search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    • சென்ட்ரலில் இருந்து 7 லட்சம் பேர் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களுக்கு பயணம்.
    • வியாழன், வெள்ளி மற்றும் இன்று காலை வரை மொத்தம் 12 லட்சம் பேர் பயணம்.

    தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ரெயிலில் 12 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை சென்ட்ரலில் இருந்து 7 லட்சம் பேர் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களுக்கு பயணம் செய்துள்ளனர்.

    இதேபோல், எழும்பூரில் இருந்து 5 லட்சம் பேர் தென் மாவட்டங்களுக்கு ரெயிலில் பயணம் செய்துள்ளதாக ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

    வியாழன், வெள்ளி மற்றும் இன்று காலை வரை மொத்தம் 12 லட்சம் பேர் சென்னையில் இருந்து ரெயில்களில் பயணம் செய்துள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • முக்கிய நகரப் பகுதிகளில் நேற்று முதல் வறண்ட கால நிலை நிலவ தொடங்கியது.
    • தென்மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை வறண்ட வானிலை காணப்படும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில் அன்று சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை. வறண்ட வானிலை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தாலும் தீபாவளி தினத்தில் மழை இருக்காது என தனியார் கணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். முக்கிய நகரப் பகுதிகளில் நேற்று முதல் வறண்ட கால நிலை நிலவ தொடங்கியது.

    தென்மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை வறண்ட வானிலை காணப்படும். 14-ந்தேதி மீண்டும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை பதிவர் பிரதீப்ஜான் கூறினார்.

    • தீபாவளி சீட்டு மற்றும் தங்க நகை திட்டங்களை அறிவித்து மோசடி செய்து ஏமாற்றிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
    • கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களையும் அவர்களது செல்போன் எண்களை வைத்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி மற்றும் அம்மாபேட்டை சிங்கமெத்தை பகுதியில் வீராணம் அருகே உள்ள வலசையூர் பகுதியை சேர்ந்த ஒருவர் நகை கடை நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் தீபாவளி சீட்டு நடத்தியும், மேலும்தங்க நகை சேமிப்பு திட்டம் மற்றும் தங்க நகை முதலீடு போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களிடம் லட்சகணக்கில் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடை உரிமையாளர் திடீரென தலைமறைவானார். உரிமையாளர் கடையை திறக்க வராததால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சம்பளம் வரும் என எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் ஏமாற்றம் அடைந்ததால் இதுகுறித்து நேற்று மாலை அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

    இதனிடையே சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள கடை பூட்டிய நிலையில் இருப்பதால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் கடை முன்பு இன்று காலை முதலே திரண்டனர். பின்னர் தீபாவளி சீட்டு மற்றும் தங்க நகை திட்டங்களை அறிவித்து மோசடி செய்து ஏமாற்றிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். சிலர் கடை மீது கல்வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு வரும் வாடிக்கையாளர்களையும் அவர்கள் சமரசப்படுத்தி வருகிறார்கள்.

    கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களையும் அவர்களது செல்போன் எண்களை வைத்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கடையின் உரிமையாளர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கவர்ச்சி திட்டங்கள் மூலம் பல கோடி வசூல் செய்து பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திலும் முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்து உள்ளதால் போலீசார் சபரிசங்கரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும்.
    • மக்களுக்கு மகிழ்ச்சி மீண்டும் கிடைக்க வேண்டும் என்றால், சமூகத் தீமைகள் அனைத்தும் விலக வேண்டும்; நன்மை ஒளி மாநிலம் முழுவதும் பரவ வேண்டும்.

    சென்னை:

    நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-

    தீபாவளி திருநாள் நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வையும் சகோதரத்துவத்தையும் பலப்படுத்துகிறது. சாதி மத பேதங்களைக் கடந்து கொண்டாடப்படும் இந்த தீபாவளித் திருநாள் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவர வாழ்த்துகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் 'சுய சார்பு இந்தியா' கொள்கையை பின்பற்றி தீபாவளியைக் கொண்டாடுவோம். இந்திய கலைஞர்கள் உற்பத்தி செய்த பரிசு பொருட்களை வாங்கி பிறருக்கு கொடுத்து, நம் நாட்டு நெசவாளர்கள் தயாரித்த உடைகளை உடுத்தி தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். இந்த தீபாவளி கொண்டாட்டம் பாரத தேசத்தை பொருளாதார ரீதியில் உயர்த்துவதாக இருக்கட்டும்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள், இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர் விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.

    தீபாவளித் திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

    தித்திக்கும் இந்த தீபாவளித் திருநாளில், துன்பங்கள் நீங்கி என்றும் இன்பங்கள் மலரும் தீப ஒளியாக இந்த தீபாவளி அமையட்டும்; மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும்; இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, அனைவருக்கும் எம்.ஜி.ஆர். , அம்மா ஆகியோரது நல்வழியில், இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக்கொள்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

    பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுங்கள். வழக்கம்போல் மற்ற மதத்தவரோடு வாழ்த்துகளையும் இனிப்புகளையும் பகிர்ந்து கொள்வோம். வெறுப்புணர்வு வளர்த்தெடுக்கப்பட்டுள்ள சூழலில் இந்த தீபாவளி பண்டிகையை மத நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கொள்வோம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

    தீபாவளி பண்டிகை நாளில் அனைவரும் நல்ல உடல் நலத்தோடு வாழவும், வாழ்வில் துன்பம் விலகி, இன்பம் பெருகவும், செல்வம் செழித்து எல்லோரது இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகவும், அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    மக்களுக்கு மகிழ்ச்சி மீண்டும் கிடைக்க வேண்டும் என்றால், சமூகத் தீமைகள் அனைத்தும் விலக வேண்டும்; நன்மை ஒளி மாநிலம் முழுவதும் பரவ வேண்டும். அதற்கு கல்வியும், வேலைவாய்ப்பும் கட்டாயமாகும். கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமின்றி, சமூக நீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்டவை பெருகவும், மக்களின் வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறையவும் தீப ஒளி வகை செய்யட்டும் என்று வாழ்த்துகிறேன்.

    பா.ம.க. தலைவர் டாகடர் அன்புமணி ராமதாஸ்:-

    நாட்டிலும், வீட்டிலும் இருளை நீக்கி, ஒளியை நிறைக்கும் தீபஒளித் திருநாள் இனிவரும் ஆண்டுகள் அனைத்தும் மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் மட்டுமே வழங்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் உழவும், தொழிலும் சிறக்க வேண்டும். தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் முன்னேற வேண்டும். மக்களிடையே அன்பு, நட்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவை மலர வேண்டும்; போட்டி, பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவை விலக வேண்டும் என்று கூறி தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:-

    நாட்டு மக்களை பெருந்துன்பத்திற்குள்ளாக்கிய நரகாசூரன் எனும் அரக்கனை திருமால் அழித்த இந்த தினமே தீபாவளிப் பண்டிகையாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அதர்மம் என்றைக்கும் நிலைத்ததில்லை என்பதை உணர்த்தி, தீமைகள் எனும் இருளை விலக்கி, நன்மை எனும் வெளிச்சத்தை பரப்பும் இத்திருநாளில் அனைவரிடத்திலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்து அன்பு தழைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:-

    நம்நாடு இன்றைக்கு உலகின் வல்லரசு நாடுகளுக்கு இணையாக வல்லரசு நாடாக வளர்ந்து வருகிறது. விஞ்ஞானம், மருத்துவம், வேளாண்மை, அறிவியல் தொழில்நுட்பம், கணினி தொழில்நுட்பம் என்று அனைத்து துறைகளிலும் நம்நாடு அபரிமிதமான வளர்ச்சி அடைந்து உள்ளது. நாட்டினை சூழ்ந்துள்ள தீமைகளை நாம் அனைவரும் ஒன்றுபட்டு வெல்வோம் என்று சபதம் ஏற்போம். நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    தீபாவளி திருநாளில் அனைவரும் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்வார்கள். தீபஒளி ஏற்றி இஷ்ட தெய்வங்களை வணங்கி அனைவரும் புத்தாடைகள் அணிந்து புதுப்பொலிவுடன் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ வாழ்த்துகிறேன்.

    தொழில் அதிபர் டாக்டர் வி.ஜி.சந்தோசம்:-

    தீபாவளி நன்நாளில் பரஸ்பர நல்லுறவுடன் ஏழை, எளியோர்க்கு உதவிகள் செய்து, நண்பர்கள் உறவினர்கள் இடையே இனிப்புகள், பரிசுகள் வழங்கி நம் இதய அன்பைப் பகிர்ந்து கொள்வோம். இந்த இன்பத் திருநாளில் நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் நல்லுறவுடன் ஒருமைப்பாட்டைக் காத்து வாழவேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கின்றேன். அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்:-

    அனைவரின் வாழ்க்கையிலும் இருளும், துன்பமும் நீங்கி மத்தாப்பு போல வெளிச்சமும், மகிழ்ச்சியும் கிடைத்திட தீபாவளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    சாதி, மத, இன, மொழி, பேதங்கள் கடந்து, இந்திய மக்கள் மனதில் சமத்துவம் என்னும் புனித எண்ணம் தழைத்தோங்கட்டும். எளியவர்க்கான தேவையும், உழைப்புக்கேற்ற ஊதியமும், உரிமையும் கிடைக்கப்பெற்று, எல்லாரும் எல்லாமும் பெறும் நிலைக்கு உயர உறுதியுடன் ஒன்றிணைந்து செயலாற்றுவோம். உலகெங்கும் வாழும் இந்திய மக்களுக்கு இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    ஏழை, எளியவர்கள், தொழிலாளர்கள் பிற்படுத்தப்பட்டவர்களை சூழ்ந்திருக்கும் கொடிய துன்பங்கள், வறுமைகள் என்கிற நரகாசுரனை வீழ்த்தி அனைவரது வாழ்விலும் தீபாவளி திருநாளில் தீபமாக ஒளி ஏற்றுவோம்.

    சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் விதமாகவும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வாங்கி, அரசு அறிவுறுத்தல் படி விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுவோம். தீபாவளி திருநாள் காணும் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்.

    தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் நாசே ராமச்சந்திரன்:-

    உங்கள் வாழ்க்கையில் துன்பங்கள் கரைந்து இன்பங்கள் மலர்ந்து ஒளிமயமான எதிர்காலம் அமைந்து உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க.... அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்க அகில இந்திய தலைவர் வி.என்.கண்ணன்:-

    தீப ஒளியினை போல் தமிழக மக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள் கட்டுமான தொழிலாளர்கள் வாழ்க்கை பிரகாசமாக மேம்பட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், விஜயகுமார் என்ற விஜய் வசந்த், திரிணாமுல் காங்கிரஸ் தமிழக பொருளாளர் மு.மாரியப்பன், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடென்ட் அபு பக்கர், தமிழக சமாஜ்வாதி கட்சி தலைவர் லோகநாதன் யாதவ், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் மாநில தலைவர் டாக்டர் மணி அரசன், தேசிய தலைவர் பா.இசக்கிமுத்து, ஆகியோர் தீபாவளி வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    • குற்றாலத்தில் குடோனில் வைத்து இனிப்பு வகைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
    • ஆய்வின்போது கெட்டுப்போன, செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்ட இனிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    தென்காசி:

    தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் இனிப்புகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில் தென்காசி அருகே பிரானூர் பார்டர் மற்றும் குற்றாலத்தில் குடோனில் வைத்து இனிப்பு வகைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனை தென்காசி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் நாக சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அங்கு கெட்டுப்போன மற்றும் செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்ட இனிப்புகள் 26 கிலோ, சவ்வரிசி 25 கிலோ, கெட்டுப்போன உளுந்து 3 கிலோ, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 250 கிராம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அங்கு வைத்தே கிருமி நாசினி ஊற்றி அழிக்கப்பட்டது. மீண்டும் பயன்படுத்திய 15 லிட்டர் சமையல் எண்ணையும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பட்டாசு புகையால் 4 விதமான அலர்ஜி வரலாம்.
    • பொதுவாக எலுமிச்சை, தக்காளி ஆகியவற்றை முகத்தில் தேய்க்கும் பழக்கம் பலரிடம் உள்ளது.

    சென்னை:

    தீபாவளி வந்தாச்சு. இன்று இரவு முதல் நாளை இரவு வரை பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். அதே நேரம் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது முக்கியம்.

    மருத்துவ ரீதியாக என்ன மாதிரி பிரச்சனைகள் வரலாம்? அதில் இருந்து தப்பிக்க கையாள வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது பற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணரான நடிகர் சத்யராஜின் மகள் டாக்டர் திவ்யா சத்யராஜ் கூறியதாவது:-

    தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும். அதே நேரம் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பட்டாசு புகையால் 4 விதமான அலர்ஜி வரலாம். இருமல், தும்மல், கண், சருமம் ஆகிய அலர்ஜியை சிலர் சந்திக்கலாம்.

    இந்த மாதிரி அலர்ஜி வந்தால் உணவு வகைகளில் தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, மீன், இறால், கோழிக்கறி, செயற்கை பொடி வகை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். கண்ணில் வரும் அலர்ஜியை தவிர்க்க குளிர்ந்த தண்ணீரில் கண்களை கழுவ வேண்டும். அழகு நிலையங்களுக்கு சென்று சரும பராமரிப்பு, மேக்-அப் போடுவதை தவிர்க்க வேண்டும். பொதுவாக எலுமிச்சை, தக்காளி ஆகியவற்றை முகத்தில் தேய்க்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. அது தவறு. எலுமிச்சையை முகத்தில் தேய்ப்பதால் தோல் உரியும். அரிப்பை ஏற்படுத்தும். இயற்கையான பொருள் தானே என்று கருதக் கூடாது. கிச்சன் பொருட்களை சமையலுக்கும், சாப்பிடுவதற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    அலர்ஜி ஏற்பட்டால் 10 நாட்கள் முதல் 2 வாரங்கள் வரை இருக்கலாம். அதன் பிறகு சரியாகி விடும். மருத்துவர்களை அணுகி அலர்ஜி எதிர்ப்பு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். அந்த மாதிரி எடுத்துக் கொள்பவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் அது உதடு, நாவை வற்ற வைக்கும். பட்டாசு புகைகளில் இருந்து அலர்ஜி எதுவும் அண்டாமல் இருக்க வாய், மூக்கு பகுதிகளை மறைக்கும்படி முக கவசம், கண்களில் கண்ணாடி அணிந்து கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசு வெடித்த பிறகு கை மற்றும் முகத்தை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்சிராப்பள்ளி சாசன தலைவர் முகமதுஷபி தலைமையில் "மகிழ்ஒளி" தீபாவளி விழா நடை பெற்றது.
    • இறுதியாக அருவி முதியோர் இல்லத்தின் நிர்வாகி சையத் தாஹா நன்றி கூறினார்.

    திருச்சி

    திருச்சிராப்பள்ளி சாசன தலைவர் முகமதுஷபி தலைமையில் "மகிழ்ஒளி" தீபாவளி விழா நடை பெற்றது.

    324 எப் மாவட்ட அவை இணை செயலாளர் ஆனந்த கிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்ட நூலக வாசகர் வட்டம் தலைவர் தமிழ் செம்மல் கவிஞர் கோவிந்தசாமி, தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு இயக்கம் தலைவர் கோவிந்தராஜ், உதவும் கரங்கள் அறக்கட்டளை மாநில தலைவி உஷா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தி, சேவை திட்டங்கள் வழங்கினார்கள்.

    விழாவில் செயலாளர் பிரசன்ன வெங்கடே ஷன்,பொருளாளர் ரெங்கராஜன், சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், சங்கத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் பிளட்சாம், இணைசெயலாளர் கரண்லூயிஸ், உறுப்பினர் வளர்ச்சி தலைவர் கார்த்திக், தலைமை பண்பு ஒருங்கி ணைப்பாளர் சரவணன், இணை செயலாளர் அப்துல் அஜிஸ், சாசன உறுப்பினர்கள் சோனா, பிரசன்னா, ஹோமலதா, ராஜூ ஜோசப், மகேஸ்வரி மற்றும் நண்பர்கள் முதியோர் இல்லத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக அருவி முதியோர் இல்லத்தின் நிர்வாகி சையத் தாஹா நன்றி கூறினார்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
    • வரும் ஆண்டு வெற்றி ஆண்டாக அமையட்டும்

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தீப ஒளி திருநாள், தித்திக்கும் நன்நாள், மகிழ்ச்சி பொங்கும் பொன் நாள், சுற்றம் சூழ மகிழும் நாள், உலகமெங்கும் கொண்டாடி சிறக்கும் நாள்.

    இந்நாளில் புத்தாடை அணிந்து, தர்மங்கள் செய்து மகிழ்வுடன் உணவுண்டு, உறவுகள் நட்புகளுடன் கலந்துரையாடி உள்ளம் மகிழும் மகத்தான நாள். இந்நாளில் இறைவன் திருவடி வணங்கி இல்லாமை இல்லாமல் ஆகிடவும், சமீப காலமாக நடக்கும் ஒற்றுமையை சீர்குலைக்கும் அழிவு சக்திகளை அழிய செய்திடவும் இறைவனை வணங்குவோம்.

    இன்பங்கள் மலர்ந்து, துன்பங்கள் மறைந்து, செல்வங்கள் பெருகி

    அனைத்து வளங்களும் அனைவரும் பெற்று வாழ்ந்திட இறைவன் அருள் புரியட்டும். அ.தி.மு.க. 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மகிழ்ச்சிகரமான இவ்வாண்டில் காணுகின்ற தீபாவளி திருநாளை இரட்டிப்பு மகிழ்ச்சியோடு நாம் அனைவரும் மகழ்ச்சி யுடன் கொண்டாடுவோம். வரும் ஆண்டு வெற்றி ஆண்டாக அமையட்டும். அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாடிக்கையாளர்களுக்கு தங்கம் வெல்லும் வாய்ப்பு
    • எளிய தவணை முறையில் பொருட்கள் வாங்கலாம்

    நாகர்கோவில் :

    வீட்டு உபயோக பொருட் கள் விற்பனையில் முன் னணியில் உள்ள வசந்த் அன் கோ சார்பில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் சாம்சங், சோனி, எல்.ஜி., பானா சோனிக், ஹையர், லாயிட் போன்ற முன்னணி பிராண்ட் டி.வி.க்கள் குறைந்த விலையில் விற் பனை செய்யப்படுகின்றன.

    செல்போன்கள், ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மைக்ரோவேவ் ஓவன், மிக்சி, கிரைண்டர், கியாஸ் ஸ்டவ், வாட்டர் பியூரி பையர் என அனைத்து வீட்டு உபயோக பொருட்களை எளிய தவணை முறையில் வாங்கலாம்.

    குறிப்பாக ரூ.5,000-க்கு மேல் பொருட்கள் வாங்கு வோருக்கு ஸ்லோகன் போட்டி மூலமாக 100 வாடிக்கையாளர்கள் தலா 1 பவுன் தங்கம் வெல்ல லாம். பஜாஜ் பைனான்ஸ் மூலம் தவணை முறையில் பொருட் கள் வாங்குவோ ருக்கு ராயல் என்பீல்டு புல்லட் மற்றும் டி.வி.எஸ். ஸ்கூட்டி வெல்லலாம்.

    43 இன்ச் ஆண்டிராய்டு லெட் டி.வி. ரூ.19,990-க்கும் (ரூ.1,666 இ.எம்.ஐ.), 65 இன்ச் அல்ட்ரா எச்.டி.கூகுள் லெட் டி.வி. ரூ.49,990-க்கும் (ரூ.3,781 இ.எம்.ஐ.), 75 இன்ச் லெட் டி.வி.ரூ,3,999 இ.எம்.ஐ.-லும், 85 இன்ச் லெட் டி.வி. ரூ.6,999 இ.எம்.ஐ.-லும், சைடு பை சைடு பிரிட்ஜ் ரூ.3,999 இ.எம்.ஐ.-லும், பிராஸ்ட் பிரீ பிரிட்ஜ் ரூ.1,490 இ.எம்.ஐ.-லும், டைரக்டு கூல் பிரிட்ஜ் ரூ.900 இ.எம்.ஐ.-லும், பிரண்ட் லோடு வாஷிங் மெஷின் ரூ.1,994 இ.எம்.ஐ.-லும், டாப் லோடிங் வாஷிங் மெஷின் ரூ.1,222 இ.எம்.ஐ.-லும், செமி ஆட்டோமேட்டிக் வாஷிங்மெஷின் ரூ.888 இ. எம்.ஐ.-லும் வாங்கிடலாம்.எலக்ட்ரிக் கெட்டில், அயர்ன் பாக்ஸ், ரைஸ் பாக்ஸ் ஆகியவை ரூ.1,111-க்கும், 3 ஜார் மிக்சி, எலக்ட் ரிக் கெட்டில் ஆகியவை ரூ.2,222-க்கும், இண்டக் ஷன் ஸ்டவ், ரைஸ் பாக்ஸ், பிரஷர் குக்கர், எலக்ட்ரிக் கெட்டில் ஆகியவை ரூ.3,333-க்கும், கிரைண்டர், டின்னர் செட், 3 லிட்டர் பிரஷர் குக்கர் ஆகியவை ரூ.4,444-க்கும் வாங்கிட லாம்.

    பிரீத்தி 2 அல்லது 3 பர்னர் கிளாஸ் டாப் கியாஸ் ஸ்டவ் வாங்கினால் பிரஷர் குக்கர் இலவசம், பட்டர் பிளை மிக்சி வாங்கினால் இண்டக் ஷன் ஸ்டவ் இலவசம், விடியம் 2 அல்லது 3 பர்னர் கியாஸ் ஸ்டவ் வாங்கினால் பிரஷர் குக்கர் இலவசம், எஸ்.எஸ்.பிரீமியர் 2 அல்லது 3 பர்னர்கியாஸ் ஸ்டவ் வாங்கினால் மிக்சி இலவசம், 15 லிட்டர் ஏ.பி.எஸ். வாட்டர் ஹீட்டர் ரூ.6,190-க்கும், 3 ஜார் மிக்சி, 3 பர்னர் கிளாஸ் டாப் கியாஸ் ஸ்டவ் ஆகியவை ரூ.4,995-க்கும் வாங்கிடலாம்.

    இது தவிர அனைத்து பிராண்டு சிம்னி மிக குறைந்த விலையில் வாங்க லாம். கிரைண்டர், மிக்சி, பேன், கியாஸ் ஸ்டவ் போன்ற பொருட்களை எளிய தவணை முறை வசதி யில் தள்ளுபடி விலையில் வாங்கிடலாம்.

    ஆப்பிள் ஐபோன்-15 ரூ.3,333 இ.எம்.ஐ.-லும், ஆப்பிள் ஐபோன் புரோ, புரோமேக்ஸ் ஜீரோ டவுன் பேமண்டிலும், ஆப்பிள் மேக்புக் எம்-1 ரூ.83,000- லும் வாங்கிடலாம். உலகத் தர மிக்க பர்னிச்சர் பொருட் களை ரூ.789 என்ற எளிய தவணை முறையில் வாங்கிட லாம். ரூ.30 ஆயிரத் துக்கு மேல் பர்னிச்சர் வாங்குவோருக்கு ரூ.4,500 மதிப்புள்ள 3 ஜார் மிக்சி இலவசம்.

    • டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திலும் தீபாவளி கொண்டாட்டங்கள் விமர்சையாக நடைபெற்றது.
    • வீடியோ வலைதளங்களில் வைரலாகி பயனர்களை கவர்ந்து வருகிறது.

    தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திலும் தீபாவளி கொண்டாட்டங்கள் விமர்சையாக நடைபெற்றது. இதில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்ஷெட்டி கலந்து கொண்டு நடனமாடிய காட்சிகள் இணையத்தி வைரலாகி வருகிறது.

    அதில், ஊதா நிற குர்தா அணிந்த எரிக் கார்ஷெட்டி 1998-ம் ஆண்டு வெளியான ஷாருக்கானின் தில்சே படத்தில் இடம்பெற்ற 'சையா சையா' பாடலுக்கு நடனமாடி அசத்தி உள்ளார். இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி பயனர்களை கவர்ந்து வருகிறது.

    • கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள்
    • பாதுகாப்பாக பட்டாசு வெடியுங்கள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    குமரி மாவட்டத்தில் பட் டாசு விற்பனையை கண் காணிக்க 18 குறுவட்டங் களுக்கும் தனி தாசில்தார் கள், காவல்துறை அதிகா ரிகள், தீயணைப்பு துறை அலுவலர்கள் மற்றும் சம் பந்தப்பட்ட குறுவட்ட ஆய் வாளர்களை கொண்ட 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள் ளது. இக்குழுவினர் தங்க ளது பகுதிக்குட்பட்ட பட்டாசு சில்லறை விற்பனை கடைகள், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்ய வேண் டும்.

    இணையதளம் வழியாக விண்ணப்பிக்கப்பட்ட தற்காலிக உரிமங்களும் வழங்கப்பட்டுள்ளது. பட்டாசு விற்பனை செய்யும் இடங்கள், விற்பனையா ளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளதை உறுதி செய்திட வேண்டும்.

    பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குறைந்த ஒலியுடனும், புகையில்லாத குறைந்த அளவில் காற்று மாசுபாடு இல்லாத தன்மை கொண்ட பசுமை பட்டாசு களை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். அவரச காலங்களில் கட்டணமில்லா தொலை பேசி எண் 112-ஐ பொது மக்கள் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். தீபாவளி பண்டிகை தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்ககூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள் வழி பாட்டுத்தலங்கள் மற்றும் அமைதிகாக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்க ளுக்கு அருகில் பட்டாசு வெடிக்ககூடாது. சீனப் பட்டாசுகளை தவிர்த்திட வேண்டும்.

    விற்பனையாளர்கள் உரிமம் வழங்கப்பட்ட இடத் தில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். கடை களில் செல்போன் உப யோகிக்க கூடாது. கடையின் முன் வாகனங்கள் நிறுத்து வதை தவிர்த்திட வேண்டும். பட்டாசு அதிர்வேட்டு போன்ற வெடிபொருட் களை உரிமம் பெறாத இடத்தில் தயார் செய்யக் கூடாது. எக்காரணம் கொண்டும் ஓலையால் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது. பொதுமக்கள் சுற்றுச்சூழ லுக்கு அதிக மாசு ஏற்ப டுத்தாக பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபா வளியை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீபாவளி கொண்டாட்டம் இரவு முதல் தொடங்குவதால் பொதுமக்களை கண்காணிக்க போலீஸ் நிலையங்களில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • அனைத்து காவல் நிலைய எல்லைப் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் இன்று இரவு முதல் தொடங்குகிறது. தீபாவளி பட்டாசு வெடிப்பதற்கு சென்னை மாநகர போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

    கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. தீபாவளி கொண்டாட்டம் இரவு முதல் தொடங்குவதால் பொதுமக்களை கண்காணிக்க போலீஸ் நிலையங்களில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னையில் உள்ள 102 போலீஸ் நிலையங்களிலும் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 போலீசார் அடங்கிய குழு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிப்பதால் இடையூறாக இருப்பதாக யாராவது புகார் செய்தால் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து காவல் நிலைய எல்லைப் பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    ×