search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விரைவு பஸ்களை பொறுத்தவரை 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய முடியும்.
    • நவம்பர் 11-ந்தேதி பயணம் செய்வோருக்கான முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) தொடங்க உள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்வோருக்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

    தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    விரைவு பஸ்களை பொறுத்தவரை 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய முடியும்.

    அந்த வகையில் நவம்பர் 10-ந்தேதி பயணம் மேற்கொள்வோர் இன்று (புதன்கிழமை) முதல் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    நவம்பர் 11-ந்தேதி பயணம் செய்வோருக்கான முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) தொடங்க உள்ளது. அரசு போக்குவரத்துக் கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இது தவிர பஸ் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டுகிறோம்.
    • கூட்ட நெரிசலில் சிக்காமல் பயணிகள் சொந்த ஊருக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் மாவட்டச் செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் தென்னக ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு அனுப்பியு ள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது,

    இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ம் தேதி வருகிறது.

    ராமநாதபுரம், காரை க்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோ ட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லை விளாகம், திருத்துறைப்பூண்டி, வேதா ரண்யம், அகஸ்தியம்பள்ளி, திருவாரூர் போன்ற பகுதி யிலிருந்து சென்னையில் வசித்து வரும் பொது மக்கள், அலுவலர்கள், வர்த்தகர்கள், பணியாள ர்கள், மாணவ மாணவிகள், தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்து திரும்பும் வகையில் சென்ற ஆண்டு சிறப்பு ரயிலை இயக்கியது போல் (சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் - இராமேஸ்வரம் வண்டி எண் 06041/06042) இந்த ஆண்டும் சென்னை எழும்பூரில் இருந்து ராமநாதபுரம் வரை திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டு க்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி ரயில் தடத்தின் வழியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டுகிறோம்.

    இந்த சிறப்பு ரெயில்களை முன்கூட்டியே அறிவித்தால் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும்.

    கூட்ட நெரிசலில் சிக்காமல் பயணிகள் சொந்த ஊருக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் ஸ்ரீதர் இன்று தொடங்கி வைத்தார்
    • தீபாவளி பண்டிகையின் போது 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வகையில் விற்பனை

    நாகர்கோவில் :

    காலத்திற்கேற்ற வகை யில் புதிய உத்திகளைக் கையாண்டு பல வடிவமை ப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

    மேலும் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையின் போது 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வகையில் விற்பனைதீபாவளி பண்டிகையின் போது 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வகையில் விற்பனை திட்டத்தை நடை முறைப்படுத்தி வருகின்றது.

    குமரி மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் குமரி விற்பனை நிலையத்தில் தீபாவளி-2023 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனை இன்று காலை தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ் ஆகியார் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.

    இந்த ஆண்டு ரூ.6 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்தார். மேலும் சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு புடவைகள், திருப்பு வனம் பட்டு சேலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கை வண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் வேட்டி, லுங்கி, துண்டு இரகங்கள் பருத்தி சட்டைகள் திரைச்சீலைகள், நைட்டீஸ், மாப்பிள்ளைசெட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள 5 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களான நாகர்கோ வில் குமரி விற்பனை நிலையம், தக்கலை விற்பனை நிலையம், மார்த்தாண்டம் விற்பனை நிலையம். கன்னியா குமரி விற்பனை நிலையம், மார்த்தாண்டம் வளாக விற்பனை குழு ஆகி யவை மூலம் கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் ரூ.2.83 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.

    தற்போது இந்த ஆண்டிற்கு ரூ.6 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் "மாதாந்திர சேமிப்பு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளர் களிடமிருந்து பெறப்பட்டு 12-வது சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி 12 மாதம் முடிவடைந்தவுடன் 30 சதவீதம் தள்ளுபடியுடன் மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

    விழாவில் தலைமை அலுவலக முதன்மை பொது மேலாளர் அலோக் பாப்லே, கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டலமேலாளர், ராஜேஷ்குமார், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை குமரி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர்பத்மராஜ் செய்திருந்தார்.

    • தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
    • பட்டாசு கட்டுப்பாடுகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

    புதுடெல்லி:

    தீபாவளி பண்டிகை நேரத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. எனவே பட்டாசு தயாரிக்க, விற்பனை செய்ய, பாதுகாத்து வைக்க தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் அர்ஜூன் கோபால், கோபால் சங்கர நாராயணன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் விளக்கங்களை கேட்ட பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கு அதிரடியாக கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.

    இதன்படி பேரியம் என்கிற அலுமினிய பொருட்களுடன் கூடிய சரவெடிக்கு தடை விதிக்கப்பட்டதுடன், குறைந்த அளவிலான சத்தம் மற்றும் புகையை வெளியிடக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதிக அளவில் அலுமினியம் சேர்க்கப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. ஆன்லைனில் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பேரியம் இல்லாத பட்டாசுகளை தயாரிப்பது சிரமமாகும். அது சரவெடியில் குறைவான அளவே உள்ளது. எனவே அதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு சரவெடி பட்டாசு விவகாரத்தில் தீர்ப்பை வழங்கியது. சரவெடி பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    சரவெடியில் பேரியம் வேதிப்பொருள் சேர்ப்பது அத்தியாவசியமாகிறது. அது சுற்றுச்சுழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்கிற பட்டாசு நிறுவனங்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அவர்களது மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    பேரியம், சரவெடி ஆகிய இரண்டில் மட்டுமே தீர்ப்பு கூறியிருப்பதாகவும், மூல வழக்கின் விசாரணை தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் தெரிவித்த நீதிபதிகள் தீபாவளிக்கு சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை மட்டுமே வெடிப்பதற்கு அனுமதிக்க முடியும் என்பதை தெளிவுப்படுத்தினர்.

    நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-

    தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட வேண்டும். பட்டாசு கட்டுப்பாடுகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    வழக்கு விசாரணையின்போது பசுமை பட்டாசுகளில் எந்த மாதிரியான மூலப்பொருட்களை சேர்க்க வேண்டும் என்பது பற்றிய வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு எப்போது பட்டியலிடப்படும் என்று மனுதாரர்களும் எதிர்மனுதாரர்களும் கேட்டனர்.

    இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் "ஹேப்பி தீபாவளி" என்று தெரிவித்தனர். காலையில் 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவில் 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

    • டெல்லி மாசுக்கட்டுப்பாடு குழு சார்பில் கடை வைப்பதற்கு உரிமம் வழங்கப்படவில்லை என்று சுற்றறிக்கை வெளியிட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    • பண்டிகை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சுற்றுச்சுழலை காப்பதும் முக்கியம்.

    டெல்லி:

    டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு தீபாவளிக்கும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

    மேலும், டெல்லியில் எந்த வகையான பட்டாசுகளை தயாரிப்பதும், சேமிப்பதும், விற்பனை செய்வதும், ஆன்லைன் டெலிவரி செய்வதும் மற்றும் வெடிப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாசுக்கட்டுப்பாடு குழு சார்பில் கடை வைப்பதற்கு உரிமம் வழங்கப்படவில்லை என்று சுற்றறிக்கை வெளியிட காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பண்டிகை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சுற்றுச்சுழலை காப்பதும் முக்கியம் என்று டெல்லி மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

    • ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
    • பலத்த மழைபெய்தாலும் வரும் காலங்களில் தண்ணீர் பஸ்நிலைய பகுதியில் தேங்காமல் செல்லும்.

    வண்டலூர்:

    சென்னையில் அதிகரித்து வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ஜி.எஸ்.டி சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

    ரூ.394 கோடி செலவில் ரூ.88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. இங்கு 90 சதவீதத்துக்குமேல் பணிகள் முடிந்து திறப்பு விழாவுக்கு தயார்நிலையில் உள்ளது. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.விரைவில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.

    இந்நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியது. மேலும் அப்பகுதியில் பலமணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து இந்த மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு செய்த பின்னரே கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு முடிவு செய்து உள்ளது.

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் உயரமாகவும், ஜி.எஸ்.டி.சாலை மிக தாழ்வாகவும்இருப்பதால் மழை பெய்யும் போது அதிகஅளவு தண்ணீர் தேங்க காரணமாக உள்ளது.

    இதைத்தொடர்ந்து ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

    அதன்படி தற்போது கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தின் முன்பகுதியில் ஜி.எஸ்.டி.சாலையைஒட்டி மழைநீர்கால்வாய் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதில் தண்ணீர் அதிக அளவு செல்லும் வகையில் பெரிய கான்கிரீட் குழாய் அமைக்கப்பட இருக்கிறது. இதன்காரணமாக பலத்த மழைபெய்தாலும் வரும் காலங்களில் தண்ணீர் பஸ்நிலைய பகுதியில் தேங்காமல் செல்லும்.

    தற்போது பஸ்நிலையத்தின் மேற்கு பகுதியில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் பகுதியில் சாலையை ஒட்டி நடைபெற்று வருகின்றன. இதற்காக அங்கு பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 3 மீட்டர் அகலம் மற்றும் 1.5 மீட்டர் அகலத்தில் கால்வாய் அமைக்கப்பட இருக்கிறது.

    இந்த இடத்தில் பணி முடிந்ததும் அடுத்ததாக சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் சாலையில் கிழக்கு பக்கம் பணிகள் தொடங்க உள்ளது. கால்வாய் அமைக்கும் பணியை 4 வாரத்திற்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். மேலும் கிளா ம்பாக்கம் பஸ்நிலையத்தை தீபாவளிக்கு முன்னதாக திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி கால்வாய் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் பெரும்பாலான பணிகள் முடிந்து திறப்புவிழாவுக்கு தயாராக உள்ளது. ஆனால் மழையின் போது பஸ்நிலையத்தின் முன்பு தண்ணீர் தேங்கியதாலும் தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாலும், மழைநீர் வடிகால் ஏற்பாடுகளை செய்து முடித்த பின்னர் பஸ் நிலையத்தை திறக்க அரசு முடிவு செய்தது. தற்போது கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதனை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தீபாவளிக்கு முன்பு கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன என்றார்.

    • சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் பட்டாசு விற்பனை நடைபெறுவது வழக்கம்.
    • தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்ய டெண்டரை அரசு கோரியுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் பட்டாசு விற்பனை நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில், இந்த ஆண்டு தீவுத்தடலில் பட்டாசு விற்பனைக்காக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. அதன்படி, அக்டோபர் 29ம் தேதி முதல் நவம்பர் 12ம் தேதி வரையிலான 15 நாட்களுக்கு பட்டாசு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், 55 கடைகள் அமைப்பதற்கான டெண்டரை சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அறிவித்துள்ளது. விரைவில் டெண்டர் இறுதி செய்யப்பட்டு கடைகள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மகா சிவராத்திரி மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியாகும்.
    • ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி தினம் தீபாவளி நாளாகும்.

    பிரதோஷ விரத நாட்கள்

    பட்சங்கள் அதாவது மாதத்தில் வளர்பிறை நாட்கள் 15 தேய்பிறை நாட்கள் 15 ஆகும். வளர்பிறைநாட்கள் சுக்கில பட்சம் என்றும் தேய்பிறைநாட்கள் கிருஷ்ண பட்சம் என்று அழைக்கப்படும்.

    இந்த ஒவ்வொரு பட்சத்திலும் திரயோதசி திதி 26 நாழிகைகளுக்கு மேல் 32 நாழிகை வரை வியாபித்திருக்கும் நாளே பிரதோஷ நாள் ஆகும் என்பதை பஞ்சாங்கத்தின் துணை கொண்டு புரிந்து கொள்ளலாம்.

    சதுர்த்தசி வியாபித்திருந்தால், கிருஷ்ண பட்சத்தில் திரயோதசி தினத்திலும், சுக்கில பட்சத்தில் துவாதசி தினத்திலும் பிரதோஷம் அனுஷ்டிக்க வேண்டும்.

    உதாரணமாக, விஜய வருடம் தை மாதம் 15ம் நாள் (28.01.2014) செவ்வாய் கிழமை துவாதசி திதி அன்று காலை 19 நாழிகை 14 வினாடியுடன் முடிந்து, அதன் பின்னர் திரயோதசி திதி தொடங்கி மறுநாள் காலை புதன் கிழமை 10 நாழிகை 26 வினாடி வரை வியாபித்து இருப்பதால், முதல் நாள் செவ்வாய் கிழமை அன்றுதான் பிரதோஷம் எனக் கொள்ள வேண்டும்.

    ஏனென்றால் திரயோதசி திதி 26 நாழிகை முதல் 32 முடிய இருப்பது தை மாதம் 15ம் தேதி என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

    சிவராத்திரி விரதம்:

    தேய்பிறை சதுர்த்தசி திதி 45 நாழிகை இருக்கும் நாளைத்தான் மாத சிவராத்திரி நாளாக எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.

    மகா சிவராத்திரி மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியாகும்.

    உதாரணமாக விஜய வருடம் தை மாதம் 16ம் நாள் (29.01.2014) புதன் கிழமை அன்று காலை 10.26 நாழிகையுடன் திரயோதசி திதி முடிவடைந்து அதன் பின்னர் பகல் முழுவதும் சதுர்த்தசி திதி இருப்பதால் அன்றுதான் மாத சிவராத்திரி என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

    கார்த்திகை தீப நிர்ணயம் செய்வது:

    கார்த்திகை மாதம் பௌர்ணமி திதி பிரதானமாகும். இந்த பௌர்ணமி , பிரதோஷ காலத்தில் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.

    பாஞ்சராத்திர தீபம்:

    கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் பிரதானமாகும். இந்த நட்சத்திரத்திற்கு பரணி நட்சத்திரம் வேதையாகக் கூடாது. அதாவது பரணி நட்சத்திரம் சூரிய உதயத்பரம் ஒரு வினாடியும் இருக்கக்கூடாது. இப்படி வேதை ஏற்பட்டால் மறுதினத்தில்தான் தீபரோகணம்.

    கோகுலாஷ்டமி:

    சிரவண (ஆவணி மாதம்) -பகுள அஷ்டமி - இந்த அஷ்டமி அர்த்தராத்திரியில் வியாபித்திருக்கும் தினம்தான் கோகுலாஷ்டமி.

    கிருஷ்ண ஜெயந்தி பகுள அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும், ஹர்ஷநாம யோகமும், ரிஷப லக்னமும் சேர்ந்த நேரம்தான் கிருஷண் ஜெயந்தி ஆகும்.

    தீபாவளி நிர்ணயம்:

    ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி தினம் தீபாவளி நாளாகும். இந்த சதுர்த்தசி திதி இரவு 4-வது ஜாமத்தில் இருக்க வேண்டும் என்பது நியதி.

    போதாயன அமாவாசை நிர்ணயம்:

    சதுர்த்தசி திதியன்று 4வது ஜாமத்தில் அமாவாசை தொடர்பு சிறிது நேரம் இருந்தாலும் அந்த நாள் போதாயன அமாவாசை நாளாகும்.

    முகூர்த்த நாள் குறிக்கும்போது கவனிக்க வேண்டிய முகூர்த்த தோஷங்கள்:

    பூகம்பம் ஏற்பட்ட மாதம் தவிர்க்க வேண்டும்.

    மல மாதம் (இரண்டு பௌர்ணமி, இரண்டுஅமாவாசை வரும் மாதம்) தவிர்க்க வேண்டும்.

    கிரகண தோஷம் உடைய மாதங்கள், சந்திரன் 8,12 ஆகிய இடங்களில் இருக்கும் நாட்கள், பாபகிரகம் ஆட்சியற்று மற்ற ராசிகளில் சஞ்சாரம் செய்யும் காலம், குருவும் சுக்கிரனும் சமசப்தம லக்கினங்களில் சஞ்சாரம் செய்யும் காலம், குரு சுக்கிரன் அஸ்தமன தினத்திற்கு முன், பின் 7 நாட்கள், குரு, சுக்கிரன் லக்கினமானபோது முன், பின் 3 நாட்கள், சாயன்ன காலம் (24 முதல் 30 நாழிகை வரை) அன்றைய தினம் சூரிய உதயம் 6 மணி என்று எடுத்துக்கொண்டால், அந்த 6 மணியை கூட்டிகொள்ளக் கிடைப்பது 15.36 மணி முதல் 18.00 மணி வரை, கரணங்களில் பவம், பாலவம், கரசை, பத்திரை நீக்கிய கரணங்கள், இஷ்டி தோஷம், இருத்தை, அஷ்டமி, இலாபம், ஏற்காளம், யோகங்களில் வைத்திருதி யோகம்,வியாதிபாத யோக பிற்பாதி ஆகுலம் முதலானவை முகூர்த்த தோஷம் உள்ளவையாகும். இவை முகூர்த்தம் குறிக்கும் போது தவிர்க்கப்படவேண்டிய காலங்கள் ஆகும்.

    சிரார்த்தம் (இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது) காலம் நிர்ணயம் செய்வது எப்படி?

    ஒரு திதியானது அபரான்னம் காலத்திற்கு (18 முதல் 24 நாழிகை) மேல் வியாபித்திருக்கும் திதியே அன்றைய திதியாகும். அதாவது 24 நாழிகைக்கு மேல் வியாபித்திருக்கும் திதியே அன்றைய திதியாகும்.

    ஒரு திதியானது மத்தியான்னம் முதல் அபரான்னம் வரை வியாபித்திருக்குமேயானால், பகல் அகசை (அகசு என்பது பகல் 12 மணி நேரம் இரவு 12 மணி நேரம் என்பது சில மாதங்களில் பகல் நேரம் அதிகமாகவும் இரவு நேரம் குறைவாகவும் இப்படி மாறியும் இருப்பதால் வரும் கால வித்தியாசம் எனப்படும். இதை பஞ்சாங்கத்தில் அகசு நாழிகை என்று குறித்திருப்பார்கள்) பிராத - ஸங்கல - மத்தியான்ன - அபரான்ன - சாயன்ன என ஐந்து கூறுகள் செய்து அபரான்ன காலத்தில் அதிகம் வியாபித்திருக்கின்ற தினத்தில் திதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    ஒரு திதியானது சாயன்னத்தில் தொடங்கி மறுநாள் மத்தியான்ன காலத்தில் முடிந்து விட்டால், மறுநாள் குதப கால ஆரம்பமாகிய 14 நாழிகைக்கு மேலும் ரௌஹீன காலத்தில் முடிகின்ற 8 நாழிகைக்குள்ளும் இந்த திதியின் சிரார்த்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    ஒரு திதியானது மாத ஆரம்பம் மற்றும் மாத முடிவில் ஆக இரண்டு தடவை வந்தால், பிந்தின திதியை அனுஷ்டிக்க வேண்டும். பிந்தின திதியில் சங்கராந்தி கிரகண தோஷங்கள் ஏற்பட்டால் முந்தின திதியை அனுஷ்டிக்க வேண்டும். பிந்தினது அதிகத் திதியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    சங்கராந்தி தோஷம் என்பது பகல் 12 நாழிகைக்கு மேலும் இரவு 15 நாழிகை வரையிலும் இருக்கும்.

    ஒரு திதியானது ஒருமாதத்தில் ஒரு தடவை வந்து அந்த திதியானது அன்று அபரான்ன காலம் வரை வியாபித்திராத போது, அன்றைய திதியை சிரார்த்தத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது. பூர்வமாத (முந்தைய மாத) திதியை சிரார்த்தத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அனுஷ்டிப்பதில் முன் மாதத்தின் குதப கால தொடர்பு இருக்க வேண்டும். அதாவது குதப கால ஆரம்பமாகியய 14 நாழிகைக்கு மேலும் ரௌஹீன காலத்தில் முடிகின்ற 8 நாழிகைக்குள்ளும் தொடர்பு இருக்க வேண்டும். சங்கரம தோஷமும் இருக்கக் கூடாது. மேற்கண்டவாறு முந்தின மாத திதி அமையவில்லையெனில் அந்த மாதத் திதியையே அனுஷடிக்கலாம்.

    ஒரே மாதத்தில் இரண்டு திதிகள் வந்து இரண்டிற்கும் சங்கராநதி தோஷம் ஏற்பட்டிருந்தால் அதற்கு அடுத்த மாதம் வரும் திதியே சிலாக்கியமாகும்.

    திதித்துவம்:

    மேற்கூறிய விதிகளுக்குட்பட்டு ஒரே நாளில் இரண்டு திதிகளையும் அனுஷ்டிக்க நேரிட்டால் அதற்கு திதித்துவம் என்று பெயர்.

    சூனிய திதி என்றால் என்ன?

    ஏதாவது ஒரு திதி அன்றைய தினத்தில் இருந்தும், அது அபரான்ன காலத்தில் அதிககாலம் இல்லாமல் குறைவாக இருப்பதனால் அந்த திதி மறுதினத்தில் சேர்ந்து, அதற்கு முந்தின திதி முந்திய தினத்தில் செல்லாகி விட்டால் அன்றைய தினம் சூனிய திதி என்று சொல்லப்படும்.

    • தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு முன் உள்ள 3 நாட்களுக்கு நேற்று வரை முன்பதிவு செய்தனர்.
    • கடந்த 3 நாட்களைவிட இன்று முன்பதிவு செய்ய கூட்டம் அதிகமாக இருந்தது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் 12-ந் தேதி வருகிறது. பண்டிகை வருவதற்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கின்ற நிலையில் சொந்த ஊரில் சென்று பண்டிகையை கொண்டாட மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

    கூட்ட நெரிசல் இல்லாமல் ரெயிலில் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய பயணத்தை திட்டமிட்டுள்ளனர். அதன்படி தீபாவளி ரெயில் முன்பதிவு கடந்த 12-ந்தேதி முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு முன் உள்ள 3 நாட்களுக்கு நேற்று வரை முன்பதிவு செய்தனர். பெரும்பாலானவர்கள் ஆன்லைன் வழியாக வீடுகளில் இருந்தவாறு முன்பதிவு செய்ததால் கவுண்டர்களில் கூட்டம் இல்லை.

    ஆனாலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் வெளியூர் மக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்தனர். குடும்பமாக செல்பவர்கள் 2 நாட்களுக்கு முன்பே பயணத்தை திட்டமிட்டு டிக்கெட் எடுத்துள்ளனர். எழும்பூரில் இருந்து செல்லும் கன்னியாகுமரி, முத்துநகர், அனந்தபுரி, நெல்லை, பொதிகை, ராமேஸ்வரம், திருச்சி, திருவனந்தபுரம், மதுரை உள்ளிட்ட முக்கிய ரெயில்களில் உள்ள 2-ம் வகுப்பு படுக்கை வசதிகள் நிரம்பி விட்டன.

    தீபாவளிக்கு முந்தைய நாள் நவம்பர் 11-ந்தேதி பயணம் செய்ய இன்று காலை 8 மணிக்கு முன் பதிவு தொடங்கியது. கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்ளக்கூடியவர்கள் இன்று உறுதி செய்யப்பட்ட டிக்கெட் பெறுவதில் தீவிரமாக இருந்தனர்.

    அதிகாலை 5 மணிக்கே எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம், பெரம்பூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் காத்து நின்றனர். அவர்களுக்கு போலீசாரால் டோக்கன் வழங்கப்பட்டது. 8 மணிக்கு கவுண்டர் திறந்தவுடன் வரிசையில் முதலில் நின்ற ஒருவருக்கே உறுதியான டிக்கெட் கிடைத்தது. அடுத்து வந்தவர்களுக்கு ஆர்.ஏ.சி., காத்திருப்போர் பட்டியல் வரத்தொடங்கியது.

    ஆனாலும் பலர் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் காத்திருப்போர் பட்டியல் நீடித்த போதிலும் டிக்கெட் வாங்கி சென்றனர்.

    கடந்த 3 நாட்களைவிட இன்று முன்பதிவு செய்ய கூட்டம் அதிகமாக இருந்தது. 5 நிமிடத்தில் முக்கிய ரெயில்களில் உள்ள 2-ம் வகுப்பு படுக்கை வசதி நிரம்பிவிட்டன.

    ஆன்லைன் வழியாக பலரும் முன்பதிவு செய்ததால் இடங்கள் உடனே நிரம்பி விட்டன. கோவை, ஈரோடு, சேலம் மார்க்கத்திலும் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. பகல் நேர ரெயில்களில் மட்டுமே இடங்கள் தற்போது காலியாக இருக்கின்றன. ஏ.சி. வகுப்பு இடங்களும் இன்னும் முழுமையாக நிரம்பவில்லை.

    திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன.

    தீபாவளிக்கு இன்னும் 120 நாட்கள் இருப்பதால் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் தங்களது டிக்கெட் உறுதியாகும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். இன்று மாலைக்குள் காத்திருப்போர் பட்டியல் ரூ.200 தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயில்களில் பயணம் செய்ய விரும்புவோருக்கு, 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயிலில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விடும்.
    • தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்குமுன்பாக பெரும்பாலானவர்கள் சொந்த ஊருக்கு படையெடுப்பார்கள்.

    சென்னை:

    பண்டிகை காலங்களுக்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் ரெயில்களில் முன்கூட்டியே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வது வழக்கம்.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளன. தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 10-ந் தேதி செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.

    முன்பெல்லாம் முன்பதிவு தொடங்கும் நாளில் ரெயில் நிலையங்களில் கவுண்டர்களில் டிக்கெட் வாங்க கூட்டம் அலைமோதும். ஆனால் இப்போது ஆன்லைன் மூலமும் டிக்கெட் எடுத்துக்கொள்ள வசதிகள் வந்துவிட்டதால் ரெயில் நிலையங்களில் மிகப்பெரிய அளவில் கூட்டம் இல்லை.

    இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 2 நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.

    கன்னியாகுமரி, அனந்தபுரி, நெல்லை, பொதிகை, கோவை, மதுரை பாண்டியன் உள்ளிட்ட ரெயில்களில் காத்திருப்போர் பட்டியலும் 300-க்கும் மேல் உள்ளது.

    நவம்பர் 11-ந் தேதிக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. நாளையும் டிக்கெட்டுகள் விரைவாக விற்று தீர்ந்து விடும் என்கிறார்கள் ரெயில்வே அதிகாரிகள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் பயணத்தை உறுதி செய்யவே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    சென்னை:

    சென்னை மற்றும் அதனையொட்டிய புறநகர் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடவே விரும்புகிறார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் குடும்பமாக சென்று கொண்டாடி விட்டு பின்னர் தங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு திரும்புவார்கள்.

    தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ரெயில் முன்பதிவு 4 மாதங்களுக்கு முன்பு செய்யும் வகையில் இன்று தொடங்கியது.

    இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாளில் வருகிறது. அதனால் சொந்த ஊர் செல்பவர்கள் வியாழக்கிழமை (9-ந்தேதி) முதல் பயணத்தை தொடங்குவார்கள்.

    அந்த அடிப்படையில் அதற்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் முன்ப திவு மையங்கள் வழியாக தொடங்கின. தீபாவளிக்கு முந்தைய 3 நாட்கள் பயணம் என்பதால் இன்று குறைந்த அளவிலேயே டிக்கெட் பதிவானது.

    குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் பயணத்தை உறுதி செய்யவே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடைசி நேரத்தில் அதிக கட்டணம் கொடுத்து ஆம்னி பஸ்களில் செல்வதை தவிர்க்கும் வகையில் இப்போதே பய ணத்தை திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    நவம்பர் 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பயணத்திற்கு நாளை முன்பதிவு தொடங்குகிறது. நவம்பர் 11-ந்தேதிக்கு வருகிற 14-ந்தேதியும், தீபாவளிக்கு முதல் நாள் பயணம் செய்ய வருகிற 15-ந்தேதியும் முன்பதிவு நடைபெறும்.

    தீபாவளி பண்டிகை முன்பதிவு பெரும்பாலும் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளம் வழியாக வீடுகளில் இருந்தவாறே முன்பதிவு செய்கின்றனர். குறைந்த அளவில் தான் முன்பதிவு மையங்களுக்கு நேரில் சென்று முன்பதிவு செய்கிறார்கள். சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அண்ணா நகர், தி.நகர், கிண்டி, பெரம்பூர் உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் தீபாவளி முன்பதிவிற்கான கூட்டம் குறைந்த அளவில் இருந்தது. ஆனாலும் முன்பதிவு செய்ய வந்த பயணிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டனர்.

    காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியதும் தாங்கள் விரும்பிய பகுதிகளுக்கு செல்ல உறுதியான டிக்கெட் கிடைத்தது. 10 நிமிடங்களில் முக்கிய ரெயில்களின் இடங்கள் நிரம்பின. பின்னர் காத்திருப்போர் பட்டியல் தொடங்கின.

    நாளைய முன்பதிவு விறுவிறுப்பாக இருக்கும். அதைவிட வெள்ளிக்கிழமை அன்று முன்பதிவு செய்ய மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

    தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் 3, 4 நாட்கள் தாங்கள் செய்து வரும் கடையை மூடி விட்டோ, மாற்று ஏற்பாடு செய்து விட்டோ வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    • தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • நாளை காலை 8 மணி முதல் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

    சென்னை :

    ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால், ரெயில், பஸ்களில் கூட்டம் அலைமோதி காணப்படும். ரெயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120 நாட்களுக்கு முன்பாக ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும்.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை (12-ந்தேதி) முதல் தொடங்குகிறது. நாளை காலை 8 மணி முதல் ரெயில் டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

    நாளை முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9-ந்தேதியும், 13-ந்தேதியில் முன்பதிவு செய்தால் நவம்பர் 10-ந்தேதியும், 14-ந்தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 11-ந்தேதியும், 15-ந்தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 12-ந்தேதியும் பயணிக்க முடியும்.

    இந்தமுறை ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் தீபாவளி பண்டிகை வருவதால் வியாழக்கிழமையில் இருந்தே பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க பயணிகள் விரைந்து முன்பதிவு செய்யலாம்.

    ×