search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97927"

    • ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அ.தி.மு.க சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து மாவட்ட செய லாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருது பாண்டியன் முன்னிலை வகித்தார்.மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் நாட்டுக்கோட்டை ஜெயகார்த்திகேயன்,

    எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் மருது பாண்டியர் நகர் ராஜேந்தி ரன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள் திரளாக கலந்து தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    • தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஏராளமான அ.தி.மு.க.வினர் பங்கேற்பு

    திருச்சி,

    கள்ளச்சாராயத்தை தடுக்க வலியுறுத்தியும், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டி–ருப்பதை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.லால்குடியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் தலைமை தாங்கினார்.திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமை–யில் ஸ்ரீரங்கம் பஸ் நிலையம் அருகாமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருச்சி மேல சிந்தாமணி அண்ணாசாலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர் சீனிவாசன், முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். 

    • தமிழ்மகன் உசேன் தலைமையில் திரளானோர் பங்கேற்பு
    • அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு சோதனை நடத்த சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர்

    நாகர்கோவில், மே.29-

    தமிழகத்தில் விஷ சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது தொடர்பாக தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், விளவங்கோடு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் அமைச்சர் பச்சைமால், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கிருஷ்ணதாஸ், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் வக்கீல் பரமேஸ்வரன், இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், பொருளாளர் ஆர்.ஜே.கே. திலக், பகுதி செயலாளர்கள் ஜெயகோபால், ஜெவின் விசு, கவுன்சிலர் அக்ஷயா கண்ணன், கோபால் சுப்பிரமணியன், சேகர், அனிலா சுகுமாரன், பொதுக்குழு உறுப்பினர் சகாயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி வர அனைவரும் சூளூரை ஏற்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் கள்ள சாராயம் ஆறாக ஓடுகிறது. இதை தடுக்க அரசு தவறிவிட்டது. எனவே நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் விரைவில் வர இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூருக்கு, தமிழகத்தை முதலிடம் கொண்டு வருவதற்காக செல்லவில்லை. அவருடைய முதலீட்டை அங்கு செய்வதற்காக தான் சென்றுள்ளார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு சோதனை நடத்த சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.வில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது ஆர்.டி.ஓ. பதவிக்கு ரூ.25 லட்சத்தை வாங்கி ஏமாற்றியுள்ளார். டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். நமது போராட்டம் செங்கோட்டை வரை ஒலிக்கும் வகையில் குரல் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம், பொன் சுந்தர்நாத், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துகுமார், முன்னாள் நகர செயலாளர் சந்துரு, தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், இளைஞர் பாசறை செயலாளர் ஷாநவாஸ், இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், வழக்கறிஞர் அணி செயலாளர் சுந்தரம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜாராம் மற்றும் நிர்வாகிகள் வடிவை மகாதேவன், வெங்கடேஷ், ரபீக், ரெயிலடி மாதவன், கோட்டார் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கவுன்சிலர் ஸ்ரீலிஜா நன்றி கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் கண்டன கோஷங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • போதிய அடிப்படை வசதிகள் இல்லை என கூறி 3 மருத்துவக்கல்லூரிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் சி.சி.டி.வி. கேமிரா இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சாக்கு போக்கு சொல்கிறார்.
    • கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் கொடுத்தது ஏன்? மக்கள் வரிப்பணத்தை எதற்காக அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க கோரியும், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் படு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜர் சிலை அருகே தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் பழனிசங்கர் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட அவைத்தலைவர் சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-

    போதிய அடிப்படை வசதிகள் இல்லை என கூறி 3 மருத்துவக்கல்லூரிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் சி.சி.டி.வி. கேமிரா இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சாக்கு போக்கு சொல்கிறார்.

    வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனைக்கு இடையூறு செய்யக்கூடாது. அவர்கள் தகவல் சொல்லி விட்டா வந்து சோதனை நடத்துவார்கள்? சோதனைக்கு இடையூறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் கொடுத்தது ஏன்? மக்கள் வரிப்பணத்தை எதற்காக அவர்களுக்கு கொடுக்க வேண்டும். 2 வருடங்களுக்கு முன்பு கனிமொழி எம்.பி. பேசும் போது, தமிழகத்தில் தான் இளம் விதவைகள் அதிகம் இருப்பதாக கூறினார்.

    இப்போது கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்திற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்.

    நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை பணிகள் கடந்த 2 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு, ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கமிஷன் கொடுக்க வேண்டியது இருப்பது தான் இதற்கு காரணம்.

    இயற்கை வளங்களை அழிக்ககூடாது. தென்காசி மாவட்டம் வழியாக அளவுக்கு அதிகமாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தி கொண்டு செல்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.

    தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள். ஆனால் இன்னும் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

    மின் கட்டணத்தை குறைப்போம் என்றார்கள். ஆனால் விலைவாசி தான் 3 மடங்கு அதிகரித்துவிட்டது. ஆவின் பால் வினியோகமும் மோசமாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகவேல், மாநில இளைஞரணி துணை செயலாளர் ராஜேந்திர நாத், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சோலை கனகராஜ், மாவட்ட இளைஞரணி பொருளாளர் வக்கீல் சந்துரு, பேரூர் செயலாளர் திருமலை செல்வம் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • முடிவில் சக்திவேல் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவ.பாலுச்சாமி தலைமை வகித்தார்.மாவட்ட இணை செயலாளர் மலைச்செல்வம், மாவட்ட துணைச் செயலாளர்கள் அற்புதராஜ், ஆர்.கே.முனி யசாமி, முத்துக்கூரி ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.

    ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் முனியசாமி அனைவரையும் வர வேற்றார். பூரண மது விலக்கை வலியுறுத்தியும், மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பதை கண்டித்தும், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22-க்கும் மேற்பட்ட பலி யான சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி நிர்வாகி வசந்தி, ஒன்றிய செயலா ளர்கள் முனியசாமி, சேகர், சுரேஷ், பேரின்பராஜ், விலாசி, பெரியசாமி மற்றும் பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சக்திவேல் நன்றி கூறினார்.

    • புதிய தமிழகம் கட்சியினர் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்ட்டது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியினர், புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் அருண்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விஷசாராயம் உயிரிழப்பு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், டாஸ்மாக்கில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக வாங்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சட்டவிரோத டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தமிழகத்தில் பூரண மது விலக்கை அமுல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்ட்டது.

    • சிலைகளை சேதப்படுத்தி அங்கிருந்த பூஜைப் பொருட்களை தூக்கிவீசி நாசப்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
    • அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பினர், திரளான பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும் காசிக்கு நிகரான கோவில் என பல சிறப்புகள் பெற்ற கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கடந்தத 22-ந் தேதி மர்ம நபர் உள்ளே புகுந்து சிலைகளை சேதப்படுத்தி அங்கிருந்த பூஜைப் பொருட்களை தூக்கிவீசி நாசப்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர். இதற்கு ஆன்மீக அமைப்பினர், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    அதன்படி நேற்று இந்து முன்னனி சார்பில் அவினாசி புதிய பஸ் நிலையம் அருகில் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில், திருப்பூர், கரூர் காங்கயம், பவானி, புளியம்பட்டி வெள்ளகோவில் ராசிபுரம் ,திண்டுக்கல், உள்ளிட்ட பகுதிகளில் இருந்துஇந்து அமைப்பினர், அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பினர், திரளான பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
    • 29-ந்தேதி நடைபெறவிருக்கும் ஆர்ப் பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தது தொடர்பாக தமிழக அரசை கண்டித்து 29-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன்,மாநகராட்சி கவுன்சிலர்கள் அக் ஷயா கண்ணன், ஸ்ரீலிஜா, அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், ஒன்றிய செயலாளர்கள் ஜெஸீம், பொன் சுந்தர்நாத், இளையரணி செயலாளர் ஜெயசீலன், மாநகர முன்னாள் செயலாளர் சந்துரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகளை தெரிவிப்பது, குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் அதிக ளவில் உறுப்பி னர்களை சேர்க்க வேண்டும், தமிழகத்தில் கள்ளச்சா ராயத்தை ஊக்குவித்த தி.மு.க. அரசை கண்டிப்பது, நடைபெற உள்ள நாடாளு மன்ற தேர்தலில் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டும் வேட்பாளரை வெற்றிபெறச் செய்வது, வருகிற 29-ந்தேதி நடைபெறவிருக்கும் ஆர்ப் பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது. வீழ்ச்சியும் கிடையாது.
    • சயனைடு கலந்த மது குடித்ததில் 2 பேர் பலியாகினர் என கூறுவது மக்களை திசை திருப்பும் செயல்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கள்ளச்சா ராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 29-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி தஞ்சையில் 29-ந் தேதி தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று தஞ்சையில் நடைபெற்றது.

    இதற்கு அ.தி.மு.க அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது :-

    தஞ்சாவூர் தெற்கு மாவட்ட உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்து தலைமை அலுவல கத்திற்கு இரண்டு நாட்களில் அனுப்ப வேண்டும்.

    எடப்பாடி பழனிசாமி தஞ்சைக்கு வந்த போது மிக சிறப்பான முறையில் வரவேற்பு அளித்த அனைவ ருக்கும் நன்றி. இப்பொழு துதான் தஞ்சை தெற்கு மாவட்டம் புத்துணர்ச்சி பெற்றுள்ளது.

    தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் தான் ஆகிறது.

    ஆனால் அதற்குள் அவர்கள் பல்வேறு சர்ச்சையில் சிக்கி உள்ளார்கள்.

    அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது.

    வீழ்ச்சியும் கிடையாது.

    கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் இறந்தனர்.

    அதேபோல் தஞ்சையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மது குடித்த 2 பேர் பலியாகினர்.

    சயனைடு கலந்த மது குடித்ததில் 2 பேர் பலியாகினர் என கூறுவது மக்களை திசை திருப்பும் செயலாக உள்ளது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பின்படி தஞ்சையில் 29-ந் தேதி தி.மு.க அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை. திருஞானம், பால் வளத் தலைவர் காந்தி, ஒத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி. சேகர், அரசு அச்சக தலைவர் புண்ணிய மூர்த்தி, முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், முன்னாள் நகரச் செயலாளர் பஞ்சாபிகேசன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் நாகராஜன், செயற்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் ஹேமா, பிரதிநிதிகள் சண்முகசுந்தரம், நடராஜன், கவுன்சிலர்கள் கோபால், கேசவன், தட்சிணாமூர்த்தி, ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் ஐயப்பன், திராவிட வங்கி இயக்குனர் மகேந்திரன், அம்மா பேரவை துணைத்தலைவர் ரெங்கப்பா, மாணவரணி முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திமுக அரசு மக்கள் பணம் ரூ.3ஆயிரம் கோடியை மோசடி செய்துள்ளனர்.
    • அத்திக்கடவு அவினாசி திட்டத்தை 95 சதவீதம் பணி முடித்தும் இன்னும் தொடங்கவில்லை.

    கோவை,

    கள்ளச்சாராயம் சாவு, போதைப்பொருள் நடமாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற பிரச்சினைகளுக்காக தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 29-ந் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    கோவையில் 3 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது.

    கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க வருகிற 29-ந் தேதி கோவையில் வடக்கு மாவட்டம் சார்பில் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்திலும், மாநகர் மாவட்டம் சார்பில் செஞ்சிலுவை சங்கம் முன்பும், புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் பொள்ளாச்சியிலும் என 3 இடங்களில் 9 மணிக்கு கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்

    திமுக அரசு மக்கள் பணம் ரூ.3ஆயிரம் கோடியை மோசடி செய்துள்ளனர். மக்கள் விரோத திமுக ஆட்சியை பதவி விலக வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    இந்தியாவில் பல முதல்வர்கள் உள்ளனர். முதல்வர்களிலேயே எதுவும் தெரியாமல் இருக்கும் முதல்வர் தமிழக முதல்வர் தான்.முன்பு முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய் சென்றதாக தெரிவித்தனர். ஆனால் அப்போது எத்தனை முதலீடு வந்தது. ஒன்றும் வரவில்லை. இப்போது முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். எத்தனை முதலீடு வருகிறது என பார்ப்போம்.

    4 அரை ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது மக்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வந்தது எடப்பாடியார் மட்டுமே. அத்திக்கடவு அவினாசி திட்டத்தை 95 சதவீதம் பணி முடித்தும் இன்னும் தொடங்கவில்லை. இப்போது ஸ்டாலின் தொடங்கும் திட்டங்கள் அனைத்தும் எடப்பாடி யாரால் கொண்டு வரப்ப ட்டது.

    தமிழகத்தில் கள்ளச்சாராயம், திருட்டு, மது விற்பனை, கஞ்சா, போதை பொருள் உள்ளிட்டவை சர்வசாதாரணமாக நடை பெறுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டு உள்ளது.

    நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக நாம் வெற்றி பெறுவோம்.இப்போது தேர்தல் வந்தாலும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் வெற்றி பெறுவார்.அதிமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டது. இன்று திமுக ஆட்சியில் காவல்துறை அவர்களுக்கு சாதகமாகவே செயல்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி அருண்குமார், கே.ஆர்.ஜெயராம் ஏ.கே.செல்வராஜ், தாமோதரன், சூலூர் கந்தசாமி, அமுல் கந்தசாமி, புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செய லாளர் என்ஜினீயர் சந்திரசேகர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    • மேலூரில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்.
    • ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இளைஞ ரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.

    இதில் மாவட்ட செய லாளரும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா கலந்துகொண்டு பேசியதாவது:-

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மேலூர், மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகளில் தொகுதிக்கு 1 லட்சம் பேர் வீதம் 3 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வருகின்ற 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்.

    தி.மு.க.வை கண்டித்து வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) மேலூரில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி நிர்வாகிகள் ஏராள மானோர் கலந்து கொள்ள வேண்டும்.

    தமிழக முதல்வர் ஏற்கனவே முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றார். அங்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவில் முதலீடுகளை ஈர்த்ததாக தெரிவித்தனர்.ஆனால் அது தொடர்பாக புதிய நிறுவனங்களோ, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளோ பெற்றதாக தெரியவில்லை.

    தற்போது மீண்டும் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர், ஜப்பான் செல்லும் முதல்வர் ஜப்பானில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்திற்கு நிதி உதவி அளிக்கவுள்ள ஜிகா நிறுவனத்தின் அதிகாரி களை சந்தித்து விரைந்து நிதிகளை அனுப்ப கோரிக்கை விடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கோட்டை தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார்.
    • ரெயில் ஓட்டுநர்களையும் சேர்த்து காலி பணி யிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

    ஈரோடு, 

    அகில இந்திய ரெயில் ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக அனைத்து கோட்ட அளவிலான ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று ஈரோடு ரெயில் நிலையத்தில் ஈரோடு ஓட்டுனர் அலுவலகம் முன்பு ரெயில் ஓட்டு நர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கோட்டை தலைவர் அருண்குமார் தலைமை தாங்கினார். மண்டல துணைச் செயலாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினார்.

    விருப்ப மாறுதல் வேண்டி பதிவு செய்தவர்களை கடந்த 4 வருடமாக பணி மாற்றம் செய்யாததை கண்டித்தும், வந்தே பாரத் உட்பட பல புதிய ரெயில்களை ஓட்ட போதுமான ரெயில் ஓட்டுநர்களையும் சேர்த்து காலி பணி யிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

    பெண் ரெயில் ஓட்டுநர்க ளுக்கான அடிப்படை வசதிகளை உடனே ஏற்ப டுத்தி தர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலி யுறுத்தி ரெயில் ஓட்டுநர்கள் கோஷத்தில் ஈடுபட்டனர்.

    ×