search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98745"

    • பா.ம.க. ஒன்றிய செயலாளர் கணேஷ் காரில் சென்று கொண்டிருந்த போது, நெய்வேலி 13-வது வட்டத்தில் உள்ள வீட்டின் சுற்றுச்சுவரில் மோதியது.நெய்வேலி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
    • நுாற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு நெய்வேலி டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நெய்வேலி டி

    கடலூர்:

    பா.ம.க. ஒன்றிய செயலாளர் கணேஷ் காரில் சென்று கொண்டிருந்த போது, நெய்வேலி 13-வது வட்டத்தில் உள்ள வீட்டின் சுற்றுச்சுவரில் மோதியது. இது தொடர்பாக வீட்டு உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் ஒன்றிய செயலாளர் கணேஷ், நெய்வேலி நகர செயலாளர் சார்லஸ் ஆகியோர் மீது நெய்வேலி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இதனால் ஆத்திரமடைந்த பா.ம.க.வினர் நேற்றிரவு மாநில அமைப்புச் தலைவர் பழ.தாமரைக்கண்ணன், மாநில அமைப்புச் செயலாளர் சண்முகம், மாவட்ட செயலாளர்கள் வடக்குத்து ஜெகன், கடலுார் சண்.முத்துகிருஷ்ணன், விருத்தாசலம் கார்த்திகேயன், மாணவரணி வழக்கறிஞர் கோபிநாத், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு நெய்வேலி டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நெய்வேலி டி.எஸ்.பி. ராஜேந்திரன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ள விவரத்தை பா.ம.க.வினரிடம் தெரிவித்தார்.

    இருப்பினும் போலீசார், தொடர்ந்து பா.ம.க.வினர் மீது வெறுப்புடன் நடந்து கொள்வதாக கூறி, கடந்த 20 தினங்களாக மாவட்டத்தில் நிகழ்ந்த சில சம்பவங்களை மேற்கோள் காட்டினர். இச்சம்பவத்தால், மேலும் பிரச்சினைகள் ஏதும் நிகழாதவாறு போலீஸ் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிர்வாகிகள் வலியுறுத்தினர். விபத்து எவ்வித உள்நோக்கமும் இல்லாமல், எதிர்பாராத விதமாக நடந்தது எனவும், இதில் போலீசார் சரிவர நடவடிக்கை மேற்கொள்ளாமல், புகாரின் அடிப்படையில் மட்டுமே வழக்குப்பதிந்து உள்ளதால் ஏற்பட்ட பிரச்சினை என பா.ம.க.வினர் தெரிவித்தனர்.   தற்போது நடந்து வரும் விசாரணையை துரிதப்படுத்தி, யாரும் பாதிக்காத, சட்டரீதியிலான பாதுகாப்பு முறையில் நடவடிக்கை மேற்கொள்வதாக டி.எஸ்.பி. ராஜேந்திரன் உறுதி அளித்தார். அதன் பின்னர் பா.ம.க.வினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • கோவிலுக்கு பாத்தியப்பட்ட நில பட்டாவுடன், தனிநபர்கள் பெயர்களை சேர்த்து பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • துணை தாசில்தார் காதர்மைதீன், போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சிக்குட்பட்ட சிவசுப்பிரமணியபுரம் கிராமத்தில் ராமசாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட நில பட்டாவுடன், தனிநபர்கள் பெயர்களை சேர்த்து பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் பள்ளி செல்லும் குழந்தைகளுடன் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த மண்டல துணை தாசில்தார் காதர்மைதீன் மற்றும் பாவூர்சத்திரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆவுடையனூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்கராஜன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

    பாவூர்சத்திரம் அருகே சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக கிராம நிர்வாக அலுவலகத்தை பள்ளி குழந்தைகளுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதில் தமிழன் மக்கள் நல சங்க நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டித்து பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே பெரியம்மாபாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 160-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து கிராம மக்கள் முன்னிலையில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த ஆசிரியரை கண்டித்துள்ளனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பள்ளியில் பயிலும் சில மாணவிகளிடம், அந்த ஆசிரியர் வகுப்பறையில் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்களிடம், அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர். மேலும் நேற்று பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பொதுமக்கள் சார்பில் தொலைபேசி வாயிலாக குழந்தைகள் நல பாதுகாப்பு அலகுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராமு, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆற்றுப்படுத்துனர் மகேஸ்வரி ஆகியோர் அந்த பள்ளிக்கு வந்து மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த ஆசிரியர், மாணவிகளிடம் தவறான தொடுதல், தவறான பார்வை மற்றும் குறிப்பிட்ட மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக மாணவிகள் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நன்னடத்தை அலுவலர் கோபிநாத், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • கோவில் திருவிழா நடத்த தடை
    • லால்குடி பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அன்பில் கிராமத்தில் ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்தக் கோவிலில் அந்த பகுதியை சுற்றியுள்ள ஜங்கம ராஜபுரம், மங்கம்மாள் புரம், கீழ அன்பில் ஆகிய மூன்று கிராமங்களை சேர்ந்த மக்கள் வழிபட்டு வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது. வழக்கமாக நடப்பு ஆண்டில் இன்று( திங்கட்கிழமை) இந்த கோவிலில் காப்பு கட்டுதல் நடைபெறும். ஆனால் நடப்பு ஆண்டு விழாவுக்கு உதவி கலெக்டர் அனுமதி மறுத்துள்ளார்.அதைத்தொடர்ந்து கிராம மக்கள் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டர் பிரதீப் குமாரிடம் புகார் மனு அளித்தனர்.பின்னர் அவர்கள் கூறும் போது, ஆண்டாண்டு காலமாக முந்தைய வழக்கப்படி சாமி திருவீதி உலா நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஒரு சமூகத்தினர் தங்களது தெருக்களுக்கும் திருவீதி உலா அழைத்து வர வேண்டும் என நீதிமன்றத்தை நாடினர்.ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையும் கோவில் திருவிழாவை நடத்த அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் உதவி கலெக்டர் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி கோவில் விழாவை நடத்த அனுமதி மறுத்து வருகிறார்.தன்னிச்சையாக செயல்படும் அவரை மாற்றிவிட்டு கோவில் திருவிழாவை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றனர். முன்னதாக அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் ஊர்வலமாக செல்ல அனுமதி கேட்டு போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    • 6 ஆண்டுகளுக்கு முன்பாக அண்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் இருந்த தரை பாலம் சேதமடைந்தது.
    • அவர்களது சொந்த பணத்தில் பாலத்தை கட்ட முடிவு செய்தனர்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அண்டப்பட்டு கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக அண்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் இருந்த தரை பாலம் சேதமடைந்தது. இதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், பி.டி.ஒ. அலுவலகங்களில் பல முறை புகார் தெரிவித்தனர். சேதம் அடைந்த பாலத்தை சரி செய்யவில்லை என கூறப்படுகிறது.மேலும், இந்த பாலம் வழியாக சென்ற 20-க்கும் மேற்பட்டோர் பாலத்தில் விழுந்து காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் ஒன்றிய கவுன்சிலர் எழிலரசனிடம் இதுகுறித்து மனு அளித்தனர். இதையடுத்து கீழ்கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஈச்சேரி சேகர், கவுன்சிலர் எழிலரசன் ஆகியோர் அவர்களது சொந்த பணத்தில் பாலத்தை கட்ட முடிவு செய்தனர்.அதன்படி ரூ.12 லட்சம் செலவில் பாலத்தை கட்டும் பணியை கீழ்கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ஆகியோர் தொடங்கினர். இதையறிந்து அங்கு வந்த அதிகாரிகள் பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினார். இதனால் அப்பகுதி கிராம மக்கள் அங்கு திரண்டு அதிகாரி களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • சின்னமுட்டம் துறைமுகத்தில் இன்று நடந்தது
    • ஆழ்கடலில் சாளை மீன் பிடிக்க அனுமதி வழங்க கோரிக்கை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

    சின்னமுட்டம் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் விசைப்படகு மீனவர்கள் ஆழ் கடலில் தங்கி மீன்பிடிப்பதற்கும் சாளை மீன் பிடிப்பதற்கும் மீன்வளத் துறை தடை விதித்துள்ளது.

    இந்த நிலையில் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி வழங்க கோரி இன்று காலை சின்ன முட்டம் துறைமுகத்தில் உள்ள கன்னியாகுமரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உதவி இயக்குனர் விர்ஜின் கிராசிடம் முறையிட்டனர். அதற்கு மீன் வளத்துறை உதவி இயக்குனர் அனுமதி அளிக்கவில்லை.

    இதைத்தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தையில் கன்னியாகுமரி, சின்ன முட்டம் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் 6 விசைப்படகு சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இதில் உடன்பாடு ஏற்படாததால் விசைப்படகு மீனவர்கள் சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள கன்னியாகுமரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் நிலவியது. இதையடுத்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்ன பாலா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவட்டவர்களுடன் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • அதிகாரிகளுக்கும்,பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநக ராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு ஊருடையார்புரம் பொதுமக்கள் தமிழர் விடுதலைக்களம் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊருடை யார்புரம் பகுதியில் பொதுப்பயன்பாட்டில் உள்ள கழிப்பிடங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

    15-வது வார்டு நதிபுரம் பகுதியில் நீண்ட நாட்களாக நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி சீரான குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது திடீரென பொது மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மேயர் மாநகராட்சி கமிஷனரை நேரில் சந்தித்து மனுக்களை கொடுத்து விட்டு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • பணியிட மாற்றத்தை கண்டித்து 2-வது நாளாக தொடரும் போராட்டம்
    • போராட்டம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர்களுடன், தக்கலை தாசில்தார் கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகாவுக்குட்பட்டது கீழ் மிடாலம். இங்குள்ள கிராம நிர்வாக அலுவலரை கடந்த வாரம் இடமாற்றம் செய்து, தக்கலை சப்-கலெக்டர் கவுசிக் உத்தரவிட்டார்.

    இதற்கு குமரி மாவட்ட கிராம நிர்வாக அலுவ லர்கள் சங்கம் எதிர்ப்பு தெரி வித்தது. மேலும் அவர்கள் தக்கலை சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் நடத்திய சமரச பேச்சுவார்த்தை பலனளிக்காததால் இந்தப் போராட்டம் இரவு வரை நீடித்தது. அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இந்த நிலையில் திங்கட்கிழமை விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுவது என கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி இன்று அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் விடுப்பு எடுத்து, தக்கலை சப்-கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

    அவர்கள் அந்த அலு வலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தி னர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் போலீசார், பாது காப்பு நடவடிக்கையாக குவிக்கப்பட்டனர்.

    இதன் காரணமாக தக்கலை சப்-கலெக்டர் அலுவலகம் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது. இதற்கிடையில் போராட்டம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர்களுடன், தக்கலை தாசில்தார் கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    • போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் 22 பேர் மீது வழக்கு
    • சந்திரனை தாக்கிய போலீசாரை கைது செய்ய வலியுறுத்தல்

    கன்னியாகுமரி:

    ராஜாக்கமங்கலம் அருகே எள்ளுவிளை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 67). விவசாயியான இவர் தனது மாடுகளை அருகில் உள்ள தென்னந்தோப்பில் மேய்த்து வருவது வழக்கம். இதில் சிலரது தென்னை மரக்கன்றுகளை மாடுகள் கடித்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதனை யடுத்து தோட்டக்காரர்கள் ஈத்தாமொழி பூமி பாதுகாப்பு சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் பூமி பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் சந்திரனுக்கு அபராதம் விதித்துள்ளனர். இதனை செலுத்திய சந்திர னை பின்னர் போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து சந்திரன் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சந்திரனை தாக்கிய போலீசாரை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியினர் கட்சி நிர்வாகி திருமாவேந்தன் தலைமையில், மாநில துணை செயலாளர் அல்காலித் உள்பட நிர்வாகிகள் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் விடுதலை சிறுத்தை கட்சியினர் 2 பெண்கள் உட்பட 22 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலை 7 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிவிப்பு
    • விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, மரச்சீனி, மிளகு, கத்தரி, பயறு வகைகள் போன்ற பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டணம் கால்வாய்க்கு சிற்றாறு அணையில் இருந்து சிற்றாறு பட்டணங்கால் பிரிவு பிரதான கால்வாய் குலசேகரம், தும்பகோடு பகுதியில் தொடங்கி மாத்தூர், திருவட்டார், பள்ளியாடி வழியாக முள்ளங்கினாவிளை வந்து சேரும். அங்கிருந்து கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட புதுக்கடை பிரிவு, கருங்கல் பிரிவு என இரண்டாக பிரிகிறது.

    பட்டணம் கால்வாயின் கிளை கால்வாய்களில் வரும் தண்ணீரால் அப்பகுதி விவசாயிகள், பொது மக்கள் பயன்பட்டு வருகின்றனர். தற்போது சிற்றாறு பட்டணம் கால்வாயின் கிள்ளியூர் சட்டமன்ற தொகு திக்குட்பட்ட கடைவரம்பு பகுதிகளான கருங்கல், பாலூர், சுண்டவிளை, தேவிகோடு, பூட்டேற்றி, மீறி, தேங்காப்பட்டணம் வரையும் உள்ள சிற்றாறு பட்டணம் கால்வாயில் மேற்கண்ட பகுதிகளில் கால்வாயில் கடைவரம்பு பகுதிகளில் கடந்த பல வருடங்களாக பொதுப்பணித்துறை நீராதார அமைப்பு அதிகாரி களின் அலட்சியத்தால் கடைவரம்பு பகுதிகளில் சரியான முறையில் தூர்வாரமல் கால்வாய்க ளில் சுமார் 2 அடிக்கும் மேல் மண் நிறைந்து காணப்படுகிறது.

    மேலும் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட மத்திகோடு ஊராட்சி, பாலப்பள்ளம் பேரூராட்சி போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயன் பெறும் திக்கணங்கோடு திருவிதாம்கோடு கிளை கால்வாய் வழுதலம்பள்ளம் வரை பல ஆண்டுகளாக சரியான முறையில் தூர்வாரமல் மண் நிறைந்து காணப்படுகிறது. இதனால் கடை வரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. சிற்றாறு பட்டணங்கால் வாய் மற்றும் திக்கணங் கோடு கால்வாய் ஆகிய 2 கால்வாய்களிலும் கடந்த 2 மாதங்களாக திடீரென்று தண்ணீர் நிறுத்தப்பட் டுள்ளது.

    இதனால் இப்பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, மரச்சீனி, மிளகு, கத்தரி, பயறு வகைகள் போன்ற பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. கால்வாய்க்குட்பட்ட பகுதிகளில் உள்ள 100 -க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீர் இல்லாமல் கணப்படுகிறது.

    ஆனால் பட்டணம் கால்வாய் மற்றும் திக்க ணங்கோடு கால்வாய்களில் தண்ணீர் திறப்பது பற்றி பொதுபணித்துறை அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் சரியான பதிலை தரவில்லை. ஆகவே உடனடி யாக பட்டணம் கால்வாய் மற்றும் திக்க ணங்கோடு கால்வாய் பகுதிகள் மற்றும் இடிந்து விழுந்த திக்கணங்கோடு கோட்ட விளை பகுதியையும் மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து கரையில் உடைப்பு ஏற்பட்ட இடங்க ளையும் சரி செய்து மேற்குறிப்பிட்ட 2 கால்வாய்களிலும் கடைவரம்பு பகுதிகள் வரை தூர்வாரி சீரமைத்து 5 தினங்களுக்குள் 2 கால்வாய்களி லும் கடைவரம்பு பகுதிகள் வரை தண்ணீர் விட மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதனை பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் உறுதிபடுத்த வேண்டும்.தவறும்பட்சத்தில் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளையும், பொதுமக்களையும் ஒன்று திரட்டி எனது தலைமையில் நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • பாதிக்கப்பட்டவர்கள் கடைகளின் முன் முற்றுகை– போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பணம் கட்டிய ரசீதுடன் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுபள்ளி ஆகிய இடங்களில் பிரபல நகைக்கடை செயல்பட்டு வந்தது.

    தஞ்சையில் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்த நகை கடையில் சிறுசேமிப்பு திட்டம், நகைகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும், வீட்டுமனை சிறுசேமிப்பு திட்டம், பழைய நகைக்கு புதிய நகை மாற்றி தருவது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்தது.

    இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு முதலீடு செய்தனர்.

    இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரத்தநாடு கிளையில் சிலர் அடமானம் வைத்த நகைகளை மீட்க சென்றனர்.

    அப்போது கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அனைத்தையும் கடை ஊழியர்கள் எடுத்து கொண்டு காலி செய்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த தகவல் அப்பகுதியில் பரவியதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கடைகளின் முன் முற்றுகை–யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க கூறினர்.

    இதேப்போல் பட்டுக்கோட்டை, தஞ்சை, திருக்காட்டுப்பள்ளியில் உள்ள நகைகடைகளுமு பூட்டப்பட்டதால் அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் நகைக்கடை உரிமையாளர் மீது போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே தஞ்சையில் உள்ள அந்த கடை முன்பு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பணம் கட்டிய ரசீதுடன் திரண்டு வந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி புகார் அளிக்குமாறு கூறினர்.

    இது குறித்து பாதிக்கப்–பட்ட பொதுமக்கள் கூறும்–போது, ஏழை எளிய மக்களின் சூழ்நிலையை பயன்படுத்தி அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி எங்களை ஏமாற்றியுள்ளனர். ரூ.10 ஆயிரம் முதல் 10 லட்சம் வரை பலரும் ஏமாந்துள்ளனர்.

    மிகவும் சிரமப்பட்டு உழைத்த தொகையை தங்களுக்கு மீண்டும் பெற்று தர வேண்டும் என்றனர்.

    • சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து முற்றுகையில் ஈடுபட்டனர்.
    • 2 நாட்களில் சரி செய்கிறோம் என அதிகாரிகள் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.

    மாமல்லபுரம்:

    ஜி.20 மாநாட்டிற்கு சென்னை வரும் பிரதிநிதிகள் சிலர் ஜன.30-31 தேதிகளில் சென்னையில் இருந்து கல்பாக்கம் வழியாக புதுச்சேரி ஆரோவில் செல்கிறார்கள். இவர்கள் பயணிக்கும் கிழக்கு கடற்கரை சாலையை மேம்படுத்த 3கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, மாமல்லபுரம்-கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் மழையால் சேதமடைந்த ரோடுகளை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கல்பாக்கம் புதுப்பட்டினம் வரும் சேதமடைந்த சாலையையும் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் காயத்ரி தனபால் தலைமையில் சாலை பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று முற்றுகையில் ஈடுபட்டனர். தகவலறிந்த கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசினர். 2 நாட்களில் சரி செய்கிறோம் என அதிகாரிகள் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சாலை அமைக்கும் பணி ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.

    ×