search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது,
    • பாதுகாப்பு பணியில் நெற்குப்பை போலீசார் ஈடுபட்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி ராஜவீதியில் உள்ள நம்பங் கருப்பர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. அரை நூற்றாண்டுக்கு முன்பு இந்த ஊரில் வாழ்ந்த தம்பதிக்கு 8 பிள்ளைகள் இருந்ததாகவும், அதில் 7 ஆண்பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளையும் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த 7 ஆண் பிள்ளைகளும், ஒன்றிணைந்து சகோதரியை இந்த பகுதியிலேயே திருமணம் முடித்த காலகட்டத்தில் கடுமை யான பஞ்சம் ஏற்பட்டது. அதன் காரணமாக இந்த பகுதியில் இருந்து வெளியேறிய 7 சகோதரர்களும் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை இரு மாவட்டங்களைச் சேர்ந்த மூலங்குடி, எழுவங்கோட்டை, குன்னாரம்பட்டி, கேசராபட்டி, நாட்டார்மங்கலம், ரணசிங்கபுரம், வலசைப்பட்டி ஆகிய கிராமபகுதிகளில் வாழ்வாதாரத்துக்காக தஞ்சம் புகுந்தனர். பின்பு நாளடைவில் இவர்களின் சந்ததியினர் தொழில்துறைகளிலும், விவசாயத்திலும் முன்னேற்றம் கண்டு முன்னோர்களின் பூர்வீக தெய்வமான நம்பங் கருப்பர் கோவில் வீட்டை புனரமைத்தனர்.

    அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கும்பாபிஷேகம் நடந்தது. கலசத்தில் அபிஷேக நீர் ஊற்றி திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை 8 கரை பங்காளிகள் மற்றும் சோழகன் வகையறா பாடியப்பன் அம்பலம் செய்திருந்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் நெற்குப்பை போலீசார் ஈடுபட்டனர்.

    • திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளது.
    • 11 பரிவார மூர்த்தி சன்னதிகளுக்கு தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது.

    பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    இதனை அடுத்து திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளது.

    இதனிடையே கோவிலில் உள்ள பரிவார மூர்த்தி தெய்வ சன்னதிக ளுக்கு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

    ஆபத்து காத்த விநாயகர், சம்ஹார வேலர், அஷ்ட பைரவர், ருணம் தீர்த்த விநாயகர், காழிபுரீஸ்வரர், காழி கணநாதர், மண்டப குமாரர், 63 நாயன்மார்கள், நவக்கிரக சன்னதி, திருஞானசம்பந்தர் ஆர்ச் உள்ளிட்ட சுமார் 11 பரிவார மூர்த்தி சன்னதிக ளுக்கு தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சா ரியார் சுவாமிகள் முன்னிலையில் கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

    இதில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழ் சங்க தலைவர் மார்கோனி, துணைத் தலைவர் கோவி.நடராஜன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சரண்ராஜ், திருமுல்லைவாசல் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த புதிய கோவில் ஜம்முவில் உள்ள புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
    • இந்த கோவில் கட்டுவதற்காக ஜம்மு அரசு 62 ஏக்கர் நிலம் ஒதுக்கி உள்ளது.

    திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பல ஊர்களிலும் சீனிவாச திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக, திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசிக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக மற்ற ஊர்களிலும் ஏழுமலையானுக்கு கோவில்கள் அமைக்கும் பணியை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கி உள்ளது.

    அந்த வகையில் ஜம்முவில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையானுக்கு பிரமாண்ட கோவில் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.30 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இக்கோவிலின் கும்பாபிஷேக விழா ஜூன் 8-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த புதிய கோவில் ஜம்முவில் உள்ள புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

    ஆந்திராவுக்கு வெளியே திருப்பதி ஏழுமலையானுக்கு கட்டப்படும் 6-வது கோவிலாக ஜம்முவில் புதிய கோவில் உருவாகி வருகிறது. ஏற்கனவே ஐதராபாத், சென்னை, கன்னியாகுமரி, டெல்லி, புவனேசுவரம் ஆகிய நகரங்களில் திருப்பதி ஏழுமலையானுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவில் கட்டப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மும்பை, ராய்ப்பூர், ஆமதாபாத் ஆகிய நகரங்களிலும் திருப்பதி ஏழுமலையானுக்கு பிரமாண்ட கோவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

    ஜம்முவில் மாதா வைஷ்ணவி தேவியை தரிசிக்க வரும் பக்தர்களின் முக்கிய வழிபாட்டு தலமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் அமையும். இந்த கோவில் கட்டுவதற்காக ஜம்மு அரசு 62 ஏக்கர் நிலம் ஒதுக்கி உள்ளது. திருமலையில் நடப்பது போலவே அனைத்து சடங்குகள், பூஜைகள், விழாக்கள் உள்ளிட்டவைகள் இந்த புதிய கோவிலிலும் நடத்தப்படும்.

    கோவிலுடன் சேர்த்து உப தெய்வங்களின் சன்னதிகள், மடப்பள்ளி, அன்னபிரசாத கவுண்ட்டர்களும் கட்டப்பட்டு வருகிறது. வாகன நிறுத்தும் இட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி அங்குரார்ப்பணம் உள்ளிட்ட சடங்குகள் ஜூன் 4-ந் தேதி முதல் தொடங்கும். ஜூன் 8-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    • ஜெயங்கொண்டம் அருகே இன்ப மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • காண்டிப தீர்த்தம் எடுத்து வந்து யாக சாலையில் பூஜை நடைபெற்றது

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பழைய திருச்சி ரோடு தெருவில் உள்ள ஸ்ரீ இன்ப மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு மகா பூர்ணகுடி, மகா தீபாராதனை, புறப்பாடு மற்றும் மங்கள இசை வேதபாரானியம், மூன்றாம் கால பூஜை மறறும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நூதன அஸ்தமன ஆறு கால யாகம் சிறப்பாக நடைபெற்றது. மேலும் காண்டிப தீர்த்தம் எடுத்து வந்து யாக சாலையில் பூஜை நடைபெற்றது. ெதாடர்ந்து சப்த கன்னிகளுக்கு பூஜை செய்யப்பட்டது. இதில் ஊர் முக்கியஸ்தர்கள் வெங்கட்ராமன், சூரிய நாராயணன், இளங்கோவன், நாட்டார் சேதுராமன் மேலும் விழா குழு நண்பர்கள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • நாளை காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவியம், நவகிரக ஹோமம், தீபாராதனை நடைபெற உள்ளது.
    • 25-ந் தேதி முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெற உள்ளது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த வாளவாடியில் கமல காமாட்சியம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் புனரமைப்பு செய்து கும்பாபிஷேக விழா நடத்துவதென பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக புனரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவுற்ற நிலையில் நாளை மறுநாள் 24 ந் தேதி புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக நாளை செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், புண்யாகவாஜனம், பஞ்சகவியம், நவகிரக ஹோமம், கோ பூஜை, தீபாராதனை நடைபெற உள்ளது. நாளை மாலை 4.30 மணிக்கு வாஸ்து சாந்தி, கும்ப ஸ்தாபனம், யாக சாலை பிரவேசம்,பூர்ணாகுதி உள்ளிட்ட முதல் கால பூஜையும், இரவு 10.30 மணிக்கு கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    அதைத் தொடர்ந்து நாளை மறுநாள் 24-ம் தேதி (புதன்கிழமை) காலை 4.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், கலசங்கள் யாகசாலையில் இருந்து மூலாலயம் புறப்பாடு நிகழ்ச்சியும் காலை 6 மணிக்கு விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகமும், அதைத்தொடர்ந்து 6:30 மணிக்கு விநாயகர், மகாவிஷ்ணு, கமலகாமாட்சி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.இதையடுத்து 10.30 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. 25 -ந் தேதி முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.  

    • இன்று காலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
    • இன்றில் இருந்தே கும்பாபிசேக நாள் வரை அன்னதான நிகழ்ச்சிகளும் வெகு விமர்ச்சியாக நடைபெறுகிறது.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை ஒட்டி இன்று காலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    தொடர்ந்து 5 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, விநாயகர் வேள்வி, கோமாதா வழிபாடு, அடியார்கள் காப்பணிதல், மதியம் 2 மணிக்கு முளைப்பாளியை ஊர்வலம், தீர்த்த குடங்கள், விமான கலசங்கள் ஊர்வலம் நடைபெறுகிறது.

    அதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, நிலத்தவர் வழிபாடு, புற்று மண் எடுத்து வருதல், திருக்குடங்கள் கேள்வி சாலைக்கு புறப்பாடு, இரவு 7.30 மணிக்கு முதலாம் கால வேள்வி பூஜைகள், 108 வகையான காய்கனி கிழங்கு உள்ளிட்ட மூலிகை பொருட்கள், மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல் நடைபெறுகிறது.

    நாளை காலை 6 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 10 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, ராகம், தாளம் வாசித்தல், பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால வேள்வி பூஜைகள், நடைபெறுகிறது.

    வருகிற 23-ந் தேதி காலை 8 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு விமான கலசம் நிறுவுதல், 10 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜைகள், மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல் மாலை 6 மணிக்கு ஐந்தாம் கால வேள்வி பூஜைகள், இரவு 7 மணிக்கு அம்மனுக்கு என் வகை மருந்து சாற்றுதல் நடைபெறுகிறது.

    24-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால வேள்வி பூஜைகள், 6 15 மணிக்கு திருக்குடங்கள் கோவிலை வந்து அடைதல், 6.45 மணிக்கு விமான கலசங்களுக்கும், 7.15 மணிக்கு மூர்த்திகளுக்கும் புனித நீரூற்றி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

    9 மணிக்கு அலங்கார பூஜைகள், 10 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் இன்றில் இருந்தே கும்பாபிசேக நாள் வரை அன்னதான நிகழ்ச்சிகளும் வெகு விமர்ச்சியாக நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள், இந்துசமய அறநிலைத்துறை, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகம், ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • தினமும் காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
    • இன்று சாந்திஹோமம், அஸ்த்திர கலச பூஜை நடக்கிறது.

    கீழ்குளம் பறம்பு அம்மனாடும்தேரியில் பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புனர்பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகவிழா கடந்த 17-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா முதல் நாள் தொடங்கி தினமும் காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    விழாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு கணபதிஹோமம், மாலை 5.30 மணிக்கு சாந்திஹோமம், அஸ்த்திர கலச பூஜை, பூஜை பலி, உத்வஸிதத்து ஜீவ கலசத்திற்கு சுற்று எழுந்தருளல், பள்ளி உறக்கம் ஆகியவை நடக்கிறது. நாளை(திங்கட்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கணபதிஹோமம், பிரதிஷ்டை ஹோமம், பள்ளி எழுப்பல், பிரதிஷ்டை பலி, மூர்த்திகள் கோவிலுக்குள் எழுந்தருளுதல், காலை 6 மணிக்கு பிரதிஷ்டை, தொடர்ந்து பகவதி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஜீவ கலச அபிஷேகம், அஷ்ட பந்தன கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை, 9.30 மணிக்கு வாழ்த்தரங்கம், பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, 8 மணிக்கு சிறப்பு பூஜை, 8.30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • இன்று மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.
    • நாளை 3-ம் கால வேள்வி நடக்கிறது.

    கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஒக்கலிக கவுடர் ஏணியர் குல மக்களின் குலதெய்வமான மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 24-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.

    அன்று அதிகாலை 5 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, விநாயகர் வேள்வி, கோமாதா வழிபாடு, அடியார்கள் காப்பணிதல், மதியம் 2 மணிக்கு முளைப்பாலிகை ஊர்வலம், தீர்த்த குடங்கள், விமான கலசங்கள் ஊர்வலம் நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, நிலத்தேவர் வழிபாடு, புற்றுமண் எடுத்து வருதல், திருக்குடங்கள் வேள்வி சாலைக்கு புறப்பாடு, இரவு 7.30 மணிக்கு முதலாம் கால வேள்வி, 108 வகையான காய், கனி, கிழங்கு உள்ளிட்ட மூலிகை பொருட்கள், மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல் நடக்கிறது.

    நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 10 மணிக்கு 2-ம் கால வேள்வி, ராகம், தாளம் வாசித்தல், பிரசாதம் வழங்குதல், மாலை 6 மணிக்கு 3-ம் கால வேள்வி நடக்கிறது.

    வருகிற 23-ந் தேதி காலை 8 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு விமான கலசம் நிறுவுதல், 10 மணிக்கு 4-ம் கால வேள்வி, மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல், மாலை 6 மணிக்கு 5-ம் கால வேள்வி, இரவு 7 மணிக்கு அம்மனுக்கு எண்வகை மருந்து சாற்றுதல் நடக்கிறது.

    24-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால வேள்வி, 6.15 மணிக்கு திருக்குடங்கள் கோவிலை வந்தடைதல், 6.45 மணிக்கு விமான கலசங்களுக்கும், 7.15 மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 9 மணிக்கு அலங்கார பூஜை, 10 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

    • இன்று மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.
    • 25-ந்தேதி அக்‌ஷதாரோஹணம், அர்ச்சக பவனி நடக்கிறது.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந்தேதி மூலவர் விமான கோபுரத்தின் மீது தங்க முலாம் பூசும் பணிகள் தொடங்கி சமீபத்தில் நிறைவடைந்தது. அதையொட்டி 25-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இன்று (சனிக்கிழமை) மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை யாக சாலையில் புண்யாஹவச்சனம், ரக்ஷா பந்தனம், மாலை ஸ்ரீவாரி காலகர்ஷணம், 22 மற்றும் 23-ந்தேதிகளில் காலை மற்றும் மாலை யாகசாலையில் மற்ற வைதீக காரியகர்மங்கள், 24-ந்தேதி காலை ஜலாதி வாசம், பிம்ப ஸ்தாபனம் உள்ளிட்ட சடங்குகளும், மாலை மகா சாந்தி திருமஞ்சனம் உள்ளிட்ட யாகசாலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    25-ந்தேதி காலை 7.45 மணியில் இருந்து காலை 9.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் கும்ப ஆராதனம், நிவேதனம், ஹோமங்கள், மஹா பூர்ணாஹுதி, மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் ஆகியவை நடக்கிறது.

    அதன்பின் அக்ஷதாரோஹணம், அர்ச்சக பவனி நடக்கிறது. காலை 10.30 மணியளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.

    • நாளை பல்வேறு யாகபூஜைகள் நடைபெறுகிறது.
    • 23-ந்தேதி அம்மன் வீதி உலா, உற்சவர் வீதிஉலா நடைபெறுகிறது.

    மதுரை கான்பாளையம் குறுக்கு தெருவில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற 22-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. விழாவையொட்டி நேற்று பல்வேறு ஹோமங்களும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. இன்று பகவத் அனுக்ஞை, யஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, அங்குராரப்பணம் நடக்கிறது.

    நாளை(ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு யாகபூஜைகள் நடைபெறுகிறது. 22-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் திருவிளக்கு பூஜை நடக்கிறது. 23-ந் தேதி அம்மன் வீதி உலா, உற்சவர் வீதிஉலா நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது.
    • இந்த கோவிலில் 24-ந்தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது.

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருநிலை நாயகி அம்பாள் பிரம்மபுரீஸ்வரர் உடன் அருள் பாலித்து வருகிறார். மேலும் இந்த கோவிலில் திருஞானசம்பந்தர், அஷ்ட பைரவர்களுக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோவில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) குடமுழுக்கு நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் இன்று (சனிக்கிழமை) மாலை தொடங்க உள்ளது. அதைமுன்னிட்டு தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் சீர்காழி அருகே உள்ள உப்பனாற்றில் இருந்து நேற்று மாலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் மற்றும் நகர எல்லையான உப்பனாற்று ஆகிய நீர்கள் அடங்கிய 4 கடங்களை, நான்கு யானைகள் மீது ைவத்து சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    அப்போது ஒட்டகம், குதிரை, சிலம்பாட்டம், வாத்தியம், மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்து அடைந்தனர். பின்பு கொண்டுவரப்பட்ட புனிதநீரை பாதுகாப்பாக யாகசாலையில் கொண்டு வந்து சேர்த்தனர்.

    இந்த நிகழ்வில் தருமபுரம் ஆதீனத்தை சேர்ந்த பல்வேறு கட்டளை தம்பிரான்கள், தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., திருப்பணி உபயதாரர் முரளி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் பந்தல் முத்து, கோவி நடராஜன், பாலசுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினர் பாலமுருகன், வர்த்தக சங்க நிர்வாகி பாலகிருஷ்ணன், கோவில் நிர்வாகி செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த வாரம் கோவில் கட்டிட பணி நிறைவடைந்தது.
    • பகல் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி காம்பைக்கடை ஹாப்பிவேலி பகுதியில் உள்ள பால் முனிஸ்வரன் கோவிலின் கட்டிட பணி கடந்த ஒரு ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் கோவில் கட்டிட பணி நிறைவடைந்தது.

    இதனை தொடர்ந்து பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆசியுடன் அர்ச்சகர் சக்திவேல் தலைமையில் மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக கோத்தகிரி வட்டாட்சியர் காயத்திரி, கோத்தகிரி பேரூராட்சி அலுவலர் மணிகண்டன் கலந்து கொண்டனர். பகல் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×