் சோர்வு காரணமாக கண்களின் நிறத்தில் மாற்றம் தென்படும். எனினும் ஓரிரு நாட்களில் கண்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். சில சமயங்களில் நோய்த்தொற்றுகள் காரணமாகவும் கண்கள் சிவப்பு நிறத்தில் காணப்படும். கண்களில் எரிச்சல், காயம், நீர் வழிதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. கண்கள் சிவப்பு நிறத்தில் காட்சி அளிப்பதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

    கொரோனா தொற்று

    நுரையீரல் மற்றும் சுவாசக்குழாயில் தொற்று ஏற்பட்டால், அதன் பாதிப்பு இதயம் மற்றும் கண்களிலும் வெளிப்படும். மருத்துவர்களின் கருத்துப்படி கண்கள் சிவப்பு நிறத்தில் தொடர்ந்து காட்சி அளித்தால் அது கொரோனா அறிகுறியாகவும் இருக்கலாம். வைரஸ் கண்கள் வழியாக உடலுக்குள் நுழையும்போது இது நிகழும்.

    காண்டாக்ட் லென்ஸ்

    காண்டாக்ட் லென்ஸ்கள் அணிவது பிரச்சினை அல்ல. அதனை முறையாக உபயோகிக்க வேண்டும். சரியாக சுத்தம் செய்யாமலோ, சரியான முறையில் கண்களுக்குள் பொருத்தாமலோ இருந்தால் கண்களுக்கு அசவுகரியம் உண்டாகும். தூங்க செல்வதற்கு முன்பு காண்டாக்ட் லென்ஸை மறக்காமல் அகற்ற வேண்டும்.

    அவற்றை வெளியே எடுக்காமல் அப்படியே தூங்குவது, காண்டாக்ட் லென்ஸ் அணிந்தபடியே மழையில் நனைவது கண்களில் தொற்று ஏற்பட காரணமாகிவிடும். கண்களில் காயம், கண் சிவத்தல் போன்ற பிரச்சினைகளையும் உண்டாக்கும்.

    பிளேபரிடிஸ்:

    இது பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படுகிறது. இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாகும்போது கண் இமைகளின் அடிப்பகுதி வீக்கமடையக்கூடும். கண்களும் சிவப்பு நிறமாக மாறும். காலாவதியான அழகு சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கண்களில் தொற்று ஏற்படக்கூடும்.

    ஒவ்வாமை:

    காய்ச்சல் அல்லது ஒவ்வாமை காரணமாகவும் கண்களின் நிறம் மாறக்கூடும். தூசுகள், விலங்குகளின் முடிகள் கண்களில் பட்டாலும் ஒவ்வாமை காரணமாக எதிர்வினை புரியும்.

    நோய்த்தொற்று:

    கண்களில் வீக்கம் மற்றும் பாக்டீரியா போன்ற வைரஸ் தொற்றுகள் காரணமாக கண்களில் இருந்து நீர் வெளியேறும். மஞ்சள் நிறத்திலும் காணப்படும். கண் மருத்துவரை அணுகி பரிசோதிப்பதன் மூலம் நோய்த்தொற்றுகளில் இருந்து கண்களை பாதுகாக்கலாம்.

    • பெற்றோர்களும் இந்த விஷயத்தில் போதிய விழிப்பு உணர்வு இல்லை.
    • இன்றைய சிறுவர்கள் கண்களுக்கு அதிகப்படியாக வேலைக் கொடுக்கிறார்கள்.

    நீண்ட நேரம் படிப்பது, சிறு வயதிலேயே மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றால் கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால் சிறுவர்களுக்கு கண் பார்வை சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அது கவனிக்கப்படாமல் இருந்தால் நிரந்தர பார்வை இழப்புக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறார்கள் கண் மருத்துவர்கள்.

    எந்தப் பள்ளிக்குச் சென்றாலும் பெரும்பாலான மாணவர்கள் கண்ணாடி அணிந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. பல மாணவர்கள், தங்களுக்குப் பார்வைக்குறைபாடு இருப்பதையே அறியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களும் இந்த விஷயத்தில் போதிய விழிப்பு உணர்வு இல்லை.

    இன்றைய சிறுவர்கள் கண்களுக்கு அதிகப்படியாக வேலைக் கொடுக்கிறார்கள். முக்கியமாக, நீண்ட நேரம் படிப்பது, சிறு வயதிலேயே மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றால் கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால் இயல்பாகவே, இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு பார்வைக் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போது உலகளவில் சுமார் 3 கோடியே 9 லட்சம் பார்வையற்றவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பேர் பார்வையிழந்து தவிக்கிறார்கள். இது உலகின் மொத்த பார்வையற்றவர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும்.

    ஒரு மனிதனுக்குத் தனது வாழ்நாளில் எந்த வயதிலும் பார்வையிழப்பு ஏற்படலாம். குறிப்பாக, சிறுவர்களுக்கு கண் பார்வை சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அது கவனிக்கப்படாமல் இருந்தால் நிரந்தர பார்வை இழப்புக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறார்கள் கண் மருத்துவர்கள்.

    முக்கியமாக சிறுவர்களின் முதல் 8 வருடங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் அவர்களது மூளையும் கண்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பார்வைத்திறனை அதிகரிக்கும் காலகட்டம் அது. இந்த தருணத்தில்தான் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் கண்பார்வை தொடர்பான அறிகுறிகள் அப்போதுதான் தெரியவரும்.

    ஒவ்வொரு 5 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. பெரும்பாலும் தங்களுக்கு பார்வைக் குறைபாடு இருப்பதை அறியாமலேயே அவர்கள் வளர்கிறார்கள். இதனால், ஆரம்பத்திலேயே குறைபாட்டைக் கண்டறிய முடியாமல் போய்விடுகிறது.

    ×