search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • வரதராஜர் பெருமாள் கோவிலில் இருந்து 800 பேர் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
    • தீர்த்தக் கலச ஊர்வலம், உலகேஸ்வரர் திருக்கோவிலுக்கு, யானை, குதிரைகளுடன் மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி, அல்லாளபுரத்தில் உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு வருகிற 8ந்தேதி கும்பாபிஷேகவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று மாலை அல்லாளபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் இருந்து சுமார் 800 பேர் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

    தொடர்ந்து தீர்த்தக் கலச ஊர்வலம், உலகேஸ்வரர் திருக்கோவிலுக்கு, யானை, குதிரைகளுடன் மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரவு யாகசாலை பூஜைகள் துவங்கின. சிவாச்சாரியார்கள் கலசங்களுடன் ஊர்வலமாக வந்து யாக சாலைக்கு சென்று கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை உள்ளிட்டவற்றை நடத்தினர்.

    தொடர்ந்து நடராஜ பெருமான், சிவகாமி அம்மையாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதனை தொடர்ந்து கோமாதா பூஜை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    • சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவில் முக்கியமான வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.
    • சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மாநகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவில் முக்கியமான வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. பல்வேறு வரலாற்று சிற்பங்களையும், மூலவரின் உருவசிலையையும் இக்கோவிலின் பிரகா ரத்தில் காணலாம். பழமை வாய்ந்த இந்த கோவிலில் சுகவனேசுவரர், சொர்ணாம்பிகை அம்மனு டன் அருள்பாலிக்கிறார்.

    சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்கு, 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து, கும்பாபிேஷக விழா கடந்த 1-ந்தேதி (வியாழக்கிழமை) வெகுவிமரிசையாக தொடங்கியது. 6-வது நாளான இன்று மாலை 5 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூைஜ, 5-ம் கால யாக பூைஜ உள்ளிட்ட பூைஜகளும், தீபாராதனை நடக்கிறது.

    கும்பாபிஷேகம்

    7-வது நாளான நாளை (7-ந்தேதி) அதிகாலை 4 மணிக்கு மேல் மங்கள இசை, 6-ம் கால பரிவார சாமிகளுக்கு யாக பூஜை ஆரம்பமாகிறது. காலை 6 மணிக்கு அனைத்து பரிவார கலசங்கள் புறப்பாடு நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து 6.30 மணிக்கு அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிேஷகம் செய்யப்படுகிறது. 7 மணிக்கு பிரதான யாக சாலைகளில் 6-ம் கால யாக பூஜை, 9 மணிக்கு மகா பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடக்கிறது.

    காலை 9.30 மணிக்கு யாத்ராதானம், அனைத்து விமானங்கள், ராஜகோபுரங்கள், மூலஸ்தான சாமி, அம்மன், விநாயகர், சுப்ரமணியர், கலசங்கள் புறப்பாடு நடைபெறுகின்றன. 10.50 மணிக்கு அனைத்து விமானங்கள் மற்றும் அனைத்து ராஜ கோபுரங்களுக்கு சமகால மகா கும்பாபிஷேகம் மற்றும் 11.15 மணிக்கு சுகவனேசுவரர் சாமி மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு மகா குப்பாபிஷேகம், மகா தீபாராதனை கோலாக லமாக நடைபெறுகிது.

    திருக்கல்யாணம்

    பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம் செய்யப்படு கிறது. பின்னர் பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு சொர்ணாம்பிகை சமேத சுகவனேசுவரர் சாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதையடுத்து இரவு 7 மணிக்கு பஞ்ச மூர்த்தி கள் திருவீதி உலா நடைபெறுகிறது.

    சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மாநகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் இவ்விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு நாைள ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • யாகசாலையில் சிறப்பு பூைஜகள் நடந்தது
    • ஏராளமானோர் சாமி தரிசனம்

    ஆரணி:

    ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள கிராம தேவதை செல்லியம்மன் நன்னீராட்டு விழா கும்பாபிஷேக விழா ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

    ஏற்கனவே அமைக்கபட்ட யாகசாலையில் கோபூஜை, கணபதி ஹோமம், மகாபூர்ண, பூஜை செய்து புனித கலசநீரை கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் கொண்டாடபட்டது.

    பின்னர் புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆரணி நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ். அன்பழகன், சுந்தர், மோகன், துரை மாமது ஆகியோர் பங்கேற்றவர்களுக்கு ஊராட்சி மன்ற கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கபட்டடன.

    • காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • 2-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது

    அரியலூர்:'

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற உக்கிர மகா காளியம்மன் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் கும்பாபிஷேக விழா நடத்துவதற்காக ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர். அதன்படி கடந்த 2-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி தொடர்ந்து பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று கோவில் கலசத்திற்கு புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றினர். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் உக்கிர மகா காளியம்மன் கோவிலில் அமைந்துள்ள விநாயகர் மற்றும் கருப்புசாமி கோவிலுக்கும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோடாலிகருப்பூர் பொதுமக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் செய்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கோடாலிகருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்."

    • மதுரை மாவட்டம் குட்லாடம்பட்டியில் விநாயகர்-பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இரவு நேரங்களில் பெண்கள் முளைப்பாளிகை, பக்தி பாடல் ஆடலும் பாடலும் கலை நிகழ்ச்சி, பக்தி பட்டிமன்றம் நடந்தது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் குட்லாடம்பட்டி மந்தைபகுதியில் விநாயகர், பெருமாள், முத்தாலம்மன், காளியம்மன், கருப்புசாமி ஆகிய தெய்வங்களுக்கு கோவில்கள் கட்டப்பட்டு கிராம பொதுமக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த கோவில்களின் கும்பாபிஷேகவிழா நடந்தது.

    முதல்நாள் விக்னேஷ்வர பூஜை, 2,3-ம் நாளில் யாகசாலை பூஜையும் நடந்தது. ேநற்று கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து கோவில் கோபுரங்களில் ராமேசுவரம், அழகர்கோவில், பாபநாசம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ஆராதனை அர்ச்சனைகள் செய்யப்பட்டன.

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார், கல்யாண சுந்தரகுருக்கள் ஆகியோர் தலைமையில் குழுவினர் செய்தனர். இரவு நேரங்களில் பெண்கள் முளைப்பாளிகை, பக்தி பாடல் ஆடலும் பாடலும் கலை நிகழ்ச்சி, பக்தி பட்டிமன்றம் நடந்தது. இதன்ஏற்பாடுகளை குட்லாடம்பட்டி கிராமபொதுமக்கள் செய்திருந்தனர்.

    • கும்பாபிஷேக விழா வருகிற 8-ந் தேதி காலை 5மணி முதல் 6 மணிக்குள் நடக்கிறது.
    • ஆன்மீக சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி, கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    காங்கயம் :

    காங்கயத்தை அடுத்த ஊதியூர் முதலிப்பாளையத்தில் முதலிராயசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு விநாயகர், பொன்திருமலாயி, கன்னிமார்சாமி, கருப்பராயசாமி , ஸ்ரீ அண்ணமார் சுவாமி மற்றும் பரிவார சுவாமிகள் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா வருகிற 8-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 5மணி முதல் 6 மணிக்குள் நடக்கிறது.

    கொங்கு வேளாள கவுண்டர்கள் சமூகத்தின் செம்பூத்த மற்றும் ஆந்தை குலத்தவர்களின் குலதெய்வங்களாக விளங்கி வரும் இக்கோவில்களின் விழாவுக்கு சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் பாலசுப்பிரமணியம், இளைய பட்டக்காரர் எஸ்.கே. கணேஷ் முன்னிலை வகிக்கின்றனர்.

    தமிழக செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், ஈரோடு எம். பி. கணேசமூர்த்தி, திருப்பணி பிரமுகர்களான கரட்டுப்பாளையம் சின்னசாமி, திருப்பூர் ஏ. ஆர். சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், வரன்பாளையம் திருநாவுக்கரசர், மடாதிபதி மெளன சிவாசல அடிகள் ஆகியோர் அருளாசி வழங்குகின்றனர். ஆன்மீக சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி, கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    முன்னதாக தீபாராதனை , மகா கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, கோபுர கலசம் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆந்தை குலத்தவர்கள்,திருப்பணி குழுவினர், முதலிபாளையம் ஊர் பொதுமக்கள், அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர். 

    • அங்காள பரமேஸ்வரிக்கு தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆலயங்கள் உள்ளன.
    • அங்காள பரமேஸ்வரியின் ஆலயம் ஊரின் எல்லையில் உள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. தன்னை நாடி வரும் பக்தா்களுக்கு நீங்காத செல்வத்தையும், மன நிம்மதியான வாழ்வையும் அருளும் அங்காளபரமேஸ்வரி அம்மன் இப்பகுதி மக்களுக்கு மட்டுமின்றி மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு இஷ்ட தெய்வமாக விளங்குகிறார்.

    இன்று (திங்கட்கிழமை) காலை 9.25 முதல் 10.25 மணிக்குள் குடமுழுக்கு நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 6-ம் கால யாகபூஜை, கோமாதா பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. குடமுழுக்கையொட்டி நேற்று காலை 4-ம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதியும் நடந்தது.

    மாலை 5-ம் கால யாக பூஜை தொடங்கியது. இதையொட்டி சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக யாக சாலைக்கு வந்தனர். தொடர்ந்து வேள்வி பூஜைகள் நடந்தன. பின்னர் மகா பூர்ணாகுதி செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் துர்க்கா ஸ்டாலின் கலந்து கொண்டு வழிபட்டார். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் நிவேதாமுருகன், பூண்டி கலைவாணன், ஒன்றியக்குழு தலைவர்கள் சீர்காழி கமல ஜோதி தேவேந்திரன், நந்தினி ஸ்ரீதர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். குடமுழுக்கையொட்டி கீழப்பெரும்பள்ளம் அங்காளபரமேஸ்வரி கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனால் கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் எங்கு நோக்கினும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    கீழப்பெரும்பள்ளம் அங்காள பரமேஸ்வரி கோவில் குடமுழுக்கையொட்டி பொது சுகாதாரத் துறையினர் நேற்று மருத்துவ முகாம் நடத்தினர். இதில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் சிகிச்சை பெற்றனர். குடமுழுக்கில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக நெடுஞ்சாலை துறையினர் சீர்காழி முதல் பூம்புகார் வரை தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கீழப்பெரும்பள்ளம் அங்காளபரமேஸ்வரி கோவிலில் கடந்த 2010-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதன்பிறகு 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று(திங்கட்கிழமை) குடமுழுக்கு நடைபெற உள்ளதால் கீழப்பெரும்பள்ளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    அங்காள பரமேஸ்வரிக்கு தமிழ்நாட்டில் பல இடங்களில் ஆலயங்கள் உள்ளன. எங்கு அநீதி நடந்தாலும் முதலில் அங்கு போய் நீதி கிடைக்கச் செய்வது அங்காள பரமேஸ்வரியின் குணம். அதனால்தான் பெரும்பாலும் அங்காள பரமேஸ்வரியின் ஆலயம் ஊரின் எல்லையில் உள்ளது.

    குடும்பத்தில் குழப்பம், நோய், இருந்தால் அங்காளபரமேஸ்வரியை மனதில் நினைத்து வழிபட்டால் அவர் வந்து பக்தர்களின் துன்பத்தைத் தீர்த்து வைப்பதாக பக்தர்கள் கருதுகின்றனர். பொதுவாக எந்த பாதிப்பு வந்தாலும் அங்காள பரமேஸ்வரியை வழிபட்டால் அவர்களின் துன்பம் நீ்ங்கும் என்பது ஐதீகம்.

    • 8-ந்தேதி காலை 3.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 6-ம் கால யாக பூஜை நடைபெறுகிறது.
    • மகா பூர்ணாகுதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு, பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி,அல்லாளபுரத்தில் நூற்றாண்டுகள் பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்குகிறது.

    இதையொட்டி இன்று மாலை 3 மணி அளவில் அல்லாளபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, முளைப்பாரி ஊர்வலம், தீர்த்த கலச ஊர்வலம், உலகேஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    8-ந்தேதி காலை 3.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 6-ம் கால யாக பூஜை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மகா பூர்ணாகுதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு, பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது. அன்று காலை 5:15 மணி முதல் உண்ணாமுலை அம்மன், உலகேஸ்வரர், கரிய காளியம்மன், பரிவார மூர்த்திகள் மற்றும் விமான கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மகாதீபாராதனை, திருக்கல்யாண உற்சவம், பஞ்ச மூர்த்தி சுவாமிகள் திருவீதி உலா, அன்னதானம் வழங்குதல் நடக்கிறது. மேலும் பாரம்பரிய கலைகளான வள்ளி கும்மி,பெருசலங்கை ஆட்டம்,பவளக்கொடி கும்மி ஆட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    • வரும் 8-ந் தேதி (வியாழக்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
    • இதில் அமைச்சர்கள் சேகர் பாபு, முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு கோட்டை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 1200 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் 800 ஆண்டுகள் பழமையான வன்னி மரம், நடராஜர் , 63 நாயன்மார்கள், சனி பகவான், காலபைரவர் சந்திரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி தேரோட்டம். குரு பெயர்ச்சி விழா, 63 நாயன்மார்கள் குருபூஜை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது.

    இதில் விமான கோபுரங்களுக்கும், சிற்பங்களுக்கும் வர்ணம் பூசும் பணி, தரைத்தளம் செட் பணியிடுதல், ஆகம விதிப்படி கருவறை சிற்பங்கள், சிலைகள் மாற்றம் செய்யாமல் புதுப்பிக்கும் பணி, கொடி மரத்திற்கு தங்க முலாம் பூசிய தகடுகள் பொருத்தும் பணி, கோபுர கலசத்திற்கு தங்க முலாம்பூசும் பணிகள், அன்னதான கூடம், வாகன மடம், வசந்த மடம் போன்றவற்றை புரணமைக்கும் பணிகள் நடந்தது.

    இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து வரும் 8-ந் தேதி (வியாழக்கிழமை) கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    கடந்த மாதம் 31ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. கும்பாபிஷேகத்தை ஒட்டி கோவில் வளாகத்தில் முகூர்த்தக்கால் (பாலக்கால்) நடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாள் சிறப்பு பூஜைகள், கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்தை யொட்டி ஈஸ்வரன் கோவிலில் பிரம்மாண்ட யாக–சாலைகள் அமைக்கப்பட்டு ள்ளன.

    வருகிற 8-ந் தேதி காலை 10.35 மணி முதல் 11.35 மணிக்குள் கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் சேகர் பாபு, முத்துசாமி, சாமிநாதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    கும்பாபிஷேகத்திற்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதனால் ஈரோடு மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • நுாற்றாண்டுகள் பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது.
    • பழுதடைந்த கட்டடங்களை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரத்தில் நுாற்றாண்டுகள் பழமையான உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் கும்பாபிஷேக பணிகளுக்காக பாலாலயபூஜை போடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றுவந்தன. பழுதடைந்த கட்டடங்களை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்பொழுது திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    இந்தநிலையில் வருகிற 8-ந்தேதி கும்பாபிஷேகவிழா நடக்கிறது. இதையொட்டி யாக சாலை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள்முடிவடைந்தது. தற்போது மின் விளக்கு அலங்காரப்பணிகள் நடைபெற்றுவருகிறது. இது குறித்து விழா குழுவினர் கூறுகையில், இந்த உலகேஸ்வரசாமி கோவில் பல நூற்றாண்டுகள் பழமையானது .சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு,அப்பர் அடிகளாரால் பாடல் பெற்ற ஸ்தலம். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வழிபட்ட கோவில்கள் என்பதற்கு அடையாளமாக கோவில்களில் பல்வேறு சின்னங்கள், சிலைகள் இன்றும் உள்ளது. இங்கு மூலவராக சிவபெருமான் லிங்க வடிவிலும், இவருக்கு வலப்புறம் உண்ணாமலை அம்மன் நின்ற கோலத்திலும் அருள் பாலிக்கின்றனர். மேலும் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர் மற்றும் நவகிரகங்கள் சன்னதிகள் தனித்தனியே உள்ளன. இந்த கோவிலில் முன்பு தேர் இருந்ததாகவும், தேரோட்டம் சிறப்பாக நடந்ததாகவும், இங்கிருந்த தெப்பக்குளத்தை சுற்றி, 12 தீர்த்த கிணறுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    கரிய காளியம்மன் கோவில் சிலையானது 8 கைகளுடன் வேல், திரிசூலம், போர் கவசம், பாம்புடன் கூடிய உடுக்கை, கத்தி, கிளி, தீச்சட்டி, ஆயுதம், மணி ஆகியவற்றை ஏந்தியபடி, மண்டை ஓடுகளை அணிகலன்களாகக் அணிந்து கொண்டு, ஆக்ரோஷமாக காட்சி அளிக்கிறது. இப்படிப் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த உலகேஸ்வரர் கோவிலில் வருகிற 8-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது யாகசாலை பந்தல் அமைக்கும் வேலைகள் முடிவுற்று மின் விளக்கு அலங்கார வேலைகள் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஆன்றோர்கள், சான்றோர்கள், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கும்பாபிஷேக அழைப்பிதழ் கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கருப்புசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பாதுகாப்பு பணியில் காடுபட்டி உதவி ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட வைகையாற்றின் தெற்கு கரை பகுதியில் அமைந்துள்ள கச்சிராயிருப்பு கிராமத்தில், கொடிப்புலி கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. யாக பூஜைகள் முடிவடைந்த பிறகு, கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்து கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றினர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கும்பாபிஷேக விழாவில் சோழவந்தான், மேலக்கால், மதுரை, உசிலம்பட்டி, செக்கானூரணி பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கொடிப்புலி பங்காளிகள் கூட்டம் செய்திருந்தனர். கோவில்பாப்பாகுடி ஒன்றிய கவுன்சிலர் செல்லபாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பாதுகாப்பு பணியில் காடுபட்டி உதவி ஆய்வாளர் இளங்கோவன் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.

    • மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    பாலமேடு அருகே உள்ள தேவசேரி கிராமத்தில் அமைந்துள்ள மந்தையம்மன், 18-ம் படி கருப்பணசாமி, வேலப்ப அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. 3 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, நவகிரக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தன. யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு அழகர்கோவில், ராமேசுவரம் உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்களில் ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×