என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 99110"
- ஆரணியில் காட்டன் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்தனர்.
- தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த சூதாட்ட மாபியா கும்பல்கள் தமிழகத்துக்குள் மீண்டும் புகுந்து சூதாட்ட விடுதிகளை நடத்தி வருகிறார்கள்.
- முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு சூதாட்ட கிளப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
சென்னை:
தமிழ்நாடு தெலுகு யுவசக்தி தலைவர் கே. ஜெகதீஸ்வர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ஆந்திராவை சேர்ந்த ஒருவர் சென்னையில் உள்ள ஒரு சூதாட்ட விடுதியில் மர்மமான முறையில் இறந்தார். தகவலறிந்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை எடுத்து சென்னை மற்றும் தமிழகத்தில் செயல்பட்டு வந்த சூதாட்ட விடுதிகளுக்கு தடைவிதித்தார்.
தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் மீண்டும் சென்னையில் சூதாட்ட விடுதிகள் செயல்பட தொடங்கின. இது குறித்து நான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தேன். அதன் பேரில் முதல்வர் உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுத்து சென்னை தி. நகர், அண்ணாசாலை பகுதிகளில் செயல்பட்டு வந்த சூதாட்ட விடுதிகளுக்கு தடை விதித்தார். முதலமைச்சரின் அதிரடி நடவடிக்கைக்கு நான் கடிதம் எழுதி நன்றியும் பாராட்டும் தெரிவித்தேன்.
தற்போது தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் சூதாட்ட விடுதிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் அந்த மாநிலங்களைச் சேர்ந்த சூதாட்ட மாபியா கும்பல்கள் தமிழகத்துக்குள் மீண்டும் புகுந்து சூதாட்ட விடுதிகளை நடத்தி வருகிறார்கள்.
தமிழக - ஆந்திர எல்லையான சூலூர்பேட்டை பகுதியில் உள்ள ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் சூதாட்ட கிளப்புகளை இந்த கும்பல் நடத்தி வருகிறது. ஆந்திராவின் நெல்லூர், கடப்பா, திருப்பதி, பிரகாசம் மாவட்டங்களை சேர்ந்த இந்த மாபியா கும்பல்கள் தமிழக - ஆந்திர எல்லை பகுதியை சேர்ந்த அரசியல்வாதிகள், போலீசாரின் துணையுடன் சூதாட்ட விடுதிகளை நடத்தி வருகிறார்கள். இதனால் பாதிப்புக்குள்ளான அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர். தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் இந்த சூதாட்ட கிளப்புகளுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு சூதாட்ட கிளப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். பெண்கள் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது.
- தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.
மன்னார்குடி:
மன்னார்குடியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தல்களில் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் எங்கள் கட்சி முக்கிய பங்கு வகிக்கும்.
அதில் நாங்கள் அணில் போல் செயல்பட்டு வருகிறோம்.
தேசிய கட்சி ஒன்றுடன் அ.ம.மு.க. கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம்.
எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து செயல்பட மாட்டோம் என்று பலமுறை கூறி வருகிறோம்.
ஜெயலலிதாவை நேசிக்கிறவர்கள் ஒன்றிணைந்து, இதர கட்சியுடன் கைகோர்த்து தேர்தலை சந்தித்தால் தான் தி.மு.க.வை வீழ்த்த முடியும்.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகின்றது.
இதனால் மக்கள் அதிருப்தியுடனும், வேதனையுடனும் உள்ளனர்.
இது வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.
அதற்கான முயற்சியில் ஆளுநர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வரும் நிலையில் இதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது துணை பொதுச்செயலாளர் ெரங்கசாமி, திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர்
மா. சேகர், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன், தேர்தல் பிரிவு இணைச்செயலாளர் மலர்வேந்தன், அம்மா தொழிற்சங்க பேரவை மாநில இணைச் செயலாளர் சத்தியமூர்த்தி, நகரக் செயலாளர், ஒன்றிய செயலாளர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பி னர்கள் உடன் இருந்தனர்.
- திருநாவலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடம் இருந்து சூதாட்ட பணம் ரூ. 5000 பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்காதிருநாவலூர் சராகத்துக்குட்பட்ட திருநாவலூர் இன்ஸ்பெ க்டர் அசோகன் தலைமை யில் சப்- இன்ஸ்பெ க்டர்கள் பிரபாகரன் மணிமேகலை தனிப்பிரிவு போலீசார் மனோகரன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கொரட்ட ங்குறிச்சி கிராமத்தில் சிலர் பணம் வைத்து சூதாடினர்.
அங்கு விரைந்த போலீ சார் மடக்கி பிடித்து அனை வரையும் கைதுசெய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சாரங்கன், மணிகண்டன், செல்வம், முருகன், ராஜா, சிவனேசன் சிவராமன், குணா, பாபு, ஏழுமலை என தெரிய வந்தது. அவர்க ளிடம் இருந்து சூதாட்ட பணம் ரூ. 5000 பறிமுதல் செய்தனர். அவர்கள் 11 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- பண்ருட்டியில் சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடமிருந்து பணம், சீட்டு கட்டுஉள்ளிட்டவைகளை பறிமுதல்செய்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே வீரபெருமாநல்லூரில் காசு வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கடலூர்மாவட்டபோலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா மேற்பார்வையில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும்போலீசார் வீரபெருமாநல்லூருக்கு விரைந்து சென்றுஅங்கு சூதாடியஅதே ஊரை சேர்ந்த விநாயக மூர்த்தி (வயது23),விஜய் (41), முத்துவேல் (55),தனவேல் (40), ஜானகிராமன் (50)வெங்கடேசன் (38) அகியோரை கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து பணம், சீட்டு கட்டுஉள்ளிட்டவைகளை பறிமுதல்செய்தனர்.
- காசு வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசுக்கு தகவல்.
- போலீஸார் சூதாடி கொண்டிருந்தவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில் :
முத்தூர் அருகே உள்ள சின்னமுத்தூர் பொதுக் கழிப்பிடம் அருகே நேற்று காலை காசு வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
அப்போது காசு வைத்து சூதாடி கொண்டிருந்த முத்தூர் அருகே உள்ள மோளக்கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த சென்னியப்பன்(வயது 65). சண்முகம்(50), சந்திரன் (46), ராஜேஷ் (42), ஆகியோரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அரசு பள்ளியின் பின் புறத்தில் சூதாட்டம் நடப்பதாக, சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்கியராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு மற்றும் ரூ. 23,830-யை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
சங்ககிரி:
சங்ககிரி அருகே, சின்னாக்கவுண்டனூர் அரசு பள்ளியின் பின் புறத்தில் சூதாட்டம் நடப்பதாக, சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்கியராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து, அவரது உத்திரன்படி, சங்ககிரி எஸ்.ஐ. சுதாகர் தலைமையிலான போலீசார் சின்னாக்கவுண்டனுார் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது பணம் வைத்து சூதாடிய நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அம்மன் நகரைச் சேர்ந்த சுந்தரம் (வயது 53), சுந்தரம் காலனியைச் சேர்ந்த சரவணன் (42), தேவூர் புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (28), குமாரபாளையம் ஆனங்கூர் ரோட்டைச் சேர்ந்த ராஜேந்திரன் (40), பவானியை சேர்ந்த கோகுல் (38), புள்ளாக்க வுண்டம்பட்டியைச் சேர்ந்த சரவணகுமார் (26), ஈரோட்டை சேர்ந்த சேகர் (29), குமாரபாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29), பவானியை சேர்ந்த செல்வம் (35), குமாரபாளையம் பாரதி நகரைச் சேர்ந்த முத்துசாமி (37), அமிர்தம் காலணியை சேர்ந்த குமார் (29), குமரன் (35), பாஸ்கரன் (43), ஆகிய 13 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு மற்றும் ரூ. 23,830-யை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
- விருத்தாசலத்தில் பணம் வைத்து சூதாடி இருவர் கைது செ்ய்யப்பட்டார்.
- போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய தினேஷ் மற்றும் குமார் ஆகிய இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தா சலத்தில் உள்ள ஆயியார்மடம் மணிமுத்தாறு ஆற்றின் அருகே 4 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருப்பதாக விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தகவலறிந்து அங்கு சென்ற விருத்தாசலம் போலீசார் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த பழமலைநாதர் பகுதியை சேர்ந்த ராஜ் (26), சதீஷ் (31) ஆகிய இருவரை கைது செய்தனர், மேலும் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய தினேஷ் மற்றும் குமார் ஆகிய இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- வெள்ளகோவில் போலீஸ் சம்பாம்பாளையத்தில் கண்காணித்தனர்.
- தோட்டத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
வெள்ளகோவில் :
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், முத்தூர் அருகே உள்ள சம்பாம்பாளையம் என்ற கிராமத்தில் பணம் வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய போலீஸ் தனிப்படையினர் முத்தூர் அருகே உள்ள சம்பாம்பாளையத்தில் கண்காணித்த போது ஒரு தோட்டத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.1,43,700 பணத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் திருவள்ளூர் மசூதி தெரு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
- 2 பேரும் தடை செய்யப்பட்ட காட்டன் என்னும் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் திருவள்ளூர் மசூதி தெரு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒத்தவாடை தெருவை சேர்ந்த அசாருதீன், ஹனிபா பாய் ஆகிய 2 பேரும் தடை செய்யப்பட்ட காட்டன் என்னும் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் போலீசார் குற்றச்சம்பவங்களை கண்காணித்து வாகன தணிக்கையிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
- நாச்சிப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நூல் மில் பின்புறம் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 3 பேரை கைது செய்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் போலீசார் புகையிலை, கஞ்சா, பணம் வைத்து சூதாட்டம்,சேவல் சண்டை, அனுமதியின்றி மது விற்பனை போன்ற குற்றச்சம்பவங்களை கண்காணித்து வாகன தணிக்கையிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று வெள்ளகோவில் அருகே உள்ள நாச்சிபாளையம் என்ற பகுதியில் வெள்ளகோவில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது நாச்சிப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நூல் மில் பின்புறம் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த முத்துசாமி (53), நல்லசிவம் (35), ரவிக்குமார் (42) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.230 ரொக்கத்தை கைப்பற்றினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சப் - இன்ஸ்பெக்டர் முரளிதரன் அழகன்பாறை பகுதியில் தீவிர ரோந்து
- ரூ.1130 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி :
மண்டைக்காடு சப் - இன்ஸ்பெக்டர் முரளிதரன் அழகன்பாறை பகுதியில் தீவிர ரோந்து சென்றார்.
அங்குள்ள குருசடி எதிரே செல்லு்ம்போது தாவூரை சேர்ந்த ரெங்கன், குன்னங்காட்டை சேர்ந்த பிரதீஸ், பிரமேன் அழகன்பாறை ஆன்றனி ஜோசப்ராஜ், ஆகியோர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயற்சித்தனர்.போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ரூ.1130 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்