search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98643"

    • திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மழை நீடித்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் விட்டுவிட்டு பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக குளுகுளு சீசன் நிலவுகிறது.

    நேற்று இரவு மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று காலையிலும் மழை நீடித்தது. அதிகாலையில் பெய்ய தொடங்கிய மழை சுமார் அரைமணி நேரமாக நீடித்தது. சுசீந்திரம், கொட்டாரம், ஆரல்வாய்மொழி, அஞ்சு கிராமம், தடிக்காரன் கோணம், கீரிப்பாறை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் பெய்தது.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அங்கு ரம்யமான சூழல் நிலவுவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அய்யப்ப பக்தர்களின் கூட்டமும் அலைமோதி வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மழை நீடித்தது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.37 அடியாக உள்ளது. அணைக்கு 786 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 785 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி நீர்மட்டம் 72.99 அடியாக உள்ளது. அணைக்கு 173 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கூடல் அணை நீர்மட்டம் 20.80 அடியாக உள்ளது.

    ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் சாரல் மழை பெய்து வருகிறது. மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான மீனவர்கள் இன்று 4-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    இதனால் விசைப்படகுகள், வள்ளங்கள் கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

    • காற்றழுத்த தாழ்வு கன்னியாகுமரியை நெருங்கி வருவதையடுத்து குமரி கடலோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
    • சின்னமுட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுகங்களிலும், கடற்கரை கிராமங்களிலும் நாட்டுப்புற படகுகள் மற்றும் விசைப்படகுகளை பத்திரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில், டிச.25-

    வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்ட லம் நாளை குமரியை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு கன்னியாகுமரியை நெருங்கி வருவதையடுத்து குமரி கடலோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மீனவர் கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    காற்றின் வேகம் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலை யில் இதற்கான அறிவிப்பு குமரி மாவட்டத்தில் உள்ள கடலோர கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராம மக்களுக்கு அந்தந்த பங்கு தந்தைகள் மூலமாகவும், மீனவ பிரதிநிதிகள் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் கரை திரும்புமாறும் அறிவு றுத்தப்பட்டு உள்ளனர்.

    ஏற்கனவே கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பெரும்பாலான மீனவர்கள் கரை திரும்பிய நிலையில் ஒரு சில மீனவர்கள் மட்டுமே ஆழ்கடலில் மீன் பிடித்து வருகிறார்கள். அவர்களும் கரை திரும்புமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தங்களது படகுகளை பாது காப்பான இடங்களில் நிறுத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    சின்னமுட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுகங்களிலும், கடற்கரை கிராமங்களிலும் நாட்டுப்புற படகுகள் மற்றும் விசைப்படகுகளை பத்திரமாக நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது.

    • துறைமுகம் வெறிச்சோடியது
    • புயல், மழை எச்சரிக்கை எதிரொலி

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது.

    இந்த துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் அடிக்கடி புயல் மழை ஏற்பட்டது.அதுமட்டுமின்றி அவ்வப்போது சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வந்தது.

    மேலும் குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி மாற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுவந்தனர்.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் துறைமுகத்தை தங்குதள மாகக்கொண்டு மீன் பிடித் தொழிலில் ஈடு பட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடந்த3மாதங்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் இந்த விசைப்படகுகள் அனைத்தும் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி கரை யோரமாக நிறுத்தி வைக் கப்பட்டு உள்ளன.

    இதனால் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு மீன் வரத்து அடியோடு நின்றுவிட்டன. இதைத் தொடர்ந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மின் சந்தைகள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. மீன் விலையும் 'கிடுகிடு"என்று உயர்ந்து உள்ளது.

    இதேபோல ஆரோக்கிய புரம், கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத் துறை, கோவளம் கீழம ணக்குடி, மணக்குடி, பள்ளம் ராஜாக்கமங்கலம் துறை போன்ற கடற்கரை கிராமங்களிலும் பெரும்பா லான கட்டுமரம், வள்ளம் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் இந்த கடற்கரை கிராமங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    • மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
    • 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 70 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

     நாகப்பட்டினம்:

    தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சில அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன.

    இதனால் நாகை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று நாகை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தி வருகின்றனர். அதன்படி மீனவர்களும் கரைக்கு திரும்பினர்.

    இதனால் இன்று நாகை, அக்கரைபேட்மாடை, வேதாரண்யம், வேளாங்கண்ணி உள்பட 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 70 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    700 விசைப்–படகுகள், 3000 பைபர் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்தனர்.

    • இறால், வஞ்சிரம், ஷீலா, பாறை போன்ற விலை உயர்ந்த மீன்கள் ஏதும் வலையில் சிக்கவில்லை.
    • இவ்வகை மீன்களை பிடிக்க சிறு வகை படகுகளில் ஆழ்கடலுக்கு செல்ல முடியாது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் பகுதியில் மழை, கடல் சீற்றம், "மாண்டஸ்" புயல் என கடந்த 7 நாட்களாக கடலின் அலை மேலோட்டமாகவும், ஆழ்கடல் அழுத்தமும் இயற்கைக்கு மாறாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று கடலுக்கு செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்தது. இதையடுத்து மாமல்லபுரம், தேவநேரி, நெம்மேலி, வெண்புருஷம், உய்யாலிகுப்பம், புதுப்பட்டினம் பகுதி மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

    வழக்கம் போல் இவர்கள் 5.கி.மீ., துரம் வரை சென்று மீன் பிடித்தனர். ஆனால் வலையில் இறால், வஞ்சிரம், ஷீலா, பாறை போன்ற விலை உயர்ந்த மீன்கள் ஏதும் சிக்கவில்லை. அவைகள் "மாண்டஸ்" புயலால் கடலில் சீற்றம் மாறுபட்டதால் 25 கி.மீ., தூரத்திற்கு சென்றுவிட்டதாக அப்பகுதி மீனவர்கள் கூறுகிறார்கள்.

    இவ்வகை மீன்களை பிடிக்க சிறு வகை படகுகளில் அங்கு செல்ல முடியாது. அப்படி சென்றாலும், டீசல், நேரம், மோட்டார் தேய்மானம் கணக்கிட்டால் ஆதாயம் கிடைக்காது. அதனால் வீட்டுக்கு தேவையான மத்தி, பூச்சி, நாக்பூச்சி மீன்களை மட்டும் பிடித்து வரும் சூழ்நிலை தான் தற்போது ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

    • கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 படகுகளில் வந்தனர்.
    • கரைதிரும்பியது மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தில் மீனவர்கள்புகார் செய்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா புஷ்பவனம் மீனவர் தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன்.

    இவருக்கு சொந்தமான பைபர் படகில் முனீஸ்வரன், அதே பகுதியை சேர்ந்த முகுந்தன், காளியப்பன் மற்றும் வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் மீன் பிடிக்க சென்றனர்.

    புஷ்பவனத்திற்கு தென்கிழக்கே சுமார் 24 நாட்டிகல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு 2 படகுகளில் வந்த அடையாளம் தெரியாத இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள், இவர்கள் விரித்திருந்த வலையில் சுமார் ரூ, 4 லட்சம் மதிப்புள்ள 450 கிலோ வலையை வெட்டி எடுத்துச் சென்று விட்டனர்.

    இந்நிலையில் இன்று காலை புஷ்பவனம் கடற்கரைக்கு திரும்பிய மீனவர்கள் இது குறித்து வேதாரண்யம் கடற்கரை போலீசில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து 700 விசைப்படகுகள், 3ஆயரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க சென்றனர்.
    • ஒரு வாரத்திற்கு பிறகு மீன் பிடிக்க மீன்வளத்துறையினர் அனுமதித்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    வங்கக்கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற நாகை மீனவர்கள் தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என கடந்த ௪-ம்தேதி மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 25 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    மேலும் மாண்டஸ் புயல் கரையை கடந்ததைத் தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று இறக்க ப்பட்டது. மேலும் கடல் சீற்றம் குறைந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு மீன் பிடிக்க மீன்வளத்துறையினர் அனுமதித்துள்ளனர்.

    மேலும் மீன்வளத்துறை மூலம் படகுகளுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று அதிகாலை நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 700 விசைப்படகுகள் 3 ஆயரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க சென்றனர்.

    ஒரு வாரத்திற்கு பிறகு மீன்பிடிக்கச் செல்லும் அக்கரைப்பேட்டை, நாகூர் பட்டினச்சேரி, நம்பியார் நகர், செருதூர், காமேஷ்வரம் விழுந்தமாவடி, ஆறுக்காட்டுதுறை, கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் அதிக அளவில் மீன் கிடைக்கும் என மகிழ்ச்சியில் சென்றுள்ளனர்.

    • சுமார் 50 முதல் 60 அடி முன்னோக்கி கடல் அலை வந்து சென்றதால் மீனவர்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டது.
    • 49 மீனவ கிராமங்கள் மற்றும் துறைமுகத்தில் அனைத்து படகுகளும் நின்று ஓய்வு எடுத்தன.

    கடலூர்:

    மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மாமல்லபுரம் பகுதியில் சுமார் 60 முதல் 85 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசி கரையை கடந்தது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை மற்றும் பலத்த காற்று வீசி வந்தது. இந்த நிலையில் கடல் அலை வழக்கத்தை விட சுமார் 14 அடி உயரம் உயர்ந்து, கடல் சீற்றம் ஏற்பட்டு சுமார் 50 முதல் 60 அடி முன்னோக்கி கடல் அலை வந்து சென்றதால் மீனவர்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 6-ந் தேதி முதல் கடல் சீற்றம் மற்றும் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல க்கூடாது என மீன்வ ளத்துறை அதிகா ரிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.இந்த நிலையில் இதனை மீறி மீனவர்கள் யாரேனும் மீன்பிடிக்க சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையையும் விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து கடந்த 6-ந் தேதி முதல் மீனவர்கள் கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த படகுகளை பாதுகாப்பாக முன்னோக்கி கொண்டு வந்து வைத்தனர்.

    மேலும் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை. இது மட்டுமின்றி கடலில் தங்கி மீன் பிடித்த மீனவர்களும் உடனடியாக கரைக்கு திரும்பி வந்ததால் கடலூர் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராமங்கள் மற்றும் துறைமுகத்தில் அனைத்து படகுகளும் நின்று ஓய்வு எடுத்தன. இந்த நிலையில் நேற்றுடன் இயல்புகள் நிலைக்கு கடல் பகுதி திரும்பியதால் மீனவர்கள் இன்று 11-ந் தேதி முதல் வழக்கம் போல் மீன் பிடிக்க செல்லலாம் என மீனவளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி அதிகாலை முதல் மீனவர்கள் ஆர்வமுடன் மீன் பிடிக்க சென்றனர். மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் நள்ளிரவு முதல் ஒரு சில மீனவர்கள் மீன் பிடிக்க சென்று மீன் பிடித்து கடலூர் துறைமுகம் மற்றும் கரைக்கு ஆர்வமுடன் கொண்டு வந்து மீன்கள் விற்பனை செய்ததை காண முடிந்தது. 

    • மீனவர்கள் 4-வது நாளாக மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
    • மீனவர்கள் தங்கள் படகுகளிலேயே தங்கி பாதுகாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    சீர்காழி:

    மாண்டஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    இதனால் 16 கிராம மீனவர்கள் 4-வது நாளாக மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பூம்புகாரில் ரூ.148 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரம் முறையாக அமைக்கப்படாததால் துறைமுகத்தின் உள்ளே படகு தளத்தில் படகுகளை நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    அருகில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்ட விசைப்படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்து வருகிறது.

    கடல் சீற்றம் மேலும் அதிகரித்தால் படகுகள் பாதிக்கும் நிலை ஏற்படும்.இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளிலேயே தங்கி பாதுகாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    எனவே பூம்புகார் துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைத்து முகத்துவாரத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டுமென பூம்புகார் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புயலின் காரணமாக மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் .
    • கடற்கரை ஓரமுள்ள மீனவர்கள் கூட மேடான பகுதிக்கு செல்ல வேண்டும்

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் பகுதி கடற்கரை ஓரம் அமைந்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் பருவ மழை புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின் பொழுது இங்கு அதிகப்படியான பாதிப்புகள் உண்டாகிறது . இந்நிலையில் தற்பொழுது வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மான்டஸ் புயலின் காரணமாக மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக மரக்காணம் பகுதி கடலில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு அலைகளின் சீற்றம் ஆக்ரோஷமாக உள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 கிராம மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டுள்ளது .இதுபோல் மீனவர்கள் தங்களது மீன்பிடி சாதனங்களான பைபர் படகு வலை போன்றவைகளை பாதுகாப்பான இடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும்.

    மேலும் கடற்கரை ஓரமுள்ள மீனவர்கள் கூட மேடான பகுதிக்கு செல்ல வேண்டும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் மீனவ கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது இந்த எச்சரிக்கையின் காரணமாக மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். மரக்காணம் பகுதி கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதால் எக்கிய குப்பம் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்கின்றனர்

    • 25 மீனவ கிராமங்களை சேர்ந்த 700 விசைப்படகுகளும், 3 ஆயிரம் பைபர் படகுகளும் துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாகவும் உடனடியாக அரசு நிவாரணம் வழங்கவும் இந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி அவ்வப்பொழுது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வரும் சூழ்நிலையில் தற்போது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக உருமாறி உள்ளது இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

    மேலும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணுார், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 1-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று திருமுல்லைவாசல், பூம்புகார் பகுதிகளுக்கு சென்ற மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு மற்றும் காவல் நிலைய போலீசார் வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாகியுள்ள காரணத்தினால் இன்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரையில் 16 மீனவ கிராமங்களை சேர்ந்த விசைபடகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவோ, கடலில் தங்கி மீன்பிடிக்கவோ வேண்டாம் எனவும், மேலும் தங்கள் படகுகளையும், உடமைகளையும் பத்திரமாக வைத்துகொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனால் சீர்காழி தாலுகாவை சேர்ந்த பழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி வரையிலான 16 மீனவ கிராமம் மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுக்கு சொந்தமான 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 2500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் நாட்டுப் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

    கடந்த ஒரு மாத காலமாக வங்க கடலில் உருவாகும் தொடர் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாகவும் உடனடியாக அரசு நிவாரணம் வழங்கவும் இந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மீன்வளத் துறை மூலம் வழங்கப்படும் டோக்கன் நிறுத்தப்பட்டுள்ளதால், நாகை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் கல்லார் செருதூர் நாகூர் நம்பியார்நகர் சாமந்தான்–குட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    25 மீனவ கிராமங்களை சேர்ந்த 700 விசைப்படகுகளும், 3 ஆயிரம் பைபர் படகுகளும் துறைமுகம் மற்றும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    • கடலுக்கு செல்ல கூடாது என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
    • வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.

    புதுச்சேரி:

    வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லகூடாது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் காரைக்கால் பகுதியை சேர்ந்த 11 கிராமங்களில் உள்ள மீனவர்களுக்கு யாரும் கடலுக்கு செல்ல கூடாது என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதையொட்டி காரை க்கால் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இந்த பகுதியில் 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் விசை படகுகள் அனைத்தும் துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    பைபர் படகுகள் அரசலாற்றங்கரை மற்றும் துறைமுக பகுதியில் மீனவர்கள் நிறுத்தி உள்ளனர். காரைக்காலில் கடலில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. எனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர். 

    ×