search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99004"

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பியதாக முன்னாள் பெண் எம்.எல்.ஏ. சரஸ்வதியை நாமக்கல் போலீசார் கைது செய்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் முல்லை நகரை சேர்ந்தவர் சரஸ்வதி (60).

    இவர் கடந்த 1995-ம் ஆண்டு கபிலர் மலை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க-வில் சேர்ந்தார்.

    இந்நிலையில் கீரம்பூரை சேர்ந்த அ.தி.மு.க. கிளை கழக செயலாளர் ராஜா நாமக்கல் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி குறித்து முன்னாள் எம்.எல்.ஏ சரஸ்வதி வாட்ஸ் அப்பில் அவதூறு தகவலை பரப்பி வருகிறார். இது குறித்து அவரிடம் கேட்ட போது ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டினார் என புகாரில் தெரிவித்தார்.

    இதனைதொடர்ந்து முல்லை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற நாமக்கல் இன்ஸ்பெக்டர் குலசேகரன் மற்றும் போலீசார் சரஸ்வதியை இன்று காலை கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    நாமக்கல் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தகவலறிந்து தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் மற்றும் திமுகவினர் கைது செய்யப்பட்ட சரஸ்வதியை பார்க்க வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    தேனி மாவட்டத்தில் மணல் கடத்தல் மற்றும் கள்ளத்தனமாக மதுபானம் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தொடர்பாக பொதுமக்கள் வாட்ஸ்அப்பில் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    தேனி:

    தேனி மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள் போன்றவற்றில் அனுமதியின்றி வண்டல் மண், களிமண், கிராவல் மண் சட்ட விரோதமாக எடுப்பதை தவிர்ப்பதற்காகவும், ரேசன் கடைகளில் இருந்து அத்தியாவசிய பொருட்களான அரிசி, மண்எண்ணெய், பாமாயில், சீனி மற்றும் பருப்பு போன்றவைகள் கடத்திச் சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைகளைக் காட்டிலும் கூடுதலாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது, அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து வேறு கடைகள், இடங்களில் மதுபானங்கள் விற்பது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கூடுதலான நேரங்களில் மதுபானம் விற்பனை செய்வது போன்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும், உரிமம் இன்றி செயல்படும் மதுபானக் கூடங்கள், சட்டவிரோதமாக போதைப் பொருள்கள் விற்பனை செய்வது குறித்து நடவடிக்கை மேற்கொள்வதற்காகவும் தனியாக புகார் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த புகார்களை புகைப்படங்களாகவோ, குறுஞ்செய்திகளாகவோ, வாட்ஸ்ஆப் செய்திகளாகவோ 94877 71077 என்ற எண்ணிற்கு செல்போன் மூலம் தெரிவிக்கலாம். மேலும் இந்த எண்ணில் பிரத்தியோகமாக கைசாலா என்ற செயலியின் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மேற்கண்ட விவரங்கள் குறித்து கைசாலா என்ற செயலியில் புகைப்படத்துடன் தெரிவிக்கும் போது புகார் தெரிவிக்கும் இடம் சரியான அமைவிடம் குறித்து தெரிந்து கொள்ள இயலும் என்பதால் விரைந்து குற்றச்செயல் நடைபெறும் இடத்தினை சென்றடைய இயலும்.

    இந்த எண்ணில் பெறப்படும்புகார்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்வதற்காக வட்ட அளவில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் புகார்களை வாட்ஸ்ஆப் எண்ணிற்கு புகைப் படங்கள், குறுஞ்செய்திகளாக தெரிவித்து சட்ட விரோதமாக நடைபெறும் குற்றச் செயல்களை களைவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
    ஜியோபோன் சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. கை ஓ.எஸ். மூலம் இயங்கும் ஜியோபோனிற்கு ஏற்ப வாட்ஸ்அப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. #WhatsApp #JioPhone



    கை ஓ.எஸ். மூலம் இயங்கும் ஜியோபோன்களுக்கு வாட்ஸ்அப் வசதி சேர்க்கப்படுகிறது. ஜூலை மாதம் நடைபெற்ற ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோபோனிற்கு வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் செயலிகள் ஆகஸ்டு 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என ஜியோ நிறுவனர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

    ஒருமாத தாமதத்திற்கு பின் வாட்ஸ்அப் வசதி தற்சமயம் சேர்க்கப்பட்டுள்ளது. கை ஓ.எஸ்.-க்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. 

    இதனால் ஜியோபோனில் வாட்ஸ்அப் சேவை சீராக பயன்படுத்த முடியும். ஜியோபோன் மற்றும் ஜியோபோன் 2 மாடல்களுக்கு வாட்ஸ்அப் செயலியை ஜியோ ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ள முடியும். 

    செப்டம்பர் 20-ம் தேதி முதல் அனைத்து ஜியோபோன்களுக்கும் வாட்ஸ்அப் செயலி வழங்கப்படுகிறது. ஒரு முறை டவுன்லோடு செய்து விட்டால், பயனர்கள் தங்களது மொபைல் போன் நம்பரை ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

    மொபைல் நம்பரை வாட்ஸ்அப் செயலியில் உறுதிப்படுத்தியதும் விரும்பியவர்களுடன் சாட் செய்யலாம். ஜியோபோனில் வாட்ஸ்அப் வழங்கப்படுவதைத் தொடர்ந்து கை ஓ.எஸ். மூலம் இயங்கும் நோக்கியா 8110 4ஜி மொபைலிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டயாம் ஹெல்மேட் அணிவது குறித்து ஈரோடு மாவட்ட வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது குமுறல்களை தெரிவித்துள்ளனர்.
    ஈரோடு:

    இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதற்கு ஈரோடு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இது பற்றி ஈரோட்டில் ‘வாட்ஸ் அப்’பில் வைரலாக பரவும் சிலரது குமுறல்கள் வருமாறு:-

    ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுமாம். ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின் சொத்துக்களை, ஆவணங்களை பறிமுதல் செய்யமாட்டார்கள்.

    பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர் பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம் கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை பறிமுதல் செய்யமாட்டார்கள்.

    தவறான மருத்துவத்தால் பல பேர் பலியாகியும் மருத்துவம் பார்த்த டாக்டர்களின் சான்றிதழ்களை பறிமுதல் செய்யமாட்டார்கள்.

    ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகளின் பதவிகளை பிடுங்க மாட்டார்கள்.

    மலைகளே காணாமல் போகும் அளவிற்கு கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல் செய்யமாட்டார்கள்.

    ஆனால் மறந்து வீட்டில் விட்டுவிட்டு வரும் ஹெல்மெட்டுக்காக இரு சக்கர வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படுமாம். இது என்ன நியாயம்?...

    பஸ்சில் பயணம் செய்ய 55 பேருக்கு மட்டுமே லைசென்சு தரப்படுகிறது. ஆனால் சராசரியாக 110 பேர் வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18 பேர் தொங்கவிடப்படுகின்றனர். சட்டத்தை அமல் செய்தால் ஈரோட்டுக்கு மட்டும் புதிதாக 250 பஸ் விட வேண்டும்.

    ரெயிலில் ஒரு பெட்டிக்கு 72 பேர்தான் பயணிக்க வேண்டும். சட்டப்படி ரெயில் சென்றால் முதல் பெட்டி திருப்பூரிலும் கடைசிப் பெட்டி ஈரோட்டிலும்தான் நிற்கும்.

    ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும் லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்குமா? ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரி பஸ் ஒருநாள்கூட ஓடாது.

    அரசு கேபிள் கட்டணம் 70 ரூபாய். கேள்வி கேட்டால் படம் தெரியுமா மக்களுக்கு? பாயிண்ட் டூ பாயிண்ட், எல். எஸ்.எஸ்.,எக்ஸ்பிரஸ் என பஸ் கட்டண கொள்ளையை தடுக்கலாமே? தியேட்டரில் 30 ரூபாய் டிக்கெட் 90 ரூபாய். ஆன்லைன் புக்கிங் செய்தால் மேலும் 20 ரூபாய். சைபர் கிரைம்ல கேஸ் போடலாமா?

    ஹெல்மெட் அணியாமல் வந்த கிட்டத்தட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து இருக்கிறார்கள். புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அதில் கருகிய நுரையீரல் படத்தை மட்டும் போட்டு விட்டு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது சரியா?

    குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டுவிட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்வது நியாயமா?

    ஹெல்மெட் என்பது அவசியம்தான் இல்லையென்று மறுக்க முடியாது. அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பொருந்தும். 20-30 கி.மீ. வேகத்தில் செல்லும் நகரவாசிகளை ஏதோ குற்றவாளிகளை பிடிப்பதுபோல் விரட்டி விரட்டி பிடிப்பதா?

    சமீபத்தில் ஹெல்மெட் அணியாத ஒருவரை ஒரு காவலர் விரட்டி அந்த இரு சக்கர ஓட்டுநர் விபத்தில் சிக்கி பலியானார். இந்த சட்டம் அமலுக்கு வந்தபின் இதுவரை ஹெல்மெட் அணிந்தும் 30-க்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்களே அதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள்?

    சாலை விதிமுறைகளை பற்றிய தகவல்களை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    ஹெல்மெட் அணிவதால். சிலருக்கு வியர்வை, அலர்ஜி, தலைவலி, முடி கொட்டுதல், தலையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைகிறது.

    ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மட்டும் வலியுறுத்தி விட்டு போகலாமே. அதைவிட்டுவிட்டு அபராதம், பறிமுதல் என்பது சரியா? ஹெல்மெட் அணிவதை நீங்கள் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

    இவ்வாறு அந்த ‘வாட்ஸ் அப்’ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் இவ்வாறு செய்யவில்லை எனில் அவர்களது டேட்டா முழுமையாக அபேஸ் ஆகிவிடும். #WhatsApp


    வாட்ஸ்அப் பயனர்கள் கூகுள் டிரைவில் உள்ள விவரங்களை தானாக பேக்கப் செய்யவில்லை எனில், அவை தானாக அழிக்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. கூகுள் டிரைவில் வாட்ஸ்அப் சாட் உடன் மீடியாக்களை பேக்கப் செய்யாதவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது. 

    கடந்த ஒருவருடமாக வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் தங்களது டேட்டாவை பேக்கப் செய்யவில்லை எனில், அவை அனைத்து தானாக அழிக்கப்படலாம். மேலும், வாட்ஸ்அப் தகவல்களை பேக்கப் செய்ய கூகுள் டிரைவ் கணக்கில் சைன்-இன் செய்து ஒரு வருடமாக பேக்கப் செய்யவில்லை எனில் வாட்ஸ்அப் கூகுள் டிரைவ் பேக்கப் அழிக்கப்பட்டு விடும். வாட்ஸ்அப் விவரங்களை பேக்கப் செய்ய இறுதி நாள் நவம்பர் 12 ஆகும்.

    "ஒரு வருடத்திற்கும் அதிகமாக அப்டேட் செய்யப்படாத வாட்ஸ்அப் பேக்கப்கள் கூகுள் டிரைவ் ஸ்டோரேஜில் இருந்து தானாக அழிக்கப்பட்டு விடும். இதை தவிர்க்க, வாட்ஸ்அப் தகவல்களை நவம்பர் 1, 2018க்குள் தானாக பேக்கப் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது,” என வாட்ஸ்அப் வலைத்தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    கோப்பு படம்

    மல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாயந்த செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. அந்த வகையில் பலரும் தங்களது புகைப்படங்கள், வீடியோ உள்ளிட்டவற்றை கூகுள் டிரைவில் பேக்கப் செய்துள்ளனர். கூகுள் டிரைவில் 15 ஜிபி அளவு இலவச ஸ்டோரேஜ் வழங்கப்படும் நிலையில், வாட்ஸ்அப் பேக்கப்கள் அதிகளவு கூகுள் டிரைவ் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது.

    வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எளிமையாக இருக்கும் பட்சத்தில், ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் நிறுவனம் கூகுளுடன் இணைந்து வாட்ஸ்அப் பேக்கப் ஃபைல்களை கூகுள் டிரைவில் இலவசமாக பேக்கப் செய்ய இணைந்துள்ளன. இந்த ஒப்பந்தம் நவம்பர் 12-ம் தேதி முதல் செயல்பாட்டு வருகிறது.

    வாட்ஸ்அப் ஸ்டோரேஜ்-க்கான இலவச கூகுள் டிரைவ் ஸ்டோரேஜை பெற பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் டேட்டாக்களை நவம்பர் 12-ம் தேதிக்குள் பேக்கப் செய்ய பரிந்துரைக்கப்படுகின்றனர்.
    மத்திய அரசு விதித்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாகவும், ஆனால் அது மட்டும் முடியாது என வாட்ஸ்அப் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. #WhatsApp


    வாட்ஸ்அப் செயலி தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய சட்ட அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத் சில தினங்களுக்கு முன் தெரிவித்தார்.

    இந்தியா வந்திருந்த வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரி க்ரிஸ் டேனியல்ஸ் சில தினங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்தார். சந்திப்புக்கு பின் பேசிய மத்திய மந்திரி வாட்ஸ்அப் தளம் தவறாக பயன்படுத்தப்படுவதை குறைக்க புதிய சட்டம் மற்றும் வழிமுறைகளை கண்டறியப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் மத்திய அரசு கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக தெரிவித்திருந்த வாட்ஸ்அப் தற்சமயம் பதில் அளித்திருக்கிறது. அதன்படி மத்திய அரசு கேட்டுக்கொண்ட அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொள்கிறோம், எனினும் குறுந்தகவல்களை டிராக் செய்ய அனுமதி வழங்க முடியாது என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.


    கோப்பு படம்

    பயனரின் விவரங்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டுள்ளது என்பதால் அவற்றை அரசிடம் வழங்க முடியாது என வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலி சார்ந்த வல்லுநர்கள் கூறும் போது, பயனர்களின் சில விவரங்கள் மட்டும் ஆஃப்லைன் சேவை வழங்கும் நோக்கில் கேச் செய்யப்படுகிறது, எனினும் இவை அந்நிறுவன சர்வர்களில் பதிவு செய்யப்படுவதில்லை என தெரிவித்துள்ளனர்.

    இந்த தகவல் பயனரின் சாதனத்தில் ஸ்டோர் செய்யப்படுகிறது. மத்திய அரசு சார்பில் கேட்கப்படும் டீக்ரிப்ஷன் வழிமுறை வாட்ஸ்அப் மட்டுமின்றி கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவன குறுந்தகவல் சேவைகளை முழுமையாக மாற்ற வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது. இந்திய அதிகாரிகள் டீப்ரிஷன் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உலகில் வாட்ஸ்அப் சேவையை அதிகம் பயன்படுத்தும் நாடாக இந்திய இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் யு.பி.ஐ. சார்ந்து பண பரிமாற்ற வசதி, விளம்பரதாரர்களுக்கான சேவை வழங்குவது குறித்த பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது. எனினும் இவற்றின் அறிமுக தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
    உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், உலக மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. #Apps


    உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகள் குறித்து ஃபோர்ப்ஸ் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. ஆப்டோப்பியா எனும் அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட தகவல்களின் படி கடந்த மூன்று மாதங்களில் உலக மக்கள் வாட்ஸ்அப் செயலியை மட்டும் சுமார் 8500 கோடி நிமிடங்கள் பயன்படுத்தியுள்ளனர். இதேபோன்று ஃபேஸ்புக் செயலியை சுமார் 3000 கோடி நிமிடங்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். 

    உலகளவில் குறுந்தகவல் அனுப்ப மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் இருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என ஆப்டோப்பியா செய்தி தொடர்பாளர் ஆடம் பிளாக்கர் தெரிவித்தார். தகவல் பரிமாற்ற செயலிகளில் மக்கள் அதிக நேரம் செலவழித்து உள்ளனர் என பிளாக்கர் மேலும் தெரிவித்தார்.



    உலகில் அதிகம் பயன்படுத்தப்பட்ட டாப் 10 செயலிகள் பட்டியல் பின்வருமாறு..,

    வாட்ஸ்அப், வீசாட், ஃபேஸ்புக், மெசன்ஜர், பன்டோரா, யூடியூப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், கூகுள் மேப்ஸ் மற்றும் ஸ்பாடிஃபை போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த அறிக்கையில் சீனாவின் மூன்றாம் தரப்பு ஆன்ட்ராய்டு ஆப் ஸ்டோர்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. ஒருவேளை சேர்க்கப்பட்டிருந்தால் வீசாட் மற்றும் சீனாவை சேர்ந்த செயலிகள் முன்னணி இடங்களை பிடித்திருக்கும். எனினும் வீசாட் செயலி இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

    அதிக நேரம் பயன்படுத்தப்பட்ட பத்து செயலிகளில் ஃபேஸ்புக் மெசன்ஜர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்றவை இடம்பிடித்திருக்கின்றன. கூகுளின் யூடியூப் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்றவையும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் முதன்மை இடம் பிடித்துள்ளன.

    கேம்களை பொருத்த வரை கிளாஷ் ஆஃப் கிளான்ஸ் 3.83 பில்லியன் மணி நேரம் விளையாடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மை டாக்கிங் டாம், கேன்டி கிரஷ் சாகா, ஃபோர்ட்நைட், லார்ட்ஸ் மொபைல், சப்வே சர்ஃபர்ஸ், ஹெலிக்ஸ் ஜம்ப், ஸ்லிதர்.ஐஒ, பப்ஜி மொபைல் மற்றும் ஃபிஷ்டம் உள்ளிட்டவை அதிகம் விளையாடப்படுகின்றன.
    இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியில் மாற்றங்களை கொண்டு வரும் நோக்கில் வாட்ஸ்அப் சி.இ.ஒ. மற்றும் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். #WhatsApp


    வாட்ஸ்அப் செயலி தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய சட்ட அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

    இந்தியா வந்துள்ள வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரி க்ரிஸ் டேனியல்ஸ் இன்று மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்தார். சந்திப்புக்கு பின் பேசிய மத்திய மந்திரி வாட்ஸ்அப் தளம் தவறாக பயன்படுத்தப்படுவதை குறைக்க புதிய சட்டம் மற்றும் வழிமுறைகளை கண்டறியப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    இந்திய சட்ட விதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பல்வேறு குற்றசம்பவங்களுக்கு வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது, இவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 

    இவற்றை கருத்தில் கொண்ட வாட்அஸ்அப் தலைமை செயல் அதிகாரியிடம் மூன்று அம்சங்களை செய்ய பரிந்துரை வழங்கியதாக மத்திய மந்திரி தெரிவித்தார். அதன்படி குறைகளை களைய இந்தியாவுக்கான அதிகாரி, கார்ப்பரேட் நிறுவன கட்டமைப்பு மற்றும் இந்திய விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

    வாட்ஸ்அப் தலைமை செயல் அதிகாரியுடனான சந்திப்பு சிறப்பான ஒன்றாக அமைந்தது. இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாடு ஏற்படுத்தியிருக்கும் நன்மைகளை விளக்கி அவரிடம் நன்றி தெரிவித்ததாகவும் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

    க்ரிஸ் டேனியல்ஸ் வாட்ஸ்அப் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதியளித்ததாக மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக மாயமான தாய் வாட்ஸ்-அப் தகவலால் போலீசாரிடம் சிக்கினார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கட்டமுத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பர்த்து வருகிறார்.

    இவரது மனைவி ஜெயசித்ரா. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 வயதில் மிதுன், 7 மாதத்தில் லட்சன் என்று 2 ஆண் குழந்தைகள் இருந்தனர்.

    நேற்று முன்தினம், வழக்கம்போல் சிலம்பரசன், வேலைக்கு சென்றுவிட்டார். மிதுன் பள்ளிக்கு சென்ற பின்னர், வீட்டில் லட்சனுடன் ஜெயசித்ரா இருந்தார். இந்த நிலையில் மதியம், சிலம்பரசன் வீட்டுக்கு வந்தார். அப்போது, ஜெயசித்ரா மற்றும் லட்சன் ஆகியோரை வீட்டில் காணவில்லை. இதையடுத்து அவர்களை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    பின்னர், சந்தேகத்தின் பேரில் வீட்டின் குளியல் அறையின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு ஒரு அண்டா மூடி வைக்கப்பட்டு நிலையில் இருந்தது. அதை பார்த்து சந்தேகமடைந்த, சிலம்பரசன், அண்டாவின் மூடியை திறந்து பார்த்தார். அதன் மேல் பகுதியில் பழைய துணிகளும், அதன் கீழ் தண்ணீரும் இருந்தன. இதையடுத்து, துணிகளை நீக்கிவிட்டு அவர் பார்த்த போது, தண்ணீரில், மூழ்கிய படி லட்சன் பிணமாக கிடந்தான்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தனது குழந்தையை பார்த்து கதறி அழுதார். ஜெயசித்ராவை தேடினார். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் என்ன ஆனார்? எங்கு சென்றார்? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இதையடுத்து சிலம்பரசனின் குடும்பத்தினர் இந்த சம்பவத்தை போலீசில் தெரிவிக்காமல், குழந்தையின் உடலை வீட்டில் வைத்திருந்த படியே ஜெயசித்ராவை தேடி வந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக புதுப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிலம்பரசனின் வீட்டுக்கு இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பரந்தாமன், செல்வம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் குழந்தை லட்சனின் தாய் ஜெயசித்ரா மாயமாகி விட்டார். இவரை கண்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேணடும்’ என்று கூறி ஒரு செல்போன் எண்ணை குறிப்பிட்டு வாட்ஸ்-அப்பில் தகவல் வேகமாக பரவியது.

    இந்த நிலையில் மேல்மருவத்தூரில் சந்தேகத்துக்கிடமாக சுற்றி திரிந்த ஜெயசித்ராவை வாட்ஸ்-அப்பில் பரவிய தகவல் மூலம் அந்த பகுதி பொதுமக்கள் அடையாளம் கண்டனர்.

    உடனே ஜெயசித்ராவை பிடித்து அந்த பகுதியில் உள்ள போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பண்ருட்டி போலீசார் மேல்மருவத்துருக்கு விரைந்தனர்.

    ஜெயசித்ராவை அழைத்து வந்து விசாரணை நடத்தினால்தான் குழந்தை கொலை செய்யப்பட்டு அண்டாவில் போடப்பட்டதா? என்ற விவரம் தெரியவரும்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    வாட்ஸ்அப் செயலியில் பகிர்ந்து கொள்ளப்படும் குறுந்தகவல்களை ஹேக் செய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். #WhatsApp #Hacking


    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தவிர்க்கும் நோக்கில் பல்வேறு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வகையில் குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்யும் போது ஃபார்வேர்டெட் (forwarded) லேபெல் இடம்பெறுகிறது. இத்துடன் குறுந்தகவல்களை ஃபார்வேர்டு செய்வதில் கட்டுப்பாடுகளை விதித்தது. 

    எனினும் வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பை மேம்படுத்த அந்நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. அதன்படி செக்பாயின்ட் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் மெசேஜ்களை ஹேக்கர்கள் படிப்பதுடன் அவற்றை மாற்றவும் முடியும் என தெரியவந்துள்ளது.

    செக் பாயின்ட் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கும் புதிய பிழை, செயலியில் அனுப்பப்படும் குறுந்தகவல்களை இடைமறித்து, அவற்றை மாற்றியமைக்க வழி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் க்ரூப் சாட் உள்ளிட்டவற்றுக்கும் இது பொருந்தும் என்பது கூடுதல் தகவல். 


    கோப்பு படம்

    இவ்வறு செய்வதால் ஹேக்கர்கள் தங்களுக்கு வேண்டியபடி தகவல்களை மாற்றியமைப்பதோடு, போலி தகவல்களை பரப்பும் அபாயம் உள்ளதாக பாதுகாப்பு தீர்வுகள் சார்ந்த நிறுவனமான செக் பாயின்ட் தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

    வாட்ஸ்அப் செயலியில் கண்டறியப்பட்டுள்ள புதிய பிழை, மூன்று வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என வலைதளத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

    - ஹேக்கர்கள் பயனர் அனுப்பும் பதிலை மாற்ற முடியும். ஒருவர் தெரிவிக்காத தகவல்களை, தெரிவித்ததாக மாற்றியமைக்க முடியும்.

    - க்ரூப்-இல் இருக்கும் ஒருவர் அனுப்பியதாக தகவல் ஒன்றை அனுப்ப முடியும். இது க்ரூப்பில் இருக்கும் மற்றவர்களுக்கு குறிப்பிட்ட பயனர் அனுப்பியதாகவே தெரியும்.

    - தனிப்பட்ட உரையாடல் ஒன்றை க்ரூப் சாட்டில் காண்பிக்க செய்ய முடியும். 

    புதிய பிழை குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், வாட்ஸ்அப் தரப்பில் இதுவரை பதில் வழங்கப்படவில்லை என செக் பாயின்ட் தெரிவித்துள்ளது. #WhatsApp #Hacking
    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை எதிர்கொள்ளும் நோக்கில், புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #WhatsApp


    ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியின் ஐ.ஓ.எஸ். வெர்ஷனில் புதிய மென்பொருள் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. புதிய வாட்ஸ்அப் அப்டேட் ஐபோனில் மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்வோருக்கு பாதகமாக அமைந்துள்ளது. அதன்படி ஐபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் ஒரே சமயத்தில் ஐந்து பேருக்கு அதிகமாக மெசேஜ்களை ஃபார்வேர்டு செய்ய முடியாது. 

    இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஃபார்வேர்டு மெசேஜ்களால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த அம்சம் ஜூலை 2018-இல் முதல் முறையாக அறிவிக்கப்பட்டது. புதிய அப்டேட் மூலம் போலி செய்திகளை பரப்புவதற்கு மாற்றாக, வாட்ஸ்அப் குறிக்கோளான பிரைவேட் மெசேஜிங் ஆப் என்ற பிம்பத்தை அந்நிறுவனம் தற்காத்து கொள்ள முடியும். 



    புதிய அம்சங்கள் வாட்ஸ்அப் ஐஓஎஸ் ஸ்டேபிள் வெர்ஷனில் சில நாட்கள் சோதனைக்கு பின் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் செயலியை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து அப்டேட் செய்து கொள்ள முடியும். வாட்ஸ்அப்-இல் அதிகளவிலான போலி குறுந்தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வசதி ஜூலை மாத வாக்கில் அறிவிக்கப்பட்டது. 

    முன்னதாக வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை குறைக்கவும், ஃபிஷிங், ஸ்பேம் போன்ற தொல்லைகளை தடுக்கவும் சஸ்பீஷியஸ் லின்க் எனும் புதிய அம்சத்தை வழங்கியது. அதன்படி செயலியில் பரப்பப்படும் வலைதள முகவரி போலியானதாக இருப்பின், அதனை வாட்ஸ்அப் சஸ்பீஷியஸ் லின்க் என அடையாளப்படுத்தும்.

    ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.204 பதிப்பில் மிக குறைந்த அளவு பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த அம்சம் வழங்கப்பட்டு, அதன்பின் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.221 வெர்ஷனில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்பதையும் வாட்ஸ்அப் FAQ பக்கத்தில் பதிவிட்டது. #WhatsApp #iOS #Apps
    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. #WhatsApp


    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் சோதனை செய்யப்படுகிறது. 

    இந்த ஆண்டு துவக்கத்தில் ஐஓஎஸ் இயங்குதளத்தில் வழங்கப்பட்ட பிக்சர்-இன்-பிக்சர் மோட் ஆன்ட்ராய்டு பீட்டா அப்டேட் 2.18.234 வெர்ஷனில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.

    பிக்சர்-இன்-பிக்சர் மோட் வசதியுடன் யூடியூப் வீடியோக்களை வாட்ஸ்அப் செயலியில் இருந்த படியே பார்த்து ரசிக்க முடியும். யூடியூப் வீடியோ திரை அளவை மாற்றிக் கொள்ளும் மிதக்கும் விண்டோ மூலம் வாட்ஸ்அப் சாட் ஸ்கிரீனில் இருந்து கொண்டே வீடியோக்களை பார்க்க முடியும்.



    வாட்ஸ்அப்பில் எவரேனும் யூடியூப் லின்க் அனுப்பும் போது, அந்த வீடியோவை வாட்ஸ்அப் செயலியை விட்டு வெளியேறாமல் பார்க்க முடியும். வாட்ஸ்அப் ஐஓஎஸ் தளத்தில் பிக்சர்-இன்-பிக்சர் மோட் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற செயலிகளுக்கு வேலை செய்கிறது.

    இதேபோன்று பி.ஐ.பி. மோட் இன்ஸ்டாகிராம் வீடியோக்களையும் சப்போர்ட் செய்கிறது, எனினும் இது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வீடியோக்களுக்கு பொருந்தாது. ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று இந்த அம்சம் இதுவரை சோதனையில் இருப்பதால் பயனர்கள் இதனை பயன்படுத்த முடியாது.

    எனினும் அடுத்து வரயிருக்கும் அப்டேட்களில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #WhatsApp #Apps
    ×