search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • மார்ச் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • ஆனி மாதம் சொர்ணா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர். இங்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவர் கோபுரத்தில் உள்ள விமானத்திற்கு தங்க தகடு பதிக்கும் திருப்பணியும், ராஜகோபுரம், சன்னதிகள், திருமதில் ஆகியவற்றுக்கு திருப்பணிகளும் தனித்தனியாக நடைபெற்று வந்தது. மேலும் தங்க விமான திருப்பணியில் தாமிர தகடு, தங்க தகடு பதிக்கும் பணி நடைபெற உள்ளது.

    இதையடுத்து ஆனி மாதம் இதற்கான சொர்ணா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ராஜகோபுரம், சுவாமி சன்னதிகள் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கான திருப்பணிகள் நிறைவு பெற்றதால் வருகிற மார்ச் மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    மேலும் 8 கால பூஜைகளுடன் யாகசாலை பூஜையும் நடைபெற உள்ளதால் அதற்கான யாகசாலை கோவில் வளாகத்தில் மகாமக கிணறு அருகில் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் யாகசாலைக்கான முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் அர்ச்சகர்கள், கோவில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 3-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
    • கடந்த 8-ந் தேதி கோவிலில் யாகசாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கோட்டை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற கோட்டை அரங்கநாதர் (பெருமாள்) கோவில் உள்ளது.

    இந்த கோவில் கும்பாபிஷேகத்திற்காக இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின் பேரில் கோவிலின் பழமை தன்மை மாறாமல் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    கடந்த நவம்பர் மாதம் 11-ந் தேதி கஸ்தூரி அரங்கநாதர் சுவாமி பரிவார மூர்த்திகள் மற்றும் விமான ராஜ கோபுரங்களும் பலாலயம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து கோவிலுக்கு வர்ணம் பூசும் பணி நடந்தது. இதைத் தொடர்ந்து ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 3-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இதையொட்டி கடந்த 8-ந் தேதி கோவிலில் யாகசாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற உள்ளது.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டதன் அடிப்படையில் சில நிபந்தனைகளுடன் கஸ்தூரி அரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் வரும் 30-ந் தேதி முதல் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    • 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

    இதை தொடர்ந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து விமான பாலாயம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

    பழமை வாய்ந்த விமான கோபுரத்துக்கும், சிற்பங்களுக்கும் வர்ணம்பூசி புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டன.

    கடந்த மாதம் 12-ந் தேதி யாக சாலை அமைக்கும் பணிக்கு கால்கோள் நாட்டப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 23-ந் தேதி முதல் கும்பாபிஷேக விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நேற்று காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    பின்னர் மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாக பூைஜ நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா இன்று காலை 9.45 மணிக்கு நடந்தது. ராஜகோபுரம், மாரியம்மன் விமான கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, விநாயகர், முருகன், அங்காளம்மன், அன்னை மாரியம்மன் மூலாலய மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவையொட்டி பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கும்பாபிஷேக விழாவை பார்த்து, மாரியம்மனை தரிசித்து சென்றனர்.

    இதனையொட்டி பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்ப ட்டிருந்தது. போலீசார் தற்காலிக சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது.

    • மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
    • அலங்கார தீபாராதனை, அன்னதானம் போன்றவை நடந்தது.

    பூதப்பாண்டியில் சிவகாமி அம்பாள் உடனுறை பூதலிங்கசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பின்பு கும்பாபிஷேகம் நடந்த திருப்பணிகள் செய்யப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், சமய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கடந்த 24-ந் தேதி முதல் கால யாக வேள்வி தொடங்கியது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு 4-ம் கால யாக சாலை பூஜை, 5.30 மணிக்கு தீபாராதனை, பூர்ணாகுதி ஆகியவை நடந்தது. நிகழ்ச்சியில் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103-வது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலை வகித்தனர்.

    காலை 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் எடுத்து வருதல் நடந்தது. தொடர்ந்து மூலஸ்தானம் மற்றும் பரிவார விமான ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம் அலங்கார தீபாராதனை, அன்னதானம் போன்றவை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாலையில் திருக்கல்யாண வைபோக முகூர்த்தம், இரவு பஞ்சமூர்த்தி உலா வருதல் போன்றவை நடந்தது.

    • வேத மந்திரங்களை சிவாச்சாரியார்கள் முழங்கினார்கள். பக்தர்கள் பலரும் பங்கேற்றனர்
    • பூதலிங்க சுவாமி, சிவகாமி அம்மாள், பூதநாதர், சாஸ்தா, முருகர், ராஜ கோபுரம் மற்றும் நுழைவு வாயில் பகுதியில் உள்ள ராஜகோபுரங்களில் புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றினார்கள்

    நாகர்கோவில் :

    பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழாவை யொட்டி கடந்த 22-ந் தேதி பூஜைகள் தொடங்கியது.

    முதல் காலயாக சாலை பூஜை, இரண்டாம் காலயாக சாலை பூஜை, 3-ம் கால யாகசாலை, பூஜை 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. மேலும் தினமும் பரதநாட்டியம் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியும் நடந்து வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது.

    இதையடுத்து அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.பின்னர் 5-ம் கால யாகசாலைபூஜை நடந்தது. வேத மந்திரங்களை சிவாச்சாரியார்கள் முழங்கினார்கள். பக்தர்கள் பலரும் பங்கேற்றனர். இதை தொடர்ந்து பூஜைக்கு குடங்களில் வைக்கப்பட்டிருந்த புனித நீர்களை சிவாச்சாரியார்கள் எடுத்து சென்றனர். புனித நீர் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    பின்னர் பூதலிங்க சுவாமி, சிவகாமி அம்மாள், பூதநாதர், சாஸ்தா, முருகர், ராஜ கோபுரம் மற்றும் நுழைவு வாயில் பகுதியில் உள்ள ராஜகோபுரங்களில் புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றினார்கள். அப்போது பக்தர்கள் ஓம் நமச்சிவாயா...ஓம் நமச்சிவாயா... என்று பக்தி கோஷம் முழங்க கோஷமிட்டனர். அப்போது வானில் கருடர் வட்டமிட்டு பறந்தது.இதைத் தொடர்ந்து சிவாச் சாரியார்கள் பக்தர்கள் மீது புனித நீர் தெளித்த னர். இதை தொடர்ந்து கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    கும்பாபிஷேக விழாவில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் மகேஷ், இணை ஆணையர் ஞானசேகர், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் பூதலிங்கம், ஆரல்வாய்மொழி பேரூ ராட்சி தலைவர் முத்துக் குமார், பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர்தாஸ், துணை தலைவர் அணில்குமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வன், துணை செயலாளர் கரோலின் ஆலிவர்தாஸ், தோவாளை ஒன்றிய அ.தி.மு.க. இளைஞர், இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் பகவதியப்பன், இறச்சகுளம் ஊராட்சி தலைவர் நீலகண்ட ஜெகதீஷ், பாரதிய ஜனதா விளையாட்டுப்பிரிவு மாவட்ட செயலாளர் ரெங்கநாதன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு செயலாளர் விஜய்மணியன், பூதப்பாண்டி பேரூராட்சி கவுன்சிலர் ஈஸ்வரி மற்றும் முத்துகுமார் உள்பட ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பூதப்பாண்டி சுற்று வட்டார பகுதியில் இருந்து மட்டுமே குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவை காண வந்திருந்தனர்.

    23 ஆண்டுகளுக்குப் பிறகு பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவிலில் கும்பாபி ஷேகம் நடைபெற்றதை யடுத்து அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டி ருந்தது. நாகர்கோவில், வடசேரி பகுதியிலிருந்து பூதப்பாண்டிக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு இருந்தனர். இன்று இரவு கோவிலில் திருக்கல் யாண நிகழ்ச்சி நடக்கிறது.

    • விழாவானது கடந்த 23-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • இன்று நவசக்தி அர்ச்சனை நடக்கிறது.

    நாகர்கோவில் அருகே உள்ள கள்ளியங்காடு சிவபுரத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலில் மீனாட்சி அம்மன் சமேத மகாதேவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனர் பிரதிஷ்டை மகா கும்பாபிஷேக விழா, சுற்று பிரகார மகாமண்டபம் திறப்பு விழாவும் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    விழாவானது கடந்த 23-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் மங்கள இசை, திருமுறை பாராயணம், சுதர்சன ஹோமம், வாஸ்து சாந்தி, வாஸ்துஹோமம், மகாலெஷ்மி பூஜை, கோபூஜை, கஜபூஜை, பிரம்மச்சாரி பூஜை, மகாபூர்ணாகுதி, புனிதநீர் எடுத்து வருதல், முதல், 2-ம், 3-ம் யாகசாலை பூஜைகள் ஆகியவை நடைபெற்றது.

    விழாவில் இன்று (வியாழக்கிழமை) காலை 4-ம் கால யாகசாலை பூஜை, 5-ம் கால யாகசாலை பூஜை, இரவு சாமி வேதிகையில் பஞ்சமுகார்ச்சனை அம்பாள் வேதிகையில் நவசக்தி அர்ச்சனை நடக்கிறது.

    விழாவில் நாளை காலை பரிவார மூர்த்திகளுக்கு 6-ம் கால யாகசாலை பூஜை, 8 மணிக்கு 7-ம் கால யாகசாலை பூஜைகள், மகா பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ரா தானம், 9 மணிக்கு சாமி விமானம், அம்பாள் விமானம், ராஜகோபுரம், பரிவார மூர்த்திகள் விமானம் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பிரசன்ன பூஜை, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவில் இந்து தர்ம வித்யபீடம் தர்ம கர்த்தா சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் தலைமை தாங்கி பக்தர்களுக்கு ஆசியுரை வழங்குகிறார்.

    கும்பாபிஷேக விழாவில் விஜய் வசந்த் எம்.பி., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, தளவாய்சுந்தரம், நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய மந்திரிகள் தனுஷ்கோடி ஆதித்தன், பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. விஜயகுமார், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.வேலாயுதன், நாகர்கோவில் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் செல்வகுமார், பி.எம்.எஸ். பொறுப்பாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர். முருகன், ராஜகோபால் ஆகியோர் முன்னிலையில், திருவாசகசபை பொருளாளர் நாராயண நாயர் நன்றி கூறுகிறார்.

    தொடர்ந்து கோவிலில் புதிய சுற்று பிரகார மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியில் டாக்டர் கிஷோர், எலும்பு முறிவு டாக்டர்களான கிருஷ்ணகுமார், மோகன்தாஸ், அபிநயா கன்ஸ்ட்ரக்சன் ராஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து அன்னதானம், பகல் 12 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு சாமி, அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, இன்னிசை கச்சேரி, இரவு 9 மணிக்கு தீபாராதனை ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை சிவபுரம் திருவாசக சபை தலைவர் சின்னையன், துணை தலைவர் முருகன், செயலாளர் ராஜகோபால், பொருளாளர் நாராயணன் நாயர், துணை செயலாளர்களான சேகர், ரமேஷ், இசக்கிமுத்து, ராஜகோபால் ஆகியோர் தலைமையில் திருவாசக சபை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், கவுரவ ஆலோசகர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று இரவு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • நாளை காலை யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

    ஊத்துக்குளி அருகே பூசாரிபாளையம் பகுதியில் பால மரத்துக்கருப்பராயசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பாலாலயம் செய்து கொடுமணல் தங்கம்மன் கோவில் செயலாளர் ராமசாமி கவுண்டர் தலைமையில் பாலமரத்துக் கருப்பராயன் சுவாமிக்கு கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், நிலை விமானம், சாளரகோபுரம், கன்னிமார் ஆலயம், விநாயகர் ஆலயம், திற் சுவர் என கல்ஹார திருப்பணிகளும், வர்ண கலாப திருப்பணிகளும் நிறைவடைந்தது. நாளை (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 23-ந்தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவகிரஹ, ஹோமங்கள், பூர்ணாகுதி, தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் செங்கப்பள்ளி அழகு நாச்சி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்த குடங்கள் முளைப்பாரி அதிர்வெட்டு முழங்க வாத்தியாய கோஷங்களுடன் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தீர்த்த குடங்களுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானை, குதிரைகள் வாத்தியாய இசைக்கு தகுந்தார் போல் நடனமாடி சென்றன.

    இன்று (புதன்கிழமை) காலை 2-ம் கால யாக பூஜை, தீபாராதனை, அதனைத் தொடர்ந்து மாலை கோபுர கலசம் வைத்த நிகழ்ச்சியும் நடக்கிறது. இன்று பிற்பகல் 3-ம் கால யாக பூஜை, இரவு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை)காலை 4-ம் கால யாக பூஜைகளும், அதனைத்தொடர்ந்து யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    காலை 8.30 மணிக்கு மேல் பாலமரத்துக் கருப்பராயசுவாமி விமான கும்பாபிஷேகமும், அதனைத்தொடர்ந்து விநாயகர், பாலமரத்துக் கருப்பராயசாமி, கன்னிமார் சாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் தசதானம், தசதரிசனம், அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, முளைப்பாரிகை கங்கையில் சேர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி நாளை காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பூசாரிபாளையம் ஊர் பொதுமக்களும், பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊத்துக்குளி போலீசாரும் செய்துள்ளனர்.

    • இன்று இரவு பரதநாட்டியம், நாட்டியாஞ்சலி நடக்கிறது.
    • நாளை இரவு பஞ்சமூர்த்தி தரிசனம் உலா நடக்கிறது.

    பூதப்பாண்டி பூதலிங்கசாமி, சிவகாமி அம்பாள் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று காலையில் பழையாற்றில் இருந்து யானை மீது புனிதநீர் எடுத்த வரும் நிகழ்ச்சி நடந்தது. புனிதநீர் நான்கு ரதவீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலுக்குள் கொண்டுவரப்பட்டது. பின்னர் பல ஆறுகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர்களுடன் கும்பங்களில் புனித நீர் வைக்கப்பட்டது. நேற்று இரவு முதல் கால யாக வேள்வி தொடங்கியது.

    விழாவின் 4-ம் நாளான இன்று (புதன்கிழமை) காலை 7.30 மணிக்கு பாவனாபிஷேகம், தொடர்ந்து 2-ம் யாகசாலை பூஜை, 10 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், சமய சொற்பொழிவு, மாலை 6.30 மணிக்கு மேல் 3-ம் கால யாகசாலை பூஜை, இரவு 7 மணிக்கு பரதநாட்டியம், நாட்டியாஞ்சலி ஆகியவை நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை, தொடர்ந்து பூர்ணகுதி, தீபாராதனை, காலை 6.30 மணிக்கு யாத்ராதானம், 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் எடுத்து வருதல், 7.35 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் மூலஸ்தானம் மற்றும் பரிவார விமான ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம், தீபாராதனை போன்றவை நடக்கிறது.

    தொடர்ந்து மூலஸ்தான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை, 10.30 மணிக்கு மூலஸ்தான மூர்த்திக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அன்னதானம், மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபோக மூகூர்த்தம், இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனம் உலா ஆகியவை நடக்கிறது.

    • மார்ச் 17-ந் தேதி கொடை விழா தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
    • வியாழக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    நாகர்கோவில் அருகே உள்ள சின்னணைந்தான்விளை பிச்சைகாலசாமி கோவிலில் கும்பாபிஷேகவிழா இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்கி 26-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு விக்னேஷ்வரபூஜை, 7 மணிக்கு நவக்கிரக கலச பூஜை, 9 மணிக்கு சங்குதுறை கடற்கரையில் இருந்து சிங்காரி மேளம் முழங்க புனிதநீர் எடுத்து வருதல், மாலை 6 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பமும் ஆகியவை நடக்கிறது.

    விழாவின் 2-ம் நாளான நாளை(புதன்கிழமை) காலை 8 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பம், மாலை 6 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பமும், இரவு 9 மணிக்கு எந்திர ஸ்தாபனம், இரத்தின நியாசம், சிலை பிரதிஷ்டை, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    3-ம் நாள் விழாவான நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மாபெரும் சிற்றுண்டி வழங்குதல் நிகழ்ச்சி, 8 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பமும், 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் விமான கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாரதனை ஆகியவை நடைபெறுகிறது.

    கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மூத்த வக்கீல் பாலகணேசன், வக்கீல்கள் பூர்ணிமா, ஆர்தர்பாரத், சங்கரசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ஊர் தலைவர்கள் மற்றும் பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள், பொதுமக்கள், குடும்பத்தார்கள் உள்பட ஏராளமானோர் திரளாக கலந்து கொள்கின்றனர். நண்பகல் 12 மணிக்கு மாபெரும் அன்னதானம், மாலை 6 மணிக்கு ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாம மாத்ரு சக்தி பூஜை, இரவு 9 மணிக்கு உதயகீதம் இன்னிசை கச்சேரி ஆகியவை நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்களும் மண்டல பூஜையை முன்னிட்டு தினமும் இரவு 7 மணிக்கு மேல் பஜனை, தீபாரதனை, சிறப்பு அன்னதானம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து வருகிற மார்ச் மாதம் 17-ந் தேதி கொடை விழா தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

    கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை பிச்சைகாலசாமி கோவில் நிர்வாகக்குழு தலைவர் அய்யப்பன், செயலாளர் பிரதீஷ், பொருளாளர் சந்திரகுமார், துணைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் மோகன், கணக்காளர் வேல்முருகன் மற்றும் குடும்பத்தினர் இணைந்து செய்து வருகின்றனர்.

    • வேள்விகால பூஜை மற்றும் கோவிலுக்குள் விநாயகர் வைத்தல் நடைபெற்றது.
    • கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் பெருமாநல்லூர் அருகே காளிபாளையம் கிராமத்தில் உள்ள புதுப்பாளையம் எஸ்.ஆர்.நகர் பகுதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை 9.15 மணிக்கு நடைெபற்றது.

    கும்பாபிஷேக விழாைவ முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, முதல்கால வேள்விகால பூஜை மற்றும் கோவிலுக்குள் விநாயகர் வைத்தல் நடைபெற்றது.

    இன்று காலை 7.20 மணி அளவில் இரண்டாம் கால வேள்வி, காலை 9.20 மணிக்கு கும்பாபிஷேகமும் அதைத்தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். 

      நாகர்கோவில்:

      பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று (22-ந் தேதி) காலை தொடங்கியது. காலை 4.30 மணிக்கு மங்கள இசை நடந்தது. இதைத் தொடர்ந்து 5 மணிக்கு கணபதி ஹோமம், பிரம்மசாரி பூஜை, பூர்ணாகுதி, புண்ணியாக பூஜை தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு நவகிரக பூஜை நவக்கிரக ஹோமம், தீபாராதனை நடந்தது.

      இதில் கோவில் கண் காணிப்பாளர் ஆனந்த், ஸ்ரீகாரியம் ஆறுமுக நைனார், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் பூதலிங்கம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை 7 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 8.30 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜை, தீபாராதனை நடக்கிறது.

      நாளை (23-ந்தேதி) காலை 7 மணிக்கு சுதர்சன ஹோமம், கோ பூஜை, மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு நடக்கிறது. 24-ந் தேதி காலை 7 மணிக்கு அஸ்வ பூஜை, கஜ பூஜை, 8 மணிக்கு தீர்த்த சங்கிரகரணம், மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு முதல் கால யாக வேள்வி ஆரம்பம் நடக்கிறது.

      25-ந்தேதி காலை 8 மணிக்கு 2-ம் யாகசாலை கிரிய பூஜை, 10 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், 6.30 மணிக்கு சமய சொற்பொழிவு, 3-ம் கால யாக சாலைகிரிய பூஜை, இரவு 7 மணிக்கு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடக்கிறது.

      26 -ந் தேதி காலை 5 மணிக்கு 4-ம் கால யாகசாலை கிரிய பூஜை யும், 5.30 மணிக்கு பிரம்ம சுத்தி, ஆலயசுத்தி, ரக்ஷ பந்தனம் பூர்ணாகுதி தீபாராதனை நடக்கிறது. 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடகம் எடுத்து வருதலும், 7.15 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் மூலஸ்தான மற்றும் பரிவார விமானங்களுக்கு ராஜ கோபுர மகா கும்பாபி ஷேகமும் இதைத்தொடர்ந்து தீபாராதனையும் நடக்கிறது.

      கும்பாபிஷேக விழாவில் அமைச்சர்கள் சேகர் பாபு, மனோதங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

      இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருகோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் அதிகாரிகள் செய்து வரு கிறார்கள்.

      • யாகசாலை பூஜைகள் நாளை தொடங்குகிறது.
      • கும்பாபிஷேகம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

      பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இங்கு பக்தர்கள் அனுதிக்காக இந்துஅறநிலையத்துறை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 51295 பக்தர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

      பழனி கோவில் அலுவலகத்தில் நேற்று குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது. அதில் 2000 பக்தர்கள் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்ய தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு உடனடியாக குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டன. குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் தகவலுடன் அடையாள அட்டையை காண்பித்து கோவில் அலுவலகத்தில் நாளைக்குள் கும்பாபிஷேக அனுமதி சீட்டை பெற்றுக்கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      கும்பாபிஷேகத்தை யொட்டி பழனி கார்த்திகை மண்டபத்தில் யாகசாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு 90 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. கார்த்திகை மண்டபத்தில் நாளை(23-ந்தேதி) யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. இதையொட்டி அடிவாரம் பாதவிநாயகர் கோவில் முதல் பரிவார தெய்வங்கள் என அனைத்திற்கும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய தீர்த்தகுடங்கள் அலங்கரிக்கப்பட உள்ளன.

      இவை மேளதாளங்களுடன் திருமுறை ஓதுதலோடு உலாவருகிறது. பின்னர் யாகசாலைக்கு செல்கிறது. அங்கு ஆதவன் வழிபாடு, மங்களஇசை, சூர்யகதிரிலிருந்து வேள்விக்கு நெருப்பு எடுத்தல் உள்பட பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதனைதொடர்ந்து முதல் கால யாகபூஜை தொடங்குகிறது. சிறப்பு பூஜை, விதை, தண்டு, இலை, காய்கனி, வாசனை திரவியங்கள், அறுசுவை சாதம், பால்,தயிர், சுண்டல், 12 விதமான மூலிகை குச்சிகளால் வேள்வி நடைபெறுகிறது.

      பாதயாத்திரை பக்தர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். மலைக்கோவிலில் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

      ×