search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • விழாவுக்கு வருவோரை வரவேற்று இஸ்லாமிய நண்பர்கள் என்ற பெயரில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
    • முன்னுதாரணமாக திகழ்கிறது, அவிநாசி அருகேயுள்ள சேவூர் கிராமம்.

    அவினாசி : 

    மதங்களை கடந்த மனித நேயத்தால் மட்டுமே, அமைதியான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதற்கு உதாரணமாக, பல இடங்களில் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவம் உட்பட பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த மக்கள், நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

    இதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறது, அவிநாசி அருகேயுள்ள சேவூர் கிராமம். இந்து மற்றும் இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் இப்பகுதியில், இரு சமுதாயத்தினரும், பல தலைமுறைகளாக உறவினர் போன்று வாழ்ந்து வருகின்றனர். தலைமுறை பல கடந்தும், இருதரப்பினரும் பரஸ்பரம், தங்களை மாமா, மாப்பிள்ளை என உறவுமுறை சொல்லியே அழைக்கின்றனர்.

    அப்பகுதியிலுள்ள பத்ரகாளியம்மன், சித்தர் முத்துக்குமாரசுவாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 2-ந்தேதி தொடங்குகிறது. விழாவுக்கு வருவோரை வரவேற்று இஸ்லாமிய நண்பர்கள் என்ற பெயரில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

    • சுற்றுலா நகரமான பத்மநாபபுரம் ஒரு ஆன்மிக நகரமாகவும் விளங்குகிறது.
    • இந்த கோவிலில் 1577-ம் ஆண்டு கோவிலில் கும்பாபிஷேகம் நடந்ததாக தெரிகிறது.

    குமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் கல்குளம் நீலகண்டசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்று சிறப்புமிக்க 12 சிவாலயங்களில் 7-வது தலமாக கருதப்படுகிறது. சுற்றுலா நகரமான பத்மநாபபுரம் ஒரு ஆன்மிக நகரமாகவும் விளங்குகிறது. பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஆட்சி புரிந்த மன்னர்கள் இறைவனை தரிசிப்பதற்காக அரண்மனையை சுற்றிலும் பல கோவில்களை கட்டியுள்ளனர். அதில் ஒன்று தான் நீலகண்டசாமி கோவில்.

    வானுயர்ந்த ராஜகோபுரம், அழகான தெப்பக்குளம், சிற்பங்கள் நிறைந்த மகாமண்டபம் என கலை அம்சத்துடன் காணப்படும் இந்த கோவில் வேணாட்டு மன்னரான உதய மார்த்தாண்டன் காலத்தில் கட்டப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஆனால் கோவில் எப்போது கட்டப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை.

    கும்பாபிஷேகம் எப்போது?

    இந்த கோவிலில் 1577-ம் ஆண்டு கோவிலில் கும்பாபிஷேகம் நடந்ததாக தெரிகிறது. மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் ஆனந்தவல்லி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்ட காலத்தில் இருந்து கணக்கிட்டால் சுமார் 281 ஆண்டுகள் ஆகிறது. கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் இந்த கோவிலில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கவில்லை. எனவே இங்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பக்தர்கள் வேதனை

    இதுகுறித்து பக்தர்கள் சேவா சங்க துணைத்தலைவர் ரவீந்திரன் நாயர் கூறியதாவது:-

    நீலகண்டசாமி கோவிலில் எனக்கு தெரிந்தவரை கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. இது பக்தர்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. 12 வருடத்திற்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தவில்லை என்றால் கோவில் அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் கஷ்டம் ஏற்படும் என்பதால் பக்தர்கள் சங்கம் சார்பில் அரசாங்கத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் அறநிலையத்துறை மூலம் கடந்த 2008-ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. அதுவும் பக்தர்கள் முயற்சியால் நன்கொடை திரட்டப்பட்டு பணிகள் நடந்தன.

    ஆனால் கோவில் கொடிமரத்தை மாற்றி புதிய கொடிமரம் அமைக்க அறநிலையத்துறை காலம் கடத்தி வந்ததால் அப்போதும் கும்பாபிஷேகம் நடத்தவில்லை.

    இந்தநிலையில் தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுத்தது. இதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்வதற்காக அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். பின்னர் துறை அமைச்சர் சேகர்பாபுவும் ஆய்வு செய்த பிறகு விரைவில் திருப்பணிகள் தொடங்கி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றார்.

    மேலும், கோவிலில் பல பகுதிகள் சேதமாகி காணப்படுகிறது. கொடிமரம் வடக்கு பக்கமாக சாய்ந்துள்ளது. இதனை மாற்றி புதிய கொடிமரம் அமைக்க வேண்டும். தில்லை நடராஜர் சன்னதியில் சாமி சிலையை காணவில்லை. இதனால் கோவில் பூட்டியே காணப்படுகிறது. இப்படி ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. எனவே இதனை நிவர்த்தி செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதே அனைத்து பக்தர்களின் விருப்பமாக உள்ளது. இனியும் காலதாமதம் செய்தால் கோவில் முன்பு உண்ணாவிரதம் இருப்பேன்.

    குளத்தை தூர்வார வேண்டும்

    பக்தர்கள் சேவா சங்க செயலாளர் பி.கோபகுமார் கூறியதாவது:-

    கோவிலில் தெப்பக்குளம் நீண்ட காலம் தூர்வாரப்படாமல் உள்ளது. குளத்தின் கரைகள் உடைந்தும், கழிவுநீர் கலந்தும் மிகவும் பரிதாபமாக காட்சியளிக்கிறது. இதுபோல் குளத்தின் கரையில் கோவிலின் முன்புறமுள்ள நாகர் பீடம் சேதமடைந்துள்ளது. இதனால் பக்தர்கள் பீடத்தை வலம் வர முடியாத நிலை காணப்படுகிறது. மேலும் திருவிழாவின் போது சாமி பவனியில் கொண்டு செல்லப்படும் வாகனங்கள் உடைந்து காணப்படுகிறது.

    மன்னர்கள் ஆட்சியின் போது கட்டப்பட்ட கோவில்களில் உள்ள சுவாமி விக்கிரகங்களுக்கு திருவிழாவின் போது அணிவிக்கக்கூடிய தங்க ஆபரணங்களை பாதுகாக்கும் கருவூலம் இந்த கோவிலின் உள்ளே காணப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களோடு அமைக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பிற்கு இங்கு பணியாளர்கள் இல்லை. மேலும் கோவிலில் உள்ள சாமிகளுக்கு அத்தாள பூஜைக்கு பிறகு நடத்தப்படும் பள்ளியறை பூஜை நடப்பதில்லை. இப்படி ஆகம சடங்குகள் இல்லாமலும், வளர்ச்சி பணிகள் எதுவும் செய்யாமலும் காணப்படும் இந்த கோவிலில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து திருப்பணிகள் மேற்கொண்டு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அடுத்தமாதம் திருப்பணிகள் தொடங்கும்

    குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர் பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவில் திருப்பணிகள் குறித்து கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களில் ஒன்றான பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த கோவிலில் ரூ.2.42 கோடி செலவில் கும்பாபிஷேகம் நடத்த திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு பெற்றதும் டெண்டர் விட்டு திருப்பணிகள் தொடங்கப்படும். ரூ.2.42 கோடியில் நடைபெற உள்ள திருப்பணிகளில் நவீனடைல்ஸ்களை மாற்றி கருங்கல் தளம் அமைத்தல், மண்டபம் தட்டோடு பதித்து ஒழுக்கு மாற்றும் வேலை செய்தல், கோவில் மண்டபம் புகைபோக்கி பழுது பார்த்தல், வடக்கு வாசல் மண்டபம் பழுதுபார்த்து பராமரிப்பு வேலை செய்தல், மடப்பள்ளி பழுதுபார்த்தல் மற்றும் கதவு ஜன்னல்கள் பழுதுபார்த்தல், கழிவுநீர் ஓடை சரி செய்தல், கோபுர திருப்பணி மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். பணிகள் முடிந்ததும் அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கலைநயத்துடன் சிற்பங்கள்

    இந்த கோவிலின் கிழக்கு பிரகாரத்தை சித்திரசபை என கல்வெட்டு குறிப்பிடும். உண்மையில் இது சிற்பக்கூடமே. இங்கே கலைநுட்பமுடைய சிற்பங்கள் உள்ளன. இம் மண்டப வடக்குப்பகுதி தூண்களில் கர்ணன், கங்காளநாதர், வேணுகோபாலன், அர்ஜூனன் தபசு சிற்பங்களாக காட்சி அளிக்கிறது. ஆளுயர கருங்கல் சிற்பங்கள், கர்ணனின் 2 கைகளில் சர்பமும், வில்லும் உள்ளன. கங்காளநாதர் அருகே சட்டி ஏந்திய குள்ளப்பூதம் உள்ளது. கங்காளரின் வலது கை மானுக்கு புல்கொடுப்பது போல் காட்டப்பட்டுள்ளது. மான் துள்ளி நிற்கும் வகையில் உள்ளது.

    வேணுகோபாலன் 4 கைகள் உடையவர். இரு முன் கைகள் புல்லாங்குழலை பிடித்துள்ளன. இந்த இசைக்கருவி வேணுகோபாலனின் உதட்டின் கீழ் உள்ளவாறு காட்சி அளிக்கிறது. திருமலை நாயக்கர் சிற்பத்தின் அருகே உள்ள விளக்கேந்திய பாவை பலவகை ஆபரணங்களை அணிந்திருக்கிறாள். இவள் தலைமுடியை பின்னிப் போட்டிருப்பது நுட்பமாக காட்டப்பட்டுள்ளது.

    இந்த மண்டப கிழக்கு பக்கத் தூணில் தலையிலும், கையிலும் பலாப்பழத்தை சுமந்து கொண்டு பெண்ணொருத்தி நிற்கும் காட்சியும் வேறு சிற்பக் காட்சிகளும் உள்ளன. அம்மன் கோவிலின் முன்பகுதி மண்டபத்தில் ஒப்பனை பெண், வில்லுடன் ராமர், இளவரசியை கவர்ந்து செல்லும் குறவர் என பல சிற்பங்கள். இங்குள்ள முன் மண்டபத்தூணில் மானை சுமந்து செல்லும் வேடனின் சிற்பம், சிவன் என சில சிற்பங்கள் கலைநயத்துடன் கண்ணை கவரும் வகையில் உள்ளன.

    பத்மநாபபுரம் கோவில் மற்றும் ஊரில் 15 கல்வெட்டுகள் உள்ளன. இவை தமிழ் மற்றும் வட்டெழுத்து வடிவில் அமைந்தவை. இக்கோவிலில் 5 கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றின் வழி கோவில் கட்டுமானத்தை ஓரளவு கணிக்க முடிகிறது.

    வீர கேரள வர்மன் என்னும் வேணாட்டு மன்னனின் கி.பி.1237-ம் ஆண்டு கல்வெட்டு இக்கோவிலுக்கு இரணிய சிங்கநல்லூரில் நிலம் கொடுத்தது தெரிகிறது.

    • தமிழக கோவில்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும்.
    • காசித் தமிழ்ச் சங்கம நிகழ்விற்கு உதவ தமிழக அரசு தயாராக உள்ளது.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற சீராய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அந்த துறையின் அமைச்சர் சேகர்பாபு, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    திமுக பொறுப்பேற்ற பிறகு, ரூ.3200 கோடி மதிப்பிலான பணிகள் 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைத்துறை வரலாற்றில், இவ்வளவு பணிகள் மேற்கொண்டது முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் தான். மேலும் 300க்கும் மேற்பட்ட திருக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது.

    தமிழ்நாட்டில் இருந்து வரக்கூடிய பக்தர்களுக்கு உதவி செய்யும் வகையில், இந்து சமய அறநிலைத்துறை சார்பில் சபரிமலையில் 24 மணி நேர தகவல் மையம் அமைத்து, அரசு அதிகாரிகளை நியமிப்பது குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.

    திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு 30 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 1000 ஆண்டு கால பழமை வாய்ந்த கோயில்களுக்காக நிதி ஒதுக்கி, அந்த கோயில்களை புதுப்பிக்க இந்த ஆண்டு டெண்டர் விடுவது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இதுவரை 87,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மீதமுள்ள 13,000 மரக்கன்றுகள் விரைவில் நடப்படும். அதிகாரிகள் உறங்குவது ஐந்து மணி நேரம் மட்டும் தான். மீதமுள்ள 19 மணி நேரத்தில் எப்போதும் அழைத்தாலும் அவர்களை தொடர்பு கொள்ளலாம். அதிகாரிகளுக்கு வயர்லெஸ் மைக் கொடுக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

    இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மீட்கப்பட்டுள்ள நகைகள், பொருட்கள் அனைத்திற்கும் முதலாம் பாகம் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை, இன்று தபாலிலோ அல்லது துறை சார்ந்த அதிகாரிகள் மூலமோ அவரது இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

    மத்திய அரசு எந்த நிகழ்வு நடத்தினாலும், அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தால் அதற்கான முழு பணிகளையும் நாங்கள் சிறப்பாக செய்து கொடுப்போம். இந்து சமய அறநிலையத் துறைக்கு, காசித் தமிழ்ச் சங்கம நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு வரவில்லை. வந்தால் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம்.

    திருக்கோவிலில் அனைவரும் சமம். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை மாற்றப்பட வேண்டும். விஐபி தரிசனம் இந்த ஆட்சியில் உருவானது அல்ல. தமிழகத்தில் உள்ள கோவில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும்.

    பாஜக ஒரு சைத்தான்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படிப்பட்ட பேய்களையும் விரட்டக் கூடிய சக்தி படைத்தவர். அதனால் பாஜக எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழகத்தில் நிச்சயமாக கால் ஊன்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவன் கோயிலை கிராம மக்கள் ஒன்றிணைந்து புனரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • திருப்பணிகள் முடிவுற்று, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த புத்தூர் கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பல ஆண்டுகளாக புணரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான இந்த சிவன் கோயிலை கிராம மக்கள் ஒன்றிணைந்து புனரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த கோயில் திருப்பணிகள் முடிவுற்று, நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்று காலை 6 மணிக்கு கார்த்திகை, ரோகிணி, சந்திரனுக்கு சிறப்பு பூஜை செய்து, முளைப்பாரிகள் எடுத்து வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாமிகளுக்கு காப்பு அணிவிக்கப்பட்டு திருக்குடங்கள் புறப்பாடு நடைபெற்றது.

    இதையடுத்து கோவில் கோபுரத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை செய்து தீர்த்தங்கள் ஊற்றப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பொதுமக்கள் மீது சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் தெளிக்கப்பட்டது. மேலும் இந்த கோவில் கும்பாபிஷேக விழாவில் தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி, திருப்புகழ் உள்ளிட்ட அனைத்து மந்திரங்களும் தமிழில் ஓதப்பட்டு, தமிழ் ஆகம விதிப்படி நடைபெற்றது. இதனை அடுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மிக பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தில் நரசிம்மரை வழிபட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினால் கிரக தோஷங்கள், திருமண த்தடை நீங்கி, திருமணம் நடைபெறுவது நிச்சயம் என புராணவரலாறுகள் கூறுகின்றன.
    • பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோயிலின் திருப்பணிகள் உபயதாரர்களால்நடை பெற்று முடிந்துமகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் பஞ்ச (ஜந்து) நரசிம்மர்கோயில்கள் அமைந்துள்ளனஇந்த கோயில்களில் இரண்டா வது ஸ்தலமாக விளங்கு வது மங்கைமடம் வீரநரசிம்மர்கோயில் ஆகும்.முன்னொரு காலத்தில் திருமங்கை ஆழ்வார் குமுதவல்லி நாச்சியாரை மணம்புரிய 1008 வைஷ்ணவ அடியார்களுக்கு ஒரு வருடகாலத்திற்கு அன்ன தானம் வழங்கியதாகவும், மேலும் திருமங்கைஆழ்வார் வீரநரசிம்மரை வணங்கியும், ஆராதித்து பல பாடல்கள் பாடியுள்ளார்.

    மிக பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தில் நரசிம்மரை வழிபட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினால் கிரக தோஷங்கள், திருமண த்தடை நீங்கி, திருமணம் நடைபெறுவது நிச்சயம் என புராணவரலாறுகள் கூறுகின்றன.

    பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோயிலின் திருப்பணிகள் உபயதாரர்களால்நடை பெற்று முடிந்துமகா கும்பாபிஷேகம் நடைபெ ற்றது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை காலை யாக சாலை பூஜைகள் தொடங்கின.

    தொடர்ந்து விழா அன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து புனித நீர் அடங்கிய கடன்கள் மேல தாளங்களுடன் புறப்பட்டு கோவிலை வந்து மூல விமான கழகத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் பல்லாயிர க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி முருகன், கோயில் பூஜகர் பாலாஜி பட்டாச்சாரியார், ஸ்தலத்தார் நாங்கூர் நாராயண அய்யங்கார் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.

    • தமிழகத்தில் 3-வது பெரிய தேரான அவினாசி கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும்.
    • 14 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கோவில் கோபுரங்கள் மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும் முதலையுண்ட பாலகனை சுந்தரர் பதிகம்பாடி உயிருடன் மீட்டெடுத்த வரலாற்று சிறப்புமிக்கதாகவும் பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவார் கோவில் உள்ளது. அவினாசியப்பருக்கு ஏழுநிலை கோபுரமும், கருணாம்பிகை அம்மனுக்கு ஐந்து நிலை கோபுரமும் கலைநயத்துடன் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3-வது பெரிய தேரான அவினாசி கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். இக்கோவிலுக்குசாமிதரிசனம் செய்வதற்காக தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்தும், கர்நாடகா கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். முகூர்த்த நாட்களில் இங்கு ஏராளமான திருமணங்கள் நடக்கிறது.

    இவ்வாறு பல சிறப்பு பெற்ற இக்கோவிலில். கடந்த 2008ம் ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கோவில் கோபுரங்கள் மங்கி பொலிவிழந்து காணப்படுகிறது. ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் பராமரிப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

    வரலாற்று சிறப்புமிக்க அவினாசிலிங்கேசுவரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்து அறநிலையத்துறையினருக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்த நிலையில் கடந்த ஜூலை மாதம் கோவில் நிர்வாகத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தி கும்பாபிஷேக ஏற்பாடுகள் விரைந்து செய்வதென முடிவு செய்தனர். ஆனால் பல மாதங்களாகியும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான எந்த வேலையும் நடைபெறாதது வருத்தமளிக்கிறது என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

    இதேபோல் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆகாசராயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேரத்திகடன் செலுத்துவதற்காக ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அவினாசி அருகே உள்ள ராயம்பாளையம் மற்றும் கருணை பாளையம் ஆகிய கிராமங்களில் இருந்து பக்தர்கள் அழகிய மண்குதிரைகளை சுமந்துவந்து இக்கோவிலில் வைத்து வழிபடுவார்கள். மேலும் ஏராளமானோர் தங்களது குழந்தைகளுக்கு இங்கு முடி எடுத்து காதுகுத்தி, கிடாய் வெட்டி விஷேசம் செய்வது ஆண்டாண்டுகாலமாய் நடந்துவருகிறது. பழமை வாய்ந்த இக்கோவில் பல பகுதிகளில் பழுதடைந்தும்சுற்றுச்சுவர் விரிசல் ஏற்பட்டு சாய்ந்த நிலையில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் இக்கோவில் திருப்பணிகள் செய்து இதற்கும் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதுகுறித்து கோவில் நிர்வாக தரப்பில் கூறுகையில், கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அரசுக்கு கருத்துரு அனுப்பிஅனுமதி கேட்கப்பட்டு அதற்கு அரசிடம் இருந்து அனுமதியும் கிடைத்துள்ளது. இருப்பினும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பராமரிப்பு பணிகள் மற்றும் கும்பாபிஷேக பணிகளுக்கு செலவினம் அதிகம் தேவைப்படுவதால் உபயதாரர்களுக்காக எதிர்பார்ப்பில் உள்ளது. அதற்கு உண்டான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடியவிரைவில் கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு அனைத்து பணிகளும் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

    • முகூர்த்த நாட்களில் இங்கு ஏராளமான திருமணங்கள் நடக்கிறது.
    • இந்த கோவிலில் 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அவினாசியில் உள்ள பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்ற தலமாகவும், முதலையுண்ட பாலகனை சுந்தரர் பதிகம்பாடி உயிருடன் மீட்டெடுத்த வரலாற்று சிறப்புமிக்க தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலில் அவினாசியப்பருக்கு ஏழுநிலை ராஜகோபுரமும், கருணாம்பிகை அம்மனுக்கு ஐந்து நிலை கோபுரமும் கலைநயத்துடன் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 3-வது பெரிய தேரான அவினாசி லிங்கேசுவரர் கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள். முகூர்த்த நாட்களில் இங்கு ஏராளமான திருமணங்கள் நடக்கிறது.

    இத்தகைய சிறப்பு பெற்ற கோவிலில் 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 14 ஆண்டுகளுக்கு மேலானதால் கோவில் கோபுரங்கள் பொலிவிழந்து காணப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் பராமரிப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

    எனவே கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறையினருக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த ஜூலை மாதம் கோவில் நிர்வாகத்தினர் ஆலோசனை கூட்டம் நடத்தி கும்பாபிஷேக ஏற்பாடுகள் விரைந்து செய்வதென முடிவு செய்தனர். ஆனால் பல மாதங்களாகியும் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடைபெறாதது வருத்தமளிக்கிறது என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

    இதுபோல் அவினாசி-மங்கலம் ரோட்டில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆகாசராயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் ராயம்பாளையம் மற்றும் கருணைபாளையம் கிராமங்களில் இருந்து தாரைதப்பட்டை முழங்க பக்தர்கள் அழகிய மண்குதிரைகளுடன்வந்து கோவிலில் வைத்து வழிபடுவார்கள். மேலும் ஏராளமானோர் தங்களது குழந்தைகளுக்கு இங்கு முடி எடுத்து காதுகுத்தி கிடாய் வெட்டி விசேஷம் செய்வதும் ஆண்டாண்டாக நடந்துவருகிறது.

    இக்கோவில் பல பகுதிகளில் பழுதடைந்தும் சுற்றுச்சுவர் விரிசல் ஏற்பட்டு, சாய்ந்த நிலையிலும் உள்ளது. இந்தகோவில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் இக்கோவில் திருப்பணிகள் செய்து இதற்கும் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதுகுறித்து கோவில் நிர்வாக தரப்பில் கூறுகையில் கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக அரசுக்கு கருத்துரு அனுப்பி அனுமதி கேட்கப்பட்டு அதற்கு அரசிடம் இருந்து அனுமதியும் கிடைத்துள்ளது. இருப்பினும் அவினாசிலிங்கேசுவரர் கோவில் பராமரிப்பு பணிகள் மற்றும் கும்பாபிஷேக பணிகளுக்கு செலவினம் அதிகம் தேவைப்படுவதால் உபயதாரர்களுக்காக எதிர்பார்ப்பில் உள்ளது. விரைவில் கோவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு அனைத்து பணிகளும் செய்யப்பட்டு வருகிறது என்றனர்.

    • மகா தீபாராதனை காட்டப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பொறையாறில் பூரண புஷ்கலை திருமுடி அய்யனார் மகாசாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணி நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து குடமுழுக்கு நேற்று காலை நடை பெற்றது.

    முன்னதாக கோவில் அருகே பிரமாண்டமாக யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை 7 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் கூற மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்தது.

    பின்னர் விநாயகர், பூரண புஷ்கலையம்மன் அய்யனார், பிடாரி அம்மன், ஆகிய விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    குடமுழுக்கு விழாவில் பொறையாறு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஆர்.என்.ரூபேஷ்நாடார், டி.ஜி.ஆர். ஜெயக்குமார் நாடார், கோவில் நிர்வாகி ஜி.வெள்ளையன், விஜயாலயன்ஜெயக்குமார் நாடார் மற்றும் விழாக்குழுவினர், கிராம மக்கள் செய்து இருந்தனர்.

    • காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
    • கொட்டும் மழையிலும் பக்தர்கள் தரிசனம்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள வடக்கு பாத்தம்பட் டியில் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி விழாவையொட்டி கடந்த சில நாட்களாக கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெ்றுவந்தன. தொடர்ந்து நேற்று காலை மேள தாளங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக்கான கொட்டும் மழையென பார்க்காமல் திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அம்மன் மற்றும் ஸ்ரீ சித்திவிநாயகர் அருள்பெற்று சென்றனர்.

    அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 30க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
    • கொட்டும் மழையிலும் பக்தர்கள் தரிசனம்

    புதுக்கோட்டை:

    அறந்தாங்கி தாலுகா எருக்கலக்கோட்டை கிராமத்தில் அமைந்து அருள்பாலித்துவரும் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் திருப்பணிகள் நிறைவு பெற்று அப்பகுதி கிராமத்தார்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதற்காக யாகசாலை அமைத்து கடந்த 8-ந் தேதி முதல் கணபதி ஹோமத்துடன் விழாதொடங்கியது.அதனைத் தொடர்ந்து 3 நாட்களாக நான்குகால யாகபூஜை நடைபெற்றது.விழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. கடம்புறப்பாடானது

    கோயிலை வலம் வந்து பின்பு கோபுரக் கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து பாலாஜி ஐயர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 30க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • நாளை காலை 7 மணி அளவில் நான்காம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.
    • நாளை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் குடமுழுக்கு நடக்கிறது.

    பொறையாறில் பூரண புஷ்கலை சமேத திருமுடி அய்யனார் மகா சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு பாலாலையம் செய்து திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து குடமுழுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை நடக்கிறது.

    முன்னதாக கோவில் அருகே யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு கடந்த 11-ந் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கால யாக சாலை பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து மண்டப பூஜை நடந்தது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி அளவில் நான்காம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் குடமுழுக்கு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஜி.வெள்ளையன் நாடார், பரம்பரை அறங்காவலர் ரூபேஷ் நாடார் மற்றும் விழா குழுவினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    • ஈரோட்டில் கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவில் உள்ளது.
    • இந்த கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    ஈரோடு கோட்டை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நிறைவுற்று 12 ஆண்டுகள் ஆகி விட்டதால், கடந்த 2019-ம் ஆண்டு கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திருப்பணிகள் தொடங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகளை தொடங்க உத்தரவிட்டனர்.

    அதன்படி கும்பாபிஷேகம் நடந்த நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு இறை அனுமதி பெறப்பட்டது. அதைத்தொடர்ந்து மகா சங்கல்யம், வாசுதேவ புன்யாஹவசனம், பஞ்ச கவ்ய பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப பூஜைகளும், இரவு 9 மணிக்கு தீபாராதனையும் நடந்தது.

    பாலாலய நிகழ்ச்சி நேற்று காலை 8.40 மணிக்கு நடந்தது. அப்போது கஸ்தூரி அரங்கநாதர், பரிவார மூர்த்திகள் மற்றும் அனைத்து விமான ராஜ கோபுரங்களும் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன. முன்னதாக காலை 6.15 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, சேவாகாலம், கும்ப ஆராதனை, மூர்த்தி மந்தர தத்வ ஹோமம், காலை 7.45 மணிக்கு பூர்ணாஹுதி, யாத்ரா தரிசனம், கலசங்கள் புறப்பாடு நடந்தது. இதில் ஈரோடு மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

    ×