search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குமாரசாமி"

    • மத்திய மந்திரி குமாரசாமி சீதாபுரா கிராமத்தில் நாற்று நட்டார்.
    • முன்னதாக அவர் காவிரி ஆற்றுக்கு பூஜை செய்து வழிபட்டார்.

    மாண்டியா:

    பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் கனரக தொழில்துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார் குமாரசாமி.

    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டம் பாண்டவபுராவின் சீதாபுரா கிராமத்தில் நிலம் ஒன்றில் மத்திய மந்திரி குமாரசாமி இன்று நாற்று நட்டார்.

    காவிரி ஆற்றுக்கு பூஜை செய்த குமாரசாமி, அதன்பின் நிலத்தில் இறங்கி நாற்று நட்டார்.

    ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டில் முதல் மந்திரியாக இருந்த குமாரசாமி நிலத்தில் இறங்கி நாற்று நட்டு, பயிரிடும் பணிகளை தொடங்கி வைத்து விவசாயிகளை உற்சாகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.



    • மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட குமாரசாமி வெற்றி பெற்றார்.
    • புதிதாக பதவியேற்ற அமைச்சரவையில் குமாரசாமி மத்திய மந்திரியாக பொறுப்பேற்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான குமாரசாமி வெற்றி பெற்றார். பிரதமர் மோடி தலைமையில் பதவியேற்ற அமைச்சரவையில் குமாரசாமி மத்திய மந்திரியாக பொறுப்பேற்றார்.

    கனரக தொழில்துறை மற்றும் எஃகு துறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய மந்திரியாக குமாரசாமி பதவியேற்று இருப்பது இதுவே முதல் முறை.

    இதற்கிடையே, மத்திய மந்திரியாக பொறுப்பேற்ற குமாரசாமி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, பிரதமர் மோடி எனக்கு பெரிய பொறுப்பை அளித்துள்ளார் என தெரிவித்தார்.

    இந்நிலையில், மத்திய மந்திரி குமாரசாமி இன்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது, கர்நாடக அரசியல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்தனர் என குமாரசாமியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • மத்திய மந்திரியாக குமாரசாமி பதவியேற்று இருப்பது இதுவே முதல் முறை.
    • கனரக தொழில்துறை மற்றும் எஃகு துறை குமாரசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி வெற்றி பெற்றார். இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் பதவியேற்ற அமைச்சரவையில் குமாரசாமி மத்திய மந்திரியாக பொறுப்பேற்றார். கனரக தொழில்துறை மற்றும் எஃகு துறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மத்திய மந்திரியாக குமாரசாமி பதவியேற்று இருப்பது இதுவே முதல் முறை.

    இந்நிலையில், மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதும் குமாரசாமி இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    திருப்பதியில் சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்த பின் குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பிரதமர் மோடி எனக்கு பெரிய பொறுப்பை அளித்துள்ளார். மத்திய அரசில் அமைச்சராக பதவி வகித்து வெற்றி பெற வெங்கடேஸ்வராவின் ஆசிர்வாதம் பெற வந்தேன் என்றார்.

    • மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும் மத்திய அமைச்சருமான எச்.டி.குமாரசாமி பெங்களூருவில் இன்று ரோடு ஷோ நடத்தினார்.
    • வழி நெடுகிலும் பொதுமக்கள் கூட்டமாக திரண்டு, பூக்களை தூவி குமாரசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான குமாரசாமி 8,51,881 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடரமண கவுடா 567261 வாக்குகள் பெற்று இருந்தார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 2,84,620 ஆகும்.

    குமாரசாமி இந்த முறை பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தார். தேர்தலில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு துணை நின்றதுடன், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசியலிலும் இணைந்திருக்கிறார். மத்திய மந்திரியாக குமாரசாமி பதவியேற்று இருப்பது இதுவே முதல் முறை.

    இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும் மத்திய அமைச்சருமான எச்.டி.குமாரசாமி பெங்களூருவில் இன்று ரோடு ஷோ நடத்தினார். வழி நெடுகிலும் பொதுமக்கள் கூட்டமாக திரண்டு, பூக்களை தூவி குமாரசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அப்போது குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    "இன்று மக்கள் தாமாக முன்வந்து என்னை அன்புடன் வரவேற்றனர். மக்கள்தான் எனது பலம். கர்நாடகாவின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி நாட்டிற்காகவும் பாடுபடுவேன். கர்நாடக மக்கள் காங்கிரசுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர் என்று கூறினார்.


    • பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
    • கர்நாடகத்தின் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி வெற்றி பெற்றார்.

    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 296 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

    இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார். இவர் 8,51,881 வாக்குகள் பெற்றார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடரமண கவுடா567261 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 2,84,620 ஆகும்.

    • போலீசார் பிரஜ்வல் ரேவண்ணா தேடப்படும் நபராக அறிவித்து உள்ளனர்.
    • எங்களது குடும்பத்தினரின் தொலைபேசிகளை அரசு ஒட்டு கேட்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானதை அடுத்து அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    ஆபாச வீடியோ குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் பிரஜ்வல் ரேவண்ணா தேடப்படும் நபராக அறிவித்து உள்ளனர். மேலும் அவரை கைது செய்ய கோர்ட்டு பிடிவாரண்டும் பிறப்பித்தது. ஆனால் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் உள்ளார் என்று தெரியாமல் விசாரணை அதிகாரிகள் உள்ளனர்.

    இதற்கிடையே மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி, பிரஜ்வலுக்கு வேண்டுகோள் விடுத்து கூறியதாவது:-

    எனது சகோதரர் ரேவண்ணா மற்றும் அவரது குடும்பத்தினர் செய்யும் தொழில் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தொடர்பான புகாரில் தவறு செய்யவில்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும். எனவே அவர் உடனடியாக இந்தியாவுக்கு திரும்பி வந்து சிறப்பு புலனாய்வு குழு முன்பு நேரில் ஆஜர்ஆகி குடும்ப மானத்தை காப்பாற்ற வேண்டும். மேலும் எங்களது குடும்பத்தினரின் தொலைபேசிகளை அரசு ஒட்டு கேட்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

    குமாரசாமியின் இந்த குற்றச்சாட்டுக்கு கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே பிரஜ்வலின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய சிறப்பு விசாரணை குழுவினர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • பிரஜ்வால் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேரனும், ஹசன் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வால் மீது எழுந்துள்ள செக்ஸ் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது.

    பிரஜ்வால் 100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.

    மேலும் அவர் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக 3 ஆயிரம் வீடியோ தொகுப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    பிரஜ்வால் மட்டுமின்றி அவரது தந்தை ரேவண்ணா மீதும் பாலியல் புகார்கள் எழுந்தன. தந்தையும், மகனும் பல பெண்களின் கற்பை சூறையாடி இருப்பதாக கர்நாடகா மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நிலையில் பிரஜ்வால் வெளி நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்.

    அவரை கைது செய்ய சர்வதேச போலீஸ் மூலம் புளுகார்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய கர்நாடகா சிறப்பு போலீஸ் படை வெளிநாட்டுக்கு சென்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே கற்பழிப்பு புகாரில் சிக்கிய தேவேகவுடா மகனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான ரேவண்ணா கைது செய்யப்பட்டார். பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவருக்கு இன்று காலை உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனர். அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் பெங்களூர் விக்டோரியா சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் பிரஜ்வால் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய பட்டியலை கர்நாடகா போலீசார் தயாரித்து உள்ளனர். அந்த பெண்களிடம் தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது.

     இது தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி யும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவருமான குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரஜ்வால் செய்திருப்பதை நான் நியாயப்படுத்தவில்லை. தவறு செய்தவர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும். ஆனால் ரேவண்ணா மீதும், பிரஜ்வால் மீதும் திட்டமிட்டு சதி செய்து வீடியோக்களை பரவச் செய்துள்ளனர்.

    துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இந்த சதி திட்டத்தை மிகவும் சமயோசிதமாக அரங்கேற்றி உள்ளார். பிரஜ்வால் தொடர்பான தகவல்களை திரட்டி அவர் ஆபாச காட்சிகள் கொண்டதாக தயாரித்துள்ளார். சுமார் 25 ஆயிரம் பென்டிரைவ்கள் தயாரித்து அவை அனைத்தையும் ஹசன் பாராளுமன்ற தொகுதி முழுக்க வினி யோகம் செய்துள்ளார்.

    பிரஜ்வாலை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கம் மட்டுமின்றி மோடியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று சதித்திட்டத்துடன் இது அரங்கேற்றப்பட்டுள்ளது. 25 ஆயிரம் பென்டிரைவ்களை மாநில போலீசார்தான் வினியோகம் செய்து இருக்கின்றனர்.

    இவை அனைத்துக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. இது தொடர்பாக புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையையும் கர்நாடகா அரசு எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
    • கர்நாடகாவில் இந்த பலாத்கார குற்றவாளியை மேடையில் வைத்து கொண்டு அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டார்

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஜெர்மனி தப்பிச் சென்ற அவர் நாடு திரும்பியதும் கைது செய்ய போலீஸ் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.

    இந்நிலையில் இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, "ரேவண்ணா பல்லாயிரக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கர்நாடகாவில் இந்த பலாத்கார குற்றவாளியை மேடையில் வைத்து கொண்டு அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டார். 

    இந்த பாவத்திற்காக நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் பாஜகவின் ஒவ்வொரு தலைவரும் நாட்டின் ஒவ்வொரு பெண்ணிடமும் கைகூப்பி தலைகுனிந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.

    மிக மோசமான பாலியல் குற்றவாளிகள் இந்தியாவில் இருந்து தப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் - இதுதான் மோடியின் உத்தரவாதம்!" என்று தெரிவித்துள்ளார்.

    • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
    • பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஜெர்மனி தப்பிச் சென்ற அவர் நாடு திரும்பியதும் கைது செய்ய போலீஸ் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.

    இதனையடுத்து பிரிஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோருக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியது.

    இந்நிலையில் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    ரேவண்ணா நேரில் ஆஜராகவில்லை என்றால் அவர் கைது செய்யப்படுவார் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா எச்சரித்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக ரேவண்ணா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "விசாரணையில் கலந்து கொள்ள நான் பெங்களூரில் இல்லாததால், எனது வழக்கறிஞர் மூலம் பெங்களூரு சிஐடிக்கு தகவல் தெரிவித்தேன். உண்மை விரைவில் வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.

    வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக பிரஜ்வல் ரேவண்ணா ஒரு வாரம் அவகாசம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது.
    • பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகின. இதுகுறித்து விசாரிக்க எஸ்ஐடி குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவுசெய்துள்ளதாக குமாரசாமி தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, முன்னாள் முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாங்கள் அவரைப் பாதுகாக்கப் போவதில்லை. கடும் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

    ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யை அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியது.

    இந்நிலையில், பிரிஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோருக்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் சம்மன் அனுப்பி உள்ளது.

    • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
    • பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

    ஹாசன் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ந் தேதி முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் வலம் வருகிறது. இதனால் ஒட்டுமொத்த தேவகவுடா குடும்பமும் நிலை குலைந்து போயுள்ளது.

    இந்த நிலையில் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ரேவண்ணாவை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என மூத்த நிர்வாகிகள், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இன்று மத சார்பற்ற ஜனதா தள கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் குமாரசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவை இந்த விசாரணை முடியும் வரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

    இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் இருந்த பென்டிரைவை அவரது முன்னர் ஓட்டுநர் கார்த்திக் 3 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அப்போது காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக குற்றம் சாட்டியிருந்தது.

    இதனையடுத்து, இந்த தகவலை ஓட்டுநர் கார்த்திக் மறுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் இருந்த பென்டிரைவை ஹாசன் பாஜக தலைவர் தேவராஜ் கவுடாவிடம் தான் நான் கொடுத்தேன். பாஜக தலைவரைத் தவிர வேறு யாரிடமும் இதை நான் கொடுக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது.
    • இது வெட்கக் கேடான பிரச்சனை. நான் யாரையும் பாதுகாக்கவில்லை என்றார் குமாரசாமி.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹூப்ளி தொகுதி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

    இதற்கிடையே, அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்த ஆபாச வீடியோ குறித்து விசாரணை நடத்த கர்நாடக அரசு சிறப்பு விசாரணை குழுவை நியமித்து உத்தரவிட்டது. அவர்கள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரேவண்ணாவை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என மூத்த நிர்வாகிகள், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இன்று மத சார்பற்ற ஜனதா தள கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் குமாரசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவை இந்த விசாரணை முடியும் வரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

    ×