என் மலர்
நீங்கள் தேடியது "வெள்ளம்"
- முக்கிய சாலைகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
- மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஊட்டி:
கோவை நகரில் கடந்த மாதம் முதல் வெயில் வாட்டி எடுத்து வந்தது.
கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் தவித்தனர். வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் குளிர்ச்சியான பானங்களை வாங்கி குடித்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் சற்று மேகமூட்டமாகவே காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு காலநிலை அப்படியே மாறியது. மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து லேசாக மழை பெய்ய தொடங்கியது.
தொடர்ந்து சாரல் மழை, பலத்த மழையாக மாறி கொட்டி தீர்த்தது. இடியுடன் பெய்த கனமழைக்கு அவினாசி சாலை, ரெயில் நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் அதில் மெல்ல ஊர்ந்து சென்றன.
திடீர் மழையால் மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள், வேலைக்கு சென்று திரும்பியோர் பலர் மழையில் நனைந்தபடியே சென்றதை காண முடிந்தது. சிலர் மழைக்கு ஆங்காங்கே பாதுகாப்பாக ஒதுங்கி நின்றனர்.
இதேபோல் உக்கடம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், நீலாம்பூர், இருகூர், மலுமிச்சம்பட்டி, பீளமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
இந்த திடீர் மழையால் கடந்த சில தினங்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை மாறியது. இரவிலும், அதிகாலையிலும் குளிர் தெரிந்தது. வெப்பணம் தணிந்து குளிர் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலும் கடந்த 2 மாதத்திற்கு மேலாக பகலில் கடும் வெயிலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் குளிரும் நிலவி வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
குன்னூர், சேலாஸ், கொலகம்பை, வெலிங்டன், அருவங்காடு, எடப்பள்ளி, வண்டிச்சோலை, காட்டேரி, கரும்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதன் காரணமாக அங்குள்ள முக்கிய சாலைகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழைக்கு, ஓட்டு பட்டறை முத்தாலம்மன் பேட்டை பகுதியில் சமுதாயக்கூடம் அருகே தடுப்பு சுவர் இல்லாததால் மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து அங்குள்ள புவனேஸ்வரி மற்றும் சுலோச்சனா ஆகியோரின் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தது.
ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. ஊட்டியில் உள்ள கமர்சியல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக ஊட்டியில் கடந்த சில தினங்களாக நிலவிய வெப்பம் தணிந்து இதமான காலநிலை நிலவுகிறது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன் கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளதால் வனப்பகுதிகள் காட்டுத்தீயில் இருந்து தப்பி பிழைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து மழை வேகமாக செய்து கொண்டிருந்தது.
- பல்வேறு கடைக்கா ரர்கள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு பாதிப்படைந்த னர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து மழை வேகமாக செய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக சாலை ஓரங்களில் போடப்பட்டி ருந்த பழக்கடைகள், பலகார கடைகள், டிபன் கடைகள், பூக்கடைகள், ஜவுளிக்கடைகள், மண்பாண்டம் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்கா ரர்கள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் வியாபாரம்
செய்ய முடியாமல் அவதிப்பட்டு பாதிப்படைந்த னர்.
அதேபோல் இரு சக்கர வாகனங்களில் சாலையில் செல்பவர்களும், நடந்து சென்றகூலி தொழி லாளர்களும் நனைந்து கொண்டே சென்றனர். கடைகளுக்கு செல்லும் சிலர் குடைகளைப் பிடித்துக் கொண்டு சென்றனர் . கார்கள், வேர்கள், லாரிகள் போன்ற வாகனங்கள் சாலையில் செல்லும்போது வாகனத்தின் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றனர்.
விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் வாழை, வெற்றிலை உள்ளிட்ட பல்வேறு வகை யான பண பயிர்கள் சாகு படி செய்துள்ளனர். வாழை தோட்டங்களில் மழை வெள்ளம் சூழுந்து குளம்போல் காணப்ப டுகிறது. இதனால் வாழை அழுகும் சூழ்நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஊர்ந்து செல்கின்றனர்.
- மழை நீரை அகற்றும் பணியில் கொட்டும் மழையிலும் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற வட்டார கிராமங்களில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டி கள்கடும் அவதிக்கு உள்ளாகி முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஊர்ந்து செல்கின்றனர். பண்ருட்டி கடலூர் ரோடு, சென்னை சாலை, கும்பகோணம் சாலை, காந்தி ரோடு, ராஜாஜி சாலை, பகுதி களில் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பண்ருட்டி பகுதிகளில் உள்ள ஏரி, ஆறு, குளங்க ளில் நீர் நிரம்பி வழிகி றது. கனமழை காரண மாக வருவாய்த்துறை, நகராட்சி துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் தங்களது அலுவலகங்களில் தங்கி இருந்து மழை பாதிப்புகள் குறித்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் கொட்டும் மழையிலும் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
+2
- வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் சாதாரண மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
- நிவாரண உதவிகளுக்கு மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் ஏற்பாடு செய்திருந்தார்.
சென்னை:
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்தது.
சென்னை புறநகர் பகுதிகளான மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேல் தளங்களில் குடியிருந்தவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று நேரில் பார்வையிட்டார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, பெஞ்சமின், சோமசுந்தரம், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் உள்பட பலர் உடன் சென்றனர்.
முதலில் மணப்பாக்கம் திருவள்ளுவர் நகரில் தொடங்கினார். மெயின் ரோட்டில் இறங்கி தெருக்களுக்குள் சென்றபோது முட்டளவு தண்ணீர் தேங்கி நின்றது. அதில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நடந்து சென்று பொதுமக்களின் சிரமங்களை நேரில் பார்த்தார்.
அப்போது மின்சாரம் உள்ளதா? அரசு உதவிகள் கிடைத்ததா? வேறு ஏதேனும் உதவிகள் வேண்டுமா? என்று கேட்டார்.
அப்போது, பொதுமக்கள் 3 நாட்களாகியும் வெள்ளம் வடியவில்லை. வெள்ளத்தை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவில்லை. வீடுகளில் தங்க முடியாமல் உறவினர் வீடுகளுக்கும், சிலர் லாட்ஜூகளிலும் தங்கி இருக்கிறார்கள்.
எல்லா ஊர்களில் இருந்தும் தண்ணீர் இந்த பகுதிக்குத்தான் வருகிறது. முதலில் தண்ணீரை வடிய செய்ய வேண்டும். அதன்பிறகு தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர்.
அதை தொடர்ந்து காவியா நகர், பெல்நகர் பகுதிகளை பார்த்துவிட்டு மதனந்தபுரம், சிந்து காலனி, கொளப்பாக்கம் கணேஷ் நகர், ராமமூர்த்தி அவென்யூ உள்ளிட்ட பகுதிகளையும் பார்த்தார்.
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் சாதாரண மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு நிவாரண உதவிகளுக்கு மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் ஏற்பாடு செய்திருந்தார்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 25 கிலோ அரிசி மூட்டை, காய் கறிகள், பால், ரொட்டி ஆகிய நிவாரண பொருட்களை 500 குடும்பங்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
- பழமையான 5 மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும்.
- 11 மின்கம்பங்கள் நடப்பட்டு, மின் கம்பிகள் பொருத்தப்பட்டு புதிய மின்விளக்குகளும் அமைக்கும் பணி.
சீர்காழி:
சீர்காழி வட்டத்தில் கடந்த 11ஆம் தேதி பெய்த கன மழையால் வெள்ளம் ஏற்பட்டு வேட்டங்குடி கிராமத்தை சூழ்ந்திருந்ததால் கிராம மக்கள் அவதி அடைந்து வந்தனர். கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து சம்பா நெற்பயிர்களிலும் தண்ணீர் தேங்கி நின்றதால் நெற் பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கின. வேட்டங்குடி ஊராட்சி மிகவும் தாழ்வான பகுதியில் இருப்பதால் அங்குள்ள ஜீவா நகரில் உள்ள 250க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் மற்றும் குடிசை வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் கிராம மக்கள் நிலை குலைந்து அங்குள்ளவர்கள் பாதுகாப்பாக முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டு பின்னர் தண்ணீர் வடிந்த பிறகு வீடுகளுக்கு திரும்பினர்.
ஜீவா நகரில் பழமையான மின் கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் ஆபத்தான நிலையில் இருந்து வந்தது.இதனால் அப்பகுதிக்கு அடிக்கடி மின்சாரம் தொடர்ந்து விநியோகம் செய்ய முடியாதநிலை ஏற்பட்டதால் அங்குள்ள வர்கள் அவதி அடைந்து வந்தனர்.
வெள்ளம் பாதித்த கொள்ளிடம் பகுதிகளை சுற்றுச்சூழல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கடந்த 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கிராமப் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனுக்குடன் நடவடிக்கையை மேற்கொ ண்டு வந்தார்.
அப்போது வேட்டங்குடி ஊராட்சியில் உள்ள ஜீவாநகரில் உள்ள குடியிருப்புகளை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அங்குள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அங்குள்ளவர்கள் அப்பகுதியில் உள்ள பழமையான 5 மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என்று அமைச்சரிடம் நேரில் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அமைச்சரோ அப்பகுதியில் உள்ள அனைத்து பழமையான மின்கம்பங்களையும் உடனடியாக அகற்றுவதற்கு மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொண்டு கிராமத்திற்கு நேரில் வரவழைத்து கிராம மக்கள் கேட்ட 5 மின் கம்பங்கள் மேலும் 6 மின்கம்பங்கள் உள்ளிட்ட 11 மின்கம்பங்கள் ஜீவா நகரில் நடப்பட்டு, மின் கம்பிகள் பொருத்தப்பட்டு புதிய மின்விளக்குகளும் அமைத்து தர நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன்பேரில் ஒரே நாளில் புதன்கிழமை ஜீவா நகரில் 11 மின்கம்பங்கள் புதியதாக நடப்பட்டு புதியதாக மின் கம்பிகளும், மின்விளக்குகளும் பொறுத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டன. இதனால் ஜீவா நகர் இரவு நேரங்களில் பகலை போன்று காட்சியளிக்கின்றன.
மக்கள் கோரிக்கையை ஏற்று புதியதாக 5 மின்கம்பங்களுக்கு பதிலாக 11 மின்கம்பங்களை அமைத்துக் கொடுத்து மின்விளக்குகளை புதியதாக பொருத்தி அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்த அமைச்சர் மெய்யநாதனுக்கு அப்பகுதி ஒன்றியக் குழுஉறுப்பினர் அங்குதன் மற்றும் ஜீவா நகர் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
- சிங்கம்புணரி அருகே உள்ள அ.காளாப்பூரில் காட்டாற்று வெள்ளத்தால் தரைப்பாலம் அடிக்கடி மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- உடனடியாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அ.காளாப்பூர் அருகில் ஆத்தங்கரைப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அ.காளாப்பூரில் இருந்து ஆத்தங்கரைப்பட்டி செல்ல பாலாற்றின் குறுக்கே தரைப்பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த தரைபாலம் வழியாக 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இருசக்கர வாகனங்கள், கார்களில் கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
சில வாரங்களாக திண்டுக்கல் கரந்தமலை பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாகவும், சிங்கம்புணரியில் பெய்த கனமழை காரணமாகவும், பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அ.காளா ப்பூர் தடுப்பணையில் தண்ணீர் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மேலும் அ.காளாப்பூர்- ஆத்தங்கரைப்பட்டி தரைப்பாலம் பாலாற்றின் வெள்ளத்தால் மூழ்கியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து தடைபட்டது.இதனால் அபாயம் அறியாமல் இந்த தரைப்பாலத்தின் வழியாக இரு சக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கிராம மக்கள் வெள்ள நீரையும் பொருட்படுத்தாமல் கடந்து செல்கின்றனர்.
ஒவ்வொரு முறையும் மழைகாலம், வடகிழக்கு பருவ மழைக்காலம், புயல் காலங்களில் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து தடைபடுவதால் இந்த பகுதி மக்கள் சுமார் 12 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இருசக்கர வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் தரைபாலத்தை கடந்து சென்று வருகின்றனர். ஆத்தங்கரைப்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தரைப்பா லத்தை கடக்க பெற்றோருடன் சென்று வருவதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இங்கு உடனடியாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டவரை தேடும் பணி தீவிரம்
- தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டியும், டியூப்களில் மிதந்து சென்றும் தேடுதல் வேட்டை
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. எனவே அணைகளில் இருந்து ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் குமரி மாவட்ட நீர்நிலைகளில் அதிக அளவு தண்ணீர் ஓடுகிறது.
திருவட்டார் அருகே உள்ள பரளியாற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடு கிறது. இருப்பினும் ஆபத்தை உணராமல் பலரும் ஆற்றில் குளித்து வருகின்றனர். திருவட்டார் கொற்றுபுத்தன் வீடு பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் நாயர் (வயது 52) என்பவரும் இன்று காலை ஆற்றில் குளிக்க வந்தார்.
அவர் தண்ணீரில் இறங்கி குளித்த போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். அப்போது தண்ணீரின் வேகம் அதிக மாக இருந்ததால் அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிகி றது.
ஆனால் இதனை யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து அந்த பகுதி யில் குளித்துக் கொண்டிருந்த வர்கள் மதுசூதனன் நாயரை தேடினர். அப்போது தான் அவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
எனவே அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என கருதி தேடினர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து குலசேகரம் போலீசார் மற்றும் தீய ணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விைரந்து வந்து, மதுசூதனன் நாயரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆற்றில் தண்ணீர் அதிக அளவு வேகமாக சென்றதால், தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டியும், டியூப்களில் மிதந்து சென்றும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வெள்ள பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
- கலிபோர்னியா மாகாணத்துக்கு மேலும் மழை ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வரலாறு காணாத அளவு கன மழை பெய்தது. அங்கு பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து துண்டாகின. கன மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. அனைத்து சாலைகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ள பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மழை-வெள்ளத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே கலிபோர்னியா மாகாணத்துக்கு மேலும் மழை ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா கவர்னர் கெவின் நியூசோம் கூறும்போது, மழை-வெள்ளம் காரணமாக 34 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். மேலும் ஆபத்து இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாதிப்பு குறைந்தபட்சம் வருகிற 18-ந்தேதி வரை தொடரும் என்று தெரிகிறது.
- கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் யாரும் ஆற்றைக்கடந்து செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சென்னிமலை:
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் ஒரத்துப்பாளையம் அணையில் 3 அடி தண்ணீர் மட்டுமே தேங்கி இருந்தது.
அப்போது அணைக்கு வினாடிக்கு 98 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 99 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று இரவு முதல் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
நேற்று காலை 6 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 617 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையில் 9 அடி தண்ணீர் தேங்கி இருந்தது. அணையிலிருந்து 346 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. நேற்று மாலை நிலவரப்படி சென்னிமலை பகுதியில் 88 மி.மீ மழையளவும், அணைப்பகுதியில் 126 மி.மீ மழையளவும் பதிவாகியது.
நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீரில் 1550 டி.டி.எஸ். என்ற அளவில் இருந்த உப்புத்தன்மை வெள்ளத்தால் குறைந்து இன்று காலை 980 டி.டி.எஸ். என பதிவானது. ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் யாரும் ஆற்றைக்கடந்து செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் மற்றும் அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.
- குடிநீர் குழாய் வெடித்ததில் தண்ணீர் அப்பகுதி முழுவதும் ஆறாக சென்றது. சுமார் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது.
- குடிநீர் குழாய் வெடித்த வழி தடப் பகுதி மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது.
பள்ளிப்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த ராஜவீதி பகுதி சாலையில் ஓரத்தில் மண்ணுக்கு அடியில் பிரதான குடிநீர் குழாய் செல்கிறது.
இந்த குடிநீர் குழாய் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதாகும். பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு இந்த குழாய் மூலம் திருச்செங்கோடு பகுதி வரை செல்கிறது. ஆங்காங்கே துளையிட்டு குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு ஏற்றி, அதன் பிறகு பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு ராஜவீதி பகுதி உள்ள சாலையில் குடிநீர் குழாய் பயங்கர சத்தத்துடன் வெடித்து சுமார் 10 அடி ஆழத்துக்கு சாலையில் பள்ளம் ஏற்பட்டது. சாலையில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் செல்வதால் அழுத்தம் ஏற்பட்டு வெடித்ததாக கூறப்படுகிறது.
குடிநீர் குழாய் வெடித்ததில் தண்ணீர் அப்பகுதி முழுவதும் ஆறாக சென்றது. சுமார் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் சேறும் சகதியமாக மாறிவிட்டன.
இது பற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக அதிகாரிகள், மோட்டாரை நிறுத்தி, குழாயில் தண்ணீர் விநியோகத்தை நிறுத்தனர். இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்து, பள்ளம் ஏற்பட்ட பகுதியை சுற்றிலும் பொது மக்கள் செல்லாதவாறு பாதுகாப்பு வளையம் அமைத்தனர். குடிநீர் குழாய் வெடித்த வழி தடப் பகுதி மட்டும் தடை செய்யப்பட்டுள்ளது.
பின்னர் மோட்டார் கொண்டு வரப்பட்டு குடியிருப்புகளில் சூழ்ந்த வெள்ளம் அப்புறப்படுத்தினர். இதையடுத்து சகஜமான நிலை ஏற்பட்டது.
- கெர்சன், கக்கோவ்கா பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உக்ரைன் அரசு அறிவுறுத்தியது.
- அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரால் 24 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
கிவ்:
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 1½ ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. போரில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளன.
இதில் தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷியா கைப்பற்றியது. இதற்கிடையே ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பகுதியில் கக்கோவ்கா அணை உடைக்கப்பட்டது.
மேலும் அங்கிருந்த நீர் மின் நிலையமும் சேதம் அடைந்தது. அணை மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் தான் தாக்குதல் நடத்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன.
இதற்கிடையே டினிப்ரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய அணையின் ஒரு பகுதி உடைந்ததால் சுமார் 18 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் வெளியேறியது. இதையடுத்து கெர்சன், கக்கோவ்கா பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உக்ரைன் அரசு அறிவுறுத்தியது.
மேலும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் பல நகரங்கள், கிராமங்களுக்குள் புகுந்தது. பல அடி உயரத்துக்கு சென்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கின.
சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. சில இடங்களில் வீடுகளும் வெள்ளத்தில் மிதந்து சென்றன. அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரால் 24 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
அங்கிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 17 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். பலர் வீட்டின் கூரை மீது அமர்ந்து இருந்தனர். அவர்களை படகில் சென்று மீட்பு குழுவினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.
அணை உடைந்துள்ளதால் ரஷிய மற்றும் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சுமார் 42 ஆயிரம் பேர் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில் அணையில் இருந்து வெளியேறிய வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுதொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை கூறும்போது, 'உக்ரைன் அணை உடைப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும், என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி கூறும்போது, 'இந்த நேரத்தில் என்ன நடந்தது என்பதை அமெரிக்காவில் உறுதியாக கூற முடியாது. ஆனால் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா இறுதி முடிவுக்கு இன்னும் வரவில்லை. நாங்கள் தகவல்களை சேகரித்து உக்ரைனியர்களுடன் பேச முயற்சிக்கிறோம்' என்றார்.
இதற்கிடையே ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள நதிக்கரையில் இருக்கும் கஸ்கோவா டிப்ரோவா உயிரியல் பூங்கா முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கிருந்த 300 விலங்குகளும் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பேரிடர் குழுவால் மீட்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
பேரிடர் குழுவால் மீட்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பன்னு, டேரா, கரக் மற்றும் லக்கி மார்வார்ட் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதில் சுமார் 70 வீடுகள் இடிந்து விழுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.