search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • நாளை 17-ந்தேதி காலை 7.30 மணிமுதல் 7.44 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
    • நாளை பகல் 11 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
    • 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோவில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

    இந்தியாவிலேயே முதல் முதலாக சென்னையில் தான் பத்மாவதி தாயாருக்கு தனி கோவில் கட்டி நாளை 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிமுதல் 7.44 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

    முன்னதாக 3 நாட்கள் பத்மாவதி தாயார் நெல் தானியத்திலும், தண்ணீரிலும் 2000 லிட்டர் பாலிலும் அபிஷேகம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து இன்று காலையில் தாயாரை கோவில் கருவறைக்கு கொண்டு சென்று அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று காலை 7 மணி முதல் 8 மணி வரை சதுஸ்தனா அர்ச்சனா நடந்தது.

    8 மணி முதல் 9 மணி வரை மூர்த்தி ஹோமம் நடத்தப்பட்டது. 9 முதல் 9.30 மணி வரை தாயாருக்கு அஸ்த பந்தன மூல விக்கிரக பிரதிஷ்டை மகாத்சயம் நடந்தது. பத்மாவதி தாயார் கருவறையில் நிறுவப்பட்டதை தொடர்ந்து திருப்தி கோவிலில் உள்ள ஆகம விதிப்படி அனைத்து சம்பிரதாயங்களும் பின்பற்றப்பட்டன. தொடர்ந்து காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை தாயாருக்கு பல்வேறு சடங்குகள் செய்யப்படுகின்றன.

    துவஜஸ்தம்ப சாயா, ஜலதிவாசம், பிம்ப நயனோன் மீளனம், தீர்த்தபிரசாத கோஷ்டி, சதுஸ்தானார்ச்சனா, தத்வனயாசம், மூர்த்தி ஹோமம், பூர்ணா ஹுதி, சயனாதிவாசம், தீர்த்தபிரசாத கோஷ்டி போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

    நாளை கும்பாபிஷேகத்தையொட்டி அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை சதுசதனா அர்ச்சனை தாயாருக்கு நடக்கிறது. 5-மணி முதல் 6 மணி வரை மகா சாந்தி ஹோமம் பூர்ணாஹுதி, 6 மணி முதல் 6.30 மணி வரை கும்ப உத்தப்பன 7 மணி முதல் 7.15 மணிவரை ஆலய பிரதக்ஷனா, 7.15 முதல் 7.30 மணி வரை சம்பாத்ஜய சபர்ஷனம், 7.30 மணி முதல் 7.44 மணிக்குள் மீன லக்கணத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    விமான கோபுரத்திலும் ராஜகோபுரத்திலும் ஒரே நேரத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.

    10 மணி முதல் 11 மணி வரை பாணி கிரகணம் (பத்மாவதி சீனிவாசா கல்யாணம்) 11 மணி முதல் 11.30 மணி வரை ஆச்சர்யா, ரித்விக் பரிச்சார்கா மர்யாடா நிகழ்ச்சி நடக்கிறது.

    கும்பாபிஷேக விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.ஒய்.சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி, விசாகப்பட்டினம் சாரதா பீடம் ஸ்ரீ ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ சுவாத் மனேந்திரா சரஸ்வதி சுவாமிகள், தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜே.சேகர் மற்றும் ஆன்மீகவாதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    நாளை காலையில் நடைபெறும் கும்பாபிஷேகத்திற்கு குறைந்த அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். சிவாச்சாரியர்கள், குருக்கள், நீதிபதிகள், முக்கிய பிரமுகர்கள், திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கும்பாபிஷேகத்தை காண அனுமதிக்கப்படுகிறார்கள்.

    11-மணியில் இருந்து பொதுமக்கள் பத்மாவதி தாயாரை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். கூட்டத்தை சமாளிக்க இரும்பு தடுப்பு வேலி அமைத்து ஒரு வரிசையில் உள்ளே செல்லவும் மற்றொரு வரிசையில் வெளியே வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு வரை பத்மாவதி தாயாரை தரிசிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கும்பாபிஷேகத்தையொட்டி திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சாம்பார் சாதம், ரச சாதம், தயிர் சாதம், இனிப்பு பொங்கல், வெஜ் பிரியாணி ஆகிய உணவு வகைகள் 3 வேளையும் வழங்கப்படுகிறது.

    பக்தர்கள் சாப்பிடுவதற்கு வசதியாக கோவிலுக்கு எதிரே இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு டேபிள்-சேர் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இதேபோல நாளை காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரையிலும் அன்னதானம் இடைவிடாமல் வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளூர் ஆலோசனை குழுத் தலைவர் ஏ.ஜே.சேகர் தெரிவித்தார்.

    பத்மாவதி தாயார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக திருப்பதி லட்டு வழங்கப்படுகிறது. 15 ஆயிரம் பக்தர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    நாளை கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் இரவு 7.30 மணிக்கு திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தாயார் கோவிலில் இருந்து புறப்பட்டு ஜி.என்.செட்டி ரோடு வலது புறமாக சென்று வடக்கு போக் சாலை, விஜயராகவாச் சாரியார் சாலை, டாக்டர் நாயர் ரோடு வழியாக சென்று மீண்டும் திருமாட வீதியை அடைகிறது.

    கும்பாபிஷேகத்தையொட்டி நாளை காலையில் ஜி.என்.செட்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தை மாற்றி விடவும் திட்டமிடப்பட்டு உள்ளது. காலையில் இருந்து இரவு வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் போக்குவரத்தை சீர் செய்ய போலீசாரும் அங்கு குவிக்கப்படுகிறார்கள்.

    • இன்று மாலை பூஜைகள் தொடங்கி வருகிற 16-ந் தேதி வரை ஹோமங்கள் காலை, மாலை நடக்கும்.
    • 10-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை திருக்கல்யாணம் நடக்க உள்ளது.

    சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில், வருகிற 17-ந்தேதி கும்பாபிஷேக விழா நடை பெற உள்ள பத்மாவதி தாயார் கோவிலை திருப்பதி திருமலை தேவஸ்தானம் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜெ.சேகர் ரெட்டி பார்வையிட்டார். பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    கடந்த 13 ஆண்டுகளாக பல பிரச்சினைகளை கடந்து தற்போது கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பத்மாவதி தாயார் கோவில் தேவஸ்தானம் சார்பில் 2021 பிப்ரவரி 13-ந்தேதி தொடங்கப்பட்டு கோவில் பணிகள் நடந்தன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பூஜைகள் தொடங்கி வருகிற 16-ந் தேதி வரை ஹோமங்கள் காலை, மாலை நடக்கும்.

    வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணியில் இருந்து 7.44 மணிக்குள் பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. 16 மற்றும் 17-ந்தேதிகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவைக்கு ஏற்ப அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொள்கிறார்.

    குட முழுக்கு முடிந்த பின்பு 10-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை திருக்கல்யாணம் நடக்க உள்ளது. பொது மக்களுக்கு 11 மணி முதல் சாமி தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்த ராமகிருஷ்ணா பள்ளியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி முதல் காசி வரை பிரமாண்டமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவில்களை கட்டி வருகிறோம் , உளுந்தூர்பேட்டையில் அடுத்த ஆண்டு கட்டுமானப் பணி முடிவடையும். வேலூரிலும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஏற்கனவே தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலும் புதுப்பிக்கப்பட உள்ளது.

    ரூ.10 கோடி செலவில் இந்த கோவில் கட்டப்பட்டு ள்ளது. தற்போது கோவிலில் இலவச தரிசனத்திற்கு அனைவரும் அனுமதிக்கப்படுவர். சிறப்பு பூஜை தரிசனங்களுக்கு டோக்கன் முறையில் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து தேவஸ்தானம் முடிவு செய்யும்.

    முன்னாள் நடிகை காஞ்சனாவின் சகோதரி கிரிஜா பாண்டே, கர்நாடகா மாநில முன்னாள் தலைமை செயலாளராக இருந்தவர். அவர் குடும்பத்துக்கு சொந்தமான இடம் தான் இது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனவரி 27-ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • 48 நாட்களுக்கான மண்டல பூஜை நிறைவு விழா நடைபெறுகிறது.

    காங்கயம் :

    காங்கேயம் அருகே உள்ள பாப்பினி கிராமம் மட வளாகத்தில் பிரதான புகழ்பெற்ற ஸ்ரீ ப்ருஹன்நாயகி அம்பிகை சமேத ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரகுபதி நாராயண பெருமாள் திருக்கோவில்கள் உள்ளன. கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சமூகத்தின் தோடை, கண்ணந்தை காடை, கீரை, ஆகிய நான்கு குலத்தவர்களின் குலதெய்வமாக விளங்கி வரும் கோவில்களில் கடந்த ஜனவரி 27-ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து 48 நாட்களுக்கான மண்டல பூஜை ஜனவரி 28ஆம் தேதி முதல் தொடங்கி வரும் 16.3.23ம் தேதி அன்று 48 நாட்களுக்கான மண்டல பூஜை நிறைவு விழா நடைபெறுகிறது. அன்று அம்பிகை மற்றும் ஆருத்ர கபாலீஸ்வரர் மற்றும் பெருமாள் ஆகிய தெய்வங்களுக்கு 48 நாள் மண்டலாபிஷேக சிறப்பு வழிபாடுகள் செய்து நிறைவு வழிபாடாக 108 சங்காபிஷேக பூஜைகளும், சிறப்பு யாக வழிபாடுகளும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில்களின் தலைவர் ஏ.வரதராஜ், நிர்வாக தலைவர் எஸ் தங்கமுத்து செயலாளர் எம் ராமசாமி,பொருளாளர்.பி அர்ச்சுணன்,பாப்பினி கோவில் தலைவர் .தம்பி வெங்கடாசலம் பால சமுத்திரம் புதூர் கே ஆர் பாலசுப்பிரமணியம் மற்றும் கோவில்களின் கொங்கு வேளாளர் தோடை கண்ணந்தை காடை மற்றும் கீரை குலத்தோர் சங்கத்தின் நிர்வாகிகளும் பாப்பினி வீரசோழபுரம் கிராம பொதுமக்களும் செய்துள்ளனர்.

    • வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் கொடி மரங்களில் தங்கமுலாம்
    • பக்தர்கள் உதவி செய்ய வேண்டுகோள்

    வேலூர்:

    வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண் டேஸ்வரர் கோவில் சுமார் 400 ஆண்டுகள் வழிபாட்டில் இல்லாமல் இருந்தது.

    வேலூர் சத்துவாச்சாரியில் இருந்த ஜலகண்டேஸ்வரர் சிலையை கோவிலில் வைத்து வழிபட முடிவா னது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்த கோவிலில் சிலை வைக்கும் பணிக்காக ஜலகண் டேஸ்வரர் கோவில் மீட்புக் குழு உருவாக்கப்பட்டது.

    இந்த குழுவின் திட்டப்படி அப் போதைய கலெக்டர் கங்கப்பா வழி காட்டுதலின்படி கடந்த 1981-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி வேலூர் கோட்டையில் இருந்த கோவில் கருவறையில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அதன்பிறகு தொல்லியல் துறையால் சிலையை அகற்ற முடியாத நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. கோவிலின் முதல் கும்பாபிஷேக விழா கடந்த 1982-ம் ஆண்டு ஜூலை 8-10 தேதியும், 2-வது கும்பாபிஷேகம் விழா 1997- ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதியும், மூன்றாவது

    கும்பாபிஷேக விழா 2011-ம் ஆண்டு ஜூலை 10-ந் தேதி நடத்தப்பட்டது.

    இந்நிலையில், வேலூர் கோட்டை ஜலகண்டேஸ் வரர் கோவிலின் நான் காவது கும்பாபிஷேகம் விழா நடத்தப்படவுள்ளது. இது வளாகத்தில் விழாக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி. சண்முகம் கூறும்போது, "வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் நான்காவது கும்பாபிஷேக விழா நடத்துவதற்கு 13 துணை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    யாகசாலை பூஜை வரும் ஜூன் 21-ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறும். வரும் ஜூன் 25-ம் தேதி காலை 9.30 மணி முதல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. விழாவை யொட்டி பொதுமக்கள், பக்தர்கள் என அனைத்து தரப்பினரும் பொருளுதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அளிக்கலாம்.

    கும்பாபிஷேக விழா வின் ஒரு பகுதியாக ராஜகோபுரத்தில் இருக்கும் அனைத்து கலசங்கள் மற்றும் சுவாமி மற்றும் அம்பாள் சன்னிதிகளில் உள்ள கொடிமரங்கள் தங்க முலாம் பூசப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்த கோவிலில் 1922, 1997, 2011 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
    • இதற்கான பணிகளை மேற்கொள்ள 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமாக பக்தர்கள் வருகின்றனர். இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக ஜலகண்டேஸ்வரர் கோவில் தர்மஸ்தாபனம் தலைவர் கலவை சச்சிதானந்தாசுவாமிகள், உபதலைவர்களான தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் டார்லிங் வெங்கடசுப்பு, ரமேஷ், பொருளாளர் சண்முகம், செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    புகழ்மிக்க ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 1922, 1997, 2011 ஆகிய ஆண்டுகளில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து 4-வது முறையாக இந்தாண்டு வருகிற ஜூன் மாதம் 25-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வொரு பணியை மேற்கொள்ள உள்ளனர். அதற்கு முன்பாக தங்க தகடுகளால் கொடிமரம், கலசங்கள், மூலவருக்கு சொர்ணபந்தனம் அமைக்கப்படுகிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஆதினங்கள், மடாதிபதிகள் உள்ளிட்ட ஆன்மிகவாதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இந்த கோவிலில் ரூ.4 கோடியில் திருப்பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
    • விமானங்களின் படங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தர்ம சம்வர்த்தினி சமேத கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சரபேஸ்வரர் தனி கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். இந்த கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. நேற்று காலை திருப்பணி தொடக்க நிகழ்ச்சியான பாலாலயம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்று, கடங்கள் கோவில் பிரகாரம் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

    கம்பகரேஸ்வரர் சன்னதியில் அமைக்கப்பட்டிருந்த விமானங்களின் படங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களிடம் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கூறியதாவது:-

    ரூ.4 கோடி மதிப்பில் திருப்பணி செய்யப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் காசாளர் கந்தசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • விநாயகர் பூஜை, தீபாராதனை, கோபூஜை, 2-ம் கால யாகபூஜை நடைபெற்றது.
    • கருட பகவான் கலசத்தை சுற்றிவர புனிதநீர் கும்பத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    மதுக்கூர்:

    பட்டுகோட்டை அருகே அருள்மிகு பூர்ணாம்பிகா புஷ்கலாம்பிகை சமேத அருள்மிகு சிந்தாமணி கூத்த அய்யனார் மற்றும் பிடாரி அம்பிகையின் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் ஒன்றியத்தி ற்குட்பட்ட பெரியக்கோட்டை கிராமத்தில் அருள்மிகு பூர்னாம்பிகா, புஷ்கலாம்பிகை அருள்மிகு சிந்தாமணி கூத்த அய்யனார் பிடாரி அம்பிகை திருக்கோயில் அமைந்துள்ளது.

    இந்த திருக்கோயில் சிலை ஒரே கல்லில் ஆனது குறிப்பிடத்தக்கது.

    இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு யாகசாலை உள்ளிட்ட விநாயகர் பூஜை மஹகணபதி ஹோமம் விநாயகர் பூஜை தீபார்த்தனை, கோபூஜை, இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது.

    இதையடுத்து பல்வேறு புனித தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட கலச நீர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது.

    இந்த புனித நீரை மங்கல இசையுடன் சிவாச்சாரியார்கள் தலைமையில் சுமந்தபடி கருட பகவான் கலசத்தை சுற்றிவர புனித நீர் கும்பத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடை பெற்றது.

    நிகழ்ச்சியை பெரிய கோட்டை மதுக்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டாரங்களில் இருந்த பொதுமக்கள் நிறைய பேர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சங்கையா சந்தி வீரப்பன்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை சங்கையா சந்தி வீரப்பன் கோவில் திருப்பணி கமிட்டியினர் செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள தென்கரை கிராமத்தில் சங்கையா சந்தி வீரப்பன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. மதுரை கணபதி பட்டர் தலைமையில் யாகவேள்வி நடந்தது. திருப்பணி கமிட்டி தலைவர் பிரசன்னா மூர்த்தி, செயலாளர் பரந்தாமன், பொருளாளர் நீதிவளவன், பரம்பரை பூசாரி தினகரன், ரமணன் ஆகியோர் மேளதாளத்துடன் புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். இதைத்தொடர்ந்து சங்கையா சந்திவீரப்பன் உள்பட அங்காள பரமேசுவரி சங்கிலி கருப்பன் சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சங்கையா சந்தி வீரப்பன் கோவில் திருப்பணி கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • வழுதூர் முத்துவேலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி பூரணவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள வழுதூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான முத்துவேலம்மன், ஆண்டி ஐயா ஆகிய பரிபால தெய்வங்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. யாகசாலை பூஜை, கோமாதா பூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி நடைபெற்ற பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டது. புனிதநீர் குடங்களை வேத விற்பன்னர்கள் சுமந்து கோபுரத்திற்கு எடுத்துச் சென்றனர். கருடபகவான் வானத்தில் வட்டமிட பெண்கள் குலவை முழக்கத்துடன் முத்துவேல் அம்மன் மற்றும் ஆண்டி அய்யா, நாகநாதர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கோபுர கலசத்தில் திருப்புல்லாணி பாபு சாஸ்திரி குழுவினர் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். மூலவருக்கு நடந்த சிறப்பு அபிஷேகம், தீபாராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டு சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமியை தரிசனம் செய்தனர்.

    அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை காண வழுதூர், வாலாந்தரவை, தெற்கு காட்டூர், உடைச்சியார் வலசை, ஏந்தல், மொட்டையன் வலசை, அளம், பட்டணம் காத்தான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். கோவில் நிர்வாகிகள் ராஜகோபால், செல்வம், கார்மேகம், தினகரன், ஜோதி, நந்தகுமார் மற்றும் வழுதூர் கிராம மக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பி.டி.ராஜா,

    எம். கே.பாலு, துரை, ஜெயபால், சிவசாமி, குணசேகரன், மோகன், தரணி முருகேசன், வாலாந்தரவை ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி பூரணவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விமான கலசம் நிறுவுதல் மற்றும் எண்வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
    • திரளான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    பேரூர்,

    பேரூர் அருகே பச்சாபாளையத்தில், புலிவீரய்யன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 28-ந் தேதி மாலை 6.30 மணிக்கு, மங்கள இசை, திருவிளக்கு வழிபாட்டுடன் தொடங்கியது.

    தொடர்ந்து, மார்ச் 1-ந் தேதி நிலமகள் வழிபாடு, முதல் நிலை வழிபாடுகள் நடத்தப்பட்டு, திருக்குடங்கள் வேள்விச்சாலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து மாலை, முதல் கால வழிபாடும், மார்ச் 2-ந் தேதி காலை திருப்பள்ளி எழுச்சி நடத்தப்பட்டு 2ம் கால வழிபாடுகள் துவங்கியது. தொடர்ந்து, மாலை 3ம் கால வழிபாடுகள் நடத்தப்பட்டு, இரவு விமான கலசம் நிறுவுதல் மற்றும் எண்வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று காலை 4-ம் கால வழிபாடுகள் நடத்தப்பட்டு, காலை 7.40 மணிக்கு மேல், விநாயகர், குப்புலட்சுமி தாயார், புலிவீரய்யன் ஆகிய கோவில் விமான கலசங்களுக்கும், தெய்வ த்திரு மேனிகளுக்கும், மகா கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேக விழாவை, ஓதுவா மூர்த்திகள் ஜெயபிரகாச நாராயணன், பத்மநாபன் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் முன்னின்று நடத்தினர். இதைத்தொடர்ந்து, அலங்கார வழிபாடு, மகா தீபாராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், அன்னதானமும் வழங்க ப்பட்டது.இதில், திரளான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக தலைவர் நாகராஜ், செயலாளர் தனபால், பொருளாளர் வேலுச்சாமி, திருப்பணி குழுத்தலைவர் போலீஸ் வேலுச்சாமி மற்றும் உறுப்பினர்கள் குப்புசாமி, கோபால், நாகராஜ் உள்பட ஊமத்தகுல ஆண் மக்களும், பெண் மக்களும் செய்திருந்தனர்.

    • சோழவந்தான் அருகே உள்ள முனியாண்டி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கோவில் பூசாரி சண்முகசுந்தரம் கோடாங்கி பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள பன்னிமுட்டி முனியாண்டிகோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. பன்னிமுட்டி முனியாண்டி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சாலைக்கோபுரம் அனைத்திற்கும் திருப்பணிகள் செய்யப்பட்டது. இதையடுத்து புதிதாக மதுரைவீரன், சப்பானி இரு தெய்வங்களுக்கும் பீடம் அமைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த புதன்கிழமை விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம் நடந்து மாலை முதல் கால பூஜை தொடங்கியது. இரண்டாம் நாளில் இரண்டாம் கால பூஜை மாலை மூன்றாம் கால பூஜை நடந்தது. நேற்று காலை நான்காம் கால பூஜை நடந்தது. மகாபூர்ணாகுதி நடந்து, புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். காலை சரியாக 9.30 மணி அளவில் விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்து. மகா தீபாராதனை, கோ பூஜை, மகா அபிஷேக ஆராதனை நடைபெற்றது. வேத ஆகம திருமுறை பாராயணம் நடைபெற்றது. கோவில் பூசாரி சண்முகசுந்தரம் கோடாங்கி பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கும்பாபிஷேக விழா நாளை தொடங்கி 7-ந்தேதி வரை நடக்கிறது.
    • 7-ந்தேதி அம்மனுக்கு பொங்கலிடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    உண்ணாமலைக்கடையை அடுத்த பயணம் பகுதியில் செண்பகவல்லி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 7-ந்தேதி வரை நடக்கிறது.

    விழாவின் முதல் நாள் நாளை அதிகாலை காலை 4.30 மணிக்கு பள்ளி உணர்த்தல், கணபதிஹோமம், சிவபுராணம், அபிராமி அந்தாதி பாராயணம், பூஜைகள், தீபாராதனை, பீடபூஜை, காலை 7.45 மணி அஷ்டபந்தன பிரதிட்சை, 8.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் அனஸ்வரா பவுண்டேஷன் சுவாமிஜி ஸ்ரீ சுரதாவனம் முருகதாஸ், திருநல்லை 39-வது குருமகா சன்னிதான ஆதினம் ஸ்ரீமத் சுவாமி ராகவாசந்தஜி மகராஜ் ஆகியோர் ஆசியுரை வழங்குகின்றனர்.

    நிகழ்ச்சியில் உண்ணாமலைக்கடை பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயசீலன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத், பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் சமய துறவிகள், ஆன்மிக பெரியோர்கள், அரசியல் பிரமுகர்கள், ஆலய நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து பகல் 11.45 மணிக்கு உச்சகால பூஜை, அன்னதானம், மாலை 6.15 மணிக்கு திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு பிடிப்பணம் சமர்ப்பித்தல், பகவதி பூஜை, விஷ்வா காளீஸ்வரன் என்னும் நாடகம் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவில் நாளைமறுநாள்(சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு பண்பாட்டு போட்டிகள், மாலை 5 மணிக்கு வினாடி வினா போட்டி, டான்ஸ் ஸ்டார் ஷோ, 5-ந்தேதி காலை 10 மணிக்கு சுமங்கலி பூஜை, மாலை 4 மணிக்கு புனிதநீர் கும்ப பவனி சிங்காரி மேளம், தாலப்பொலி, செண்டை மேளம், முழங்க அம்மன் பவனி வருதல் நிகழ்ச்சி, 6-ந்தேதி காலை 7.30 மணிக்கு அபிஷேகங்கள், இரவு 7 மணிக்கு இந்து சமய மாநாடு, பரிசளிப்பு விழா, இரவு 10 மணிக்கு கலை நிகழ்ச்சி, நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை ஆகியவை நடக்கிறது.

    விழாவின் இறுதிநாளான 7-ந்தேதி காலை 11 மணிக்கு அம்மனுக்கு பொங்கலிடும் நிகழ்ச்சி, மதியம் 12 மணிக்கு பூப்படைப்பு, தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×