search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு"

    • கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
    • குறைந்த ஒலியுடனும் , குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தீபாவளி திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும்.‌ இந்த நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கி உள்ளது.

    கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும் , குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

    அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். ஆஸ்பத்திரிகள், வழிபாட்டுத்தலங்கள், மற்றும் அனுமதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசைப் பகுதியில் மற்றும் எளிதில் தீ பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    எனவே பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிகம் மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டமாக வெடித்து மாசற்ற தீபாவளி கொண்டாட வேண்டும். அனைவருக்கும் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவரங்கள் குறிப்பிடப்படாமல் பட்டாசு பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்த 42 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
    • தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    விருதுநகர்

    சென்னை, முதன்மை செயலாளர் / தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், ஆணையின்படியும் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆனையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு கடைகளில் சட்டமுறை எடையளவு பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் திடீர் சோதனை நடத்தினர்.

    சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் பொட்டலப் பொருட்களின் மேல் பொருளின் பெயர், தயாரிப்பாளர் பெயர் மற்றும் முழு முகவரி நிகர எண்ணம், அதிகபட்ச சில்லரை விற்பனை விலை (வரிகள் உட்பட) பொட்டலமிட்ட தயாரித்த மாதம், வருடம், நுகர்வோர் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி ஆகியவை கட்டாயமாக குறிப்பிடப்பட்டு விற்பனை செய்யவேண்டும்.

    அவ்வாறு சட்டவிதிகளி ன்படி பட்டாசு பொட்ட லங்களில் உரிய விவரங்கள் குறிப்பிடாமல் விற்பனைக்கு வைத்திருந்த 42 வியாபாரிகளின் பட்டாசு பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரசீது வழங்கப்பட்டது.

    பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் பொட்டலப் பொருட்களின் மேல் உரிய விவரங்கள் குறிப்பிடப்படாத வணிகர்கள் மீது முதலாவது குற்றத்திற்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும், 2-ம் முறை குற்றத்திற்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதமும், அதற்கு மேற்பட்ட குற்றத்திற்கு ரூ.1 லட்சம் அல்லது ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து நீதிமன்றத்தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளது.

    இந்த சோதனையில் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக ஆட்சி எல்லைக்கு உட்பட்ட விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் தொழிலாளர் துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் பாத்திமா, செல்வராஜ், தயாநிதி முருகன், சிவசங்கரி, துர்கா மற்றும் உமா மகேஸ்வரன் ஆகியோர் ஈடுபட்டனர்.

    இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ் தெரிவித்தார்.

    • எளிதில் தீப்பற்ற கூடிய பெட்ரோல் நிறுவனங்கள் அருகில் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
    • ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் விநியோகித்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தொழிற்சாலைகள், பெட்ரோலிய நிறுவனங்கள், கெமிக்கல், கேஸ் நிரப்பும் ஆலை, எளிதில் தீப்பற்ற கூடிய நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் கிராமங்களை சுற்றி காணப்படுகின்றன.

    தீபாவளியை முன்னிட்டு கிராமங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். எளிதில் தீப்பற்றக் கூடிய பெட்ரோலிய நிறுவனங்கள் அருகில் இருப்பதால் பேராபத்திலிருந்து தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாக பெட்ரோலிய நிறுவனம் சார்பில் அப்பகுதி கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அதிக தூரம் சென்று வெடிக்கக்கூடிய வெடிகள், ராக்கெட் பட்டாசு, வாணவெடிகள், அதிக புகை, நச்சு தரும் வெடிகள் உள்ளிட்ட வெடிகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் எனவும், பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் எனவும் பொதுமக்களிடையே ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரம் விநியோகித்தனர். இதில் சேர்மன் ரவி, ரிலையன்ஸ் டெர்மினல் மேனேஜர் திருச்சி விஸ்வநாதன் மற்றும் நாகராஜ், நரேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜவுளி கடையில் குடும்பத்துடன் வந்து தங்களுக்கு பிடித்த துணிகளை தேர்வு செய்தனர்.
    • வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றன.

    சேலம்:

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தித்திக்கும் தீபாவளி பண்டிகையை புத்தாடை அணிந்தும், இனிப்பு சாப்பிட்டும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இன்னும் 2 நாட்களே உள்ளதால் மக்கள் ஜவுளி, இனிப்பு, பட்டாசுகள் வாங்க சேலம் நகர கடை வீதிகளில் குவிந்துள்ளனர்.

    குறிப்பாக சேலம் சின்னக் கடை வீதி, பெரிய கடை வீதி, அக்ரஹாரம் 4 ரோடு, புதிய பஸ் நிலையம் உள்பட மாநகரின் பல பகுதிகளில் இன்று காலை முதலே அதிக அளவில் மக்கள் திரண்டு இருந்தனர்.

    தீபாவளியை ஒட்டி ஜவுளி கடைகளில் புத்தம் புது டிசைன்களில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏராளமான ஜவுளிகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. ஜவுளி கடையில் குடும்பத்துடன் வந்து தங்களுக்கு பிடித்த துணி களை தேர்வு செய்தனர்.

    மேலும் சேலம் கடை வீதி மற்றும் புதிய பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள நகை கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. இதேபோல், பண்டிகைக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க செவ்வாய்ப்பேட்டை, கடை வீதியிலும் அதிக அளவில் குவிந்து இருந்தனர்.

    சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் கார் மற்றும் பஸ்களில் பொதுமக்கள் வந்திருந்ததால் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் சேலம் 4 ரோடு கடைவீதி உள்பட பல பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றன.போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தி வருகின்றனர். மேலும் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு உள்ளனர். 10 இடங்களில் கோபுரம் அமைத்தும் ஒளிப்பெருக்கி மூலம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இது ஒரு புறம் இருக்க மறுபுறம் சேலம் மாவட்டத்தில் சேலம், ஆத்தூர், வாழப்பாடி மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர் உள்பட பல பகுதிகளில் பட்டாசு கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    குழந்தைகளுக்கு, கம்பி மத்தாப்பூ, தரைசக்கரம் உள்ளிட்டவை வாங்க பெற்றோர்கள் அதிக அளவில் திரளுகின்றனர். அதுபோல் வாலிபர்கள், பெரிய பட்டாசுகளை வாங்குகின்றனர்.குறிப்பாக வானில் வெடித்து சிதறும் வர்ண ஜாலம் பட்டாசுகள் அதிக அளவில் வாங்குகின்றனர். இதே போல மளிகை கடைகள், நகை கடைகளிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    • டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    • பட்டாசு வெடிப்பவர்களுக்கு 6 மாதம் சிறை, ரூ.200 அபராதம் விதித்து உத்தரவு வெளியானது.
    • பட்டாசு விற்பனையாளர்களுக்கு 3 ஆண்டு ஜெயில், அபராதம் விதித்து உத்தரவு வெளியானது.

    புதுடெல்லி :

    தலைநகர் டெல்லியில், மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கையாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பட்டாசு வெடிப்பவர்களுக்கு 6 மாதம் சிறை, ரூ.200 அபராதம், பட்டாசு விற்பனையாளர்களுக்கு 3 ஆண்டு ஜெயில் மற்றும் அபராதம் விதித்து சில நாட்களுக்கு முன்பு உத்தரவு வெளியானது.

    இந்த நிலையில் சட்டவிரோதமாக தடையை மீறி பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பவர்களை கைது செய்து, பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அக்டோபர் 1 முதல் 19-ந்தேதி வரையில் இந்த நடவடிக்கைகளின் மூலம் 13 ஆயிரத்து 700 கிலோ பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்ததாக கைப்பற்றப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக மடாங்கிரி சந்தை பகுதியில் ஒரு விற்பனையாளரின் கடையில் மட்டும் சுமார் 1200 கிலோ பட்டாசு கடந்த திங்கட்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

    • சிவகாசியில் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் அவசியம் அருகில் இருக்க வேண்டும்.

    சிவகாசி

    சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் வடமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடுவது பற்றி சிவகாசி தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு நிலைய அலுவலர்கள் அழகுசாமி, அன்னராஜ் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். ராக்கெட் வெடிக்கும் போது குடிசைப்பகுதியில் தீ விபத்து ஏற்படாத வகையில் திறந்தவெளியில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

    பட்டாசுகளை கையில் வைத்து வெடிக்க விடக்கூடாது. பட்டாசுகளை பற்ற வைக்க நீண்ட வத்திக்குச்சி பயன்படுத்த வேண்டும். உடலில் தீ புண் ஏற்பட்டால் உடனடியாக தண்ணீர் ஊற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் எண்ணையோ அல்லது பேனாவுக்கு பயன்படுத்தக்கூடிய மையோ உபயோகப்படுத்தக்கூடாது. கம்பி மத்தாப்புகளை பயன்படுத்திய பிறகு அருகில் உள்ள வாளி தண்ணீரில் நனைக்க வேண்டும். இறுக்கமான ஆடை மற்றும் பருத்தி ஆடைகளை அணிந்து பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

    சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர்கள் அவசியம் அருகில் இருக்க வேண்டும். உடலில் தீப்பிடித்தால் ஓட முயற்சிக்காமல் தரையில் விழுந்து உருள வேண்டும். மேலும் பட்டாசுகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது புகைபிடிப்பதோ, தீப்பொறி ஏற்படுத்தக்கூடிய பொருட்களை பயன்படுத்தவோ கூடாது.

    மேலும் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளை கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாகனங்கள் அடங்கிய துண்டு பிரசாரங்கள் வழங்கப்பட்டது.

    பின்னர் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடுவோம் என்று மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    • பட்டாசு வெடிப்பதால் வெளிவரும் நச்சுப்புகை சுவாசம், நுரையீரல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
    • முதலுதவி அளிப்பது எப்படி? என்று டாக்டர் கூறும் ஆலோசனைகளை பார்க்கலாம்.

    தீபாவளியை களைகட்ட செய்வது பட்டாசுதான். பட்டாசு இல்லாத தீபாவளி, திரியில்லாத புஸ்வானம் போல, சுரத்தே இல்லாமல் போய்விடும். பட்டாசு வெடிப்பதில் சிறுவர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும் அப்பாக்களுக்கும், ஏன் தாத்தாக்களுக்கும் கூட ஆவல்தான். ஆனால் பட்டாசுகளைப் பாதுகாப்பாக வெடிக்காவிட்டால் தீபாவளியின் தித்திப்பு காற்றில் கரைந்துவிடும். பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது தொடர்பாக தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் தீவிர பிரசாரம் செய்யப்பட்டு வருவதால் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதனால் விபத்துகளும் குறைந்து வருகின்றன என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

    'காற்று மாசு ஏற்படும்' என்று பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை உச்சநீதிமன்றம் குறைத்துள்ளது. இதனால் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறையும் என்றாலும், அந்த குறைவான நேரத்திலும் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகளை கவனமாக கையாளாவிட்டால் ஆபத்தை விளைவிக்கும். கை, கால்களில் காயம், ஆடைகளில் தீப்பிடிப்பது போன்ற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. புஸ்வானம், தரைச்சக்கரம் போன்றவை சில நேரங்களில் வெடிக்கக்கூடும். அந்த தீப்பொறி பட்டு கண்கள் பாதிக்கப்படலாம். பட்டாசு வெடிப்பதால் வெளிவரும் நச்சுப்புகை சுவாசம், நுரையீரல் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். பட்டாசு விபத்துகளால் அதிக அளவில் உயிர் சேதம் ஏற்படாது. ஆனால் உடல் பாகங்களில் சேதம் ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

    பட்டாசு வெடிக்கும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும், பட்டாசு விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள் குறித்தும் திருச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் கூறியதாவது:-

    * பட்டாசு வெடிக்கும் பகுதியில் ஒரு வாளி தண்ணீரை எப்போதும் வைத்திருக்க வேண்டும்.

    *பெரியவர்களின் துணையுடன் மட்டுமே சிறுவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும்.

    * புடவை, பட்டுப்பாவாடை போன்ற தளர்வான ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்கக்கூடாது. பருத்தி ஆடை, ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொள்ளலாம்.

    * பட்டாசு வெடிக்கும்போது காலில் செருப்பு அணிவது அவசியம்.

    * கம்பி மத்தாப்புகளை கொளுத்தி முடித்ததும் வாளியில் உள்ள தண்ணீரில் போட்டுவிட வேண்டும்.

    * வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுத்து பார்க்கக்கூடாது. அதன்மீது உடனே தண்ணீர் ஊற்றிவிட வேண்டும்.

    *எந்தப் பட்டாசுகளையும் கைகளில் வைத்து வெடிக்கக்கூடாது.

    * சட்டை, பேண்ட் பாக்கெட்டுகளில் பட்டாசுகளை போட்டு வைத்துக்கொண்டு பட்டாசுகளை கொளுத்தக்கூடாது.

    *நீளமான ஊதுவத்தியைப் பயன்படுத்தி தூரமாக நின்று பட்டாசை கொளுத்த வேண்டும்.

    * பட்டாசு கொளுத்திய பிறகு கிடக்கும் குப்பைகள், வெடிக்காத பட்டாசுகள் ஆகியவற்றைச் சேர்த்து ஒன்றாக வைத்துக் கொளுத்தக்கூடாது.

    முதலுதவி அளிப்பது எப்படி?

    *பட்டாசு விபத்து ஏற்பட்டால் அந்த காயத்தின் மீது தண்ணீர் ஊற்ற வேண்டும். அதன்பிறகு காயம்பட்ட இடத்தை சுத்தமான பருத்தி துணியை கொண்டு மூடி, காயம்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். எந்த காரணம் கொண்டும் காயம் ஏற்பட்ட இடத்தில் பேனா மை, எண்ணெய், பற்பசை, ஐஸ்கட்டி, மஞ்சள், மாவு போன்ற எதையும் தடவக்கூடாது.

    * வெடிக்கும்போது ஆடையில் தீப்பிடித்தால், தண்ணீர் அருகில் இல்லை என்றால், தீப்பிடித்தவர்களை ஒரு கம்பளியில் சுற்றி தரையில் உருட்டவேண்டும். கம்பளி சுற்றிய பகுதிக்குள் ஆக்சிஜன் செல்ல முடியாமல், தீ அணைந்துவிடும். அதன் பிறகு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டாக்டர் அருண்ராஜ்

    • தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள், பாதுகாப்பு வழிமுறைகளை பார்க்கலாம்.

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பதற்கான விதிமுறைகள், கட்டுப்பாடுகள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறியதாவது:-

    பசுமை பட்டாசுகள்

    * சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கவும், வெடிக்கவும் வேண்டும்.

    * பட்டாசுக்கள் வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் ஒதுக்கி உள்ளதால், இந்த நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

    சமையலறையில்...

    * குடிசைப் பகுதிகளிலும், மாடி கட்டிடங்கள் அருகிலும் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்க கூடாது. எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வைக்க கூடாது. ஈரமுள்ள பட்டாசுகளை சமையலறையில் வைத்து உலர்த்தக்கூடாது.

    * தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, வெடிப்பதோ கூடாது.

    * பட்டாசு விற்கும் கடைகள் அருகில் சென்று புகைபிடிப்பதோ, புகைத்து முடித்த பின்னர் சிகரெட் துண்டுகளை அஜாக்கிரதையாக வீசி எறிவதோ கூடாது. பட்டாசு விற்கும் கடை அருகே சென்று விளம்பரத்துக்காகவோ, போட்டிக்காகவோ கூட பட்டாசுகளை வெடிக்க கூடாது.

    ஆபத்தை விளைவிக்கும்

    * பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்து விட்டு வேடிக்கை பார்க்க முயற்சித்தால், வெடிக்கும் பட்டாசு அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். ஆகவே பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாட கூடாது. மக்கள் நடமாடும் இடத்தில் கவனக்குறைவாக பட்டாசுகளை வெடிக்காதீர்கள்.

    * பட்டாசுகளை வெடிக்கும் போது தகர டப்பாக்களை போட்டு மூடி வேடிக்கைப் பார்த்தால் வெடியினால் டப்பா தூக்கி எறியப்படலாம். அதனால் பல விபத்துகள் நேரிடக்கூடும். ஆகவே இவ்வாறு செய்யக் கூடாது.

    * பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்காதீர்கள். வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகிலும், பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் பட்டாசுகள் வெடிக்க கூடாது.

    குழந்தைகள்

    * பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிகளை கொளுத்த அனுமதிக்காதீர்கள். எக்காரணத்தை கொண்டும் குடிசைகளின் பக்கத்திலோ, ஓலைக்கூரைகள் உள்ள இடங்கள் அருகிலோ வான வெடிகளையோ அல்லது பட்டாசு வகைகளையோ கொளுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    * பட்டாசு விற்பனையாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் மெழுகுவர்த்தியையோ பெட்ரோமாக்ஸ் அல்லது சிம்னி விளக்கையோ கடை அருகிலோ அல்லது கடையிலோ உபயோகிக்க கூடாது.

    கால்நடைகள் மிரளும்

    * கால்நடைகள் அருகில் பட்டாசு வெடிப்பதால் அவைகள் மிரண்டு ஓடும்போது ஸ்கூட்டர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மீதும், பாதசாரிகள் மீதும் முட்டி விபத்துக்கள் நேரிடலாம். அதை தவிர்க்க வேண்டும்.

    * தீ விபத்துகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வெடிகள் வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள், குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்த பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும்.

    * பட்டாசு வகைகள் சேமித்து வைத்திருக்கும் வீட்டிலோ அல்லது கடைகளிலோ ஊதுபத்தி கொளுத்தி வைக்க கூடாது. பட்டாசுகளை வெடிப்பதற்கு தீக்குச்சிகளையோ அல்லது நெருப்பையோ உபயோகிப்பதை விட நீளமான ஊதுபத்தி உபயோகித்து ஆபத்துகளை தவிர்க்க வேண்டும் என்றார்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    இது பற்றி போலீஸ் சூப்பிரண்டு மேலும் கூறும்போது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து நேர்ந்தால் போலீஸ்துறை மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை அவசர உதவி எண்-112, அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்சு எண்-108 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொண்டு மனித உயிர்களை காப்பாற்றி, பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும். கடந்த ஆண்டு உரிமம் இன்றி பட்டாசுகளை விற்பனை செய்ததாகவும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாகவும் 92 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் அனைவரும் மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும், போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    • ஒளியை ஏற்றுங்கள் பட்டாசுகளை அல்ல.. என்ற பொது விழிப்புணர்வு பிரச்சாரம் அக்டோபர் 21 அன்று தொடங்கப்படும்.
    • டெல்லி அரசு வரும் வெள்ளிக்கிழமை கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் 51,000 தீபங்கள் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் அபாய அளவை தாண்டி மிக மோசமான நிலையில் உள்ளது.

    டெல்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில் (டெல்லி என்சிஆர்) காற்று மாசை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு புகையால் காற்றின் தரம் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அபாயகரமான நிலைக்கு செல்லும் என கூறப்படுகிறது. இதனால், டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் டெல்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறைத் தண்டனையும் ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது:-

    தலைநகரில் பட்டாசு தயாரித்தல், பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்தால் வெடிபொருள் சட்டத்தின் 9பி பிரிவின் கீழ், 5,000 ரூபாய் வரை அபராதமும், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

    கடந்த 2 ஆண்டுகளாக கடைபிடித்து வரும் தீபாவளி உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளிலும் பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு ஜனவரி 1-ஆம் தேதி வரை முழுமையான தடை உத்தரவை கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் விதிக்கப்பட்டது.

    ஒளியை ஏற்றுங்கள் பட்டாசுகளை அல்ல.. என்ற பொது விழிப்புணர்வு பிரச்சாரம் அக்டோபர் 21ம் தேதி அன்று தொடங்கப்படும். அதன்படி, டெல்லி அரசு வரும் வெள்ளிக்கிழமை கனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் 51,000 தீபங்கள் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    டெல்லியில் பட்டாசுகளை வாங்குவதற்கும், வெடிப்பதற்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 200 ரூபாய் அபராதம் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    தடையை அமல்படுத்த 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ல்லி காவல்துறை உதவி ஆணையர்களின் கீழ் 210 குழுக்களையும், வருவாய்த் துறை 165 குழுக்களையும், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு 33 குழுக்களையும் அமைத்துள்ளோம்.

    அக்டோபர் 16-ம் தேதி வரை 188 விதிமீறல் வழக்குகள் கண்டறியப்பட்டு, 2,917 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    • மாணவர்களுக்கு சீருடை, இனிப்பு, பட்டாசு மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டது.
    • பணிகளை பாராட்டி நினைவுப்பரிசு, பொன்னாடைகள் வழங்கி கவுரவிப்பு.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி பெயர் பொறித்த சீருடை, தீபாவளி இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக தலைமை–யாசிரியர் வேதரெத்தினம், உதவிஆசிரியை சுசீலா, ஆட்டோ ஓட்டுநர் அன்புமணி ஆகியோரின் பணிகளை பாராட்டி நினைவுப்பரிசு, பொன்னாடைகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் கருணாநிதி, வட்டார கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், அறிவழகன், ரோட்டரி துணை ஆளுநர் சிவக்குமார், ஆதப்பன், இளங்கோவன், திலகமணி, முத்து சாமி, அறிவழகன், உறுப்பினர் அஜித் ராஜா, ஹாஜா அலாவுதீன், தலைமையாசிரியர்கள் சுபாஷ், முருகாdந்தம், ஆசிரியர்கள் வேதரெத்தினம், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    • வழிபாட்டு தலங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
    • குடிசை பகுதிகளில் எளிதில் தீ ்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறைமாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

    தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும்தி ருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளைவெடித்து மகிழ்ச்சியைவெளிப்படுத்துவார்கள்.

    அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன.

    பட்டாசு வெடிப்ப தால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும்காற்றுமாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளா கிறார்கள்.

    தமிழக அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பு ம்பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்கியது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    மேலும், பட்டாசுகளை வெடிப்பதால்ஏற்படும் சுற்றுச் சூழல்சீர்கேடு குறித்தும்,உடல்நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்த மாசு கட்டுப்பாடு வாரியம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறது.

    பொதுமக்கள்குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடு த்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.மருத்துவ மனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும்இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீபற்றக் கூடிய இடங்களுக்கு அருகி ல்பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பட்டாசு கொளுத்தும் போது ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்.
    • தீ புண்ணுக்கு குளிர்ந்த நீர் அல்லது சாதாரண நீரை மட்டுமே ஊற்ற வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாடுவது குறித்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

    வெடிகளை திறந்த வெளியில் வைத்து வெடிக்க வேண்டும்.

    நீண்ட ஊதுபத்திகளை கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு கொளுத்தும் போது ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும்.

    தீ புண்ணுக்கு குளிர்ந்த நீர் அல்லது சாதாரண நீரை மட்டுமே ஊற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் நிலைய அலுவலர் (போக்குவரத்து) ராமச்சந்திரன் தலைமையில் வழங்கப்பட்டு பிரச்சாரம் நடைபெற்றது.

    தீயணைப்பு வீரர்கள் நீலகண்டன், வெங்கடேசன், ஆகாஷ் கண்ணன், நிரஞ்சன், விமல் ராஜ், வினோத் ஆகியோர் பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில், புதிய பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

    ×