search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    • ஆடைகள் திருப்பூர் பனியன் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
    • தீபாவளி பண்டிகைக்கு 11 நாட்களே உள்ள நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 6 நாட்கள் நடக்கும் விற்பனையே கைகொடுக்கும்.

    திருப்பூர்:

    அன்றாட பயன்பாட்டில் பின்னலாடைகளின் பங்களிப்பு அதிகரித்து விட்டது. ஆண்கள், பெண்கள், முதியோர், இளைஞர், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் டீ-சர்ட், ஷார்ட்ஸ், டிராக் பேன்ட், விளையாட்டு ஆடைகள், வாக்கிங் மற்றும் ஜிம் செல்லும்போது அணியும் ஆக்டிவ் பேன்ட் மற்றும் டீ-சர்ட் என பல்வகை ஆடைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    இதுபோன்ற ஆடைகள் திருப்பூர் பனியன் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளியையொட்டி பின்னலாடைகளை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பின்னலாடை வர்த்தகம் திருப்பூரில் சூடுபிடித்துள்ளது. டீ-சர்ட், இரவு நேர ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் ஆகியவற்றை மொத்தமாக பொதுமக்கள் வாங்கி வருகின்றனர்.

    மேலும் தீபாவளி விற்பனைக்காக கடந்த ஒரு மாதமாக, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநில வியாபாரிகள் ஆடை கொள்முதல் செய்து முடித்து விட்டனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தீபாவளிக்கு முந்தைய 10 நாட்கள் ஆடை விற்பனை களைகட்டும். அதற்காக கடந்த சில நாட்களாக திருப்பூர் காதர்பேட்டை கடைகளில் விழாக்கால விற்பனைக்கான கொள்முதலும், ஆர்டர் விசாரணையும் பரபரப்பாக நடந்து வருகிறது.

    தீபாவளி பண்டிகைக்கு 11 நாட்களே உள்ள நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 6 நாட்கள் நடக்கும் விற்பனையே கைகொடுக்கும். அதற்காக குறு, சிறு வியாபாரிகள், புதிய ஆடைகளை, உள்ளாடைகளை கொள்முதல் செய்ய காதர்பேட்டை மொத்த விற்பனை கடைகளில் குவிந்து வருகின்றனர். பொதுமக்களும் ஆடைகள் வாங்க வருகின்றனர். இதனால் திருப்பூர் காதர்பேட்டை பகுதிகளை கட்ட தொடங்கி உள்ளது.

    • பட்டாசு தயாரிக்கும் இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரனிடம் ஒப்படைத்தனர்.

    சுவாமிமலை:

    தமிழகத்தில் சமீபத்தில் பட்டாசு குடோனில் ஏற்றபட்ட தீவிபத்தில் பலர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து தமிழக காவல் துறை சார்பில் பட்டாசு குடோன் மற்றும் பட்டாசு தயாரிக்கும் இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் முறையாக உரிய அனுமதி பெற்று தொழில் செய்து வருகின்றரா என தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் அதிக அளவில் போலீசார் தீவிரமாக பட்டாசு குடோனில் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ்ராவ்த் உத்தரவின் படி, திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி தலைமையிலான போலீசார் நாச்சியார்கோவில் அருகே உள்ள நாகரசம்பேட்டை பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு குடோனில் முறையாக அனுமதி பெறாமல் ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் 204 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடந்து போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரனிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக நாச்சியார் கோவில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 சதவீதம் பேருந்து கட்டணம் குறைந்துள்ளது.
    • கடந்த ஆண்டு 25 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வெளியூர்களுக்கு அதிகளவில் மக்கள் செல்லவார்கள் என்பதால், ஆம்னி பேருந்துகளில் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் விதமாக கட்டணம் நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்து கட்டணம் 5 சதவீதம் குறைப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கள் அறிவித்துள்ளது.

    ஆம்னி பேருந்துகள் செயல்பாடுகள் குறித்து நடத்தப்பட்ட கூட்டத்தில், போக்குவரத்து துறையின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கள் கூறியுள்ளார்.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்காக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை- கோவையில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1725, அதிகபட்ச கட்டணம் ரூ.2,874 எனவும், சென்னை- நெல்லையில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1960ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.3268 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், சென்னை- சேலத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.1363ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,895ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, சென்னை- மதுரைக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.1688 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.2,554ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை- நாகர்கோவில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2211ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.3,765ஆகவும் நிர்ணயம்.

    சென்னை- திருச்சி குறைந்தபட்ச கட்டணம் ரூ.1325ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,841 ஆகவும் நிர்ணயம்.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 சதவீதம் பேருந்து கட்டணம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 25 சதவீதம் கட்டணம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    சென்னையில் வேலை நிமித்தமாக தங்கி இருப்பவர்கள், படிப்பு நிமித்தமாக தங்கி இருப்பவர்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

    அவர்கள் சிரமமின்றி பயணம் செய்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஆண்டு தோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். சென்னையில் இருந்து கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதேபோல் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் விடப்படும்.

    இது தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும். கடந்த ஆண்டு தீபாவளிக்காக சென்னையில் இருந்தும் பிற பகுதிகளில் இருந்தும் மொத்தம் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது.

    சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, சிறப்பு செயலாளர் வெங்கடேஷ், ஆணையர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்கள் பங்கேற்றனர்.

    ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையில் சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 4,675 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10 ஆயிரத்து 975 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 5,920 சிறப்பு பஸ்களும் என மொத்தமாக 16 ஆயிரத்து 895 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையில் தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 3,167 சிறப்பு பஸ்களும் என 3 நாட்களும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 9 ஆயிரத்து 467 பஸ்கள், மற்ற பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3 ஆயிரத்து 825 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 13 ஆயிரத்து 292 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    வருகிற 9-ந்தேதி வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக சென்னையில் இருந்து 1,365 சிறப்பு பஸ்களும், 10-ந்தேதி வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 1,895 சிறப்பு பஸ்களும், 11-ந்தேதி வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 1,415 சிறப்பு பஸ்களும் என சென்னையில் இருந்து மொத்தம் 10,975 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மேலும் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 9-ந்தேதி 1,100 சிறப்பு பஸ்களும், 10-ந்தேதி 2,710 சிறப்பு பஸ்களும், 11-ந்தேதி 2,110 சிறப்பு பஸ்களும் என 5,920 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் 10,595 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 3 நாட்களிலும் 16,895 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    தாம்பரம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பஸ்கள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    பூந்தமல்லி பைபாஸ் சாலை பஸ் நிறுத்தத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பஸ்கள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை அரியலூர், ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோவை மற்றும் பெங்களூர் செல்லும் பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    தீபாவளி முடிந்து சென்னை திரும்புவதற்காக வருகிற 13-ந் தேதி பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 1,275 சிறப்பு பஸ்களும், 14-ந் தேதி 2,100 பஸ்களுடன் கூடுதலாக 975 சிறப்பு பஸ்களும், 15-ந் தேதி 2,100 பஸ்களும், கூடுதலாக 917 பஸ்களும் என 3 நாட்களும் மொத்தம் 9467 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 13-ந் தேதி 1250 சிறப்பு பஸ்களும், 14-ந் தேதி 1395 சிறப்பு பஸ்களும், 15-ந் தேதி 1180 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 3825 சிறப்பு பஸ்கள் விடப்படுகின்றன.

    தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்ப மட்டும் மொத்தம் 6992 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீபாவளி நெருங்கும் நிலையில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வருகின்றன
    • திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. அவர்களிடம் தகவல் தரலாம்

    திருப்பூர்:

    தீபாவளி நெருங்கும் நிலையில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வருகின்றன.எனவே இதனை தடுக்க திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி., 94450 - 48880, இன்ஸ்பெக்டர் 94981 - 02078, 0421 - 2482816 ஆகிய எண்களில் புகார் செய்யலாம்.

    ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு எண்:40, ஆஷர் நகர், 2வது வீதி, எஸ்.ஏ.பி., தியேட்டர் பின்புறம், அவிநாசி ரோடு, திருப்பூர் என்ற முகவரியில் நேரில் புகார் தெரிவிக்கலாம் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • நவம்பர் 12-ந்தேதி கொண்டாடப்படும் தீப ஒளிக்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசிடமிருந்து எந்த அசைவும் இல்லை.
    • விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு நடப்பாண்டில் மிகை ஊதியத்தின் அளவை 25 சதவீதம் ஆக உயர்த்தி உடனடியாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தீபஒளி திருநாளையொட்டி தமிழக அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், நவம்பர் 12-ந்தேதி கொண்டாடப்படும் தீப ஒளிக்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், இது தொடர்பாக அரசிடமிருந்து எந்த அசைவும் இல்லை.

    அதனால், கடந்த ஆண்டைப் போலவே கடைசி நேரம் வரை தாமதித்து, தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தாமல், 10 சதவீதம் மட்டுமே மிகை ஊதியம் வழங்கப்படும் என்று அரசு தன்னிச்சையாக அறிவித்து விடுமோ? என்ற ஐயமும், கவலையும் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே தொகையே மிகை ஊதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு நடப்பாண்டில் மிகை ஊதியத்தின் அளவை 25 சதவீதம் ஆக உயர்த்தி, உடனடியாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலங்களில் இருந்த விமான கட்டணத்தை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது.
    • பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களில் ஓட்டல்களில் தங்குவதற்கு அறைகள் இல்லை. அனைத்தும் நிரம்பிவிட்டன.

    சென்னை:

    உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமான பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. குறிப்பாக பண்டிகை விடுமுறை காலங்களில் விமான சுற்றுலா செல்பவர்கள் முன் கூட்டியே பயணத்தை திட்டமிடுகின்றனர்.

    சுற்றுலா முகவர்கள் ஐ.ஆர்.சி.டி.சி. போன்ற ஏற்பாட்டாளர்கள் மூலம் புக்கிங் செய்து சுற்றுலா தலங்களுக்கு செல்கிறார்கள். தற்போது தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 12-ந்தேதி வருகிறது. அதனால் 10 முதல் 16-ந்தேதி வரை உள்நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு விமான கட்டணம் 2 மடங்கு உயர்ந்து உள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலங்களில் இருந்த விமான கட்டணத்தை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது.

    குறிப்பாக பெங்களூர், ஐதராபாத், மும்பை, புனே, ராஜஸ்தான், காஷ்மீர், கோவா உள்ளிட்ட பல நகரங்களுக்கு விமான கட்டணம் எகிரி உள்ளது. விமானங்களில் இடங்களும் நிரம்பிவிட்டன.

    மும்பை-டெல்லி ஒரு வழி விமான கட்டணம் சராசரியாக ரூ.6876. ஆனால் தீபாவளி பண்டிகை காலத்தில் ரூ.8788 ஆக 27.8 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே போல் புனே-டெல்லி விமான கட்டணம் கடந்த தீபாவளியை விட தற்போது 44.4 சதவீதம் அதிகரித்து உள்ளது.

    சென்னை-கொல்கத்தா ஒரு வழி கட்டணம் ரூ.6815-ல் இருந்து ரூ.8725 ஆக உயர்ந்துள்ளது. இது 28 சதவீதம் உயர்வாகும். பெங்களூரு-கொல்கத்தா ஒரு வழி விமான கட்டணம் ரூ.10195 ஆக அதிகரித்து உள்ளது. இது 40 சதவீதம் உயர்வாகும்.

    இது குறித்து டி.எம்.சி. லீசர் ஏஜென்சி இயக்குனர் ஷாம்நாத் கூறியதாவது:-

    இந்தியாவிற்குள் உள்ள நகரங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விமான பயணம் தற்போது அதிகரித்து உள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்கு கோவா, அந்தமான், கேரளா, காஷ்மீர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் தாய்லாந்து, அரபு நாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    ஆனால் அதற்கேற்ற அளவு இருக்கைகள் இல்லை. பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களில் ஓட்டல்களில் தங்குவதற்கு அறைகள் இல்லை. அனைத்தும் நிரம்பிவிட்டன.

    இதே போல் கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, பாலி போன்ற நாடுகளுக்கு செல்ல இடங்கள் விமானத்தில் இல்லை. இதனால் கட்டணம் இரு மடங்கு அதிகரித்து உள்ளது.

    மேலும் டிசம்பர் மாதம் 20-ந்தேதி முதல் ஜனவரி 10-ந்தேதி வரை வெளி நாட்டு விமானங்களில் பெரும் பாலான இடங்கள் நிரம்பிவிட்டன. அந்தமானுக்கு தேவை அதிகம் உள்ளது. இதனால் கட்டணம் உயர்ந்தது.

    மும்பை-கோவாவுக்கு இண்டிகா விமானத்தில் ரூ.17 ஆயிரம் கட்டணம், விஸ்தாரா விமானத்தில் கட்டணம் ரூ.48 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சராசரியாக ரூ.8000 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

    கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு இப்போதே முன்பதிவு செய்ய ஆர்வமாக உள்ளனர். ஆனால் ஒரு சில நாடுகளுக்கு செல்ல விமானத்தில் இடம் இல்லை. இதே போல் தாய்லாந்துக்கு பயணம் செய்வோர் அதிகமாக இருப்பதால் இரு மடங்கு கட்டணம் அதிகரித்து உள்ளது. மும்பை, புனே நகரங்களுக்கு தேவை அதிகமாக இருப்பதால் கட்டணம் உயர்ந்து உள்ளது.

    புத்தாண்டு வரை விமானங்களில் பயணிக்க கட்டணம் அதிக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நலவாரியங்களில் தற்போது 40 லட்சம் தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா்.
    • கட்டுமான தொழிலாளா்களுக்கு வீடு கட்ட மானியம் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும்.

    திருப்பூர்:

    எச்எம்எஸ்., தொழிற்சங்கம் சாா்பில் திருப்பூர் மாவட்டத் தலைவா் ஆா்.முருகன், மாவட்டச்செயலாளா் முத்துசாமி ஆகியோா் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    முன்னாள் முதல்வா் கருணாநிதியால் தமிழகத்தில் கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளா்களுக்கு என தனித்தனியாக 18 நலவாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நலவாரியங்களில் தற்போது 40 லட்சம் தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா். இந்த தொழிலாளா்கள் அனைவருக்கும் தீபாவளி போனஸ் தொகையாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும்.கட்டுமான தொழிலாளா்களுக்கு வீடு கட்ட மானியம் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான 18 நலவாரியங்களிலும் ஒரே மாதிரியான இணையதள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் செயலாளர், அனைத்து போக்குவரத்து கழக நிர்வாக துறை இயக்குனர்கள் கலந்து கொள்கிறார்கள்.
    • சென்னையில் 5 பஸ் நிலையங்களில் இருந்து எந்தெந்த தேதியில் சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படுகிறது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல வசதியாக தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த வருடம் பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வசதியாக சிறப்பு பஸ்கள் விடுவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    தலைமை செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் செயலாளர், அனைத்து போக்குவரத்து கழக நிர்வாக துறை இயக்குனர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னையில் 5 பஸ் நிலையங்களில் இருந்து எந்தெந்த தேதியில் சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படுகிறது. பொது போக்குவரத்து அதிகரித்து வருவதால் கடந்த ஆண்டை விட கூடுதலாக பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    • தீபாவளியின் போது காலாவதி இனிப்பு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
    • உணவு பாதுகாப்பு துறை அலுவலர் எச்சரிக்கை


    திருச்சி,


    தமிழ்நாடு அரசு திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் தீபாவளி பண்டிகைக்காக இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யும் நிரந்தர மற்றும் தற்காலிகத் தயாரிப்பு வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் திருச்சியில் நடந்தது.


    இதில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆர். ரமேஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-


    இந்த தீபாவளி பண்டிகையின் போது பழைய இனிப்பு வகைகளை விற்பனை செய்ய கூடாது. குறிப்பாக காலாவதி தேதியை சரியாக பார்த்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யுங்கள். மேலும் தயாரிப்பாளர்கள் புற்றுநோயை வரவழைக்கக் கூடிய அளவுக்கு உணவு பொருட்களில் கலரிங் பயன்படுத்தக் கூடாது. திருச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் ஆரோக்கியமான தீபாவளியை கொண்டாட நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.


    உற்பத்தி மற்றும் காலாவதி தேதியில்லாத பொருட்களை விற்பனை செய்ய கூடாது. கலப்பட இனிப்பு வகைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் துறை சார்ந்த அதிகாரிகள் யாராவது கையூட்டு கேட்டால் தைரியமாக நீங்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.




    • பயனர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    • ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் தீபாவளி சலுகை வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்பு தீபாவளி விற்பனையின் கீழ் ஐபோன் 14, ஐபோன் 15, மேக்புக் ஏர் மற்றும் ஐபேட் மாடல்களுக்கு உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஐபோன், ஐபேட், மேக்புக் மற்றும் பல்வேறு சாதனங்களுக்கு ஆப்பிள் நிறுவனம் தீபாவளி சலுகையை அறிவித்து இருக்கிறது. புதிய சலுகைகள் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

    தீபாவளி சலுகையின் கீழ் பயனர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆப்பிள் பி.கே.சி. மற்றும் ஆப்பிள் சகெட் ரிடெயில் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் தீபாவளி சலுகை வழங்கப்படுகிறது.

     

    ஆப்பிள் தீபாவளி சலுகைகள்:

    ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு கொண்டு தேர்வு செய்யப்பட்ட ஆப்பிள் சாதனங்களை வாங்கும் போது ரூ. 10 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கிகளில், மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

    அக்டோபர் 15-ம் தேதி துவங்கி நவம்பர் 14-ம் தேதி வரை ஆப்பிள் தீபாவளி சலுகை வழங்கப்படுகிறது. ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஏர்பாட்ஸ் ப்ரோ (2nd Gen) உள்ளிட்ட சாதனங்களுக்கு மட்டும் நவம்பர் 7-ம் தேதி வரை மட்டுமே தீபாவளி சலுகை வழங்கப்படுகிறது.

    ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கு ரூ. 6 ஆயிரம் வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஐபோன் 15 ப்ரோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களுக்கு ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஐபோன் 15 மாடலின் விலை ரூ. 79 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.

    ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களுக்கு ரூ. 4 ஆயிரம் வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. சமீபத்தில் தான் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் விலையை குறைத்தது. அதன்படி இந்த மாடலின் விலை ரூ. 69 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.

    ஐபோன் 13 மற்றும் ஐபோன் SE மாடல்களுக்கு முறையே ரூ. 3 ஆயிரம் மற்றும் ரூ. 2 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஐபோன் 13 விலை ரூ. 56 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.

    மேக்புக்:

    மேக்புக் ஏர் (M2) மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் வரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இது 13-இன்ச் மற்றும் 15-இன்ச் மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. 13-இன்ச் மேக்புக் ஏர் (M2) மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.

    மேக்புக் ஏர் (M1) மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனால், இதன் விலை ரூ. 99 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. இதே போன்று மேக் ஸ்டூடியோ மாடலுக்கு ரூ. 10 ஆயரமும், 24-இன்ச் ஐமேக் மற்றும் மேக் மினி மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    ஐபேட்:

    11-இன்ச் ஐபேட் மற்றும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் மாடல்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதே போன்று 10th Gen மற்றும் 9th Gen ஐபேட் மாடல்களுக்கு முறையே ரூ. 4 ஆயிரம் மற்றும் ரூ. 3 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஐபேட் மினி மாடலுக்கு ரூ. 3 ஆயிரம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதனால் இதன் விலை ரூ. 89 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 37 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது.

    ஆப்பிள் வாட்ச் SE மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஹோம்பாட் மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    • பாரத் கவுரவ் எனப்படும் தீபாவளி சுற்றுலா ரெயிலில் காசிக்கு செல்ல விருப்பமுள்ள பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கங்கை நதியில் புனித நீராடுதலுடன் தொடங்கும் இந்த சுற்றுலா ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி தரிசனத்தோடு நிறைவடையும்.

    திண்டுக்கல்:

    தென்காசியில் இருந்து நவம்பர் 9-ந் தேதி புறப்படும் பாரத் கவுரவ் எனப்படும் தீபாவளி சுற்றுலா ரெயிலில் காசிக்கு செல்ல விருப்பமுள்ள பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி. தென்மண்டல பொதுமேலாளர் ராஜலிங்கம் பாசு திண்டுக்கல்லில் தெரிவித்ததாவது:-

    இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. சுற்றுலா பயணிகளுக்காக பாரத் கவுரவ் என்ற சுற்றுலா ரெயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. தீபாவளி கங்கா ஸ்நானம் சிறப்பு யாத்திரை என்ற பெயரில் தென்காசியில் இருந்து நவம்பர் 9-ந் தேதி இந்த சுற்றுலா பயணம் தொடங்குகிறது.

    தீபாவளியன்று காசியில் உள்ள கங்கை நதியில் புனித நீராடுதலுடன் தொடங்கும் இந்த சுற்றுலா ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி தரிசனத்தோடு நிறைவடையும். இந்த ரெயிலில் 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள், 8 படுக்கை வசதி பெட்டிகள், ஒரு பேட்டரிகார், 2 பவர் கார்கள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறுகிறது.

    தென்காசியில் புறப்படும் இந்த ரெயில் ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை, காசி, அலகாபாத், கயா வழியாக செல்லும்

    நவம்பர் 16-ந் தேதி ராமேஸ்வரம் வந்து பின்னர் 17-ந் தேதி தென்காசி வந்தடையும். பயண கட்டணமாக படுக்கை வசதிக்கு ரூ.16,850ம், மூன்றடுக்கு ஏசி வகுப்புகளுக்கு ரூ.30,500ம் வசூலிக்கப்படுகிறது.

    சுற்றுலா பகுதிகளை பார்வையிட பஸ் போக்குவரத்து, தென்னிந்திய சைவ உணவுகள், சுற்றுலா மேலாளர், தனியார் பாதுகாவலர், பயண காப்புறுதி, ஏசி மற்றும் ஏசி வசதி இல்லாத தங்கும் இடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

    மேலும் மத்திய மாநில அரசு பொதுத்துறை ஊழியர்கள் பயணித்தால் எல்.டி.சி. சான்றிதழ் வழங்கப்படும். மொத்தமுள்ள 600 இருக்கைகளில் இதுவரை 300க்கும் மேற்பட்ட இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. எனவே பயணிகள் விரைந்து இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×