search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
    • கொட்டும் மழையில் ஏராளமானோர் தரிசனம்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த வேலூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை உடனுறை ஸ்ரீ பரமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அரக்கோணம் ஒன்றியம் வேலூர் கிராமத்தில் சுமார் 1747 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ பரமேஸ்வரர் ஆலயம் 2-ம் நந்திவர்மன் என்ற அரசனால் கட்டப்பட்டது. இந்த ஆலயம் மிகவும் பழமையான ஆலயமாகும் இதனை கிராம பொதுமக்கள் சீர் செய்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    8-ந் தேதி விக்னேஸ்வர பூஜையும் மற்றும் கணபதி பூஜை உடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் இரண்டு நாள் காலை மாலை யாக பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை யாகசாலை பூஜை முடிவுற்றவுடன் அலங்கரிக்கப்பட்ட கலசங்களில் சேகரிக்கப்பட்ட புனித நீர் கோபுரத்தின் மீது கொண்டு செல்லப்பட்டு கலசத்தின் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை உடனுறை ஸ்ரீ பிரமேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    மதியம் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது.

    கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அருள் சித்தர் அன்பு செழியன் முன்னிலையில் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சாமந்தி பார்த்திபன், கவுன்சிலர் சுமதி முனுசாமி, ஆலய உறுப்பினர்கள் சரவணன், ரமேஷ் மோகன்வேல், மோகன், பாஸ்கரன், குமார், நாகப்ப ரெட்டி, ராஜ்குமார், பாண்டியன் நாட்டார், கோவிந்தசாமி, பாபு மற்றும் விழா குழுவினர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    மழை பெய்தாலும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கொடிமரத்துக்கு தங்கமுலாம் பூசிய செம்பு கவசம் அணிவிக்கப்பட உள்ளது.
    • கருவறை விமானம் புதுப்பிக்கும் பணியும், கருவறை சீரமைப்பு பணியும் நடக்க உள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூர் நல்லூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி(ஈஸ்வரன்) கோவில் கும்பாபிேஷக விழா பிப்ரவரி 1-ந்தேதி நடக்க இருப்பதால், பாலாலய பூஜைகள் நடந்தது.

    திருப்பூர் நல்லூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், 23 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. கடந்த சில மாதங்களாக கோவில் திருப்பணி நடந்து வருகிறது. விரைவில் கொடிமரத்துக்கு தங்கமுலாம் பூசிய செம்பு கவசம் அணிவிக்கப்பட உள்ளது.

    கோவிலின் 15 கலசங்களும் தங்கமுலாம் பூசி பொலிவுபடுத்தப்பட உள்ளது. மொத்தம் 35 உபதாரர்கள் மூலம், 1.33 கோடி ரூபாய் மதிப்பிலான திருப்பணி நடந்து வருகிறது. கோவில் கும்பாபிேஷக விழா பிப்ரவரி 1-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில் கருவறை விமானம் புதுப்பிக்கும் பணியும், கருவறை சீரமைப்பு பணியும் நடக்க உள்ளது. அதற்காக பாலாலய பூஜைகள் நடந்தன. முதல் கால யாக பூஜையும், இரண்டாம் கால வேள்வி பூஜைகளும் நடந்தன.

    ஸ்ரீவிஸ்வேஸ்வரர், விசாலாட்சியம்மன், விநாயகர், முருகர் சுவாமிகள், அத்திமரக்கட்டையில் செய்யப்பட்ட சிற்பங்களில், ஆவாஹணம் செய்யப்பட்டனர். பரிவார தெய்வங்கள், 29 கண்ணாடி பிரேம்களில் ஆவாஹணம் செய்யப்பட்டனர். இனி கும்பாபிேஷகம் வரை பாலாலய மூர்த்திகளுக்கு அன்றாட படி பூஜைகள் நடக்கும் என, சிவாச்சார்யார்கள் தெரிவித்தனர்.பாலாலய பூஜைகளில், எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், திருப்பணி கமிட்டி பொறுப்பாளர் நாச்சிமுத்து, செயல் அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • நம் முன்னோர்களால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த புராதான சின்னங்களுக்கு இணையான இது போன்ற திருக்கோயில்களை காப்பாற்ற வேண்டும்.
    • வெளிநாட்டிலே இருக்கின்ற 62 சிலைகள் கண்டறியப்பட்டு, அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர் பாபு இன்று மயிலாப்பூர், சித்திரக்குளம் ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு சென்று அங்குள்ள சன்னதிகள், பசுமடம், திருத்தேர், திருத்தேர் கொட்டகை மடப்பள்ளி ஆகியவற்றை ஆய்வு செய்து திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் இறை தரிசனம் முடித்து, சுற்றுப்புற சன்னதிகள், பசுமடம், திருத்தேர், திருத்தேர் கொட்டகை, மடப்பள்ளி ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டோம்.

    500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இக்கோயிலுக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்திருக்கின்றது.

    இக்கோயிலின் சித்திரக் குளம், ஏராளமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றன. இதை இந்து சமய அறநிலையத்துறை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு இந்த கோவிலுடைய திருப்பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துவது, திருக்கோவிலுக்கு வர வேண்டிய வருமானங்கள் தடையின்றி கொண்டு வந்து சேர்ப்பது, ஆக்கிரமிப்பில் இருக்கின்ற இடங்களை சட்டரீதியாக மீட்கின்ற நடவடிக்கைகளை முழு வேகத்துடன் மேற்கொள்வது, நிலுவையில் இருக்கும் வழக்குகளில் நீதிமன்றம் காட்டுகின்ற வழிகாட்டுதலுக்கு ஏற்ப நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தினுடைய ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு நம் முன்னோர்களால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த புராதான சின்னங்களுக்கு இணையான இது போன்ற திருக்கோயில்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆண்டு 100 கோடி ரூபாயை வழங்கினார்கள்.

    இந்து சமய அறநிலைத் துறை வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகையை அரசின் சார்பில் இதுவரையில் எந்த ஆட்சியும் வழங்கவில்லை. சுவாமி தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தருவது, ஆக்கிரமிப்பாளர்களிட மிருந்து சொத்துக்களை மீட்பது, திருக்கோவிலுக்கு வரவேண்டிய வருவாயை முறையாக கொண்டு வந்து சேர்ப்பது, ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டிய திருப்பணிகள், கும்பாபிஷேக பணிகளை விரைவுப்படுத்துதல் என்று பல்வேறு கோணங்களில் இந்த துறைக்கு நல்ல பல அறிவுரைகளை வழங்கி வரும், முதல்-அமைச்சரின் ஆட்சிக் காலம் இந்து சமய அறநிலையத்துறைக்கு பொற்காலம் என்றே கூறலாம்.

    நேற்றைய தினம் மதுரை அழகர்கோயில் இராக்காயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழகமெங்கும் இருக்கின்ற திருக்கோயில்களில் இதுவரையில் 394 திருக்கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்திருக்கின்றது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பல்வேறு நாடுகளில் இருந்த 10 சிலைகள் மீட்கப்பட்டு, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், வெளிநாட்டிலே இருக்கின்ற 62 சிலைகள் கண்டறியப்பட்டு, அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

    அதேபோல மீட்கப்பட்டுள்ள சிலைகளை அடையாளம் கண்டு அந்தந்த திருக்கோவிலுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அதற்குண்டான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கும்பாபிஷேக கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது.
    • கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடந்து வருகிறது.

    பூதப்பாண்டியில் பூதலிங்கசாமி-சிவகாமி அம்பாள் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த இந்து அறநிலையத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து தேவப்பிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி ஜூலை மாதமும், பாலாலயம் செப்டம்பர் மாதம் 13 மற்றும் 14-ந் தேதிகளில் நடந்தது.

    அதைத் தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு கோவிலை சுற்றி பார்த்து கோவில் பராமரிப்பு மற்றும் கும்பாபிஷேகம் நடத்த ரூ.1 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார். மேலும் ஜனவரி மாதம் 26-ந்தேதி கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    இந்தநிலையில் கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று காலை 7.30 மணி அளவில் கோவிலில் யாகசாலை பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து கும்பாபிஷேக கால் நாட்டு நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது.

    இதற்கான பூஜைகளை தந்திரிகள் கே.ஜி.எஸ்.மணி நம்பியார், சிவசுப்பிரமணியம் நம்பியார் ஆகியோர் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் ஆனந்த், ஸ்ரீகாரியம் ஆறுமுகம் நயினார், திருப்பணி மற்றும் கும்பாபிஷேக உபயதாரர்கள் நாகமணி, நாகராஜன் பக்தர் சங்கத்தை சேர்ந்த பாக்கியம் பிள்ளை, ராஜேந்திரன், செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இன்று முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது.
    • நாளை 2-ம் மற்றும் 3-ம் கால யாக சாலை பூஜைகளும் நடக்கிறது.

    சென்னை சூளைமேடு பஜனை கோவில் தெருவில் உள்ள ராதா சமேத வேணுகோபால் சாமி கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வருகிற 11-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    இதையொட்டி இன்று(வெள்ளிக்கிழமை) கோபூஜை, கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜையும், நாளை(சனிக்கிழமை)2-ம் மற்றும் 3-ம் கால யாக சாலை பூஜைகளும் நடக்கிறது. நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு 4-ம் கால யாக பூஜையும், அதைத்தொடர்ந்து 7.30 மணிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.

    • மேற்பனைக்காடு அய்யனார், பத்ரகாளியம்மன் கோவில்களில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது
    • 3 நாட்களாக நான்குகால யாகபூஜை நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடு ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

    அறந்தாங்கி தாலுகா மேற்பனைக்காடு கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ பூர்ணபுஷ்பகலா அய்யனார், ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் திருப்பணிகள் நிறைவு பெற்று அப்பகுதி கிராமத்தார்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக யாகசாலை அமைத்து கணபதி ஹோமத்துடன் விழாதொடங்கியது.அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக நான்குகால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. கடம்புறப்பாடானது

    கோயிலை வலம் வந்து பின்பு கோபுரக் கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து பிரபாகர சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக்காண திரண்டிருந்த அப்பகுதியைச்

    சுற்றியுள்ள கிராம பொதுமக்கள்,ஆன்மீக மெய்யன்பர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்ரீ அய்யனார்,ஸ்ரீ பத்ரகாளியம்மனின் அருள்பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.30க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த செம்பூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீ தீப்பாஞ்சம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இதையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு வாஸ்துசாந்தி, பிரவேசபலி, கோபுர கலசம் நிறுவுதல், சுவாமி சிலைகள் நிறுவுதல், முதல் கால வேள்வி பூஜை உள்ளிட்டவை நடந்தது.

    இதனைத் தொடர்ந்து கோவில் கோபுர கலசங்களின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    பின்னர் ஸ்ரீசெல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீதீப்பாஞ்சம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த கும்பாபிஷேக விழாவில் வந்தவாசி சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் தகவல்
    • ன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தங்கத்தேர் செய்யும் திட்டம் கைவிடப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் 100 முதல் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த 115 கோவில்களில் ரூ.100 கோடி செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளது என்று குமரி மாவட்ட திருக்கோவில் களின் இணை ஆணையர் ஞானசேகர் கூறினார்.

    இது குறித்து குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் கன்னியாகுமரியில் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் இயங்கும் குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் மொத்தம் 490 கோவில்கள் உள்ளன. இதில் செங்கோட்டை தாலுகாவில் உள்ள கோவில்களும் அடங்கும். இதில் சில குறிப்பிட்ட கோவில்களில் மட்டும் இதுவரை கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.

    இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள 100 முதல் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களை தேர்வு செய்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் குமரி மாவட்டத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுசீந்திரம் தாணு மாலயசுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவில், கன்னியாகுமரி குக நாதீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    அந்த அடிப்படையில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ரூ.2½ கோடி செலவிலும், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ரூ.1 கோடி செலவிலும், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் ரூ.1 கோடி செலவிலும், பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவிலில் ரூ.2½ கோடி செலவிலும் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளது.

    மேலும் 11 சிவாலயங்களில் ரூ.1 கோடியே 70 லட்சம் செலவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளது. மேலும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 100 கோவில்களில் ரூ.100 கோடி செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளது. இந்த கோவில்களில் அடுத்த ஆண்டு கும்பாபிஷேக திருப்பணிகள் முடிக்கப் பட்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தங்கத் தேர் செய்வதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை. இந்த கோவிலின் வெளிப்பிரகாரத்தில் போதுமான இடவசதி இல்லாததால் தங்கத்தேர் ஓடுவதற்கான சாத்திய கூறுகள் இல்லை.

    எனவே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தங்கத்தேர் செய்யும் திட்டம் கைவிடப்பட்டுஉள்ளது. அதேபோலகன்னியாகுமரி பகவதிஅம்மன்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டுவது சம்பந்தமான எந்த திட்டமும் தற்போது இல்லை. ஏற்கனவே கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டுவது குறித்து மண் ஆய்வுகள் செய்யப்பட்டு விட்டது. மேற்கொண்டு அது சம்பந்த மாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இவ்வாறு குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் கூறினார்.

    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, அடுத்த வயலூர், கிராமத்தில் ஐம்பொன் ஐயப்ப சிலை நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. வயலூர் கிராமத்தில் உள்ள திரௌ பதி அம்மன் கோவில் வளாகத்தில் யாக குண்டம் அமைத்து நவகிரக, மற்றும் ஐயப்ப, விநாயகர், உள்பட 12 புனித நீர் கலசங்களை வைத்து. பல்வேறு மூலிகைகள் மூலம் யாகம் வளர்க்க ப்பட்டு, புனித நீர் கலசங்களை கோவிலை சுற்றி வந்து கோவில் வளாகத்தில் ஐம்பொன் ஐயப்பன் சிலை மீது புனித நீரை ஊற்றினார்கள். பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர்.

    இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு 18 படி கன்னிசாமி பூஜை மற்றும் தெய்வீக நாடகம் நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை வயலூர் கிராம ஐய்யப்ப சாமிகள், மற்றும் ஊர் பொதுமக்கள், செய்திருந்தனர்.

    • கும்பாபிஷேகத்தை திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள் தலைமையில் திருப்பணிக்குழுவினர் நடத்தி வைக்க உள்ளனர்.
    • இன்னல் கலைந்து இருவினை நீக்கும் ஈசன் மகானருக்கு 2-ம் கால வேள்வி, நிறைவேள்வி பேரொளி வழிபாடு நடைபெற்றது.

     திருப்பூர் :

    திருப்பூர் விநாயகபுரம், ராயபுரம் (விரிவு) பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவரசித்தி விநாயகப்பெருமான் கோவிலில் நாளை (2-ந்தேதி) மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது.

    இதையொட்டி நேற்று விநாயகர் வழிபாடு, திருவருள் அனுமதி பெறுதல், நிலத்தேவர் வழிபாடு, திசைக்காவலர் வழிபாடு, கணபதி வேள்வி, நிலத்தவர் வேள்வி, திருமகள் வழிபாடு, நிறைவேள்வி, பேரொளி வழிபாடு நடைபெற்றது.மாலை கணபதி வழிபாடு, திருமண் எடுத்து முளைப்பாலிகை இட்டு வழிபாடு, காப்பணத்தல், திருவருட் சக்தியை திருக்குடத்தில் ஏற்றல், வேள்விச்சாலையில் அமர்த்தல், முதற்கால வேள்வி, கணபதிக்கு முதற்கால நிறைவேள்வி, பேரொளி வழிபாடு நடைபெற்றது.

    இன்று 1-ந்தேதி காலை 9மணிக்கு விநாயகர் வழிபாடு, ஆச்சார்யர் ஆன்மார்ந்த வழிபாடு, இன்னல் கலைந்து இருவினை நீக்கும் ஈசன் மகானருக்கு 2-ம் கால வேள்வி, நிறைவேள்வி பேரொளி வழிபாடு நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு கோபுர கலசம் வைக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மூவா வினைகளை களைந்து முத்திக்கு வித்தாகி முக்கண் முதல்வர் மகனுக்கு 3-ம் காலவேள்வி, நிறைவேள்வி பேரொளி வழிபாடு நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு எண்வகை மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை 2-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு நான்மறைபோற்றும் நாயகன், முப்பழம் நுகரும் மூஷிகவாகனம், வரமருளும் வரசித்தி விநாயகபெருமானுக்கு 4-ம் கால வேள்வி நடக்கிறது. காலை 6 மணிக்கு திருவருட்சக்திகளை வேள்விச்சாலையிலிருந்து மூலத்திருமேனிக்கு அளித்தல், திரவிய ஆகுதி, முழுநிைற வேள்வி நடக்கிறது. 6-30மணிக்கு கோபுர கும்பாபிஷேகம் நன்னீராட்டு , 6-40மணிக்கு பரிவார தீர்த்தங்கள் நன்னீராட்டு நடக்கிறது.

    7 மணிக்கு விருச்சிக லக்கனத்தில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள் தலைமையில் திருப்பணிக்குழுவினர் நடத்தி வைக்க உள்ளனர். காலை 7.30 மணிக்கு பதின் மங்களகாட்சி பெருஞ் திருமஞ்சனம், அலங்காரபூஜை, பேரொளி வழிபாடு, திருக்காப்பு காத்தல், அருள்பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடக்கிறது. பின்னர் மங்கள இசையுடன் விழா நிறைவு பெறுகிறது.    

    • விழாவையொட்டி நேற்றுமுன்தினம் மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
    • ஆதிமுத்து மாரியம்மன் மற்றும் கோபுலகலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் திருமுருகன்பூண்டியில் 45 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள கோவில் நிர்வாக கமிட்டி முடிவு செய்தது. இதன்படி கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    இதையடுத்து நவக்கிரக ஹோமம், தனபூஜை, கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைக்கு பின்னர் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அங்குள்ள கருப்பராய சுவாமி கோவிலில் பூஜை நடைபெற்று, ஆதிமுத்து மாரியம்மன் கோவிலில் ஊர்வலம் நிறைவடைந்தது.

    இதில் காளி, அம்மன் வேடமணிந்து வந்து நடனமாடியது பக்தர்களை கவர்வதாக அமைந்திருந்தது. முளைப்பாரி ஊர்வலத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்ததிரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று (செவ்வாய்கிழமை) 108 மூலிகை ஹோமங்கள், பூர்ணாகுதி, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா இன்று காலை 8 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி ஆதிமுத்து மாரியம்மன் மற்றும் கோபுலகலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தலைமை பூஜாரி டி.எம்.குமாரவேல் மற்றும் குடும்பத்தினர் உள்பட ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.   

    • 3 கால யாக பூஜைகள் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, அடுத்த புதுப்பட்டி, கிராமத்தில் கூழ் மாரியம்மன், விநாயகர், முருகர், சிவன், நவகிரக, கோவில் புதிதாக கட்டப்பட்டு பஞ்ச வர்ணம் பூசி இதன்மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

    கோவிலின் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு 108 கலசம் வைத்து ஆனந்த் ஷர்மா, அய்யர் குழுவினர் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து, 3 கால யாக பூஜைகள் செய்தனர்.

    பின்னர் புனித நீர் கலசத்தை மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரத்தின் மீது உள்ள கலசத்தில் நீரை ஊற்றினார்கள். பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். பின்னர் சூரிய பகவானுக்கு கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள், செய்து இருந்தனர்.

    ×