search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    • காரைக்காலில் நேற்று மாலை பாரதியார் சாலை யில் சிறுமி ரக்ஷிதா தனது தாயுடன் சென்று கொண்டிருந்தார்
    • போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்

    புதுச்சேரி:

    காரைக்காலில் சாலை யில் கிடந்த ரூபாய் 2000 பணத்தை பள்ளி சிறுமி உரியவரிடம் ஒப்படைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலில் நேற்று மாலை பாரதியார் சாலை யில் சிறுமி ரக்ஷிதா (வயது7) தனது தாயுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரம் 2000 ரூபாய் (4-500 நோட்டு கள்) கிடந்ததை கண்ணெடுத் துள்ளார். அச்சமயம் அப்பகுதியில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி குமாரிடம் அந்த பணத்தை ஒப்படைத்தார்.

    பணத்தை தவறவிட்டவர் அங்கு தேடி கொண்டு வந்த போது, அங்கு பணியில் இருந்த போலீசார் விசாரித்து அவரது பணம் தான் என்பதை உறுதி செய்த பின்னர், அந்தப் பணத்தை கொண்டு வந்து கொடுத்த சிறுமியிடம் கொடுத்து பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகை நேரத்தில் செலவுக்கு அதிக மாக பணம் உள்ள சூழ்நிலை யில், பணத்திற்கு ஆசைப் படாமல் அப்பணத்தை உரியவரிடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை சிறுமிக்கு விதைத்த பெற்றோர்க ளையும், சிறுமியையும் போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்

    • உங்கள் வீடுகளில் பசுமையையும் கொண்டாட்டத்தையும் ஆரவாரத்தையும் வரவேற்கும்
    • இயற்கையான சோயா மெழுகு மெழுகுவர்த்திகளால் ஒளிரச் செய்யுங்கள்

    நாகர்கோவில் :

    தீபங்களின் திருநாளான தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கும் தருவாயில், நாட்கள் நெருங்க நெருங்க, இந்த வருடம் புதியதாக என்ன செய்யலாம் என்று மனதிலே உற்சா கத்துடனும், ஆர்ப்பரிப்புடனும் ஆரவாரத்துடனும் தயாராகிக் கொண்டிருக்கின்றோம். சுற்றுச்சூழலுக்கு உகந்ததான பொருட்களும் வாழ்க்கை முறைகளும் பிரபலமாகி கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் தீபாவளிக்கு இந்த புதிய நாகரிகத்தில் புதிய வகை பரிசளிப்புகள் பிரபலமாகி வருகின்றன.

    உங்கள் வீடுகளில் பசுமையையும் கொண்டாட்டத்தையும் ஆரவாரத்தையும் வரவேற்கும் தனித்துவம் செழிப்பான அலங்கார செடிகளால் கூடும். இளையோரும் முதியோரும் பிரபலங்களும் யாராக இருந்தாலும் மிகவும் விருப்பப்படும் அழகு செடிகள் எல்லோருக்கும் சந்தோஷம் தருபவையாக இருக்கும்.

    அதிகப்படியான நேரத்தை நாம் வீட்டினுள் செலவழிக்கும் பொழுது பச்சை நிறம் மற்றும் செடிகளின் பசுமை நமக்கு புத்துணர்ச்சி ஊட்டுப வையாக இருக்கின்றன. வீடுகளிலும் போதிய இடங்கள் இல்லாத நிலையில் எல்லோராலும் வீட்டுத் தோட்டமும் மாடித்தோட்டமும் அமைப்பது சாத்தியமான காரியங்கள் இல்லை. எளிய முறையில் நமது வீடுகளில் பசுமையான சூழலை உருவாக்கவும் அதன் மூலம் வரும் மன அமைதியும் சந்தோஷத்தை யும் அனுபவிக்கவும் வீட்டினுள் வளர்க்கும் செடிகள் மிகவும் பயனுள்ளவையாக அமைகின்றன. இவைகள் மன அழுத்தத்தை குறைப்பதற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன

    புதியதாக அழகு தாவரங்கள் வளர்த்த ஆர்வம் உள்ளவர்கள் அவைகளை கவனிக்கும் முறைகள் அறியாது மலைப்புடன் அழகு செடிகளை பார்த்துவிட்டு கடந்து செல்வது தான் வழக்கம். இந்த ஒரு நிலைமையை மாற்றி வீட்டினுள் அழகு செடிகள் வைப்பதை மிகவும் இலகுவாக மாற்றி அமைத்துள்ளன ஈத்தாமொழி எக்ஸ்க்ளுசிவ் வழங்கும் தென்னை நார் சார்ந்த பொருட்கள். இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து அழகு செடிகளும் தென்னைநார்சார் பொருட்களைக் கொண்டு முழுமையாக நிறுவி அமைக்கப்பட்டவை. எனவே இந்த செடிகளை அனுபவம் இல்லாதவர்கள் கூட மிகவும் எளிதில் கவனித்து பேணி பாதுகாக்க முடியும்

    தீபங்களின் திருநாளை இயற்கையான தீபங்களுடன் கொண்டா டுவதற்கு ஏதுவாக தேங்காய் ஓடுகளி லிருந்து கைவினைப்பொருளாக உருவாக்கப்பட்ட இயற்கை யான சோயா மெழுகு மெழுகுவர்த்தி களின் அழகிய சேகரிப்பு டன் பலவகை நறுமணங்க ளுடன் வீடுகளை ஒளிரச் செய்ய உங்கள் நண்பர்களுக்கு உங்கள் அன்பை பகிர இவைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இந்த மெழுகுவர்த்திகள் பண்டிகை சூழ்நிலையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்கள் உணர்வுகளை வசீகரிக்கும் இனிமையான வாசனை களையும் வெளிப்படுத்து கின்றன.

    இந்த தீபாவளி இனிதானதா கவும், உங்கள் வீடுகளிலும், உங்கள் நண்பர்கள் மத்தியிலும், சந்தோஷத்தையும், அமைதியையும் நல்ல உடல் நலனையும் கொண்டு வருபவையாக நிலை நிறுத்துவதாக அமைய வாழ்த்துகிறோம். உங்கள் அனைவருக்கும் நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஈத்தாமொழி எக்ஸ்க்ளூசிவ்வின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    • பேன்சி வகை காலணிகளும் சிறந்த தரத்தில் குறைந்த விலையில் விற்கப்படுகிறது.
    • நியூ ஜனதா புட்வேரில் 84 முன்னணி கம்பெனிகளின் காலணிகள், ஷூக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஹோம் சர்ச் அருகே புதுப்பொலிவுடன் நியூ ஜனதா புட்வேர் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் குழித்துறை சந்திப்பு பஸ் நிறுத்தம் அருகில் யமஹா ஷோரூம் மாடியிலும், குளச்சல் பீச்ரோடு காந்தி சந்திப்பு அருகில் ஜாஷா காம்ப்ளக்சிலும் அமைந்துள்ளது.

    நியூ ஜனதா புட்வேரில் மக்களின் மனம் கவரும் வகையில் விழாக்கால சிறப்பு தள்ளுபடி வழங்க ப்பட்டு வருகிறது. இங்கு வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் 5 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. நியூ ஜனதா புட்வேரில் விழாக்கால சிறப்பு விற்பனையாக அதிகமான அளவில் புது வகை காலணிகள் வந்துள்ளது. இங்கு முன்னணி நிறுவனங்களின் காலணிகள் உட்லேண்ட், பக்காரூ, ஸ்கீச்சர்ஸ், அடிடாஸ், பூமா, லீகூப்பர் மற்றும் விகேசி, வாக்கரூ, பாராகன், ஏரோ வாக், ஏரோஸ்டைல் உள்ளிட்டவை உள்ளன. அத்துடன் ஸ்கூல் ஷூஸ், ஷாக்ஸ், முன்னணி நிறுவனங்களின் ஸ்கூல் மற்றும் காலேஜ் பேக், ட்ராலிகள், பெல்ட், தொப்பி, ரெயின் கோட், கூலிங்கிளாஸ், மூட்டு வலி, கால்வலி உள்ளவர்கள் பயன்படுத்தும் காலணிகளும், மணப்பெண்களுக்கு தேவையான பேன்சி வகை காலணிகளும் சிறந்த தரத்தில் குறைந்த விலையில் விற்கப்படுகிறது.

    நியூ ஜனதா புட்வேரில் 84 முன்னணி கம்பெனிகளின் காலணிகள், ஷூக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை தவிர டிராவல் பேக், குடைகள், ரெயின் கோட், தொப்பிகள், கண் கண்ணாடி உள்பட அனைத்து பொருட்களும் தரமானதாகவும், குறைந்த விலையிலும் இங்கு கிடைக்கிறது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கான பேக், உயர்தர கம்பெனிகளின் ஷூக்கள், சுகாதாரமான குடிநீரை குடிக்க அழகிய வாட்டர் பாட்டில்கள், மாணவ-மாணவிகள் உணவு எடுத்து செல்ல வசதியாக டிபன் பாக்ஸ் போன்றவை பல்வேறு வடிவங்களில் விழாக்கால சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது தீபாவளி விற்பனை அமோகமாக நடந்து வருவதால் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிக அளவு இருந்து வருகிறது. அனுபவம் மிக்க விற்பனையாளர்களை கொண்டு இந்த புட்வேர் நிறுவனம் இயங்கி வருகிறது. தொடர்ந்து உங்கள் ஆதரவு வழங்க வேண்டும் என நியூ ஜனதா புட்வேர் உரிமையாளர் கமல் நாசர் தெரிவித்துள்ளார்.

    • குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
    • அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகை தினத்தன்று கடந்த ஆண்டைப் போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

    சுற்றுச் சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டமாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • குடிசைப் பகுதிகளிலும், மாடிக்கட்டிடங்கள் அருகிலும் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக்கூடாது.
    • மக்கள் நடமாடும் இடத்தில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    1. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும்.

    2. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் ஒதுக்கியுள்ளதால், இந்த நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

    3. சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89-ன்படி பட்டாசு வெடிக்கும் இடத்தில் இருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது என தெரிவிக்கப்படுகிறது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ (வெடிப்பதோ) கூடாது.

    4. பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்காதீர்கள். இருசக்கர, 3 சக்கர மற்றும் 4 சக்கர மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகிலும் பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.

    5. பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்துவிட்டு, வேடிக்கை பார்க்க முயற்சித்தால், வெடிக்கும் பட்டாசு அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே, பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடக்கூடாது.

    6. மக்கள் நடமாடும் இடத்தில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

    7. பட்டாசுகளை வெடிக்கும்போது தகர டப்பாக்களை போட்டு மூடி வேடிக்கை பார்த்தால் வெடியினால் டப்பா தூக்கி எறியப்படலாம். அதனால் பல விபத்துகள் நேரிடக்கூடும். ஆகவே, இவ்வாறு செய்யக்கூடாது.

    8. குடிசைப் பகுதிகளிலும், மாடிக்கட்டிடங்கள் அருகிலும் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக்கூடாது.

    9. எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வைக்கக்கூடாது.

    10. ஈரமுள்ள பட்டாசுகளை சமையலறையில் வைத்து உலர்த்தக்கூடாது.

    11. பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்காதீர்கள்.

    12. எக்காரணத்தைக் கொண்டும் குடிசைகளின் பக்கத்திலோ, ஓலைக்கூரைகள் உள்ள இடங்கள் அருகிலோ வானவெடிகளையோ அல்லது பட்டாசு வகைகளையோ கொளுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    13. பட்டாசு விற்கும் கடைகள் அருகில் சென்று புகைபிடிப்பதோ, புகைத்து முடித்தபின் சிகரெட் துண்டுகளை அஜாக்கிரதையாக வீசி எறிவதோ கூடாது.

    14. பட்டாசு விற்கும் கடை அருகே சென்று விளம்பரத்துக்காகவோ, போட்டிக்காகவோ கூட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

    15. பட்டாசு விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் மெழுகுவர்த்தியையோ பெட்ரோமாக்ஸ் அல்லது சிம்னி விளக்கையோ கடை அருகிலோ அல்லது கடையிலோ உபயோகிக்கக் கூடாது.

    16. பட்டாசு வகைகள் சேமித்து வைத்திருக்கும் வீட்டிலோ அல்லது கடைகளிலோ ஊதுவத்தி கொளுத்தி வைக்கக்கூடாது.

    17. பட்டாசுகளை வெடிப்பதற்கு தீக்குச்சிகளையோ அல்லது நெருப்பையோ உபயோகிப்பதை விட நீளமான ஊதுவத்தி உபயோகித்து ஆபத்துகளை தவிர்க்கவும்.

    18. கால்நடைகள் அருகில் பட்டாசு வெடிப்பதால் அவைகள் மிரண்டு ஓடும்போது ஸ்கூட்டர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மீதும், பாதசாரிகள் மீதும் முட்டி விபத்துகள் நேரிடலாம், அதை தவிர்க்க வேண்டும்.

    19. தீ விபத்துகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வெடிகள் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு எடுத்துரைத்து, சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ள மேற்கூறிய பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும்.

    மேலும், தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து நேர்ந்தால், காவல்துறை அவசர உதவி 100, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண்.101, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் எண்.108, தேசிய உதவி எண்.112 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொண்டு மனித உயிர்களை காப்பாற்றி, பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்கும்படி பொதுமக்களை சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக் கொள்கிறது.

    கடந்த 2022-ம் ஆண்டு தமிழக அரசின் விதிமுறைகளை மீறி பட்டாசு கடை நடத்தியது தொடர்பாக 14 வழக்குகளும், கோர்ட்டு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பாற்பட்டு பட்டாசு வெடித்ததற்காகவும் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறி பட்டாசு வெடித்ததற்காகவும் 271 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

    பொதுமக்கள் அனைவரும் மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையுடனும், காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும் தீபாவளியை கொண்டாடும்படி சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை உட்பட சென்னை பெருநகரின் பல பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    • பட்டாசு கடைகளின் அருகில் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணித்து வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்வதற்கும் முக்கிய இடங்களில் அதிகளவு கூடுவதால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்னையில் அதிகளவு கூடும் இடங்களான தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் சென்னை காவல்துறை சார்பில், பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    * சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்புக்காக 1. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், 2. குற்ற தடுப்பு முறைகள், 3. போக்குவரத்தை நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    * சென்னையில் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களிலும் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் என சுமார் 18 ஆயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொண்டு, மேற்கூறிய 3 பாதுகாப்பு போலீசார் மற்றும் கூடுதல் கவனங்களுடன் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    * தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை பெருநகரில் புத்தாடைகள் மற்றும் பட்டாசு பொருட்கள் வாங்குவதற்கு அதிகளவு கூடும் இடங்களில், தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை உட்பட சென்னை பெருநகரின் பல பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    * தி.நகர்-7, வண்ணாரப்பேட்டை-3, கீழ்பாக்கம்-3 மற்றும் பூக்கடை-4 என மேற்கூறிய 4 இடங்களிலும் மொத்தம் 17 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீசார் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டு, நேரடியாகவும் 21 பைனாகுலர் மூலமும் கண்காணித்து, குற்றச்செயல்கள் நடவாமல் தடுத்து வருகின்றனர்.

    * தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை பகுதிகளில் மொத்தம் 5 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள் மற்றும் 10 தற்காலிக உதவி மையங்கள் அமைத்து, சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்தும், குற்றவாளிகள் நடமாட்டம் கண்காணித்தும், கூட்டத்தில் காணாமல் போகும் சிறுவர்கள், சிறுமியர்கள் உரியவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    * தி.நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதியில் கூடுதலாக 42 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, அதன்மூலம் நடப்பு நிகழ்வுகளை கண்காணித்து, குற்றங்கள் நிகழாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    * தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் பூக்கடை பகுதியில் அகன்ற திரையின் மூலம் பாதுகாப்பு வாசகங்கள் மற்றும் குற்றத்தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை வாசகங்கள் ஒளிபரப்பப்பட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

    * மேற்கூறிய 4 இடங்களிலும், போலீசார் மூலம் 19 ஒலி பெருக்கிகள் மூலம் திருட்டு குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் அறிவுரைகள் மற்றும் போக்குவரத்து நெரில் ஏற்படாமல் அறிவித்துக் கொண்டும் செல்போன், பணம், தங்க நகைகள் மற்றும் உடமைகளை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    * மேலும், 17 இடங்களில் ஸ்பீக்கர்கள் மூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் ஒலி பரப்பப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    * தி.நகர் மற்றும் பூக்கடை பகுதியில் தலா 2 என 4 டிரோன் கேமராக்கள் மூலம் கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் கண்காணித்து குற்ற நிகழ்வுகள் நடக்காதவாறு கண்காணித்து வருகின்றனர்.

    * பழைய குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக எப்.ஆர்.எஸ். என்ற செல்போன் செயலி மூலம் சுழற்சி முறையில், எப்.ஆர்.எஸ். காவல் குழுக்களாக பிரிந்து கண்காணித்தும், வாட்ஸ் அப் குழு தொடங்கி முக்கிய நிகழ்வுகள் உடனுக்குடன் பரிமாற்றம் செய்து, குற்றச்செயல்கள் நடவாமல் தடுக்கப்பட்டு வருகிறது.

    * காவல்துறை நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர சுற்றுக்காவல் ரோந்து வாகனங்கள் மூலம் அடிக்கடி ரோந்து சுற்றி வந்து கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    * தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை பகுதியில் போக்குவரத்து இருசக்கர ரோந்து வாகனங்கள் மூலம் சுற்றுக்காவல் ரோந்து மேற்கொள்ளப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    * சென்னையில் பொதுமக்கள் கூடும் இடங்களிலும், வணிக வளாகங்களிலும், சென்னை பெருநகர காவல் துறையின் நடமாடும் உடமைகள் சோதனை கருவி வாகனத்தின் மூலம் சுழற்சி முறையில் சென்று பொதுமக்கள் உடமைகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    * பொருட்கள் வாங்க வரும் பெண்களின் கழுத்திலுள்ள தங்க நகைகளை திருடப்படாமல் தடுக்க கழுத்தில் துணிகளை சுற்றி கவசமாக கட்டிக்கொள்ள வலியுறுத்தப்பட்டு, துணி கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    * பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க சாதாரண உடையில் ஆண் மற்றும் பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, குற்றவாளிகளை கண்காணித்து வருகின்றனர்.

    * முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மருத்துவ குழுவினர்கள் அடங்கிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    * பட்டாசு கடைகளின் அருகில் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணித்து வருகின்றனர்.

    * தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் வெளியூர் செல்ல ஏதுவாக, சென்னையில் கோயம்பேடு, மாதவரம் மற்றும் கே.கே. நகர் ஆகிய இடங்களில் சிறப்பு பேருந்து முனையங்கள் ஏற்படுத்தப்பட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • கர்நாடகா, ஆந்திரா, வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டத்தில் இருந்தும் வியாபாரிகள் வந்தனர்.
    • தீவன தட்டுபாடு காரணமாக விவசாயிகள் தாங்கள் வளர்த்த ஆடுகளை அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

    காரிமங்கலம்:

    வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதையொட்டி காரிமங்கலம் வாரச்சந்தையில் ஆடுகள், கோழி விற்பனைகளை கட்டியது. தீபாவளி பண்டிகை வரும் 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்காக வியாபாரிகள், கறி கடை உரிமையாளர்கள் மட்டுமின்றி கிராமத்து மக்களும் அதிக அளவில் ஆடுகள் மற்றும் கோழி வாங்கி சென்றனர்.

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சந்தையில் ஆடு, கோழி விற்பனைகளை கட்டியது. தருமபுரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல் காரிமங்கலம் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் தீபாவளி பண்டிகையன்று புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து கோவிலுக்கு சென்று வழிபாட்டு செய்வது வழக்கம்.

    அதனை தொடர்ந்து ஆடுகளை பலியிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கறி விருந்து நடைபெறும். அதற்கு இன்று கூடிய சந்தையில் ஆடுகளை வாங்க கர்நாடகா, ஆந்திரா, வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டத்தில் இருந்தும் வியாபாரிகள் வந்தனர்.

    வழக்கத்தை விட இந்த வாரம் கூடிய ஆட்டு சந்தையில் அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சுமார் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது. கிராம மக்கள் குழுவாக சேர்ந்து ஒன்று அல்லது இரண்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.

    காரிமங்கலம் பகுதியில் தீவன தட்டுபாடு காரணமாக விவசாயிகள் தாங்கள் வளர்த்த ஆடுகளை அதிகளவில் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

    கடந்த வாரம் 10, 15 கிலோ கொண்ட ஆடு 6 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. நாட்டுக்கோழி ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருகிற 13-ந் தேதியை பொது விடுமுறையாக அறிவித்து தலைமைச் செயலர் கே.எஸ்.ஜவஹர் ரெட்டி உத்தரவு பிறப்பித்தார்.
    • விருப்ப விடுமுறைக்கு பதிலாக 13-ந்தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

    திருப்பதி:

    தீபாவளி பண்டிகை விடுமுறையை நவம்பர் 13-ந் தேதியாக மாற்றி ஆந்திர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    வருகிற 13-ந் தேதியை பொது விடுமுறையாக அறிவித்து தலைமைச் செயலர் கே.எஸ்.ஜவஹர் ரெட்டி உத்தரவு பிறப்பித்தார்.

    முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படி, 12-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி விடுமுறை என்று குறிப்பிடப்பட்டது.

    ஆனால் தற்போது, பொது விடுமுறை மற்றும் விருப்ப விடுமுறை பட்டியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அதன் செயல்பாட்டில், விருப்ப விடுமுறைக்கு பதிலாக 13-ந்தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

    • ஆடைகள் வாங்குவதற்கு பொதுமக்கள் கடைகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
    • சாலையோரங்களில் கடை அமைத்துள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆடைகள் வாங்குவதற்கு பொதுமக்கள் கடைகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.இதனால் திருப்பூரில் முக்கிய சாலையான குமரன் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    அதேபோல் திருப்பூர் மாநகரில் காதர்பேட்டை, மத்திய பேருந்து நிலையம், மார்க்கெட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் கடை அமைத்துள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கே சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    முக்கிய சாலைகளான காதர் பேட்டை, குமரன் சாலை,மார்க்கெட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து அதிகரித்து வருவதால் கூடுதலாக போலீசாரை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

    • தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • பாதுகாப்புடன் விபத்தில்லாத தீபாளியாக கொண்டாடுவோம் என கூறினர்.

    மதுரை

    மதுரை அனுப்பானடி தீயணைப்புத் துறை நிலைய அலுவலகத்தில் பட்டாசுக் கடை நடத்துபவர்கள் மற் றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் வினோத் தலை மையில் நடைபெற்றது. உதவி மாவட்ட அலுவலர் பாண்டி, தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பட் டாசு கடை வைத்து நடத்தும் நபர்கள் தகுந்த பாதுகாப்பு டன் நடத்த வேண்டும் குறிப் பாக மின்சார வயர்கள் வெளியே தொங்கும்படி இருக்கக் கூடாது, அனுமதி பெற்ற அளவுக்கு தான் பட் டாசுகள் கடையில் இருக்க வேண்டும், அதிகமான ஊழி யர்களை கடை யில் பணி யில் அமர்த்த கூடாது,

    அதிக வெப்பம் தரக்கூ டிய போக்கஸ் லைட்டுகளை பயன்படுத்தக் கூடாது, இரவில் கடையை அடைத்து விட்டு செல்லும்போது அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு விட்டதா? என்று பார்த்துவிட்டு தான் செல்ல வேண்டும். மேலும் மெயின் பாக்சை அமர்த்தி விட்டு செல்வது நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்த னர்.

    இதன் பின்பு கடை பணி யாளர்களுக்கு தீய ணைப்பு கருவியை எவ்வாறு பயன்ப டுத்த வேண்டும் என்பதனை அனுப்பானடி நிலைய அலு வலர் கந்தசாமி, திருப்பரங் குன்றம் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் ஆகி யோர் செயல் விளக்கம் அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து உதயகுமார் கூறுகையில், பழைய தீயணைப்பு கருவி பி.சி. டைப் மாடல் கருவியை பயன்படுத்த வேண்டாம் என்றும் தற்போது ஏ.பி.சி. என்ற புதிய வகையான தீயணைப்பு கருவியை பயன் படுத்த வேண்டும் மேலும் சி.ஓ.2 என்ற தீயணைப்பு கருவியையும் கடைகளில் வைத்திருக்க வேண்டும் என் றும் வலியுறுத்தினார்.

    மேலும் பட்டாசு கடை அருகே தங்கள் கடையின் வெடி அதிக சத்தத்துடன் வெடிக்கும் என்பதனை காட்டுவதற்காக கடையின் அருகே டெமோ காட்டக்கூ டாது என்றும் அவர்கள் அறிவுறுத்தினர். இந்த நிகழ்ச்சியில் யுவராஜ் பட்டா சுகள், ஸ்ரீ பெரியாச்சி பட் டாசு கடை போன்ற பட்டாசு கடைகளின் மற்றும் நிறுவ னத்தின் உரிமையாளர்கள், பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • குறிப்பாக குழந்தைகளை கவரும் பட்டாசுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன.
    • ஒரே கம்பி மத்தாப்பில் 4 கலர் வரும் மல்டி கலர் கம்பி மத்தாப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய ரக பட்டாசுகள் அறிமுகமாகி உள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டு தோறும் சென்னை நகரம் முழுவதும் வியாபாரிகள் தற்காலிக பட்டாசு கடைகளை அமைத்து பட்டாசுகளை விற்பனை செய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பட்டாசுகளை விற்பனை செய்ய தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் சிறு வியாபாரிகள் பட்டாசு கடைகளை திறக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் தற்போது, சென்னை தீவுத்திடலில் மட்டும் பட்டாசுகள் விற்பனை நடந்து வருகிறது.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசுகளை வாங்குவதற்கு பொதுமக்கள் ஏராளமானோர் தீவுத்திடலில் குவிந்தனர். அங்கு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களுக்கு பிடித்த பட்டாசுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக பல புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக குழந்தைகளை கவரும் பட்டாசுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன. அந்த வகையில், கலர் கிரிஸ்டல், குடை கம்பி மத்தாப்பு, மயில் பட்டாசு, மல்டி ஷார்ட் துப்பாக்கி, கிரிக்கெட் பால் , பேட் , ஹெலிகாப்டர், கூல்டிரிங்க்ஸ் டின் பிளவர் பாட், தாமரை மலர், டாப் கன் 27, லெமன் சோடா, கோல்டன் லயன், ஒலிம்பிக் டார்ச், லிட்டில் டிராகன் உள்ளிட்ட பல்வேறு வகையான புதிய ரக பட்டாசுகள் அறிமுகமாகி உள்ளன.

    புதிய ரக பட்டாசுகள் குறித்து பட்டாசு விற்பனை செய்யும் வியாபாரிகள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு குழந்தைகளுக்காக மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான புதிய ரக பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. அதன்படி, பிளையிங் பேர்டு, பிளையிங் சக்கர், கலர் பென்சில், கோல்டன் டக், ஒரே நேரத்தில் 7 விதமாக வெடிக்கும் ரெயின்போ, ஒரே கம்பி மத்தாப்பில் 4 கலர் வரும் மல்டி கலர் கம்பி மத்தாப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய ரக பட்டாசுகள் அறிமுகமாகி உள்ளது.

    இந்த முறை பெரியவர்கள் வெடிக்கும் வெடிகள் அதிகளவில் விற்பனைக்கு வரவில்லை. முழுக்க முழுக்க குழந்தைகளை மட்டுமே இலக்கு வைத்து அவர்களுக்கான பசுமை பட்டாசுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்திருக்கிறது. அதே நேரத்தில் இரவு வான வெடிகள் இதுவரை இல்லாத வகையில் பல்வேறு புதிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    அதன்படி, இரவு வான வெடிகள் 120 ஷாட் முதல் 1,000 ஷாட் வரை விற்பனைக்கு வந்திருக்கிறது. 1,000 ஷாட் சுமார் 2 மணி நேரம் வரை வானில் வெவ்வேறு வண்ணங்களில் வெடித்து கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது. மேலும், 16 முதல் 70 எண்ணிக்கையிலான பட்டாசுகள் இருக்கும் வகையிலான கிப்ட் பாக்சுகள் விற்பனைக்கு வந்துள்ளது. மொத்தம் 24 வகையிலான கிப்ட் பாக்ஸ்கள் உள்ளன. ரூ.250 முதல் ரூ.3,500 வரை கிப்ட் பாக்சுகள் விற்பனைக்கு உள்ளன. தற்போது தீவுத்திடலில் மட்டும் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.

    இன்னும் ஓரிரு நாட்களில் சென்னையில் 100 சதவீதம் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு விடும் என எதிர் பார்க்கிறோம். தீவுத்திடலில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பட்டாசு களை வாங்கி செல்கின்றனர். கடையில் பட்டாசுகளை வாங்கினால், அதற்கான பில்லை பொதுமக்கள் கட்டாயம் கடைக்காரரிடம் கேட்க வேண்டும். ஆன்லைனில் சீன பட்டாசுகள் அதிகம் விற்பனையாவதால் பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் பட்டாசுகளை வாங்க வேண்டாம்.

    தமிழக அரசு கடந்த ஆண்டை விட தற்போது கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பட்டாசு கடைகளுக்கான ஷெட் அமைப்பதில் பல கெடுபிடிகள் உள்ளன. இதனால், சென்னையில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதற்கு தமிழக அரசு தளர்வு அளித்து, கடைகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்று வருவது வழக்கம்.
    • ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையானது அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது.

    சென்னை:

    தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்று வருவது வழக்கம். அந்தவகையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையானது அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற நவ.12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினத்தில் வருகிறது. இதனால் தமிழக அரசு தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை (கேதார - கவுரி விரத நோன்பு) விடுமுறை அளிக்க வேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல கடந்த ஆண்டு தீபாவளி அக்.24-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதற்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று அக்.22-ந் தேதி அரசு அறிவித்தது.

    இதனால் கடைசி நேர அறிவிப்பால், மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதிலும், மீண்டும் பணிக்கு திரும்புவதிலும் சிரமம் ஏற்பட்டது. எனவே இந்த ஆண்டாவது முன்கூட்டியே விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×