search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு"

    • உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.
    • மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் 21 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மட்டுமே உள்ளன.

    சென்னை:

    இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள தொழில் சார்ந்த ஏற்றுமதிகள், பொறியியல் சம்பந்தமான ஏற்றுமதிகள் மகப்பேறுக்கு பின் கவனிப்பு, கணினி பொருட்கள் ஏற்றுமதி, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய 7 பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த அறிக்கைகள் மத்திய அரசின் நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.

    அதில் மாநில அரசுகள், ஒன்றிய நிர்வாகப் பகுதிகள் அனைத்தையும் குறித்த ஆய்வுகளில் நிதி ஆயோக் நிறுவனம் மாநில வாரியாக நிலைமைகளை ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கைகள், வரைபடங்கள் மூலம் 80 முதல் 100 மதிப்பெண்கள் வரை பெற்று தமிழ்நாடே முதலிடம் பெற்று உள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது. பொறியியல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு குறித்த 2022-23-ம் ஆண்டின் அறிக்கையை ஒன்றிய அரசின் தேசிய நிர்யாத் வெளியிட்டுள்ளது.

    இறக்குமதி - ஏற்றுமதி பதிவுகள் குறித்து 2022 - 2023-ம் ஆண்டிற்கான விவரங்களை – ஒன்றிய அரசு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய நாடு முழுவதும் செய்துள்ள ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 16.30 சதவீத பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.

    கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம் தேசிய ஏழ்மைக் குறியீடுகள் குறித்த 2023-ம் ஆண்டுக்கான அறிக்கையில், கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

    கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்புடன் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்று இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் குஜராத் 12.72 புள்ளிகளையும், பிகார் 29.75 புள்ளிகளையும், உத்தரபிரதேசம் 30.03 புள்ளிகளையும் பெற்று தமிழ்நாடே முதலிடம் என்பதைப் பறைசாற்றுகிறது.

    ஆண்டு வாரி சுகாதார ஆய்வு மக்கள்தொகை ஆணையர் மற்றும் தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் முக்கியப் புள்ளியியல் பிரிவு ஆய்வுகளின்படி நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் மருத்துவமனைகளில் பாதுகாப்புடன் நடைபெறக் கூடியது தமிழ்நாட்டில் தான் அதிகம்.

    அதாவது 99 சதவீதப் பிரசவங்கள் மருத்துவமனைகளில் கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் நடைபெறுகின்றன என்று தமிழ்நாடு வெகுவாகப் பாராட்டப்பட்டு உள்ளது.

    குழந்தை பிறந்த பின் சிசு கவனிப்பில் அனைத்து வசதிகளுடனும் குழந்தைகளைப் பராமரித்துக் காப்பதிலும் தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது.

    மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான சமூக முன்னேற்றக் குறியீடுகள் பற்றிய ஆய்வில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 89.9 சதவீதங்களைப் பெற்று முன்னணி மாநிலமாகத் திகழ்வதாக கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் தொழில் வளர்ச்சி முதலான பிரிவுகளில் மாநிலங்களை முன்னேற்றுவதில் பெரிதும் துணைபுரிவது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.

    இதில் தமிழ்நாடு மாநிலம் தான் அதிக அளவில் 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பெருக்கி இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.

    வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2022-2023-ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை இதைப் புலப்படுத்தியுள்ளது.

    மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் 21 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மட்டுமே உள்ளன.

    இப்படி, தமிழ்நாடு எதிலும் முதலிடமும், அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்புக்களையும் உள்ளடக்கி வளர்ச்சியை எய்தியுள்ளதாக ஒன்றிய அரசின் ஆவணங்களே இதற்கு சாட்சியாக அமைந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் தத்துவமே இந்தியாவின் எழுச்சிக்கு வழிகாட்டியாக விளங்குவதாக அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    கொரோனா பெருந்தொற்று பணியில் ஈடுபட்ட 1 லட்சத்து 5 ஆயிரத்து 168 பணியாளர்களுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 1 லட்சத்து 5 ஆயிரத்து 168 ஊழியர்களுக்கு ரூ.196.91 கோடி ஊக்கத்தொகை வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

    இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா பெருந்தொற்று தடுப்புப்பணிகளில் கடந்த ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையைச் சேர்ந்த 34 ஆயிரத்து 396 நபர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையைச் சார்ந்த 13 ஆயிரத்து 371 நபர்கள், மருத்துவக்கல்விதுறையைச் சார்ந்த 49 ஆயிரத்து 908 நபர்கள், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையைச் சார்ந்த 270 நபர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (தொழிலாளர் அரசு ஈட்டுறுதிதிட்டம்) துறையைச் சார்ந்த 962 நபர்கள், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தைச் சார்ந்த 6 ஆயிரத்து 261 நபர்கள் என மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 168 பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.

    2021 ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய 3 மாதங்களில் கொரோனாபெருந்தொற்று தடுப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த அரசு பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறைக்கு ரூ.65 கோடியே 11 லட்சத்து 90, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறைக்கு ரூ.28 கோடியே 19 லட்சத்து 15 ஆயிரம், மருத்துவக்கல்விதுறைக்கு ரூ.91 கோடியே 69 லட்சத்து 65 ஆயிரத்து 962, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறைக்கு ரூ.55 லட்சத்து 75 ஆயிரம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறைக்கு (தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம்) ரூ.1 கோடியே 96 லட்சத்து 5 ஆயிரம், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்துக்கு ரூ.9 கோடியே 39 லட்சத்து 15 ஆயிரம் என மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 168 பணியாளர்களுக்கு ரூ.196 கோடியே 91 லட்சத்து 65 ஆயிரத்து 962 ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு கடந்த மாதம் 26-ந்தேதி அரசாணை வெளியிட்டது. அதன்படி, கொரோனா பெருந்தொற்று பணியில் ஈடுபட்ட 1 லட்சத்து 5 ஆயிரத்து 168 பணியாளர்களுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பள்ளிக் கல்வித்துறை சார்பில் நபார்டு திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி, மாவட்ட கனிமவள நிதி மற்றும் ஆசிரியர் நல திட்ட நிதி ஆகியவற்றின் மூலமாக ரூ.169 கோடியே 11 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 121 அரசு பள்ளிக் கட்டிடங்கள், கிளை நூலகக் கட்டிடம் மற்றும் ஆசிரியர் இல்லத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி, காணொலிக் காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

    தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தினமான மே 23-ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ உத்தரவிட்டு உள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. ஏழு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் 23ம் தேதி எண்ணப்பட உள்ளன.



    இந்நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தினமான மே 23-ம் தேதி அன்று இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ உத்தரவிட்டு உள்ளார்.
    வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. #Rain
    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வந்த நிலையில், கத்திரி வெயிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. கடும் வெயில் காரணமாக அனல் காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வெயிலுக்கு பயந்து மக்கள் வீடுகளிலேயே முடங்கி வருகின்றனர்.

    இந்தநிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உண்டு.

    வீசும் அனல் காற்றின் வேகம் உயர வாய்ப்பு இல்லை. அடுத்த 48 மணி நேரம் (இன்றும், நாளையும்) இதே போக்கு தொடரும்.

    சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனேயே காணப்படும். மாலை நேரத்தில் ஆங்காங்கே குளிர்ந்த காற்று வீசலாம்.

    நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

    விழுப்புரம் மாவட்டம் மணப்பூண்டியில் 7 செ.மீ. மழை பெய்திருக்கிறது. மதுரை மாவட்டம் தல்லாகுளம், கரூர் மாவட்டம் மாயனூரில் தலா 6 செ.மீ. மழையும், காஞ்சீபுரத்தில் 5 செ.மீ. மழையும், தர்மபுரியில் 4 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  #Rain
    தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக வரும் 18-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். #Rain
    சென்னை:

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. வெயில் கோரதாண்டவம் ஆடுவதால் பெரும்பாலானோர் வீடுகளிலேயே முடங்குகின்றனர். இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த நிலையில் வெயிலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது.

    கோடை மழை அடுத்த சில நாட்களும் தொடரும் என்று வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் கூறியதாவது:-



    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வரும் 18-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. படிப்படியாக மழை பெய்ய ஆரம்பித்து 18-ந் தேதியில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் பகல் நேரங்களில் அனல் காற்றின் தாக்கமும் அதிகமாக இருக்கும். சென்னையில் 107 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    சென்னையில் நாளை (இன்று) லேசான மழை பெய்ய வாய்ப்பு உண்டு. 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை மிதமான மழையை எதிர்பார்க்கலாம். வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை வங்க கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளது. அந்த புயல் ஒடிசா, வங்காளதேசம் இடையே கரையை கடக்க கூடும். இந்த புயல் ஆரம்ப நாட்களில் தமிழகத்துக்கு மழை கொடுக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Rain
    பாராளுமன்றத்துக்கு 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது. #LokSabhaElection2019 #Tamilnadu #Puducherry #Polling
    சென்னை:

    தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பணப்பட்டுவாடா புகாரால் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

    வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை செய்து பார்க்கப்பட்டது. வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் இந்த மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற வருகிறது.

    இந்த பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. இதுதவிர அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.



    தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 822 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதேபோல், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 269 பேர் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் 18 பேரும், அங்குள்ள ஒரு சட்டசபை தொகுதியில் 8 பேரும் மல்லுக்கு நிற்கின்றனர்.

    கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதைத்தொடர்ந்து வாக்காளர்கள் அல்லாத வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

    இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.  மதிய உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு இடைவிடாமல் நடைபெறும்.

    இதற்காக தமிழகம் முழுவதும் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு எந்திரங்கள் உள்ளிட்ட சாதனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மதுரை பாராளுமன்ற தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதாவது அந்த தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் ‘விவிபாட்’ கருவியும் இணைக்கப்பட்டு இருக்கும். தான் அளித்த வாக்கு உரிய வேட்பாளருக்கு சரியாக பதிவாகி இருக்கிறதா? என்பதை வாக்காளர் அந்த கருவியில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

    ஓட்டுப்போட செல்லும்போது வாக்காளர்கள் கையில் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனால், வாக்காளர்கள் வீட்டிலேயே செல்போனை வைத்துவிட்டு செல்வது நல்லது.

    மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்தாலும், அதற்கு முன்பாக வாக்குப்பதிவு மையத்துக்குள் வாக்காளர்கள் வந்துவிட்டால், அவர்கள் ஓட்டுப் போட அனுமதிக்கப்படுவார்கள். கடைசி நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால், டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு முதல் 2 மணி நேர இடைவெளியில் பதிவான வாக்கு சதவீத விவரங்கள் வெளியிடப்படும்.

    ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பெட்டியில் வைத்து அடைக்கப்பட்டு ‘சீல்’ செய்யப்படும். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

    அடுத்த மாதம் (மே) 19-ந் தேதி, தமிழகத்தில் மீதமுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் அன்றுடன் முடிவடைகிறது.

    மே மாதம் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து இருக்கிறது. மாநில போலீசாருடன், துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    63,951 போலீசார், 27,400 துணை ராணுவ படை வீரர்கள், 13,882 ஊர்க்காவல் படையினர், 14 ஆயிரம் தேசிய மாணவர் படையினர், 20 ஆயிரம் ஓய்வு பெற்ற போலீசார் மற்றும் ராணுவத்தினர் என மொத்தம் 1 லட்சத்து 39 ஆயிரத்து 233 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பதற்றமான வாக்குச்சாவடி என்று கண்டறியப்பட்ட 8,293 ஓட்டுச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் நிறுத்தப்படுகிறார்கள்.

    இவர்கள் தவிர மாநிலம் முழுவதும் 1,500 வாகனங்களில் அதிவிரைவு படையினர் ரோந்து சுற்றி வருவார்கள்.

    மேலும், கண்காணிப்பு கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுவதுடன் வீடியோ பதிவும் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சுமார் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். #LokSabhaElection2019 #Tamilnadu #Puducherry #Polling
    தமிழ்நாட்டில் 4 நாட்களில் ரூ.639 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. #LiquorSale #TamilNadu
    சென்னை:

    தமிழக அரசுக்கு அதிக வருவாய் ‘டாஸ்மாக்’ நிறுவனம் மூலமே கிடைக்கிறது. மதுபானங்கள் விலை அதிகரித்தாலும் விற்பனை மட்டும் குறைவது இல்லை. தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ கடைகளில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.80 கோடி முதல் ரூ.90 கோடி வரை மது விற்பனை நடைபெறுவது வழக்கம். தற்போது தேர்தல் காலம் என்பதால் மது விற்பனை அதிகரித்துள்ளது.

    அதன்படி கடந்த 12-ந்தேதி ரூ.117 கோடி, 13-ந்தேதி ரூ.141 கோடி, 14-ந்தேதி (தமிழ் புத்தாண்டு) ரூ.165 கோடி என்று மது விற்பனை அன்றாடம் ரூ.100 கோடியை தாண்டி விற்பனையாகி இருக்கிறது.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, 16-ந்தேதி (நேற்று முன்தினம்) முதல் 18-ந்தேதி(நாளை) வரை 3 நாட்கள் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கடந்த 15-ந்தேதி இரவு, ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. 3 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை போட்டி, போட்டு மதுபிரியர்கள் வாங்கி சென்றனர். இதன் காரணமாக அன்றைய தினம் மட்டும் ரூ.216 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.

    இதுகுறித்து ‘டாஸ்மாக்’ அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘ தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.639 கோடி அளவுக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் ரூ.139 கோடி, சென்னையில் ரூ.136 கோடி, திருச்சி ரூ.133 கோடி, சேலம் ரூ.120 கோடி, கோவை ரூ.111 கோடி என மது விற்பனையாகி உள்ளது.’ என்றார்.

    ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு தொடர் விடுமுறையால், கள்ளச்சந்தையில் எங்கேயாவது மதுபானங்கள் விற்பனை நடக்கிறதா? என்பது குறித்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.   #LiquorSale #TamilNadu
    தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்கள் ஓட்டு போட கொண்டு செல்லக் கூடிய பூத் சிலீப் தேர்தல் அலுவலர்கள் மூலம் வீடு வீடாக வினியோகிக்கப்பட்டு வருகிறது. #LokSabhaElections2019 #BoothCilip

    சென்னை:

    பாராளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் விரிவாக செய்துள்ளது.

    இந்த தேர்தலில் 67 ஆயிரத்து 500 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    திருத்தப்பட்ட பட்டியல் படி தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவர்கள் அனைவரும் ஓட்டு போடுவதற்கு வசதியாக புதிதாக பெயர் சேர்த்தவர்களுக்கும், புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு வீடு வீடாக வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் 18-ந்தேதி ஓட்டு போட கொண்டு செல்லக் கூடிய ‘பூத்’ சிலிப் தேர்தல் அலுவலர்கள் மூலம் இப்போதே வீடு வீடாக வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு வாக்காளரின் புகைப்படமும் பெரிய அளவில் அச்சிட்டு பெயர், பாகம் எண், வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிக்கூட விவரம் அனைத்தும் அதில் அச்சிடப்பட்டுள்ளது.

    இந்த பூத் சிலிப்புடன் ஓட்டு போட காண்பிக்க வேண்டிய 11 ஆவணங்களுக்கான பட்டியல் விவரத்தையும் இணைத்து வீடு வீடாக வழங்கி வருகிறார்கள்.

    அந்தந்த பகுதியில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் வழக்கமான ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வீடு வீடாக இந்த பூத் சிலீப் வழங்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    வருகிற 17-ந்தேதிக்குள் பூத் சிலிப் அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்பட்டு விடும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #LokSabhaElections2019

    தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது தமிழ்நாட்டில் பிரதமர் மோடி 4 இடங்களில் பிரசாரம் செய்வார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #LSPolls #PMModi #EdappadiPalaniswami
    சேலம்:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த 20 தொகுதிகளின் வேட்பாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டனர். சேலம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக கே.ஆர்.எஸ். சரவணன் போட்டியிடுகிறார்.

    சேலம் நெய்காரப்பட்டியில் இன்று காலை அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து சேலம் சென்றார்.



    சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மிகப்பெரிய பாரதத்திற்கு நிலையான ஆட்சி தேவை. ஆகவே இந்த நிலையான ஆட்சிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி தான்வருவார் என்று ஒட்டுமொத்த மக்களே தீர்மானித்து இருக்கின்றார்கள். நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.

    நாங்கள் தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. சார்பாக வெளியிட்டு இருக்கிறோம். இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டு இருக்கின்றோம். தமிழ்நாட்டின் வளர்ச்சி மிக சிறப்பாக இருப்பதற்காக அந்த தேர்தல் அறிக்கையிலே பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருக்கின்றன.

    ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கின்ற அத்தனை வறுமை கோட்டு மக்களுக்கும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை கிடைக்க வேண்டும் என்பது தான் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருக்கின்றது. இந்த தேர்தலையொட்டி தான் எங்களுடைய தேர்தல் கள அறிக்கை அமைந்திருக்கின்றது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்வார்கள். ஆனால் செய்ய மாட்டார்கள். நாங்கள் சொல்ல மாட்டோம். ஆனால் செய்வோம்.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்ட 2-வது கட்டப்பணிக்கு அனுமதி கேட்டு இருக்கிறோம். அனுமதி விரைவில் கிடைக்க இருக்கின்றது. அனுமதி கிடைத்தவுடன் சென்னை மெட்ரோ ரெயில் 2-வது கட்டப்பணி தொடங்கப்படும்.

    அதைபோல் கோவை மாநகரத்திற்கு மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்படும். அதுவும் மத்திய அரசு அனுமதி பெற்று அம்மாவுடைய அரசு நிறைவேற்றும்.

    அதுமட்டுமல்ல மாவட்ட சாலைகள், நெடுஞ்சாலைகள் அத்தனையும் விரிவாக்கப்படும். இதற்கு மத்திய அரசு நிதி வழங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தி.மு.க. தேர்தலில் இடம் பெற்றுள்ள அறிக்கை பொய் அறிக்கை. சேலத்தில் எல்லா இடங்களிலும் பாலம் கட்டப்பட்டு விட்டது. வேண்டும் என்றே ஒரு அறிக்கை கொடுக்க வேண்டும் அதற்காக தி.மு.க. ஒரு அறிக்கையை கொடுத்து இருக்கின்றது.

    கிட்டத்தட்ட 3, 4 இடங்களில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேச பா.ஜ.க. கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டு இருக்கின்றோம். தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது பிரதமர் மோடி 4 இடங்களில் பேசுவார்.

    எங்களுடைய பணி வேகமாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது. அ.தி.மு.க. வேட்பாளர்களை எல்லாம் அறிவித்து விட்டோம். எங்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டார்கள்.

    வருகிற 22-ந்தேதி கருமந்துறையில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் தேர்தல் சுற்றுப்பயணம் தொடங்கப்படும். அம்மா அவர்கள் இருக்கின்றபோது புதுச்சேரி உள்பட 40 இடங்களில் போட்டியிட்டோம்.

    அதாவது 39 இடங்களில் 37 இடத்தில் வென்றோம். பா.ம.க. ஒரு இடத்தில் வெற்றிப்பெற்றது. பா.ஜ.க. ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. 39 தொகுதிகளும் வெற்றி பெற்ற கூட்டணி எங்களுடைய இந்த மெகா கூட்டணி.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #LSPolls #PMModi #EdappadiPalaniswami

    பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு- புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது என்று ஆம்ஸ்ட்ராங் கூறியுள்ளார். #BSP

    சென்னை:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி தலைமையில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டார்.

    அவரிடம் தமிழகம்- புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாகவும். 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துமாறும் மாயாவதி கேட்டுக் கொண்டார்.

     


    மேலும் தமிழகத்தில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந்தேதி தமிழகத்ல் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும் ஆம்ஸ்ட்ராங்கிடம் உறுதி அளித்தார்.

    இதையடுத்து தேர்தலில் போட்டியிட விரும்பும் பகுஜன் சமாஜ் கட்சியினர் பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு கொடுத்தனர். விருப்ப மனு கொடுத்தவர்களிடம் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், துணை தலைவர் மணிவண்ணன், பொருளாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் நேர்காணல் நடத்தினர். #BSP

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளுக்கு 249 பேர் வாய்ப்பு கேட்டு மனு கொடுத்து உள்ளார்கள். #Congress

    சென்னை:

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மொத்தம் 249 பேர் வாய்ப்பு கேட்டு மனு கொடுத்து உள்ளார்கள்.

    அதிகபட்சமாக திருவள்ளூர் தொகுதிக்கு 62 பேர் மனு கொடுத்து உள்ளனர். கிருஷ்ணகிரி- 15, ஆரணி- 36, கரூர்- 17, திருச்சி- 25, சிவகங்கை, தேனி- 18, விருதுநகர்- 12, கன்னியாகுமரிக்கு 54 பேர் மனு கொடுத்துள்ளார்கள். விருப்பமனுவை பரிசீலித்து பட்டியல் தயாரிக்கும் பணி இன்று நடந்தது.

    காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் சஞ்சைதத், ஸ்ரீவல்லபிரசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர்கள் இளங்கோவன், குமரி அனந்தன், திருநாவுக்கரசர், மற்றும் குஷ்பூ, செல்வப்பெருந்தகை, ஆரூண், கே.ஆர். ராமசாமி, டாக்டர் செல்லக்குமார் உள்பட 26 பேர் கொண்ட தேர்வுக் குழுவினர் விருப்ப மனுக்களை ஆய்வு செய்து பட்டியல் தயார் செய்தனர்.

    இந்தப் பட்டியல் டெல்லி மேலிடத்திற்கு அனுப்பப்படுகிறது. டெல்லி மேலிடம் வேட்பாளர்களை தேர்வு செய்து இன்னும் இரண்டு நாளில் அறிவிக்க உள்ளது.

    தேனி தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்பி ஆரூண் வாய்ப்பு கேட்டுள்ளார். அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அவரது மகனும் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான அசன் ஆரூணும் மனு கொடுத்துள்ளார் ஒரே தொகுதிக்கு தந்தையும், மகனும் வாய்ப்பு கேட்டு இருப்பது ருசிகரமாக அமைந்துள்ளது. #Congress

    இளைஞர்களின் ஓட்டுபோடும் ஆர்வம் குறித்து டுவிட்டரில் ‘பவர் ஆப் 18’ என்ற பெயரில் கருத்து கேட்கப்பட்டது. அதில், தமிழ்நாட்டில் 98 சதவீத இளைஞர்கள் ஓட்டு போடுவோம் என்று கூறி உள்ளனர். #ParliamentElection
    சென்னை:

    தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகப்படுத்த தமிழக தேர்தல் துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    இதற்காக சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மூலமாக பல்வேறு வகையான பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் இளைஞர்களின் ஓட்டு போடும் ஆர்வம் எப்படி இருக்கிறது? என்பது குறித்து டுவிட்டரில் ‘பவர் ஆப் 18’ என்ற பெயரில் கருத்து கேட்கப்பட்டது. அதில், 98 சதவீதம் பேர் ஓட்டு போடுவோம் என்று கூறி உள்ளனர்.

    ஜனவரி மாதம் 31-ந் தேதி முடிய வாக்காளர் பட்டியலில் ஆட்கள் சேர்க்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில், 18 வயதில் இருந்து 19 வயதுடைய முதல் முறை வாக்காளர்கள் 8 லட்சத்து 98 ஆயிரம் பேர் இடம்பெற்றுள்ளனர்.

    இது சம்பந்தமாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறும்போது, தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் சேர்க்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.



    ஏராளமான இளைஞர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்த வண்ணம் உள்ளனர். வாக்காளர்களிடம் ஓட்டு போடும் ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு விதமான விழிப்புணர்வுகளையும், பிரசாரங்களையும் மேற்கொண்டு இருக்கிறோம் என்று கூறினார்.

    2016 சட்டசபை தேர்தலின்போது, சமூக வலைத்தளங்களில் மீம்ஸ், வீடியோக்கள் போன்றவற்றை அதிகமாக வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அதேபோல் இப்போதும் பிரசாரம் செய்யப்பட உள்ளது.

    வாக்காளர்கள் ஓட்டு போடும் அவசியத்தை வற்புறுத்தும் வகையில் ரஜினிகாந்த உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வேண்டுகோள் விடுக்கும் விழிப்புணர்வு வாசகங்களையும் வெளியிட உள்ளனர். #ParliamentElection

    ×