search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளம்"

    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
    • இடி-மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும், இன்று முழுவதும் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    மாநிலங்களில் பெய்த பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை காரணமாக சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    மேலும், காதலர்களின் நினைவுச்சின்னமாக கருதப்படும் தாஜ்மஹாலில் உள்ள ஷாஜகானின் கல்லறை நீரால் சூழப்பட்டுள்ளது. ஆக்ராவில் கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

    இந்த நிலையில் டெல்லிக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இடி-மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும், இன்று முழுவதும் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. உத்தரபிரதேசத்தின் மொராதா பாத்தில் கனமழை, காற்றின் காரணமாக கரும்பு மற்றும் நெல் பயிர்கள் அழிந்தன. உத்தரகாண்ட் மாநிலம் தனக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக மலையில் இருந்து கற்கள், மணல் விழுந்தது. இதனால் அந்த நெடுஞ்சாலை மூடப்பட்டது.

    • இரண்டு பேரும் காரில் இருந்து இறங்கி நீந்தி பாதுகாப்பாக செல்ல முயன்றனர். ஆனால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
    • கார் வெள்ளத்தில் சிக்கியிருப்பது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பல மணி நேரம் போராட்டத்திற்கு இருவரின் உடல்களையும் கண்டெடுத்தனர்.

    டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    மாநிலங்களில் பெய்த பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை காரணமாக சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    இந்த நிலையில், ஃபரிதாபாத்தில் வெள்ளம் சூழ்ந்த பாதாள சாக்கடையில் எஸ்யூவி கார் தண்ணீரில் மூழ்கியதில் வங்கி மேலாளர் மற்றும் காசாளர் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    குருகிராமில் உள்ள செக்டார் 31ல் உள்ள தனியார் வங்கி கிளையின் மேலாளராக இருந்த புண்யஸ்ரேயா ஷர்மாவும், அங்கு காசாளராக இருந்த விராஜ் திவேதியும் பணி முடிந்து நேற்று மாலை மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் ஃபரிதாபாத்துக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பழைய ஃபரிதாபாத் ரெயில்வே சுரங்கப்பாதையை அடைந்த போது, அப்பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருப்பதைக் கண்டனர். ஆனால் தண்ணீர் எவ்வளவு உயரத்திற்கு இருக்கும் என்பதை அறிய முடியவில்லை.

    இதனால், சுதாரிப்பதற்குள் கார் வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியது. இதனால் இரண்டு பேரும் காரில் இருந்து இறங்கி நீந்தி பாதுகாப்பாக செல்ல முயன்றனர். ஆனால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    கார் வெள்ளத்தில் சிக்கியிருப்பது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பல மணி நேரம் போராட்டத்திற்கு இருவரின் உடல்களையும் கண்டெடுத்தனர். 

    • விஜயவாடாவில் கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு மழை வெள்ளம் படிப்படியாக குறைந்து வருகிறது.
    • ஜெர்ரி போட்டு வகையை சார்ந்த பழுப்பு மற்றும் தங்க நிறத்திலான பாம்புகள் அதிக அளவில் காணப்படுகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் கடந்த வாரம் வரலாறு காணாத அளவு மழை கொட்டி தீர்த்தது. இதனால் விஜயவாடா, கர்னூல், கடப்பா உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் மழை வெள்ளம் ஊர்களுக்குள் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்தது. விஜயவாடாவில் கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு மழை வெள்ளம் படிப்படியாக குறைந்து வருகிறது.

    மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மரங்கள், புதர்கள் மற்றும் புற்றுகளில் இருந்த பாம்புகள் வெளியேறி குடியிருப்புகளுக்குள் புகுந்தனர். விஜயவாடாவில் மட்டும் 70 பேரை பாம்புகள் கடித்தன. பாம்பு கடிபட்டவர்கள் சரியான நேரத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் கிருஷ்ணா மாவட்டம், அவனி பட்டாவில் ஜெர்ரி போட்டு வகையை சார்ந்த பழுப்பு மற்றும் தங்க நிறத்திலான பாம்புகள் அதிக அளவில் காணப்படுகிறது.

    இந்த வகையான பாம்புகள் விஷத்தன்மை இல்லாதவை என்பதால் பாம்பு கடிபட்டவர்களுக்கு உயிர் சேதம் ஏற்படவில்லை என தெரிவித்தனர்.

    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குத் தெலுங்கு திரைப் பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர்.
    • நடிகர் பிரபாஸ் தெலங்கானா- ஆந்திரா பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களும் குறிப்பாக விஜயவாடா கடுமையாக பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குத் தெலுங்கு திரைப் பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தனது சொந்த பணத்திலிருந்து ரூ.1 கோடியை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இதேபோல் நடிகர் பிரபாஸ் தெலங்கானா- ஆந்திரா பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.

    முன்னதாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் பொது நிவாரண நிதிக்கு நடிகர்கள் மகேஷ் பாபு, சிரஞ்சீவி, பாலய்யா, பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர். அல்லு அர்ஜுன் ஆகியோர் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி அளிப்பதாக தெரிவித்தனர்.

    ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்ற தெலுங்கு தேசம் வெற்றி பெட்ரா நிலையில் சாநிரபாபு நாயுடு முதலமைச்சர் ஆனார். அதே கூட்டணியில் இடம்பெற்ற ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராக பணியேற்றது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 1,000 பேர் உயிரிழந்தனர்
    • வெள்ள பாதிப்புகளைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிபர் கிம் உத்தரவிட்டிருந்தார்

    வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 1,000 பேர் உயிரிழந்த நிலையில், அதை தடுக்கத் தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவுப்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 4,100 வீடுகள், 7,410 விவசாய நிலங்கள், அரசு கட்டடங்கள்,சாலைகள் மற்றும் ரெயில்வே லைன்கள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. இந்த பாதிப்புகளில் சிக்கி 1000 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வட மேற்கு பகுதிகளில் உலா சின்உய்ஜூ[Sinuiju], உய்ஜூ Uiju உள்ளிட்ட நகரங்களின் அதிக அழிவுகள் நிகழ்ந்துள்ளன.வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட கிம் ஜாங் உன் அவ்விடங்களை மீண்டும் கட்டியெழுப்ப பல மாதங்கள் ஆகும் என்று தெரிவித்தார். மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 15,400 பேருக்கு தலைநகர் பியோங்யாங்கில் அரசாங்கம் தற்காலிக தங்குமிடம் வழங்கியுள்ளது.

     

     

    இந்த வெள்ள பாதிப்புகளைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிபர் கிம் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் அதிபரின் உத்தரவுப்படி கடந்த மாத இறுதியில் ஊழல் மற்றும் கடமை தவறிய அரசு அதிகாரிகளாக 30 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

     

    இதுதொடர்பாக தென்கொரியாவின் சோசன் டிவி உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில் வட கொரியா தரப்பில் எதுவும் கூறப்படவில்லை. முன்னதாக வட கொரிய வெள்ளத்தில் அதிக மக்கள் உயிரிழந்துள்ளதை மறுத்த அதிபர் கிம் ஜாங் உன் இவை வட கொரியாவின் சர்வதேச பிம்பத்தைச் சிதைக்கத் தென் கொரியா பரப்பும் வதந்திகள் என்று மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கனமழைக்கு ஆந்திராவில் 17 பேரும், தெலுங்கானாவில் 16 பேரும் பலியாகியுள்ளனர்.
    • இரு மாநிலங்களிலும் பெய்து வரும் கன மழையால் வீடுகள், பயிர்கள், சாலைகள் சேதமடைந்துள்ளன.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கனமழைக்கு ஆந்திராவில் 17 பேரும், தெலுங்கானாவில் 16 பேரும் பலியாகியுள்ளனர்.

    தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

    கடந்த 3 நாட்களாக இரு மாநிலங்களிலும் பெய்து வரும் கன மழையால் வீடுகள், பயிர்கள், சாலைகள் சேதமடைந்துள்ளன.

    இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கவுள்ளதாக நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான பாலய்யா அறிவித்துள்ளார்.

    இதற்கு முன்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் நன்கொடை வழங்குவதாக தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தெரிவித்திருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் முன்னாள் முதலவர் கேசிஆர் மகன் கேடிஆர் இடையில் வார்த்தைப் போர் மூண்டுள்ளது.
    • கேடிஆர் அமெரிக்காவில் தனது விடுமுறையை அனுபவித்தபடி ட்வீட் மட்டும் செய்து கொண்டிருக்கிறார்

    மழை வெள்ளம் 

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது. மழையினால் தெலுங்கானாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வார்த்தைப் போர் 

    இந்நிலையில் வெள்ள பாதிப்புகளைக் கையாளுவது குறித்து காங்கிரஸ் ஆளும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் பிஆர்எஸ் எம்எல்ஏவும் முன்னாள் முதலவர் சந்திரசேகர ராவின்[கேசிஆர்] மகனுமான கேடிஆர் இடையில் கடுமையான வார்த்தைப் போர் மூண்டுள்ளது.

    கேடிஆரின் சந்திரபாபு நாயுடு ரெபரென்ஸ் 

    'ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 6 ஹெலிக்கப்டர்களை அம்மாநிலத்தில் மீட்புப் பணிக்கு அனுப்பியுள்ளார், ஆனால் தெலுங்கானா காங்கிரஸ் அரசு ஒரு ஹெலிக்கப்டரை கூட மீட்புப் பணிக்கு அனுப்பவில்லை. மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது, கம்மம் மாவட்டத்தில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

    ஆனால் அந்த பகுதியை சேர்ந்த 3 பேர் அமைச்சர்களாக இருந்தும் அப்பகுதி மக்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. பொறுமையிழந்த மக்கள் வீதியில் இறங்கி உதவி கேட்கின்றனர். காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோது வெள்ள சமயங்களில் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டது. ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்ததும் ரூ.5 லட்சம் தான் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது' என்று தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் அரசை கேடிஆர் சாடியுள்ளார்.

     

    ரேவந்த் ரெட்டி பதிலடி 

    இந்நிலையில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட வந்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது, "கேசிஆர் தனது பார்ம் ஹவுஸை விட்டு வெளியே வரவே இல்லை. அதேநேரம் கேடிஆர் அமெரிக்காவில் தனது விடுமுறையை அனுபவித்தபடி ட்வீட் மட்டும் செய்து கொண்டிருக்கிறார். நானும் அமைச்சர்களும் தான் இங்குக் களத்தில் மக்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

    மேலும் வானிலை மோசமாக உள்ள காரணத்தால் தான் ஹெலிகாப்டர்களை மீட்புப்பணிக்கு அனுப்ப முடியாத சூழல் உள்ளது. அதற்கு எங்களிடம் ஆதாரமும் உள்ளது என்று அமைச்சர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, கேடிஆர் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ளார். 

    • காப்பாற்றிய முதலையை மீட்புக் குழுவினர் ஸ்கூட்டரில் அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
    • தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் சுமார் 20 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

    குஜராத்தின் கட்ச் அருகே அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக குஜராத்தில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த கனமழைக்கு இதுவரை 30க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய சுமார் 1,200 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதைப்போலத் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் சுமார் 20 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். விஸ்வமித்ரி உள்ளிட்ட 24 ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு வருகிறது.

     

    அஜ்வா அணை நிரம்பியதை அடுத்து ,அதிலிருந்து உபரி நீர் விஸ்வாமித்ரி ஆற்றில் திறந்து விடப்பட்ட நிலையில் அணையிலிருந்த 440 முதலைகளில் பெரும்பாலானவை அருகில் உள்ள வதோரா கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளது. மாடுகளை முதலைகள் இழுத்துச்சென்று விடுவதால் அப்பகுதியில் அச்சம் நிலவுகிறது. வெள்ளை நீர் வடிய வடிய இங்கு புகுந்த முதலைகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர்.

    இதுவரை 40 க்கும் மேற்பட்ட முதலைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் காப்பாற்றிய முதலையை மீட்புக் குழுவினர் ஸ்கூட்டரில் அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஷூட்டரில் பின்புறம் அமர்ந்துள்ள நபர் முதலையைக் கையில் வைத்திருக்க மற்றொரு நபர் சாலையில் பிரதான சாலையில் வண்டியை ஓட்டிச்  செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    • பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள நிபோல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • நிபோல் ஆற்றில் மேல் கட்டப்பட்ட பாலத்தை தாண்டி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பன்ஸ்வாரா மாவட்டத்தில் மட்டும் 24 மணிநேரத்தில் 202 மிமீ மழை பதிவாகியுள்ளது.

    இதனால் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள நிபோல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றில் மேல் கட்டப்பட்ட பாலத்தை தாண்டி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

    பாலத்திற்கு மேல் ஆற்று நீர் சென்ற நிலையிலும் ஆபத்தை உணராமல் பல லாரிகள் பாலத்தை கடந்து வந்தன. அப்போது பாலத்திற்கு மேல் வந்த லாரி ஒன்று நீரின் வேகத்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.

    அப்போது லாரி ஓட்டுனரை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றினார்கள். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இந்தோனேசியா வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பலியாகினர்.
    • மாயமான பலரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் மழைக்காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படுகிறது. லட்சக்கணக்கானோர் மலைப் பகுதிகள் மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளுக்கு அருகில் வசித்து வருவதால் பேரிடர் காலங்களில் உயிர்ச்சேதம், பொருட்சேதம் அதிகமாக உள்ளது.

    இதற்கிடையே, இந்தோனேசியாவின் வடக்கு மலுகு மாகாணம், டெர்னேட் தீவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

    ருவா கிராமத்தில் குடியிருப்புகளை வெள்ளம் அடித்துச் சென்றதுடன், பிரதான சாலை மற்றும் அந்த கிராமத்திற்கான தரைவழி தொடர்பு துண்டிக்கப்பட்டது. பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேற்றில் புதைந்தன.

    இந்நிலையில், இந்தோனேசியா கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக பலியாகினர் என்றும், மாயமான பலரை மீட்புக் குழு தேடி வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிறப்பு வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட அய்யப்பனை தேடும் பணி நடந்தது.

    புதுச்சேரி:

    தென்மேற்கு பருவமழை கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது.

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக புதுவையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

    நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 2 மேணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. 11 செ.மீ. மழை பதிவானது. இதனால் நகர பகுதியில் சாலைகள் வெள்ளகாடானது.

    அதேநேரத்தில் நேற்று பகல் முழுவதும் கடும் வெயில் கொளுத்தியது. மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. இரவு 9.30 மணிக்கு இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு 11 மணி வரை மழை பெய்த வண்ணம் இருந்தது.

    இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.மழை நின்றாலும் ஒரு மணி நேரத்துக்கு பிறகு தான் நீர் வடிந்தது.


    மொத்தமாக கடந்த 24 மணி நேரத்தில் 15.5 செ.மீட்டர் மழை அளவு புதுச்சேரியில் பதிவானது.

    இதனிடையே லாஸ்பேட்டை மேட்டுப்பகுதியில் இருந்து மழை வெள்ளம் தாழ்வான பகுதியான ஜீவானந்தபுரம் ஓடை வழியாக கொக்கு பார்க்கு பாலத்தை கடந்து சென்றது.

    அப்போது ஒடையையொட்டி நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை எடுக்கச் சென்ற அந்த பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவர் வெள்ள நீரில் இழுத்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற சென்ற 2 பேரும் ஓடைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

    அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து செயல்பட்டு இருவரை மீட்டனர். அய்யப்பனை மீட்க முடியவில்லை. அவரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுட்டனர்.


    நள்ளிரவையும் கடந்து தட்டாஞ்சாவடி மற்றும் கொக்கு பார்க் பகுதியில் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட அய்யப்பனை தேடும் பணி நடந்தது. தகவல் அறிந்து தொகுதி எம்.எல்.ஏ.வான வைத்தியநாதன் அங்கு வந்து தேடும் பணியை முடுக்கி விட்டார்.

    இருப்பினும் அய்யப்பன் இன்னும் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் புதுச்சேரியில் கோடையின் போது வெயிலின் தாக்கத்தால் கூடுதல் விடுமுறை விடப்பட்டதை ஈடுகட்டும் வகையில் சனிக்கிழமைகளில் வேலை நாளாக அரசு அறிவித்து இருந்தது.

    அதன்படி இன்று (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படுவதாக இருந்தது. ஆனால் பலத்த மழை பெய்ததையொட்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கல்வி துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • காவிரி கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றனர்.
    • தீயணைப்பு வீரர்கள், போலீசார், வருவாய் துறையினர் ஆகியோர் வெள்ளத் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா, கேரளா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அந்த அணைகளுக்கு வரும் உபரி நீரை அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றி வருகிறது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை சற்று அதிகரித்து வினாடிக்கு 1 லட்சத்து 66 ஆயிரம் கன அடியாக தண்ணீர் இன்று 1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி அளவில் நீர் திறந்து விடப்பட்டது.

    கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கடந்த 2 தினங்களாக தொடர்ந்து நீர்வரத்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நீரானது நேற்று காலை 9 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 55,000 கன அடியாக அதிகரித்து காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மதியம் 1 மணி நிலவரப்படி நீர்வரத்து மேலும் அதிகரித்து 1 லட்சத்து 60,000 கன அடியாக அதிகரித்தது.

    இந்த நீர்வரத்தானது நேற்று மாலை வரை அதே நிலையில் நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று சரிந்து 1 லட்சத்து 45 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    மேலும் கர்நாடகா அணைகளான கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் தமிழகத்திற்கு திறந்து விடும் உபரி நீர் 1 லட்சத்து 43 ஆயிரம் கன அடியாக சரிந்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தும் சரிய வாய்ப்பு உள்ளது என மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதன் காரணமாக பிலிக்குண்டுலு பகுதியில் தொடர்ந்து நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இன்று 3-வது நாளாக ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நாகர்கோவில், முதலை பண்ணை, பென்னாகரத்தில் உள்ள நாகமரை, ஏரியூர் ஆகிய காவிரி கரையோர மக்களுக்கு தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அதிகாரிகள் வெள்ளம் சூழந்துள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு பொதுமக்களை மக்கள் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள தனியார் திருமண மண்டபம் மற்றும் அரசு பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலா தளத்தில் பரிசல் இயக்கவும் அருவிகளில் மற்றும் காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் 14-வது நாளாக தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. தீயணைப்பு வீரர்கள், போலீசார், வருவாய் துறையினர் ஆகியோர் வெள்ளத் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×