search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    • பல்வேறு பகுதிகளில் பணியாற்றுபவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக வரும் 9-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் அரசு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்புவதற்கும் மற்றும் ஏனைய பகுதிகளுக்கு சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கும் கூடுதல் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து 16 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கும்பகோணம் மற்றும் இதர கோட்ட அரசு போக்குவரத்து கழகம் மூலம் பல்வேறு பகுதிகளில் பணியாற்றுபவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக வரும் 9-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

    பொதுமக்கள் அனைவரும் அரசு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்து கட்டணம் நிர்ணயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் பேரில் தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பேருந்து நிர்ணயித்த கட்டணங்களில் இருந்து 30 சதவீதம் குறைப்பு செய்து இயக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதனை மீறி கூடுதலாக கட்டணம் வசூலித்தால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    பேட்டியின் போது பிரபாகரன் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.

    • பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பத்திரமாக வைத்துகொள்ளவும் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • ரெயில்வே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவை:

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

    இதனையொட்டி மக்கள் தற்போது தீபாவளிக்கு தேவையான புத்தாடைகள் மற்றும் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.

    கோவையில் உள்ள ஒப்பணக்கார வீதி, பெரிய கடைவீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    கடந்த 2 வாரங்களாகவே அங்குள்ள ஜவுளிக்கடைகள், எலக்ட்ரிக்கல் கடைகள், நகை கடைகள், செல்போன் கடைகள் உள்பட அனைத்து கடைகளிலும் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது.

    பொதுமக்களை கவரும் வகையில் கடைகளும் தீபாவளி தள்ளுபடியை அறிவித்துள்ளதால், மக்கள் கடைகளுக்கு சென்று தீபாவளிக்கு அணிய புத்தாடைகள் மற்றும் அணிகலன்கள், வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வாங்கி செல்கின்றனர்.

    இன்று கோவை மாநகரில் உள்ள டவுன்ஹால், கிராஸ்கட் ரோடு, ஒப்பணக்கார வீதியில் காலை முதலே மக்கள் குடும்பத்துடன் வந்து, புத்தாடைகளை எடுத்து சென்றனர். இதனால் கடைவீதிகளில் கூட்டம் காணப்பட்டது.

    கடைவீதிகளில் கூட்டம் கூடுவதால் அங்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அடிக்கடி வாகனங்களில் ரோந்து சென்றும் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பத்திரமாக வைத்துகொள்ளவும் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக வெடிகுண்டு நிபுணர்களும், மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளான கடைவீதிகள் மற்றும் பஸ் நிலையங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

    10 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் 2 குழுவாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவினர் கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும், மற்றொரு குழுவினர் டவுன்ஹால் பகுதியில் உள்ள கடைவீதிகளிலும் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

    நேற்று முதல் இந்த சோதனையானது நடந்து வருகிறது. இன்று காலை, வெடிகுண்டு நிபுணர் குழுவினர், மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளை கொண்டு, கோவை டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, பெரிய கடைவீதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த பொருட்களை மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டும், மோப்பநாய் உதவியுடனும் சோதனை நடத்தினர். தொடர்ந்து உக்கடம் பஸ் நிலையம், காந்திபுரம் பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், கோனியம்மன் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சோதனை நடந்தது.

    இதேபோல் அனைத்து வழிபாட்டு தலங்கள் முன்பும் சோதனை நடைபெற்றது. ரெயில் நிலைய பகுதியிலும் ரெயில்வே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ரெயில் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது. அவர்களது உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    யாராவது ரெயிலில் வெடிபொருட்களை எடுத்து செல்கின்றனரா என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையானது தீபாவளி பண்டிகை வரை தினமும் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விரைவு பஸ்களைப் பொருத்தவரை 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய முடியும்.
    • தீபாவளி முடிந்து ஊா் திரும்புவதற்காக 12-ந்தேதி பிற இடங்களிலிருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு 5 ஆயிரம் பேரும், 13-ந்தேதி 26 ஆயிரம் பேரும், 14-ந்தேதி 16 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனா்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    விரைவு பஸ்களைப் பொருத்தவரை 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய முடியும்.

    அந்த வகையில், கடந்த மாதமே முன்பதிவு தொடங்கியது. அதன்படி, வருகிற 9-ந்தேதி பயணிக்க 25 ஆயிரம் போ், 10-ந் தேதி பயணிக்க 45 ஆயிரம் போ், 11-ந்தேதி பயணிக்க 20 ஆயிரம் போ் என மொத்தம் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் முன்பதிவு செய்துள்ளனா்.

    இதில், அதிகபட்சமாக சென்னையில் இருந்து வருகிற 10-ந்தேதி பயணிக்க 28 ஆயிரம் பேரும், பிற இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்க 15 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனா்.

    இதேபோல, தீபாவளி முடிந்து ஊா் திரும்புவதற்காக 12-ந்தேதி பிற இடங்களிலிருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு 5 ஆயிரம் பேரும், 13-ந்தேதி 26 ஆயிரம் பேரும், 14-ந்தேதி 16 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனா்.

    • கர்நாடக பகுதி மக்கள் ஆண்டு தோறும் தமிழகத்திற்கு வந்து தான் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.
    • ஆண்டுக்கு ஒரு முறை தான் குழந்தைகளுக்காக இங்கு பட்டாசுகளை வாங்க வருகிறோம் எனவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் கடந்த மாதம் 7 ந்தேதி பட்டாசு விற்பனை கடை மற்றும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர், இதன் காரணமாக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் இந்த வருடம் பட்டாசு விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

    மேலும் கர்நாடகா மாநிலத்தில் பட்டாசு அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிகிறது. இதன் காரணமாக அருகேயுள்ள தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் விடுமுறை தினமான நேற்று மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து தேவையான பட்டாசுகளை வாங்கிச் சென்றனர்.

    இந்தாண்டு தமிழக அரசு 2 மணி நேரம் மட்டுமே தங்கள் வீடுகளில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளதால், தமிழக மக்கள் தற்போது பட்டாசுகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கர்நாடக பகுதி மக்கள் ஆண்டு தோறும் தமிழகத்திற்கு வந்து தான் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.

    குறிப்பாக கர்நாடகவில் விலை கூடுதலாக உள்ளதால் தொடர்ந்து தமிழகத்திற்கு படையெடுத்து வருகின்றனர். தவிர, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கடைகளில் மட்டுமில்லாமல் சாலைகளிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. இந்த ஆண்டு புதிய ரக பட்டாசுகளும் அதிகளவில் வந்துள்ளதால் அதனை சிறுவர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர், பட்டாசுகளை பொறுத்த வரை இந்த வருடம் விலை ஏற்றம் என்பது சற்று குறைவாகவே காணப்படுகின்றது என பட்டாசு வாங்க வந்தவர்கள் தெரிவித்தனர்.

    குறிப்பிட்ட கடைகளில் மட்டும் வாங்க வருவதால் அவர்கள் அதிகளவில் தள்ளுபடி கொடுக்கிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பெரும்பாலானோர் பட்டாசுகளை வாங்குவதற்கு கார்களில் வந்தனர். இதனால், கார்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாததால் தேசிய நெடுஞ்சாலையோரமும் சர்வீஸ் சாலையிலும் கார்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசலும் அதே போல் கடைகளிலும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை தான் குழந்தைகளுக்காக இங்கு பட்டாசுகளை வாங்க வருகிறோம் எனவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கள்ளக்குறிச்சி:

    தீபாவளி பண்டிகையை யொட்டி கள்ளக்குறிச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் காவல்துறை சார்பில் பஸ் நிலையம் வெளிப்பகுதியிலும், மணிக்கூண்டு பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கோபுரத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து தீபாவளி பண்டிகையை யொட்டி மளிகை பொருட்கள், பட்டாசுகள், துணிகள் ஆகியவற்றை வாங்க வரும் பொது மக்கள் நகர பகுதியில் அதிக அளவில் கூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், இவர்கள் சாலைகளில் தாறுமாறாக மோட்டார் சைக்கிளை நிறுத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவே துருகம் சாலை, சேலம் மெயின் ரோடு, கச்சிராயபாளையம் சாலை, சங்கராபுரம் சாலை ஆகிய 4 சாலைகளிலும் தற்காலிக வாகனங்கள் நிறுத்தும் இடங்களை ஏற்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

    இவ்வாறு அமைப்பதன் மூலம் அங்கு வாகனங்களை பொதுமக்கள் நிறுத்திவிட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு மீண்டும் வந்து தங்களது வாகனங்களை எடுத்துச் செல்லலாம் என கூறினார். தொடர்ந்து குற்ற சம்பவங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.அப்போது கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் உள்ளிட்ட போலீசார் பலரும் உடன் இருந்தனர்.

    • வேப்பமூடு பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
    • ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டா டப்படும். தீபாவளி பண்டி கைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் மாவட் டத்தில் உள்ள கடை வீதி களில் இன்று கூட்டம் அலைமோதியது.

    நாகர்கோவிலில் கடந்த 2 நாட்களாக காலையில் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. இதை யடுத்து கடை வீதிகளுக்கு காலை முதலே பொதுமக்கள் வரத்தொடங்கினார்கள்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள் இருசக்கர வாக னங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் குடும்பத் தோடு கடை வீதிக்கு வந்தி ருந்தனர். இதனால் நாகர்கோ வில் செம்மங்குடி ரோட்டில் கூட்டம் அலை மோதியது. ஜவுளிக்கடை களில் தீபாவளி பண்டிகை யையொட்டி புத்தாடைகள் பல்வேறு டிசைன்களில் விற்பனைக்கு வந்திருந்தது. குழந்தைகள் முதல் பெரி யவர்கள் வரை அதை எடுத்து மகிழ்ந்தனர். மீனாட்சிபுரம் சாலை, கலெக் டர் அலுவலக சாலை, செட்டிகுளம், வட சேரி, வேப்பமூடு பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    பொதுமக்கள் குடும்பத் தோடு வந்து புத்தாடைகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர். இதேபோல் தீபாவளி பண்டிகையை யொட்டி பேக்கரிகளில் பல்வேறு விதமான இனிப்பு வகைகளும் தயார் செய்து வைக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் அவற்றை வாங்கி சென்றனர். பட்டாசு கடைகளிலும் இன்று கூட் டம் அதிகமாக இருந்தது. பல்வேறு விதமான பட்டாசு கள் விற்பனைக்கு வந்துள் ளது. பொதுமக்கள் தங்க ளுக்கு தேவையான பட்டாசு களை ஆர்வமாக வாங்கி சென்றனர். ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள், பேக்கரிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து நாகர்கோவில் நகரில் கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

    கோட்டார், செட்டிகுளம், வடசேரி பகுதிகளில் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அண்ணா பஸ் நிலையம், வட சேரி பஸ் நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட் டது. கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சுந்தரவதனம் உத்தர வின்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மப்டி உடை யில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். சந்தேகப்ப டும்படி யாக நபர்கள் யாராவது சுற்றித்திரிந்தால் அவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கு மாறும் ஒலி பொருக்கி மூலமாக அறி விப்புகள் வெளியிடப்பட் டது. அஞ்சுகிராமம், கன்னி யாகுமரி, கொட்டாரம், ஆரல்வாய்மொழி, குளச்சல், தக்கலை, மார்த்தாண்டம், இரணியல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும் இன்று ஜவுளி கள் எடுப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

    அண்ணா பஸ் நிலையம், வடசேரி, கோட்டார், செட்டிகுளம் பகுதிகளில் வாகன சோதனை நடத்தப் பட்டது. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.

    • இந்த ஆண்டு பட்டாசு கடை திறப்பதற்கு கடைகளை தயார் செய்து வியாபாரிகள் தீயணைப்புத் துறையில் விண்ணப்பித்து இருந்தனர்.
    • கோடிக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகளை விற்க முடியாமல் பரிதவித்து வருவதாக வியாபாரிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திலும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்வது வழக்கம்.

    இதற்காக ஒவ்வொரு கடை வீதிகளிலும் பட்டாசு கடை தற்காலிகமாக திறக்கப்பட்டு பட்டாசு விற்பனை நடைபெறுவது உண்டு. இதற்காக வியாபாரிகள் தீயணைப்புத் துறையில் தடையில்லா சான்று (என்.ஓ.சி.) வாங்கி கடையை திறப்பது வழக்கம். அதை வைத்து போலீசில் அனுமதி வாங்குவார்கள்.

    அதே போல் இந்த ஆண்டு பட்டாசு கடை திறப்பதற்கு கடைகளை தயார் செய்து வியாபாரிகள் தீயணைப்புத் துறையில் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் இதில் கான்கிரீட் கட்டிடமாக இருக்கும் கடைகளுக்கு மட்டும் தீயணைப்புத் துறையில் இருந்து என்.ஓ.சி. (தடையில்லா சான்று) வழங்கி உள்ளனர்.

    'தகர ஷீட்' போடப்பட்ட கடைகளுக்கு என்.ஓ.சி. தர முடியாது என்று தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். இதனால் சென்னையில் தற்காலிக பட்டாசு கடை திறக்க முடியாமல் 1500 வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.

    சென்னை பாண்டி பஜாரில் பட்டாசு கடை நடத்தும் வியாபாரிகள் கூறுகையில், கடந்த 25 வருடங்களாக நாங்கள் பட்டாசு கடை நடத்தி வருகிறோம். அதற்கான லைசென்ஸ் எங்களிடம் உள்ளது.

    ஆனால் இந்த ஆண்டு பட்டாசு கடைக்கு தீயணைப்புத் துறை அதிகாரிகள் புது நிபந்தனை விதித்து உள்ளனர். தகர ஷீட் உள்ள கடைகளுக்கு அனுமதி இல்லை என்று கூறுகிறார்கள்.

    25 வருடமாக எல்லோரும் தகர ஷீட் அமைத்துதான் தற்காலிக கடை நடத்தி வருகிறோம். அப்போதெல்லாம் கிடைத்த அனுமதி இப்போது வழங்க மறுப்பது ஏன்?

    நாங்கள் செலவு செய்து லைசென்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடையை தயார் செய்து வைத்துள்ளோம்.

    ஆனால் தீயணைப்புத் துறையினர் திடீரென புது நிபந்தனை விதிக்கின்றனர். இதை முன்கூட்டியே வியாபாரிகளுக்கு அவர்கள் தெரியப்படுத்தி இருக்க வேண்டும்.

    சென்னையில் மட்டும் சுமார் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் அனுமதிக்காக கேட்கப்பட்டிருந்த நிலையில் 300 கான்கிரீட் கடைகளுக்கு மட்டும்தான் லைசென்ஸ் வழங்கியுள்ளனர். 1500-க்கும் மேற்பட்ட தகரஷீட் கடைகளுக்கு அனுமதி இல்லை என கூறி வருகின்றனர்.

    இதை முன்கூட்டியே தீயணைப்புத் துறையினர் அறிவிக்காதது ஏன்? என்று தெரியவில்லை. தீபாவளிக்கு இன்னும் ஒருவாரம் தான் உள்ளது. இன்னும் லைசென்ஸ் வழங்காமல் கடைக்காரர்களை அலைக்கழிக்கிறார்கள். இதனால் கோடிக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகளை விற்க முடியாமல் பரிதவித்து வருகிறோம் என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தீயணைப்புத் துறை இணை இயக்குனர் பிரியா கூறுகையில், தகர ஷீட் கடைகளுக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக இன்று முடிவெடுப்பதாக தெரிவித்தார்.

    பட்டாசு கடை அமைக்க தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 5,200 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் அந்த விண்ணப்பங்கள் விரைந்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் தகுதியான விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கி வருவதாகவும் அதிகாரி பிரியா தெரிவித்து உள்ளார்.

    • ரங்கநாதன் தெரு முழுக்கவே பொதுமக்கள் தலைகளாகவே தெரிந்தன.
    • சுமார் 1000 போலீசார் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் பொதுமக்கள் ஜவுளி, நகை உள்ளிட்ட பொருட்களை ஆர்வமுடன் வாங்கி வருகிறார்கள். இதனால் சென்னையில் கடை வீதிகள் களை கட்ட தொடங்கியுள்ளன.

    சென்னையில் நேற்று ஏராளமான பொதுமக்கள் கடை வீதிகளில் குவிந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள்.

    இந்த நிலையில் தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையான இன்று சென்னையில் கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இன்று விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஜவுளி, நகைகள் மற்றும் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடைகளுக்கு படையெடுத்தனர். கடந்த 2 நாட்களாக அவ்வப்போது மழை பெய்த நிலையில் இன்று காலை முதல் வெயில் அடித்ததால் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்களுக்கு வசதியாக அமைந்தது.

    இதனால் இன்று காலையில் இருந்தே சென்னையில் உள்ள கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. நேரம் செல்லச்செல்ல கடைகளுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் அனைத்து கடைகளிலுமே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    சென்னையின் முக்கிய வணிக மையமாக விளங்கும் தி.நகரில் இன்று காலையில் இருந்தே ஏராளமான மக்கள் குவிந்து தீபாவளி கொண்டாடுவதற்கு தேவையான ஜவுளி, நகைகள் போன்றவற்றை ஆர்வமாக வாங்கினார்கள். தி.நகர் ரங்கநாதன் தெருவில் இன்று கட்டுக்கடங்காத வகையில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

    ரங்கநாதன் தெரு முழுக்கவே பொதுமக்கள் தலைகளாகவே தெரிந்தன. நடக்கக்கூட இடம் இல்லாத வகையில் நெரிசல் அதிகமாக காணப்பட்டது. அதே போல் கடைகளுக்கு உள்ளேயும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கடைகளிலும் விற்பனை அமோகமாக நடந்தது.

    இதேபோல் தி.நகர் உஸ்மான் சாலையிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. உஸ்மான் சாலையில் உள்ள கடைகள், தெருவோர கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்கினார்கள்.


    கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தி.நகர் ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் நின்றபடியும் போலீசார் கூட்ட நெரிசலில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறதா என்று கண்காணித்தனர்.

    அந்த பகுதியில் சுமார் 1000 போலீசார் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஏராளமான ஆண் போலீசாரும், பெண் போலீசாரும் சாதாரண உடையிலும் கண்காணித்தனர். பெண் போலீசார் சேலை மற்றும் சுடிதார் அணிந்து கொண்டு பொருட்கள் வாங்க செல்வது போல் கூட்டத்துடன் கூட்டமாக நின்று கொண்டு பெண்களிடம் யாராவது அத்துமீறலில் ஈடுபடுகிறார்களா என்றும் காண்காணித்தனர்.

    தி.நகர் ரங்கநாதன் தெருவில் வழக்கமாக கண்காணிப்பு பணிக்காக 50 நிரந்தர சிசிடிவி கேமராக்கள் உள்ளன. தற்போது கூடுதலாக மேலும் 50 சி.சி.டி.வி கேமராக்கள் நேற்று முதல் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்கள் மூலம் திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறதா என்று மாம்பலம் போலீஸ் நிலையத்தில் இருந்தே போலீசார் கண்காணித்தனர்.

    தி.நகர் பகுதிகளில் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களும் ஒட்டப்பட்டு உள்ளன. அது போன்றவர்களை பார்த்தால் மிகவும் உஷாராக இருக்கும்படி போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் இது போன்ற பழைய குற்றவாளிகள் தீபாவளி கூட்டத்துக்குள் புகுந்தால் அவர்களின் முக அடையாளங்களை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறியும் வசதி கொண்ட நவீன கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி இனிவரும் நாட்களிலும் சனிக்கிழமை வரை மாலை நேரங்களில் அதிக அளவில் கூட்டம் வரும் என்பதால் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இன்னும் 2 நாட்களில் தி.நகர் ரங்கநாதன் தெரு பகுதியில் சிறப்பு கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்படுகிறது.

    பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் பணம், அணிந்திருக்கும் நகைகள் மற்றும் உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படியும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்துக்கொண்டே இருந்தனர். மேலும் முன்பின் தெரியாதவர்கள் வந்து பேசினால் அவர்களிடம் பேச்சு கொடுக்க வேண்டாம் என்றும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினார்கள்.

    இதேபோல் தி.நகர் பாண்டி பஜார், பனகல் பார்க், வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர் பஸ் நிலையம், ஜி.என்.செட்டி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளி மற்றும் நகைக்கடைகளிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினார்கள்.

    சென்னை புரசைவாக்கத்தில் ஏராளமான ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் உள்ளன. இங்கும் இன்று காலையில் இருந்தே பொதுமக்கள் குவிந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக ஜவுளி, நகை உள்ளிட்ட பொருட்களை வாங்கினார்கள். பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சாலையில் வாகனங்கள் செல்லக்கூட இடம் இல்லாத வகையில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக காணப்பட்டது.

    ஜவுளிகளின் மையமாக திகழும் வண்ணாரப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலையில் இருந்தே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையில் ஜவுளிக்கடைகள் அதிகம் காணப்படுகின்றன. இதனால் இங்கு குவிந்த பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருக்கு தேவையான ஜவுளிகளை வாங்கினார்கள்.

    சென்னை, புறநகர் பகுதிகள், மீஞ்சூர், பொன்னேரி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வண்ணாரப்பேட்டைக்கு வந்து ஆடைகளை வாங்கினார்கள். புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உடைமைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும்படி போலீசார் எச்சரித்துக்கொண்டே இருந்தனர்.

    சென்னை குரோம்பேட்டை தற்போது வணிக மையமாகவே மாறியுள்ளது. இங்கு பிரபல நிறுவனங்களின் ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் ஏராளம் உள்ளன. இதனால் ஞாயிற்றுக்கிழமையான இன்று இங்கும் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்து தீபாவளி பண்டிகைக்கான ஆடைகள், நகைகள் மற்றும் பொருட்களை வாங்கினார்கள். குறிப்பாக செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து கூட ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து குவிந்தனர். இதனால் குரோம்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் இன்று வியாபாரம் களை கட்டியது. குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.

    இதேபோல் சென்னை பாரிமுனை, தாம்பரம், பள்ளிக்கரணை, போரூர், பாடி, மயிலாப்பூர், அம்பத்தூர், பெரம்பூர் உள்ளிட்ட அனைத்து வணிக பகுதிகளில் உள்ள கடைவீதிகளிலும் பொதுமக்கள் குவிந்து ஜவுளி, நகைகள், அணிகலன்கள், செல்போன்கள், டி.வி. மற்றும் வீடுகளுக்கு தேவையான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்றவற்றை வாங்கினார்கள்.

    இதேபோல் கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், ஈரோடு உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பெரிய நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் உள்ள கடைகளிலும் தீபாவளி ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் திரண்டனர். இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் கடை வீதிகளில் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது.

    • ஆர்டருக்கான பணம் செலுத்தப்பட்டவுடன், இணைய தளத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது.
    • விலைகள் மிகவும் குறைவாக இருப்பதால், தங்கள் பண்டிகை கொண்டாட்டங்களுக்காக இணைய தளத்தில் ஆர்டர்களை ஆர்வத்துடன் செய்கிறார்கள்.

    சென்னை:

    தீபாவளி பட்டாசை ஆன்லைனில் விற்பனை செய்வதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக சைபர்கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளிப் பண்டிகை காலத்தில் பட்டாசுகளுக்கான தேவை அதிகரிப்பதால், சைபர் குற்றவாளிகள் போலி இணையதளங்களை உருவாக்கி நம்ப முடியாத விலையில் பட்டாசுகளை வழங்குவதாக உறுதியளித்து மோசடி செய்வதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். எனவே பொதுமக்கள் இந்த மோசடி பற்றிய விழிப்புணர்வோடு இருப்பதும், இத்தகைய மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதும் அவசியமாகும்.

    பொதுமக்கள் https://luckycrackers.com/ என்ற இணைய தளத்திற்குச் சென்று ஆர்டரைச் செய்தபின் பின்னர் வாட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு ஆர்டரின் ஸ்கிரீன் ஷாட்டை அனுப்புகிறார்கள். விலைகள் மிகவும் குறைவாக இருப்பதால், தங்கள் பண்டிகை கொண்டாட்டங்களுக்காக இணைய தளத்தில் ஆர்டர்களை ஆர்வத்துடன் செய்கிறார்கள்.

    ஆர்டருக்கான பணம் செலுத்தப்பட்டவுடன், இணைய தளத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதனால் சம்பாதித்த பணத்தையும் இழந்து மிகவும் ஏமாற்றம் அடைகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்தில் இந்த மோசடி தொடர்பாக மொத்தம் 25 வழக்குகள் பதிவாகி உள்ளன. நீங்கள் பட்டாசு வாங்கும் இணைய தளத்தின் சட்டபூர்வமான தன்மையை எப்போதும் சரி பார்க்கவும், வாடிக்கையாளர் மதிப்புரைகளைப் பார்க்கவும், அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்ணுக்கான லேண்ட்லைன் எண் இணைய தளத்தில் உள்ளதா? எனச் சரி பார்த்து, பாதுகாப்பான கட்டண முறைகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்யவும்.

    நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகி இருந்தால், உடனடியாக சைபர்கிரைம் கட்டணமில்லா உதவி எண். 1930-ஐ டயல் செய்து புகார் அளிக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
    • வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு

    நாகர்கோவில், நவ.4-

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் நாகர்கோவிலில் உள்ள கடைவீதிகளில் இன்று கூட்டம் அலைமோதியது. அதிகாலையில் மழை பெய்து வந்த நிலையில் அதன்பிறகு மழை சற்று குறைந்து காணப்பட்டது.

    இதையடுத்து மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொது மக்கள் இன்று நாகர்கோவிலில் உள்ள கடைவீதிகளில் புத்தா டைகள் எடுக்க குவிந்திருந்த னர். இதனால் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் கூட்டம் அலைமோதியது.

    சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் புத்தாடைகளை எடுத்து மகிழ்ந்தனர். தீபா வளியை குதூகலப் படுத்தும் வகையில் புத்தம் புதிய வடிவிலான குழந்தைகளுக் கான ஆடைகள் விற்பனைக்கு வந்திருந்தது. வடசேரி, செட்டிகுளம், கலெக்டர் அலுவலகம் பகுதியில் உள்ள கடை வீதிகளிலும் இன்று கூட்டம் அதிகமாக இருந்தது.

    கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியதால் நாகர்கோவில் நகரில் கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. கோட்டார் பகுதிகளில் வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்தனர். வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்தே சென்றன. அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கோட்டார் பகுதியை கடந்து செல்வதற்கு மதிய நேரங்களில் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் கோட்டார், சவேரியார் ஆலய பகுதிகளில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். செட்டிகுளம், வேப்பமூடு பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    கடைவீதிகளில் கூட்டம் அலை மோதியதையடுத்து போலீசார் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஓடும் பஸ்களில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வந்ததையடுத்து பொதுமக்கள் பஸ்களில் எச்சரிக்கையுடன் பயணம் செல்லுமாறு போலீ சார் அறிவுறுத்தியுள்ளனர்.

    வடசேரி பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வரு கிறார்கள். சந்தேகப்படும் படியான நபர்கள் யாராவது சுற்றி திரிந்தால் தகவல் தெரிவிக்குமாறும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மார்த்தாண்டம், குளச்சல், அஞ்சு கிராமம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு கடைவீதிகளிலும் இன்று கூட்டம் அதிகமாக இருந்தது. பட்டாசுகள் விற்பனைக்கு வந்திருந்தாலும் இன்று கடைகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

    • பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்டம் முழுவதும் நடத்தி வருகின்றனர்.
    • பிட் நோட்டீஸ்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பில் தீபாவளி பட்டாசுகளை பாதுகாப்பாக வெடித்து கொண்டாட வேண்டும் என "விபத்தில்லா தீபாவளி வீடுதோறும் மகிழ்ச்சி" என்ற பெயரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்டம் முழுவதும் நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய ரமேஸ்பாபு அதிகாரி தலைமையில் மாமல்லபுரம் பேருந்து நிலையத்தில் உள்ளூர் மக்கள் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளிடம் பட்டாசுகளை வெடிக்க தவிர்க்க வேண்டிய இடங்கள், வெடிக்கும் முறை, அதற்கான இடம், நேரம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பிரச்சாரம் செய்தனர், பின்னர் அதற்கான விபரங்கள் அடங்கிய பிட் நோட்டீஸ்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    • விதவிதமான அழகு தாவரங்கள் 200-க்கும் மேற்பட்ட வகைகள் இங்கு விற்பனைக்கு உள்ளன.
    • தீபாவளியையொட்டி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரி கே.பி. ரோட்டில் தென்னை நார் கயிறு கூட்டமைப்பின் ஈத்தாமொழி எக்ஸ்க்ளூசிவ் என்ற ஷோரூமில் வீட்டுக்குள் வளர்க்கப்படும் அழகு தாவர செடிகள் மற்றும் தென்னை நார் தேங்காய் சிரட்டை ஆகிய வற்றில் உருவாக்கப்பட்ட தீபாவளி அன்பளிப்பு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் இயற்கை மெழுகு தீபங்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    இதில் வீட்டுக்குள் வளர்க்கப்படும் விதவிதமான அழகு தாவரங்கள் 200-க்கும் மேற்பட்ட வகைகள் இங்கு விற்பனைக்கு உள்ளன. தீபாவளி பண்டிகையை யொட்டி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்ட தொட்டிகளுடன் விதவிதமான வீட்டுக்குள் வளர்க்கப் படும் அழகு தாவர செடிகள் இங்கு விற்பனைக்கு குவிந்துள்ளன.

    வீட்டிற்குள் வர வேற்பறை, முக்கிய அறை, படுக்கையறை, பூஜையறை, போர்டிகோ உள்ளிட்ட பகுதிகளில் வளர்க்க வசதியாக தொட்டிகளில் வளர்க்கப்படும் இந்த செடிகள் மனதிற்கு மகிழ்ச்சி யையும், உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன.

    இந்த செடிகள் வளர தென்னைமர தூள்கள் கொண்டும் இயற்கை உரங்கள் மற்றும் நுண்ணுயிர்கள் கொண்டும் ரசாயன பொருட்கள் இல்லாமல் அமைக்கப்பட் டவை ஆகும். குறைந்த அளவு தண்ணீரில் இவை வளர்க்கப்படுகின்றன.

    தமிழர்களின் கலாச்சா ரங்களை வெளிப்படுத்தும் விதமாக மண் தொட்டிகளில் வரையப்பட்ட ஓவியங்கள் இந்த வீட்டுக்குள் வளர்க்கப் படும் தோட்ட செடிகளை மேலும் அழகாக்கின்றன.

    தீபாவளியையொட்டி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இதை பயன்படுத்தி கொள்ளும்படி அதன் உரிமையாளர் சிஜூ கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×